Jump to content

பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது ஏன்? அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம்


Recommended Posts

பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது ஏன்? அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம்

 
 

பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தொல்லை குறித்த விசாரணையில், கண்காணிப்பு காணொளி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பெங்களூரு பெண் காவலரிடம் அழுது கொண்டு உதவி கோரும் இளம்பெண்
 பெங்களூரு பெண் காவலரிடம் அழுது கொண்டு உதவி கோரும் இளம்பெண்

கட்டுக்கடங்காத ஆண்களின் கூட்டத்தால், இருட்டில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை அழுது கொண்டும், பெண் காவல்துறையினரின் அரவணைப்பிலும் புகார் அளிக்கின்ற பெண்களின் புகைப்படங்களை நகர செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்தது.

சமூக ஊடகங்களின் அறிக்கைகளை தவிர வேறு எந்த புகார்களையும் இது தொடர்பாக காவல்துறை பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது.

அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம்

இதேவேளையில், "இத்தகைய விடயங்கள் நிச்சயம் நடக்கதான் செய்யும்" என்கிற அமைச்சரின் கூற்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

"மனப்பான்மையில் மட்டுமல்ல, அவர்களை போல ஆடை அணிவதிலும் மேற்குலகினரை பார்த்து இளைஞர்கள் நடக்கின்றனர்" என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு புத்தாண்டை கொண்டாடும் வகையில் மத்திய வர்த்தக மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மகாத்மா காந்தி சாலை மற்றும் பிரகாடே சாலை பகுதியில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதாக பெங்களூரில் இருக்கும் பிபிசி இந்தி மொழி பிரிவின் இம்ரான் குரேஷி தெரிவிக்கிறார்.

பாதுகாப்புக்கு 1500 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

"இந்த பகுதியில் வழக்கமாக கூடும் மக்களை விட அன்று மூன்று மடங்கு மக்கள் அதிகமாக கூடியதாக, பெங்களூரு மிரர் செய்தித்தாளின் புகைப்படக் கலைஞர் ஆனந்த சுப்பிரமணியன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவருடைய புகைப்படங்கள் இந்த நகரின் ஆண்களின் நடத்தை பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளன.

பாதுகாப்புக்கு 1500 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்  பாதுகாப்புக்கு 1500 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

சனிக்கிழமை இரவு நடந்தது என்ன?

"இரவு 11:45 முதல் நள்ளிரவு 12:30 வரை இந்த பகுதியில் மக்கள் நகரக்கூட முடியவில்லை. இரண்டு சாலைகளின் சந்திப்புக்கு அருகில்தான் காவல்துறை மக்கள் கூட்டத்தை கலைக்க முடிந்தது. ஆனால், மீண்டும் மக்கள் அங்கு கூடத் தொடங்கினர்" என்று அவர் கூறினார்.

"அந்த மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட சிறு வழியில், காவல் துறையினரிடம் வந்தடைந்த மக்களில், தாங்களுக்கு பாலியல் தெந்தரவு கொடுக்கப்பட்டதை புகாராக தெரிவிக்கும் பெண்களை என்னால் காண முடிந்தது. அந்த மனிதர்களை இனம்காட்ட முடியுமா என்று காவல்துறையினர் கேட்டபோது, அங்கே பெருங்கூட்டமாக இருந்தால், அவர்களால் இயலவில்லை".

"பல ஆண்களால் சூழப்பட்டிருந்த பெண்ணொருவர் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.

பழிவாங்குதல் மற்றும் சமூக அளவில் முத்திரை குத்தப்படுவதால், பாலியல் தாக்குதல்களை பற்றி புகார் தெரிவிக்க இந்தியாவிலுள்ள பெண்கள் தயங்குகின்றனர்.

ஆனால், சனிக்கிழமையன்று தங்களுக்கு நடைபெற்ற இந்த கொடுமையை பற்றி எடுத்துக் கூற பல பெண்கள் முன்வந்தனர்.

