Jump to content

இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு : 35 பேர் பலி.!


Recommended Posts

Many wounded' in Istanbul nightclub attack

 
Breaking News image
 

Many people have been wounded in an attack on a nightclub in Istanbul, Turkey's NTV reports.

Footage appears to show a number of ambulances and police vehicles outside the Reina nightclub, in the Besiktas area of the city.

NTV says two attackers were involved, with CNN Turk reported they were dressed in Santa costumes.

Istanbul had been on high alert for any terror attacks, with some 17,000 police officers on duty in the city.

There were reportedly several hundred people in the nightclub at the time.

http://www.bbc.com/news/world-europe-38481521

Link to comment
Share on other sites

'Many wounded' in Istanbul nightclub attack

 

Many people have been wounded in an attack on a nightclub in Istanbul, Turkey's NTV reports.

NTV said around 20 to 30 people may have been wounded in the attack, which took place in the Reina nightclub, in the Ortakoy area, at about 01:30 local time (23:30 GMT).

The channel says two attackers were involved, while CNN Turk reported they were dressed in Santa costumes.

Unconfirmed reports say one attacker may still be inside.

Istanbul had been on high alert for any terror attacks, with some 17,000 police officers on duty in the city.

There were reportedly several hundred people in the nightclub at the time.

http://www.bbc.com/news/world-europe-38481521

Link to comment
Share on other sites

Istanbul nightclub attack 'leaves 35 dead'

At least 35 people have lost their lives in an attack on a nightclub in Istanbul, the city's governor has said.

http://www.bbc.com/news/world-europe-38481521

Link to comment
Share on other sites

இரவு விடுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு : 35 பேர் பலி.!

 

 

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இரவு விடுதியில் நிகழ்ந்த புத்தாண்டு விழா கொண்டாட்டத்தின்போது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு 35 பேர் பலியாகினர்.

Istanbul_Turkey.jpg

துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய கண்டத்தையும், ஆசிய கண்டத்தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக்கோய் மாவட்டத்தில் உள்ள அந்த பிரபல இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

இன்று பிறந்த புத்தாண்டை வரவேற்க இந்த இரவு விடுதியில் நேற்றிரவு சுமார் 500 பேர் திரண்டு, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உச்சகட்ட உற்சாகத்தில் அவர்கள் திளைத்திருந்தபோது, இரவு சுமார் 1.30 மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த ஒருவன், எதிர்பட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.

இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 40 இற்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலை நடத்தியவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக இஸ்தான்புல் கவர்னர் வாசிப் சாஹின் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தேவையான அவசர உதவிகளை செய்ய அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/14951

Link to comment
Share on other sites

இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி

 
 

 

இஸ்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கையகம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் 16 வெளிநாட்டினர் உள்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி
 இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி

உள்ளூர் நேரப்படி 01.30 மணிக்கு ரீய்னா இரவு கேளிக்கையகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை இன்னும் போலிசார் தேடி வருவதாக அமைச்சர் சுலேமான் சொய்லு தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நிகழ்ந்து பல மணி நேரங்கள் கழித்தும் தாக்குதல்தாரி எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி 

மேலும், 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தீவிரவாதியை தேடும்பணி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் அவரை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சொய்லு கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-38482453

Link to comment
Share on other sites

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்ட பயங்கரவாதி

இஸ்தான்புல்: துருக்கி தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்ததாக தப்பி பிழைத்தவர்கள் கூறினர். 
துருக்கியில் உள்ள இரவு நேர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. இங்கு 7 பேர் இருந்துள்ளனர். கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சப்தம் கேட்டது. இதனை பார்த்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர் . சிலர் அருகில் இருந்த கடலுக்குள் குதித்து தப்பினர். இதில் 39 பேர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். 
இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய சிலர் கூறுகையில்; மேடை அருகே வந்த இருவர் சுட்டனர். ஒருவர் சன்டா கிளாஸ் வேடம் அணிந்திருந்தார். மற்றொருவர் இருட்டில் அடையாளம் தெரியவில்லை என்றனர். 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1681436

