Jump to content

என்னருமை தோழி


Recommended Posts

என்னருமை தோழி - புதிய தொடர்

 

 
 
jayalalitha_color_3101014f.jpg
 
 
 

என்னருமை தோழியே..!

பல நாட்கள் என்னிடம் நீங்கள் கூறியிருந்த சேதிகளை இதுவே அம்மாவின் நியதிகள் என்று பறைசாற்ற போகின்றேன்..

இன்னுயிர் தோழியே....

அன்றொரு நாள் உங்கள் வாழ்க்கை சரிதத்தை இயற்ற நான் அனுமதிகோரி நின்றபோது நீங்கள், ‘‘அதற்கான நேரம் வரும்.. நீதான் அதை எழுதுவாய்..'' என்றீர்கள்.

இதோ அந்த நேரமும் அமைந்துவிட்டது.

ஆனால்.. வாசிக்கத்தான் நீங்கள் இல்லை!

நான் கோரிய அனுமதியை அன்றே வழங்கியிருந்தால், யாரும் அறிந்திராத உங்களது மென்மையான இதயத்தினை உமக்குள் நீங்கள் ஒளிந்திருந்த.. குதூகல கோமளத்தின் சிறப்புகளை உங்கள் பார்வையிலேயே வெளிக் கொணர்ந்திருப்பேனே...!

இப்போது கூறினால் என்னாகும்?

இரும்புக்குள் ஏது மென்மை என்றல்லவோ கேட்பார்கள்?

உங்களைப் பற்றிச் சொல்கின்ற இந்த புதியவன் யார் என்கிற வினாக்களும் எழுமே...

அரசியலுக்காக உங்களைச் சுற்றியவர்கள், பொருளுக்காக உங்களைச் சுற்றியவர்கள் இன்னும் பதவி, புகழ் மற்றும் விருதுகளுக்காக உங்களைச் சுற்றியவர்களையெல்லாம் கடந்து, ‘உங்கள் மன நிம்மதிக்காகவும், ஆன்மிகத் தேடலுக்காகவும் நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட நட்பு நான்’ என்று என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்ளும் இந்த வாய்ப்பும் நீங்கள் எனக்கு நல்கியதுதான்.

என்னருமைத் தோழியே..!

அரண்மனை அறிந்தாய், அரியணை அறிந்தாய். உன்னுள் ஒருபுறம் இருந்ததை நினைத்திட மறந்தாய். வருகின்ற வழக்குகளைத் தீர்த்து முடித்தாய். உன்மனதின் வருத்தங்களைத் தீர்க்க மறுத்தாய்.. மகள், சகோதரி, மாணவி, நாட்டியத் தாரகை, பாடகி, நடிகை, எழுத்தாளர், விமர்சகர், தலைவி, முதல்வர், அம்மா ஆகிய நிலைகளையெல்லாம் கடந்து ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்த தனிமையில் மட்டும் நீங்கள் வெளிப்படுத்திய அந்த அம்மு என்கிற குறிஞ்சி மலரைப் பற்றிப் பேச விழைகிறேன்.

உமது நினைவுகளுக்குப் பல்லாண்டு பாடுகிறேன்.

(மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நல்ல நட்பு பாராட்டியவரும், மனம் விட்டுப் பேசிச் சிரித்துப் பழகக் கூடிய வெகு சிலரில் ஒருவராகவும் இருந்தவரின் மனதில் நிலைத்த நினைவுகள் நமது நாளிதழில் பதிவு செய்யப்படவிருக்கின்றன. இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் ஜெயலலிதாவுடனான அவருடைய நேரடி சந்திப்புகள், இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு ஜெயலலிதாவை உங்களுக்கு அனுபவபூர்வமாக அறிமுகப்படுத்தும் என்பது நிச்சயம்)

(நாளை முதல் சந்திப்புகள் தொடரும்)

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-புதிய-தொடர்/article9453691.ece?homepage=true

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..!- 2

 

ஜெயலலிதாவுடன் கட்டுரையாளர் நரசிம்மன்.
ஜெயலலிதாவுடன் கட்டுரையாளர் நரசிம்மன்.
 
 

உங்களது திரைப்பட வாழ்க்கை வெண்ணிற ஆடையில் துவங்கிய போதே, நமது நட்புக்கு கட்டியம் கூறப்பட்டு விட்டது போலும். நீங்கள் மிகவும் விரும்பி நடித்த நகைச்சுவை படங்களுக்கு வசனங்களை எழுதிய ‘சித்ராலயா’ கோபுவின் ஏழு வயது மகன் நரசிம்மனாக உங்களை முதலில் சந்தித்தேன்.

உங்கள் அரசியல் ஆசான் கொணர்ந்த சத்துணவுத் திட்டத்தை பற்றி ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக, அப்போது அத்திட்டத்தின் செயல்பாட்டுத் தலைவராக இருந்த உங்களை பேட்டி காண குருநானக் கல்லூரி மாணவனாக வந்து சந்திக்கையில் உங்கள் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் உமது அறுபதாவது பிறந்த நாளில் மீண்டும் நமது நட்பு துளிர்விட்டது. இறுதிவரையில் அந்த நட்பு தொடர்ந்தது அல்லவா!

எனது எழுத்துகளாலோ, பத்திரிகை தொழிலாலோ நான் திரைப்படக் குடும் பத்தை சேர்ந்தவன் என்பதாலோ, நீங்கள் எனக்கு இந்த அங்கீகாரத்தினை தரவில்லை. ஆன்மீகம் அல்லவோ நம்மை ஒன்று சேர்த் தது! தாங்கள் எந்த நட்பையும் தொடர்ந்தது கிடையாது, என்பதையும் நான் அறிவேன்.

தங்களிடம் உள்ள நெருக்கத்தை ஒரு எழுத்தாளர் சுய விளம்பரம் செய்து, ‘நான் ஜெயலலிதாவின் மனசாட்சி’ என்று கூறிய தால், அந்த நட்பையே முறித்து கொண்டதை நான் அறிவேன்!

ஆனால், என்னிடம் கொண்ட நட்பை மட்டும் கடைசிவரை நீடிக்க செய்தீர்கள். அது நான் செய்த பெரும் பாக்கியம்தான்!

என்னை தங்களின் நிழல் நண்பன் என்று தாங்கள் பெருமையுடன் கூறியது என் செவிகளில் இன்னும் ரீங்கரிக்கின்றது. ‘நரசிம்மன்’ என்ற என் பெயர் தங்களது குலக்கடவுளை நினைக்கச் செய்வதுபோல் உள்ளது என்று புன்னகையுடன் கூறுவீர்களே!

ஆணின் விலா எலும்பை உடைத்து முதல் பெண்ணை உருவாக்கினான் இறைவன் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் நாங்கள் கண்கூடாக கண்டது, தன்னை எதிர்த்த அத்தனை ஆண்களின் விலா எலும்பு களையும் உடைத்து நொறுக்கி, அவற்றை நூலில் கோர்த்து, பட்டாபிஷேக மாலையாக அணிந்து, தமிழக சிம்மாசனத்தில் இறுதிவரை கோலோச்சியது உமது கம்பீரத் தலைமை அல்லவா..!

தங்களது விலா எலும்புகளை காத்து கொள்வதற்காகவே உங்கள் முன்பாகப் பல ஆண்கள் குனிந்து கும்பிடு போட்டு நின்றனர். உங்களுக்கெதிராக வேட்டிகள் மட்டுமா வரிந்து கட்டின..? வடநாட்டு பைஜாமா குர்தாக்களும், ஆடம்பர கோட் சூட்களும், கூலிப்படை லுங்கிகளும் கூடத்தான் அணி திரண்டன.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

டெல்லி மேல் சபையில் நீங்கள் ஆற்றிய உரைகளை திரட்டி புத்தகமாக செய்து அதனை மேற்பார்வையிடும் பணியினை எனக்கு தந்தீர்களே. அந்த பணி நிறை வடைந்து, நீங்கள் அதற்குரிய சன்மானத்தை எனக்கு தர முற்பட்டபோது, உம்மை பற்றி ஒரு புத்தகம் எழுத அனுமதி தந்தால் அதுவே எனக்கு பெரும் சன்மானம் என்று நான் கேட்டேன். அப்போது நீங்கள் சிரித்தபடியே வாக்கு தந்தீர்கள் - ‘உரிய நேரம் வரும்... அப்போது வாய்ப்பு உனக்குத்தான்’ என்றீர்களே. அந்த உரிமையை இப்போது, இப்படி எடுத்து கொள்ளும் நிலை வரும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை.

ஒரு நாள் நான் தங்களை பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் என் னுடன் அடிக்கடி சந்திப்பினை ஏற்படுத்திக் கொண்டீர்களோ என்று இப்போது யோசிக்கிறேன்.

சரி... அதில் எந்த சந்திப்பில் இருந்து துவக்குவது? தமிழகத்தையும் அதன் மக்களையும் நீங்கள் பரிதவிக்க வைத்த அந்த 75 நாட்களில் இருந்தே துவங்குகிறேன்.

உங்களது போராட்ட குணமும் சிங்க முகத்தானின் கருணையும் உங்களை மீண்டும் எங்களிடம் சேர்த்து விடும் என்று உறுதியுடன் நம்பினேன். உடல்நலம் குன்றி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டீர்கள் என்ற செய்தி வந்ததும், சாதாரண காய்ச்சல் தானே என கவலையை விட்டொழித்தேன். ஆனால் நவராத்திரி கொலு துவங்கும் நாள் சிவராத்திரியாக மாறியது எனக்கு.

தாங்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வந்ததும் பதைபதைத்து போய் காந்தி ஜெயந்தியன்று அப்பல்லோ மருத்துவ மனைக்கு ஓடி வந்தேன். உங்களது நெருங்கிய நண்பன் என்று நீங்கள் அளித் திருந்த உரிமை அங்கே எனக்கு வழிவிட்டது. மற்றவர்களைப்பற்றி நான் அறியேன்! எனக்கு எவ்வித தடைகளும் இல்லை.

கலங்கிய கண்களுடன் இருந்த உங்கள் தோழி சசிகலா அவர்கள் என்னை வரவேற்று நிலைமையை விவரித்தார். கிருமி ஒன்று உமது சுவாசப்பையில் ஆட்டம் போட்டு, அங்கங்களை செயலிழக்க வைக்க முயல் வதாக கண்களில் நீருடன் சொன்னார். ‘‘அக்காவின் ஆன்மீக நண்பர் நீங்கள்... உங்கள் பிரார்த்தனையின் மீது எப்போதுமே அவருக்கு நம்பிக்கை உண்டு. சீரிய சிங்கம் என்று அவர் வழிபடும் நரசிம்மரிடம், என் அக்காவை மீட்டுத் தரும்படி பிரார்த்தனை செய்யுங்கள்’’ என்றார்.

மகாராணியாக ஒய்யார நடை நடக்கும் தாங்கள் கிழிந்த நாராக கிடக்கிறீர்கள் என்பதை அறிந்தபோது துயரத்தில் கண்கள் குளமாயின. தாங்கள் குணமாகி வீடு திரும்புவது திண்ணம் என்று நான்கூற, சசிகலா அவர்கள் நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு அவ்வப்போது அப்பல்லோ வந்து நீங்கள் பக்தியுடன் உச்சரிக்கும் நரசிம்ம துதியை கூறி வந்தேன். அக்டோபர் 15 பூரண நிலவன்று உமக்காக ஆலயங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. உங்களுக்காக எனது வேண்டுதலும் தொடர்ந்தது.

நவம்பர் நான்கு, வெள்ளிக்கிழமை அலுவலக பணியில் இருந்தேன். இரவு மணி எட்டு நல்ல செய்தியை நல்கினார், உமது உதவியாளர் பூங்குன்றன். ‘அம்மா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்’ என்றார். அம்மா உணவகங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளித்த நீங்கள் சிறிது சிறிதாக தயிர் அன்னத்தை சிரமத்துடன் உட்கொண்டதாக அறிந்தபோது எனக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

மருத்துவமனை வந்து சசிகலா அவர் களிடம் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். உங்கள் சிகிச்சை தொடரவிருந்த இரண்டாம் மாடியறை எண் 2035-ல் மருத்துவ ஏற்பாடுகள் நடைபெறுவதையும் கண்டேன். எனதருமை தோழி மீண்டு விட்டார் என்கிற மனநிறை வுடன் இல்லம் திரும்பினேன். அதன்பிறகு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த தாங்கள், நவம்பர் 12 சனியன்று தனியறைக்கு மாறியதாக பூங்குன்றன் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். நீங்கள் போயஸ் தோட்டத்திற்கு திரும்பும் நாளுக்காக காத்திருந்தேன்.

என்னருமை தோழி..!

அந்த

நம்பிக்கை எல்லாம் பொய்த்துப் போய், அந்தக் கொடுஞ்செய்தி வந்தபோது, இனி உங்களை நேரில் பார்த்துப் பேச வழியில்லை என்று உணர்ந்தபோது... என் நினைவில் வந்தது உங்கள் அறுபதாம் பிறந்த நாளையொட்டி நான் உங்களுக்கு விடுத்த முன்னெச்சரிக்கையும் அதைத்தொடர்ந்து நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளும்தான்.

அதிலும் மரணம் குறித்து நீங்கள் தெரிவித்த அந்தக் கருத்து...!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-2/article9454083.ece?homepage=true

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! - 3

 

 
தனது அறுபதாவது பிறந்தநாளையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்த ஜெயலலிதா, கோயில் யானைக்குப் பழங்கள் கொடுக்கிறார்.
தனது அறுபதாவது பிறந்தநாளையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்த ஜெயலலிதா, கோயில் யானைக்குப் பழங்கள் கொடுக்கிறார்.
 
 

என்னருமை தோழி..!

2011-ம் ஆண்டில் நடைபெற்ற எனது தந்தை சித்ராலயா கோபுவின் சதாபிஷேகத்திற்கு உங்களை அழைக்க நான் வந்தபோது, எண்பதாம் வயதில் அடியெடுத்து வைப்பது எத்தனை உன்னதமான விஷயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நீங்கள், ‘’எனக்கு எண்பதாம் வயது வரும்போது எப்படி கொண்டாடப் போகிறேனோ...” என்று கற்பனையில் ஆழ்ந்தீர்களே... எப்படி அதற்குள் புறப்பட்டு விட முடிவெடுத்தீர்கள்?

வழக்கம்போல், தாங்கள் எடுத்த அதிரடி முடிவா இது?காவலர்கள் நடத்திய ‘அரெஸ்ட்’களின் போதெல்லாம் நெஞ் சுரத்துடன் தலையுயர்த்தி நடந்த நீங்கள், ‘கார்டியாக் அரெஸ்ட்’டுக்கு மட்டும் ஏன் தலை சாய்த்து விட்டீர்கள்..?

எம்.ஜி.ஆர் மரணத்தின்போது அவர் உடலின் அருகில் உங்களுக்கு இடம் தர மறுத்தவர்கள், இப்போது ராணுவ மரியாதையுடன், அவருக்கு அருகிலேயே உங்களுக்கு நிரந்தர இடம் தந்திருக்கிறார்கள். ‘முகம் துடைக்கும் கைகுட்டையையே கையில் வைத்திராமல் பின்னால் அமர்ந்திருப்பவரிடம் தரும் நாசுக்கினை கொண்ட தாங்கள், தங்கள் திருமுகத்தினை சுற்றி அந்த வெள்ளை துணிக் கட்டுடன் மக்கள் முன்பாக எப்படி உறங்கி கிடந்தீர்கள்..?’

த்திரிகைகளில் வெளிவரும் தங்கள் புகைப்படங்களில் துளியும் பொலிவு குறையாமல் தோன்றவேண்டும் என்பதில் நீங்கள் எத்தனை கவனமாக இருப்பீர்கள்! ஒருமுறை, என்னுடன் வந்திருந்த பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர், நின்று பேசிக் கொண்டிருந்த தங்களை, முழங்காலிட்டு அமர்ந்தபடி படமெடுத்தார். அதை சட்டென்று கவனித்து முகம் சிவந்த நீங்கள் அவரைக் கண்டிக்கவில்லையா?

‘இப்படி ‘லோ ஆங்கிளில்’ படமெடுக் காதீர்கள்! நான் சினிமாத் துறையிலிருந்து வந்தவள். கேமரா கோணங்கள் நன்கு தெரியும். அமர்ந்த நிலையில் படமெடுத்தால் எனது நாசி துவாரங்கள் படத்தில் தெரியும். அது நன்றாக இருக்காது’ என்று உங்களின் எதிர்ப்பினை காட்டினீர்களே.

என்னருமை தோழி..!

அப்படிப்பட்ட உங்களை ராஜாஜி அரங்கில் இப்படியா பார்க்க வேண்டும்?

உங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த மெரூன் கரை போட்ட பச்சை சேலை எனக்கு பழைய நினைவுகளை உண்டு பண்ணியது. அறுபதாவது வயதில் ஒரு கோயிலுக்கு அதே போன்ற சேலையில்தான் வந்திருந்தீர்கள். வெகுகாலமாகவே உங்களுக்குப் பிடித்தது பசுமை நிறம்!

அதுபோலவே, உங்கள் தாய் சந்தி யாவுக்குப் பிடித்த மாம்பழ நிறத்தில், பசுமை கரை போட்ட மற்றொரு பட்டு சேலையை பொக்கிஷமாக வைத்திருந்தீர்கள். உங்கள் இல்லத்தில் நடந்த ஒரு பூஜைக்கு நான் வந்தபோதும் அதைத்தான் அணிந்திருந் தீர்கள்.

ங்களைப் பாதித்த மரணங்களில் ராஜீவ் காந்தி மரணமும் ஒன்று. ராஜீவ் காந்தியின் சிதறுண்ட உடலின் படங் களைக் கண்டு எத்தனை முறை வேதனைப் பட்டிருக்கிறீர்கள். ‘இப்படி செய்து விட்டார்களே!' என்று கொதிப்போடு சொல்லியிருக்கிறீர்கள். அந்த படங்களை, ஒரு கட்டத்துக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் வெளியிட்ட பத்திரிகைகளையும் சினந்தி ருக்கிறீர்கள். ‘அரசியலுக்கு வந்தால் எல்லா அவமானங்களுக்கும் தயாராக வேண்டும். ஆனால் ஒருவர் அமரராகிவிட்ட பிறகுமா அவரை அவமானப்படுத்துவது?’ என்றீர்கள்.

ரணத்தைப் பற்றி நீங்கள் பேசிய முக்கியமான இன்னொரு தருணமும் எனக்கு பளிச்சென்று நினைவில் இருக்கிறது. எங்களது மூத்த பத்திரிக்கையாளர் ஜெயந்த். தங்களது சித்தி மகளின் மரண செய்தியை அறிந்ததும், அதை என்னிடம் சொல்லி, உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். உறவினர்கள் எவருடனும் தொடர்பில்லாமல் இருந்த உங்களுக்கு சித்தி மகளின் மரணச் செய்தி வந்தடையாமலும் போயிருக்கலாம் என்பதால், நான் அதை உடனே உங்களுக்குத் தெரிவித்தேன். அதற்கு தங்களது பதில் என்னை உலுக்கி விட்டது!

‘‘ஆம்... நீங்கள் குறிப்பிட்ட அந்த சித்தியின் மகள் சிறுவயது தொட்டு எனக்கு மிக நெருங்கியவள். ஆனால், இவ்வளவு காலம் அவர்களை எல்லாம் இடையில் பிரிந்து இருந்துவிட்டு, எனது பிற்பகுதி (’ட்விலைட்’ என்ற வார்த்தையை அப்போது பயன்படுத்தினீர்கள்!) காலத்தில், எதற்கு பழைய நினைவுகளை எழுப்பி மனதைப் பாரமாக்கிகொள்ள வேண்டும்?’’ என்றீர்களே!

‘‘மரணம் குறித்து எனக்கு அனுதாபம் உண்டு. பயம் கிடையாது. என்றாவது ஒருநாள் அது வரத்தான் போகிறது. ஆனால், அது என்னை என் தாயுடன் இணைத்து வைக்கும் ஒரு நல்ல முடிவாகவே இருக்கும்..’’ என்றும் நீங்கள் சொன்னபோது உங்களது மனச்சுமையை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

2008-ம் வருடம், பிப்ரவரி மாதம்... தங்களுக்கு 60 வயது நிறைவு... அந்த வருடம் நிகழ்ந்த ஒரு நிகழ்வுதான், என் மீதான உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. கிரகங்களின் பிரயாணத்தை கவனிப்பதில் எப்போதுமே ஒரு சுவாரஸ்யம் எனக்கு. அந்த வருடத்தின் துவக்கத்தில், சில கிரகங் களின் அமைப்பு ஒருவித கலக்கத்தை உண்டுபண்ணியது. அந்த இரண்டாண்டு காலங்களில், அகவை அறுபதைக் கொண் டாடும் இந்தியத் தலைவர்களில் ஒருவர் விண்ணிலிருந்து வீழ்ந்து மடியக் கூடும் என்பதாக கிரகங்களின் சஞ்சாரங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

அப்போதுதான் அறுபது வயதான தங்களுக்கு, ‘வான் வழிப் பயணங்களைச் சிறிது காலம் தவிருங்கள்’ என்று ஒரு கடிதத்தை பிப்ரவரி 18, திங்கள்கிழமை அன்று அனுப்பினேன். கடிதம் உங்களை அடைந்ததா அல்லது அதைப் படித்து அலட்சியப்படுத்தி விட்டீர்களா என்று அப்போது நான் அறியேன்.

பிப்ரவரி 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தாங்கள் திருக்கடையூர் செல்வதற்காக எட்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் திருச்சி வரை செல்லக் கிளம்பிவிட்டீர்கள். கேள்விப்பட்டபோது, என்னால் பிரார்த் தனையை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு, தாங்கள் திரும்பிச் சென்னைக்கே வந்து விட்டீர்கள். நீங்கள் செல்ல இருந்த மற்றொரு விமானம் 40 நிமிடங்கள் தாமதம் ஆகும் எனத் தெரிந்தது. காத்திருக்க விருப்ப மின்றியோ என்னவோ... தரை வழி மார்க்கமாக காரிலேயே திருக்கடையூர் சென்றீர்கள். அந்த சம்பவத்தை நானும் மறந்தேவிட்டேன்.

அடுத்த மாதம் மார்ச் 7, வெள்ளிக் கிழமை... எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்புதான் உங்களுடன் நான் ஒரு புதிய ஆன்மீகப் பயணத்தைத் துவங்குவதற்கான கட்டியத்தைக் கூறியது.

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-3/article9455749.ece?homepage=true

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! - 4

 

 
தனது அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் முக்தா சீனிவாசன் வீட்டுக்கு வந்த ஜெயலலிதாவுடன் கட்டுரையாளர் நரசிம்மன் (இடது ஓரம்).
தனது அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் முக்தா சீனிவாசன் வீட்டுக்கு வந்த ஜெயலலிதாவுடன் கட்டுரையாளர் நரசிம்மன் (இடது ஓரம்).
 
 

கடவுளின் சித்தம்!

வெள்ளிக்கிழமை, 2008-ம் வருடம், மார்ச் 7... திருவல்லிக்கேணி விழா ஒன்றில் உரை நிகழ்த்த தயாராகிக் கொண்டிருந்தேன். தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் முக்தா சுந்தர். உங்கள் மதிப்பிற்குரிய நண்பரும் இயக்குநருமான முக்தா வி.சீனிவாசனின் மகன். அகவை அறுபதை கொண்டாடும் தாங்கள், முக்தாவிடம் ஆசி பெற வேண்டி அவர் வீட்டுக்கு வரப் போவதாகச் சொன்னார் முக்தா சுந்தர். உங்களை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால், என்னையும் வரும்படி சொன்னார். இதுவன்றோ இறைவனின் விளையாட்டு!

‘விண் வழிப் பயணங்களை சில காலம் தவிர்த்துவிடுங்கள்’ என்று நான் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கை உங்களை வந்து அடைந்ததோ இல்லையோ... நேரில் பார்க்கும்போது சற்று விரிவாகவே சொல்லி வலியுறுத்த இது ஒரு வாய்ப்பு என்று நினைத்தேன்.

நான் ஆற்ற வேண்டிய உரையை எழுதிக் கொடுத்துவிட்டு, மயிலையில் வி.எம். தெருவில் உள்ள முக்தாவின் இல்லத்திற்குப் புறப்பட்டேன். தெருவெங்கும் ஒரே பரபரப்பு, தலைவி வரப்போவதாக அப்பகுதியில் எங்கும் ஆர்ப்பரிப்பு. முக்தாவை வணங்கிவிட்டு, என்னையும் அழைத்தமைக்கு நன்றி தெரி வித்தேன். சரியாக ஐந்தரை மணிக்கு நீங்கள் வந்தீர்கள்.

முக்தாவின் குடும்பமே வாயிலில் நின்று வரவேற்றது. எங்கும் உங்களை வாழ்த்தி கோஷம். அவர் வீட்டு முன்ஹாலில் நான் ஒரு ஓரமாக நின்றிருந்தேன். உங்களை பார்த்து நான் கரம் குவிக்க, நீங்களும் சற்றே வியப்புடன், புருவத்தை உயர்த்தியபடி பதிலுக்குக் கரம் குவித்தீர்கள். முகமெங்கும் உற்சாகத்துடன், பளீர் நிற சேலையில் பொன் நகை ஏதுமின்றி வாய் நிறைய புன்னகையுடன் நின்றீர்கள். 1996 கைதுக்கு பிறகு நீங்கள்தான் பொன் நகைகளை துறப்பதாகக் கூறி இருந்தீர்களே.

இன்முகம் காட்டி நின்ற தங்களிடம் பேச அதுவே தகுந்த தருணம் என தோன்றிவிட... பட்டென்று பேசிவிட்டேன். ‘‘மேடம்.. நினைவிருக்கிறதா..? நான்தான் நரசிம்மன். சித்ராலயா கோபுவோட மகன். விண் வழிப் பயணங்களைத் தவிர்க்கும்படி மடல் அனுப்பியது நான்தான்” என்று நான் கூறியபோது, பதில் ஒன்றும் தாங்கள் கூறவில்லை.

முக்தா குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட, அவரது பூஜையறையில் குழுமி னோம். பதவி இழந்த தேவேந்திரன், மகா லட்சுமியை இறைஞ்சித் துதிபாடி பதவி பெற்ற கதையை வடமொழியில் நான் கூற, ஆர்வத்துடன் நீங்கள் கவனித்தீர்கள். அகவை அறுபதை கொண்டாடும் உங்களை வாழ்த்தி வணங்கிவிட்டு, நான் விலகி... மறுபடி முன்ஹாலில் போய் நின்றேன்.

