Jump to content

அப்பா.. ஐவர்.. ஆழம்... - நீலவன்


Recommended Posts

அப்பா.. ஐவர்.. ஆழம்... - நீலவன்

 

 
appa aivar1

 

 

அப்பாவின் போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை. விளங்கினால் தானே பிடிக்கும்?

போனவாரம் ஒருநாள் இரவு பத்துமணிக்குத் திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் போனவரை இன்னும் காணோம்.

ஆறுமாதங்களில் அப்பா இப்படி ஒரேயடியாய் மாறிப்போய் விட்டார். அதற்கு முன்னால்? அவரது 'டியர்' இருந்தாள்- அம்மா தான்! அவள் கிழித்த கோட்டை அவர் தாண்ட மாட்டார். அவள் போவதற்குப் பத்து தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார். வாழ்க்கையில் எது தான் கவனமும், முன்னெச்சரிக்கையும் கலந்த ஒத்திகை போல் நிகழ்கிறது?

அபாண்டமாய்ச் சொல்லக்கூடாது. அப்பா அம்மாவுடன் கூட வாழ்ந்தவரை பச்சைப் பிள்ளையாய்த்தான் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார். முன்னேற்ற வழிகளில் தீவிரமான ஓர்  அக்கறை அவருக்கு  எப்போதும் இருந்ததாய்க் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.

மாதந்தோறும் கைநிறையக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுப்பார். அவள் தான் ஜவுளி பாக்கி முதல் பால் பாக்கி ஈறாகப் பட்டுவாடா செய்வாள்.

அப்பாவின் ஆபீசில், அவரைப் போன்ற உத்தியோகஸ்தர்களெல்லாம் 'ராஜ்தூத்' அல்லது லாம்பிரட்டா வைத்துக் கொண்டு நல்ல வசதிகளோடு வாழ்கின்றனர். ஆனால் அப்பா? வலது கைக்குத் தெரியாமல் இடது கையில் வாங்கும் கையூட்டா? அந்தத் திசைப்பக்கம் கூடத் தலை திரும்பாது!  அதற்காகத் திணிக்க முன் வரும் வள்ளல்களை விஜிலன்ஸ் ஆபீசுக்கு அறிமுகம்செய்யத் துணியவும் மாட்டார்; பெருந்தன்மைக்காரர்!

சர்வீஸ் முடிந்து பென்ஷன் ஸ்டேஜ் வந்தபோது ஒரு மச்சு வீடும், பாங்கில் பி.எப்., இன்சூரன்ஸு அது இது எல்லாம் சேர்ந்து வந்த பத்தாயிரமும் தான் 'லைஃபின் அர்த்தங்கள்.

குடும்பம்...அதற்கென்ன குறை? குடும்பக்கட்டுப்பாடு கொள்கைக்கு சிவப்புக்கொடி காட்டி விட்டார்! ஒன்றா? இரண்டா? ஐந்து! மூன்று: சிசர்ஸ், டோனி , பீட்டில்ஸ். இரண்டு: குதிரை வால், பாப். ஆனால் இதுகளுக்கெல்லாம் தாயானவள் ஒரு சந்திரமதி நூற்றாண்டு!

அம்மா இருந்தபோது வீட்டுத்தோட்டத்தில் தலைக்கு முண்டாசு, இடையில் ஒரு நைந்த வேஷ்டி சகிதம், கையில் தாங்கிய மண்வெட்டியில் வியர்வை முத்துக்கள் உதிரும்  வண்ணம் கடுமையாக வேலை செய்வார் அப்பா. மாலை ஐந்தரை அல்லது ஆறு மணிக்கு கீர்த்தனைகள், கீதைப்பேருரைகள்,நவீனங்கள், ரேடியோ இத்யாதி இத்யாதி ... அந்தந்த நேரங்களில்; அந்தந்த வேலைகளைத் தவறாமல் செய்து முடிப்பார்... எல்லாம் ஒரு கம்பியூட்டரின் இயக்கங்கள்.

அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படிப் பயந்தார்? அப்படி என்ன அவளிடம் ஒரு நடுக்கம்? அந்த அந்தரங்கம் மிகவும் புனிதமானது.

தனது குழந்தைகளைப் பொறுத்தவரை அவர் எப்படி? உடைகளை பிடித்தும் பிடிக்காமலும், பெண்பாலுக்கும் ஆண்பாலுக்கும் மாற்றிக்கொண்டு நாகரீகம் முற்றி விட்ட தோரணையில் உலாவரும் 'அதுகளை' அவர் அதட்டியது உண்டா? ஊஹூம்!