பாலியல் தொல்லை கொடுக்கும் இளைஞர்  "இத்தகைய விடயங்கள் நிச்சயம் நடக்கதான் செய்யும்" என்கிற அமைச்சரின் கூற்றால் மக்கள் கோபம்

பணியில் இருந்து திரும்புகையில் இரவு நேரத்தில் தனக்கு ஓர் ஆண் பாலியில் தொல்லை கொடுத்ததை புகைப்படக் கலைஞர் சாய்தாலி வாஸ்நிக் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார்.

"நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று எண்ணி, லாவகமாக அவர் அவ்வாறு செய்தார்" என்று அவர் கூறினார். நான் அந்த மனிதரோடு போராடிய போதும் காவல்துறையினர் தலையிடவில்லை என்றும் தெரிவித்தார்,

அந்த இரவில் அங்கிருந்த பெண்களில் ஒருவர் தான் எஷிதா (முழு பெயரல்ல). "20-30 ஆண்கள் திடீரென சாலையில் ஓடத் தொடங்கியபோது, சில பெண்களை தொட்டு பாலியல் தொல்லை அளித்தனர்" என்று அவர் உறுதி செய்தார்.

"நான் என்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரர்களோடு 12-15 பேராக குழுவாக இருந்தேன். அதனால் நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம்" என்று அவர் கூறினார். அங்கு நின்றிருந்த பல காவல்துறையினர் அருகில் இருந்த மெட்ரோ ரயில் நிலையம் வரை எங்களை பாதுகாப்பாக அழைத்து சென்றதால், நாங்கள் தொல்லைக்கு உள்ளாகவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு காணொளி பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன" என்று பெங்களூரு காவல்துறை ஆணையாளர் பிரவீன் சூட் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

"இந்த காணொளி பதிவுகளிலும், புகைப்படங்களிலும் பாலியல் தொந்தரவு வழங்கப்பட்டதற்கான சான்றுகளை தேடி வருகின்றோம். சான்றுகளை கண்டறிந்தவுடன் அது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதற்கான காணொளி பதிவுகள் அல்லது புகைப்படங்கள் இருந்தால் வழங்க வேண்டும் என சூட் பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்களே சென்று அவர்களின் புகார்களை பெறுவோம்" என்று அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-38498518

Link to comment
Share on other sites

பெண்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை விமர்சிக்கும் 'நியாயவான்'களுக்கு 5 கேள்விகள்! #BengaluruNewyearEveshame

புத்தாண்டு

பெங்களூருவில் புத்தாண்டு இரவுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், ஆண்களால் கூட்டு பாலியல் சீண்டல்களுக்கு ஆளானது, தேசத்துக்கே அதிர்ச்சி தந்த செய்தி.

கடந்த சனி அன்று, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்ஜி சாலை மற்றும் பிரிகேட் சாலைகளில் புத்தாண்டைக் கொண்டாடக் கூடினார்கள் மக்கள். 'இரவின் சாலைகளும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நமக்கும்தான்' என்று நம்பி வந்த இளம் பெண்களை, பாலியல் பொருளாக மட்டுமே பார்த்தது அங்கிருந்த ஆண்களின் மனம்.

கூட்டத்தை சாக்காக வைத்து, கடந்த பெண்களை எல்லாம் அருவருக்கத்தக்க பாலியல் சீண்டல்கள் செய்தார்கள் ஆண்கள். அதிர்ச்சியில், அவமானத்தில், வேதனையில், கோபத்தில், கொந்தளிப்பில் எழுந்த பெண் குரல்களுக்கு, அந்தக் கூட்டத்தில் எந்த நியாயமும் தரப்படவில்லை. பத்திரிகையாளர்களின் கேமராவில் பதிவானதில் வெளியிடப்பட்ட, பெண் காவலர் ஒருவரின் தோளில் முகம் சாய்த்து விம்மும் அந்தப் பெண்ணின் புகைப்படமும், தனக்கு நேர்ந்த வக்கிரத்தால் ஆற்றாமையில் அழும் மற்றொரு பெண்ணின் புகைப்படமும், அந்தச் சாலைகளில் மற்ற பெண்கள் அனுபவிக்க நேர்ந்த அநியாயத்தை அறைந்து சொல்கின்றன.

