Jump to content

பெண் என்றால் அவள் உடல் மட்டும்தானா..? - சமூகத்துக்கு ஒரு கேள்வி!


Recommended Posts

பெண் என்றால் அவள் உடல் மட்டும்தானா..? - சமூகத்துக்கு ஒரு கேள்வி!

 

பெண் 


சமீபத்தில் உலகத்தரத் திரைப்படமாகக் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் பார்த்தேன். ஆனால், நடு ஹாலில் அமர்ந்து பார்க்கும் படமாக அது இல்லை. என் இளைய மகன் எப்போதும் என்கூடவே இருப்பதால், அவன் பார்க்கக் கூடாத படங்களை நான் பெரும்பாலும் லேப்டாப் மற்றும் டி.வியில் பார்ப்பதில்லை. குழந்தைகளுக்கான கார்ட்டூன், அல்லது கணவருக்கான செய்தி சேனல்களுக்கு மட்டுமே ஹாலில் இருக்கும் டிவியில் அனுமதி உண்டு.

சம்பந்தப்பட்ட படத்தின் கதையம்சம், ஆண்களின் உலகை அப்பட்டமாகக் காட்டுவதாக ஒரு விமர்சனம் படித்தேன், ஒவ்வொரு மனிதருக்கும், மறைக்கப்பட்ட எதிர்பாலின பக்கங்களைக் காண ஒரு பேராவல் எழும்தானே ..?!

இத்தாலியில் ஒரு சிறு நகரத்தில் நடக்கும் கதை. அழகிய பெண், அவள் கணவனுக்கு ராணுவத்தில் வேலை, போர்ச்சூழல். இந்நிலையில், அந்தப் பெண்ணை யாரும் மனுஷியாகவே பார்ப்பதில்லை. அவளின் உடல், அழகு... இதுதான் ஆண்களுக்கு 'அவள்'. ஆண்கள் அவளைப் பற்றி பேசுவதும், பரவசப்படுவதும், பெண்கள் அவளை அந்த,  இந்த ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவதும், பொறாமை கொள்வதும்... இதுதான் அவளைச் சுற்றிய உலகம். இவற்றையெல்லாம் காதில் வாங்காமல் அவள் தன் வேலையை கவனிப்பாள். தன் கணவனின் வருகைக்காக காத்திருப்பாள்.

இந்தப் படத்தின் ஹீரோ, ஒரு பதின் வயதுச் சிறுவன். அவள் மேல் பைத்தியமாகி அவளைத் தொடர்வான். சாவித் துவாரம்வரை விடுவதில்லை. அவளின் இரவுகள், பகல்கள் இவனுக்கு அத்துப்படி. டீன் ஏஜ், ஹார்மோன்கள் வேகம் காரணமாக, அவளைப் பார்க்கும்போதெல்லாம் உரித்துதான் பார்க்கத் தோன்றும் அவனுக்கு. இந்தப் படம் பற்றிய ஒரு விமர்சனம் நினைவுக்கு வருகிறது. 'ஆண்கள் பார்வையில், அவர்களுக்கு மிகப்பிடித்துப் போனால் இப்படித்தான் செய்வார்கள்'.

அது வெளிநாட்டுக் கதை என்று ஒதுக்கிவிட முடியவில்லை. அதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. ஒரு பெண், அழகாக ஆண்கள் கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், அவர்கள் உலகத்தில் அந்தப் பெண் மீதான கற்பனை எப்படி கட்டுக்கடங்காமல் போகும் என்று அந்தப் படத்தில் உரித்துக்காட்டி இருப்பார்கள். இது அனைவருக்கும் பொது என்று சொல்லமுடியாவிட்டாலும், பெரும்பாலும் என்றே கவனிக்கலாம்.

