Jump to content

என்ன நினைக்கிறது உலகம்?- புத்தாண்டு என்ன தரும் பாலஸ்தீனத்துக்கு?


Recommended Posts

என்ன நினைக்கிறது உலகம்?- புத்தாண்டு என்ன தரும் பாலஸ்தீனத்துக்கு?

 

 
kathar_3112367f.jpg
 
 
 

கத்தார் ஊடகம் - அல்ஜசீராவில் வெளியான தலையங்கம்

 

பாலஸ்தீனப் பிரச்சினை இந்த ஆண்டும் பரவலாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இறுதியில்கூட பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடியப்போவதில்லை. இவ்விஷயத்தில் தீர்வு காண்பதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கப்போகின்றன. அதேசமயம், இந்த முறை வெளியுறவு தொடர்பான விஷயங் களை விட, பாலஸ்தீனத்தின் உள்விவ காரங்களே பிரதானமாகப் பேசப்பட விருக்கின்றன.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) தலைவரும், பாலஸ்தீன அதிபருமான மஹ்மூத் அப்பாஸ் சுட்டிக் காட்டியிருப்பதுபோல், கடந்த நவம்பரில் வெற்றிகரமாக நடந்த ஃபடா மாநாடு, முக்கியப் பதவிகளில் ஏற்படப்போகும் மாறுதல்களையும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டிருக்கும் மேம்பாட்டையும் எடுத்துக்காட்டியது. ஒருகாலத்தில் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொண்ட இந்த இரு அமைப்புகளும் தற்போது நட்புடன் நடந்துகொள்வது, இந்த மாநாட்டின்போது தெளிவானது.

மாநாட்டின்போது அதிபர் அப்பாஸும் ஹமாஸ் தலைவர் காலேத் மெஷாலும் வெளிப்படையாக நகைச்சுவையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தும், சமரச நடவடிக்கைகளில் இணைந்து பணிபுரிவதை உறுதிசெய்யும் வகையிலும் ஹமாஸ் பொலீட்பிரோ தலைவர் செய்தி அனுப்பியிருந்தார். தனது உரையின்போது நான்கு முறை ஹமாஸ் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் அதிபர் மஹ்மூத் அப்பாஸ்.

இந்த நல்லிணக்கம் தொடர்கிறது எனில், இதற்கு முன்னர் மெக்கா, கெய்ரோ நகரங்களில் கையெழுத்தான சமரச ஒப்பந்தங்களை அமல்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இரு அமைப்புகளுக்கும் இடையிலான சமரசப் பணிகள் நடைபெறுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் அவை.

தேசியக் கூட்டு அரசை உருவாக்குவது, இரு தரப்புக்கும் இடையிலான சமரச நடவடிக்கைகளில் ஒன்று. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சட்டமியற்றும் பிரிவான பாலஸ்தீன தேசிய கவுன்சில், ஹமாஸ் அமைப்புடன் கலந்து பேசி ஒன்றுபட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை உருவாக்குவதும், இறுதியாக நாடாளுமன்ற, அதிபர் தேர்தல்களைச் சந்திப்பதும் இந்த சமரச முயற்சிகளில் அடக்கம்.

மூன்று மாதங்களுக்குள் பாலஸ்தீன தேசிய கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றாக வேண்டும் என்று, ஃபடா மாநாட்டின் தீர்மானங்களின் அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கிடையே பிரதமர் ராமி ஹம்தல்லா தலைமையிலான அரசின் நாட்கள் எண்ணப்படுவதாக ஏற்கெனவே வதந்திகள் பரவத் தொடங்கி விட்டன.

பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (பி.எஃப்.எல்.பி.), ஜனநாயக முன்னணி (டி.எஃப்.), மக்கள் கட்சி (பி.பி.) ஆகிய கட்சிகளுடன் சுயேச்சை அமைப்பு களும் பங்கேற்கவிருக்கும் கூட்டு அரசு இன்னும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் உருவாக்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய இயக்கத்தால் முன்மொழியப் படும் சுயேச்சை வேட்பாளர்கள் ஹமாஸ் அமைப்பின் சார்பில் நிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் புதிய அரசு அமைந்தவுடன் தேர்தலுக்குத் தயாராவது அதன் அடுத்த நடவடிக்கையாக அமையும்!

இத்தனை மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், பாலஸ்தீனத் தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறை வதற்குப் பெரிய வாய்ப்புகள் இல்லை. இஸ்ரேல் பிரதமர் பதவியில் பெஞ்சமின் நெதன்யாஹு தொடரும் நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விஷயத்தில் பெரிய முன்னேற்றங்கள் நடப்பதற்கு வாய்ப்பு குறைவுதான்!

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

http://tamil.thehindu.com/opinion/columns/என்ன-நினைக்கிறது-உலகம்-புத்தாண்டு-என்ன-தரும்-பாலஸ்தீனத்துக்கு/article9455776.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.