'பாதுகாப்புப் பணிகளுக்கு அங்கு 1600 காவலர்கள் இருந்தார்கள். ஆனால், கிட்டத்தட்ட 60,000 மக்கள் அங்கு குழும, அந்தச் சாலைகள் எங்கள் கட்டுப்பாட்டை இழந்தன' என்று சொல்லியிருக்கிறார், காவல் துறை அதிகாரி. தேசத்தையே தலைகுனிய வைத்த இந்தச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது, இன்னும் வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவ், 'கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, கூட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான்' என்று 'கவனிக்க வேண்டிய' தன் கருத்தை பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சியின் மகராஷ்டிர மாநில தலைவர், எம்.எல்.ஏ அபு ஆஸ்மி,  'பெண்கள் குட்டையான உடைகள் அணிவதால் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடக்கின்றன' என்று தான் கண்டறிந்த உண்மையைத் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கு மட்டுமல்ல, 'பெண்கள் புத்தாண்டு கொண்டாடுறோம், மாடர்ன் டிரெஸ் போடுறோம்னு வந்தா, இதெல்லாம்தான் நடக்கும்' என்ற மனநிலையில், இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்துபவர்களுக்கும், சலனமின்றிக் கடப்பவர்களுக்கும் இந்த 5 கேள்விகள்...

* 'புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பெண்கள் கலந்துகொண்டால் அப்படித்தான் நடக்கும்' என்ற உங்களின் அதிகார வார்த்தைகளின் மூலம், அந்த அயோக்கியர்களின் வக்கிரங்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்ற அடிப்படைப் பிழைகூடப் புரியாதா உங்கள் புத்திக்கு?

* வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களும், நாகரிக உடை அணியும் பெண்களும்தான் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்றா  நினைக்கிறீர்கள். நீங்கள் வீட்டுக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கும் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளும், தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளானவர்கள்தான் என்ற உண்மையை அறிவீர்களா? அதற்குக் காரணம், உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளின் உடையும், செயல்பாடுகளும்தான் என்று வழக்கம்போல் தீர்ப்பு சொல்லிவிடலாமா?

* 'புத்தாண்டு இரவுக் கொண்டாட்டம், பேன்ட், டி ஷர்ட் என வெஸ்டர்ன் கலாசாரங்களை பெண்கள் பின்பற்றுவதன் விளைவு இது' என்று சுட்டிக்காட்டுகிறீர்கள். பள்ளிச் சீருடையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளின் மரணங்களுக்கு தொகுத்துத் தரவும் உங்களிடம் ஆண் மைய நியாயங்கள் இருக்கிறதா?   

* ஐந்து வயதுப் பெண் குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' கற்றுக்கொடுக்கப்படுவது எவ்வளவு கொடுமையானது என்பதை அறிவீர்களா? அவளிடம் அவள் மழலையைப் பிடுங்கிக்கொண்டு, 'நீ பெண்' என்ற கவசத்தை மாட்டிவிடும் அவலத்தை தந்தது யார்? ஆண்கள் ஆண்கள் ஆண்கள்!
 
* 'ஆண்கள் அப்படித்தான். பெண்கள்தான் அதற்கு வாய்ப்புத் தராமல் இருக்க வேண்டும்' என்ற உங்களின் மேலான எண்ணத்தை நீங்கள் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறீர்கள். எந்தப் பெண்ணும் ஆணுக்கு வாய்ப்புத் தர விரும்பி எதையும் செய்வதில்லை. அவள் தன் உரிமையை, தனக்கான மகிழ்ச்சியை, கொண்டாட்டங்களை பெறவே விரும்புகிறாள். எப்போதும் பெண்களின் உறுப்புகளையே உற்றுநோக்கும் கண்களும், அதை நியாயப்படுத்தும் வாய்களும் வெட்கப்பட வேண்டுமே தவிர, இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை பெண் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

