Jump to content

காரைதீவில் மிக பெரிய பிரமாண்டமான அனுமான் சிலை!!


Recommended Posts

6975_1483006890_pppppp.jpg

காரைதீவில் மிக பெரிய பிரமாண்டமான அனுமான் சிலை ஒன்று இன்று (29) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

காரைதீவு மகா விஷ்ணு ஆலயத்தில், லண்டனில் வசிக்கும் அருமத்துரை கோபி, கோபாலகிருஸ்ணா பிரபா ஆகியோரின் அனுசரணையில் இந்த பிரமாண்டமான அனுமான் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொதுமக்கள், பக்தர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

6975_1483006890_rer.jpg

6975_1483006890_ytrg.jpg

http://battinaatham.com/description.php?art=6975

Link to comment
Share on other sites

2 hours ago, Athavan CH said:

காரைதீவு மகா விஷ்ணு ஆலயத்தில், லண்டனில் வசிக்கும் அருமத்துரை கோபி, கோபாலகிருஸ்ணா பிரபா ஆகியோரின் அனுசரணையில் இந்த பிரமாண்டமான அனுமான் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஒரு வருசத்தில எத்தினை முறை இந்தியாவுக்குப் போய்ட்டு வருவினம் என்கிறதை அறிஞ்சால் உண்மை தெரியவரும்.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

இவர்கள் ஒரு வருசத்தில எத்தினை முறை இந்தியாவுக்குப் போய்ட்டு வருவினம் என்கிறதை அறிஞ்சால் உண்மை தெரியவரும்.. tw_blush:

இங்க ஊர்ல குசு விட்ட்டாலும் பேனர் அடிச்சு போடுறாங்க இந்த பெரிய சிலை வைக்க போறாங்கள் சும்மாவா  உலகம் செல்லும் இச்செய்தி  
காரைதீவில் வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் இருப்பாங்களோ?? <_<<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, முனிவர் ஜீ said:

இங்க ஊர்ல குசு விட்ட்டாலும் பேனர் அடிச்சு போடுறாங்க இந்த பெரிய சிலை வைக்க போறாங்கள் சும்மாவா  உலகம் செல்லும் இச்செய்தி  
காரைதீவில் வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் இருப்பாங்களோ?? <_<<_<

நீங்க வேற, தங்கள் ஊரிலேயே சனம் திண்டாடுது உவைக்கு உது தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

நீங்க வேற, தங்கள் ஊரிலேயே சனம் திண்டாடுது உவைக்கு உது தேவையா?

மீரா அண்ண அவங்கள் லண்டன் தானாம் ஒருக்கா விசாரியுங்கோ  ஓம் அண்ணை இங்க சனம் திண்டாடுது  ஊர்ல ஒரு மாளிகை  ஒருகாரு  வச்சி இருக்கணும்  விஸ்நஸ் பண்ணி நாலு பேருக்கு வேலை கொடுங்கடா என்று சொன்னால் கேட் காத சனம் அப்பா இந்த ஊர்க்கார சனம் சனம்     ஆனால் மாளிகைக்குள்ள லைட்டு போட மாட்டான் பாருங்கோவன்  கரண்ட் பில் கூட போயிடுமாம் .

இவங்களுக்கு அறிவுரை சொல்ல போனால்  வேணாம் சாமி  ஊர்ல நான் இருக்கணும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 க்கு பின்னர் திடீர்திடீரென ஆஞ்சநேயர் கோவில்கள் முளைத்து வருகின்றது . ஒருபக்கத்தில் புத்தவிகாரைகள் மறுபுறத்தே முன்னர் ஈழத்தில் இருந்திராத கோவில்கள் முளைத்து வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை உருவாக்கிவருகின்றது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் காரைதீவில்  எல்லைகளில் உள்ள வளவுகளை ( காணிகளை )  கோவில்  நிர்வாகத்தினர் வாங்கி பிற  இனத்தவர்களால் வாங்க முடியாதபடி  வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்கள்   அந்த மக்கள் அந்த வீட்டில் வசிக்கலாம் விற்க முடியாது அதை பாராட்டி ஆக வேண்டும்  காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினரை :109_vulcan:

Link to comment
Share on other sites

14 minutes ago, தமிழரசு said:

2009 க்கு பின்னர் திடீர்திடீரென ஆஞ்சநேயர் கோவில்கள் முளைத்து வருகின்றது . ஒருபக்கத்தில் புத்தவிகாரைகள் மறுபுறத்தே முன்னர் ஈழத்தில் இருந்திராத கோவில்கள் முளைத்து வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை உருவாக்கிவருகின்றது . 

மொத்தத்தில் தமிழரை சிலையாக்கி விடுவார்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

மொத்தத்தில் தமிழரை சிலையாக்கி விடுவார்கள் போல.

இதில் ஒருவிஷயம் மட்டும் தெளிவாக புலப்படுகின்றது என்னவெனில் கிந்தியாவின் திணிப்புக்களுக்கு தமிழ் ஈழ விடுதலை புலிகள் முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றார்கள் என்பது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்த விகாரைகள் போன்றே இதையும் கண்டிக்க வேண்டும்! ஈழ தமிழர் அரசியல் தலைமைகள் என்ன செய்து கொண்டு உள்ளார்கள்?? ரெல் மீ..

Link to comment
Share on other sites

5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புத்த விகாரைகள் போன்றே இதையும் கண்டிக்க வேண்டும்! ஈழ தமிழர் அரசியல் தலைமைகள் என்ன செய்து கொண்டு உள்ளார்கள்?? ரெல் மீ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா உங்களுக்கு இதெல்லாம் தேவையா:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

ஆனால் காரைதீவில்  எல்லைகளில் உள்ள வளவுகளை ( காணிகளை )  கோவில்  நிர்வாகத்தினர் வாங்கி பிற  இனத்தவர்களால் வாங்க முடியாதபடி  வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்கள்   அந்த மக்கள் அந்த வீட்டில் வசிக்கலாம் விற்க முடியாது அதை பாராட்டி ஆக வேண்டும்  காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினரை :109_vulcan:

இன்றய உலக ஒழுங்கில் இந்துக்கள்(சைவமல்ல) என்ற அடையாளத்துடந்தான் சைவர்கள் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்தகூடியதாக இருக்கும்......அதற்கு இந்தியா என்ற அரசின் இந்து விரிவாக்க கொள்கையுடன் சைவர்கள் இசைந்து போக வேண்டிய கட்டாயத்தில் சைவர்கள் உள்ளனர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Essen und Innenbereich

அவ்வளவும் ஒரிஜினல் உளுந்திலை செய்த வடை.......ஆஞ்சனேயா காப்பாற்று..

Link to comment
Share on other sites

பண்பாடு அற்ற, கலாச்சாரமற்ற பிற்போக்கு ஹிந்தியர்களைப் பார்த்து குரங்குகளைக் கும்பிடுமளவுக்கு, கழுதைப் படங்களை  வீட்டில் வைக்குமளவுக்கு இலங்கை இந்துக்களின் நிலைமை கீழ் நோக்கி செல்வது மிகவும் கவலைக்குரியது.

இந்து அமைப்புக்கள், கோவில்கள் விழித்துக்கொள்ள வேண்டும்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.