அப்பா பரம சாது. வண்டிக்குதிரைப் பார்வை. 'குழந்தைகள் வளர்ப்புப் புத்தகம்' கருப்பா சிவப்பா? அவருக்கென்ன தெரியும்? ஆபீஸிலும், அக்கம் பக்கத்திலும் அப்பா ஒரு தனி டைப் தான்! இருக்குமிடம் தெரியாது. பெயருக்கென்ன? தேடி வந்து குவிந்தது: 'ராமபத்ரன் (அப்பாதான்) நல்லவர்...'

அப்பாவுக்கு இந்த ஆறு மாதங்களில் என்னநேர்ந்தது? ஒன்றுமே புரியவில்லை. அவர் மீது ஏன் ஐந்தும் நங்கூரங்கள் பாய்ச்சுகின்றன.

மணிக்கணக்கில், நாட்கணக்கில், வாரக்கணக்கில் வீட்டுக்கு வருவதில்லை அவர். அதைத் துல்லியமாய்க் கணக்கிட்டு டைரியில் குறித்துக்கொண்டு அதற்கெல்லாம் கண்ணும் மூக்கும் வைத்துக் கொண்டிருந்தனர் அவர்கள்.

"அம்மா இருந்தால் அப்பா இப்படி ராத்திரி பகலா சுத்துவாரா?"

"குடும்பத் தலைவி இல்லேன்னா குட்டிச் சுவர் தான்--" குதிரை வால் எம்பிக்குதித்தது.

டோனியும், பீட்டில்சும், பாப்பும் தலைக்குத் தலை எகிறிக் கொண்டிருந்தன.  பூனையின் கழுத்தில் யார் மணியைக்காட்டுவது?

குடும்பத்துக்கு ரொம்பவும் வேண்டியவர்கள் கூட அப்பாவைப் பற்றிக் கேட்க அஞ்சினர். ஏன்? அப்படி வாழ்ந்தவர்... பத்தரை மாத்துத் தங்கம்!

கடைசியாக ஐவர் மாநாடு கூடி, முடிவை அறிவித்தது:

கடைக்குட்டி 'பாப்' அப்பா வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகப் பட்டாசு வெடி வெடிப்பதுபோல் பட் பட்டென்று  கேட்டு விட வேண்டும். அதோடு தீர்ந்ததா? வினாக்களுக்கு விடைகளும் சரியாய்க் கிடைக்க வேண்டும். தெருவில் எத்தனை வெறும் வாய்களுக்கு அவலாய் மெல்ல வழியாகி விட்டது?

போனவாரம் ஒருநாள் இரவு போன அப்பா இந்த வாரம் ஒருநாள் இரவிலோ, பகலிலோ வீட்டுக்கு வரத்தானே போகிறார்? அப்போது 'பாப்' தான் என்கொயரி ஆபீசர்.

கெடிலாக் குலுங்கி நின்றது. சோர்வு கவ்வியமுகம். பருமனைச் சற்றுக் குறைத்துக் காட்டும் ஓய்வின்மை. சற்றே ஆடி ஆடி நடந்து முன் அறைக்குள் நுழைந்து 'தொப்' பென்று  கட்டிலின் மீது சாய்ந்தார் அப்பா. கெடிலாக் அவரிடம் விடைபெறாமலே தார்ப்பாதையைத் தேய்த்துக் கொண்டு கிளம்பிற்று.

பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கே 'பாப்'? எங்கே 'பாப்'?

அதோ! நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை.... பாரதி பாடிய புதுமைப்பெண் அறைக்குள் போய் விட்டாள்! பின்னாலேயே சுவரோரமாக மற்ற நான்கும் பம்மிச் சென்றன - ஒட்டுக்கேட்க.

'பாப்' உள்ளேபோய் நின்றதும் கேட்டது:

"அப்பா, என் மீதோ எங்கள் மீதோ நீங்க கோபம் காட்டாக் கூடாது. அம்மா போன பின்னாடி நீங்க ரொம்ப மோசமாயிட்டீங்க. வீடு, வாசல், பிள்ளைங்கன்னு அக்கறையே இல்லாம நாள் கணக்கிலே எங்கேயோ போறீங்க, இருக்கீங்க, வர்றீங்க. நாங்க அஞ்சு பேரும் ஊரார் விமரிசனத்தைக் காது நீட்டிக் கேட்க முடியலே..."

பாடத்தை 'பாப்' உதறலோ பதறலோ இடையில் தலை காட்டவிடாமல் ஒப்பித்து விட்டால். எப்படியோ பூனையின் கழுத்தில் மணியைக் கட்டியாகி விட்டது... விளைவு?

