Jump to content

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும்... சாமான்யனின் பெருங்கனவும்!


Recommended Posts

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும்... சாமான்யனின் பெருங்கனவும்!

Sasikala_Bungalow_16394.jpg

‘வீடு’. எல்லோருக்குமான பெருங்கனவு. சராசரியாக, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 1,09,980 மணி நேரம் உழைக்கிறான் என்கிறது ஓர் ஆய்வு. அப்படியானால், இதில் 80 ஆயிரம் மணி நேரம் அவன் தனக்கான ஒரு நிரந்தரக் கூட்டுக்காகத்தான் உழைக்கிறான். அவன் சிந்தை முழுவதும் வீடு குறித்த பிம்பங்கள்தான் படிந்திருக்கின்றன. அதற்கு உயிர் கொடுக்கத்தான், தன் உயிரைக் கரைத்து ஓடுகிறான். வீடு என்றால் ஆயிரக்கணக்கான சதுர அடிகளில் எல்லாம் இல்லை. எட்டு நூறு சதுர அடி வீடே சாமான்யனின் மனதுக்கு பேராசைதான். என்றாவது ஒருநாள், மஞ்சள் வெயில் மாலைப் பொழுதில் வீட்டின் கூடத்தில் அமர்ந்து, ஜன்னலில் வைக்கப்பட்டிருக்கும் செடியின் நிழல் தரையில் படர்ந்து இருப்பதை குடும்பத்துடன் ரசிக்க மாட்டோமா என்பதற்காகத்தான் மூச்சடைக்கும் இவ்வளவு ஓட்டமும். 

சரி... விஷயத்துக்கு வருவோம். கடந்த வாரம், சூரியனின் மஞ்சள் கதிர்கள் இலைகளுடன் ரகசியம் பேசும் ஒரு மாலைப் பொழுதில், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூருக்குச் சென்றோம். சாலையின் ஒரு பக்கத்தில், கடல் பேரிரைச்சலுடன் நிலத்தைக் கழுவிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கத்தில், மேய்ச்சல் நிலம் பல ஏக்கர் கணக்கில் பரந்துவிரிந்து கால்நடைகளின் பசியைப் போக்கிக்கொண்டு இருந்தது. 

எங்கள் பயணத்தின் நோக்கம். அந்தச் சாலையில் கருங்குழி பள்ளம் என்ற இடத்தின் அருகே இருக்கும் சசிகலா, இளவரசி, விவேக் மற்றும் சுதாகரனுக்குச் சொந்தமான இடத்துக்குள் செல்ல வேண்டும் என்பது மட்டும்தான். 

சசிகலாவின் இடத்துக்குள் ஒரு பயணம்!

சசிகலா

கருங்குழி பள்ளம் அருகே இருக்கும் ஒரு கிராமத்துக்குச் சென்று... அதன், பின்வழியாகப் புதர்கள் நிறைந்திருக்கும் ஒரு முல்லை நிலத்துக்குள் புகுந்து... அங்கே மறைவாக ஓர் இடத்தில் எங்கள் வண்டியை நிறுத்திவிட்டு, மன்னார்குடி குடும்பத்துக்குச் சொந்தமான அந்த இடத்துக்குள் நுழைந்தோம். ஏறத்தாழ 200 அடி தூரத்தில் மக்களை நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காக்கவேண்டிய காவலர்கள் அங்கு நின்றுகொண்டிருந்தனர். மெல்ல அவர்கள் கண்களுக்குப் படாமல் ஓர் இடத்தில் பதுங்கி, அந்த இடத்தை எங்கள் கைப்பேசியில் பதிவு செய்யத் தொடங்கினோம். நீரோடை, மேய்ச்சல் நிலம் என இன்னும் சங்க இலக்கியத்தில் வரும் முல்லை நிலத்தின் வர்ணனை அங்கே விரிந்துகிடந்தது... ரியல் எஸ்டேட் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்...  “சென்னை மிக அருகில் ஐங்குறுநூற்று முல்லை நிலம்.”

எங்கள் அவசரம் எல்லாம் சூரியனுக்குத் தெரியவில்லை. ஓய்வு எடுக்க அவசரமாக மறையத் தொடங்கியது. இருள் தன் கருமையை மெல்ல வெளியின் மீது பூசத் தொடங்கியது. இப்போது நாங்கள் இருப்பது ஒரு மேய்ச்சல் நிலம். இதுவும் மன்னார்குடி குடும்பத்துக்குச் சொந்தமானதுதான்... இதனைக் கடந்து கொஞ்சம் உள்ளே புகுந்தால், அந்தச்  சொகுசு மாளிகை அருகே சென்றுவிடலாம். ஆனால், அது அவ்வளவு எளிமையானது இல்லை என்பது அதற்கு போடப்பட்டிருக்கும் பாதுகாப்பிலிருந்து தெரிந்தது. அருகே இருக்கும் இரண்டு மாடி கட்டடம், ஒரு கண்காணிப்புக் கோபுரம்போல் செயல்படுகிறது. 

