Jump to content

சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்


Recommended Posts

சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

 
 
 
சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்
 
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்காத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் சில முடிவுகளை தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வின் முன்னார் விசாரணைக்கு வந்தது.

கோர்ட்டின் உத்தரவை பின்பற்றத் தவறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி இந்த அமர்வு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பிரபல சட்ட நிபுணர் ஃபாலி எஸ். நாரிமனை நியமித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/02122526/1059573/SC-removes-Anurag-Thakur-Ajay-Shirke-from-BCCI.vpf

Link to comment
Share on other sites

பிசிசிஐ சரிவு தொடங்கியது எங்கே? ஓர் அலசல்...

பிசிசிஐ

புத்தாண்டில் முதல் சிக்ஸரை அடித்துள்ளது சுப்ரீம் கோர்ட். நீதிபதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளைப் பின்பற்றாததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பரிந்துரையைப் பின்பற்ற மறுக்கும் மற்ற மாநில கிரிக்கெட் சங்க  நிர்வாகிகளும் வீட்டுக்குச் செல்லலாம் என எச்சரித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் முதல் பிரேக்கிங் நியூஸ் இதுதான். சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி நடவடிக்கையால், கட்டுப்பாட்டை இழந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். சரிவு தொடங்கியது எங்கே? ஒரு ஃபிளாஷ்பேக்...

மே 2013, ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழல்
2013 ஐ.பி.எல். தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சர்மா, அஜித் சண்டிலா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. வீரர்கள், புக்கிகள், தரகர்கள் மட்டுமல்லாது சி.எஸ்.கே. அணியின் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல பிரிவுகளில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

அக்டோபர் 2013, முக்தல் கமிட்டி நியமனம்
சூதாட்ட வழக்கு மற்றும் பி.சி.சி.ஐ. விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி முகுல் முக்தல் தலைமையிலான குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்.

நவம்பர் 2014, சி.எஸ்.கே. ராஜஸ்தான் ராயல்ஸ் மீது குற்றச்சாட்டு
ஐ.பி.எல். சி.ஓ.ஓ சுந்தர் ராமன், குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் இருப்பதை உறுதி செய்தது முக்தல் கமிட்டி. இந்த விதிமீறல் குறித்து நன்கு தெரிந்து வைத்திருந்தும் அவர்கள் மீது, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த என்.சீனிவாசன் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார் என அறிக்கை தாக்கல் செய்தது முக்தல் கமிட்டி.

ஜனவரி 2015, லோதா கமிட்டி நியமனம்
ஐ.பி.எல். ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனை விவரங்களை  உறுதி செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். அதோடு பி.சி.சி.ஐ.யில்  சீர்திருத்தங்கள் செய்வது குறித்து பரிந்துரைக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. 

ஜூலை 2015, சி.எஸ்.கே. ராஜஸ்தான் அணிகளுக்கு தடை
ஸ்பாட் ஃபிக்சில் தொடர்புடைய சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை  இரண்டு ஆண்டுகள், ஐ.பி.எல்.போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது லோதா கமிட்டி. அந்த அணியின் உரிமையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஆனால், மற்ற அணிகளில் விளையாட அந்த இரு அணி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

ஜனவரி 2016, பி.சி.சி.ஐ.யில் முழு மாற்றத்துக்கு பரிந்துரை
ஒட்டுமொத்த பி.சி.சி.ஐ.,யின் அதிகாரத்தையும் மாற்றி அமைக்க பரிந்துரைத்தது லோதா கமிட்டி. ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு வயது வரம்பு, 70 வயதுக்கு மேற்பட்டவர் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் நீடிக்கத் தடை என நீண்டது அந்த புரிந்துரை. 

ஃபிப்ரவரி 2016, பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் கெடு
ஜனவரி 31-ம் தேதிக்குள் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பி.சி.சி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால், பி.சி.சி.ஐ. அதைப் பின்பற்றவில்லை. மாறாக, சட்ட சிக்கலைச் சீர்க்க ஒரு குழு அமைத்தது. மீண்டும் மார்ச் 3-ம் தேதி வரை டெட்லைனை நீட்டித்தது பி.சி.சி.ஐ. இதற்கும்  பி.சி.சி.ஐ. மசியவில்லை.

மார்ச் 2016, அறிக்கைக்கு எதிராக பி.சி.சி.ஐ. விளக்கம்
பி.சி.சி.ஐ. சார்பில் 55 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை மட்டுமே ஏற்க முடியும். பல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக  பி.சி.சி.ஐ. வாதம் செய்தது.

