Jump to content

கல்யாண்ஜி கவிதைகள்.


Recommended Posts

கை தவறிக் கீழே விழுந்த 
கடலை எல்லாம் சாமிக்கு.
துறட்டிக்கு எட்டாமல் 
தூரப்போன 
முற்றல் முருங்கைக் காயெல்லாம்
கிளிகளுக்கு.
கறவைகளுக்குச் சுருக்காமல் 
காம்பில் எக்கின
பால் எல்லாம் கன்றுக்கு.
திருவினை ஆகாத
முயற்சித் திராட்சை எல்லாம்
பந்தலுக்கு.
எட்டுவது....கிட்டுவது
எல்லாம் எனக்கு.
முடியாதது....படியாதது
முழுவதும்...
உனக்கே உனக்கு. 
*******************************************************
தண்ணீர்த் தொட்டியில்
செத்துக் கிடந்த 
காக்கைக் குஞ்சுகளுக்கு 
மனதார வருத்தப் பட்டாயிற்று.
வாசலில் நிற்கும்
வயசாளிக்கு .....
"ஒன்றுமில்லை" என்று
அனுப்பிவிடலாம்.
இன்றைக்கு .....
என்னால் முடிந்தது இவ்வளவே.
**************************************************************
இருந்து ....
என்ன ஆகப் போகிறது ?
செத்துத் தொலையலாம்.
செத்து....என்ன ஆகப் போகிறது?
இருந்தே தொலையலாம்.
***************************************************************
"பேசும் பார் என் கிளி" என்றான் 
கூண்டைக் காட்டி.
அந்தக் கிளிக்கு வால் இல்லை.
வீசிப் பறக்கச் சிறகில்லை.
வானம் கைப் பட வழியே இல்லை.

"பேசும்! இப்போது பேசும் பார்!" 
என மீண்டும் மீண்டும் அவன் சொல்ல...

"பறவை" என்றால் 
"பறக்கும்" எனும்
பாடம் முதலில் படி! என்றேன்.
**********************************************************************
கூண்டுக் கிளிகளின் 
காதலில் பிறந்த 
குஞ்சுப் பறவைக்கு....
எப்படி வந்தன?................
எதற்கு வந்தன?...............
"சிறகுகள்".
*********************************************************************

http://www.eegarai.net/t81430-topic

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.