Link to comment
Share on other sites

#Istanbul Attack Updates: இரண்டு இந்தியர்கள் பலி

 

istanbul-nightclub-attack4_19482.jpg

துருக்கி இஸ்தான்புல் நகரில், புத்தாண்டு கொண்டாடிய விடுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் இந்திய நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். குஜராத்தைச் சேர்ந்த குஷி ஷா மற்றும் அபிஸ் ரிஸ்வி ஆகிய இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ரிஸ்வி முன்னாள் ராஜ்யசபா எம்.பியின் மகன் என்றும் சுஷ்மா கூறியுள்ளார். மேலும், இஸ்தான்புல்லுக்கு இந்திய தூதர் விரைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/world/76536-two-indians-dead-in-istanbul-attack.art

Link to comment
Share on other sites

துருக்­கிய இரவு விடு­தியில் துப்­பாக்கிச் சூடு 15 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 39 பேர் பலி

p24-27aee0aa528b8bfe7f27b070430034282edfd886.jpg

 

69 பேருக்கும் அதி­க­மானோர் காயம் 
துருக்­கிய இஸ்­தான்புல் நக­ரி­லுள்ள இரவு விடு­தியில் புது­வ­ருட தினத்தில் துப்­பாக்­கி­தா­ரி­யொ­ருவர் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 15 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 39 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 69 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் தெரி­வித்தார்.

 மேற்­படி ரெயினா இரவு விடு­தியில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அந்­நாட்டு நேரப்­படி அதி­காலை 1:30 மணிக்கு துப்­பாக்­கி­தாரி பிர­வே­சித்து துப்பாக்கிச் சூட்டை நடத்­தி­யுள்ளார்.

இந்­நி­லை­யில் தாக்­கு­தலை நடத்தி விட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ள நபரைத் தேடும் நட­வ­டிக்கை மும்­மு­ர­மாக  மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக உள்­துறை அமைச்­ச­ரான சுலைமான் சோய்லு தெரி­வித்தார்.   தாக்­கு­தல்­தா­ரிகள் குழப்­பத்தை உரு­வாக்கி தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டத்தை முடி­வுக்­கு­கொண்டு வரும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ள­தாக துருக்­கிய ஜனா­தி­பதி தாயிப் எர்­டோகன் கூறினார்.   

இரவு விடுதித் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களில் 21 பேர் மட்டும் இது­வரை அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த துருக்­கிய உள்­துறை அமைச்சர், இந்தத் தாக்­கு­தலில் 15 அல்­லது 16 வெளி­நாட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாகக் கூறினார்.

இது ஒரு மனி­தா­பி­மா­ன­மற்ற மோச­மான படு­கொலைச் சம்­பவம் என அவர் தெரி­வித்தார்.

 ஆரம்ப கட்ட ஊடகத் தக­வல்கள், நத்தார் தாத்தா உடையில் வந்தே தாக்­கு­தல்­தாரி இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக தெரி­வித்­தி­ருந்­தன. ஆனால் சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்பு கரு­வி­களில் பதி­வா­கி­யுள்ள காணொளிக் காட்­சிகள் தாக்­கு­தல்­தாரி கறுப்பு நிற மேலாடை அணிந்து குறிப்­பிட்ட இரவு விடு­திக்கு முன்­பாக நட­மா­டு­வதை வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

துப்­பாக்­கி­தாரி மேலா­டையும் காற்­சட்­டையும் அணிந்து வந்­தி­ருந்த போதும் அவர் அந்த இரவு விடு­திக்குள் வேறு­பட்ட ஆடை­களை அணிந்து காணப்­பட்­ட­தாக எமக்குத் தக­வல்கள் கிடைத்­துள்­ளன என சுலைமான் சோய்லு தெரி­வித்தார்.

தாக்­கு­தல்­தாரி அந்த இரவு விடு­திக்கு வெளியில் துப்­பாக்கிச் சூட்டை நடத்தி பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரையும் பொது­மகன் ஒரு­வ­ரையும் கொன்­றுள்­ள­தாக இஸ்­தான்புல் ஆளுநர் வாஸிப் சாஹின் தெரி­வித்தார்.

மேற்­படி துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் உயிர்­தப்­பிய சினெம் உயானிக் என்ற பெண் விப­ரிக்­கையில், துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி தனது கணவர் தன் மீது விழுந்­த­தா­கவும் தான் தனக்கு மேலாக விழுந்­தி­ருந்த பல சட­லங்­களை தூக்கி அப்­பு­றப்­ப­டுத்­தியே எழுந்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­த­தா­கவும் கூறினார்.

