Jump to content

முல்லைத்தீவில் காந்தி சிலை உடைக்கப்பட்டமைக்கு மாவை கண்டனம்


Recommended Posts

mavai-965s1-720x480.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,

இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர மத்தியில் மகாத்மா மாகாந்தி சிலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.

குறித்த சிலை கடந்த 26ஆம் திகதி இரவு அடையாளந் தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தவிடம் குறித்து மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி இந்திய போராட்ட காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து விடுதலை உணர்வூட்டியவர் என்று தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா,

மனிதகுல விடுதலைக்காகவும் இந்தியாவின் விடுதலைக்காகவும் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அஹிம்சை வழியில் போராடிய உலகின் மிக வலிமை மிகுந்த போராட்ட தத்துவத்தை உருவாக்கிய, உலகம் போற்றும் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளமைக்கு தனது கண்டனத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு மானிடனும் இச்செயலை செய்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளதுடன், இச்செயலுக்கு யாரும் எந்த காரணமும் கூறமுடியாது எனவும் இச்செயலானது மனித குலத்தின் ஒரு இழிவுச்செயலாகும் எனவும் சாடியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தானறிந்தது முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கோரியிருந்ததாக குறிப்பிட்டுள்ளதுடன்,

பண்டாரவன்னியன், வள்ளுவர், பாரதியார் மகாத்மாகாந்தி முதலான எட்டு சிலைகள் அமைக்க 2016 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.

அத்தீர்மானத்தின்படி நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை உடைத்தமையின் உள்நோக்கமானது மூடச்செயலாகும் என்பது வெளிப்படை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மாக்களின் முன், வீர மண்ணில் இச்செயல் நடைபெற்றமை பாரதி பாடியமை போன்று 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்' என்று கண்ணீர் விடத்தான் வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilkingdom.com/2017/01/34.html

Link to comment
Share on other sites

19 minutes ago, Athavan CH said:

பண்டாரவன்னியன், வள்ளுவர், பாரதியார் மகாத்மாகாந்தி முதலான எட்டு சிலைகள் அமைக்க 2016 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.

பண்டாரவன்னியன், வள்ளுவர், பாரதியார் போன்றவர்கள் தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் செய்த சேவைக்காக அவர்களுக்கு சிலை வைப்பதில் ஒரு நியாயம் இருக்குது. காந்தி தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் என்னத்த வெட்டிப் புடுங்கினவர்.

19 minutes ago, Athavan CH said:

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,

தியாக தீபம் தீலீபன் அண்ணாவின் நினைவிடம் உடைக்கப் பட்டபோது, நீங்கள் எல்லாம் என்ன புளியங்காய் சப்பிக்கொண்டோ இருந்தியள். 

இந்தியர்களே காந்தியை மதிக்கவில்லை. பிறகு என்னத்துக்கு முல்லைத்தீவில் சிலை 

Link to comment
Share on other sites

5 hours ago, Athavan CH said:

காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா

மாவையின் தமிழின விரோத எசமானார்களின் ஏமாற்றுச் சின்னங்களாகிய சிலைகள் உடைக்கப்படும் போது மாவை வேதனை அடைவது எதிர்பார்க்கக் கூடியதே!

உடைக்கப்பட வேண்டிய சிலை! உடைத்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள்!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிலை வைக்கும் யோசனை வரும் போதே அதனைத் தடுத்திருக்க வேண்டியவர் நீங்கள்.

வரவு செலவு திட்டத்தில் பா.உறுப்பினர் ஒருவருக்கு ஒதுக்கப்படும் நிதி அவரது சொந்த பணமா அவர் நினைத்தபடி செலவு செய்வதற்கு....,

எமது மக்களின் தேவைகள் மலை போல் குவிந்துள்ள போது  அதற்கு கிடக்கும் நிதி வளமோ மிக மிகக் குறைவு , இந் நிலையில் வட , கிழக்கு மாகாணங்களை போரால் மிகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அறிவித்து, அம் மாகாண பா.உறுப்பினர் களுக்கு மேலதிகமாக நிதி ஒதுக்குமாறு அரசை கோர வேண்டிய நீங்கள் , அதைச் செய்யாது கிடைக்கும் அந்த அறப நிதியில் சிலை அமைப்பது எவ்வளவு கேவலம்.....

எமது தாயகத்தில் பெண்களை தலைமையாக கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன , அவர்கள் தங்கள் குடும்பங்களை நிர்வகிக்க மிகவும் கஸ்ட்டப் படுகிறார்கள், பல சிறுவர்கள் தமது பாடசாலை கல்வியைக் கைவிட்டு கூலி வேலைக்குப் போகிறார்கள்....., இந்த குடும்ப தலைவிகளை ஒன்றினைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியாதா?
 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  1 அல்லது 2 எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றுக் கொடுத்து அதன் மூலம் வருமானங்களைப் பெற்று அவர்களுக்கு உதவ முடியாதா? 

