Jump to content

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு, இந்தியா ‘அமைதியாக இருக்கிறது’ - ராஜபக்சே


Recommended Posts

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு, இந்தியா ‘அமைதியாக இருக்கிறது’ - ராஜபக்சே

இலங்கையில் என்னுடைய ஆட்சியின் போது சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்பிய இந்தியா, இப்போது அந்நிகழ்வுக்கு அமைதியாக உள்ளது என்று ராஜபக்சே பேசி உள்ளார்.

 
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு, இந்தியா ‘அமைதியாக இருக்கிறது’ - ராஜபக்சே
 
கொழும்பு,

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வெளிநாட்டு செய்தியாளருக்கு அளித்து உள்ள பேட்டியில், “இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வந்தபோது, என்னுடைய இந்திய நண்பர்கள் எனக்கு எதிராக எழுந்தனர். ஆனால் இப்போது அவர்கள் எலிகளை போன்று அமைதியாக உள்ளனர்,” என்று கூறிஉள்ளார் ராஜபக்சே.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்புக்கு இந்தியாவே கவலைப்படாத நிலையில் எந்த அடிப்படையில் நீங்கள் இதனை கூறுகிறீகள் என்ற கேள்விக்கு பதிலளித்து உள்ள ராஜபக்சே, “அவர்கள் வெளிப்படையாகவே இதனை (எதிர்ப்பு) தெரிவித்தனர்.” என்றார்.

மேலும் பேசுகையில் என்னுடைய சொந்த ஊரான ஹம்மன்தோடாவில் தொழில்துறை மையம் அமைக்க சீனாவிற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு எதிராக இருந்தேன். நாங்கள் தொழிற் பூங்கா அமைப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 15 ஆயிரம் ஏக்கர் என்பது மிகவும் அதிகமானது என்று கூறி உள்ளார். மைத்திரிபால சிறிசேனா அரசானது திரிகோணமலை துறைமுகம் அல்லது பலாலி விமான நிலையத்தை அவர்களிடம் கொடுப்பதை இந்தியா காத்திருந்து காணதான் போகிறது என்று நினைப்பதாக ராஜபக்சே கூறி உள்ளார்.
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா எனக்கு உதவிசெய்தது என்ற கூறிய ராஜபக்சே, அமெரிக்காவின் தலையீட்டினால் எனக்கு எதிராக செயல்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

 நான் அவர்கள் (இந்தியா) என்னுடன் வரவேண்டும் என விரும்பினேன் (தீவிரமான ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு) ஆனால் அவர்கள் தென் இந்தியாவின் அணுகுமுறை காரணமாக விரும்பவில்லை. மேற்கத்திய நாடுகள், இந்தியாவின் உளவுப்பிரிவு மற்றும் பிறர் எனக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டது.  அவர்கள் 2015- ஜனவரி அதிபர் தேர்தலுக்கு இரு வருடங்களுக்கு முன்னதாக செயல்பட தொடங்கிவிட்டனர் என்று கூறி உள்ளார் ராஜாபக்சே. இலங்கையில் அதிபர் தேர்தலானது இரு வருடங்களுக்கு முன்னதாகவே நடைபெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/29211529/1058958/Increase-China-influence-Sri-Lanka-India-is-silent.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழுவி வைத்தாவது பதவி பெற வேண்டும்.அது தானே.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன், தம்பியா சீனாவுக்குப் போய், சீனாக்காரனோட பிளானைப் போட்டு, இப்ப டெல்லி காரனை மோடர் என்று நினைச்சு, விடுறார் விடுகதை.:cool:

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

அண்ணன், தம்பியா சீனாவுக்குப் போய், சீனாக்காரனோட பிளானைப் போட்டு, இப்ப டெல்லி காரனை மோடர் என்று நினைச்சு, விடுறார் விடுகதை.:cool:

photo.jpg

இலங்கைத்தீவில் குழப்பம் நிலவ வேண்டும் என்பதுதான் சேகரின் கணக்கு. அதுக்காக இவரை மாத்தி அவர்.. பிறகு அவரை மாத்தி இவர் எண்டு விளையாடுவினம்.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை சீனாவோடு கோர்த்துவிட்டு அவை வந்த கணக்கா.. இவர் அவையை சீனாவோடு கோர்த்துவிட்டு தான் வரப் பார்க்கிறார். ஹிந்தியன் எல்லாருக்கும் ஒன்னா சேர்த்து ஆப்படிப்பான். நண்பர்களான தமிழருக்கே  அடிச்சானில்ல. சிங்களவனுக்கு........................