சில கணங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தன. மயானத்தின் அமைதி நிலவியது. மூச்சுப் பேச்சைக்கூட காணோம்?...

அப்பாவின் குரல் இரண்டு நிமிடங்கள் கழித்து தெளிவாகக்கேட்டது.

"அம்மா...சுவரோரம் ஒட்டுக் கேட்கிற பெரியவர்களையும் கொஞ்சம் உள்ளே கூப்பிடம்மா. இத்தனை மாதங்களாக சொல்லப்படாமல் மறைக்கப்பட்டு வந்த விஷயங்களை இப்போது உங்கள் மத்தியில் தேங்காய் உடைத்து விடுகிறேன், உம்...சீக்கிரம் கூப்பிடம்மா."

ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நான்கும் 'பாப்' வந்து அழைக்கும் முன்னரே அறைக்குள் சென்று, திசைக் கொன்றாய்த் திரும்பி தலை நிமிராமல் நின்றன.

அப்பா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, வியர்க்க வியர்க்க, குழம்பிய முகத்தில் வலிய மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு சொன்னார்:

"ஐ ஆம் ஸாரி. உங்கள் அம்மா நம்மை விட்டுப் போய் ஏறத்தாழ ஆறு மாதங்களாகி விட்டன. அவள் இருந்தவரை குடும்பத்தின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஞானம் எனக்கு எப்போதும் உரைத்ததில்லை. அவளது அகால மரணமும், என் ரிடையர்மெண்ட்டும் என் பர்சனாலிட்டியைப் பரீட்சித்தன. முடிவில், போகும் வயதில் நானும் ஒரு பொறுப்பான குடும்பியானேன். நீங்கள்...?" குளத்துத் தாமரை லேசான அலை வீச்சால் அசைவது போல, தலையை அசைத்தபடி அவர் சொல்லிக் கொண்டுபோனார்.

அதுகள் சிலைகள் போல் அவரையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. எதிரே செல்லாத துணியைப் போர்த்தி விட்டது போல் ஓர் ஆழமான உணர்வு.நெஞ்சிலே நெகிழ்ச்சிக் கோடுகள் பாய்வது மாதிரி ஒரு நினைப்பு.

என்னால் இனியும் தொடர்ந்து உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விளக்க முடியாது. இதோ, என் உள்ளக்கிடக்கையின் மறு பிரதி. ஒன்று விடாமல், சிற்பி தன் நினைவில் எப்படிச் செதுக்குவானோ அப்படி நான் எழுதிய டைரி இது. அதைக் கொண்டு போய் கூடத்தில் உட்கார்ந்து ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லாம் கவனமாகக் கேளுங்கள். அப்போதாவது உங்களுக்கெல்லாம் என் போக்கு புரியும்!"

வெளியே உக்கிரமான வெயில் விளாசிக் கொண்டிருந்தது.

பிள்ளைகளின் முகங்களில் ஈயாடவில்லை. தரையில் குத்தி நிறுத்திய மூங்கில்கள் போல் எல்லாம் விறைத்து நின்றிருந்தன. உணர்வுகளே உறங்கி விட்ட பிண்டங்களாய் மாறி விட்டனவோ?

மூத்தது சிசர்ஸ்! கட்டிலின் தலை மாட்டில் இருந்த கறுப்பு பிளாஸ்டிக் உறையிட்டிருந்த கனத்த டைரியை எடுத்துக் கொண்டு கிளம்பியது.

டைரியில் ...

1969 செப்டம்பர் 23- ந் தேதி :

'என் இனிய வாழ்வு அஸ்தமித்தது. நான் ஓர் உதவாக்கரை. பலவீனங்களின் மொத்தம். குருவி தலையில் பனங்காயை வைத்த விட்டுப் பொய் விட்டால் அவள். எப்படிச் சுமப்பேன்? எங்கே, எப்போது, யார் மூலம் சுமையை இறங்குவேன்?'

செப்டம்பர் 29- ந் தேதி:

'என் நண்பர் பம்பாயில் ஹார்பரில் நல்ல லாபம் வரும் வியாபாரம் ஒன்றைச் செய்கிறார். குறுகிய காலத்திலேயே பெரும் புள்ளியானவர். அவர் கூட என் நிலைக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அக்டோபர் 1-ந் தேதி:

'பம்பாயில் நண்பர் ஒருவர் வரவேற்கிறார். எனக்கு சோதிடத்தில் அபார நம்பிக்கை. மிகப்பிரபலமான ஒரு சோதிட நிபுணரை நான் சந்தித்தேன். என் அந்தராத்மாவையே கலக்கி விட்டார் அவர். என் எதிர்காலத்தைப் படம் பிடித்துக் காண்பித்தார். அந்தத் தேதி என் முன்னே குரோதமான வில்லன் போல் நகைக்கிறது.'