பெண்ணோ, ஆணோ... மற்றவர்களுடன் தன்னம்பிக்கையோட பழக தன்னை சிறிதளவேனும் அழகுபடுத்திக்கொள்ளுதல் மிக அவசியம். தன்னைச் சரியாக வெளிக்காட்டிக் கொள்வது, தன் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும் செயல். ஆனால், ஒரு பெண் ஒருவனுக்கு என்று ஏற்பட்டவுடன் வரும் முதல் கட்டுப்பாடு, அழகாக அலங்கரித்தாலும் அது அவனுக்காக என்றே நினைக்க வேண்டும் என்ற திணிப்பு. இதைச் சென்ற தலைமுறையில் அதிகம் கவனித்து இருப்போம். அதில்தான், தனியாக வாழும் பெண்கள், விதவைகள் சிறிது கூடுதலாக தங்களை அலங்கரித்துக்கொண்டால், சக பெண்களே அவர்களை விமர்சிப்பதைக் கண்டிருக்கிறேன். 'இவளுக்கு இந்த அலங்காரம் தேவையா? பார்க்கிறவன் எப்படிப் பார்ப்பான்?' என்பார்கள். அவளின் நுண்ணிய உணர்வுகளை கவனிக்கத் தவறுவார்கள். இப்போதும் சில இடங்களில் நடந்துகொண்டிருக்கும் விஷயம்தான் இது.

p90ae_14238.jpg

இந்தத் தலைமுறைப் பெண்கள், 'அவள் அலங்காரம் அவனுக்காகத்தான்' என்ற திணிப்பைத் தாண்டி இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் வேறு வடிவில் அவர்களின் அந்தச் சுதந்திரத்தை முடக்குகிறார்கள். முகநூலில் பெண்கள் தங்கள் புகைப்படத்தைப் பதிவிட்டாலே, ஆண்களுக்கு ஒரு கிளர்ச்சி ஏற்படும். 'ஆண்கள் உங்களை தவறாகத்தான் பார்ப்பார்கள். பெண்கள் படம் லைக்ஸ் வாங்குவதற்குக் காரணம், பெண் முகம் பார்த்த அவர்களின் கிளர்ச்சிதான்' என்று ஆண் சமூகத்தின் பிரதிநிதியாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் நண்பனோ, காதலனோ எச்சரிப்பார்கள். அறிவுரை சொல்லுவார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு ஆண்கள் உலகம் பற்றித் தெரியும்.

அப்படியெனில், ஆண்களின் கண்ணுக்கு அழகாக, கவர்ச்சியாகத் தட்டுப்படும் பெண்களை வேறு பார்வையில்தான் பார்ப்பார்களா? ஆம்... பார்ப்பார்கள். அது ஏன்? அவர்களுக்கு அதைத் தவிர, பெண்களுடனான ஆரோக்கியமான அணுகுமுறை எதுவும் கற்றுத்தரப்படவில்லை.

இன்னொன்று... கவர்ச்சி. எதன் மேல் கவர்ச்சி வரும்? சுவாரஸ்யமான, மர்மமான விஷயம் மேல் கவர்ச்சி வரும். எதிர்பாலினம் மேல் ஈர்ப்பு ஏற்படுவது, இயற்கையின் ஏற்பாடு. ஆனால், அந்த ஈர்ப்பை வன்முறையில் வெளிப்படுத்தவும், முடிக்கவும் நாம் காட்டில் வாழவில்லை இன்று. காட்டிலும்கூட, கண்களைக் கவரத்தான் இயற்கை அழகைப் படைத்திருக்கிறதே தவிர, சொந்தம் கொண்டாட, வன்முறை, ஆதிக்கம் செலுத்த அல்ல.