ஏப்ரல் 2016, நிதி பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு
விதிமுறைகளை மீறி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ. நிதி ஒதுக்கீடு செய்யும் முறையை சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமர்சித்தது. அதோடு, ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு மட்டுமே என்ற கமிட்டியின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பி.சி.சி.ஐ.யின் கோரிக்கையை நிராகரித்தது.

மே 2016, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை
பி.சி.சி.ஐ.யின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, ஸ்திரமான நிலைப்பாடு இல்லை என விளாசிய சுப்ரீம் கோர்ட், இந்த கட்டமைப்பை மாற்றாமல் எதுவும் சரியாகாது என கொந்தளித்தது.

செப்டம்பர் 2016, வழிக்கு வரவும், இல்லையெனில்...
‛லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி பி.சி.சி.ஐ. தலைவரை நீக்க தயங்க மாட்டோம்’ என கண்டித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ‛‛தங்களுக்கென்று ஒரு சட்டம் இருப்பதாக பி.சி.சி.ஐ. கருதுகிறது. அவர்கள் தங்களை கணவான்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. வழிக்கு வரவும். இல்லையெனில் நாங்கள் வழிக்குக் கொண்டு வருவோம்’’ என எச்சரித்தார்.

அக்டோபர் 2016, பண பரிவர்த்தனைக்குத் தடை
அவசரக் கூட்டம் நடத்தி, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு 1,100 கோடி ஒதுக்குவதாக பி.சி.சி.ஐ. முடிவெடுத்தது. ஆனால், பண பரிவர்த்தனையை நிறுத்தச் சொல்லி வங்கிகளுக்கு லோதா கமிட்டி உத்தரவிட்டது. இதனால், இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டதாக பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் பேட்டியளித்தார். இதையடுத்து, அன்றாட பரிவர்த்தனைக்கு லோதா கமிட்டி அனுமதி அளித்தது.

அக்டோபர் 2016, தாக்கூருக்கு கோர்ட் உத்தரவு
லோதா கமிட்டி பரிந்துரை விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து கடிதம் கோரினார் அனுராக். இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அனுராக் தாக்கூருக்கு  கோர்ட் சம்மன் அனுப்பியது. 
இதற்கிடையே, சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், கமிட்டியின் சில பரிந்துரைகளை ஏற்பதாக பி.சி.சி.ஐ. முடிவெடுத்தது. இருப்பினும் வயது வரம்பு, ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு போன்ற விஷயங்களில் சீர்திருத்தம் செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்தது.

நவம்பர் 2016, தலைவரை நீக்க குழு பரிந்துரை
பிசிசிஐ சொன்ன பேச்சு கேட்காமல் அடம்பிடித்ததை அடுத்து, பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரையும் உடனடியாக நீக்குமாறு லோதா கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து பி.சி.சி.ஐ. நகர்வுகளை கண்காணிக்க முன்னாள் உள்துறை செயலர் கோபால் கிருஷண பிள்ளையை நியமித்தது உச்ச நீதிமன்றம்

டிசம்பர் 2016, பி.சி.சி.ஐ. மீண்டும் அடம்
‛எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை’ என, லோதா கமிட்டியை சந்தித்த பின் சொன்னார் பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே. ஹைதராபாத், விதர்பா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் மட்டுமே கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க சம்மதித்தது.

டிசம்பர் 2016, தாக்கூருக்கு மீண்டும் எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட வேண்டும் என அனுராக் கோரியதற்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு ‛நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும்’ என தாக்கூரை எச்சரித்து, அடுத்த விசாரணையை 2017, ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

ஜனவரி 2, 2017,  தலைவர் அனுராக், செயலர் ஷிர்கே நீக்கம்
லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க மறுத்ததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் பொறுப்பில் இருந்து நீக்கியது உச்ச நீதிமன்றம். ‛‛இது கிரிக்கெட்டின் வெற்றி. நிர்வாகிகள் வருவார்கள், போவார்கள். தனிநபர்களை விட கிரிக்கெட்தான் முக்கியம்’ என நீதிமன்றம் தெரிவித்தது. அதோடு, லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரத்தில், பின்னடைவு ஏற்படுத்த ஐ.சி.சி.யிடம் இருந்து கடிதம் பெற முயற்சித்ததற்காகவும், அந்த கடித விவகாரத்தை மறைத்ததற்காகவும், அனுராக் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாய்ந்தது. 

http://www.vikatan.com/news/sports/76608-the-falldown-of-bcci-a-detailed-report.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீதிமன்றங்கள் ஆடக்கூடாத விளையாட்டு

சேகர் குப்தா

 

 
 
 
koli_3116643f.jpg
 
 
 