அதே மாதம் 9- ந் தேதி:

'உலகமே புரியாமல் வளர்ந்து விட்ட என் ஐந்து செல்வங்களுக்கு என் மச்சு வீடும், பத்தாயிரமும் எந்த மூளை? பின்னால் பழி யாருக்கு ? உற்றார், உறவினர் பூசல் எத்தனை எழும்? தந்தை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்...?

23- ந் தேதி:

'வெள்ளம் வரும் அறிகுறி தென்படுகின்றது, அணைக்கான முஸ்தீபு.'

27-ந் தேதி:

'மீண்டும் பம்பாய் பயணம். நண்பரின் வற்புறுத்தல். பிசினஸ் கடைகால்.'

நவம்பர் 8- ம் தேதி:

பாங்கிலுள்ள பத்தாயிரம்..?

11 ந் தேதி

'பணப்பையோடு பம்பாய்... மெட்றாஸ் டு பாம்பே...'

டிசம்பர் 31-ந் தேதி:

'பாம்பே ஸ்டேட் பாங்கில் ஐம்பதாயிரம்.'

1960 ஜனவரி 28-ந் தேதி:

'அஸ்தமனம் வெகு அருகில்.

பிப்ரவரி 28- ந் தேதி :

'மெட்றாஸ் ஸ்டேட் பாங்கில் சரியாய் ஒன்றரை லட்சம் சொச்சம். பூந்ததமல்லிக்கு அருகிலொரு பெரிய சைட். ஒவ்வொரு செல்வமும் ஒவ்வொரு பங்களா கட்டிக்கொள்ள வசதியானது.'

மார்ச் 3-ந் தேதி:

'மெட்றாஸ் டு பாம்பே- இது லாஸ்ட் டிரிப். நண்பன் வெகு குஷி’யாய் என்னோடு இருந்தான். சோதிடரை அன்றுநான் கன்சல்ட் செய்த போது அவன் அங்கு இல்லையே?'

7 ந் தேதி:

'வீட்டுச் சாமான்கள். இதுவரை என் நண்பனிடம் பாதுகாத்து வைக்கப்பட்டவை. இரண்டு லாரிகளில் மெட்றாஸ்க்கு- என் பெரிய பையன் பெயருக்கு- புக் பண்ணினான்நண்பன். கடைசியாக விடைபெற்றேன் அவனிடமிருந்து.'

இன்று 11 ந் தேதி:

'1969 அக்டொபர்  1-ந் தேதி ஞாபகம் வருகிறது. நான் சந்தித்த சோதிட நிபுணர்.. அவர் போட்டுக்காட்டிய என் வாழ்க்கைப் பாடம்... மீனம்பாக்கத்திலிருந்து இதோ காரில்...'

அதோ என் டியர்! 'அவள் 'என்னையும் தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்ள அழைக்கிறாள். நான் என் செல்வங்களுக்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து விட்டேன்; மற்ற ஏற்பாடுகளைப் பணம் செய்யும்; கடவுள் செய்வார் நானும் அவளும் அந்த வான வெளி மேகங்களிடையே தலையை நீட்டி நீட்டி எல்லாவற்றையும் பார்ப்போம். இதோ... சோதிடர் சொன்ன கண்டம்...மார்பை அடைக்கிறதே...

டைரியின் சிலபக்கங்களில் முற்றுப் பெறாத மார்ச் 11-ம் தேதி.

"ஐயோ அப்பா..! எங்களை மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்!" என்று ஏக காலத்தில் வீடே இடிந்து விழுவது போல் கத்திக் கொண்டு அறைக்குள் ஐவரும் நுழைந்த போது---

வாயிலிருந்து வழியும் வெண்மையான நுரை, பாதி திறந்தும் திறவாத நிலையில் செருகிய கண்கள், வெளுத்துப்போன முகம்,சாம்பிய உடல், விறைத்து விட்ட நிலையில் இருந்தார் அப்பா. அம்மா அழைத்துக் கொண்டு விட்டாளோ...?

பஞ்சங்கள்...?

நல்ல பெயர்தான் அவர்களுக்கு! ஓவென்றுகதறி விழுந்து புரண்டு அழுதனர் அவர்கள். தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்தும், தன் செல்வங்களிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்று சொல்லாமலே இருந்த அவ்வளவு அருமையான அப்பாவையே ஆழம் பார்த்தவர்களா அவர்கள்?

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அருமையான தந்தை ..... கடலில் மீன் அழுதால் யாருக்குத் தெரியும்....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.