வெளிநாட்டில் வாழும் தோழி ஒருவர் சொன்னார்: இந்தியக் குழந்தைகள்  நம் நாட்டில் வேறுவிதமாக வளர்ந்துவிட்டு வெளிநாடு வரும்போது, இங்குள்ள பெண்களை எப்படிப் பார்ப்பது, அணுகுவது என்றுகூடத் தெரியாமல் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர். வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் என்றால், 'அவர்கள் அப்படித்தான்' என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள். எனவே, இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குக் கிளம்பும் மாணவர்களுக்கும் ஆண்களுக்கும், பெண்களைப் பற்றிய சரியான பார்வையையும் கற்றுக்கொடுத்து அனுப்பவேண்டிய தேவை இருக்கிறது!

p96aar_14449.jpg

வெளிநாட்டில் படிக்கும் என் பையனுடைய பல்கலைக்கழகத்தில், ஜூன் மாத வெயிலில் சில மாணவிகள் சண் பாத் எடுத்துக்கொண்டு இருந்தனர். நான் கொஞ்சம் நேரம் அவர்களை கவனித்ததை என் பையன் பார்த்துவிட்டு, 'யாரையும் இப்படி உற்று பார்க்காதேம்மா... தவறு' என்று என் கைப்பிடித்து அழைத்து வந்துவிட்டான். இதே இந்தியாவில் என்றால், பல்கலைக்கழகத்தில் சன் பாத் எடுக்கும் அளவுக்கெல்லாம் வேண்டாம்... மினி ஸ்கர்ட், ட்ரவ்ஸர், ஸ்லீவ்லெஸ் அணிந்த பெண்களை, வெளிநாட்டு மாணவர்கள் போல  இங்குள்ள கல்லூரி மாணவர்கள் சலனமின்றி கடந்து போவார்களா? ஆண்களை விடுங்கள்... பெண்கள் அந்தப் பெண்களைப் பற்றி என்ன பேசுவார்கள்? பல கேள்விகள் மனதுக்குள் ஓடின.

ஒரு சமூகம் பெண் மீது கொண்டுள்ள பார்வையை வைத்தே, அச்சமூகத்தின் நாகரிக வளர்ச்சியை எடைபோட இயலும். பெண்ணின் உடல் சார்ந்த அரசியல் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அளவில் கூடுதலோ, குறைவோ... அந்த அரசியலில் இருந்து எந்தப் பெண்ணும் தப்புவதில்லை.

'எல்லாவற்றிலும் வளரும் சமுதாயம் நாங்கள்' என்று சொல்லிக்கொண்டு, மாண்புமிகு இந்தியர்கள் என்ன செய்கிறோம்? காதலர் தினம் அன்று கண்ணில் படும் ஜோடிகளை எல்லாம் தாலிகட்டச் சொல்லி தடியுடன் வருகிறார்கள் கலாசாரக் காவலர்கள். எல்லாக் கலாசாரங்களும் பெண்களை இம்சிக்கும் நுண்ணிய பிரச்னைகளைக் கொண்டுள்ளன. உறவு ரீதியாக பலப்பட்ட திருமண பந்தங்கள்கூட  விவாகரத்தில் முடியும் காலத்தில், அப்போதுதான் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் காதல் காலத்தில், 'லவ்வர்ஸ்னா அப்போ தாலி கட்டு' என்று நாட்டாமை செய்யும் கேலிக் கூத்தை நடத்திப் பார்க்கும் ஒரு போலி கலாசார அமைப்பை, இந்தக் காலத்திலும் அனுமதித்து இருக்கிறோம்.

உண்மையில் காலாசாரம் என்ற பெயரில் இந்தச் சமூகம் வலியுறுத்துவது என்ன தெரியுமா? ஆண் மனது... ஆண் பார்வை. இங்கு பெண்களின் சுதந்திரம் பற்றி கேள்வி இல்லை. அவள் முகம் மூடிக்கொள்ள வேண்டியவள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் இந்த இணையக் காலத்தில் இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது அவளுக்கான பட்டியலில். தங்கள் முகம் தோன்றா  புகைப்படங்களை ப்ரொஃபைல் பிக்சராக செட் செய்வது, தங்களின் படங்களை பதிவிடாமல் இருப்பது... இதுதான் குடும்பப்(!)  பெண்களுக்கு அழகு. இது மீண்டும் மீண்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலரால் வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

p16ar_14064.jpg

இன்னும் சில ஆண் குரல்களும் மனங்களும் இங்கே...