Link to comment
Share on other sites

அடுத்த வருடத்தில் ஆட்சியை கவிழ்ப்பேன்

 

மஹிந்த அறிவிப்பு : இந்தியா மௌனித்துள்ளது என்கிறார்
தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இருப்­பினும் அர­சாங்­கத்தின் தற்­கால செயற்­பா­டு­களை பார்க்­கும்போது நிலைமை மாறி­விடும் வாய்ப்­புள்­ள­தா­கவே தெரி­கின்­றது. எனவே 2017 ஆம் ஆண்­டிற்குள் இந்த ஆட்­சியை மாற்­றி­ய­மை­ப்பதே எனது நோக்­க­மாகும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரிவித்தார். 

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் தற்­போது முரண்­பா­டுகள் முற்­றி­யுள்­ளன. எனவே இவ்­வாறு ஒரு அர­சாங்­கத்­தினை கொண்டு நடத்த முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இலங்­கை­யி­லுள்ள வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களை நேற்று கொழும்பில் சந்­தித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இங்கு ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்,

கேள்வி: 19 ஆவது திருத்­தத்தில் ஒருவர் இரு முறைகள் மாத்­தி­ரமே ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாக முடியும் என்று கூறப்­ப­டு­கின்­றது அவ்­வா­றாயின் அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் செய்­யாது நீங்கள் மீண்டும் அரச தலை­வ­ராக முடி­யாதா?

பதில்: இந்­நாட்டில் மீண்டும் ஒரு அரச தலை­வ­ராக மாற­வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. இருப்­பினும் அரச தலை­வ­ரா­க­வி­டினும் என்னாள் நாட்­டினை ஆட்சி செய்ய முடியும்.

கேள்வி: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் சேவை­யாற்ற வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கினால் அதற்கு உங்­களால் முகம்­கொ­டுக்க முடி­யுமா?

பதில்: தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மாயின் 1970 ஆம் ஆண்­டி­லி­ருந்து நன்­க­றிந்த ஒரு­வ­ருடன் சேவை­யாற்­று­வதில் எனக்கு எந்த சிக்­கலும் இல்லை. அவ்­வாறு இணைந்து செயற்­பட வேண்டும் என்ற நிலைமை வந்தால் நான் முன்­வைக்கும் நிபந்­த­னை­களை அவர் ஏற்­றுக்­கொண்டால் மாத்­தி­ரமே இணைந்து செயற்­ப­டுவேன்.

அதேபோல் அடுத்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் போது சுதந்­திர கட்சி பிள­வு­பட்டு போட்­டி­யிட்டால் வாக்­குகள் பிரிந்து செல்லும். எனவே அதன் பலனை ஐக்­கிய தேசிய கட்­சியே அடையும்.

கேள்வி: புதிய அர­சி­ல­மைப்பு உரு­வாக்கம் குறித்து உங்கள் நிலைப்­பாடு?

பதில்: புதிய அர­சி­ல­மைப்பு உரு­வாக்க குழுவின் செயற்­பா­டுகள் பற்றி மாத்­தி­ரம்தான் தற்­போது வரையில் பேசப்­ப­டு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சாங்கம் தெளி­வான தக­வல்கள் எவற்­றையும் வெளி­யி­ட­வில்லை.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அர­சி­ல­மைப்பு குறித்து கருத்து வெளி­யிட்டால் மாத்­தி­ரமே அது தொடர்பில் பேச முடியும். எவ்­வா­றா­யினும் அர­சி­ல­மைப்பு மாற்றம் ஏற்­ப­டுமா என­்பது சந்­தே­கத்­திற்கு இட­மா­கவே உள்­ளது.

கேள்வி: சீனா­விற்கு காணி வழங்­கி­யுள்­ளமை தொடர்பில் என்ன நிலைப்­பாடு?

பதில்: சீனா­விற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்­கு­வது தொடர்பில் எனக்கு உடன்­பா­டுகள் இல்லை. அது தொடர்பில் குறித்த சீன நிறு­வ­னத்­திற்கும் நான் தெரி­வித்­துள்ளேன். எனது காலத்தில் வழங்­க உடன்பட்ட 750 ஏக்கர் காணியை மாத்­தி­ரமே வழங்­கு­வதே சிறந்­தாகும்.

