Jump to content

தேர்தல் முறைகேடு விவகாரத்தில் டிரம்பின் பாராட்டைப் பெற்ற புட்டின்


Recommended Posts

தேர்தல் முறைகேடு விவகாரத்தில் டிரம்பின் பாராட்டைப் பெற்ற புட்டின்

 

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைக்கேடுகள் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் 35 பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் செயற்பாடுகளை ரஷ்யா மேற்கொள்ளாது என அந்நாட்டு ஜனாதிபதி விளாமிதிர் புட்டின் கூறிய கருத்தை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொணால்ட் டிரம்ப் பாரட்டியுள்ளார்.  

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரிகின்டனின் பிரச்சாரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களை இணையவழி மோசடியூடாக களவாடி தரவுகளை விக்கிலீக்ஸ் மையத்திற்கு பறிமாறிய விடயத்தில் ரஷ்ய அதிகாரிகளே முன்னின்று செயற்பட்டனர் என்றும், இதற்கு காரணம் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை வெற்றிப்பெறச் செய்வதே என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

 இந்நிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு 72 மணித்தியாலயங்களுக்குள் வெளியேற வேண்டும் என ஓபாமா அறிவித்திருந்தார். அத்தோடு மேரிலாந்து மற்றும் நியூயோர்க்கில் அமைந்துள்ள ரஷ்ய தூதரங்களை மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

 

 அமெரிக்காவின் குறித்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு பதிலாக நாங்கள் எதுவும் செய்யப்போவதில்லை எனவும், மாறாக அடுத்த ஜனாதிபதி பதவியேற்றவுடன் ரஷ்யா தனது நிலைபாட்டை அறிவிக்கும் என்றும் அந்நாட்டு அறிக்கையில் ஜனாதிபதி புட்டின் குறிப்பிட்டுள்ளார்.  

 

குறித்த தீர்மானம் தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதியின் முடிவு பாராட்டப்படக்கூடியது எனும் வகையிலான கருத்தை பதிவு செய்துள்ளார்.  

trump_tweet_abut_putin.jpg

 

 

டிரம்பின் இச்செயற்பாடுகள் எதிர்கால ரஷ்ய அமெரிக்க கூட்டணிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்பதோடு ஒரு நாகரீகமான அரசியல் களத்தை உருவாக்கும் என அரசியல் கருத்தாளர்கள் சமூவலைத்தளங்கள் ஊடாக கருத்து பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/14945

Link to comment
Share on other sites

ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்

 

 
டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்
 
 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புத்திசாலி, அவரது பொறுமையை பாராட்டுகிறேன் என்று அமெரிக்கா வின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட் பாளர் ஹிலாரி கிளின்டன் தோல் வியைத் தழுவினார். அவரது தோல்விக்கு ரஷ்ய உளவுத் துறை யின் ‘சைபர் ஹேக்கிங்’ சதி செயலே காரணம் என்று தற் போதைய அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகங்களில் பணியாற்றும் 35 அதிகாரிகளை வெளியேற்ற அதிபர் ஒபாமா நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். மேலும் ரஷ்ய உளவு அமைப்புகள், சில ரஷ்ய நிறுவனங்கள் மீது தடை உத்தரவையும் பிறப்பித்தார்.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியபோது, பழிக்குப் பழி நடவடிக்கையாக அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற விரும்பவில்லை. பொறுத்திருந்து நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

புதினின் முடிவை அமெரிக்கா வின் புதிய அதிபராக பதவி யேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இதுதொடர் பாக அவர் ட்விட்டரில் நேற்று வெளி யிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புத்திசாலி என்பது எனக்கு தெரியும். அதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது நிதானம், பொறுமையைப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/ரஷ்ய-அதிபர்-புதின்-புத்திசாலி-அமெரிக்காவின்-புதிய-அதிபர்-ட்ரம்ப்-புகழாரம்/article9453492.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.