'டெல்லியில் நிர்பயா இரவில் சென்றது தவறு. ஒரு போலிஸ் அதிகாரி வீட்டில் பார்ட்டிக்குச் சென்றது பெண்ணின் தவறு. அரசியலுக்கு வந்தால் சேலையைப் பிடித்தும் இழுப்போம், இதெல்லாம் சகஜம். துணிவிருந்தால் மட்டுமே வரவேண்டும். சினிமா நடிகையென்றால் பொது இடம் என்றுகூட பார்க்க மாட்டோம்... காசு கொடுத்து சினிமா பார்க்கிற நாங்கள் கொஞ்சம் தொட்டுப் பார்ப்போம். இதுதான் ஆண்மை.

ஒரு பெண்ணை, மனதில் அழுக்குடன் பார்க்கும் பார்வை ஆண்மை. அவளைத் தொட்டால் அது பேராண்மை. அதை பெருமையாக நண்பர்களிடமும் சொல்வோம். பெண்ணை பொய்யாக மயக்குவோம். அன்பு என்று சொல்லி அவளை மனம் மாற்றுவோம். சிதைப்போம். அடிமையாக்குவோம். ஒரு பொன்னாளில், 'நீ வேண்டாம் போ' என்போம். இன்னொரு பெண் தேடுவோம். எதுவுமே தவறில்லை.'

ஏனென்றால், பெண் என்ற புனித பிம்பம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வாள். ஆம் ஆண்களே... அவளுக்கு ஆசிட் வீசத் தெரியாது. தன் காதலை மறுப்பவனை நடுரோட்டில் வைத்து வெட்டத் தெரியாது. ஆணை கதறக் கதற வலுக்கட்டாயமாக சேதப்படுத்த அவளுக்கு வலுவோ, மனமோ இல்லை. ஒரே சமயத்தில் மூன்று, நான்கு ஆண்களைக் காதலித்து, 'அனைவரும் தன் இணை' என்று பெருமையாக வெளியே சொல்லிக்கொள்வது கிடையாது.

பலதார மணம், இங்கு ஆண்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணுக்கு இரண்டாம் திருமணமும் முறிந்து, மூன்றாவது உறவை அவள் நேர்மையாகத் தேர்ந்தெடுத்தால், சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு அவளை நோக்கிக் கேள்விகள் கொட்டப்படும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அவசியமில்லை. ஒருத்திக்கு ஒருவன் இல்லாவிடில், மிகப்பெரும் சமூகக்கேடு.

'ஏன்... ஆண்களுக்கு இருக்கும் உணர்வு பெண்களுக்கும் இருக்கும்தானே?' என்றெல்லாம் இங்கு நாம் கேள்வி எழுப்பக்கூடாது. ஏனென்றால் நாம் பெண். சமூகக் கோட்பாடுகளை தாங்கிப்பிடிக்க வேண்டும். எல்லைக் கோட்டை சிறிது தாண்டினாலும் சமூகம் குலையும். 'வேற்றுப் பெண்களிடம் நான் எப்படியும் பழகலாம். எனக்கு உரிமை, சலுகை உண்டு. என் மனைவியோ, காதலியோ என்னிடம் மட்டுமே பழக வேண்டும். எனக்கு உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வேண்டாம்' என்ற ஆண் மனதுக்கு, பெண் அடிமை சாசனம் எழுதப்பட்டவள்.