மேலும் எமது அர­சாங்­கத்தின் காலப்­ப­கு­தியில் சீன நீர்­மூழ்கி கப்பல் இலங்­கைக்கு வந்­த­தை­யிட்டு அதிருப்தி வெளி­யிட்ட இந்­தியா தற்­போது மெள­னித்­துள்­ளது. எனது ஆட்­சியில் இடம்­பெற்ற தவ­று­க­ளுக்கு எதி­ராக வெளிப்­ப­டை­யாக குரல் எழுப்­பிய இந்­தியா தற்­போது மெளனம் சாதிப்­பதன் பின்­னணி திரு­கோ­ண­மலை துறை­முகம் அவர்கள் வசா­மா­கி­யுள்­ள­மை­யாகும்.

கேள்வி: இந்­திய பாது­காப்பு ஆலோ­சகர் இறுதி யுத்­த­கா­லத்தில் இலங்­கைக்கு உத­வி­ய­தாக கூறி­யுள்ளார். அது குறித்து கூறுங்கள்?

பதில்: இந்­தியா யுத்­த­கா­லத்தில் இலங்­கைக்கு உத­வி­யி­ருந்­தமை தொடர்பில் பல­முறை குறிப்­பிட்­டுள்ளேன். இருப்­பினும் தமிழ் நாட்டில் குழப்பம் ஏற்­ப­டக்­கூடும் என்­பனால் இந்­தியா இது குறித்து பேசு­வதை குறைத்­தி­ருந்­தது.

கேள்வி: அவ்­வாறு உங்­க­ளுக்கு உத­விய இந்­தியா பிற்­கா­லத்தில் தமது நிலைப்­பாட்­டினை ஏன் மாற்­றிக்­கொண்­டது?

பதில்: சில தவ­றான புரி­தல்கள் ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறு இல்லாவிடின் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகியிருக்கலாம்

கேள்வி: 2015 ஆம் ஆண்டு தேர்தலில் உங்கள் தோல்விக்கு காரணம் யாது?

பதில்: அமெரிக்கா,இந்தியா மற்றும் அந்நாட்டு ரோ உளவுச் சேவை மற்றும் சர்வதேச நாடுகளின் தலையீட்டுடன் வந்த சக்திகளுக்கு என்னால் முகம்கொடுக்க முடியாது போனது. 2011 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கத்தை மாற்றும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-30#page-1

Link to comment
Share on other sites

ஆட்சி மாற்ற பின்னணியில் அமெரிக்கா,புலம்பெயர்ந்த தமிழர்கள் -மகிந்த குற்றச்சாட்டு
 
 
ஆட்சி மாற்ற பின்னணியில் அமெரிக்கா,புலம்பெயர்ந்த தமிழர்கள் -மகிந்த குற்றச்சாட்டு
கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பிரதான பங்கை வகிக்க வில்லை என்றும், அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே பிரதான பங்கை வகித்ததாக வும்,  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று  வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர்   இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் பிரதான பங்கை இந்தியா வகிக்கவில்லை. அமெரிக்காவும், புலம்பெயர் தமிழர்களுமே பிரதான பங்கு வகித்தனர். இந்தியா துணைப் பங்கையே ஆற்றியிருந்தது.
 
இலங்கை, மியான்மார், நைஜீரியாவில் ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, 648 மில்லி யன் டொலரைச் செலவிட்டுள்ளதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
 
இப்போதும் கூட இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிவிருத்திக்காக ஒரு பில்லி யன் ரூபாவை செலவிடுகிறது
 
தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் நேசம் பாராட்டி வருகிறது இலங்கை.அதிகாரி களுக்கு அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.
 
அமெரிக்கர்கள் வந்து நாட்டை ஆட்சி செய்கிறார்கள் என்றும் மகிந்த ராஜபக்ச கோபத்துடன் குறிப்பிட்டார்.

http://www.onlineuthayan.com/news/22031

Link to comment
Share on other sites


சீனாவுக்கு எதிராகத் திரும்புகிறாரா மஹிந்தா?
 

article_1483172399-hampan-new.jpg- கே.சஞ்சயன்  

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத உரிமையை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை கைத்தொழில் வலயத்துக்காக சீனாவுக்கு வழங்கவும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியுள்ளது.  

ஜே.வி.பியினர், துறைமுகத் தொழிலாளர்கள், கூட்டு எதிரணியினர் என்று பல தரப்பினரும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை ஹம்பாந்தோட்டையில் நடத்த ஆரம்பித்துள்ளனர்.  

ஹம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்த போது, அதற்குப் பின்னால் ராஜபக்ஷ குடும்பத்தினரதும் கூட்டு எதிரணியினதும் பின்புல ஆதரவு இருப்பதாகவே சந்தேகிக்கப்பட்டது.  

கடந்த 24ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மூலம், சீனாவின் திட்டங்களுக்கு எதிராக, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக களமிறங்கியுள்ளார்.  