முக்தா சீனிவாசனையும் அவர் மனைவி யையும் கௌரவித்த பிறகு, பூஜையறையை விட்டு வந்த தாங்கள் மறுபடி என்னைக் கண்டு கனிவுடன் புன்னகைத்தீர்கள். ''உங்களிடம் பேச வேண்டும். என் இல்லம் வாருங்கள்’’ என்று சொல்லி, உதவியாளரிடம், ‘‘இவர் போன் நெம்பரை வாங்கிக்கோங்க’’ என்று பணித்துவிட்டு, விடைபெற்றுச் சென்றீர்கள்.

அதே மாதம் 21-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு போயஸ் இல்லத்துக்கு வரும்படி அழைப்பு வந்தது. கல்லூரி மாணவனாக மதிய உணவு திட்டத்தைப் பற்றி பேட்டி காண ஏற்கெனவே வந்திருந்த இடம்தான் என்றாலும், இம்முறை என்னுள் ஒருவித சஞ்சலம். முன்னெச்சரிக்கைக் கடிதத்தை நீங்கள் அதிகப் பிரசங்கித்தனமாக எடுத்துக் கொண்டிருப்பீர்களோ என்ற யோசனையுடன் தயங்கித் தயங்கித்தான் வந்தேன்.

என்னருமை தோழி...!

வரவேற்பு அறையில் விக்டோரியா மகாராணி போல் வீற்றிருந்தீர்கள். ''வாங்க, நல்லா இருக்கீங்களா..?’’ என்று வரவேற்ற தங்களுக்கு மரியாதை செய்ய என் கையில் பூச்செண்டோ, சால்வையோ இல்லை. கைகுவிப்பையே பரிசாகத் தந்தேன். அருகி லிருந்த சோபாவைக் காட்டி அமரும்படி சொன்னீர்கள்.

‘‘அப்பா அம்மா.. நல்லா இருக்காங்களா..? கோபு இஸ் எ கிரேட் ஹ்யூமரிஸ்ட்’’ என்றீர்கள். உடனேயே விஷயத்துக்கும் வந்தீர்கள். ‘‘நரசிம்மன், உங்கள் கடிதம் படித்தேன். ஆனால், அதுபற்றி எந்த முடிவுக்கும் வர முடியாமல் திருக்கடையூர் கிளம்பி விட்டேன். விமானத்தில் கோளாறு என்றதால் மீண்டும் வந்துவிட்டாலும், உங்கள் கடிதத்தை நம்பத் தோன்றவில்லை. அதனால்தான் மற்றொரு விமானத்திற்காக காத்திருந்தேன். அதுவும் தாமதம். நல்ல நேரத்துக்குள் கோவில் போய்ச் சேர வேண்டுமே என்று காரில் திருக்கடையூர் சென்று விட்டேன்...’’ என்றீர்கள்.

‘‘ஒருவேளை, உங்கள் விமானப் பயணம் தடைபட்டதற்கு என் பிரார்த்தனைகூட காரணமாக இருந்திருக்கலாம், மேடம்’’ என்று துடுக்கென்று சொல்லிவிட்டேன்.

நீங்கள் புன்னகைத்தபடி, ‘‘அந்த விமானத்தில் ஏறும்போதே படியில் என் சேலை சிக்கியது. அடுத்து, கோளாறு என்று விமானி சொன்னபோது நான் ஆச்சரியப்பட்டேன். உங்கள் கடிதத்தைப் பற்றி நினைத்தேன்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘கிரகங்களின் சஞ்சாரப்படி இப்படி எல்லாம் நடக்கும் என்று கணிப்பது சாத்தியம் என்று நிஜமாகவே நீங்கள் நம்புகிறீர்களா...?’’ என்று வினவினீர்கள்.

‘‘நான் அறிந்த சாஸ்திரங்களின்படி உணர்ந்த செய்தி இது. இப்படி நடக்கும் என்று ஒரு சூசக தகவல் அதில் உள்ளது. அதனால்தான் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று தோன்றியது. மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல... என் தந்தையுடன் திரைத்துறையில் பணி புரிந்தவர் நீங்கள். எனது கல்லூரிப் படிப் பின்போது ஆராய்ச்சிகளுக்கு உதவியும் செய்தீர்கள். அந்த உரிமையில்தான் கடிதம் அனுப்பினேன். மற்றபடி வேறு எண்ணங்கள் கிடையாது’’ என்றேன்.

நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள். நான், ‘‘1991 முதல் நீங்கள் பதவியிருந்தாலும், 2008-ல்தான் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். இப்போதுகூட உங்க ளைச் சந்திக்கப் போகிறோம் என்று நினைக்கவில்லை. நீங்கள் அழைத்துதான் வந்திருக்கிறேன்.’’ - கிடுகிடுவென்று மனதில்

பட்டதை சொல்லி முடித்தேன். புன்சிரிப்புடன் நான் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தீர்கள்.

‘‘நீங்கள் கடிதம் எழுதியதை நான் தவறாக நினைக்கவில்லை. ஆனால் அதில் உள்ள எனது நம்பிக்கையின்மையைதான் நான் தெரிவிக்கிறேன். ஆனால், முக்தாவின் வீட்டில் உங்களைப் பார்த்தது ஒரு ஆச்சரியம் தான்’’ என்றீர்கள்.

‘‘ஒருவேளை இதுவே கடவுளின் சித்தமாக இருக்கும், மேடம்...’’ என்றேன் நான்..

‘‘உங்கள் பெயரை கொண்டவர்தான் என் குடும்ப கடவுள்...’’ என்ற நீங்கள்,

‘‘உங்கள் சாஸ்திரம் சொல்வதை கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்’’ என்று கேட்டீர்கள்.

‘‘இப்போது சனியின் சாரம் சரி இல்லை. அறுபது வயதில் உள்ள ஒரு தலைவர் விமான விபத்தில் காலமாவார். இன்னும் இரண்டு ஆண்டுகளில், அதாவது டிசம்பர் 2009 முடிவதற்குள் அப்படி நடைபெறுவதற்கு வாய்ப்புண்டு’’ என்றேன்.

சற்று நேரம் மௌனம் சாதித்த நீங்கள், ‘‘அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வரும். பிரச்சாரத்திற்கு விமானத்தில் போக வேண்டி இருக்கும். கொடநாடு செல்லவும் திட்டம் வைத்துள்ளேன். என்னால் விமான பயணத்தை தவிர்க்க முடியாது. இருப்பினும், உங்கள் கடிதத்துக்கு நன்றி...’’ என்று கூறி முடித்தீர்கள்.

‘‘உங்களை சந்திக்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி...’’ என எழுவதற்கு முற்பட்ட என்னிடம் திடீரென்று கேட்டீர்கள் -

‘‘அப்படி எந்தவித அசம்பாவிதமும் நடக்க வில்லை என்றால்...?’’

எனக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை.

‘’டிசம்பர் 2009 வரை யாருக்கும் எந்த தீங்கும் நடக்கக் கூடாது என்று பிரார்த் திக்கிறேன், மேடம். அப்படி நடக்காமல் இருந்தால் மிகவும் மகிழ்வேன். அதேசமயம், இறையருளால் எதுவும் நடக்காவிட்டால், இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கிறதே ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பஸ் நிறுத்தம்... உங்கள் உதவியாளர் துணையோடு என்னை 29C பஸ்சில் ஏற்றி விடுங்கள்’’ என்றேன்.

‘‘எதற்கு...?’’ என்பது போல் புருவம் உயர்த்தினீர்கள்!

‘‘29C பஸ் கீழ்ப்பாக்கம் போகுமாம்...’’ - நான் இப்படி சொன்னதும் உங்களையும் மறந்து சிரிக்கத் துவங்கினீர்கள்.

‘‘யு ஹவ் காட் யுவர் ஃபாதர்ஸ் ஹ்யுமர்...’’ என்று சொன்னீர்கள்.

‘‘நான் என் குடும்பத்தில் பிறந்ததே ஒரு ட்ராஜெடி நேரம்...’’ என்று கூறித் தொடர்ந்தேன்.

‘‘என் தந்தைக்கு நாலு மகன்கள். அவர் பணிபுரிந்த ‘கல்யாண பரிசு’ படம் ரிலீஸ் ஆனபோது, மூத்த மகன் பிறந்தான். ‘காத

லிக்க நேரமில்லை’ ரிலீஸின்போது மூன்றா வது மகன் பிறந்தான். ‘காசேதான் கடவுளடா’ ரிலீஸ் சமயம் நாலாவது மகன் பிறந்தான். இதெல்லாமே காமெடி நிறைந்த படங்கள். இரண்டாவது மகனான நான் பிறந்தபோது, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் ரிலீஸ் ஆனது. அது ஒரு ட்ராஜெடி என்பதுதான் உங்களுக்கே தெரியுமே...” என்றேன்.

வாய்விட்டு மறுபடியும் சிரித்தீர்கள்.

2008 நல்லபடி கடந்தது... 2009-ல்...

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-4/article9457743.ece?homepage=true

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..!- 5: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

 

டெல்லியில் 2005-ம் ஆண்டு நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியுடன் ஜெயலலிதா.
டெல்லியில் 2005-ம் ஆண்டு நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியுடன் ஜெயலலிதா.
 
 

சிரிப்புகளும் சிந்தனைகளுமாய் 2008-ல் தங்களுடன் இன்னும் சில சந்திப்புகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமா, அரசியல், இலக்கியம் என்று உங்களின் மாறுபட்ட பார்வைகள் பலவற்றை அறிந்தபோது, மிகுந்த வியப்புற்றேன். பெரும்பாலான உரையாடல்கள் ஆன்மீகத் தில்தான் முடிந்தன.

‘மூடநம்பிக்கை’ என்று நீங்கள் கூறிய பல சாஸ்திர, சம்பிரதாயங்களின் பின்னால் இருக்கும் - எனக்குத் தெரிந்த ‘லாஜிக்’கை நான் சொன்னபோது, பொறுமையோடு நீங்கள் செவிமடுத்தீர்கள். தாங்கள் கொட நாடு போவதற்கு முன்பாக, நான் எழுதிய ‘காலச்சக்கரம்’ மற்றும் ‘ரங்கராட்டினம்’ ஆகிய நாவல்களைத் தங்களிடம் அளித்தேன். புத்தகங்களை வாங்கி பார்த்த நீங்கள், இவையெல்லாம் எங்கே எப்போது வெளி யிடப்பட்டது என வினவினீர்கள்.

2007 நவம்பர் மாதத்தில் கவிஞர் வாலியின் கரங்களால் வெளியிடப்பட்டதையும், கனிமொழி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டதையும் சொன்னேன். ‘கனிமொழி’ பெயரைச் சொல்லியிருக்க வேண்டாமோ என்றெண்ணி உங்கள் முகத்தைப் பார்த்தபோது, இம்மியும் முக பாவம் மாறாமல், புன்சிரிப்பு மறையாமல்தான் இருந்தீர்கள். ‘கொடநாடு செல்லும்போது, ஓய்வுநேரத்தில் படிக்கிறேன்’ என்று புத்த கங்களை எடுத்துக்கொண்டீர்கள்.

2009-ம் ஆண்டு பிறந்தது... பிறக்கும் போதே நாடாளுமன்றத் தேர்தல் களமும் சூடு பிடித்தது. ஆறு மாத காலம் அரசியல் மும்முரத்தில் இருந்தீர்கள். அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் சில கருத்துக்களை உரிமையோடு உங்களுக்கு அனுப்பியதுடன் சரி. 2006 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் போலவே, 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் உங்களுக்கு சாதகம் இல்லை. பத்தே இடங்கள் உங்களுக்கு! தோல்வியில் இருந்து மீண்டு, வெல்வதற்கான வியூகம் வகுக்கும் தீவிர சிந்தனையோ என்னவோ, வெளி உலகத் தொடர்புகளை நிறுத்திக் கொண்டீர்கள்.

செப்டம்பர் 2, 2009, புதன்கிழமை!

அன்று பொதுநிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்று, நாட்டு நடப்புகள் எதையும் கவனிக்காமல் இருந்துவிட்டேன். இரவு வீடு திரும்பும்போது மணி ஒன்பதரை இருக்கும். நான் வந்து சேர்ந்து சில நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. போயஸ் கார்டனிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி, அந்தக் காரில் இருந்த கார்த்திகேயன் என்கிற உங்கள் உதவியாளர், ‘‘சார்... கொஞ்சம் வாருங்கள். உடனே வண்டியில் ஏறுங்கள்.!’’ என்று கதவைத் திறந்தபடி நின்றார். ஆர்வ உந்துதலில் ஏதும் கேட்காமல் நான் வண்டியில் ஏறினேன். என் வீட்டருகே இருந்த ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி, தன் கைபேசியினை இயக்கினார் கார்த்திகேயன்.

எதிர்முனையில் குரல் ஒலித்ததும், ‘‘அம்மா... சார் இங்கே பக்கத்தில்தான் இருக்கிறார்’’ என்று உதவியாளர் கூற, ''கொடுங்க..!'' என்று சன்னமாக எனக்கும் கேட்டது உங்கள் குரல்!

வாங்கி, ‘‘குட் ஈவினிங் மேடம்! ’’ என்றேன்.

''நரசிம்மன்..! நீங்கள் கூறியதுபோல் ஒரு சோகமான சம்பவம் நடந்து விட்டதே... என் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி. விரைவில் நேரில் சந்திப்போம். குட் நைட்!'' என்றீர்கள். என்னவென்றே புரியாமல், வேறு கேள்வியும் கேட்கத் தோன்றாமல், ‘‘உங்களை சந்திக்க மறுபடி வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம், மேடம்!’’ என்று நான் சொன்னதுமே இணைப்பு துண்டிக்கப்பட்டது.

‘‘அம்மா யாருடனும் போனில் பேசுவது ரொம்ப அபூர்வம், சார்!’’ என்று சொல்லும் போது உதவியாளர் முகத்திலும் பெரும் வியப்பு. என்னை வீட்டில் இறக்கி விட்டுப் போய்விட்டார். பிறகுதான், எனக்குத் தெரிந்தது... அன்று பகலில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கோர மரணம் அடைந்துவிட்டார் என்று.

சொன்னபடியே மறுபடியும் சந்திக்க வாய்ப்பு கொடுத்த நீங்கள், 2008 பிப்ரவரியில் நான் விடுத்த எச்சரிக்கை, 2009 முடிவதற்குள் பெரும் சோகமாக நடந்தேறியது குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டீர்கள்.

‘‘நரசிம்மன்... இது எப்படி சாத்தியம்? இப்படி நடக்கக் கூடும் என்று எதை வைத்து யூகித்தீர்கள்...?’’ என்று கேட்டீர்கள்.

‘‘கிரக நிலைகள் அப்படிக் காட்டியது, மேடம். அதோடும் சேர்த்து ஒருவகை உணர்தலும் எனக்கு அந்த எண்ணத்தை உறுதி செய்தது’’ என்று கூறி, 2004-ல் சுனாமி பேரழிவு சமயத்தில் நான் கண்ட ஒரு காட்சியைச் சொன்னேன்.

சுனாமி வருவதற்கு முந்தைய இரவு... அலுவலக பணி முடிந்து வீடு சென்று கொண்டிருந்தேன். மணி நள்ளிரவு ஒன்றரை. சுமார் முப்பது-நாற்பது தெருநாய்கள் கலங்கரை விளக்கம் பகுதியிலிருந்து ஊளையிட்டுக் குரைத்தபடி கடலுக்கு எதிர் திசையில் சாலையைக் கடந்து கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தன.

‘‘மறுநாள், சுனாமியில் கடலோரம் இருந்த மனிதர்கள் மட்டுமே மாண்டனர். தெரு நாய்கள் தப்பித்தன. அவற்றின் உணரும் ஆற்றலே உயிரை காத்தது. அதுபோல இதுவும் இருக்கலாம், மேடம்’’ என்றேன்.

நீங்கள் அமைதியாகக் கேட்டபடி அமர்ந்தி ருந்தீர்கள். அதோடு நான் நிற்கவில்லை.

‘‘மேடம்! 2006-ம் வருட சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் ஆட்சிக்கு வரமுடியாதபோது என்ன நினைத்தீர்களோ, தெரியாது. ஆனால், வென்றிருந்தால் இப்போது நீங்கள் முதல்வராக இருந்திருப்பீர்கள். தென்னகத்து முதல்வர்களில் ஒருவரான ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் காலமாகி இருக்கிறார். அவர் வயது 60. அன்று திருச்சிக்கு விமானத்தில் நீங்கள் செல்ல இருந்தபோது உங்களுக்கும் வயது 60. 2006-ல் வென்றிருந்தால் முதல்வராகத்தானே பறந்திருப்பீர்கள்?” என்று சொல்லிவிட்டு... ‘‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை இப்படிக்கூட பார்க்கலாம் போலிருக்கிறது, மேடம்!’’ என்றேன்.

வழக்கமான புன்னகையுடன், ''I am convinced!’’ என்று மட்டும் சொன்ன நீங்கள், ‘‘எனக்கும் சில நம்பிக்கைகள் இருக்கிறது... வரும் ஞாயிற்றுக்கிழமை மறுபடி வாருங்கள். என் பூஜையறையை நீங்கள் பார்க்க வேண்டும்’’ என்று கூறினீர்கள்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையே கார்டனிலிருந்து வண்டி வரும் என்று உங்கள் உதவியாளர் சொன்னார். அதன்படியே நானும் தயாராகக் காத்திருந்து, வண்டியில் ஏறி, வந்து சேர்ந்தேன். அன்று நீங்கள் மாம்பழ நிற பட்டு சேலை அணிந்திருந்தீர்கள். உங்கள் தாயின் நினைவு வரும்போதெல்லாம் அந்த சேலையைத்தான் அணிவதாக பிறகு நீங்கள் சொல்லி நான் தெரிந்து கொண்டேன்.

நெற்றியில் செந்தூரக் கோடு பளிச்சிட்டது. அது ஆஞ்சநேயரின் செந்தூரக் கலவை என்றீர்கள். ஹாலைக் கடந்து பூஜை அறையில் நுழைந்ததும், ஒளிர்ந்த கடவுளர் மற்றும் உங்கள் மூதாதையர் படங்களுக்கு நடுவே தனிப்பட்டுத் தெரிந்த அந்த ஒரு படத்தைப் பார்த்து... புதிராக நான் நின்றுவிட்டேன்...

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-5-மக்கள்-தீர்ப்பே-மகேசன்-தீர்ப்பு/article9460447.ece?homepage=true

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! - 6: உயிர்களை நேசிக்கும் கருணை உள்ளம்!

 

 
படம் உதவி: ஞானம்
படம் உதவி: ஞானம்
 
 

ங்கள் வீட்டுப் பூஜை அறையினுள் நுழைந்தவன் திகைத்தும், குழம்பி யும் போனேன். ராமன், கண்ணன், அம்பாள் போன்ற கடவுளர்களின் படங்களின் நடுவே, பாட்டனார்கள் ரங்கசாமி, நரசிம்மன், பாட்டி கோமளவல்லி, பெற்றோர் சந்தியா, ஜெயராமன் படங்களின் நடுவே மலர்மாலை, குங்குமப் பொட்டு துலங்க வைக்கப்பட்டிருந்தது, ஒரு போமரெனியன் நாயின் உருவப்படம்.

உங்கள் தாய் சந்தியாவுக்கு நாய்கள் மீது மிகுந்த பிரியம். அவர் மறைவுக்குப் பிறகு, அவர் வளர்த்த நாய்கள் மீது உங்களுக்கு பரிவு தோன்றியது. ஒரு சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை நீங்கள் வளர்த்து வந்தீர்கள். இதெல்லாம் மனதில் தோன்றினாலும், அதற்காக....பூஜை அறையில்...? என்று தயக்கத்துடன் திரும்பிய என் பார்வையை புரிந்து கொண்டீர்கள்.

''நாயின் புகைப்படத்தினை பூஜை யறையில் மாட்டியிருக்கிறேனே என்று பார்க்கிறீர்களா..? நீங்கள் அன்று சொன்னீர்கள், இல்லையா..தெருநாய்கள் உணரும் சக்தியால் சுனாமியில் இருந்து மீண்டன என்று. அவைகளை காட்டிலும் என் ராணிக்கு உணர்தல் சக்தி அதிகம். என் உணர்வுகளை மதிக்க தெரிந்த ஒரு ஜீவன். நான் இல்லாத நேரங்களில் பெரும்பாலும் இந்த அறையிலேயே இருக்கும். ஆன்மீக பாடல்களை விருப்பத்துடன் கேட்கும். ராணி இறந்துபோனபோது எனக்கு சாப்பிடக்கூடத் தோன்றவில்லை. அவளுக்கு உரிய இடம் இதுதான் என்று பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.நாம் மறக்க கூடாத எவரையும் பூஜை அறையில் வைப்போம்தானே...’’ என்று நீங்கள் சொன்னபோது, சாஸ்திர, ஆகம நம்பிக்கைகளை எல்லாம் தாண்டி, வள்ளலார் வாக்குப்படி எல்லா உயிர்களையும் நேசிக்கும் உங்கள் கருணை உள்ளத்தை அறிந்து மகிழ்ந்தேன்.

பூஜை அறையை காட்டியபின், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டீர்கள். சற்று தள்ளி இருந்த ஒரு சிறு மனைப் பலகையில் நான் அமர்ந்து கொண்டேன். ‘‘பூஜை அறையில்கூட நாற்காலியில்தான் அமர வேண்டி இருக்கிறது. என்னால் தரையில் உட்கார முடிவதில்லை..’’ என்று கூறியதுடன், ‘‘உடல்ரீதியான சின்னச் சின்ன பிரச்சினைகள் எனக்கும் உண்டு. சட்டமன்றத்தில் எனக்கு அடுத்த இருக்கையை காலியாக வைக்கிறேன். மேடைகளிலும், விழாக்களிலும் மற்றவர்கள் சற்று தள்ளியே அமரும்படி நாற்காலி போடச் சொல்வதுகூட ஒரு காரணமாகத்தான். வேலை பளு காரணமாக சரியான உணவுப் பழக்கங்களை பின்பற்ற முடியாததால், ஜீரண சக்தி குறைவு காரணமாக சில நேரங்களில் ஏப்பம் வரும். அது அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. உங்களைப்போன்ற மீடியாக்காரர்கள் இதெல்லாம் தெரியாமல், விமர்சனம் செய்கிறீர்கள். சரி... உங்கள் திருப்திக்கு எதையாவது எழுதிக் கொள்ளுங்கள் என்று விட்டுவிடுகிறேன்’’ என்று நீங்கள் சொன்னபோது நெகிழ்ந்தேன்.

மேலும், ‘‘திருக்கடையூரில் எனக்கு என் தோழி மாலையிட்டதைக் கூட சில மீடியாக்கள் கொச்சைப்படுத்தி எழுதின. பொது விழாக்களில் பெண் விருந்தினருக்கு விழாத் தலைவரா மாலையிடுவார்? கூட்டத்தில் இருந்து யாரேனும் ஒரு பெண்ணை அழைத்துதானே மாலை போடச் சொல்கிறார்கள். கோவிலில் எனக்கு அர்ச்சகர் எப்படி மாலை அணிவிக்க முடியும்? இதெல்லாம் நான் கேட்டால் விமர்ச னங்களை தாங்கும் பக்குவம் இல்லை என்கிறார்கள்’’ என்று மனம் திறந்து மளமள வென்று பொரிந்து தள்ளினீர்கள்.

என்னருமை தோழி...!

அடுத்த கணமே, அதை எல்லாம் மறந்தவராக, இனிய குரலில், கடவுள் துதி ஒன்றை பாடினீர்கள். என்ன நினைத்து என்னை அன்று வரவழைத்தீர்கள்... எதற்காக என்னிடம் இதை எல்லாம் சொல்கிறீர்கள் என்று நான் பிரமித்தபடியே அமர்ந்திருந்தேன். உங்கள் டைனிங் ஹாலில் அமர்ந்து, சர்க்கரை சேர்க்காத காபி (‘உங்களுக்கும் ஷுகர் இருக்கா?’ என்று சிரித்தீர்கள்!) குடித்தபடி, உங்களை பற்றி அபூர்வமான சில தகவல்களைத் தயக்கமின்றி பகிர்ந்து கொண்டீர்கள்.

ந்த நேரத்தில்தான் நானும் தங்களை பற்றிய சரிதை ஒன்றை எழுதுவதற்கு அனுமதி கேட்டேன். நீங்கள் யோசித்துவிட்டு.. ‘‘அதற்கான நேரம் இன்னும் வரவில்லை... நேரம் வரும் போது நீங்கள்தான் எழுது வீர்கள்..’’ என்றீர்கள். அதை மனதில் கொண்டோ என்னவோ... அடுத்தடுத்த சந்திப்பு களின்போது நான் தங்களைப் பற்றிப் படித்தறிந்த... என் தந்தையார் மூலம் கேட்ட றிந்த தகவல்கள் குறித்து மேலும் விளக்கமான விவரங்களை தயங்காமல் வெளிப் படுத்தினீர்கள். சினிமா, அரசியல்,இலக்கியம், உங்கள் குடும்பம், நண்பர்கள், ஏமாற்றங் கள், வெற்றிகள், வைராக்கியங்கள், விரக்தி என்று பலவற்றையும் கூறினீர்கள்.

‘‘விமானத்தில் பறந்தால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து என்று உங்கள் பத்திரிக்கையில் போட்டு, உங்களுக்கு நீங்களே விளம்பரம் தேடியிருந்தால் இந்நேரம் உங்களிடம் நான் பேசிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். சந்திப்புகளின்போது என்னுடன் ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீங்கள் கேட்டதில்லை. முதல் தடவை நீங்கள் இங்கே வந்த சமயம் சொன்ன வார்த்தைகளும் உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது’’ என்று நீங்கள் சொன்னீர்கள்.

நானும் அப்படி என்ன சொன்னேன் என்று நினைவுபடுத்திப் பார்த்தேன்... ஆங்கிலத்தில் நான் கூறிய வார்த்தைகள்... Madam, I am not a godman, I am not an astrologer, I am only a courier boy from the Almighty, If you feel you cannot digest my message, please do not shoot the messenger என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அதை அப்படியே மறுபடியும் சொன்னேன்.