பெண் உடலிடம் வெளிப்படையாக வன்முறை நிகழ்த்தும் ஆண்கள் ஒருபுறம் என்றால், அவள் கூடவே இருந்து வாழ்க்கை நடத்தும் ஆண்களின் மன வன்முறைகள், ஆதிக்கங்கள் உக்கிரமானவை. தாங்கள் அவளைச் சந்தேகப்படுவதைக்கூட, 'அவளுக்கு ஒன்றும் தெரியாது, நான்தான் பார்த்துக்கணும்' என்ற போர்வையில் நுட்பமாகச் செய்பவர்கள். அதுவே பெண், தன் கணவர் இன்னொரு பெண்ணிடம் பழகுவதைப் பற்றி கேள்வி எழுப்பினால், 'சந்தேகப்பிராணி, வாய்க்கொழுப்பு, பொறாமைபிடிச்சவ' என்று ஆயிரம் சொற்கள் அவளைக் கரிக்கும். அதிலும் ஒரு சுயபச்சாதாபத்தை தேடிக்கொள்ளும் சில ஆண்களின் உலகம், மிக சுயநலமானது.

பெண்களுக்குத் தேவை பாதுகாப்பு இல்லை. ஏன் என்றால், அவளுக்கு ஆபத்து என்று சொல்பவர்களும், அவளைப் பாதுகாக்கிறேன் என்று சொல்பவர்களும் ஒரே இடத்தில் இருந்துதான் வருகிறார்கள். ஒன்றே ஒன்று செய்யுங்கள்... உங்கள் வீட்டு, தெரு, சமூக, ஊர், மொழி, நாட்டு, உலகப் பெண்களைப் பாதுகாக்க ஆசையிருந்தால்... பெண்ணின் உடலை எப்படிக் கடக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணுக்கும் சொல்லித்தாருங்கள். எழும் உணர்வுகள் இயற்கையாக இருந்தாலும்கூட, அதை ஆரோக்கியமாக எதிர்கொண்டு, சக பெண்ணைக் காயப்படுத்தாமல் எப்படிப் பேசி, பழக வேண்டும் என்று கற்றுத்தாருங்கள்.

ஆண், பெண் என்ற திரைகளுக்குப் பின்னால் இருக்கும் பிரமிப்பு அழகு, சுவாரஸ்யம் என்பதைவிட, நாளுக்கு நாள் அது ஆபத்தாக மாறி வருகிறது. எனவே ஆண், பெண் என்பதை உடைத்து சக மனிதர்கள் என்ற நட்புப் பார்வையில், பேச , பழக ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லித்தாருங்கள். பள்ளி, கல்லூரிகளில் ஆண், பெண்களை விலக்கிவைத்திருக்கும் கட்டுப்பாடுகளை தகர்த்து எடுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னைப் பார்த்துக்கொள்ள நன்றாகவே தெரியும். ஒவ்வொரு ஆணும் தன் மனதைப் பார்த்துக்கொள்ளவேண்டிய சமூகக் கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்தப் படத்தில் கதாநாயகியை ஆண்கள் வன்புணர்வு செய்ய, சக பெண்கள் நடுரோட்டில் அவளைக் கதற, கதற அவள் தலைமுடியை வெட்டி அவமானப்படுத்தி வன்மம் தீர்ப்பார்கள். ஆனால், அவள் கணவன் அவளை ஏற்றுக்கொள்ள, அதன் பிறகுதான் ஊர் அவளுக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிக்கும். தமிழ் சினிமாவில் கதாநாயகன் தன் அம்மாவைப் பத்தினி என்று நிரூபிக்கப் போராடும் அபத்தத்திற்கு சிறிதும் குறைவே இல்லாமல் இருக்கிறது இந்த வெளிநாட்டுப் படத்தின் க்ளைமாக்ஸ். ஆண்கள் அனுமதித்தால் மட்டுமே பெண்களால் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை, நுட்பமாகக் காட்டிக்கொடுத்து உள்ளார்கள்.

p76ar_14492.jpg

இதற்கு முடிவு என்ன? உறவுகள் குறித்து குழப்பிக்கொள்ள வேண்டாம். நம் வீட்டில்தான், நம்மைச் சுற்றிதான் பெண்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும், அன்பானவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள்... என்ன செய்யலாம்?!