சீனாவின் உண்மையான நண்பன் என்று போற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.  

இன்னொரு பக்கத்தில், சீனாவின் எல்லா நகர்வுகளையும் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதாகக் கருதும் இந்தியாவும் இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை.  

இந்த இரண்டுமே இலங்கை அரசியலில் ஆச்சரியத்துக்குரிய விடயங்களாகப் பார்க்கப்படுகின்றன.  
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வந்த நெருக்கம் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று.   

ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் மாத்திரமே இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணுவதே சீன அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையின் முக்கிய அம்சமாகும்.  

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ விடயத்தில் சீனா அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை.   
2015ஆம் ஆண்டு சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராகக் கொழும்பு வந்த உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின், மஹிந்த ராஜபக்ஷவை தனியாகச் சந்தித்துப் பேசியதும், அண்மையில் சீன அரசாங்கமே மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்து, அவருடன் சந்திப்புகளை நடத்தியதும் சீனாவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்கத்தை காட்டப் போதுமான நிகழ்வுகளாகும்.  

போர்க்காலத்தில் செய்த இராணுவ உதவிகளையும், போருக்குப் பின்னர் செய்த பொருளாதார உதவிகளையும் காரணம் காட்டி, இலங்கையில் சீனாவின் தலையீடுகள் வலுப்பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாக இருந்தார்.  

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா இன்று குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்த ஆரம்பித்துள்ளது என்றால், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், இலங்கையில் அளிக்கப்பட்ட வாய்ப்புகளால் தான் என்பதில் சந்தேகமில்லை.  

எனவே, மஹிந்த ராஜபக்ஷவை கைவிட சீனா ஒருபோதும் தயாராக இல்லை. அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவும் ஆட்சியை இழந்த பின்னர் சீனாவுக்காகவே பரிந்து பேசி வந்தவர்.  

இலங்கையில் சீனாவின் திட்டங்கள் முடக்கப்பட்ட போது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த மஹிந்த ராஜபக்ஷ, தம்மை ஆதரித்ததால், தற்போதைய அரசாங்கம் சீனாவைப் பழிவாங்குவதாகவும் கூட முன்னர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.  

சீனா என்றால் மஹிந்த என்றும் மஹிந்த என்றால் சீனா என்றும், ஒரு விம்பம் இலங்கையில் உருவாக்கப்பட்டிருந்தது. அத்தகைய ஒருவர் தான் இப்போது, ஹம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீடுகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்.  

கடந்த நொவம்பர் மாதம் மேற்கொண்ட சீனப் பயணத்துக்கு முன்னதாகவே, மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை, சீனாவுக்கு வழங்கும் திட்டத்தையும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத உரிமையை குத்தகைக்கு வழங்கும் திட்டத்தையும் எதிர்க்கத் தொடங்கி விட்டார். இப்போது அவரது எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. 

இதுவரையில், மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தமது எதிர்ப்பை ஊடகங்களிடம் தான் வெளிப்படையாகக் காண்பித்து வந்தது. மறைமுகமாகச் சில போராட்டங்களையும் ஒழுங்கு செய்ததாகவும் சந்தேகிக்கப்பட்டது.  

எனினும், தற்போது ஹம்பாந்தோட்டையில் சீன முதலீடுகளுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் நாமல் ராஜபக்ஷ ஈடுபட்டிருக்கிறார். இது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சீனாவின் திட்டங்களை எதிர்த்துப் பகிரங்கமாகப் போராட்டத்தில் இறங்கியுள்ள முதல் சந்தர்ப்பமாகும்.  

புறநிலையில் இருந்து பார்க்கும் போது, இது சீனாவுக்கு எதிரான போராட்டம் போலத் தென்பட்டாலும், உண்மையில் ராஜபக்ஷக்களின் திட்டம் அரசாங்கத்தை வீழ்த்துவது தான்.  

ஹம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குவதையும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதையும் தான் ராஜபக்ஷவினர் எதிர்க்கின்றனர்.  

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் நாட்டுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி விட்டார் மஹிந்த என்ற கறை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது சீனாவின் கைக்கு மாற்றப்பட்டால், மஹிந்தவின் மீதான கறை நிரந்தரமானதாகி விடும்.  

தனது பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், விமான நிலையம் எல்லாவற்றுக்கும் தனது பெயரைச் சூட்டியவர் மஹிந்த. அப்படிப்பட்ட ஒருவர், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் நாட்டுக்கு பெரிய நட்டத்தை ஏற்படுத்தியவர் என்ற களங்கம் ஏற்படுத்தப்படுவதை விரும்பவில்லை.  