‘‘ஆமாம்... உங்களை ஒரு ஜோசியர் என்று நீங்கள் கூறியிருந்தால், நான் அப்போதே உங்களை தவிர்த்திருப்பேன்..’’ என்று கூறி களங்கமில்லாமல் கலகலவென சிரித்தபடி, ‘‘எனக்கும் அதுபோன்ற உணர்தல் சக்தி இருந் திருக்க வேண்டும், நரசிம்மன். பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து, சுயமாக எதையும் யோசித்து புரிந்துகொள்ளும் அளவுக்கு வளர்ந்த பிறகு... பிடிக்கிறதோ இல்லையோ... என் எதிர்காலத்துக்குத் தேவையானபடி நான் தயாராக வேண்டும் என்று உள்ளுணர்வு சொன்னது. நானும் அதற்காக தயாராகி விட்டேன். அப்போது நான் முதலில் தேடியது என்ன தெரியுமா? make a case...?’’ என்று கேட்டீர்கள்.

‘‘நூலகம்தானே...?’’ - என் பதிலை தலையசைத்து மறுத்தீர்கள்.

‘‘இல்லை! நீச்சல் பயிற்சிக்காக ஒரு நீச்சல் குளத்தைத் தேடினேன். காலை வேளை களில் ஜிம்கானாவும், மாலை வேளைகளில் மெரினாவும் என்று நீச்சல் குளத்தில் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடன் வரும் என் தாய் சந்தியா, அந்த நேரம் கடற்கரையில் வாக்கிங் செல்வார்...’’ என்றீர்கள்.

உங்கள் முதல் தமிழ் படமான ‘வெண்ணிற ஆடை’யில் நீங்கள் நடிக்கக் காரணமாக இருந்தது அந்த மெரினா நீச்சல் குளம்தான் என்று என் தந்தை சித்ராலயா கோபு சொல்லி இருந்த சம்பவம் நினைவுக்கு வந்தது... அது...!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-6-உயிர்களை-நேசிக்கும்-கருணை-உள்ளம்/article9461967.ece?homepage=true

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! - 7: தாயை நெகிழ வைத்த தாயன்பு!

 
ஜெயலலிதாவை முத்தமிட்டு கொஞ்சி மகிழ்கிறார் தாய் சந்தியா | படம் உதவி: ஞானம்
ஜெயலலிதாவை முத்தமிட்டு கொஞ்சி மகிழ்கிறார் தாய் சந்தியா | படம் உதவி: ஞானம்
 
 

நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பல்வேறு சந்திப்புகளில், உங்களது சிறுவயது சம்பவங்கள், திரைப்பட வாழ்க்கை என்று பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறீர்கள். எவ்வளவு சாதனைகள், வேதனைகள். முதன்முதலாக நீங்கள் சென்னைக்கு வந்த கதை இன்னும் நினைவிருக்கிறது.

மெரினா..! அப்போதைய கோலிவுட்டின் கனவு தொழிற்கூடம். அங்குதான் பல படங்களின் கதைகள் வரையப்பட்டன. அருகிலிருந்த திருவல்லிகேணிதான் அப்போதைய நட்சத்திரங்கள், திரையுலகப் பிரபலங்களின் முகவரி. நடிகர் ரஞ்சன், தேவிகா, ஜமுனா, பாலையா, என் தந்தை சித்ராலயா கோபு அனைவரும் அங்கேதான் வசித்தனர்.

நீங்களும், உங்கள் தாயார் சந்தியாவும் மெரினா நீச்சல் குளத்திற்கு வருவீர்கள். நீங்கள் நீச்சல் பயிற்சி பெறும் வேளையில் உங்கள் தாய் மெரினாவில் வாக்கிங் செல்வார். அப்போது சித்ராலயா படக் குழு தங்கள் நிறுவனத்தின் ‘வெண்ணிற ஆடை’ படத்திற்கு கதாநாயகி தேடிக்கொண்டிருந்த நேரம்..!

உங்கள் குடும்ப நண்பரும் நடிகருமான கோபி என்கிற வி. கோபாலகிருஷ்ணன் என் தந்தை சித்ராலயா கோபுவிடம் தங்களை பற்றி சொன்னார். துறுதுறுவென்று ஒரு ஐயங்கார் சிறுமி பெங்களூரிலிருந்து வந்திருப்பதாக கூறினார். மனதினுள் சிரித்துக்கொண்டனர் சித்ராலயா நிறுவனத்தினர்!

காரணம், முந்தைய தினம்தான் ஒரு ஐயங்கார் பெண்ணுக்கு சோதனை ஒப்பனை செய்து, அவரது நாசி கோணலாக இருந்ததாக நிராகரித்திருந்தார் இயக்குநர் தர். (அந்த பெண்தான் பிற்காலத்தில் இந்திப் பட உலகின் கனவுக் கன்னியாக திகழ்ந்த ஹேமமாலினி!) ஒரு வேளை, தங்களையும் அவர் நிராகரித்திருந்தால், உங்களின் உள்மன விருப்பத்தின்படி சட்டம் படித்து சட்ட மேதையாக மாறியிருக்கக் கூடும் என்று பிறகு சொல்லி இருக்கிறீர்கள்.

மெரினா நீச்சல் குள வளாகத்தில்தான் சித்ராலயா குழுவினர் உங்களிடம் கதையை கூறினார்கள். நீங்களும் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் பாத்திரத்தை ஏற்க தீர்மானித்தீர்கள். உங்கள் தாய்க்கோ தயக்கம். முதல் தமிழ் படத்திலேயே வெண்ணிற ஆடை அணியும் வேடமா?... யோசித்தார்.

“என்ன அம்மு சொல்றே..?” என்று உங்கள் தாய் சந்தியா கேட்டபோது, கலங்கிய கண்களுடன் ‘சரி’ என்று தலையசைத்ததாகச் சொன்னீர்களே..! பின்னாளில் பல்வேறு முடிவுகளை எடுத்ததில் உறுதியை காட்டிய தாங்கள், அன்று அம்மாவுக்காகவே சினிமா வாய்ப்பை ஒப்புக் கொண்டீர்கள். தாய் படும் துயரை களைவதுதான் தலையாய கடமை என்று உங்கள் உள்மன விருப்பத்தை தியாகம் செய்தீர்கள்!

னைவருக்குமே தாய் அன்பு உண்டு தான். ஆனால், உங்களுக்கு அது தனி ஒரு வெறியாகவே அல்லவா இருந்தது. உங்கள் தாய் சந்தியா திரைப்படம் ஒன்றில் பேபி உமா என்ற குழந்தை நட்சத்திரத்தைக் கட்டி அணைத்து முத்தமிடுவது போன்று காட்சி எடுக்கப்பட... அதைக் கண்டு வெகுண்டு தாயுடன் இரு நாட்கள் பேசாமல் இருந்தீர்களே...!

காரணம் தெரியாமல் உங்கள் தாய் குழம்பி, நடந்ததை அறிந்ததும் நெகிழ்ந்து, உங்களை உச்சி முகர்ந்து, அது சினிமா காட்சிக்காகக் கொடுத்த முத்தம் என்பதை தங்களுக்கு உணர்த்தி, தினமும் உங்களுக்கு முத்தம் ஒன்றை இட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டாரே. அவரது இறுதி நாட்கள்வரை இந்த வழக்கம் தொடர்ந்ததல்லவா...!

ஸ்ரீரங்கத்திலிருந்து குடகு நாட்டிற்கு குடிப்பெயர்ந்தவர் உங்கள் தாய் வழி பாட்டனார், ரங்கசாமி! கோவிலில் வேதம் பாராயணம் செய்த அவர், பணிக்காக பெங்களூரு மாறினார். மைசூர் மன்னரின் மருத்துவர் நரசிம்ம ரெங்காச்சாரிதான் உங்கள் தகப்பன் வழி பாட்டனார். அவரது மகன் ஜெயராமுக்குத்தான் உங்கள் தாய் சந்தியா என்கிற வேதவல்லி கன்னிகாதானம் செய்து கொடுக்கப்பட்டார். ஆஸ்திக்கொன்று, ஆசைக்கொன்றாக அண்ணனும், நீங்களும் பிறந்தீர்கள். உங்கள் தந்தைவழி பாட்டியின் பெயரான கோமளவல்லி என்று பெயரிடப் பட்டாலும், ‘ஜெயா, லலிதா’ என்று இரு இல்லங்களில் உங்கள் குடும்பங்கள் வசித்த தால் அந்தப் பெயரே உங்களது நிலைத்த பெயர் ஆயிற்று!

உலகம் புரியாத வயதில் தந்தையை இழந்தீர்கள். சிரமமான வாழ்க்கையை சமாளிக்க சென்னை வந்தார் உங்கள் தாய். இதுபற்றி ஒருமுறை பேச்சு வந்தபோது, ‘‘இங்கேதான் மேடம் ஒரு தவறு நடந்து விட்டது’’ என்றேன். உங்கள் புருவங்கள் உயர...

‘‘உங்கள் தாய் மட்டும் சென்னைக்கு வராமல் பாலிவுட் செல்ல முடிவு எடுத்திருந் தால், நீங்கள் அங்கே நடிகை ஆன கையோடு, இந்தியா முழுவதும் பிரபலம் ஆகி... பிரதமர் ஆகியிருக்கலாம்’’ என்றதும், எழுந்த தங்களது சிரிப்பொலி இன்னும் என் காதில் ஒலிக்கின்றது!

வெண்ணிற ஆடை’ படப்பிடிப்பின்போது என் தந்தை படித்துக் காட்டிய வசனங்களை உடனடியாக மனதில் பதிய வைத்து அற்புதமாக நடித்து விடுவீர்கள். ‘ரீடேக்’ என்பது தங்களுக்கு திருப்தி இல்லை என்றால் மட்டுமே நிகழும். படம் வெளிவந்தது! ஆனால் தாங்கள் அதை காண தடை விதிக்கப்பட்டது ! உங்களுக்கு அப்போது பிராயங்கள் பதினெட்டு நிறைந்திருக்கவில்லை! ‘ப்ரீவியூ’களும் அப்போது கிடையாது. கல்விக்குத்தான் தடை என்றால் உங்கள் உழைப்பின் பலனைக் காணவும் தடையா..? முதல் படத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தினீர்கள். உங்கள் முதல் தமிழ் படம் தங்களுடையது என்பதில் சித்ராலயா குழுவுக்குப் பெருமை.

அப்போதுதான், ஆயிரத்தில் ஒருவனான எம். ஜி. ஆரின் அழைப்பு தங்களுக்கு வந்தது. நீங்களே கூறியது போல, உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பினில், நீங்கள் செய்த ஒரு துணிச்சலான செயல் எம்.ஜி.ஆரையே அதிர வைத்தது என்று சிரித்தபடியே சொன்னீர்களே. அதிரடியாக செயல்படுவதெல்லாம் உங்களுக்கு சாதாரணமாயிற்றே! நீங்கள் அந்த துணிச்சலான செயலை செய்ததால்தான் உங்கள் ஆசான், உங்களை அரசியலில் இழுத்துவிட்டாரோ என்னவோ...!

-வரும் செவ்வாய்க்கிழமை தொடர்வேன்,

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-7-தாயை-நெகிழ-வைத்த-தாயன்பு/article9464774.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! -8: அந்த மூன்று சபதங்கள்!

 

 
 
 
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.
 
 

அந்த மூன்று சபதங்கள்!

மிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பு, பி.ஆர். பந்துலுவின் கன்னட படம் ‘சின்னத கொம்பே’வில் நீங்கள் நடித் தீர்கள். அந்த சமயத்தில் ‘கர்ணன்’ படம் எடுத்து நஷ்டத்தை சந்தித்த பந்துலு, எம்.ஜி.ஆரை வைத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை எடுக்கத் திட்டமிட்டார். கன்னட படம் எடுக்கும்போதே, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கும் சேர்த்து தங்களை ஒப்பந்தம் செய்தார்.

ஆனால், அதற்குள் ‘வெண்ணிற ஆடை’ படப்பிடிப்பு துவங்கி இருந்தது. தங்கள் தாய் சந்தியா, ‘எந்த நேரத்திலும் எம்.ஜி.ஆரிடம் இருந்து என் மகள் நடிப்பதற்கு அழைப்பு வந்துவிடும்’ என்று எனது தந்தை சித்ராலயா கோபுவிடம் முன்கூட்டியே கூறியிருந்தார். இதனால், இயக்குநர் தரும் விரைவிலேயே படத்தை முடித்து விட்டார்.

‘வெண்ணிற ஆடை’ படம் வெளிவந்த அந்த சமயம், உங்கள் பள்ளித்தோழி ஒருத்திக்கு பிறந்த நாள் விழா. பரிசுப் பொருளுடன் ஆவலுடன் விழாவுக்குச் சென்றீர்கள். அங்கு சிறுமிகளின் தாயார் சிலர், தங்களை ஏற இறங்கப் பார்த்தபடி கிசுகிசு என்று பேசிக் கொண்டனர். தங்கள் மனதை நோகடித்தனர். ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் போஸ்டர்களில் நீங்கள் அருவியில் குளிக்கும் காட்சி இடம் பெற்றிருந்ததையும், அதைச் சுட்டிக்காட்டியே உங்களைப் பற்றி தோழிகளின் தாய்மார்கள் ஏளனத்துடன் பேசினர் என்பதும் உங்களுக்குத் தெரியவந்தது!

பிறந்த நாள் விழாவிலிருந்து வீடு திரும்பி, உங்கள் அம்மாவின் மடியில் முகம் பதித்து விசும்பினீர்கள். நடந்ததை முழுவதும் கேட்டறிந்த சந்தியா, உங்களுக்குச் சொன்ன தேறுதலையும் அறிவுரையையும் நீங்கள் கடைசிவரை மறக்கவே இல்லை.

''அம்மு, கேள்.! உன் தந்தை வழி பாட்டனார் மைசூர் சமஸ்தானத்து மருத்துவர், பணக்காரர். என் தந்தையார் ஸ்ரீரங்கத்தில் வேதபாராயணம் செய்தவர். சூது வாது அறியாதவர். அவருக்கு மருமகனாக சூது விளையாடிய உன் தந்தை வந்தார். ஆஸ்தி போனது. அதோடு சேர்ந்து நிம்மதியும் போனது.

ஆண்டவனைத் துதிப்பது மட்டுமே தெரிந்த நான் குடும்பத்தைக் காப்பாற்ற அரிதாரம் பூசினேன். நான் ஒரு குணசித்ர நடிகை மட்டுமே. உன்போல் கதாநாயகி அல்ல! பெரிய நடிகர்கள் வந்தால், எழுந்து நின்று ‘அண்ணே’ என்று வணக்கம் வைத்தால்தான் எனக்கு வாய்ப்புகள் தொடரும். நானும் உன் போல் சொல்லடி பட்டிருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் உன்னிடமோ, உன் அண்ணன் ஜெயகுமாரிடமோ சொன்ன தில்லை.

வளரும்வரை சொல்லடியும், வளர்ந்த பின்பு கண்ணடியும் படுவது கலைஞர்கள் வாழ்க்கையில் இயல்பு. நாளை நீ நல்ல நிலைக்கு வந்தால், இன்று வம்பு பேசிய பெண்களே, ‘ஆட்டோகிராஃப்’ கேட்டு முன்னால் வந்து நிற்பார்கள்’’ என்பதுதான் உங்கள் அம்மா சொன்ன வார்த்தைகள்!

அப்போதுதான் மனதுக்குள் மூன்று சபதங்களை நீங்கள் எடுத்துக் கொண்டதாக, பின்னாளில் சொன்னீர்கள். ‘நான் யாருக்கும் கூழை கும்பிடு போடமாட்டேன். என்னை யாரும் கேவலமாக நடத்த இடம் தரமாட்டேன். யாரைக் கண்டும் அச்சப்பட மாட்டேன்...’ என்பதே அந்த மூன்று சபதங்கள்! ஒரு வேளை, இந்த வைராக்கியம்தான் நாடாளும் நிலைக்கு உங்களைப் படிப்படியாக உயர்த்தியதோ...!

என்னருமை தோழி..!

‘வெண்ணிற ஆடை’ படத்துக்கு முன்பே ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடிப்பதற்காக உங்களை எம்.ஜி.ஆர். குறித்து வைத்துக் கொண்ட அந்த சம்பவம் மட்டும் சாதாரணமானதா..? பந்துலு படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர்., அதற்கென புது கதாநாயகியை தேடிக் கொண்டிருந்தார். ‘சின்னத கொம்பே’ படத்தை பந்துலுவின் அழைப்பின் பேரில் சென்று பார்த்தார். தங்களை திரையில் பார்த்த எம்.ஜி.ஆர்., பாதி படத்திலேயே எழுந்து சென்று விட்டாராம். ‘ஒருவேளை நீங்கள் தனக்குப் பொருத்தமான கதாநாயகி இல்லை என்று முதல் பார்வையிலேயே அவர் முடிவெடுத்து விட்டாரோ’ என்று உங்கள் தாயார்கூட நினைத்துவிட்டார்.

பின்னர் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நீங்கள் நடித்து அது ஆரவாரமாக வரவேற்கப் பட்ட பிறகு... வேறோரு சமயத்தில், ‘சின்னத கொம்பே’ சிறப்புக் காட்சியின்போது, தான் பாதியில் எழுந்து போன காரணத்தை பந்துலுவிடம் எம்.ஜி.ஆர். சொன்னாராம். அசப்பில் பார்ப்பதற்கு மறைந்த அவர் மனைவி சத்யவதியின் அச்சாக நீங்கள் இருந்தீர்களாம்!

அது மட்டுமா...? ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பில், உங்களின் துணிச்சலான ஒரு செயல் எம்.ஜி.ஆரை பெரும் வியப்பில் ஆழ்த்தியதைப் பற்றி நீங்களே ஒரு சந்திப் பின்போது என்னிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.

கார்வார், கோவாவில் படப்பிடிப்பு. அதற்காக, படப்பிடிப்புக் குழுவுடன் சென்றீர்கள். ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்...’ பாடல் படமாக்கப்பட்ட கப்பலுக்கு நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சென்று வருவதற்காக சிறு படகுகள் தருவிக்கப்பட்டிருந்தன. உங்கள் ஒப்பனைக்காரர் சற்று மெதுவாகப் பணியாற்ற... படக் குழுவினர் அனைவரும் படகுகளில் ஏறி கப்பலை அடைந்து விட்டனர்.

ஒப்பனை முடிந்து ‘டச்அப்’ பெண்ணுடன் வந்த நீங்கள், படப்பிடிப்புக் குழுவினர் சென்றுவிட்டதை அறிந்ததும் சற்றும் யோசிக்காமல், படகு ஒன்றில் ஏறி நீங்களே துடுப்பைத் தள்ளிக்கொண்டு கப்பலை நோக்கி பயணிக்கத் துவங்கினீர்கள். பெரிய அலைகள் உங்கள் படகை தள்ளாடச் செய்தபோதும், சற்றும் கலங்காமல் இலக்கினை நோக்கிப் பயணம் செய்தீர்கள்.

நாகேஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை மாதவி கிருஷ்ணன், தனியே படகு ஓட்டியபடி நீங்கள் வருவதைப் பார்த்து திகைப்பில் அலற, மற்றவர்களும் பதற.. நீங்கள் எப்படியோ கப்பலை அடைந்து ஏணியில் ஏறிவிட்டீர்கள்.

அப்போது எம்.ஜி.ஆர். உங்களைக் கடிந்து கொண்டார், ‘‘என்ன அம்மு இது, விபரீத விளையாட்டு..?’’ என்று! ஆனால், பின்னாளில் அரசியல் எனும் மிக விபரீத மான விளையாட்டில் உங்களை அவர் இறக்கிவிடுவதற்கு இந்தச் சம்பவம்தான் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என நான் புரிந்து கொள்கிறேன்.

அத்துடன், எம்.ஜி.ஆரின் கவனத்தை உங்கள் மீது மேலும் அழுத்தமாகப் பாய்ச்சியது... உங்களின் வெளிப்படையான பேச்சு..!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-8-அந்த-மூன்று-சபதங்கள்/article9469156.ece?homepage=true

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! - 9: வைராக்கியத்துக்கு சோதனை!

 

 
சென்னையில் நடந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதா பேசுகிறார்.
சென்னையில் நடந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதா பேசுகிறார்.
 
 

வைராக்கியத்துக்கு சோதனை!

நீங்கள் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு இடைவேளையில் தனியாக ஒதுங்கி அமர்ந்து ஆங்கிலப் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பதை எம்.ஜி.ஆர். நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார்... உங்கள் அறிவுத் திறனை எடைபோட்டுக் கொண்டிருப்பார். அதே படத்தில் நாகேஷுக்கு ஜோடியாக நடித்த மாதவியுடன் அவ்வப்போது ஆங்கி லத்தில் உரையாடுவது உங்கள் வழக்கம். மாதவி சிங்கப்பூரை சேர்ந்த நடிகை. ஆங்கில அறிவும் அவருக்கு அதிகம்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் கதை ‘கேப்டன் பிளட்’ என்ற ஆங்கிலப் படத்தின் கதை போல் இருப்பதாக மாதவி கூற, ''இருக்கலாம். ஆனால் நமது படப்பிடிப்பில் இதனைப் பேசுவது தவறு. இதனால் இங்கு பணி செய்பவர்களின் திறமையை நாம் குறைத்து மதிப்பீடு செய்வது போல் ஆகிவிடும்” என்று நீங்கள் அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தீர்கள்.

இந்த விவரம் எம்.ஜி.ஆரின் காதுக்குச் சென்றது. படப்பிடிப்புக்கு கடலில் தனியே படகில் வந்த உங்கள் துணிச்சலும், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பதும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணமும், அறிவுத் திறனும் பிடித்து விட தங்களை மேலும் சில படங்களுக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய எண்ணினார். அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி பல படங்களில் நடித்துவிட்டதால் ரசிகர்கள் அவரது ஜோடியாக ஒரு புதிய முகத்தை பார்க்க விரும்பினர். ரசிகர்களின் நாடித்துடிப்பை எம்.ஜி.ஆரும் அறிந்திருந்தார். எனவே, உங்களை தனது படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்பினார்.

னது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்வது பற்றி எம்.ஜி.ஆர். கேட்டபோது, பதில் கூற சந்தியா தயங்கினார். காரணம், உங்கள் தாய் சந்தியாவோ சிவாஜி கணேசனின் நண்பர். உங்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தலைமை வகித்து ‘தங்கச் சிலை’ என்கிற பட்டத்தை சிவாஜி கணேசன் தங்களுக்கு வழங்கியிருந்தார். உங்கள் தாயாருக்கு சிவாஜி கணேசன் தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது படங்களில் மீண்டும் மீண்டும் கதாநாயகியாக உங்களை ஒப்பந்தம் செய்தால், தனக்குக் கிடைத்து வரும் வாய்ப்புகள் பறிபோகுமோ என்கிற அச்சம் உங்கள் தாயார் சந்தியாவுக்கு இருந்திருக்க வேண்டும். இந்தக் காரணங்கள் நினைவில் நிழலாடியதால், தனது படங்களில் உங்களை ஒப்பந்தம் செய்வது பற்றி எம்.ஜி.ஆர். கேட்டபோது, சந்தியா தயக் கத்துடன் ஒப்புக் கொண்டார்.

சென்னையில் ‘வெண்ணிற ஆடை’ படம் ஓடிக்கொண்டிருந்த அதே சமயம், எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் வெள்ளி விழாவை நோக்கி சக்கை போடு போட்டு கொண்டிருந்தது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ நூறு நாட்கள் ஓடியது. என்றாலும், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ வெள்ளி விழா கொண்டாடியதால் இரண்டு படங்களையும் ஒப்பிட்டு, சரோஜா தேவிதான் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான நாயகி என்று ஒரு பேச்சு அடிபட்டது. அதுவும் இல்லாமல், எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு யாருக்கு என்பதில் உங்களுக்கும் சரோஜா தேவிக்கும் பிணக்கு என்றெல்லாம்கூட கூறப்பட்டது. நீங்கள் அதனை அடியோடு மறுத்தீர்கள்!

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு, பந்துலு தான் தயாரித்த ‘நாடோடி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவியை இணைய வைத்தார். நீங்கள் எம்.ஜி.ஆருடன் தேவர் பிலிம்ஸின் ‘கன்னித்தாய்’ படத்தில் நடித்தீர் கள். ஆக, உங்கள் இருவருக்கும் இடையே எம்.ஜி.ஆர். படங்களில் நடிப்பதற்கு ஒருவித போட்டியே நிலவத் தொடங்கியது.

எம்.ஜி.ஆருடன் நீங்கள் நடித்த இரண்டாவது படம் ‘கன்னித்தாய்’ வெற்றிகரமாக ஓடியது. அதே சமயம், சரோஜா தேவி எம்.ஜி.ஆருடன் நடித்த ‘நாடோடி’ அந்த அளவுக்கு ஓடவில்லை. இதனால், எம்.ஜி.ஆருக்கு நீங்களே பொருத்தமான நாயகி என்கிற பேச்சு எழத் தொடங்கியது.

ன்னருமை தோழி!

அப்போது தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய நீங்களும், கன் னடத்து பைங்கிளி சரோஜா தேவியும் ஒரே சமயத்தில் எம்.ஜி.ஆரின் படங் களில் நடித்துக் கொண்டிருந்தீர்கள். 1966-ஜனவரியில் எம்.ஜி.ஆர். - சரோஜா தேவி நடித்த ‘அன்பே வா’வும் பிப்ரவரி 1966-ல் ‘முகராசி’யும் வெளியாயின. இரண் டுமே வெற்றி பெற்றன.

அதன்பின், எம்.ஜி.ஆர். படங்களான ‘சந்திரோதயம்’, ‘தனிப்பிறவி’ இரண்டிலும் தாங்களே கதாநாயகி. தொடர் வெற்றிகளால் எம்.ஜி.ஆரும் நீங்களும்தான் பொருத்தமான ஜோடி என்கிற நிலை தோன்றியது. இதே போல் ஜெமினி கணேசன்-சாவித்ரி, சிவாஜி கணேசன் -பத்மினி என்று ஜோடிகளை வெற்றி அடையச் செய்தனர் தமிழ் ரசிகர்கள்!