புத்தாண்டும், இரவும், சாலைகளும், கொண்டாட்டங்களும் பெண்களுக்கும்தான். பெங்களூருவில் நடந்த அசிங்கத்துக்கு, ஒரு பெண்ணின் உடலை எந்தக் குற்ற உணர்வும் இன்றி வக்கிரமாகச் சீண்டலாம் என்று நினைத்து அந்த அசிங்கத்தைச் செய்த ஆண் மனங்களும், அந்த ஆண்களை அந்த மனநிலையில் வளர்த்தெடுத்த குடும்பங்களும், சக மனுஷி பாதிக்கப்பட்ட ஓலம் கேட்கும்நிலையில்கூட, 'பெண்கள் அப்படி இருக்கக்கூடாது' என்று வகுப்பெடுக்கும்   நாட்டாமைகளும்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தலைகுனியுங்கள்!

http://www.vikatan.com/news/india/76815-5-questions-for-those-who-justify-bengaluru-mass-molestation.art

Link to comment
Share on other sites

’ச்சீ... நீங்களெல்லாம் ஆண்களா..!?’ - கொந்தளிக்கும் விராட் கோலி

விராட் கோலி

இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் அடையாளங்களுள் ஒன்று, அவரின் முன்கோபம். எதிரணி வீரர்களை களத்தில் வசைபாடக்கூடியவர் என்பது நாம் அறிந்ததே. ஆனால், பலரும் அறியாத அவரின் மற்றொரு முகம், பெண்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான மரியாதை குறித்து தொடர்ந்து பேசிவரும் அவரின் சமூக அக்கறை. 

பெங்களூரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில், பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த தனது ஆதங்கத்தை, தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் கோலி. 

''பெங்களூருவில் நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. அந்தப் பெண்களுக்கு நடந்த கொடுமையைத் தட்டிக்கேட்காமல் போனது கேவலமான செயல். உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள் அவர்களை ஆண்கள் என கூறிக்கொள்ளக் கூடாது. எனக்கு ஒரே ஒரு கேள்விதான். இதே விஷயம் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நிகழ்ந்திருந்தால் உதவி செய்திருப்பீர்களா? அல்லது வேடிக்கை பார்த்திருப்பீர்களா?

இதனை நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்கள். தட்டிக் கேட்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு இது சரியென்று தோன்றும் அளவுக்கு உங்களை நிலைப்படுத்திக்கொள்கிறீர்கள். காரணம், அந்த பெண் ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறாள் என்பதுதான் உங்கள் பதில். 

அது அவளது வாழ்க்கை, அவளது முடிவு, அவளது விருப்பம். இதனை மாற்றிக்கொள்ளச் சொல்வது தவறு. அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தக் கொடுமைகளை ஏதோ ஒரு கோணத்தில் சரியென்று ஏற்றுக்கொள்வது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் வெட்கப்படுகிறேன்.

நாம் நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆணையும், பெண்ணையும் சமமாக நடத்த வேண்டும். அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் இடத்தில் நமது குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் எப்படி நடந்து கொள்வோமோ அதனைச் செய்தாலே போதும். ஜெய்ஹிந்த்!" இவ்வாறு தன் வீடியோவில் பேசியுள்ளார் கோலி!

இப்போது மட்டுமல்ல, எப்போதும் பெண்மைக்கு மரியாதை அளிக்கும் இளைஞராகவே வெளிப்பட்டிருக்கிறார் கோலி. சென்ற வருடம் டி20 உலகக் கோப்பையின்போது அனுஷ்கா ஷர்மாவை கிண்டல் செய்தவர்களை தன் 'ஷேம்' ஸ்டேட்டஸ் மூலம் காலி செய்தார். அதுதான் சென்ற வருடத்தின் இந்தியாவின் பெஸ்ட் ட்வீட்டாகக் கொண்டாடப்பட்டது. 

 

Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity

Cen5iI6W8AARUfV.jpg
 
 

அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் பெங்களூரு சம்பவம் குறித்து வாய்மூடி வேடிக்கை பார்த்தபடி இருக்கும்போது, 28 வயதாகும் நம் சமகால இளைஞனின்  குரல் ஓங்கி ஒலிப்பது வரவேற்புக்கு உரியது. ஒவ்வொரு இளைஞனும் விராட் கோலியை போல் இருந்தால், பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் உறுதி செய்யப்படும்! 

http://www.vikatan.com/news/miscellaneous/77077-are-you-really-men-virat-kohli-slams-bangalore-guys.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.