சீனாவுக்கு 80 வீத உரிமை வழங்கப்பட்டாலும், தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அரசுடமையாக்குவோம் என்று மஹிந்த எச்சரித்திருக்கிறார்.  

அப்படிச் செய்யும் துணிச்சல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான். அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால், தற்போதைய அரசாங்கம் கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகளையே அவரும் சந்திக்க நேரிடும்.  

அண்மையில், நடத்திய சர்ச்சைக்குரிய செய்தியாளர் சந்திப்பில், இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நிலையான கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சிமாற்றங்களால் அவை பாதிக்கப்படக் கூடாது என்றும் சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் கூறியிருந்தார்.  

அவ்வாறான நிலையான கொள்கை அறிமுகப்படுத்தப்படாது போனால், வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார்.  

இப்படியான ஒரு நிலையில் தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவிடம் கையளிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மீண்டும் அரசுடமையாக்குவோம் என்ற மஹிந்தவின் எச்சரிக்கையை, சீனா அவ்வளவாக இரசித்திருக்காது என்பது உண்மை.  
மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், இந்தத் தருணத்தில் சீனாவை விடவும் அவரது அரசியலே முக்கியமானது. அதுவே நிலையானதும் நிரந்தரமானதுமாகும். சீனாவை, கையில் பிடித்துக் கொண்டு, உள்நாட்டு அரசியலில் வெற்றியைப் பெறுவது கடினமானது.   

ஹம்பாந்தோட்டை, மொனராகல, இரத்தினபுரி மாவட்டங்களை உள்ளடக்கியதாக 15 ஆயிரம் ஏக்கர் பிரதேசத்தில் ஒரு பாரிய கைத்தொழில் வலயத்தை சீனா உருவாக்க முனைகிறது.  

இதற்கான நிலங்களை ஒதுக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. இத்தகைய கட்டத்தில் பாரியளவில் நிலங்களை இந்தத் திட்டங்களுக்காக ஒதுக்கும் போது, உள்ளூர் மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் ஏற்படும். அது இயல்பான விடயம்.  

உள்ளூர் மக்களிடம், அந்த எதிர்ப்பை தூண்டி விட்டு, தமது அரசியல் பயணத்தை வலுப்படுத்துவதே மஹிந்த ராஜபக்ஷவின் இப்போதைய நகர்வாக உள்ளது. சீனாவை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றே அவர் கருதுகிறார்.  

ஏனென்றால், உள்ளூர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கும் வரை தான், அரசியல் நடத்த முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ள தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டால், சீனாவுடனான உறவுகளை சீர்படுத்திக் கொள்ளலாம் என்பது மஹிந்தவின் திட்டமாக இருக்கக் கூடும்.  

இதனால்தான் சீனத் திட்டங்களுக்கு எதிரான ஒரு தற்காலிக நிலைப்பாட்டை எடுப்பதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.  
இதனைச் சீனா எப்படிப் பார்க்கப் போகிறது? இந்த விடயத்தில் சீனாவுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் உள்ளுக்குள் ஏதேனும் உடன்பாடுகள் இருக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றன.  

ஹம்பாந்தோட்டையில் கால் பதிப்பது சீனாவின் ஒரு பெருங்கனவு, இதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் இராணுவ ரீதியாக இல்லாவிடினும் பொருளாதார ரீதியாகவேனும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று சீனா எதிர்பார்க்கும். 

அத்தகையதொரு வாய்ப்பு மஹிந்த ராஜபக்ஷவினால், அவரது அரசியல் நலன் பேணும் நிலைப்பாட்டினால் கைநழுவிப் போவதை சீனா விரும்புமா என்ற கேள்வி இருக்கிறது.  

ஆட்சிக்கு வந்ததும், அரவணைப்போம் என்று கூறும் மஹிந்தவுக்கு ஆதரவு அளித்தால், ஹம்பாந்தோட்டையில் நிலைப்படுத்திக் கொள்வதற்கு சீனா இன்னமும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வரலாம்.  

இப்போதே அரவணைக்கத் தயாராக உள்ள மைத்திரி- ரணில் அரசாங்கத்துடன் இணைந்தால் ஹம்பாந்தோட்டையில் உடனடியாகவே கால் பதிக்கலாம்.  

இந்தத் தெரிவுகளில் எதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கப் போகிறது என்பது கேள்வியாக உள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/188967/ச-ன-வ-க-க-எத-ர-கத-த-ர-ம-ப-க-ற-ர-மஹ-ந-த-#sthash.GPb7qpw8.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.