மிழக திரையுலகில் தன்னிரகற்ற தாரகையாக ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்திருந்தீர்கள். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் அதிகம் நடித்துக் கொண்டிருந்த தங்களை ஏவிஎம் நிறுவனம் தனது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்தது. பெரிய நிறுவனத்தின் படத்தில் நாயகியாக தன் மகள் நடிக்கப் போவதில் உங்கள் தாய் சந்தியா பெருமைப் பட்டார்.

ஆனால், அந்த படத்தின் இயக்குநருக்கும் தங்களுக்கும் எழுந்த ஒரு பிரச்சினையால்.. கடைசி வரை அவர் படத்தில் இனி நடிக்க போவதில்லை என்று நீங்கள் சபதம் செய்யும் அளவுக்கு நிலைமை போனது. உங்களை பொறுத்தவரை உங்கள் வைராக்கியத்துக்கு விடப்பட்ட சோதனையாகவே அதை நினைத் தீர்கள்.

1966-இல் வெளிவந்தது அந்த படம்...!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-9-வைராக்கியத்துக்கு-சோதனை/article9471865.ece

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! -10: அந்த தற்கொலை காட்சி!

 

 
 
 
‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் ஜெயலலிதா, நாகேஷ்.
‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் ஜெயலலிதா, நாகேஷ்.
 
 

அந்த தற்கொலை காட்சி!

பொதுவாகவே அவமானம் ஏற்படும் சமயங்களில் பெண்கள் கண்ணீர் விட்டு மனதினுள் குமைவார்கள். தாங்களோ சபதமே போட்டு, பிரச்சினைக்குரிய நபர் யாராக இருந்தாலும்... அவருக்குப் பாடம் புகட்டாமல் விட்டதில்லை.

சிறுவயதில், பள்ளித் தோழியின் பிறந்தநாள் விழாவில் சொல்லடிபட்டு, அம்மாவின் மடியில் ஆறுதல் தேடியபோது, மனதுக்குள் மூன்று வைராக்கியம் ஏற்றதாகப் பிறகு சொல்லி இருக்கிறீர்கள். ‘யாருக்கும் கூழை கும்பிடு போட மாட்டேன். யாரும் என்னை கேவலப்படுத்த இடம் தர மாட்டேன். யாருக்கும் பயந்து என் தன்மானத்தை விட்டுத்தர மாட்டேன்’ இவையே அந்த மூன்று சபதங்கள்!

ஆனால், அந்த சபதத்துக்கு 1966-ம் வருடம் ஒரு பெருத்த சவால் வந்தது. எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாகப் பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருந்த நேரம்... ஏவிஎம் நிறுவனம் புதிய படம் ஒன்றில் தங்களை ஒப்பந்தம் செய்ய அணுகியது. படத்தில் நீங்கள் கதாநாயகி என்று மட்டும்தான் தங்களிடம் முதலில் கூறப்பட்டது. படத்தின் இயக்குநர் அப்போது பெரிய ஜாம்பவான் இல்லையென்றாலும், அதற்குரிய தகுதிகள் அவருக்குத் துளிர் விட்டுக்கொண்டிருந்தன.

அவர் நல்லவர்தான்... திறமை யானவர்தான்... பின்னாளில் பல சாதனை யாளர்களை அறிமுகப்படுத்தியவர்தான். ஆனால், ‘தனது படைப்பாற்றலுக்கு மட்டுமே அந்த இயக்குநர் முக்கியத்துவம் கொடுப்பவர். கலைஞர்களின் உணர்வுகள் அவருக்கு இரண்டாம் பட்சம்தான்’ என்று சிலர் குற்றச்சாட்டு கூறுவதுண்டு.

தனது மகள் பெரிய நிறுவனத்தின் கதாநாயகி என்னும் மலைப்பில் கதையைக் கேட்காமல் சம்மதித்து விட்டார் உங்கள் தாய் சந்தியா. தாங்களும் அந்த இயக்குநரின் திறமைகளை பற்றி அறிந்திருந்ததால், கொடுக்கப்பட்ட பணியை சீரிய முறையில் செய்து வந்தீர்கள். இருப்பினும் மனதில் சிறு நெருடல்.

எம்.ஜி.ஆர். படங்களில் ஆட்டம் பாட்டம், கண்ணீர், காதல், கிண்டல், கேலி, என்று நவரசங்களை கொட்டித் தீர்த்த நிலையில்... படம் ‘மேஜராக’ இருந்தாலும்...நீங்கள் மைனர் முக்கியத்துவத்துடன் மட்டுமே நடத்தப்படுவதாக உணர்ந்தீர்கள்!

ஆனால், இதுகுறித்து இயக்குநரிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவரும் ‘இதுதான் கதை’ என்று உங்களிடம் சொல்லவில்லை. மொத்தத்தில் எம்.ஜி.ஆர். படங்களில் உங்களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்படத்தில் இல்லாத ஒரு நிலை. இதனால் உங்கள் ‘இமேஜ்’ பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் உங்களுக்கு. இருந்தாலும் ‘ஒருநாள் யாரோ...என்ன பாடல் சொல்லித் தந்தாரோ...’ என்று இயக்குநர் சொன்னபடி சோக கீதம் பாடி நடிக்கத்தான் செய்தீர்கள்!

திடீரென்று ஒருநாள், ‘தற்கொலை காட்சியில் நடிக்கத் தயாராகுங்கள்’ என்று உங்களிடம் கூறப்பட்டது. திடுக்கிட்டுப் போனீர்கள். ‘‘என்ன சொல்கிறீர்கள்? இதுவரை பெரிதாக காட்சிகள் ஒன்றும் எனக்குத் தரப்படவில்லையே? அதற்குள் கதாநாயகி தற்கொலை செய்து கொள்கிறாளா...?’’ என்று அயர்ந்துபோய் கேட்டீர்கள்.

‘‘கதைப்படி நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். storyline is director's prerogative...’’ என்று உங்களுக்குக் கூறப்பட, தங்களின் தன்மானத்திற்கு அந்த இயக்குநரால் ஒரு சவால் விடுக்கப்பட்டதாக நினைத்தீர்கள். உங்கள் கண்களில் உணர்வுகள் உறைந்து போயின.

வறண்ட புன்முறுவலுடன் இயக்குநரை நோக்கி ஆங்கிலத்தில் பதில் தந்தீர்கள்...

‘‘Oh! Is that so? Well...go ahead and kill me soon! So...when I am dead, there won't be any need for you in future to come to me offering roles. Thank You!’’

...என்றபடி தங்கள் காரை நோக்கி நடந்து போனீர்கள். ஒப்புக்கொண்டபடி, அந்த தற்கொலை காட்சியில் நடித்தும் தந்தீர்கள். அதன்பின், அந்த இயக்குநரின் படங்களில் நீங்கள் நடிக்கவே இல்லை. உங்கள் தன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவும் இல்லை.

அதேசமயம், அந்த இயக்குநர் உங்களை அவமானப்படுத்தி விட்டதாக நீங்கள் ஒருபோதும் பத்திரிகைகளுக்கு பரபரப்பு பேட்டி தரவில்லை. தமிழ் திரையுலகின் ‘நம்பர் ஒன்’ நாயகியாக கொடி கட்டிப் பறந்த நீங்கள் பேட்டி கொடுத்தால் அது தமிழகமெங்கும் எதிரொலிக்கும். என்றாலும் யாரையும் குறைகூறாத உங்கள் பண்பினால் கண்ணியம் காத்தீர்கள்.

ஆனால், இந்த கசப்பான அனுபவத்துக்குப் பின் உங்கள் வைராக்கியம் இன்னும் உறுதிப்பட்டது. உங்களுக்கு மட்டுமல்ல... உங்களுக்கான கதாபாத்திரத்துக்கும் மரியாதை கொடுக்காவிட்டால்... அந்தப் பட வாய்ப்புகளை ஏற்கப் போவதில்லை என்று சபதம் செய்தீர்கள்.

என்னருமை தோழி...!

இதே படத்தில் உங்களுக்கு அண்ணனாக நடித்த நாகேஷுக்கும் ஒரு வருத்தமான அனுபவம் ஏற்பட்டது. ‘கல்யாண சாப்பாடு போடவா...’ பாட்டின்போது அவரது வாயசைப்பு சற்று மிகைப்பட்டு இருந்ததாக நினைத்த தயாரிப்பு தரப்பினர் அவரை அழைத்து கடிந்து கொண்டனர். மீண்டும் அக்காட்சியில் நடித்துக் கொடுக்கும்படி கூற, நாகேஷ் வருத்தத்துடன் செட்டில் அமர்ந்திருந்தார். நடந்ததை அறிந்த நீங்கள்தான் அவருக்கு ஆறுதல் சொன்னீர்கள்.

‘‘எனக்கும் இப்படம் ஏமாற்றம்தான், நாகேஷ்...! ஆனால், தொழில் சுத்தம் வேண்டும். அவர்களது எதிர்பார்ப்புகளை முடித்துத் தந்துவிட்டு, நாம் விலகிவிட வேண்டும். பிரச்சினை செய்து போராடுவதால், நம் பெயர் கெட்டுப் போகும்’’ என்று அவரை மீண்டும் நடித்து தரும்படி கூறினீர்கள்.

பின்னர் ஒரு சமயம் - தமிழக முதல்வராக இருந்த தங்களிடம் - அந்த இயக்குநர் appointment கேட்டபோது, ‘‘It is Chief Minister's prerogative to give appointement...’’ என்று சொல்லாமல், அவரை சந்திக்க அனுமதி தந்து... உரிய மரியாதை அளித்து, நன்றாகவே அவரிடம் பேசி அனுப்பி, உங்கள் பெருந்தன்மையை நிரூபித்தீர்கள்.

ஆனால், கூடிய மட்டும் அந்தப் படம் குறித்த நினைவுகளை உங்கள் மனதிலிருந்தே நீக்கி விட்டதாக உங்களுக்கு நெருக்கமானவர்கள் பிறகு, உங்கள் மூலம் அறிந்து கொண்டார்கள்.

இதுபோன்ற ஒரு கசப்பான அனுபவத் திலிருந்து நீங்கள் மீள்வதற்குள், உங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த செய்தி வந்தடைந்தது. தங்களை மட்டுமல்ல, தமிழகத்தையே நிலைகுலைய வைத்து, திரையுலகைத் தடுமாறவும் வைத்தது அந்த செய்தி....!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-10-அந்த-தற்கொலை-காட்சி/article9474563.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..!- 11: தமிழகம் அதிர்ந்த அந்த நாள்!

 

 
 
 
‘தாய்க்குத் தலைமகன்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.
‘தாய்க்குத் தலைமகன்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.
 
 

ஆகஸ்ட் 16, 2008... அன்று சனிக்கிழமை... குடும்பத்துடன் ரங்கம் செல்லத் தயாராகி இருந்தேன். மாலை ஐந்து மணிக்கு வரச் சொல்லி, தோட்டத்திலிருந்து உங்கள் அழைப்பு திடீரென வந்தது. நான் ஏன் மறுக்கப் போகிறேன்? சொன்ன நேரத்தில் தங்கள் முன் நின்றேன். அன்று நீங்கள் உற்சாகமாகக் காட்சி தந்தீர்கள்.

‘‘திடீரென்று உங்களை அழைத்து விட்டேன். பிரச்சினை ஒன்றும் இல்லையே..?’’ என்று கேட்டீர்கள்.

‘‘இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான் மேடம்!’’ என்பதை ஆங்கிலத்தில் சொன் னேன். அன்று திருவரங்கத்திற்கு பதிலாக தங்களுடன் கடந்த காலத்திற்கு நான் பயணித்தேன்.

உங்களுடைய கடந்த காலத்திற்கு பயணம்... சுற்றிலும் கறுப்புப் பூனைப் படைகள் இல்லாத ஒரு தனிமையான பயணம். உங்கள் கட்சிக்காரர்களின் ஆர்ப்பரிப்பு இல்லாத, நினைவுகளை மலரவைக்கும் அமைதியான பயணம். நீங்கள் பிரச்சாரத்தில் உரையாற்றும்போது, உங்கள் உரையின் பக்கங்களை வண்டியினுள் உள்ள உதவியாளர் ஒவ்வொன்றாக வாங்கிக் கொள்வதை போல், நான் உங்கள் பசுமையான நினைவுகளை உள்வாங்கிக் கொண்டேன் அன்று!

நான் அமர்ந்தவுடன், முதலில் நீங்கள் கேட்ட கேள்வி இது...

‘‘நீங்கள் பத்திரிகையாளர் அல்லவா... வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா..? குறிப்பாக, ‘தி சாலிட்டரி ரீப்பர்’ படித்தது உண்டா?’’

ஒரு பெரிய தலைவர் திடீரென்று வரச்சொல்லி, இப்படி கவிதை படித்திருக்கி றீர்களா எனக் கேட்டால் எப்படி இருக்கும்? பள்ளி நாட்களில் அந்த கவிதையை ஒப்புவிக்கத் தவறி, எனது ஆசானிடம் பிரம்படி பட்ட அனுபவம் உண்டு. ஆனால், உங்களிடம் இருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நானும் சமாளிப்பாக, ‘‘மேடம்... எனக்கு தொடர் கொலைகள் நடத்திய ‘ஜாக் தி ரிப்பர்’ பற்றி முழுதாகத் தெரியும். ‘சாலிட்டரி ரீப்பர்’ மனப்பாடம் ஆகவில்லை. ஆனால், அந்தக் கவிதையின் கருத்தைக் கூற முடியும்” என்றேன். அமைதியாக, நான் சொல்வதற்குக் காத்திருந்தீர்கள்.

‘‘வேர்ட்ஸ்வொர்த், சமவெளி ஒன்றை கடக்கும்போது, அறுவடை செய்தபடியே ஒரு பெண் சோகமான பாடல் ஒன்றைப் பாடுவதைக் கேட்கிறார். பறவைகள்கூட அந்தப் பாடலைக் கேட்டபடி அமைதி காக்க, அதிலிருந்த சோகத்தன்மை கவிஞரை பெரிதும் பாதித்து விடுகிறது. அந்தப் பகுதியை கடந்தும் அவரது இதயத்தில் அந்த சோக கீதம் எதிரொலிக்கிறது... இதுதான் அந்தக் கவிதையில் வருகிறது...’’ என்ற என்னை ஏறிட்டுப் பார்த்த நீங்கள்... அடுத்த கணம் என்னை பிரமிக்கச் செய்து விட்டீர்கள்.

Behold her, single in the field

You solitary Highland lass

Reaping and singing by herself

Stop here or gently pass..

என்று அழகான குரலில் அந்தக் கவிதையைச் சொல்லத் தொடங்கிய நீங்கள், கவிதையின் நான்கு பகுதிகளையும் முழு வதுமாகக் கூறி...

The music in my heart I bore

Long after it was heard no more..

என்று முத்தாய்ப்பு வைத்தபோது... ஆடிப் போய்விட்டேன்!

என்னருமை தோழி...!

‘‘நானும் பள்ளி நாட்களில் படித்ததுதான். ஆனால், இன்னும் எனக்கு மறக்கவில்லை...’’ என்று நீங்கள் சொன்னபோது... ‘எப்படி இவரால், வேர்ட்ஸ்வொர்த்தையும் ஒப்புவிக்க முடிகிறது. நரசிம்மாஷ்டகத்தையும் உச்சரிக்க முடிகிறது?’ என்று அதிசயத்தபடி அமர்ந் திருந்தேன்!

‘‘சாலிட்டரி ரீப்பர் கவிதை வரிகள் திடீரென நினைவுக்கு வந்துவிடும் எனக்கு. ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொள்வேன். கிட்டத்தட்ட எனது அம்மாவின் குரல்தான் அது. அவரது கடைசி காலத்தில் என்னிடம் பேசியவை, எல்லாவற்றையும் கடந்து வந்த பிறகும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது’’ என்று நீங்கள் கூறினீர்கள்.

அன்று இன்னும் பல சம்பவங்களைப் பற்றிப் பேசினீர்கள்.

முக்கியமாக, ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் சுடப்பட்டார்’ என்ற நிலைகுலைய வைத்த செய்தி வெளியாகி, தமிழ்நாடே அதிர்ந்து நின்ற 1967 ஜனவரி 12-ம் தேதி பற்றி பேசினீர்கள்.

அன்று வியாழக்கிழமை, இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் மேட்ச் மறுநாள் சென்னையில் துவங்க இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமைதான் எம்.ஜி.ஆருடன் நீங்கள் நடித்த ‘தாய்க்குத் தலைமகன்’ படம் வெளியாகவிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம்! இன்று வாசகர்கள் படிக்கப் போகும் தேதியும் ‘தாய்க்குத் தலைமகன்’ படம் வெளியான அதே ஜனவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமைதான். நேற்று எம்.ஜி.ஆர். சுடப்பட்ட தினம். 50 ஆண்டுகள் கடந்து விட்டன! சரி.... விஷயத்துக்கு வருகிறேன்.

கிரிக்கெட் மேட்ச் போவதற்கு இரண்டு டிக்கெட் உங்கள் வசம் இருக்க... அண்ணன் ஜெயகுமார் மேட்சுக்கு வர மறுக்க... அன்னையை உடன் வரும்படி கேட்டீர்கள். ‘‘பட ரிலீஸ் தொடர்பாக கவனிக்க வேண்டிய சில பணிகள் உள்ளது. ‘தேவர் பிலிம்ஸ்’ போக வேண்டும். நீ வேண்டுமானால் ராஜம்மாவை (நடிகை எம்.என்.ராஜம்) துணைக்கு அழைத்துப் போ’’ என்று உங்கள் அம்மா சொல்லி இருந்தார்.

நடிகை எம்.என்.ராஜம் அவர்களுக்கு கிரிக்கெட் ஆர்வம் உண்டு என்பதை விட, சந்தியா இல்லாத நேரங்களில் தங்களுக்கு துணையாக அவர் இருப்பார் என்பதை நீங்களே அடிக்கடி சொன்னதுண்டு.

‘ராஜத்திற்கு போன் செய்து கேட்கலாம்’ என்று நீங்களும், தாய் சந்தியாவும் பேசிக் கொண்டிருந்தபோது, தொலைபேசி மணியடித்தது. எடுத்து பேசினீர்கள். ‘தாய்க்குத் தலைமகன்’ படத்தைத் தயாரித்த ‘தேவர் பிலிம்ஸ்’ நிறுவனத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. ‘‘ராமாவரம் தோட்டத்து வீட்டில் சின்னவர் (எம்.ஜி.ஆர்.) சுடப்பட்டார்’’ என்கிற செய்தி காய்ச்சிய இரும்புக் குழம்பாய் உங்கள் செவிகளில் பாய, வீறிட்டு அலறினீர்கள்.

பதைபதைத்துப் போன தாய் சந்தியா விவரத்தை கேட்க, நீங்கள் சின்னவர் சுடப்பட்ட செய்தியை சொன்னீர்கள். ‘‘இருக்காதும்மா, தேர்தல் நேரம். பரங்கிமலை தொகுதியில் அவர் போட்டியிடுவதால். வேறு ஏதாவது தேர்தல் தகராறு இப்படி தவறாகப் பரவி இருக்கும். சுடும் அளவுக்கு அவருக்கு யார் எதிரி இருக்கிறார்கள்? இது வெறும் வதந்தியாக இருக்கும்...’’ என்று சந்தியா உங்களை ஆசுவாசப்படுத்தினார்.

ராமாவரம் தோட்டத்திற்கு உடனே போன் செய்தீர்கள். அழுதுகொண்டே யாரோ உதவியாளர் தங்களிடம் கூறினார். ‘‘சின்னவரை எம்.ஆர்.ராதா சுட்டுட்டாரு. அவரும் தன்னை சுட்டுக்கிட்டாரு. ரெண்டு பேரையும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டு போயிருக்காங்க...’’ என்று தகவல் தரப்பட... தாயை அழைத்துக்கொண்டு அப்போது நீங்கள் வசித்து வந்த தி.நகர் சிவஞானம் தெருவில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நோக்கி சென்றீர்கள்.

ஆனால், ஆயிரம் விளக்கு பகுதியிலேயே உங்கள் கார் தடுத்து நிறுத்தப்பட்டது...!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-11-தமிழகம்-அதிர்ந்த-அந்த-நாள்/article9477411.ece?homepage=true

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..!- 12: எம்.ஜி.ஆருக்கு அளித்த உற்சாகம்!

 

 
 
 
‘காவல்காரன்’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இயக்குநர் ப. நீலகண்டன், சின்னப்பா தேவர் (இடது ஓரம்)
‘காவல்காரன்’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இயக்குநர் ப. நீலகண்டன், சின்னப்பா தேவர் (இடது ஓரம்)
 
 

எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்... ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார் என்கிற செய்தி தெரிந்ததும், உடனே நீங்கள் மருத்துவமனைக்கு பதைபதைப்புடன் புறப்பட்டீர்கள். தி.நகர் வீட்டிலிருந்து ராயப் பேட்டைக்கு பறந்த உங்கள் காரை, ஆயிரம் விளக்கு பகுதி அருகே போலீஸார் வழிமறித்தனர்.

‘‘சென்னை நகரம் முழுவதுமே பதற்றத்தில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு எந்த நேரத்திலும் வரக்கூடும். எம்.ஆர்.ராதா வீடு சூறையாடப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கொந்தளித்தபடி நிற்கின்றனர். உங்களுடன் அவர் நடித்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவர் சுடப்பட்டது அவர்கள் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. இப்போது நீங்கள் அங்கே சென்றால் வேண்டாத பரபரப்புகள் எழுந்துவிடும். தயவு செய்து வீடு திரும்புங்கள்..’’ என்று போலீசார் கேட்டு கொள்ள... வேறு வழியின்றி வீடு திரும்பினீர்கள். அவ்வப்போது சின்னவரின் அண்ணன் சக்ரபாணியிடம் விவரங்களை கேட்டுக் கொள்ள மட்டுமே உங்களால் முடிந்தது.

அன்றிரவு பதினொரு மணிக்கு, ஊர் அடங்கிய பிறகு எம்.ஜி.ஆரும், எம்.ஆர். ராதாவும் அரசுப் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அன்றிரவே இருவருக்கும் அறுவை சிகிச்சை நடந்தது. எம்.ஜி.ஆரைச் சுட்டபின் தற்கொலைக்கு முயன்ற ராதாவின் மண்டையோட்டில் பதிந்திருந்த தோட்டாக்கள் அகற்றப்பட்டன... ஆனால், எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்திருந்த தோட்டாவை நீக்க முயன்றால், அவர் உயிருக்கு ஆபத்து விளையக் கூடும் என்பதை உணர்ந்த மருத்துவர்கள் அந்த முயற்சியை கைவிட்டனர்.

மறுநாள் காலை... திட்டமிட்டபடி கிரிக்கெட் மேட்சுக்கு போக தோன்றாமல், எம்.ஜி.ஆர். பற்றிய நல்ல செய்திக்காக காத்திருந்தீர்கள். அந்த செய்தியும் வந்தது. காலை பதினொரு மணிக்கு எம்.ஜி.ஆர். கண் விழித்து விட்டார் என்றதும்தான், உங்களுக்கு நிம்மதி. இருவரும் நடித்த ‘தாய்க்குத் தலைமகன்’ படம் ரிலீஸ் ஆகுமா என்கிற கவலையில் இருந்த தயாரிப்பாளர் சின்னப்பா தேவரின் வயிற்றில் பால் வார்த்தது இந்த செய்தி!

‘எம்.ஜி.ஆர். மீண்டுவிட்டார்; நலமாக உள்ளார்’ என்கிற ஸ்லைடுகளை தியேட்டர் களில் படம் தொடங்குவதற்கு முன்பாக காட்டுவதற்கு ஏற்பாடு செய்தார், படத்தின் இயக்குநர் எம்.ஏ.திருமுகம். எம்.ஜி.ஆர். சுடப்பட்டதால் அதிர்ந்து போய் ரசிகர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாய் படத்தினைக் காண வந்திருந்தனர்.

கதையின்படி, எம்.ஜி.ஆர். அண்ணன் மகள் கீதா என்கிற குழந்தை, ‘‘சித்தப்பா! எனக்கு துப்பாக்கி வாங்கி வா’’ என்று ஒரு காட்சியில் வசனம் பேச, ‘‘ஐயோ... தலைவரே... வேண்டாம்’’ என்கிற கதறல்கள் கூரையைப் பிளந்தன. எம்.ஜி.ஆரும் நீங்களும் தோன்றிய காட்சிகளில் எல்லாம், ‘‘அம்மு...சின்னவரை பத்திரமா பார்த்துக்க...’’ என்று கோரிக்கைகளும் எழுந்தன. எம்.ஜி.ஆருக்கு நாடெங்கும் அனுதாப அலை... தமிழகத்தில் முதன் முதலாக எழுந்த மிகப் பெரிய அனுதாப அலை அதுதான் என்று நினைக்கிறேன்.

மறுபிறவி எடுத்தபின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் அமர்ந்திருக்கும் படங்கள் அச்சிட்ட சுவரொட்டிகள் பட்டி தொட்டியெங்கும் விளம்பரப்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சி கவலையில் ஆழ்ந்தது. எம்.ஜி.ஆர். சுடப்பட்டதே காங்கிரஸ் கட்சியை வீழ்த்த திராவிட தலைவர்கள் அரங்கேற்றிய நாடகம் என்றுகூட சிலர் இரக்கமின்றி பிரச்சாரம் செய்தனர். தமிழ் திரையுலகம் அரசியல் ரீதியாக இரண்டுபட்டது. சிவாஜி கணேசன் தலைமையில் காமராஜை சந்தித்து ஆதரவு தெரிவித்தது திரைப்படத் துறையை சேர்ந்த ஒரு அணி!

சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி எஸ்.எஸ்.வாசன், தர், சித்ராலயா கோபு, சோவின் தந்தை ஆத்தூர் னிவாச அய்யர் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். தரும் கோபுவும் ஓ.வி.அளகேசனுக்கு ஆதரவாகக் களம் இறங்கிப் பிரச்சாரம் செய்தனர். உங்கள் தாயார் சிவாஜி பக்கம் நிற்க, நீங்களோ உங்கள் ஆசான் எம்.ஜி.ஆர். பக்கம்!

