Jump to content

2016 - ல் கவனம் ஈர்த்த துணைக் கதாபாத்திரங்கள்!


Recommended Posts

2016 - ல் கவனம் ஈர்த்த துணைக் கதாபாத்திரங்கள்!

 

2016-ம் ஆண்டு, ரசிகர்களுக்கு வெள்ளித்திரை அளித்தது வகைவகையான  விருந்து. குறிப்பாக, கதாநாயகிகளுக்கு இணையாக துணைக் கதாபாத்திரங்கள் ஏற்ற நடிகைகள் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு, பல திரைக்கதைகளில் வழங்கப்பட்டன. அப்படி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவர்களில் சிலர்... 

மியா ஜார்ஜ்

துணைக் கதாபாத்திரங்கள்


தொடரும் பெண் பார்க்கும் படலம், ஏதோ ஒரு காரணத்தால் கைநழுவிச் சென்றுகொண்டே இருக்கும் திருமண யோகம்... இந்தச் சூழல் ஒரு கிராமத்து அப்பாவிப் பெண்ணின் மனதை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் 'ஒருநாள் கூத்து'. 'லட்சுமி' கேரக்டரில், கிராமப்புற இளம் பெண்களின் நிலையையும், உணர்வுகளையும் மியா ஜார்ஜ் தன் கண்களாலும், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பாலும் அழுத்தமாகப் பதிவுசெய்திருந்தார். பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை தனக்குப் பிடித்திருந்தாலும், அப்பாவின் பேச்சை மீறாத மகளாக தன் சோகங்களை மனதிலேயே புதைத்துக்கொள்வதும், தலைநிமிர்ந்துகூட பேசாதவர் வீட்டைவிட்டு  வெளியேறுவதும், பிறகு சிக்கல் ஏற்பட்டு மீண்டும் வீட்டுக்கே வருவதும், இறுதியில் எப்படியோ ஒரு மாப்பிள்ளையுடன் தனக்கு திருமணம் செட் ஆவதும் என... எதார்த்தமான நடிப்பால் அசத்திவிட்டார் மியா ஜார்ஜ்!

'கொளப்புள்ளி' லீலா!

நடிகை

சென்ற வருடம் நம்மை சோகத்தில் ஆழ்த்தி விடைபெற்றுச் சென்ற ஆச்சி மனோரமாவை, இந்த ஆண்டு 'மருது' படத்தில் தன் 'அப்பத்தா' கேரக்டர் மூலமாக நம் நினைவுக்குக் கொண்டுவந்தவர் 'கொளப்புள்ளி' லீலா. தமிழ் தெரியாததால் வசனங்களை தன் தாய்மொழியான மலையாளத்தில் எழுதி வைத்துப் பேசினாலும், முகபாவனைகளிலும் வார்த்தை உச்சரிப்பிலும் அசத்திவிட்டார். குறிப்பாக வில்லன் குழுவால் தலையில் எண்ணெய் தேய்க்கப்பட்டு, குளிர்ந்த தண்ணீரில் முக்கி எடுக்கப்பட்ட காட்சிகளின் பெரிய பலம், இவரது கண்கள். மதுரை வட்டார உடல்மொழியுடன் நம்மை கவர்ந்த இந்த அப்பத்தாவை, தமிழ் சினிமா சிறப்பாகப்  பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை


ஒரு பக்கம் ஹிரோயினாக நடித்து வந்தாலும், மறுபக்கம் சில படங்களில் அழுத்தமான கேரக்டர் ரோல்களிலும் தடம் பதித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, இந்த ஆண்டு நல் ஆண்டு. குறிப்பாக 'தர்மதுரை' படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், 'அன்புச்செல்வி'யை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?! கிராமத்துப் பெண்ணின் எதார்த்த குணங்களால் ஈர்க்கப்பட்டு காதல் வயப்படும் விஜய் சேதுபதியை, முதலில் 'அண்ணே' எனக் கூப்பிட்டு, பின்னர் விஜய் சேதுபதி தன்னை பெண் கேட்டு வரும்போது 'மாமா' என அழைத்து ரசிக்க வைத்தவர், தன் அப்பாவுக்குக் கஷ்டம் தரக்கூடாதென தன்னையே மாய்த்துக்கொள்ளும் காட்சியில் கலங்கவைத்தார்! 

தீபா ராமானுஜம்

நடிகை
 

கே.பாலச்சந்தரின் 'பிரேமி' உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த தீபா ராமானுஜம், நடுவில் கொஞ்சம் நாள் மிஸ்ஸிங். நடிகை, நாடக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், இயக்குநர், டயட்டீஷியன் என பன்முகங்களைக் கொண்டவர்... இந்த ஆண்டில் மூன்று படங்களில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்து, பலரையும் கவனிக்க வைத்தார். 'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மா, 'பிச்சைக்காரன்' படத்தில் விஜய் ஆண்டனிக்கு அம்மா, 'இது நம்ம ஆளு' படத்தில் நயன்தாராவுக்கு அம்மா என, அழகு அம்மா. குறிப்பாக, 'பிச்சைக்காரன்' படத்தில் தந்தை இல்லாத மகனை வளர்த்து ஆளாக்கும் தாய். அந்த ஃப்ளாஷ் பேக் பாடலில், நம் மனதில் எக்கச்சக்க இடம் பிடித்தார் தீபா.   

தன்ஷிகா!

நடிகை


'கபாலி' படத்தில் ஆக்‌ஷனில் தெறிக்கவிட்டிருந்தார் 'யோகிதா'  தன்ஷிகா. வில்லன் கிஷோரால் தன் அப்பா ரஜினியையே கொலைசெய்ய அனுப்பப்படும் தன்ஷிகா, பின்னர் தன் அப்பாவுடன் கைகோத்து வில்லன்களை துவம்சம் செய்யும் கதைக்களம். அட்டகாச ஹேர்ஸ்டைல், கேங்ஸ்டர் உடல்மொழி என, இதுவரைப் பார்த்த தன்ஷிகாவை மறக்கவைத்து, 'யோகிதா'வை ரசிக்கச் செய்தார். சூப்பர் ஸ்டாரின் படத்திலும் தனக்கென்று ஸ்கோர் செய்த பவர்ஃபுல் கேரக்டர்!
                                                                           

http://www.vikatan.com/news/miscellaneous/75921-best-supporting-actresses-of-tamil-cinema-in-2016.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.