பெண் என்றதுமே அவளின் உடல்தான் எனும் கருத்தாக்கத்தில் இருப்போர் முதலில் வெளியே வாருங்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் கோயில் மட்டுமில்லை, கல்லூரி முதல் கழிப்பறை வரையில்கூட தூரம் விலகும் அளவுக்கு சமநிலையை உருவாக்குவோம். ஒரு பெண்ணை எந்தச்  சலனமுமின்றி, ஆரோக்கியமாகப் பார்க்கும் கண்களும் மனதும் அமையப்பெற்ற ஆண்களை உருவாக்குவோம், பெருக்குவோம்.

சக மனுஷியை நேர்மையான பார்வையுடன் கூடுதலாக நேசிப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?!

Link to comment
Share on other sites

சக மனுஷியை நேர்மையான பார்வையுடன் கூடுதலாக நேசிப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?! ......

Link to comment
Share on other sites

2 hours ago, வந்தியத்தேவன் said:

சக மனுஷியை நேர்மையான பார்வையுடன் கூடுதலாக நேசிப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?! ......

 

2 hours ago, நவீனன் said:

மனுஷியை நேர்மையான பார்வையுடன் கூடுதலாக நேசிப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?!

ஏம்பா, வீட்டை நிம்மதியா இருக்கப் பிடிக்கலையா?

3D Smiley Says No Way animated emoticon

Link to comment
Share on other sites

பல ஆண்கள் தம்மை திரும்பிப் பார்க்க வேண்டும். அதன்மூலம் தனக்கு மிகவும் தோதான துணையை (அறிவு, பலம், ஆரோக்கியம் போன்ற விடயங்களில் சிறந்த ஆண்) தான் பெற வேண்டும் என்பது பெண்களின் உடல் அணுக்களில் எழுதப்பட்டிருப்பது. tw_blush: உடல் அழகில் கூடுதல் கவனம் செலுத்துதல், வண்ணப்பூச்சுக்கள் பூசுதல், கடைக்கண் பார்வை, கவர்ச்சியான ஆடை என அவர்கள் போவதற்கு இதுவே காரணம். நல்ல துணையைத் தேர்ந்தெடுத்த பின் அவர்கள் வம்ச விருத்தி செய்வார்கள். இன்னொரு சக வயதுப் பெண்ணைக் கண்டால் அவர்களுக்கு எரிச்சல் வரும். :D:

ஆனால் இதற்கு முரணான சிந்தனையை தமது உடல் அணுக்களில் கொண்டவர்கள் ஆண்கள். எவ்வளவுக்கெவ்வளவு தம் வம்சத்தை விருத்தி செய்ய முடியுமோ அவ்வளவுக்கும் செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்தது நேரடி நெல் விதைப்பு முறைதான். tw_blush: அதனால் சக நண்பர்களுடன் பிரச்சினைப் படமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் தெரிவுகள் அதிகம். ஆனால் சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து பலர் ஒரு வீட்டோடு குடித்தனம் நடத்துகிறார்கள். :unsure:

இதில் நம்மூரு பசங்களுக்கு பெண்களை கண்ணிலும் காட்டமாட்டார்கள். அவர்கள் வெளிநாட்டுக்கு வந்தால் வாயைப் பிளக்கத்தான் செய்வார்கள். ஆனால் வெள்ளையரும், கருப்பரும் சிறு வயதிலேயே ஆண், பெண் நண்பர்கள் என்று குடித்தனத்தை ஆரம்பித்துவிடுவதால் வில்லங்கமான பார்வைகளை வீசமாட்டார்கள். ஆகவையால் இந்த இடத்தில் ஒப்பீடுகள் தவறு. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.