அப்போதுதான் காங்கிரசுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஜெமினி பட அதிபர் எஸ்.எஸ். வாசனை அணுகி, தங்களுக்கு ஒரு பிரச்சார படத்தினைத் தயாரிக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். பிப்ரவரி மாதம் தேர்தல் என்பதால், ஜனவரியில் அவசரமாக ஜெமினி அந்தப் படத்தினைத் தயாரித்தது. சிவாஜியும் பத்மினியும் இரவு பகலாக படத்தில் நடித்துக் கொடுத்தனர். படத்தின் பெயர், ‘வாழ்க நம் தாயகம்’. இந்த படத்தின் கலைஞர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சிக்கு சற்று நம்பிக்கை வந்தது.

தேர்தலுக்கு முன்பாக காமராஜருக்கு சிறு விபத்து. படுக்கையில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூற, வேறு வழியின்றி படுக்கையில் இருந்து அறிக்கை ஒன்றை விட்டார். ‘‘நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்...’’ என்கிற புகழ்பெற்ற வாசகத்தை அப்போதுதான் அறிவித்தார்.

தேர்தல் களம் சூடு பிடித்த வேளையில், நீங்கள் மருத்துவமனை சென்று எம்.ஜி.ஆரை பார்த்தீர்கள். ‘‘தேர்தலில் திமுகவின் முதல் வெற்றி உறுதியாகிவிட்டது. அது நீங்கள் போட்டியிடும் பரங்கிமலைத் தொகுதி’’ என்று எம்.ஜி.ஆருக்கு உற்சாகம் அளித்தீர்கள்!

அந்த நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். காமராஜருக்கு எதிராக ஏதோ சதி செய்தார். எனவேதான் எம்.ஆர். ராதா அவரை சுட நேர்ந்தது’ என்கிற புதிய கதையும் கோடம்பாக்கத்தில் பரவியது. ‘எம்.ஜி.ஆருக்கும், ராதாவுக்கும் பணத் தகராறுதான் காரணம்’ என்று மற்றொரு கதையும் பேசப்பட்டது.

உண்மையோ வெவ்வேறான சில சம்பவங் களின் தொடர் விளைவு...!

எம்.ஜி.ஆர், சரோஜாதேவி மற்றும் எம்.ஆர்.ராதா நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரும் நீங்களும் இணைந்து நடித்த ‘தாய்க்குத் தலைமகன்’ படப்பிடிப்பு மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. ‘பெற்றால்தான் பிள்ளையா’ யூனிட்டில் ஷூட்டிங் முடித்து விட்டு, ‘தாய்க்குத் தலைமகன்’ படப்பிடிப்புக்கு எம்.ஜி.ஆர். வருவார். ஒருநாள் அப்படி அவர் வந்தார்... ஏற்கெனவே சிவந்த அவர் முகம் கோபத்தில் ரத்த நிறமாய் மாறியிருந்தது....!.

- வரும் செவ்வாய்க்கிழமை தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-12-எம்ஜிஆருக்கு-அளித்த-உற்சாகம்/article9480178.ece

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! 13: எம்.ஆர்.ராதாவை சமாளிக்க யோசனை!

 

 
thumbnail_17chrgn__3119199h.jpg
 

படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரும் எம்.ஜி.ஆர். அன்று ‘தாய்க்குத் தலைமகன்’ படப்பிடிப்புக்கு வர தாமதம் ஆனது. படத்தின் கதாநாயகியான நீங்கள் ஒப்பனையை முடித்துக்கொண்டு, புத்தகம் படித்தவாறு காத்திருந்தீர்கள். அப்போது எம்.ஜி.ஆரின் கார் வர, அதிலிருந்து சற்று கோபத்துடன் இறங்கினார் அவர். ஏற்கனவே சிவந்த நிறம் கொண்ட அவர் முகம் கோபத்தில் இன்னும் செம்மையாக காட்சி தந்தது!

ஒன்றுமே பேசாமல் ஒப்பனை அறைக்கு சென்றவர் மிதமான ஒப்பனையுடன் உடனே வந்துவிட்டார். படப்பிடிப்பு இடைவேளையில் தங்கள் அருகில் வந்து அமர்ந்த எம்.ஜி.ஆர்., சற்று நேரம் அமைதி காத்தார். நீங்கள் தாமதத்திற்கு காரணம் கேட்கவில்லை. அவரிடம் போய் யார் காரணம் கேட்க முடியும்? ஆனால் அவராகவே தாமதத்துக்கான காரணத்தை உங்களிடம் சொன்னார்.

‘‘அம்மு... ‘பெற்றால்தான் பிள்ளையா’ படப்பிடிப்பில் சூழ்நிலை சரியில்லை. ராதா அண்ணனின் நடவடிக்கைகள் எரிச்சலைத் தருகின்றன. படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். எல்லாவற்றுக்கும் இடக்கு மடக்காக பதில் தருகிறார். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவரால்தான் இன்று தாமதம் ஆகிவிட்டது’’ என்று உங்களிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.!

‘‘அதனால் என்ன, பரவாயில்லை...’’ என்ற நீங்கள் சிறிது நிறுத்தி, ‘‘அவரிடமே பேசிப் பார்ப்பதுதானே...’’ என்று கூறினீர்கள். பொதுவாகவே அப்போது பேசப்பட்ட ஒரு விஷயம்...

பெரியாரிடம் இருந்து பிரிந்து போன அண்ணாவின் தலைமையிலான தி.மு.க. மீது பெரியாருக்கும் அவர் சீடர்களுக்கும் வருத்தம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5, 1967, அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரியார் பகிரங்கமாக காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தார். பெரியாரின் சீடரான எம். ஆர். ராதாவுக்கும் காமராஜ் மீது தனிப்பட்ட மரியாதை இருந்தது. தி.மு.க. வின் முக்கிய புள்ளியான

எம்.ஜி.ஆரை அதனாலேயே படப்பிடிப்பின் போது ராதா சீண்டிப் பார்த்தார் என்று அப்போது கூறப்பட்டது.

கேள்விப்பட்டதைச் சொல்லி, ‘‘இதுதான் பிரச்சினையாக இருக்குமோ..?’’ என்று நீங்கள் கேட்டபோது, எம்.ஜி.ஆர். அதை மறுத்தார். ‘‘ராதா அண்ணன் தொழிலுக்கு மரியாதை தருபவர். அரசியலை தனிப்பட்ட பிரச்சினையாக ஆக்கமாட்டார்’’ என்றார்.

என்னருமை தோழி...!

அன்று இரவு உங்கள் தாயுடன் நீங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, எம்.ஆர். ராதாவைப் பற்றிக் கேட்டீர்கள். ‘‘ராதா அண்ணன் எப்படிப்பட்டவர்?’’ என்று. உங்களின் தாய் மட்டுமின்றி, உங்களுக்கு மூத்த தலைமுறை நடிகையான சந்தியா, ‘‘மிகவும் திறமையுமானவர் அவர். ஆனால், மனதில் பட்டதை பேசிவிடும் குணம் உடையவர். ஒன்றைச் ‘செய்யாதே’ என்று யாராவது அவரிடம் கூறினால், அதைச் செய்துவிட்டுதான் மறு காரியம் பார்ப்பார். ‘செய்யாதே’ என்று சொன்னவரிடமே போய், ‘செய்து முடித்து விட்டேன்’ என்று கூறுவார்’’ என்று எம்.ஆர்.ராதாவின் அதிரடியான குணத்தைப் பற்றிக் கூறினார்.

மறுநாள் சின்னவரிடம், புதிய உத்தியைக் கையாளும்படி ஒரு யோசனை சொன்னீர்கள். ‘‘ராதா அண்ணன் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவதை அவரிடம், ‘செய்யாதே’ என்று சொல்லிப் பாருங்களேன்’’ என்றீர்கள்! எம்.ஜி.ஆரும், ‘பெற்றால்தான் பிள்ளையா’ தயாரிப்பாளர் வாசுவிடம், ‘‘நாளை படப்பிடிப் புக்கு மதியத்திற்கு மேல்தான் வரமுடியும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். ராதாவுடன் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்ததால், ‘‘ராதாவையும் மதியத்திற்கு மேல் வரச்சொல்லுங்கள்’’ என்று சொல்லி வைத்தார்.

ஆனால் மறுநாள் காலையிலேயே படப்பிடிப்பு அரங்கில் எம்.ஜி.ஆர். ஆஜர்! அரங்கிற்கு சென்று ஒப்பனை செய்து கொள்ளத் துவங்கினார். திடீரென்று அங்கு வந்த ராதா, தயாரிப்பாளரான வாசுவிடம் தன்னால் அன்று மதியம் வர முடியாது என்றும், இப்போதே படப்பிடிப்பை வைத்து கொள்ள வேண்டும் என்றும் சொல்ல...

எம்.ஜி.ஆரும் மனதுக்குள் சிரித்தபடி, ‘‘நான் ரெடி’’ என்றபடி ஒப்பனை முடிந்து வெளியே வந்தார். ராதா, இதனை எதிர்பார்க்கவில்லை!

அன்று படப்பிடிப்பு நடைபெற்றாலும், இருவரிடையே இணக்கமில்லை. தயாரிப் பாளர் வாசு, எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டை சிரமப்பட்டு வாங்கியிருந்தார். எம்.ஆர். ராதாவிடம் கடன் வாங்கித்தான் படம் எடுத்தார். ராதாவையும் விட்டு கொடுக்க முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தார் வாசு.

ஒரு வாரம் ‘ஷூட்டிங்’ சரியாக நடந்தது. பின்பு மீண்டும் பிரச்சினை. ஸ்கிரிப்டில் இடம்

பெறாத வசனங்களைப் பேசுவதும், தனது உடல் மொழியால் சக நடிகர்களை நையாண்டி

செய்வதுமாக இருந்தாராம் எம்.ஆர்.ராதா!

இதனால் ‘மூட் அவுட்’ ஆன எம்.ஜி.ஆர். பலமுறை அதன் எதிரொலியாக ‘தாய்க்குத் தலைமகன்’ படப்பிடிப்பை ஒத்தி வைத்தார்.

இறுதியில் ஒருநாள் எம்.ஜி.ஆர், ‘‘ராதா வுடன் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்கலாம்’’ என்று வாசுவிடம் சொன்னார். படங்களில் ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் (தொகுதி மறுசீரமைப்பில் இப்போது அந்தத் தொகுதி இல்லை) வேறு எம்.ஜி.ஆர். போட்டியிட்டார்!

ராதாவுக்கும் தனக்கும் பிரச்சினை என்பது தேர்தல் நேரத்தில் பத்திரிகைகளுக்குத் தெரிந்து,

அதனால் பரபரப்பு ஏற்பட வேண்டாம் என்றும், அவருடன் சமரசமாக போவதே நல்லது என்றும்

எம்.ஜி.ஆர். நினைத்தார் போலும். ஜனவரி 12. மாலை நான்கரை மணிக்கு

எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட் டத்து வீட்டுக்கு ராதாவுடன் வாசு சென்றார். அப்போதுதான், எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு தானும் சுட்டு கொண்டார் ராதா. அவர் கையில் ஒரு துணிப்பையை உடன் கொண்டு வந்ததாக, வாசு பின்னர் சாட்சியம் கூறி யிருந்தார். அதில்தான் ரிவால்வரை ராதா வைத்திருந்தார் என்று கூறப்பட்டது.

எம்.ஜி.ஆர். பிழைத்துக் கொண்டாலும் ‘இனி அவரால் பேச முடியாது, நடிக்க முடியாது’ என்கிற தகவல்கள் காட்டுத் தீ போல கோடம்பாக்கத்தில் பரவியது. தேர்தல்

முடிவுகள் வந்தன. காங்கிரஸ் கட்சி படு

தோல்வி அடைய, அண்ணாவின் ஆட்சி

அமைந்தது. சுமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் பரங்கிமலைத் தொகுதி

யில் எம்.ஜி.ஆர். ஜெயித்தார். எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அவர் சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும் தகவல் பரவியது.

என்னருமை தோழி...!

‘அரச கட்டளை’ மற்றும் ‘காவல்

காரன்’ படங்களில் அப்போது உங்களை

எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்திருந்தார். அதுவரை எம்.ஜி.ஆர். படங்களில்தான் நீங்கள் அதிகம் நடித்துக் கொண்டிருந்

தீர்கள். ‘இனி அவர் நடிக்கப்போவதில்லை’ என்று வெளியான தகவல்களால், இந்த படங்கள் எடுக்கப்படும் என்கிற நம்பிக்கை உங்கள் தாய்க்கு இல்லை.

‘‘இனிமேல் சின்னவர் (எம்.ஜி.ஆர்.) நடிக்கப் போவதில்லை என்கிறார்கள். என் நண்பரான சிவாஜி கணேசன்கிட்டே நான் பேசறேன். நீ அவரோடு இனி நடிக்கலாம் அம்மு...’’ என்று உங்கள் தாய் சொல்ல, ‘‘சின்னவரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம். அம்மா’’ என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

இதுபற்றி எம்.ஜி.ஆர். என்ன நினைப்பாரோ என்கிற கவலையுடன்தான் நீங்களும், உங்கள் தாயும் அவரைச் சந்தித்தீர்கள். பரங்கிமலைத் தொகுதியில் வெற்றி பெற்ற

தற்காக எம்.ஜி.ஆருக்கு வாழ்த்து சொன்ன தும், ‘‘நீ சொன்னபடியே நடந்து விட்டது அம்மு’’ என்றார் எம்.ஜி.ஆர்.!

தொடர்ந்து, ‘‘அம்மு... சரோஜாதேவியின் அம்மா ருத்ரம்மா வந்து பெரிய குண்டை தூக்கி போட்டுட்டாங்க. என்ன செய்யறதுன்னு தெரியலை...’’ என்று எம்.ஜி.ஆர். சொல்ல, நீங்களும், உங்கள் தாய் சந்தியாவும் என்னவென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டீர்கள்!

- தொடர்வேன்

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-13-எம்ஆர்ராதாவை-சமாளிக்க-யோசனை/article9485015.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..!-14: அண்ணாவிடம் ஆசி!

 

 
‘காவல்காரன்’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆர்.எம்.வீரப்பன், படத்தின் இயக்குநர் ப.நீலகண்டன், ஜெயலலிதா | படம் உதவி: ஞானம்
‘காவல்காரன்’ திரைப்படத்தின் வெற்றிவிழாவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆர்.எம்.வீரப்பன், படத்தின் இயக்குநர் ப.நீலகண்டன், ஜெயலலிதா | படம் உதவி: ஞானம்
 
 

ரோஜா தேவியின் தாய் அப்படி என்ன குண்டைத் தூக்கிப் போட்டார் என்று புரியாமல் நீங்களும் உங்கள் தாயும் நிற்க... ‘அரச கட்டளை’ படத்தின் சில காட்சிகளை எம்.ஜி.ஆர். சுடப்படுவதற்கு முன்பே எடுத்திருந்தார்கள். அதில் ஒரு கதாநாயகியாக சரோஜா தேவியும் நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆரின் உடல்நலம் விசாரிக்க வந்திருந்த சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மா, தன் மகளுக்குத் திருமணம் பேசி முடித்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் சொல்லி இருக்கிறார்! இனி அவர் ‘அரச கட்டளை’யில் நடிப்பது கஷ்டம் என்பதாகவும் கூறி இருக்கிறார்.

‘‘அம்மு, நான் தொடர்ந்து நடிக்கணும்னு முடிவு எடுத்திருக்கும் நிலையில், ருத்ரம்மா இப்படி சொல்லிட்டு போய்ட்டாங்க. என்ன ஆனாலும் சரி. நம்ம ஒப்பந்தப்படி ‘அரச கட்டளை’, ‘காவல்காரன்’ படங்களை எடுத்து முடிச்சுடணும்...’’ என்று தீவிர உறுதியுடன் எம்.ஜி.ஆர். சொல்ல, சிவாஜி கணேசனுடன் நடிக்கும் எண்ணத்தை நீங்கள் கைவிட்டீர்கள்!

எம்.ஜி.ஆர். நன்கு குணமானாலும் அவரால் உடனடியாக இயல்பாகப் பேச முடியவில்லை. அதனால், மீண்டும் நடிக்க வந்த அவருக்கு ‘அரச கட்டளை’ படப்பிடிப்பில் வசனம் தரப்படாமல் ஒரு கத்திச்சண்டை காட்சியும், அவர் மகுடம் சூட்டிக் கொள்வது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த பொதுத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்து அண்ணா முதல்வராகியிருந்தார். உடல் நிலை குணமாகி மீண்டும் நடிக்கத் துவங்கிய நாளில், உங்களையும் அழைத்துக்கொண்டு அண்ணா விடம் சென்று ஆசி பெற்றார் எம்.ஜி.ஆர்.!

ந்நிலையில், சரோஜா தேவி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருப்பதால், இனி அவருடன் நடிப்பதாக இல்லை என்றும் இதர நடிகர்களுடன் நடிக்க போவதாகவும் கூறியிருந்தார். திருமணம் செய்து கொண்டு நடிப்புத் துறைக்கு முழுக்கு போடப்போவதாக அவரது தாய் சொல்லி இருக்க... இந்தப் பேட்டியைப் பார்த்து படத்தின் இயக்குநரும், எம்.ஜி.ஆரின் அண்ணனுமான எம்.ஜி.சக்ரபாணி வருத்தமுற்றார்.

‘‘சரோஜா தேவி கதாபாத்திரத்தை ‘அரச கட்டளை’ படத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லையே’’ என்று குழப்பத் துடன் அவர் சொல்ல, எம்.ஜி.ஆர். ஆலோசித்தார். 9 ஆண்டுகளுக்கு முன் ‘நாடோடி மன்னன்’ படத்தின்போது நடந்த சம்பவங்கள் அவர் நினைவில் நிழலாடின. தானே தயாரித்து, இயக்கி, நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் தன் விருப்பத்துக்கேற்ப சில காட்சிகளை எம்.ஜி.ஆர். மீண்டும் மீண்டும் மாற்றி எடுத்தார். அது கதாநாயகியாக நடித்த பானுமதிக்குப் பிடிக்கவில்லை.

இதனால், இருவருக்கும் இடையே சில பிரச்சினைகள் எழுந்தன. இனியும் பானுமதியுடன் நடிக்க முடியாது என்ற முடிவுக்கு எம்.ஜி.ஆர். வந்தார். பானுமதியும் படத்திலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்தார். பின்னர், படத்தில் வில்லன் நம்பியாரால் கத்தியால் குத்தப்பட்டு பானுமதி இறந்து விடுவது போல கதையின் காட்சிகளை மாற்றி... சரோஜா தேவியை முக்கிய கதாநாயகியாக ஆக்கிவிட்டார் எம்.ஜி.ஆர்.!

பானுமதி வரும் காட்சிகள் வரை ‘நாடோடி மன்னன்’ படம் கறுப்பு வெள்ளையில் இருக்கும். கதையின்படி, கன்னித் தீவு என்ற இடத்தில் இளவரசி ரத்னாவாக வரும் சரோஜா தேவி இருப்பார். அவரைத் தேடி கன்னித் தீவுக்கு எம்.ஜி.ஆர். வரும் காட்சியில் இருந்து படம் வண்ணத்தில் இருக்கும்.

‘அரச கட்டளை’ படத்தில் மேற்கொண்டு நடிக்க சரோஜா தேவிக்கோ விருப்பம் இல்லை. பார்த்தார் எம்.ஜி.ஆர்.! ‘நாடோடி மன்னன்’ படத்தில் செய்தது போல, ‘அரச கட்டளை’யில் இளவரசி அமுதாவாக வரும் சரோஜா தேவி பாத்திரம் கொல்லப்படுவது போல கதையை மாற்றிவிட்டார். மோஹனா என்கிற கதாபாத்திரமாக வரும் அம்முவை முக்கிய கதாநாயகியாக மாற்றி பிரச்சினைக்கு எம்.ஜி.ஆர். தீர்வு கண்டார்!

ன்னருமை தோழி...!

அதைத் தொடர்ந்துதான், சரோஜா தேவி ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகி இருந்த இரு படங்களில் (ரகசிய போலீஸ் 115, அடிமைப் பெண்) இருந்தும் அவர் வேறு வழியில்லாமல் நீக்கப்பட்டார். ‘அரச கட்டளை’ திரைப்படம் 1967-ல்

மே மாதம் 19-ம் தேதி அன்று ரிலீஸ் ஆனது. ஆட்சிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட அந்தப் படம், காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக ஆட்சி அமைந்துவிட்ட நிலையில், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் ‘கலைச்செல்வி’ என்கிற பட்டத்துடன் தமிழ் திரையுலகின் முடிசூடா அரசியாக அடுத்தடுத்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினீர்கள்.

‘காவல்காரன்’ படப்பிடிப்பு துவங்கியபோது, தயாரிப்பாளர் சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் இயக்குனர் ப.நீலகண்டன் இருவரும் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்தார்கள். ஷூட்டிங் நடைபெற்ற சத்யா ஸ்டூடியோ அரங்கில் எம்.ஜி.ஆர். நுழைந்ததும் கவிஞர் வாலி இயற்றி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த ‘‘நினைத்தேன் வந்தாய்..நூறு வயது...’’என்ற இன்ப மயக்கம் தரும் இனிமையான பாடல் சூழலுக்கேற்ப பொருத்தமாக ஒலித்தது. எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு குணமாகி மீண்டும் நடிக்க வந்த எம்.ஜி.ஆருக்கு இந்த உணர்ச்சிமயமான வரவேற்பு!

படத்திற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் ‘மனைவி’. ஆனால், எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டி ‘காவல்காரன்’ என்று மாற்றப்பட்டது. படம் ‘சூப்பர் ஹிட்’ ஆனது. இலங்கையில் வெள்ளி விழா கொண்டாடியது, ‘காவல்காரன்’ உங்களுக்கும் மிகவும் பிடித்த படம்.

படப்பிடிப்பின்போது, உங்கள் கதாபாத்திரத்தின் பெயரான, ‘சுசீலா’ என்பதை எம்.ஜி.ஆர். சரியாக உச்சரிக்க முடியாமல் துன்பப்பட்டதை, கண்கூடாக பார்த்து நீங்கள் வேதனைப்பட்டீர்கள். திரையரங்குகளில் அவர் உச்சரிப்பைக் கேட்டு ரசிகர்களோ கண்ணீர் விட்டனர்.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில் முதல்வராக இருந்த அண்ணா கலந்து கொண்டார். ‘காவல்காரன்’ படத்தின் நாயகியான நீங்கள் அண்ணாவின் கரங்களால் விருது பெற்றீர்கள்!

டுத்த படம், தங்களுக்கு இன்னும் பெரிய பெயரை பெற்றுக் கொடுத்த, ‘ரகசிய போலீஸ் 115’. சரோஜா தேவியை வைத்து எடுத்திருந்த பகுதிகள் நீக்கப்பட்டு, உங்களை வைத்து புதிதாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பி.ஆர்.பந்துலு தயாரித்து, இயக்கி வண்ணத்தில் வெளியான ‘ரகசிய போலீஸ் 115’ படமும் பெரும் வெற்றி பெற்றது.

அந்தப் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வந்தார் ஒரு நடிகை. அந்த நடிகையைப் பார்த்ததும் சற்றே வியப்படைந்தீ்ர்கள். தமிழ்த் திரையில் உங்களுடன் அறிமுகமானவர் அவர். திரையுலகில் உங்களுக்கு போட்டியாக இல்லாவிட்டாலும், பின்னாளில் உங்களை எதிர்த்து தேர்தல் களத்தில் போட்டியிட்டவர் அந்த நடிகை...!

- தொடர்வேன்

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி14-அண்ணாவிடம்-ஆசி/article9486460.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! - 15: போதுமோ இந்த இடம்!

 

‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா, ஜெயலலிதா.
‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா, ஜெயலலிதா.
 
 

போதுமோ இந்த இடம்!

1966-ம் வருடத்தில், நீங்கள் 10 படங்களில் நடித்திருந்தீர்கள். அவற் றில் ‘சந்திரோதயம்’, ‘தனிப்பிறவி’ ஆகிய இரண்டில் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தீர் கள். தங்களுடன் ஜோடியாக நடிக்கத் தயாராக இருந்த சிவாஜி கணேசனுக்கு நீங்கள் மகளாக ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நடித்தீர்கள்! அந்த வருடம் மீதி ஏழு படங்களிலும், ரவிச் சந்திரன், ஜெய்சங்கர் மற்றும் எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் நடித்திருந்தீர்கள்.

இப்படி நேரும் என்று சிவாஜி கணேசனே எதிர்பார்த்திருக்கமாட்டார். இருப்பினும் அவர் சந்தியாவிடம் ‘‘இப்போதும் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடிக்கத் தயார்’’ என்று சொல்லி இருந்தார். ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் தாங்கள் முக்கிய கதாநாயகியாக இருந்தாலும், தங்களுடன் ‘வெண்ணிற ஆடை’யில் அறிமுகமான நிர்மலா, இந்த படத்தின் இரண்டாவது நாயகி. எம்.ஜி.ஆருடன் பாடல் காட்சி வேறு எடுக்கப்பட்டு, அதை கண்டு தாங்கள் வெறுப்புறுவது போல் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ‘என்ன பொருத்தம்’ பாடல் மூலம் தகராறு நடைபெறுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.

உங்களுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏதோ பிரச்சினை என்றும், அதனால்தான் இரண்டாவது கதாநாயகி யாக நிர்மலா அறிமுகம் ஆனார் என்றும் அப்போது சில பத்திரிக்கை கள் எழுதின. 1966-ல் ரவிச்சந்திரனுடன் நீங்கள் மூன்று படங்களில் நடித்தி ருக்க, 1967-ம் வருடம் வெளியான ராமண்ணாவின் படமான ‘நான்’ சூப்பர் ஹிட் ஆனது.

நீங்கள் ரவிச்சந்திரனுடன் அதிக படங்கள் நடிக்க ஒப்பந்தம் ஆனதால்தான், ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் உங்களுடைய முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என்றெல்லாம்கூட கூறப்பட்டது. அதேசமயம், ‘நான்’ படத்தின் முழு வெற்றிக்கும் தாங்களே காரணம் என்பதை படம் பார்த்த அனைவருமே ஒப்புக்கொண்டிருந்தனர். டி. ஆர். ராமண்ணா அந்த படத்தில் உங்களது திறமைகள் முழுவதும் வெளிப்படும்படி இயக்கி இருந்தார்.

ன்னருமை தோழி...!

