Jump to content

2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா? #2016Rewind


Recommended Posts

2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா? #2016Rewind

 

தற்போதைய தமிழ்த் திரையுலகில் விஜய் முதல் விக்ரம் பிரபு வரை திரையுலகைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் பலர் முன்னனி நடிகர்களாகவும், தொழில்நுட்ப கலைஞர்களாகவும் வலம் வருகின்றனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு என்ட்ரி கொடுத்த நடிகர்களின் வாரிசுகள் லிஸ்ட் இதோ...

வாரிசுகள்


சித்து :

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயப்பிரதாவின் மகன். இந்த ஆண்டு வெளியான 'உயிரே உயிரே' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சித்தார்த் ( எ) சித்து. 'அலைபாயுதே' மாதவன், 'பாய்ஸ்' சித்தார்த் மாதிரி முதல் படமே தாறுமாறா அமையனும்னா லவ் சப்ஜெக்ட் தான் சரியான ரூட்' என முடிவு செய்தவர்கள் அக்கட தேசத்தில் அதிரிபுதிரி ஹிட் அடித்த 'இஸ்க்' திரைப்படத்தை 'உயிரே உயிரே' என இங்கே ரீமேக்கினார்கள். ஆனால், படம் தான் பப்படம் ஆகிடுச்சு. #உயிரே உயிரே... தப்பிச்சு எங்கேயாச்சும் ஓடிவிடு...

Vijay-Baby-Nainika-Images_16105.jpg


நைனிகா :

பிரபல நடிகை மீனாவின் மகள். 'தெறி' படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து 'தெறி பேபி'யாக விஜய் ரசிகர்களின் நெஞ்சில் குடியேறினார். க்யூட் எக்ஸ்பிரஷன், ஸ்வீட் டயலாக்ஸ் என திரையில் அதகளம் பண்ணிய நைனிகாவை எல்லோருக்குமே பிடித்துப்போனது. நைனிகாவை அடுத்தடுத்து படங்களில் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். #கலக்கல் பேபி

Ennul-Aayiram-Movie-Stills-7-1_16443.JPG


மகா :

பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷின் மகன். 'என்னுள் ஆயிரம்' எனும் ரொமாண்டிக் த்ரில்லர் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். கிருஷ்ணா குமார் என்பவர் இயக்கிய இந்த படத்தை , டெல்லி கணேஷே தயாரித்தார். பிரபல மல்லுவுட் இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. #பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

shariq_16087.jpg


ஷரிக் ஹசன்:

நடிகர்கள் ரியாஸ் - உமா தம்பதியின் மகன். ஜி.வி.பிரகாஷ், ஶ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான 'பென்சில்' திரைப்படத்தில் வில்லனாக வந்து மிரட்டியவர். படம் பெரிதாக ரீச் ஆகவில்லை என்றாலும் ஷரிக் ஹசன் மக்கள் மத்தியில் ஓரளவு ரீச் ஆனார். இவரது பெற்றோர்களுக்கு இவரை ஹீரோவா பார்க்கனும்னு ஆசையாம். கட்டதுரைக்கு கட்டம் நல்லாருந்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு பட்சி சொல்லுது... #வில்லனுக்குதான் ஆளில்லை ப்ரோ!

New_folder-Kuralarasan-3_jpg-b9d1452e081


குறளரசன் :

சகலகலா வல்லவர் டி.ஆரின் இரண்டாவது மகன். இந்த ஆண்டு தனது அண்ணன் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 'காத்தாக...' பாடல் மட்டும் சிலர் மொபைலில் ரிப்பீட் மோடில் ஒலித்தது. எனக்கென்னமோ குறளரசனை சீக்கிரமே ஹீரோவா பார்ப்போம்னு தோணுது. #டண்டணக்கா

Kalidas_jayaram-poomaram-movie-photos-wa


காளிதாஸ் ஜெயராம் :

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன். தனது பத்தாவது வயதில் 'என்டே வீடு அப்புவிண்டேயும்' எனும் மலையாள படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற இவர் படித்தது சென்னை லயோலா கல்லூரியில். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அடுத்து இயக்கிய 'ஒரு பக்க கதை' படத்தில் காளிதாஸ் தான் ஹீரோ. 2014-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிட்ட இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் இவர் அடுத்து நடித்த 'மீன் குழம்பு மண் பானையும்' படம் சமீபத்தில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை. #ஹலோ பாலாஜி சாரா? 'ஒரு பக்க கதை'யை எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க?

tanya_16320.jpg

தன்யா :

நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. சமீபத்தில் வெளியான 'பலே வெள்ளையத் தேவா' படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். அருள்நிதியோடு இவர் இணைந்து நடித்த 'பிருந்தாவனம்' திரைப்படம் 2017-ல் ரிலீஸாக காத்திருக்கிறது. சீக்கிரமே தன்யா தல, தளபதியோடு ஜோடி சேர்வார் என எதிர்பார்க்கலாம். #நம்பிக்கை அதானே எல்லாம்...

http://www.vikatan.com/news/cinema/76130-star-kids-who-made-their-debut-in-2016.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.