Jump to content

தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!


Recommended Posts

தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!

 

 
BeFunky_Col_3110259f.jpg
 
 
 

2016-ம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதில் கமல், அஜித் நடித்த படங்களைத் தவிர எல்லா முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகின.

மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், மிஷ்கின், செல்வராகவன் படங்கள் வெளியாகவில்லை. வெளியான படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள், இயக்குநர்களில் நம்பிக்கையை தகர்த்தவர்கள் குறித்து பார்க்கலாம்.

பாலா

'சேது' படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆனால், 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் விரும்பிப் பார்த்தவர்களைக் கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார். ரத்தம் தெறித்தல், குரல்வளை நெறித்தல், வினோதமான பழிவாங்கும் படலம்தான் பாலாவின் படம் என்று காலப்போக்கில் மாறிப்போனது. தாரை தப்பட்டை, கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை உண்மையும் உருக்கமுமாக சொல்வார் என நம்பி தியேட்டருக்குள் போனால் இந்த முறையும் ரசிகர்களின் குரல்வளையைக் கடித்து துப்பிதான் பாலா அனுப்பினார்.

கதைக்கோ திரைக்கதைக்கோ தேவை இருக்கிறதோ இல்லையோ அதைக் காட்டிலும் அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்றவற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டும் என்பதில் பாலா உறுதியாக இருப்பது எதனால் என்பதை இன்னமும் ரசிகர்களால் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

'தாரை தப்பட்டை' பாலாவுக்கு ஏழாவது படம். ஆனால், எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாக பாலாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அனுராக் காஷ்யப், ராஜ்குமார் ஹிரானி முதலான இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கண்டு வியக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கிய சினிமா படைப்பாளி காட்சிப்படுத்துதலில் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

ஜீவா

2014-ம் ஆண்டு ஜீவா நடித்த 'யான்' திரைப்படம் சரியாகப் போகாததால், 2015-ம் ஆண்டு ஓய்வெடுத்துக் கொண்டார். 2016-ம் ஆண்டில் ஜீவா நடிப்பில் 'போக்கிரி ராஜா', 'திருநாள்', 'கவலை வேண்டாம்' என்று மூன்று படங்கள் வெளியாகின.

பொழுதுபோக்கு அம்சம் என்ற பெயரில் மூன்று படங்களில் ஜீவா நடித்தாலும் அந்தப் படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. 'போக்கிரி ராஜா' படத்தின் ஐடியா சரியாக இருந்தாலும் அதற்கான மெனக்கெடல், மேக்கிங் முழுமையாக இல்லை. 'திருநாள்' வழக்கமான மசாலா படம் தான். நயன்தாரா இருந்ததால் கூடுதல் கவனம் இருந்தது. ஆனால், கமர்ஷியல் படத்துக்கான அம்சங்கள் போதுமான அளவில் இல்லை.

'கவலை வேண்டாம்' படத்தின் இரட்டை அர்த்த வசனங்கள் ஜீவாவின் படமா இது? என்ற சந்தேகத்தை வரவழைத்தது. படத்தின் நாயகன், நாயகி, நாயகன் அப்பா, நாயகி அம்மா, துணை கதாபாத்திரங்கள் என ஒட்டுமொத்த நடிகர்கள் குழுவும் இரட்டை அர்த்த வசனம் பேசிய படம் 'கவலை வேண்டாம்' படமாகத் தான் இருக்கும்.

ஜீவாவிடம் அபரிமிதமான நடிப்பாற்றல் உள்ளது. 'ராம்', 'கற்றது தமிழ்', 'ஈ' படங்கள் மூலம் பக்குவமான நடிப்பை ஜீவா வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், 'சிவா மனசுல சக்தி' படத்தின் வணிக வெற்றியே தன்னை கிராமங்களில் கொண்டு சென்றதாகக் கருதுகிறார். அதனாலேயே அதுபோன்ற படங்களில் விரும்பி நடிக்க ஆயத்தமானார். ஆனால், அது ஒரு நடிகனுக்கான அடையாளத்தை மறக்கடிக்கச் செய்தது என்பதை ஜீவா புரிந்துகொள்ள வேண்டும்.

'மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்' என்று சொன்ன வசனம்தான் ரீச் ஆகி இருக்கு. மற்ற படங்களை டிவியில் பார்த்துதான் பாராட்டுகிறார்கள் என்று ஒரு பேட்டியில் ஜீவா சொன்னார். உண்மையில் டிவியில் ஒளிபரப்பான 'ராம்', 'கற்றது தமிழ்', 'ஈ' படங்கள் தான் ஜீவா எனும் நடிகனை ரசிகர்கள் மனதில் பதியச் செய்திருக்கிறது. அவருக்கான களம் அதுதான் என்பதை ஜீவா உணர்ந்து 2017-ம் ஆண்டில் வெற்றிவாகை சூடுவார் என நம்புவோமாக. அதற்காகவே ஜீவாவின் 25-வது படத்துக்காகக் காத்திருப்போம்.

விஷால்

'பாண்டிய நாடு', 'நான் சிகப்பு மனிதன்' என்று கான்செப்ட் கமர்ஷியல் படங்களில் நடித்து கவனம் பெற்ற விஷால் 'மருது' படத்தில் ஓரளவு சிராய்ப்புகளுடன் தப்பித்துக் கொண்டார். ஆனால், 'கத்தி சண்டை'யில்தான் சிக்கிக் கொண்டார்.

காதலிக்கிறேன் என்று துரத்துவது, இல்லாத பொய் சொல்லி நம்ப வைப் பது, வில்லன்களைப் பறந்து பறந்து புரட்டியெடுப்பது, டூயட் ஆடுவது என வழக்கமும் பழக்கமுமான கதா பாத்திரம்தான் விஷாலுக்கு. சாகச ஹீரோ வுக்கான பிரயத்தனங்களைச் செய்யும் விஷால், ஏன் கற்பனைக் கதையிலும் கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்? இதுவும் சாகசத்தில் ஒரு பகுதி என்று நினைத்துவிட்டாரா? பொறுப்பான பதவியில் இருப்பவர் இனியாவது சறுக்காமல் நடந்து கொள்கிறாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விக்ரம் பிரபு

'கும்கி' மூலம் அறிமுகமான சிவாஜியின் பேரன். துவக்க காலத்தில் கதைத் தேர்வில் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறாரே என்று புருவம் உயர்த்த வைத்தவர். 'கும்கி', 'சிகரம் தொடு', 'அரிமா நம்பி' ஆகிய படங்களே அதற்குச் சான்று. ஆனால், அதை இந்த வருடம் 'வாகா', 'வீரசிவாஜி'படங்கள் மூலம் தவிடுபொடியாக்கி விட்டார் விக்ரம் பிரபு.

எல்லைப் பாதுகாப்பு படை வீரர் விக்ரம் பிரபு. அர்ஜூன், விஜயகாந்த் போன்றவர்களே வி.ஆர்.எஸ். வாங்கிய வீர வசனப் படலத்தில் ஹீரோ விவாதப் பரீட்சை செய்து, மாபெரும் வில்லனை வார்த்தைகளாலேயே மனம் திருந்தச் செய்வதுதான் 'வாகா'. ஹீரோவின் சாகசங்கள் பார்த்து ரசிகர்கள்தான் சோதனைக்கு ஆளானது தனிக்கதை.

'வீரசிவாஜி' பொதுமக்களிடம் கொள்ளையடித்த பணத்தை அவர்களுக்கே திருப்பித் தரப் போராடும் இளைஞனின் கதை. திரைக்கதையில் உள்ள ட்விஸ்ட் பலன் அளிக்காமல் பொறுமை இழக்கச் செய்ததுதான் மிச்சம். இனி விக்ரம் பிரபு முழித்துக்கொள்வாரா என்பதை அடுத்தடுத்த படங்களில் பார்க்கலாம்.

ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஹீரோவாகி வணிக ரீதியான வெற்றியைப் பெறுவது, நடிப்பில் - நடனத்தில் முன்பை விட முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. ஆனால், பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் ஜி.வி.பிரகாஷும், இரட்டை அர்த்த வசனங்களும் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம்.

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாதிரியார் ஆவது போன்ற மத நம்பிக்கை சார்ந்த காட்சிகளில் காமெடியைப் புகுத்தியிருப்பது ரசிக்க வைக்கவில்லை. 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் அப்பம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ஜி.வி.பிரகாஷ் செய்யும் சேட்டைகள் அவர் மீதான பிம்பத்தை சுக்குநூறாக உடைக்கிறது.

ஒரு படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக டீன் ஏஜ் இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுவதும், அதை அப்படியே படத்தின் ரசிகர்களாக மாற்ற நினைப்பதும், மலினமான ஆபாச நகைச்சுவையை விதைப்பதும் பேராபத்தை விளைவிக்கும். இதை ஜி.வி.பிரகாஷ் உணர வேண்டும்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/தமிழ்-சினிமா-2016-நம்பிக்கை-தகர்த்த-ஐவர்/article9449159.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.