1961-ல் வெளியான ‘கம் செப்டம்பர்’ என்ற ஆங்கிலப் படம், உங்களை மிகவும் கவர்ந்திருந்தது. குறிப்பாக அதன் டைட்டில் ‘தீம்’ பாட்டை எப்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பீர்கள். தங்களுக்கு தெரியாத வித்தை கிடையாது கே.ஜே சரஸாவிடம் பரதநாட்டியம், வேம்பட்டி சின்னசத்யமிடம் குச்சிப்புடி, கதக், மணிப்புரி, மோஹினியாட்டம் எல்லாமே பயின்று இருந்தீர்கள். கர்னாடக இசை மட்டுமல்லாமல் மேற்கத்திய இசையை பியானோவில் வாசிக்கவும் தெரியும் உங்களுக்கு!

வீட்டில் ‘கம் செப்டம்பர்’ இசையை நீங்கள் பியானோவில் இசைக்க, உங்கள் தோழிகள் நடனமாடுவார்கள். ‘நான்’ பட ஷூட்டிங்கில் ஒருநாள் இயக்குநர் ராமண்ணா, தாங்கள் பாடுவதைக் கேட்டு, ‘அம்மு...நீ பாடற டியூன் நல்லாயிருக்கே...என்ன பாட்டு இது..?’ என்று கேட்க, நீங்களும் சொன்னீர்கள். இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தியிடம் அந்த பாட்டை தமிழுக்கேற்றபடி ‘டியூன்’ போடச் சொன்னார் ராமண்ணா. ‘வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே...நீ மறந்தால்..நான் வரவா..’என்று எல்.ஆர்.ஈஸ்வரியைக் கொண்டு பாடச் சொல்லி, ‘‘நாளை இந்த பாட்டுக்கு நீங்கள் ஆட வேண்டும்...’’ என்று ராமண்ணா சொன்னபோது, உங்கள் முகத்தில்தான் எத்தனை உற்சாகம்!

பாட்டின் ஒவ்வொரு வரியையும் சிலாகித்து ஆடி முடித்தீர்கள். டி.கே.ராமமூர்த்தியிடம், ‘‘ஆங்கிலப் பாட்டை மிக அழகாக ‘இண்டியனைஸ்’ செய்துள்ளீர்கள்” என்று பாராட்டவும் செய்தீர்கள். அந்த பாட்டிற்கு நீங்கள் துள்ளியாடியபோது அரங்கமே அதிர்ந்ததே!

இந்த பாட்டிற்கு மேற்கத்திய நடனம் என்றால், ‘அம்மனோ சாமியோ’ பாட்டில் உக்கிரமாக நீங்கள் ருத்ர தாண்டவம் ஆடியபோது, அரங்கத்தில் பெண் ரசிகர்களும் உங்களுடன் சாமியாடினார்களே! ‘மூன்றெழுத்து’ படத்தில், உங்களையும், ரவிச்சந்திரனையும் மரப்பெட்டி ஒன்றில் அமர வைத்து ஒரு பாடல் காட்சியை எடுத்தார் இதே ராமண்ணா.

அவருக்கு காரில், மரப்பெட்டியில், கிணற்றில், டூயட் காட்சிகளை வித்தியாசமாக எடுத்துப் பழக்கம். ‘பறக்கும் பாவை’ படத்தில் எம்.ஜி.ஆரையும் சரோஜா தேவியையும் குளியல் அறையில் வைத்து ‘உன்னைத் தானே... ஏய்.. உன்னைத்தானே...’ பாடல் காட்சியை படமாக்கியவர் ராமண்ணா. கொட்டும் மழையில், ஹெரால்ட் கார் ஒன்றினுள் உங்களையும் ரவிச்சந்திரனையும் வைத்து, ‘போதுமோ இந்த இடம்...’என்று காட்சி ஆக்கினாரே..!

பின்னாளில், நீங்கள் சட்டப் பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்றபோதெல்லாம், ‘போதுமோ இந்த இடம்’ என்று கேட்டுக் கேட்டு வாக்காளர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டதாக நான் கற்பனை செய்து கொண்டதுண்டு. இந்த என் கற்பனையை ஒருமுறை உங்களிடம் சொன்னபோது, மனம்விட்டு ரசித்து சிரித்தீர்கள்!

மொத்தத்தில்... ‘நான்’ படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த மிகப் பெரிய வெற்றிப்படமானது. 1968 ஜனவரியில் வெளியிடப்பட்ட ’ரகசிய போலீஸ் 115’ படமும் வெற்றிப் படம்தான் என்றாலும், எம்.ஜி.ஆருக்கும் தங்களுக்கும் இடையே ஏதோ பிரச்சினை... அதனால்தான் படத்தில் உங்களிடம் ஒரு ஈடுபாடே தெரிய வில்லை என்று கிளம்பிய வதந்திகளை நீங்கள் எள்ளி நகையாடினீர்கள். ஆனால், நீங்களே சந்தேகம் கொள்ளு மளவுக்கு, ‘கண்ணன் என் காதலன்’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் சில நடவடிக்கைகள் இருந்தன...!

- தொடர்வேன்,

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-15-போதுமோ-இந்த-இடம்/article9488418.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! - 16: யுத்த நிதிக்கு கலை நிகழ்ச்சி!

 
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் மூண்டபோது, யுத்த நிதிக்காக அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் தனது நகைகளைக் கழற்றிக்கொடுக்கிறார் ஜெயலலிதா. பட உதவி: ஞானம்
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் மூண்டபோது, யுத்த நிதிக்காக அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் தனது நகைகளைக் கழற்றிக்கொடுக்கிறார் ஜெயலலிதா. பட உதவி: ஞானம்
 
 

1968 உங்கள் திரைப்பட வாழ்வில் ஒரு பொன்னான வருடம். மொத்தம் வெளியிடப்பட்ட 46 படங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் கதாநாயகியாக நடித்தவர் நீங்களே! அந்த வருடம் நீங்கள் நடித்தவை மொத்தம் 15 படங்கள். அவற்றில் எம்.ஜி.ஆருடன் எட்டு படங்களிலும், ரவிச்சந்திரனுடன் மூன்று படங்களிலும் ... சிவாஜி கணேசன் மற்றும் ஜெய்சங்கருடன் தலா இரண்டு படங்களிலும் நடித்திருந்தீர்கள்.

வருடத் துவக்கத்தில் ‘ரகசிய போலீஸ் 115’ படத்தைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் எம்.ஜி.ஆருடன் நீங்கள் நடித்த ‘தேர்த்திருவிழா’ வெளியானது. அந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது. ‘எம்.ஜி.ஆர். உங்களுடன் தொடர்ந்து நடிப்பாரா’ என்றே வெளியில் பேச்சு எழத் தொடங்கிவிட்டது.

‘கண்ணன் என் காதலன்’ படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதில் உங்களுக்கு சமமாக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் வாணிஸ்ரீயை ஒப்பந்தம் செய்தார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன். ஒருநாள், ‘கண்ணன் என் காதலன்’ பட இயக்குனர் ப. நீலகண்டன் உங்களை சந்தித்தார். ‘‘அம்மு... பட கதையில கொஞ்சம் மாற்றம். நீங்க இறந்து போயிடறீங்க...’’ என்றார்.

கதைப்படி, எம்.ஜி.ஆர். காதலிப்பது வாணிஸ்ரீயைத்தான் என்றாலும், நீங்கள் விரும்பும் எம்.ஜி.ஆருக்கு ஒரு விபத்து போல நீங்கள் மனைவி ஆகிவிடுவீர்கள். ஆனால், இறுதியில் நீங்கள் இறந்து, வாணிஸ்ரீயுடன் எம்.ஜி.ஆர். இணைகிறார். இதுதான் கதையின் போக்கு என்றால்..? ‘நாடோடி மன்னன்’ படத்தில் கதையின் நாயகி பானுமதி இறந்து, சரோஜா தேவியுடன் எம்.ஜி.ஆர். இணைவாரே?... ‘அரச கட்டளை’யில், சரோஜா தேவி பாத்திரம் இறந்து, எம்.ஜி.ஆர். தங்களுடன் சேருவாரே?... அதே மாதிரி, ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் நீங்கள் இறந்து வாணிஸ்ரீயுடன் எம்.ஜி.ஆர். இணைகிறார் என்றால்...?

அடுத்து உருவாகும் எம்.ஜி.ஆரின் படங்களில் கதாநாயகி வாணிஸ்ரீயா? யோசனை யிலும் குழப்பத்திலும் ஆழ்ந்தாலும், ‘‘சரி!’’ என்று சொல்லி அந்த முடிவுக்கு இயக்குநரிடம் ஒப்புக்கொண்டீர்கள். அன்று இரவு இதுபற்றி உங்கள் தாய் சந்தியாவிடம் கூறினீர்கள். ‘‘அம்மா! நான் யாருடன் வேண்டுமானாலும் இனி நடிக்கலாம். நீங்கள் வெகு நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த சிவாஜி கணேசன் சாருடன் நடிக்கத் தயார்’’ என்றீர்கள்.

சந்தியாவும் மறுநாளே சிவாஜி கணேசனை சந்தித்து தன் மகள் அவருக்கு ஜோடியாக நடிக்கத் தயார் என்றதுமே, சிவாஜி மகிழ்ந்தார். ‘‘சந்தியாம்மா..! 1965-ல் நட்சத்திர இரவு நடத்தினோமே... அப்போது ‘சித்ராலயா’ கோபு எழுதி நாம் நடித்த ‘கலாட்டா கல்யாணம்’ நாடகம் நினைவு இருக்கா..?’’ என்று சிவாஜி கேட்க, சந்தியாவும் தலையசைத்து ஆமோதித்தார். அந்த நாடகத்தில் சந்தியாவும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க உள்ளதாக சிவாஜி கணேசன் சொன்னார். சந்தியா உங்களிடம் இதைச் சொன்னபோது, நீங்களும் மகிழ்ச்சியுடன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள். காரணம், அந்த நாடகத்தை ஒட்டி நிகழ்ந்த சிலிர்ப்பான ஒரு நிகழ்வு....!

என்னருமை தோழி...!

1965-ல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் யுத்தம் மூண்டபோது, சிவாஜி கணேசன் தலைமையில் திரைப்படத்துறையினர் கூடி, தமிழக நகரங்களில் நட்சத்திர இரவுகளை நடத்தி, அந்த வசூலை ராணுவ வீரர்களுக்கு நிதியாகத் தர முடிவு செய்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனின் மெல்லிசை நிகழ்ச்சியோடு, முக்கியமான நடிகர், நடிகைகளை வைத்து ஒரு நாடகமும் அரங்கேற்றினால், நல்ல கூட்டம் வரும் என்று சிவாஜி கணேசன் நினைத்தார். உடனே, எனது தந்தை ‘சித்ராலயா’ கோபுவை அழைத்து, புதிதாக ஒரு கதை எழுதித் தரும்படி கேட்டார். இரண்டே நாட்களில் கோபு ஒரு நாடகத்தை தயார் செய்தார். அதுதான், ‘கலாட்டா கல்யாணம்’!

நட்சத்திர இரவின் மூலம் நிதி குவிந்தது. அப்படிக் குவிந்த நிதியினை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் அளிப்பது என்றும், ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கலைக்குழுவினர் எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்கள் முன்பாக நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை மகிழ்விக்கவும் முடிவு செய்யப்பட்டது. கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

1965 செப்டம்பர் 25. காமராஜர் வீட்டுக்குச் சென்று ஆசி வாங்கிய பின் இந்தக் குழுவினர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி போய்ச் சேர்ந்தனர். பஞ்சாபின் அலவாரா பகுதியில் கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள். பாகிஸ்

தான் எல்லையோரத்தில் இந்த பகுதி இருந்தது. சிவாஜி கணேசனும், நடிகர் கோபால கிருஷ்ணனும் வீரபாண்டிய கட்டபொம்மன் - ஜாக்சன் துரையாக நடித்து காட்டி னார்கள். பத்மினி மீரா பஜனுக்கு நடனம் ஆடினார்.

நீங்கள், ‘வெண்ணிற ஆடை’ படத்தில் இடம்பெற்ற ‘என்ன என்ன வார்த்தைகளோ...’ பாடலுக்கு நடனம் ஆடினீர்கள். இயக்குநர் ஸ்ரீதர் எழுதிய ‘நவீன சகுந்தலை’ நாடகத்தை ஜெமினி, சாவித்ரி, தேவிகா நடித்துக் காட்டினார்கள். ‘சித்ராலயா’ கோபுவின் ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தில் அனைவருமே நடித்தனர். பி. சுசீலா பக்திப் பாடல்களைப் பாடினார். ‘நவராத்திரி’ படத்தில் வரும் தெருக்கூத்து காட்சியில் மேடையில் சிவாஜி கணேசன்-சாவித்ரி நடித்தனர். ராஜசுலோச்சனா நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண் வேடத்தில் நடனம் ஆடினார்.

இந்தக் கலை நிகழ்ச்சிகள், உதாம்பூர், ஜலந்தர் போன்ற நகரங்களிலும் நடந்தன. கடைசியாக டெல்லி திரும்பியதும் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்ற குழுவினர், அவருக்கு முன்பாகவும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அப்போது தாங்கள் கூறிய அந்த சம்பவம் என்னை திகைப்பில் ஆழ்த்தி விட்டது...!

ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் நின்றிருந்தனர். ஜனாதிபதிக்கு முன்பாக பி.சுசீலா, ‘கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல...’ பாடலை, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடினார். நீங்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடினீர்கள். அதன் பிறகு பத்மினி பாம்பு நடனம் ஒன்றை ஆடினார்.

பின்னர், நடிகர் சந்திரபாபு பாட்டுப் பாட வந்தார். ‘பிறக்கும் போதும் அழுகின்றான்... இறக்கும் போதும் அழுகின்றான்...’’ என்ற பாடலை சந்திரபாபு பாட, ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் உருகிப் போனார். ‘அற்புதம்’என்று தனது கையைத் தட்டி அவர் சந்திரபாபுவை பாராட்டினார்!

அப்போது... சந்திரபாபு செய்த துணிகரமான அந்தச் செயல் பற்றி திகைப்பும்,சிரிப்புமாக நீங்கள் என்னிடம் வர்ணித்தது நன்றாக நினைவிருக்கிறது தோழி... சந்திரபாபுவின் அந்தச் செயல்....!

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-16-யுத்த-நிதிக்கு-கலை-நிகழ்ச்சி/article9491723.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! 17: 'ஆப்ஸ்' பெண்ணின் ஆங்கிலம்!

 
ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் ஜெயலலிதா, சந்தியா (வலது ஓரம்).
ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் ஜெயலலிதா, சந்தியா (வலது ஓரம்).
 
 

ராதாகிருஷ்ணன் "அற்புதம்" என்று தன் பாட்டைப் பாராட்டியதும். சந்திரபாபு விடுவிடுவென்று நேராக ராதாகிருஷ்ணனை நோக்கி நடந்து, சட் டென்று அவரது மடியிலேயே அமர்ந்து விட்டார்! ஜனாதிபதியின் தோளில் கைபோட்டு அணைத்து, மறு கையால் அவரது முகவாய் கட்டையை பிடித்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்து விட்டார். ‘‘நீதாண்டா கண்ணா.. நல்ல ரசிகன்..’’ என்று ராதாகிருஷ்ணனின் மடியில் உட்கார்ந்தபடியே சொல்ல, பாதுகாப்பு அதிகாரிகள் பதறிப் போய் ஓடி வந்தார்கள்.

‘‘இவன் என்ன லூசா?’’ ... சிவாஜி கணேசன் அலறியேவிட்டார்.

‘‘சந்தியா... இவரு குடிச்சிருக்காரா என்ன..?’’ பயந்து போன ராஜசுலோச்சனா கேட்டார்.

ஜெமினி கணேசன் பாய்ந்து சென்று ஜனாதிபதியின் மடியில் இருந்து சந்திரபாபுவை இழுப்பதற்கு முயன்றார். கலைக் குழுவினரின் முகத்தில் ஈயாடவில்லை.

‘‘ஹி மஸ்ட் பி எக்ஸென்ட்ரிக்!’’... அங்கிருந்த வடநாட்டு பாடகர் மன்மோகன் தாகூர் கூற, அருகில் இருந்த நீங்களோ, ‘‘நோ..நோ... ஹி இஸ் எ ஜீனியஸ். பட் வெரி எமோஷனல்...’’ என்று கூறினீர்கள்.

நல்லவேளை, சந்திரபாபு உணர்ச்சிவசப் பட்டிருப்பதை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புரிந்துகொண்டு அவரைத் தட்டிக்கொடுத்தார். பின்னர் கலைக் குழுவினர் அனைவரும், சந்திர பாபுவை திட்டித் தீர்த்தபோது, அவர் தங்களிடம் வந்து, ‘‘அம்மு! நான் செஞ்சது தப்பா? அவர் என் கலையைப் பாராட்டினார். நான் அவரது ரசிகத்தன்மையை பாராட்டினேன். இதுல..ஜனாதிபதி என்ன... குடிமகன் என்ன?...’’ என்று ஆதங்கத்தோடு கேட்க, ‘‘ஐ ஆம் ஏபிள் டு அண்டர்ஸ்டாண்ட் யூ..!’’ என்று நீங்கள் சமாதானப்படுத்தினீர்கள்.

உங்கள் முதல் ஹீரோ ‘வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமான காந்த் என்று பலரும் சொல்வார்கள். ஆனால், முதன் முதலாக கேமரா முன்பாக நீங்கள் தோன்றியது சந்திரபாபுவுடன்தான் என்பது பற்றியும் சொல்லி இருக்கிறீர்கள்!

‘நன்ன கர்தவ்ய’ என்கிற கன்னடப் படம், 1964-ல் தயாரிக்கப்பட்டது. அதில் மூன்று ஹீரோக்கள் ஒரே அறையில் தங்கி இருக்க, அதே தெருவில் வசிக்கும் விதவைப் பெண்ணாக நீங்கள் நடித்தீர்கள். உங்கள் தாய் சந்தியாவே இந்தப் படத்தில் உங்களுக்கு மாமியாராக நடித்தார்.

தமிழில் முதன் முதலாக ‘வெண்ணிற ஆடை’ வந்தபோது. இங்கேயும் விதவை வேடமா என்றுதான் முதலில் தயங்கினார் உங்கள் தாய். ‘நன்ன கர்தவ்ய’ படத்தில் நடிக்க வந்த சந்திரபாபு, நீங்களும், சந்தியாவும் தமிழில் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு, ‘‘என்ன நீங்க.. தமிழ் பேசறீங்க.. நீங்க கன்னடக் காரங்க இல்லியா..?’’ என்று கேட்க, உங்கள் தாய்... ‘‘இல்லை...நாங்க ரங்கத்து ஐயங்கார்...’’ என்று சொல்ல... வெகு விரைவில் உங்களுடன் நட்பாகிவிட்டார், சந்திரபாபு!

நீங்களும் சந்திரபாபுவும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வீர்கள். உங்களது கான்வென்ட் ஆங்கிலத்தைப் பார்த்து வியந்து போன சந்திரபாபு, ‘‘ஹேய் அம்மு! உண்மையைச் சொல்லு... நீ ஆப்ஸ் பொண்ணுதானே..? (ஆங்கிலோ இந்தியப் பெண் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்!) சும்மா.. தமிழ் பொண்ணுன்னு உடான்ஸ் உடறே! உங்கம்மா உன்னை ஆப்பக்காரி கிட்டேதான் வாங்கிருக்காங்க’’ என்றெல்லாம் கேலி செய்வார்.

அப்போது அவர் உங்களிடம் தனது ‘மிமிக்ரி’ திறமைகளைக் காட்டி சிரிக்க வைப்பது வழக்கம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் கலைக் குழு விஷயத்துக்கு வருவோம். கலைக் குழுவினர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம், நட்சத்திர இரவில் வசூலான நிதியை அளித்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், நீங்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி பிரதமரிடம் அளித்தீர்கள்! பிரதமர் தயங்க, உடன் இருந்த சந்தியா, ‘‘ஐயா... வாங்கிக் கொள்ளுங்கள்’’ என்று வற்புறுத்த, பிரதமரும் நகைகளைப் பெற்றுக் கொண்டார்.

என்னருமை தோழி...!

‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தை படமாக எடுக்க இருப்பதாக உங்கள் தாய் கூறியதும் இந்த சம்பவங்கள் எல்லாம் உங்கள் மனத் திரையில் ஓடி உங்களை நெகிழ வைத்தன. ‘கலாட்டா கல்யாணம்’ படத்தை சிவாஜி கணேசனின் சொந்த நிறுவனம் தயாரித்தது.

அதற்கென பெரிய விளம்பர உத்தியைக் கையாண்டது. ‘கனவுக் கன்னி’ ஜெயலலிதா முதல் முறையாக நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் படம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது.

‘சிவாஜி கணேசனுடன் நடிப்பது குறித்து ஏதேனும் கேட்பாரோ?’ என்கிற கவலையுடன்தான் எம்.ஜி.ஆரைப் பார்க்க உங்களை அழைத்துப் போனார் சந்தியா. ஆனால், அவர் அது குறித்து ஒன்றுமே பேசவில்லை. தனது அடுத்த படம் தொடர்பாக நேரே விஷயத்துக்கு வந்தார்.

‘‘அம்மு... எனது நூறாவது படம், ஜெமினி பேனரில் இயக்குநர் சாணக்யா இயக்கத்தில் ‘ஒளி விளக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இயக்கியவர் சாணக்யா. நூறாவது படம் என்பதால் கூடுதல் சிறப்பாக இருக்க வேண்டும். நீதான் கதாநாயகி. நேரம் கிடைக்கும்போது, சாணக்யாவிடம் கதையை கேட்டுக் கொள்’’ என்று உங்களிடம் எம்.ஜி.ஆர். கூறினார்.

ஏற்கெனவே, கையில் பத்து படங்கள், சிவாஜி கணேசன் படத்தையும் சேர்த்து. இந்நிலையில், இன்னொரு படத்துக்கு கால்ஷீட்டா? நடிக்க முடியுமா?.. யோசனையும், குழப்பமும் ஒரு பக்கம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் நூறாவது படம் என்பதால், மறுக்காமல் ஒப்புக்கொண்டீர்கள். பிறகு இயக்குநர் சாணக்யா தங்களிடம் கதை சொன்னபோதுதான் உங்களுக்கு அந்த விஷயம் தெரியவந்தது...!

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-17-ஆப்ஸ்-பெண்ணின்-ஆங்கிலம்/article9494732.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..!- 18: அன்றே கொடுத்த ஷீல்டு!

‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நாகேஷ், மனோரமா.
‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நாகேஷ், மனோரமா.
 
 

இயக்குனர் சாணக்யா தங்களிடம் ‘ஒளி விளக்கு’ படத்தின் கதையை சொன்ன போது, அந்தப் படத்தில் தங்களை விட நடிகை சௌகார் ஜானகிக்குத்தான் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் என்பதை உணர்ந்தீர்கள். ஆனாலும், எம்.ஜி.ஆரின் 100-வது படம் என்பதற்காகவும் அவரது சொல்லுக்கு மதிப்பளித்தும் அமைதியாக இருந்துவிட்டீர்கள்.

உங்கள் தாய் சந்தியாவுக்கோ கவலை. எம்.ஜி.ஆரின் ‘ஒளிவிளக்கு’ மற்றும் சிவாஜி கணேசனின் ‘கலாட்டா கல்யாணம்’ படங்களின் கால்ஷீட் தேதிகள் மோதிக் கொண்டால் என்ன செய்வது? ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் பெரிய நட்சத்திரக் கூட்டம் வேறு. சிவாஜி கணேசன், தங்கவேலு, நாகேஷ், சோ, ஏ.வி.எம். ராஜன், கோபாலகிருஷ்ணன், சுந்தரிபாய், மனோரமா, ஜோதிலட்சுமி, சச்சு மற்றும் நீங்கள் என்று எல்லாருடைய காம்பினேஷனும் தேவை. இந்தப் பக்கம் எம்.ஜி.ஆரின் படம். இடையே, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் படங் கள். எப்படியோ சமாளித்து எல்லாப் படங் களிலும் நடித்துக் கொடுத்தீர்கள்!

‘கலாட்டா கல்யாணம்’ படத்திற்காக சிவாஜி கணேசனுடன் நீங்கள் நடிக்கும் முதல் காட்சி சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது. தனது வேண்டுகோளுக்கிணங்க, எம்.ஜி.ஆர். அணியிலிருந்து தன்னுடன் நடிக்க வந்த உங்களின் வருகையைக் கொண்டாடும் வகையில் பாட்டு அமைய வேண்டும் என்று கவிஞர் வாலியிடம் சிவாஜி கணேசன் கேட்டு கொண்டார். வாலியும்... ‘‘நல்ல இடம்... நீ வந்த இடம்...’’ என்று பாடல் எழுதித் தர, உங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு பட யூனிட்டால் வழங்கப்பட்டது.

படத்தில் நீங்கள் வரும் பெரும்பகுதி காட்சி களில் ஆங்கிலத்தில் பிளந்து கட்டுவீர்கள். நுனிநாக்கு ஆங்கிலத்தில் உங்கள் நண்பரும் நடிகருமான சோ-வை ‘‘ஸ்டுபிட், இடியட், மங்கீ, கூஸ், டாமிட்’’ என்று தீட்டுவீர்கள். பிறகு காட்சி படமாக்கப்பட்டதும், அவரிடம் சென்று ‘‘ஸாரி... நீங்க தப்பா எடுத்துக்கலியே...?’’ என்று வருத்தத்துடன் கேட்பீர்கள்.

எம்.ஜி.ஆர். படங்களில் பெரும்பாலும் கண்டாங்கி சேலை, ஜிப்சி உடைகளையே அணிந்த நீங்கள், ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் நவநாகரீக உடைகளை அணியும் வாய்ப்பு கிடைத்தது. உடைகளை நீங்களே டிசைன் செய்தீர்கள். காட்சிகள் படமாக்கப் படும்போது, பல இடங்களில், ‘சித்ராலயா’ கோபுவின் நகைச்சுவை வெடிகளை தாளாமல் நட்சத்திரங்கள் சிரித்துவிட, அதனாலேயே பல காட்சிகள் ரீ-டேக் எடுக்கப்பட்டன.

இத்தனை நட்சத்திரங்களையும் அவர்களது திறமைகளை சரியாகப் பயன்படுத்தி வேலை வாங்கினார் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன். ‘எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்...’ பாடல் காட்சி, அந்த சமயம் உலகத் தமிழ் மாநாட்டுக்காக அமைக்கப்பட்ட பொருட்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. படம் சூப்பர் ஹிட் ஆனது. படம் வெளியான திரை அரங்குகள் சிரிப்பலைகளால் அதிர்ந்தன.