தாக்­குதல் இடம்­பெற்ற வேளை அந்த இரவு விடு­தியில் சுமார் 700 பேர்­வரை இருந்­துள்­ளனர். அவர்­களில் சிலர் உயர் தப்­பு­வ­தற்­காக அந்த இரவு விடு­திக்கு அரு­கி­லி­ருந்த கடல் நீரில் குதித்­த­தாக சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அதே­ச­மயம் பாது­காப்பு மற்றும் பொது ஒழுங்கு விதி­களை கரு­திற்­கொண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்ட இடத்­திற்கு செல்ல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் இந்தத் தாக்­கு­தலில் ஒன்­றுக்கு மேற்­பட்ட தாக்­கு­தல்­தா­ரிகள் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கலாம் என சில ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

தாக்­கு­தல்­தாரி அரே­பிய மொழியில் பேசி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட சிலர் தெரி­வித்­துள்­ள­தாக டொகான் செய்தி முகவர் நிலையம் கூறு­கி­றது.

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் துருக்கி மீது தனிப்­பட்ட தாக்­கு­தல்­களை நடத்த அந்­நாட்­டி­லுள்ள ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு ஏற்­க­னவே அழைப்பு விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

துருக்கி நான்கு மாதங்­க­ளுக்கு முன்னர் சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் மற்றும் குர்திஷ் குழு­வினர் ஆகி­யோ­ருக்கு எதி­ரான தாக்­குதல் நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தி­ருந்­தது.

மேற்­படி இரவு விடு­தியில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் உள்­ள­டங்­க­லான உலகத் தலை­வர்கள் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.

 ஹவாயில் விடு­மு­றையை கழிக்கச் சென்­றுள்ள பராக ஒபாமா இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக அனுதாபத்தை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் எறிக் சுல்ட்ஸ் தெரிவித்தார்.

 பொதுமக்களை படுகொலை செய்யும் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 இந்நிலையில் புது வருட தினத்தில் இஸ்தான்புல்லின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டிருந்தது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-02#page-1

Link to comment
Share on other sites

துருக்கி புத்தாண்டு தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு

 

கோப்புப் படம்: கெட்டி இமேஜஸ்
கோப்புப் படம்: கெட்டி இமேஜஸ்
 
 

துருக்கியில் புத்தாண்டு தினத்தன்று கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஐஎஸ் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்,"புனித போரின் தொடர்ச்சியாக துருக்கிக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கியின் பிரபலமான கேளிக்கை விடுதியில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த கிறிஸ்துவர்களைத் தாக்கியது எங்களது படைவீரர்தான்" என்று கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூரத் தாக்குதல்

முன்னதாக இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ரீனா இரவு விடுதியில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர், விடுதியின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு காவலர் உட்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டார்.

பின்னர் விடுதிக்குள் நுழைந்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனால் விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடினர். இதனிடையே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 39 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் பொறுப்பேற்காத நிலையில் இந்தத் தாக்குதலை ஐஎஸ் இயக்கம் நிகழ்த்தியிருக்கலாம் என துருக்கி அரசு சந்தேகம் தெரிவித்திருந்தது. இதனிடையே இன்று (திங்கட்கிழமை) இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தினோம் என்று ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

துருக்கி மீதான ஐஎஸ்ஸின் விரோத பின்னணி

2016-ஆம் ஆண்டு முதல் சிரியா மற்றும் இராக்கில் பரவியுள்ள ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதில் துருக்கி ஆர்வம் காட்டி வந்தது. அதனையடுத்து ஐஎஸ் இயக்கம் துருக்கிக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

கடந்த டிசம்பர் மாதம் ஐஎஸ் அமைப்பால் துருக்கியின் இரு ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்துக்கு பிறகு துருக்கி பிரதமர் பினலி இல்திரிம், "ஐஎஸ் அமைப்புக்கு தக்க பதிலடி அளிக்கப்படும். தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல் துருக்கியிலும், அதன் எல்லைப் பகுதிகளிலும் தொடரும். தீவிரவாதத்தை இறுதியில் நமது ஒற்றுமை வெல்லும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் துருக்கி மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/துருக்கி-புத்தாண்டு-தாக்குதல்-சம்பவத்துக்கு-ஐஎஸ்-பொறுப்பேற்பு/article9454829.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.