Jump to content

சபரிமலைக்கு 600 கிலோ மீற்றர் கால்நடையாகச் சென்ற நாய்


Recommended Posts

சபரிமலைக்கு 600 கிலோ மீற்றர் கால்நடையாகச் சென்ற நாய்

 

சபரிமலை யாத்திரிகர் ஒருவருடன் சுமார் 600 கிலோ மீற்றர்கள் நடந்தே சென்ற ‘மாலு’ என்ற நாய், மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நவீன் (37) என்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர், உடுப்பியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கால்நடையாகவே சபரிமலைக்குப் புறப்பட்டார்.

4._Malu-1.jpeg

சுமார் 80 கிலோ மீற்றர் கடந்திருந்தபோது, வீதியின் எதிர்ப்புறமாக நாய் ஒன்று நவீனைப் பின் தொடர்ந்தது. சற்று நேரத்தில் வீதியைக் கடந்து நவீனின் பின்னால் வரத் தொடங்கியது. அதை விரட்ட நவீன் எவ்வளவோ முயற்சித்தபோதும், எந்த விதத் தொந்தரவும் தராத அந்த நாய் அவரையே பின்தொடர்ந்து சென்றது. ஓரிரு நாட்களில் நவீனும் நாயும் நண்பர்களாகினர்.

அந்த நாய்க்கு மாலு என்று பெயரிட்ட நவீன், அதற்கு கறுப்புப் பட்டியையும் முத்து மாலை ஒன்றையும் மாட்டிவிட்டார்.

4._Malu.jpeg

நவீன் சபரிமலையை அடைய எடுத்துக்கொண்ட பதினெட்டு நாட்களும் அந்த நாய் அவரையே பின் தொடர்ந்தது. நவீனை விட்டு ஒரு சில மீற்றர் இடைவெளியில் அவரைத் தொடர்ந்த அந்த நாய், இரவில் நவீன் தூங்கும்போது அவரது பொருட்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்தது. இவ்வாறு சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே கடந்திருக்கிறது மாலு.

யாத்திரை முடிந்து வீடு திரும்பும்போது, விசேட அனுமதி பெற்று மாலுவை பேருந்தில் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் நவீன். தற்போது, நவீனின் குடும்ப உறுப்பினர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள மாலு அவர் வீட்டிலேயே தங்கியிருக்கிறது.

http://www.virakesari.lk/article/15022

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆத்மா எந்த ஜீவனுக்குள் வாழுதோ யாரறிவார்....!

Link to comment
Share on other sites

சபரிமலையில் நிஜமாய் நடந்த அன்பே சிவம் சம்பவம்!

dog0111_16056.jpg

ஓவியம்:பிரேம் டாவின்ஸி

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நவீன். தற்போது 38 வயதான நவீன், ஒவ்வொரு வருடமும் தவறாமல் சபரி மலைக்கு செல்வது வழக்கம். கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இருந்து சபரி மலைக்கு நடந்தே சென்று விரதத்தை நிறைவு செய்வார். இதற்காக,கடந்த டிசம்பர் 7ம் தேதி  மூகாம்பிகை கோயிலில் இருந்து நடைபயணத்தைத் நவீனும் அவரது நண்பர்கள் சிலரும் தொடங்கினார். அதிகாலை 3 மணிக்கே எழுந்து நடப்பது நவீனின் வழக்கம். அப்படி நடந்தால்தான் ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிலோ மீட்டர் பயணிக்க முடியும்.

பயணத்தை தொடங்கிய இரு நாட்களில் நவீன் கேரள எல்லைக்கு வந்து விட்டார். காசர்கோடு அருகே வரும் போது, நவீனை தெருநாய் ஒன்று எதிர்கொண்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே தெருநாய்கள் பிரச்னை அதிகமாக இருக்கும் நிலையில், அதனைக் கண்டு நவீன் பயந்துள்ளார். 'எங்கே கடித்துவிடுமோ...' என்று துரத்தினார்.  அந்த நாய் நவீனை கடிக்கவும் இல்லை. மிரட்டவும் இல்லை. அவர் அமைதியாக போக வழி விட்டு விலகியுள்ளது. 