படம் நூறு நாட்களைக் கடந்து ஓட, படத்தின் வெற்றி விழாவை சென்னை நியூ உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் சிவாஜி கணேசன் கொண்டாடினார்.

என்னருமை தோழி...!

அப்போது எனக்கு ஏழு வயது இருக்கும். என் தந்தை கோபு வேறு ஏதோ பட வேலையாக சென்று விட்டதால், என் மூத்த சகோதரன்தான் அவருக்கான ஷீல்டை வாங்குவதாக இருந்தான். சிவாஜி கணேசன் குடும்பத்தினர் ஒருபுறம் அமர்ந்திருக்க, நீங்களும், உங்கள் தாய் சந்தியாவும் எனது தாயார் பக்கத்தில் உட்கார்ந்திருந்தீர்கள்.

படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஜம்பு (நடிகை இளவரசியின் தந்தை) உங்களை என் தாய்க்கு அறிமுகப்படுத்தினார். நீங்கள் பிஸ்தா நிறத்தில் மைசூர் சில்க் சேலை அணிந் திருந்தீர்கள். நீங்கள் பேசிக்கொண்டிருக்க, என் தாய் சிறுவனாக இருந்த என்னையும், என் சகோதரர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதுதான், நான் உங்களை முதன் முதலாக சந்தித்தது. நீங்கள்தான் என் சகோதரனிடம் வெற்றி விழா ஷீல்டை அளித்தீர்கள். பின்பு மேடையை விட்டு இருக்கைக்கு நீங்கள் வந்தீர்கள். அப்போது, நான் என் தாயிடம் அழுது தகராறு செய்வதைப் பார்த்தீர்கள். ‘என்ன விஷயம்?’ என்று என் தாயிடம் கேட்டீர்கள்.

‘‘அண்ணனுக்கு மட்டும் ஷீல்டு கொடுத் தீர்கள்... எனக்கும் வேண்டும் என்று அழு கிறான்!’’ என்று என் தாய் சொன்னதும், ‘‘அவ் வளவுதானே...” என்று சிரித்துக் கொண்டே... உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஷீல்டை எடுத்து ‘‘இதை நீ வைத்துக் கொள்!’’ என்று என் கையில் கொடுத்தீர்கள். விழா முடியும்வரை நான் உங்கள் ஷீல்டை வைத்திருந்தேன். ஒருவேளை... உங்கள் வாழ்க்கைத் தொடரை இங்கே நான் எழுதப் போவதற்கு பாராட்டாக, 1968-ம் வருடத்திலேயே எனக்கு ஷீல்டு கொடுத்து விட்டீர்களோ என்று இப்போது தோன்றுகிறது தோழி!

இந்த விழாவைப் பற்றி, 2008 ஜனவரி யில் உங்களைச் சந்தித்தபோது நினைவு படுத்தினேன். தங்களது சேலை நிறத்தைக்கூட குறிப்பிட்டு நான் சொன்னதும், வியப்பில் ஆழ்ந்து போனீர்கள்! அந்த பிஸ்தா நிற மைசூர் சில்க் சேலை உங்களது தாயாருடையது என்றும் நெகிழ்வுடன் கூறினீர்கள். வழக்க மாக, விழாக்களுக்கு சல்வார் மட்டுமே அணிந்த நீங்கள், ‘கலாட்டா கல்யாணம்’ விழாவிற்குத்தான் முதன் முதலாக சேலை அணிந்ததாகவும் கூறினீர்கள்.

பிறகு... ஜூலை 27, 1968 அன்று சிவாஜிகணேசனின் மற்றொரு படம் வெளியானது. அந்த படத்தினைப் பார்த்த நீங்கள், சிவாஜியுடன் நடிப்பதே ஒரு பாக்கியம் என்று கூறினீர்கள். அந்த படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘சிவாஜின்னா சிவாஜிதான்’’ என்று பாராட்டினார்!

- தொடர்வேன்... |

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-18-அன்றே-கொடுத்த-ஷீல்டு/article9501139.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்...! ஒரு மூச்சில் படிச்சுட்டன்....! கோ அகெய்ட் டு கொஸ்ட்டின் நவ்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! 19: நாட்டிய தாரகை!

 

 
 
‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாட்டிய நாடகத்தில் அபிநயம் செய்கிறார் கலைச்செல்வி ஜெயலலிதா.
‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாட்டிய நாடகத்தில் அபிநயம் செய்கிறார் கலைச்செல்வி ஜெயலலிதா.
 
 

சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து வியந்து அவரை எம்.ஜி.ஆர். மனதார பாராட்டிய அந்தப் படம்... ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கிய ‘தில்லானா மோகனாம்பாள்’. இந்த படம் தயாரிப்பில் இருந்தபோதே, படம் பிரம்மாண்டமாக நட்சத்திரக் கூட்டத்துடன் சிறப்பாக தயாராகி வருவதாக எம்.ஜி.ஆருக்கு தகவல் சென்றது.

அப்போதெல்லாம் திரையுலகில் ஆரோக்கியமான போட்டி நிலவும். ‘தனது படம் நன்றாக வரவேண்டும், மக்கள் ரசிக்க வேண்டும்’ என்று திரைப்படத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் கடுமையாக உழைப்பார்கள். அதனால், படங்களின் தரமும் உயர்ந்தது. மக்களுக்கும் காலத்தால் அழியாத திரைப்படங்கள் கிடைத்தன. ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்!

அந்த வகையில், ‘தில்லானா மோகனாம் பாள்’ படம் சிறப்பாக தயாராகி வருவதாக அறிந்த எம்.ஜி.ஆர்., அந்த நேரத்தில், தான் நடித்துக் கொண்டிருந்த ‘குடியிருந்த கோயில்’ படமும் பிரம்மாண்டமாக ஜனரஞ்சகமாக வரவேண்டும் என்று விரும்பினார்.

ன்னருமை தோழி...!

‘குடியிருந்த கோயில்’ படத்திற்காக நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதும், படத்தின் இயக்குநர் கே.சங்கரிடம் கதையைக் கேட்டீர்கள். அந்த கதை, 1962-ல் வெளியான இந்தி திரைப்படமான, ‘சைனா டவுன்’ கதையின் தழுவல் என்றதும், அந்த படத்தையும் பார்த்து, உங்களது கதாபாத் திரத்தை உணர்ந்து கொண்டீர்கள். அதில் நடித்த ஹீரோ ஷம்மி கபூர், உங்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர். ‘குடியிருந்த கோயில்’ படப்பிடிப்பில் ஒன்றுதலுடன் கலந்து கொண்டீர்கள்!

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத் திருந்த பாடல்களை கேட்டதும், எம்.ஜி.ஆருக்கு ஒரே உற்சாகம். ரோஷனாரா பேகம் என்கிற பெண் கவிஞர் எழுதிய ‘குங்குமப் பொட்டின் மங்கலம்... நெஞ்சம் இரண்டின் சங்கமம்’ என்ற பாட்டைக் கேட்டு உற்சாகம் அடைந்த படக்குழுவினர், படத்திற்கு ‘சங்கமம்’ என்றே பெயரிட்டிருந்தார்கள். பின்னர், அதுவே ‘இரு துருவம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிறகு எம்.ஜி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு சென்டிமென்டாகப் புகழ் சேர்க்கவும் தாயின் பெருமையை விளக்கும் வகையிலும் ‘குடியிருந்த கோயில்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது!

எம்.ஜி.ஆர். முற்றிலும் வித்தியாசமாக மாறுபட்ட இரு வேடங்களில் நடித்ததை புதுமையாக கடைசியில் ‘புரட்சி நடிகர்’, ‘மக்கள் திலகம்’ என்று டைட்டிலில் இரண்டு கார்டுகள் காட்ட முடிவானது. எல்லா பாட்டுகளுமே சூப்பர் ஹிட் ஆகும் என்பதை தனது இசை ஞானத்தால் உணர்ந்த எம்.ஜி.ஆர்., இயக்குநர் சங்கரிடம் பாடல் காட்சிகளில் விசேஷ கவனம் செலுத்தும்படி கூறியிருந்தார்.

ருநாள்... படப்பிடிப்பின் உணவு இடைவேளையில் நீங்களும் எம்.ஜி.ஆரும் பேசிக்கொண்டிருந்தபோது, இயக்குநர் சங்கர், “எம்.எஸ்.வி. இசையமைத்திருக்கும் ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்..சுகம்’ பாட்டிற்கு, நடிகை எல்.விஜய லட்சுமியை ஒப்பந்தம் செய்து விடலாமா..’’ என்று யோசனை கேட்க, எம்.ஜி.ஆரும் ‘‘அது துடிப்பும் வேகத்தையும் கொண்ட மெட்டு. அந்த பாட்டிற்கு அவர்தான் சரி..’’ என்று தனது சம்மதத்தை தெரிவித்துவிட்டார்.

அங்கிருந்த நீங்கள் “அது என்ன பாட்டு?” என்று கேட்க, எம்.ஜி.ஆர். ‘‘பஞ்சாபி பாங்க்ரா நடனம் பாணியில் எம்.எஸ்.வி. ஒரு மெட்டு அமைத்திருக்கிறார். கேட்கும்போதே ஆட வேண்டும் என்கிற எண்ணம் ரசிகர்களிடையே வரும்’’ என்று சொன்னதோடு, சங்கரிடம் சொல்லி தங்களுக்காக அந்த மெட்டினை இசைக்கச் செய்தார்.

அந்த மெட்டைக் கேட்டதுமே, ‘‘பாங்க்ரா நடனம்.. ஆண்கள்தான் ஆடுவார்கள். உத் வேகத்துடன் ஆட வேண்டிய ஆட்டம். தொடையையும் தோளையும் தட்டிக்கொண்டு ஆர்ப்பரித்து ஆடவேண்டிய ஆட்டம். இதில் விஜயலட்சுமியோடு சேர்ந்து நீங்களும் ஆடினால்தான் சோபிக்கும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் நீங்கள் கூறினீர்கள். பல்வேறு வகை நடனங்களை அறிந்திருந்த நாட்டிய தாரகையான நீங்கள் கூறியதை எம்.ஜி.ஆர். புறக்கணிக்கவில்லை. இருந்தாலும், சந்தேகத்துடன் இயக்குநர் சங்கரைப் பார்த்தார்.

‘‘நான் ஆடினால் நன்றாக இருக்குமா..?’’ என்று சங்கரிடம் கேட்க, அவர் ‘‘ஆடித் தான் பாருங்களேன்...’’ என்று சொல்லி விட்டார். குறிப்பிட்ட நாளன்று, நடிகை எல்.விஜயலட்சுமி படப்பிடிப்பு அரங்கிற்கு வந்தார். நடன ஒத்திகை துவங்கியதும், விஜயலட்சுமி அந்த பாட்டிற்கு அனாயச மாகவும், அற்புத பாவங்களோடும் ஆட, எம்.ஜி.ஆர். அவருடன் சேர்ந்து ஆடினார்.

நாடகத்தில் நடிக்கும் காலங்களில் எம்.ஜி.ஆர். நடனப் பயிற்சி பெற்றவர்தான். ‘மதுரை வீரன்’ படத்தில் பத்மினியுடன் ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா...?’, ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே....’ போன்ற பல பாடல் களில் சிறப்பாக ஆடியவர்தான். என்றாலும், நடனத்தில் சிறந்து விளங்கிய நடிகை எல்.விஜயலட்சுமிக்கு ஈடு கொடுத்து ஆட முடியுமா என்று அவருக்கு சந்தேகம்!

ஒத்திகை முடிந்து, சிறிது நேரம் கழித்து சங்கரும் நீங்களும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர்., ‘‘இது ஆகாத காரியம். விஜி (விஜயலட்சுமி) வேகத்திற்கு என்னால் ஆட முடியாது. என்னமா பந்து போல துள்ளித் துள்ளி ஆடறாங்க! என்னால அப்படி எல்லாம் செய்ய முடியும்னு தோணலை..’’ என்று கூறிவிட்டார்!

இயக்குநர் சங்கர் எம்.ஜி.ஆரை சமாதானம் செய்தார். ‘‘நீங்கள் சிரமப்பட வேண்டாம். பேசாமல் விஜயலட்சுமியை ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கூட சேர்ந்து ஆட விட்டுடுவோம்..’’ என்று சங்கர் சொல்ல, அப்போது, அவரது பேச்சை இடைமறித்து ஒலித்தது உங்களின் உறுதியான குரல்...!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-19-நாட்டிய-தாரகை/article9502681.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! 20: எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை!

 

 
‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.
‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.
 
 

இயக்குநர் சங்கரை இடைமறித்த நீங்கள், ‘‘இந்த பாட்டு, ஒரு ‘கல்ட் சாங்’ மாதிரி புகழ் பெறப் போகிறது. இதுவரை, பாங்க்ரா பாணி பாடல்கள் தமிழ் படங்களில் வந்ததே இல்லை. இந்த பாடல் நிச்சயம் உங்களுக்கு நல்ல பெயரைத் தரும். மேலும், பாங்க்ரா பாணி ஆடைகள் உங்களுக்கு பொருத்தமாக நன்றாக இருக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் உங்களால் சிறப்பாக ஆடமுடியும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் நீங்கள் வலியுறுத்தினீர்கள்.

அந்த யோசனையை அவரும் புன்முறுவ லுடன் ஏற்றுக் கொண்டார். ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்.. சுகம்.. சுகம்..’ என்கிற பாடலுக்காக எம்.ஜி.ஆர் பாங்க்ரா நடனப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அவ்வப் போது நீங்களும் வந்து, அவரது நடனத்தை பார்த்து தங்கள் கருத்தை கூறினீர்கள்.

ஒரு மாத கடுமையான பயிற்சிக்கு பிறகு எல்.விஜயலட்சுமியுடன் எம்.ஜி.ஆர். ஒத்திகை யும் பார்த்தார். தன்னுடன் போட்டி போட்டுக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆடுவதைக் கண்டதும் விஜயலட்சுமிக்கு ஒரே வியப்பு. படத்தில் அந்தப் பாடல் வந்தபோது ரசிகர்களிடையே ஒரே ஆரவாரம். ‘‘நம்ம வாத்தியார் பாங்க்ரா நட னத்தில் பட்டையை கிளப்பிட்டார்’’ என்று பூரித் தனர். பல வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட் டுக்கு உணவருந்த வந்திருந்த நடிகை எல்.விஜய லட்சுமியும், எம்.ஜி.ஆர். அந்தப் பாடலுக்காக எடுத்துக் கொண்ட பயிற்சிகள் பற்றி சிலாகித்து பேசினார். அதன் பிறகு எத்தனையோ தமிழ் படங்களில் பாங்க்ரா நடனம் இடம்பெற்றாலும் ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆரும் விஜயலட்சுமியும் ஆடிய நடனம் போல அமையவில்லை!

படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. ஆனால், 1968 வருடம் தமிழகத்தில் பெரும் போட்டி ஒன்று உருவானது. அதனால், சர்ச்சைகளும் எழுந்தன. ‘குடியிருந்த கோயில்’ பெரும் வெற்றியை பெற்று நூறு நாட்களை கடந்து ஓடியது. எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பும், உங்களின் துடிப்பான பங்களிப்பும் இனிமையான பாடல்களும் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கின.

இந்நிலையில், சிவாஜி கணேசன்-பத்மினி நடித்த, ஏ.பி. நாகராஜன் தயாரித்து, இயக்கி வெளியிட்ட, ‘தில்லானா மோகனாம்பாள்’ படம் தமிழகத்தை கடந்து இந்திய அளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அந்த படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜி கணேசனும், தில்லானா மோகனாம்பாளாக பத்மினியும், தவில் வித்வான் முத்துராக்கு பாத் திரத்தில் பாலையாவும், ஜில் ஜில் ரமாமணியாக மனோரமாவும் வெளுத்துக் கட்டினார்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படம் தமிழகத் தின் பொக்கிஷ கலைகளை, மிக அழகாக வெளியுலகிற்கு சித்தரித்துக் காட்டியது. ‘நலந்தானா?’ என்று பத்மினி பாடியபடியே கண்களால் வினவ... முகத்தின் தசைகள் துடிக்க, நாதஸ்வரம் வாசித்தபடியே கேள்விக்கு பதில் தந்த சிவாஜி கணேசனின் நடிப்பை கண்டு நெகிழ்ந்து போயினர் ரசிகர்கள். சவடால் வைத்தி பாத்திரத்தோடு நாகேஷ் ஒன்றியிருந்தார். தவில் வித்வானாக நடிக்க வேண்டும் என்பதற்காக பாலையா தவிலே கற்றுக் கொண்டார்!

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துக்காக சிவாஜி கணேசனுக்குத்தான் 1968-ம் ஆண் டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வருடத்திய தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது அறிவிப்பும் வெளியானது. சிறந்த நடிகையாக, ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியும், சிறந்த துணை நடிகையாக ‘ஜில் ஜில் ரமாமணி’ மனோரமாவும், சிறந்த துணை நடிகராக தவில் வித்வான் ‘முத்துராக்கு’ பாலையாவும் அறிவிக்கப் பட்டனர்.

சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டவர்... ‘குடியிருந்த கோவில்’ படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்த எம்.ஜி.ஆர்! இந்த அறிவிப்பு பரபரப்பினை ஏற்படுத்தியது. சிவாஜி கணேசன் காங்கிரஸுசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த தால் அவருக்கு விருது வழங்கப்படவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு கிளம்பியது. தனக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைக்கும் என்று எம்.ஜி.ஆரே எதிர் பார்க்கவில்லை. சிறந்த நடிகர் பட்டம் கிடைத் ததை எண்ணி பேரானந்தத்தில் எம்.ஜி.ஆர். திளைத்திருந்தார். ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டுக்கு அவர் ஆடிய அமர்களமான நடனம் தான் விருதுக்கு முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. உடனே, அந்தப் பாட்டுக்கு ஆடுமாறு ஆலோசனை சொன்ன உங்களை அழைத்து நன்றி தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.!

இங்கே, பின்னாளில் நடந்த ஒரு சுவையான சம்பவம். தமிழகத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆருக்குதான் விருது கிடைத்தது.

இது நடந்து 9 ஆண்டுகளுக்கு பின் மாறிவிட்ட காலச்சூழலில் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராக ஆகிவிட்டார். அவர் முதல்வராக இருந்த நேரத்தில் ஒருமுறை ரஷ்யாவில் இருந்து கலாசாரக் குழுவினர் தமிழகம் வந்தனர். அவர்களுக்கு தமிழ் திரைப்படத்தைக் காட்ட முடிவு செய்யப்பட்டது. முதல்வர் எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் நினைத்தார்களோ என்னவோ?...

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்,’ ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘குடியிருந்த கோயில்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்களை ரஷ்யக் குழுவினருக்கு காட்டலாம் என்று அவரிடமே யோசனை தெரிவித்தனர். அதை சிரித்தபடியே மறுத்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் கலை மரபை விளக்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டுமாறு பெருந்தன்மையுடன் கூறினார். அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்தனர்!

மறுபடியும் 1968-க்கு திரும்புவோம். எம்.ஜி.ஆர். மற்றும் நீங்கள் இணைந்து நடித்தாலே படம் வெற்றிதான் என்கிற பேச்சையும் ஏற்படுத்தியது ‘குடியிருந்த கோயில்’! ஆனால், நீங்களும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ‘காதல் வாகனம்’ மற்றும் ‘தேர்திருவிழா’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவாஜி கணேச னுடன் நீங்கள் நடித்த ‘எங்க ஊர் ராஜா’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

அந்தச் சமயத்தில்தான்… குடியிருந்த கோயில் படத்தின் பெரும் வெற்றி தந்த மகிழ்ச்சியில் இருந்த எம்.ஜி.ஆர், தங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் விதத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தை அறிவித்தார்….!

- தொடர்வேன்... |

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-20-எம்ஜிஆருக்கு-ஆலோசனை/article9504346.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...!- 21: ‘வாத்தியாரை பார்த்துக்கோம்மா!’

படம் உதவி: ஞானம்
படம் உதவி: ஞானம்
 
 

எம்.ஜி.ஆர். பிரம்மாண்டமான ஒரு படத்தில் உங்களை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்ததற்கு முன்பாக தேசிய அளவிலும் தமிழக அளவிலும் கவனிக்க வேண்டிய ஒரு புதிய சூழல் உருவாகி இருந்தது.

1969... இந்த வருடம்தான் இந்திய துணைக் கண்டத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழகத்தின் பெரும் தலைவரான பேரறிஞர் அண்ணா, இரண்டு வருடங்களாக முதல்வராக திகழ்ந்து, திடீரென்று இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் மூன்றாம் நாள் காலமானார்.

இதே 1969-ம் வருடம்தான், பழம்பெரும் பேரியக்கமான காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தலைமை யிலும் மூத்த தலைவர்களான காமராஜர், நிஜலிங் கப்பா மற்றும் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட தலைவர் கள் தலைமையிலும் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக் கான திட்டங்களை இந்திரா செயல்படுத்தினார்.

இந்த ஆண்டில்தான், எம்.ஜி.ஆரும் அது வரை தான் பயணித்திருந்த கலையுலக பாதையை சற்றே மாற்றி, புதிய உணர்வுகளு டனும், எண்ணங்களுடனும், தனது திரைப்படங் களை உருவாக்க நினைத்தார். படங்களின் மூலம் அதிக வீரியத்துடன் தனது கொள்கை களையும் பிரச்சாரங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல அவர் முடிவெடுத்ததும் 1969-ம் வருடத்தில்தான்.

அந்த வருடம், எம்.ஜி.ஆர். நடித்து வெளி யான முக்கியமான இரண்டு படங்களிலும் நீங்களே கதாநாயகி. பெற்றால்தான் பிள்ளையா, படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, எம்.ஆர். ராதாவினால் எம்.ஜி.ஆர், சுடப்பட, அதன் பிறகு ‘அரச கட்டளை’ படத்தில் மீண்டும் அவர் நடிக்கத் துவங்கினார். அப்போது, படப்பிடிப்பு இடைவேளையின்போது நிகழ்ந்த சில சுவையான சம்பவங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து, கூட்டம் கூட்டமாக வண்டிகளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைக் காண மக்கள் கூட்டம் வருவது வழக்கம். அம்மாதிரி மக்கள் வந்த போது, ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆரை அணைத்து, அவர் முகத்தை கையால் வழித்து திருஷ்டி சுற்றி கண்ணீர் விட்டுக் கதறினார். ‘‘ராசா! உன்னை போய் சுட்டாங்களே..!’’ என்று அந்த மூதாட்டி பாசத்துடன் அரற்றியதை வியப்புடன் நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தீர்கள்!

எம்.ஜி.ஆரைக் காண வந்த கூட்டம், உங்களுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ‘‘வாத்தியாரை பத்திரமாக பார்த்துக்கோம்மா...’’ என்று சொல்லிவிட்டுப் போனதையும் வியப் புடன் கவனித்து வைத்துக் கொண்டீர்கள். அம்மாதிரி தருணங்களில் உணர்ச்சிவசப்பட்ட எம்.ஜி.ஆரின் கண்களும் கலங்கியிருந்தன.

ஒருநாள் இதுபற்றி எல்லாம் பேச்சு வந்தபோது, எம்.ஜி.ஆரும் மிக நெகிழ்ந்திருந்த தருணத்தில், ‘‘பெருந்தலைவர் காமராஜர், ஒரு மாணவர் தலைவரிடம் விருதுநகர் தொகுதி யில், 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.. ’’ என்று நீங்கள் பேச்சு வாக்கில் சொன்னீர்கள். 1967-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைவர் காமராஜர், தி.மு.க. மாணவர் தலைவர் பி.சீனிவாசனிடம் தோற்றது பெரும் பரபரப் பினை ஏற்படுத்தியிருந்தது.

நீங்கள் இவ்வாறு கூறியதும், எம்.ஜி.ஆரின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘இந்தி எதிர்ப்பு பிரச் சாரத்தினாலோ, காங்கிரஸ் கட்சி அரிசி பஞ் சத்தை சரியாகக் கையாளவில்லை என்ப தாலோ, தி.மு.க.வுக்கு மக்கள் வாக்குகளை அள்ளித் தந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் சுடப்பட்டதால் எழுந்த அனுதாபம்தான் வெற்றிக்கு முக்கிய காரணம்’’ என்று நீங்கள் கூறியபோது எம்.ஜி.ஆர். அதனை ஒப்புக்கொள்ளவில்லை!

‘‘நீங்கள் வேண்டுமானால், உங்களைக் காண வரும் மக்களிடம் பேசிப் பாருங்கள். அவர்களது உணர்வுகளை சோதித்துப் பாருங்கள்...’’ என்று நீங்கள் விடாப்பிடியாகச் சொல்ல, எம்.ஜி.ஆரும் மக்கள் கருத்தோட்டத்தை அறிய முடிவு செய்தார். பாம்படம் போட்டு வெள்ளை நார்மடி சேலையில் வந்து இறங்கிய மூதாட்டிகளிடம், ‘‘எதற்காக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்தீர்கள்?..’’ என்று எம்.ஜி.ஆர் கேட்க, ‘‘மகாராசா! என்னய்யா இப்படி கேட்டுப்புட்டீங்க! உங்களைப் போயி சுட்டாங்களே...’’ என்று மூதாட்டிகள் எம்.ஜி.ஆரை சுற்றி நின்று கலங்கினார்கள்.

குறிப்பாக விருதுநகரிலிருந்து சிலர் வந்தபோதும், இதே கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டார்! ‘‘அவ்வளவு பெரிய தலைவரை தோற்கடிச்சுட்டீங்களே?’’ என்று அவர் வினவ, ‘‘பின்னே... உங்களைச் சுட்டுப்புட்டாங்களே.. அது தப்புனு காட்டத்தான் சூரியனுக்கு ஒட்டு போட்டோம்.! ’’ என்று பதில்கள் வந்தன.

1969-ல் பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் மு.கருணாநிதி முதல்வராகியிருந்த நேரம்... ‘அடிமைப் பெண்’ மற்றும் ‘நம் நாடு’ திரைப் படங்கள் அந்த வருடத்தில் வெளியிடப்பட்டன. குறிப்பாக ‘நம் நாடு’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கேற்ப வசனங் கள், பாடல்கள், பஞ்சாயத்து தேர்தலில் அவர் வெற்றி பெறுவது என்று அரசியல் நெடி அதிகமாக இருந்தது!

