Jump to content

முதல்வருக்கு எதிராக தம்பிதுரை 'பொங்கியதற்குக்' காரணம் இதுவா?


Recommended Posts

முதல்வருக்கு எதிராக தம்பிதுரை 'பொங்கியதற்குக்' காரணம் இதுவா?

 

 
thambidurai2


சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஏறக்குறைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான குரல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கட்சியின் தலைமையும், ஆட்சியின் தலைமையும் ஒருவராக இருந்தால்தான் ஒருமித்து செயல்பட முடியும் என்றும் அவர் சசிகலாவுக்குக் கூறியுள்ளார்.

இது கட்சி அடிப்படையில் அவர் கூறியுள்ள கருத்தாக எடுத்துக் கொண்டாலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்னவென்று தகவல் அறிந்த வட்டாரங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறார்கள்.

அதாவது, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் போது, ஓ. பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையின் பெயரும் அலசப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதே தம்பிதுரைக்கு பன்னீர்செல்வத்தின் மீது சற்று வருத்தம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்த வருத்தம் காண்டாக மாறும் வகையில் புது தில்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புது தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். அப்போது, பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையும் சென்றார். இருவரும் ஒன்றாகத்தான் மோடியை சந்தித்துப் பேசினர்.

ஆனால், இடையே தம்பிதுரையை வெளியே செல்லுமாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு, சுமார் 20 நிமிடங்கள் மோடியுடன் அவர் தனியாக பேசியுள்ளார். அப்போது அவர் என்ன கூறினார்? என்பது இன்னமும் சிதம்பரம் ரகசியமாகவே உள்ளது.

புது தில்லியில் கட்சி அளவில் செல்வாக்கு மிக்க தன்னையே வெளியே அனுப்பிவிட்டாரே பன்னீர்செல்வம் என்று அப்போதுதான் தம்பிதுரைக்கு அதிருப்தி ஏற்பட்டு, அது காண்டாக மாறி, சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்கும் அளவுக்கு மாறிவிட்டதாக தகவல் அறிந்த பட்சிகள் கதறுகின்றன.

http://www.dinamani.com/tamilnadu/2017/jan/02/முதல்வருக்கு-எதிராக-தம்பிதுரை-காண்டானதற்கு-காரணம்-இதுவா-2625895.html

Link to comment
Share on other sites

வெங்கையா நாயுடுவை பார்த்தால் அவருக்கு stroke வரும்போல தெரியுது.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Quote

 

 

முதல்வருக்கு எதிராக தம்பிதுரை 'பொங்கியதற்குக்' காரணம் இதுவா?

 

 

Image result for adhiyamaan engineering college hosur

என்ன அதியமான் இஞ்சினியரிங் கல்லூரி டீம்ட் யுனிவர்சிட்டியாக தரம் உயர்த்துவம் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சிடம் வாய் மொழி உத்தரவு வந்திருக்கும்.. இல்லை... கம்பிதுறையாக ஜெயிலுக்கு பின்னால் எண்ண வேண்டு வந்திருக்கும்..

டிஸ்கி ;

எல்லாம் திருட்டு பயல்கள் ..ஒரு இஞ்ஜினியரிங் சீட்டுக்கு என்னிடமே 2 1/2 லட்சம் கேட்ட கும்பல்கள் .. இந்தாள் மற்றும் சத்தியபாமா (ஜேப்பியார்).. எஸ்.ஆர்.எம் (பாரிவேந்தர்).. எ.சி.எஸ் (ஏ.சி .சண்முகம்) இன்னும் முக்கியமானவர் திருவண்ணாமலை டூ தண்ராம்பட்டு பஸ் கண்ரெக்டர் (நடத்துனர்) எ.வா .வேலு(அருணை)!! லிஸ்ட் நிறைய  கிடக்கு ..! மக்களே இவன் எல்லாம் உழைத்து சம்பாதித்தா இவ்வளவு சொத்துக்கள்..? ???? இது கலிகாலம்..!! கேட்டால் மூளை இருப்பவன்  பிழைப்பான். அட மூதேவிங்களா ! இவனுங்களுக்கு பெயர் பிசனஸ் மேக்னட்டு.. அடபோங்கப்பா..! :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.