நாங்கள் ஒரு மரத்தின் மீது ஏறி நின்று பார்த்தது வரை... அந்தப் பங்களா, அதைச் சுற்றி உள்ள 100 ஏக்கர் மாயக் கோட்டைக்குள்ளே ஏறத்தாழ 100 மின்விளக்குகள், சாலை வசதிகள் என அந்த ஊரின் அருகே இருக்கும் எளிய மனிதர்களின் வீடுகளுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல், சாமான்யர்களின் உலகத்திடமிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு வேறோர் உலகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. 

நாங்கள் இருந்த மேய்ச்சல் நிலத்தின் அருகே ஓர் ஓடை... இந்த வறட்சியிலும் மெல்ல சலசலத்து ஓட, அங்கு நீர் பருகிய எகினம் என்னும் முல்லை நிலத்துப் பறவை, மெல்ல உயரப் பறந்து... அந்தக் கட்டடத்துக்கு மேல் சென்று மறைந்தது. ஆனால், அந்த மாளிகை மற்றும் இடத்துடன் பின்னப்பட்டிருக்கும் சந்தேகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
  
அறத்தைப் புதைத்து நடப்பட்ட மரம்!

Sasikala_pic_16401.jpgஇவ்வளவுதானா... நாங்கள்கூட என்னமோ ஏதோ என்று நினைத்துவிட்டோம்... அவர்களுக்குத்தான் பல இடங்களில் சொத்து இருக்கிறதே...? ஆம். இருக்கிறது. அதையெல்லாம் எப்படி வாங்கினார்கள் என்று தெரியாது. ஆனால், இந்த இடம், அதில் இருக்கும் ஒரு சொகுசு வீடு எல்லாம் இசையமைப்பாளர் கங்கை அமரனை மிரட்டி வாங்கியது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறது. இந்தச் சொத்தை வாங்கியபோது... சசிகலா, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் இல்லை. அவர், கட்சியைக் கைப்பற்றி... ஆட்சியைக் கைப்பற்ற காய் நகர்த்துவார் என்று அப்போது யாரும் நினைக்கவில்லை. அப்போது அவர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி மட்டும்தான். இப்போது, அவரிடம் எல்லாம் இருக்கிறது... குறிப்பாக, ஜெயலலிதாவினால் விரட்டப்பட்டவர்கள் எல்லாம் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள். 

நீங்கள் என்றாவது பழைய மகாபலிபுரம் சாலையில் செல்லும்போது நெய்தல், முல்லை நிலங்களை மட்டும் பார்த்துச் செல்லாதீர்கள். இந்தக் கட்டடத்தை, அங்கு அறத்தை புதைத்து அதன் மீது நடப்பட்டிருக்கும் மரத்தை, அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் காவலையும் பாருங்கள்.... இதுவெல்லாம் எப்படி வந்தது என்று உங்களுக்குள் கேள்வி கேளுங்கள். அந்தக் கேள்வியில்தான் எல்லாம் இருக்கிறது... தமிழகத்துக்கான வெளிச்சமும்!

இல்லை... இதற்கு முன்னால் இருந்தவர்களும் இதைத்தானே செய்தார்கள் என்று இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வோமாயின், நம் பிள்ளைகளைச் சகதியில்தான் விட்டுச் செல்வோம். மீண்டும் நினைவூட்டுகிறேன், இந்தக் கருங்குழி பள்ளம் நிலத்தை மிரட்டி வாங்கியபோது... சசிகலாவிடம் நேரடியாக எந்த அதிகாரமும் இல்லை.

ஹும்... சொல்ல மறந்துவிட்டேன்... நாம் கடினப்பட்டு உழைத்துச் சம்பாதித்து கட்டிய 400 சதுர அடி வீட்டில்... 100 ஏக்கர் நிலத்தில் பரந்துவிரிந்திருக்கும் இந்தச் சொகுசு மாளிகையில் தூங்குவதைவிட நிம்மதியாகத் தூங்க முடியும்!

http://www.vikatan.com/news/coverstory/76737-sasikala-ilavarasi-sudhakaran-and-a-dream-of-common-man.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.