கடந்த வாரம் மிகுந்த தயக்கத்துடன் விமான நிலையம் சென்றேன். ஏற்கெனவே 2 மணி நேரம் தாமதமாகிவிட்ட அந்த பெங்களூரு விமானம் ரத்து செய்யப்படக்கூடாதா என்றுகூட நினைத்தேன். கிரிக்கெட் பற்றிய சிந்தனையாலோ, உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா குழு கிரிக்கெட் வாரியத்தின் மீது நடத்திய துல்லியத் தாக்குதல் பற்றிய நினைப்பாலோ அப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகவில்லை. அப்போது மல் யுத்தம் பற்றியே சிந்தித்தேன். 46 விநாடிகளுக்குள் சோபியா மாட்சனிடம், பபிதா போகாட் தோற்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்திய ரசிகர்களில் சிலர் சோபியாவைக்கூட ஆதரித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்! பிறகு நிர்மலா தேவி, கரோலினா கேஸ்டிலோ இடால்கோவை புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். அப்போது அரங்கில் தோன்றியவர் முகம் பரிச்சயமாக இருந்தது. அவர் அசர்பைஜானின் டொக்ருல் அஸ்கரோவ். உலகின் மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களில் ஒருவர். அவரை எதிர்த்துக் களத்தில் நின்றவர் அதிகம் நாம் பார்த்திராத இந்தியர் விகாஸ் குமார். முதல் சுற்றில் பின்தங்கியவர், இரண்டாவது சுற்றில் ஆவேசம் வந்தவரைப்போல தாக்கி வெற்றி பெற்றார்.

இந்தியாவில் மல்யுத்தப் போட்டிகளில் நிறையப் பணம் கொட்டுகிறது. என்சிஆர் பஞ்சாப் ராயல்ஸ் அணிக்காக, மும்பை மகாரதி அணிக்கு எதிராகப் போட்டியில் கலந்து கொண்டார் அஸ்கரோவ். உலகத் தரமுள்ள வீரர்களை வெல்லவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் இந்தியாவிலும் மல்யுத்த வீரர்கள் தயாராகிவிட்டனர்.

இன்னொரு விளையாட்டு சேனலில் பேட்மிண்டன் (பூப்பந்து) போட்டிகள் காட்டப்பட்டன. பிரீமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) என்ற அந்தப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி காந்த், டென்மார்க்கைச் சேர்ந்தவரும் உலகின் இரண்டாமிட ஆட்டக்காரருமான ஜேன் ஆஸ்டர்கார்ட் ஜோர்கன்சனை வென்றார்.  காந்த் உலக அளவில் 15-வது இடத்தில்தான் இருக்கிறார். காந்த் ‘அவர் வாரியர்ஸ்’ அணிக்காகவும் ஜோர்கன்சன் ‘டெல்லி ஏசர்ஸ்’ அணிக்காகவும் விளையாடினர்.

இந்திய பேட்மிண்டன் விளையாட்டுக்குப் புரவலராக இருப்பவர் இந்திய பேட்மிண்டன் சங்கத் தலைவரான அகிலேஷ் தாஸ். இவர் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் பனாரசி தாஸின் மகன். பேட்மிண்டன் போட்டிகளில் தேசத்துக்காக ஆடியவர் இல்லை அவர். ஆனால் மிகச் சிறந்த நிர்வாகி.

இந்திய மல்யுத்த சம்மேளனம் என்ற அமைப்பு, உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவைச் சேர்ந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் என்பவரின் உடமையைப் போல உள்ளது. 16 வயதிலேயே குற்ற வழக்குக்கு உள்ளானவர், பாபர் மசூதி இடிப்பு இயக்கத்தில் சேர்ந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர், தடா சட்டப்படி சிறைவாசம் அனுபவித்தவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைப் போல (பி.சி.சி.ஐ.) மல்யுத்த, பூப்பந்து சங்கங்களையும் உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உள்படுத்தினால் அகிலேஷ், பிரிஜ் பூஷண் சரண் நிர்வாகிகளாக இருக்க முடியாது.

அபய் சவுடாலா தலைவராக இருந்த 2007 முதல் 2012 வரையில் குத்துச் சண்டைப் போட்டிகள் பிரபலமடைந்தன. அவர் நீக்கப்பட்ட பிறகு குத்துச் சண்டைக்கே ஆதரவு குறைந்தது. பிறகு ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தலைமையில் குத்துச் சண்டை சம்மேளனம் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. உலக கபாடி சம்மேளனத் தலைவராக ஜனார்த்தன் சிங் கெலோட் பதவி வகிக்கிறார். இவரும் தீவிர அரசியல்வாதி. இந்திய கபாடி சங்கத்துக்கு இவருடைய மனைவி மிருதுள் படவ்ரியா தலைவராக இருக்கிறார்.