ஆனால், நாயும் நவீனை பின் தொடர்ந்து நடக்கத் தொடங்கியுள்ளது. முதலில் நவீனை விட்டு 20 அடி தொலைவில் தொலைவில் தொடர்ந்துள்ளது. நவீன் அதனை விரட்டிப் பார்த்தும் போகவில்லை. சில சமயங்களில் நவீனுக்கு முன்னதாகவே எங்கேயோ போய்விடும். அடுத்த சில நிமிடங்களில் அவரைத் தொடரும். இப்படியாக நவீனும் அந்த நாயும் ஓரிரு நாட்கள் நடந்துள்ளனர். முதலில் 20 அடி தொலைவில் வந்துக் கொண்டிருந்த  நாய், பின்னர் அவரை நெருங்கி நடக்கத் தொடங்கியுள்ளது. நவீனுக்கு அதன் மீதிருந்த பயம் போய் பரிதாபம் பிறந்தது. இருவருக்குள்ளும் நட்பு உருவானது. தொடர்ந்து இருவருமே சேர்ந்து சபரிமலை நோக்கி நடக்கத் தொடங்கினர். 

இரவில் இருவரும் அருகருகே படுத்து உறங்கினர். அதிகாலை 3 மணியானால் நவீன் முழிக்கிறாரோ இல்லையோ... நாய் கண் விழித்து அவரை எழுப்பத் தொடங்கி விடும். இருவரும் உணவில் இருந்து அனைத்தையும் பங்கிட்டுக் கொண்டனர். சரி.... புது நட்புக்கு பெயர் சூட்ட வேண்டுமே. யோசித்தார் நவீன், 'மாலு ' என்று பெயர் சூட்டினார். சபரி மலைக்கு வரும் பெண் பக்தர்களை இப்படி அழைப்பது வழக்கம். காரணம் மாலுவும் ஒரு பெண்.

டிசம்பர் 7ம் தேதி தெடங்கிய பயணம் 23ம் தேதி முடிவடைந்தது. இருவரும் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சபரி மலை வந்து சேர்ந்தனர். சபரி மலைக்கு வந்தடைந்ததும் மாலுவுக்கு வழக்கம் போலத் தடை வந்தது. பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, பதினெட்டாம்படி அருகே மாலுவை விட்டுவிட்டு நவீன் மட்டும் சாமி தரிசனத்தை முடித்தார். 

'எப்படியோ நம்ம கூட வந்துட்டு இனி எங்கே அங்கே நிற்கப்போகிறது நாம் புறப்படுவோம் என்று நவீன் கிளம்பியிருக்கிறார். அப்போது, அவருடன் வந்த மற்ற நண்பர்கள்,' மாலு பதினெட்டாம் படி அருகே காத்துக் கொண்டிருப்பதை பார்த்ததாக அவரிடம் சொன்னார்கள். பதறி போனார் நவீன். 'எங்கேனு... பதினெட்டாம்படி அருகே ஓடியிருக்கிறார். எங்கே விட்டு சென்றாரோ அதே இடத்தில் மாலு காத்துக் கொண்டிருந்தது நவீனுக்காக. மாலு இனி நம்மை விட்டு பிரியாது என்பதை உணர்ந்த நவீன், அதனைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

கேரள மின்வாரியதில் பணிபுரியும் நவீனும் மாலுவும் கோழிக்கோடு நோக்கி பயணிக்க பம்பா பேருந்து நிலையத்துக்கு வந்தனர். இங்கும் ஒரு தடை. மாலுவை பேருந்தில் ஏற்ற நடத்துனர் அனுமதிக்கவில்லை. எந்த சூழலிலும் மாலுவை கைவிட்டு விட நவீனுக்கு மனம் வரவில்லை. கேரள போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் சென்று மாலுவின் கதையை விளக்கினார். மனமிறங்கிய அவர்கள் மாலுவை பேருந்தில் அழைத்துச் செல்ல சிறப்பு அனுமதி அளித்தனர். பம்பாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு 460 ரூபாய் டிக்கெட்டில் நவீன் அருகே அமர்ந்து பயணித்தது மாலு!