ஒரு பா.உறுப்பினரின் நிதி போதாவிடின் , மற்றய பா.உறுப்பினர்களின் நிதிகளையும் சேர்த்து இவ்வாறன திட்டங்களை முன்னெடுக்கலாமே.....

வங்க தேசத்தினைச் சேர்ந்த  பேராசிரியர் முகமது யூனுஸ் வறிய பெண்களை மையப்படுத்தி இப்படியான மகளிர் சுய உதவிக் குழுக்கள் , சிறு கடன் திட்டங்களை நடைமுறைப் படுத்தி தானே பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தினார், அதனால் தானே அவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.

 மிகவும் நசுக்கப்பட்ட , பொருளாதர நிலையில் பின் தங்கிய ஒரு இனத்தின் பிரதிநிதிகளிடமிருந்து இப்படியான சிந்தனகள் ஊற்றெடுக்காமல் எவனோ ஒருவனுக்கு சிலை வைக்கும் வக்கிரம் எப்படி தோன்ற முடியும்

சில வருடங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டது
கணவனைத் தொலைத்த பெண் ஒருவர் எந்த நிவாரணமும் இன்றி ,கட்டாயம் வேலைக்கு போய்த்தான் குடும்பத்தினை காக்க வேண்டிய நிலையில் கூலி வேலைக்கு செல்ல , தனது மகளை பாதுகாப்புக்காக விடப்பட்ட இடத்தில் , அச் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த்ப் பட்டாள்....., ஒரு பக்கம் காணாமல் போன கணவன் , மறுபுறம் துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி ... யோசித்துப் பாருங்கள் எவ்வளவு கொடுமை...... 
 இப்படியான குடும்பங்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒரு சிறுவர் காப்பகம் ஒன்றை உருவாக்கி , வேலைக்கு போகும் பெண்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக விடக்கூடிய சூழலை உருவாக்கலாமே....

அண்மையில் எனது நண்பர் ஒருவர் ஊரிற்கு சென்றிருந்த போது..... அவர் நின்ற வீட்டில் இரு பெண் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து  வீட்டிற்கு வந்தவுடன் அவசரப் பட்டு டொய்லெட்டுகு ஓடுவார்களாம்.... இதைத் தொடர்ந்து அவதானித்த நண்பர் ,பெற்ரோரிடம் விசாரித்த போது அவர்களின் பாடசாலையில் பெண்களுக்கென பிரத்தியோகமான மலசல கூட வசதி இல்லை எனச் சொன்ணாராம்....... எவ்வளவு கொடுமை வளர்ந்த பெண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் மலசல கூட வசதி இல்லை, ஏன் இந்த பா.உறுப்பினர்களால் இப்படியான தேவைகளை நிறைவேற்ற முடியாதா..... என்ன மண்ணாங்கட்டிக்கு காந்தி சிலை?

உங்களைப் பத்தி சுருக்கமாகக் கூறின் 
நீங்கள் எல்லாரும் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இந்தியப் பிரதிநிதிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை... சுகமில்லாமல், ஆஸ்பத்திரியில்.... உள்ளார் என்று செய்தி வந்தது.
காந்திக்கு... கருத்து சொல்ல, துண்டு வெட்டிக் கொண்டு வந்து விட்டாரா  ?

Link to comment
Share on other sites

On 16.1.2017 at 5:12 AM, தமிழ் சிறி said:

மாவை... சுகமில்லாமல், ஆஸ்பத்திரியில்.... உள்ளார் என்று செய்தி வந்தது.
காந்திக்கு... கருத்து சொல்ல, துண்டு வெட்டிக் கொண்டு வந்து விட்டாரா  ?

இல்லை சிறி , இது சுகமில்லாமல் போவதற்கு முன்னர் வந்த செய்தி,

தமிழ் எம்.பி கள் ,மற்றும்  மாகாணசபை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மிகவும் அலட்சியமாகவே உள்ளனர், அவர்கள் அங்கு கிடைக்கும் வளங்களைக் கொண்டே பல காரியங்களைச் செய்யலாம்......, 
ஆனால் அவர்கள் தங்களை வளப்படுத்துவதே குறியாக உள்ளனர்...
இங்கு எங்களுக்கு பல விடயங்கள் தெரிய வருவதில்லை

கடந்த வருடம் ஜப்பானின் உதவித் திட்டங்களுக்கு பொறுப்பான தூதுக்குழு ஒன்று யாழ் சென்று மாகாணசபை உறுப்பினர்களை சந்தித்து நீங்கள் என்ன உதவியை எதிர்பார்க்கின்றீர்கள் எனக் கேட்டுள்ளனர், அதற்கு இவர்கள் தங்களுக்கு வாகனங்கள் தரும் படி கேட்டுள்ளார்கள்..... (என்ன பிறப்புகளோ ....) 
நிலத்தடி நீர் மாசடைவினால் பாரிய பிரச்சினையை எதிர் கொள்ளும் யாழ்ப்பாணத்திற்கு  ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலயத்தினை அமைத்துத் தரும்படி கேட்டிருக்கலாம்.... என்ன செய்வது எமது தலை விதி அப்படி.....
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.