விளையாட்டு சங்க நிர்வாகிகளாகப் பதவி வகிக்க லோதா குழு நியமித்துள்ள வயது, தொழில், பதவிக்கால வரம்பு ஆகிய நியதிகளை இவர்களுக்குக் கட்டாயமாக்கியிருந்தால் இவர்களுடைய பங்களிப்பில் வளர்ந்த விளையாட்டுகள் எதுவுமே இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்காது.

அதலடிக்ஸ் சம்மேளனத் தலைவராக முன்னணி அதலடிக் வீரர் ஆதில் சுமாரிவாலா பதவி வகிக்கிறார். மிக வேகமாக ஓடுவதில் வல்லவர். அவர் ஒரு அதலட் என்பதுடன், பதவி வகிப்பதற்கான வயது வரம்பிலும் இருக்கிறார்.

இப்போது மீண்டும் கவனிப்பையும் வெற்றிகளையும் பெற்றுவரும் விளையாட்டு ஹாக்கி. ஆனால் இந்திய ஹாக்கி சம்மேளனம் நன்றாக நிர்வகிக்கப்படுகிறதா, இல்லையா என்று கேட்டால் உறுதியாகக் கூற முடிய வில்லை. சம்மேளனத்தின் தலைவர் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி கே.பி.எஸ். கில். தேசிய அணியில் இடம் பெறுவதற்கு வீரர்களிடம் சம்மேளனத்தின் நிர்வாகிகள் சிலர் லஞ்சம் வாங்கியது ரகசிய கேமராவால் படம் பிடிக்கப்பட்டு அம்பலமானது. ஹாக்கி இந்தியா என்ற அமைப்பை மத்திய விளையாட்டு அமைச்சகமும் சுரேஷ் கல்மாடி தலைமையிலான இந்திய ஒலிம்பிக் சங்கமும் சேர்ந்து உருவாக்கின. சுரேஷ் கல்மாடி ஊழல் புகாருக்கு ஆளாகி விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்திய ஹாக்கி சங்கத் தலைவராக நரீந்தர் பாத்ரா பதவி வகிக்கிறார். இவர் டெல்லியில் பிரபலமான பாத்ரா மருத்துவமனையின் நிறுவனர். இவர் சர்வதேச ஹாக்கி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதால் இந்திய ஹாக்கி சங்கத் தலைவர் பதவியை தேசிய ஹாக்கி வீராங்கனையான மரியம்மா கோஷிக்கு அளித்திருக்கிறார் பாத்ரா.

இப்படி குழப்பம் தரும் தகவல்களிலிருந்து நாம் எந்த முடிவுக்காவது வர முடியுமா? வயது, அரசியல் தொடர்பு, பணக்காரப் பின்புலம், சொந்தமான விளையாட்டுச் சாதனைகள் ஆகியவை இரு்பபதாலோ, இல்லாமல் இருப்பதாலோ ஒரு விளையாட்டு சங்கத்தை வெற்றிகரமாக நிர்வகித்துவிட முடியாது. அப்படியென்றால் என்னதான் அடிப்படைத் தகுதிகள், அதுவும் கிரிக்கெட்டுக்கு. இந்தியாவின் ராஜ விளையாட்டு கிரிக்கெட் என்றால் மிகையில்லை.

இந்திய கிரிக்கெட் வாரியம் பகிரங்கமாக அல்லாமல் திரைமறைவில்தான் செயல்படுகிறது, அதில் ஊழல்கள் அதிகம். உச்ச நீதிமன்றமும் அது நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழுவும் கிரிக்கெட் வாரியத்தை எப்படிச் சீர்படுத்த முடியும்?

நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்காமல் அலட்சியப்படுத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை வாரியம் செய்துவிட்டது. லோதா குழுவின் பரிந்துரையை அமல் செய்துதான் தீர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை கோபத்தில் இடப்பட்ட ஆணையாகவே கருத வேண்டியிருக்கிறது. நீதிமன்றமோ அது நியமித்த குழுவோ வாரியத்தைச் சீர்திருத்தும் வேலையில் நேரடியாக இறங்கியிருக்கக்கூடாது. லோதா குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்திருக்க வேண்டும்; அந்த அறிக்கை மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று நீதிமன்றம் கேட்டிருக்க வேண்டும்.

நவீன காலத்தில் விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. பணத்தைப் போட்டு பெருக்கும் தொழில்முனைவோர்கள் இதில் ஈடுபடும்போது இது வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் கேளிக்கை, விற்பனை, லாபம் என்று பல இலக்குகளுடன் நடத்தப்படுகிறது. கிரிக்கெட் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட பெரிய வியாபாரம். இதை மனதில் கொள்வது அவசியம்.

 

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

http://tamil.thehindu.com/opinion/columns/நீதிமன்றங்கள்-ஆடக்கூடாத-விளையாட்டு/article9474429.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.