http://www.vikatan.com/news/india/76503-sabarimala-pilgrim-and-dog-have-become-viral-sensation.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போன பிறப்பில் நாய் இவரின்ட மனிசிசாய் இருந்திருக்கும்.tw_cold_sweat:அல்லது அவர் நாயின்ட கணவராய் இருந்திருப்பார்:rolleyes:...போன பிறப்பின் பந்தம் இந்தப் பிறப்பிலும் தொடர்கிறது.
 

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:
போன பிறப்பில் நாய் இவரின்ட மனிசிசாய் இருந்திருக்கும்.tw_cold_sweat:அல்லது அவர் நாயின்ட கணவராய் இருந்திருப்பார்:rolleyes:...போன பிறப்பின் பந்தம் இந்தப் பிறப்பிலும் தொடர்கிறது.

ரதி.....
உண்மையில்... அந்த நாய், 
600 கிலோ  மீற்றர் நடந்தது என்பதற்கு, உத்தியோக பூர்வமான ஆதாரம் இல்லை. 
ஆனால்... ஒரு, மனைவியை.... நாயுடன்,  ஒப்பிட்டு.... நீங்கள் எழுதிய கருத்தை, வாசிக்க.. கவலையாக இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்கு க்கு என்ன வேண்டுதலோ.. மாலையும் கழுத்துமாய் நடந்து போயிருக்கு. அதுக்கும் ஆத்தில பிராப்பிளம் போல. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

4 hours ago, ரதி said:
போன பிறப்பில் நாய் இவரின்ட மனிசிசாய் இருந்திருக்கும்.tw_cold_sweat:அல்லது அவர் நாயின்ட கணவராய் இருந்திருப்பார்:rolleyes:...போன பிறப்பின் பந்தம் இந்தப் பிறப்பிலும் தொடர்கிறது.
 

 
 
 

கணவன் மனைவி போன ஜென்மத்தில் புடுங்குபட்டது காணாது என்று இந்த ஜென்மத்திலும் கோவிலுக்கு போகினமாம் முதலில் செய்தி போட்டவனை பிடிச்சு உதைக்கணும் இதே சபரிமலையில் நாய்க்கு இருமுடிகட்டி வந்தால் கோவில் (மலையாள ) நிர்வாகம் அனுமதிக்குமா ?
 
கேரளாவில் இருக்கும் கோவிலில் மலையாளிகள் சுத்தவர சாயா கடை சாப்பாட்டுக்கடை ஏறி முடித்ததும் 1மாத  பசி தீர்ப்பு கடைகள் வைத்து உழைப்பது இந்த செட்டனுகள் போய் மாள்வது நம்ம தமிழ் கூட்டம் முடிஞ்சால் துடக்கு நின்ற பெண்களை அங்கு அனுமதிக்கட்டும் பார்க்கலாம் ஒரு பயல் அந்தபக்கம் எட்டிபார்க்கமாட்டன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான.... பைத்தியங்கள், உலகம்  முழுவதும்... பரவிக் கொண்டு உள்ளது.

Link to comment
Share on other sites


இங்கும் ஒருவர்  25 வருடம்  தொடர்ந்து போகிறார் போய் வந்து ஏப்பிரல் கடைசியில் தான் சுகர் பிரசர் குளுசைகள் எடுப்பார் பின் அது சமர் லீவில் கூடி 10 மாதமளவில் மரக்கறிக்கு மாறி டிசம்பர் கடைசியில் அந்த காடுமேடெல்லாம் அலைந்து சிலிம் காட்டிக்கொண்டு வந்து செல்பி போடும் பிறகு மகரஜோதி பார்த்து விட்டு ஜனவரி 20களில் ராஜாவாட்டம் இறங்கும் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.