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நாவலர் நெடுஞ்செழியன்தான் சீனியாரிட்டி முறையில் முதல்வராக பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க.வின் தேர்தல் நிதிக்கு எம்.ஜி.ஆர் நன்கொடை அளிக்க முன்வந்த போது, அண்ணா அவரிடம் நிதியைப் பெற்றுக் கொள்ள மறுத்து, ‘‘தம்பி! உன் நிதி எங்கும் போய்விடாது. தேர்தல் பிரசாரத்தில் உனது முகத்தை வந்து காட்டினாலே போதும்.. தொகுதிக்கு 30,000 வாக்குகள் கிடைக்கும்’’ என்று கூறியிருந்தார். அந்த அள வுக்கு அண்ணாவின் நம்பிக்கையையும் மக்க ளின் அன்பையும் பெற்றிருந்த எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்றவரே முதல்வர் ஆக முடியும் என்கிற நிலை இருந்தது!

இதை உணர்ந்து, கருணாநிதியும் எம்.ஜி.ஆரின் ஆதரவினை நாட, அவரும் முழு மனதோடு தனது ஆதரவை கருணாநிதிக்கு அளித்தார். ஒரு சில முணுமுணுப்புக்கள் இருந்தாலும் அதையெல்லாம் சுலபமாகக் கடந்து கருணாநிதி முதல்வரானார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் குணமாகி வந்த பிறகு, ஏற்கனவே பாதியில் நின்றிருந்த ‘அடிமைப் பெண்’ பட வேலைகளை எம்.ஜி.ஆர். மீண்டும் துவக்கினார். அதுவரை எடுக்கப்பட்டிருந்த காட்சிகளில், ஜீவா பாத்திரத் தில் சரோஜாதேவி நடித்திருந்தார். நீங்களோ பவளவல்லி என்கிற அரசி பாத்திரத்தில் நடித் திருக்க, முத்தழகி என்கிற இளவரசி பாத்திரத் தில் கே.ஆர். விஜயா இடம் பெற்றிருந்தார்.

மீண்டும் புதிதாக அந்த படத்தை எம்.ஜி.ஆர். முழு மூச்சோடு தயாரிக்கத் துவங்கினார். துப்பாக்கிச்சூடு காரணமாக எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ‘இனிமேல் படங்களில் அவரால் நடிக்க முடியாது’ என்ற செய்தி பரவியது. அந்த சமயத்தில், ‘‘எம்.ஜி.ஆருடன் இனி சரோஜா தேவி நடிக்க மாட்டார்’’ என்று சரோஜா தேவியின் தாயார் அறிவித்த நிலையில், ‘அடிமைப் பெண்’ படத்தில் இருந்து சரோஜா தேவி நீக்கப்பட்டார். படத்தில் ஜீவா பாத்திரத்தை உங்களுக்கு அளித்து, தனக்கு நிகரான முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர். உங்களுக்கு ஏற்படுத்தினார்! கே.ஆர். விஜயாவையும் நீக்கிவிட்டு, ராஜயை அந்த வேடத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.

மந்திரவாதியாக சோ, மங்கம்மாவாக பண்டரிபாய் இவர்களோடு... ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், புஷ்பமாலா என்று நடிக, நடிகைகளை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தார்.

அப்போதுதான், நீங்கள் ஒரு வேண்டுகோளை எம்.ஜி.ஆரிடம் முன்வைத்தீர்கள்...!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-21-வாத்தியாரை-பார்த்துக்கோம்மா/article9507362.ece

Link to comment
Share on other sites

20 hours ago, நவீனன் said:

என்னருமை தோழி

அப்பாடா உங்கள் பதிவுகளில் எவ்வளவோ வாசிக்க இருக்கு. இன்று கிடைத்த நேரத்தில் வாசிக்க முடிந்தது இதுதான் - நன்றி நவீனன்.

 

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...!- 22: உங்களால் கிடைத்த வாய்ப்பு!

 

jayalalithaa1_3125773f.jpg
 
 
 

உங்களுடனான எனது சந்திப்புகளின் போது பெரும்பாலும், உங்களது திரைப்பட வாழ்க்கை, இலக்கியப் பணிகள் மற்றும் அரசியல் வாழ்க்கைஎன்று பல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். இடையிடையே தங்களது சிறு வயது நிகழ்வுகளையும், தங்களது ஆன்மீக நம்பிக்கைகளையும் பகிர்ந்துள்ளீர்கள். திரைப்பட உலகில் நீங்கள் நட்சத்திரமாக ஜொலித்த காலங்களே, குதூகலமும், மகிழ்ச்சியும் நிறைந்த நாட்கள் என்று பலமுறை நீங்கள் கூறியது உண்டு.

திரைப்பட உலகில் தங்களின் அனுபவங்கள் பற்றிய அரிய தகவல்களையும் தெரிவித்தீர்கள். அவை சுவையானவை மட்டுமல்ல, வெளியுலகுக்கு தெரிந்திராதவை. எனவேதான், முதலில் உங்களது திரை வாழ்க்கைக்கு இந்த தொடரில் முக்கியத்துவம் அளித்து

வருகிறேன். தங்களது அரசியல் வாழ்வை பற்றி எப்போது எழுதப்படும் என்று மின்னஞ்சல் வாயிலாகவும், தொலைபேசி மூலமும் ஏராளமான வாசகர்கள் கேட்கின்றனர்.

ராமாயணத்தில் சுந்தர காண்டம் விவரிக்கப்பட்ட பிறகுதானே யுத்த காண்டத்திற்கு போகமுடியும்? தங்களது அரசியல் யுத்த காண்டம் துவங்குவதற்குமுன், தங்களை வீழ்த்தி வனவாசம் அனுப்ப முயன்ற ஆரண்ய காண்டத்தை பற்றிக்கூட தாங்கள் விவரித்தீர்கள் அல்லவா?

இதோ தங்களது அரசியல் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தக் காரணமான ‘அடிமைப் பெண்’ திரைப்படம் பற்றி தாங்கள் கூறிய

விவரங்களுடன், தங்களது வாழ்வில் பிரச்சினைகளை உண்டாக்கிய ஆரண்ய காண்டமும் துவங்குகின்றது.

1966-ம் வருடத்தில் ‘அடிமைப் பெண்’ துவக்கியிருந்த எம்.ஜி.ஆர். பின்னர் அந்த படப்பிடிப்பினை நிறுத்திவிட்டார். கதாநாயகியாக சில காட்சிகளில் நடித்திருந்த சரோஜாதேவி திருமணம் செய்துகொண்டு சென்றது ஒரு காரணம். அதில் நடித்திருந்த நடிகை ரத்னா

படப்பிடிப்பின்போது, குதிரை ஒன்றிலிருந்து விழுந்து அடிபட்டு கொண்டதும் ஒரு காரணம். 1968-ல் மீண்டும் அந்த படப்பிடிப்பினை துவக்கிய எம்.ஜி.ஆர். முன்பு எடுத்திருந்த பகுதிகளை நீக்கி விட்டு, புதிதாக சில மாற்றங்களுடன் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். கதா

நாயகி சரோஜாதேவிக்கு பதிலாக தங்களையே ஜீவா பாத்திரத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். ஏற்கனவே, ஒப்பந்தமானபடி பவளவல்லி என்கிற அரசி பாத்திரத்தையும் தாங்களே செய்தீர்கள். ஆக, உங்களுக்கு படத்தில் இரட்டை வேடம்.

ரத்னா நடித்த பாத்திரத்தில் ஜோதி லட்சுமியை எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார். முத்தழகி பாத்திரத்தில் நடித்த கே.ஆர்.விஜயாவுக்கு பதிலாக நடிகை ராஜயை தேர்ந்தெடுத்தார். மந்திரவாதி பாத்திரத்தில் சோவை வழக்கம் போல் நடிக்க வைத்தார். அப்போதுதான், வைத்தியர் பாத்திரம் ஒன்றிற்கு யாரை போடுவது என்கிற பேச்சு எழுந்தது.

அப்போது நீங்கள், எம்.ஜி.ஆரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தீர்கள், ‘‘நடிகர் சந்திரபாபுவையே வைத்தியர் பாத்திரத்தில் நடிக்க வைக்கலாமே?’’ என்று நீங்கள் சொன்னதும் எம்.ஜி.ஆர். உங்களை உற்று நோக்கினார்.

நடிகர் சந்திரபாபுவிற்கும், எம்.ஜி.ஆருக்கும் அப்போது சுமூக உறவு இல்லாத சமயம். அவர்கள் இருவரிடையே ‘மாடி வீட்டு ஏழை’ படம் தொடர்பாக பிரச்சினை மூண்டிருந்தது. அந்த படத்தை நண்பர்களுடன் தயாரித்து, தானே அதை இயக்கிக்கொண்டிருந்தார் சந்திரபாபு.

எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவரது நடிப்பு பற்றியும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்த சந்திரபாபு தனது படத்துக்கு எம்.ஜி.ஆரையே கதாநாயகனாக போட்டார்! நாயகி, சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர் நடிகை சாவித்ரி. முதல் நாள் பட பூஜைக்கு சாவித்ரிதான் 25 ஆயிரம் ரூபாயை அளித்திருந் தார். முதல் நாள் பூஜைக்கு வந்த எம்.ஜி.ஆர். பின்னர், சில நாட்கள் சில காட்சிகளில் நடித்தார். பல படங்களில் நடித்ததால் ‘பிஸி’யாக இருந்த அவர், படப்பிடிப்பு தேதிகள் தொடர்பாக தனது ‘கால்ஷீட்’ குறித்து தன் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியிடம் பேசுமாறு சந்திரபாபுவிடம் கூறியிருந்தார்.

அந்த சமயம், சென்னை கிரீன்வேஸ் சாலை, கேசவப்பெருமாள்புரத்தில் சந்திரபாபு சொகுசு பங்களா ஒன்றை கட்டி வந்தார். 48 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட அந்த பங்களாவில் மாடியில் இருந்த தன் படுக்கையறைக்கு சாலையில் இருந்து நேராக செல்லும்படி ஒரு பாதை வேறு அமைத்திருந்தார். ‘மாடி வீட்டு ஏழை’ படத்துக்காக விநியோகஸ்தர்களிடம் வாங்கியிருந்த பணத்தையும் போட்டு பங்களா கட்டிவந்தார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்’ விஷயமாக சக்ரபாணியிடம் பேச, தனது வெளிர் பச்சை நிற பியட் காரில் சந்திரபாபு சென்றார். அங்கே சக்ரபாணியுடன் தகராறு ஏற்பட்டு அவரை நாற்காலியினால் தாக்கப் போக, நிலைமை ரசாபாசம் ஆகிவிட்டது. ‘‘அருகிலிருந்த நண்பர்கள் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். அல்லது...’’ என்று சந்திரபாபு இந்த சம்பவத்தைப் பற்றி பின்னாளில் குறிப்பிட்டார்.

நட்பு பாதிக்கப்பட்ட நிலையில், சந்திரபாபுவும் எம்.ஜி.ஆரை அணுகவில்லை. எம்.ஜி.ஆரும் அவருடன் இதுபற்றி பேசவில்லை. ‘மாடி வீட்டு ஏழை’ படம் நின்று போனது. ஆனாலும், பிறகு சந்திரபாபுவின் நிலை அறிந்து ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’ ஆகிய தனது படங்களில் சந்திரபாபுவுக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். என்றாலும், சந்திரபாபுவுக்கே உரித்தான அவரது கிண்டல், கேலிகள், இருவருக்குமிடையே இடைவெளியை உண்டாக்கின.

இம்மாதிரி சூழ்நிலையில்தான், நீங்கள் எம்.ஜி.ஆரிடம், வைத்தியர் வேடத்திற்கு சந்திரபாபுவை போடலாம் என்று கூறினீர்கள்.

எம்.ஜி.ஆர். தங்களை விசித்திரமாக பார்த்தார்.

‘‘அம்மு! பாபு என் அண்ணனை அவமதித்திருக்கிறார். அதற்காக மன்னிப்பும் கேட்கவில்லை. தொடர்ந்து என்னை அவமதிக்கும் வகையில் கருத்து கூறி வருகிறார். அப்படி யிருக்கும்போது, வைத்தியர் வேடத்தில் அவரை போடும்படி கூறுகிறாயே?....’’ என்று சற்றே வெறுப்பும் உஷ்ணமுமாகக் கூறினார்.

‘‘உணர்வுகளின் உந்துதலில் பலர் தவறுகள் செய்கிறார்கள். உங்களை துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர். ராதா மீதே உங்களுக்கு அவ்வளவு கோபம் இல்லையே. சந்திரபாபு சற்றே ஆர்வக் கோளாறினால் சில சமயம் எல்லை மீறிவிடுகிறார்...’’ என்று சொல்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது அவர் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொஞ்சியதை நீங்கள் எடுத்துக் கூறியதும்... எம்.ஜி.ஆர். சிரித்து விட்டார்.

பிறகு, ‘‘சரி.. உனக்காக, பாபுவுக்கு

மறுபடியும் ஒரு வாய்ப்பு தருகிறேன்...’’

என்று கூறி, இயக்குனர் கே.சங்கரிடம், வைத்தியர் வேடத்திற்கு சந்திர

பாபுவை ஒப்பந்தம் செய்யச் சொன்னார். அதைக் கேட்டதும், சந்திரபாபுவுக்கே ஆச்சரியம். படப்பிடிப்பில் உங்களால்தான் அந்த வாய்ப்பு தனக்கு கிட்டியது என்பதை அறிந்து உங்களுக்கு நன்றி சொல்ல வந்தபோது, நீங்கள் அவருக்கு எச்சரிக்கை செய்தீர்கள்.

‘‘பாபு! நாம் நல்லதை நினைத்துக்

கொண்டு பேசும் பேச்சு, செய்யும் செயல் ஆகியவை சில நேரம், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிடும். பிறகு அதற்கு விளக்கம் கொடுக்கக் கூட நமக்கு வாய்ப்பு கிட்டாது. உங்கள் வெள்ளை உள்ளம் சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது. வார்த்தைகளில் கவனம் தேவை. டேக் கேர்...’’ என்று ஆங்கிலத்தில் கூற, சந்திரபாபுவும் ‘‘டோன்ட் ஒர்ரி, அம்மு. கவனமாக இருக்கிறேன்!’’ என்று ஏற்றுக் கொண்டார்.

‘அடிமைப் பெண்’ படத்தில் தனக்கு நிகராக, உங்களுக்கு முக்கியத்துவம் தந்தார் எம்.ஜி.ஆர்.!

ஒரு நாள் உங்களை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்தார். நீங்களும், தாய் சந்தியாவும் அங்கு போனபோது. ‘‘நான் புதிதாக வளர்க்கும் ஒரு பிராணியை காட்டுகிறேன்..வா..’’ என்று உங்களை அழைத்துப் போனார். அங்கு சென்று பார்த்த நீங்கள் அலறாத குறையாக அரண்டுபோய் நின்றீர்கள்...!

தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-22-உங்களால்-கிடைத்த-வாய்ப்பு/article9511080.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! - 23: மனதில் பட்டதை பேசும் குணம்!

 

 
‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஏமாற்றாதே, ஏமாற்றாதே…’ பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.
‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஏமாற்றாதே, ஏமாற்றாதே…’ பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.
 
 

தான் வளர்க்கும் விலங்கை எம்.ஜி.ஆர். உங்களிடம் காட்டினார். நீங்கள் கண்டதோ, ஒரு கூண்டினுள், உறுமியபடி நின்ற சிங்கம் ஒன்றை. அரண்டு போன நீங்கள் என்ன இது, என்று கேட்க, ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு காட்சியில் இந்த சிங்கத்துடன்தான் மோதப் போகிறேன். இவர்தான், சிங்கத்தை பயில்விக்கும் ட்ரெயினர்…’’ என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார்.

‘‘எதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண் டும்…?’’ என்று நீங்கள் கேட்டதற்கு, ‘‘தமிழக கலைகளை பற்றி ‘தில்லானா மோகனாம் பாள்’ பேசுகிறது என்றால், தமிழரின் வீரத்தை பற்றி நம் படம் பேச வேண்டும்..’’ என்றதோடு, ‘‘அம்மு.! நீயும் ‘அடிமைப் பெண்’ படத்திற்காக வாள் பயிற்சி எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும்..” என்று உங்களிடம் கூறினார்.

திடீரென்று ஒரு நாள், ‘‘அம்மு! நீ இந்த படத்தில் ஒரு பாட்டு பாடுகிறாய். வேங்கையன் என்ற அறிவு முதிர்ச்சி இல்லாத வாலிபனுக்கு, ஆசானாக விளங்கி அவனை ஒரு போராளியாக மாற்றும் பாத்திரம் உனக்கு. அம்மா, அப்பா, ஆசான், தெய்வம் ஆகியவர்களை அந்த பாத்திரத் துக்கு உணர்த்தும் ஒரு அற்புதமான பாட்டை கே.வி.மகாதேவன் இயற்றியிருக்கிறார்’’ என்று கூற, தாங்கள் தயங்கினீர்கள்.

என்றாலும், பாடல் ஒத்திகைக்குப் பின் நீங்கள் பாடிய அற்புதமான அந்தப் பாடல்தான்…பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்த ‘அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு...’ என்ற பாடல். குழைந்த குரலில் தாங்கள் பாடிய அந்தப் பாடல் தானே பிற்காலத்தில் உங்களுக்கு அம்மா என்கிற அந்தஸ்து வரப்போவதை அன்றே எடுத்துரைத்தது!

இந்த சமயத்தில்தான், தாயில்லாமல் நானில்லை பாட்டை பாடுவதற்காக டி.எம்.சவுந்தரராஜனை அணுகியபோது அவர் கூறிய கருத்து ஒன்று எம்.ஜி.ஆரை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

ன்னருமை தோழி …!

நீங்கள் மனதில் பட்டதை பேசும் குணத் தைக் கொண்டவர். ஆனால் திரை உலகமோ, உள்ளொன்று வைத்து புற மொன்று கூறுவதை வாடிக்கையாக கொண்ட ஒரு துறை. ‘தாயில்லாமல் நானில்லை... ’ பாடல் ஒளிப்பதிவுக்காக, டி.எம்.சவுந்தரராஜனை அணுகியபோது, அவர் கூறியதாக உலா வந்த கருத்து ஒன்று எம்.ஜி.ஆரை பெரும் அதிருப்திக்கு உள்ளாகியது.

‘‘எம்.ஜி.ஆரின் பெரும்புகழுக்கு, எனது குரல் உதவுகிறது’’… என்று டி.எம்.எஸ். கூறியதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. (எம்.ஜி.ஆருக்கு என் குரல் மிகப் பொருத்த மாக உள்ளது என்று மட்டுமே தான் கூறியதாக பின்னர் டி.எம்.எஸ். தெளிவு படுத்தியிருந்தார்) அதோடு, அவர் பாடு வதற்கு ஊதியத்தை அதிகமாக்கி கூறியதா கவும் எம்.ஜி.ஆருக்கு தகவல் போக, அவர், உடனே, ‘ஆயிரம் நிலவே வா...’ பாட்டை பாடியிருந்த எஸ்.பி. பாலசுப்ரமணி யத்தை வைத்தே ‘தாயில்லாமல் நானில்லை’ பாடலையும் ஒளிப்பதிவு செய்துவிட்டார்.

ஒரு நாள்… நீங்கள் பாடிய ‘அம்மா என்றால் அன்பு, ஆயிரம் நிலவே வா, மற்றும் தாயில்லாமல் நானில்லை’ ஆகிய பாடல்களை கேட்பதற்காக, எம்.ஜி.ஆர், இயக்குனர் சங்கர், எம். ஜி. சக்ரபாணி ஆகியோருடன் நீங்களும் ரெகார்டிங் தியேட்டருக்கு செல்ல, அங்கே, இசையமைப் பாளர் கே. வி. மகாதேவன் பாடல்களை ஒலிக்கச் செய்தார்.

சக்ரபாணியும், சங்கரும் எஸ்.பி.பி. பாடியிருந்த ‘தாயில்லாமல் நானில்லை…’ பாட்டை அருமையாக இருந்ததாக சொல்ல, நீங்களோ ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தீர்கள். இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உங்களை நோக்கி, ‘‘அம்மு!... நீ என்ன சொல்றே?’’ என்று கேட்க, தாங்கள் மனதில் பட்டதை உடனே கூறிவிட்டீர்கள்.

‘‘எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இளமையாக உள்ளது. ஆனால், டி.எம்.எஸ். குரல் இந்த சிச்சுவேஷனுக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும். பிரிந்திருந்த தன் தாயை பார்த்துவிட்டோம் என்று உணர்ச்சி பெருக்கில் ஹீரோ பாடும்போது, பாடுபவரின் குரல், மலைப்பாறையில் அருவிநீர் மோதுவது போல் உணர்ச்சி பொங்க இருக்க வேண்டும்…’’ என்றீர்கள். எல்லாரும் ஒரு கருத்தை கூறினாலும் பெரும்பான்மையோர் என்ன கூறுகிறார் கள் என்று பார்க்காமல், உங்களுக்கு சரி என்று தோன்றுவதை மட்டுமே கூறுவீர்கள். பின்னாளில் அரசியலிலும் இதை பின்பற்றினீர்கள்!

எம்.ஜி.ஆரிடம் ஒரு சிறந்த குணம், காட்சி நேர்த்தியாக வரவேண்டும் என்பதற்காக தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விடுவார். தாங்கள் இவ்வாறு கூறியதும், கே.வி. மகாதேவனிடம், ‘‘அம்மு சொல்றதும் சரிதான். டி.எம்.எஸ்ஸையே பாட வைப்போம்…’’ என்று கூறி மீண்டும் இப் பாடலை ஒலிப்பதிவு செய்தார். படத்தில் அந்தப் பாடலும் அதற்காக ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்ட காட்சியும் பெரும் வரவேற்பை பெற்றது! எஸ்.பி.பி.பாடிய இதே பாட்டின் வடிவமும் வெகு நாட்களுக்கு ஒலித்துக்கொண்டுதான் இருந்தது!

மொத்தத்தில்-

‘அடிமைப் பெண்’ திரைப்படம் வரலாற்றை படைக்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் தயாரிக்கப்பட்டு வந்தது. திடீரென்று பேரிடியாக தமிழகத்தை தாக்கியது, முதல்வர் அண்ணாவின் மரணம். அவரது மரணம் எம்.ஜி.ஆரை பெரிதாக பாதிக்க, ‘அடிமைப் பெண்’ தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டது.

அரசியல் பரபரப்புகளுக்கு பிறகு, மீண்டும் ‘அடிமைப் பெண்’ படத் தயாரிப்பு விறுவிறுப்பு அடைந்தது. நீங்கள், எம்.ஜி.ஆர், ஜோதிலட்சுமி, இயக்குனர் சங்கர், மனோகர், அசோகன், சந்திர பாபு, சோ மற்றும் புஷ்பமாலா ஆகியோருடன், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ராஜஸ்தான் தார் பாலைவன பகுதிகளில் படப்பிடிப்புக்காக அப்போது முகாமிட்டிருந்தீர்கள். அங்கே உங்களுக்கு பல்வேறு அனுபவங்கள்!

கதாநாயகி ஜீவா பாத்திரத்தை ஏற்ற தாங்கள், இந்த படத்திற்காக பல சிரமங் களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தார் பாலைவன மண்வெளியில் வெறுங்கா லுடன் தாங்கள் நடந்து போகும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனால், தங்கள் கால்களில் கொப்புளங்கள் வெடித்து, நடக்க முடியாமல் சிரமப்பட்டதாக கூறினீர்கள்.

பாலைவன இரவில், கடுங்குளிரில், நீங்கள் ‘ஏமாற்றாதே, ஏமாற்றாதே’ பாடலுக்கு ஆடிய முரசு நடனக்காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது. படத்தில் இந்த காட்சிக்கு பெரும் வரவேற்பு. எம்.ஜி.ஆரே இந்த பாடல் காட்சியில் உங்கள் கடின உழைப்பை நெகிழ்ந்து பாராட்டினார். இந்த பாடல் காட்சியின்போதுதான், படப் பிடிப்பில் சில நெருடல்களும் ஏற்பட்டன.

இந்தப் பாடலில் தாளத்துக்கேற்ப உடலில் சிறு சிறு முரசுகளை கட்டிக் கொண்டு அதை அடித்தபடி ஆடுவீர்கள். கதாநாயகன் வேங்கையனுக்கு ஆதரவாக, வைத்தியராக சந்திரபாபு, மணல்வெளியில் புதைந்து கொண்டு, ஒரு சிறு மூங்கில் குழாய் மூலமாக மூச்சு விட்டபடி பதுங்கியிருப்பார். நீங்கள் நடனமாடிக் கொண்டே சந்திரபாபு மூச்சு விடுவதற்காக மணல்வெளியில் வெளியே நீட்டிக்கொண்டி ருக்கும் மூங்கில் குழாயை மிதித்து விடுவது போல காட்சி அமைந்திருந்தது.

மணலினுள் புதைக்கப்படும்போது சந்திர பாபு, ஜோக் அடித்தார். ‘‘இன்னாங்கப்பா! நடிக்க ராஜஸ்தான் இட்டாந்துட்டு. பாலைவனத்துல சமாதி கட்டறீங்க!...’’என்று கூறிவிட்டார். அவர் ஜோக்காக சொன்னது, எம்.ஜி.ஆரிடம் தவறாக திரித்து சொல்லப் பட்டது. ‘மாடி வீட்டு ஏழை’ படம் தொடர்பாக ஏற்பட்ட மனக்கசப்புகள் இருந்தாலும், நீங்கள் கூறியதற்காகவே சந்திரபாபுவுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இந்நிலையில், சந்திரபாபுவின் ஜோக் அவரை புண்படுத்தி விட்டது. என்றாலும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டார்.

ஆனால்… ஒரு காட்சியில் பாலைவன மணல்வெளியில் எம்.ஜி.ஆரை தேடியபடி வைத்தியராக சந்திரபாபு வர வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சந்திர பாபு செய்த ஒரு செயல் தங்களை பதட்டப் பட செய்ததோடு, எம்.ஜி.ஆரின் பொறுமை யையும் மிகவும் சோதித்துவிட்டது.

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-23-மனதில்-பட்டதை-பேசும்-குணம்/article9513224.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.