Jump to content

ஒரு யாத்திரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

அதொண்டும் பிரச்சினை இல்லை முனிவர்.... பொட்டியை  நேர்வழியில் அனுப்பிவிட்டு நீங்கள் வழக்கம்போல் குறுக்கு வழியில போகலாம்....! tw_blush:

அனுபவ சாலி அண்ணேtw_blush:tw_blush: 
நீங்க சொன்ன கருத்துக்கு  தனிய இருந்து சிரிக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply

இது வரை யாழில் இப்படி ஒரு அனுபவத்தை யாரும் பதிந்ததாக ஞாபகம் இல்லை. சுவாரசியமாக இருக்கும் என நிச்சயமாக நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2017 at 0:00 PM, Rajesh said:

எங்கே மீதிக் கதை?

மீதி வரும் வெள்ளிக்கிழ்மையுடன் முடிவடையும்  :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2016 at 5:17 PM, முனிவர் ஜீ said:

 

பெயருக்கும் செயலுக்கும் என்ன அண்ண வச்ச புனைப்பெயரே  சரியாக அமைந்து விட்டது போல் ஓடுகிறது   மத்திய கிழக்கில்  இருக்கும் போது நண்பர் ஒருவருக்கு வைத்த பட்டம் அது  முனி என்று  யாழில் இணையும் போது புனை பெயர் கேட் க அதை வைத்தேன்  அவ்வளவுதான் ஆனால் ஒரு  முருக பக்தன் அவ்வளவே

நானும் ஒரு முருக பக்தன்தான். அதற்க்கு ஒன்றுக்கு மேற்படட காரணங்கள் உண்டு 
 

Link to comment
Share on other sites

18 hours ago, முனிவர் ஜீ said:

மீதி வரும் வெள்ளிக்கிழ்மையுடன் முடிவடையும்  :100_pray:

நன்றி முனிவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழரசு said:

நானும் ஒரு முருக பக்தன்தான். அதற்க்கு ஒன்றுக்கு மேற்படட காரணங்கள் உண்டு 
 

உந்த ஒன்றுக்கு மேற்படட காரணங்களால உங்களைப்போல் ஒரு முருக பக்தனாக இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆனால் காலம் என்னவோ நீ இராமனாகவே இருந்து தொலைடா என்று விதித்து விட்டது....! tw_blush:

18 hours ago, தமிழரசு said:

நானும் ஒரு முருக பக்தன்தான். அதற்க்கு ஒன்றுக்கு மேற்படட காரணங்கள் உண்டு 
 

உந்த ஒன்றுக்கு மேற்படட காரணங்களால உங்களைப்போல் ஒரு முருக பக்தனாக இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆனால் காலம் என்னவோ நீ இராமனாகவே இருந்து தொலைடா என்று விதித்து விட்டது....! tw_blush:

முனிவர் நீங்கள் முருக பக்தர் என்று அங்க தெரியுமா எதற்கும் கவனம்...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2017 at 5:12 PM, suvy said:

உந்த ஒன்றுக்கு மேற்படட காரணங்களால உங்களைப்போல் ஒரு முருக பக்தனாக இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆனால் காலம் என்னவோ நீ இராமனாகவே இருந்து தொலைடா என்று விதித்து விட்டது....! tw_blush:

உந்த ஒன்றுக்கு மேற்படட காரணங்களால உங்களைப்போல் ஒரு முருக பக்தனாக இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆனால் காலம் என்னவோ நீ இராமனாகவே இருந்து தொலைடா என்று விதித்து விட்டது....! tw_blush:

முனிவர் நீங்கள் முருக பக்தர் என்று அங்க தெரியுமா எதற்கும் கவனம்...!  tw_blush:

ஹாஹா அண்ணே  முருக பக்தன் தான் ஆனால் ராமனாக்கும் 
அந்தாள் மாதிரி இல்லை (முருகன்) 

 

On 1/19/2017 at 5:00 PM, Rajesh said:

நன்றி முனிவர்!

மன்னிக்கவும் கொஞ்சம் தாமதமாகும்  கொஞ்சம் வேலை இருக்கிறதுtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாலை என்ற இடத்தை அடைந்தோம்  என்னுடன் வந்தவர்கள் வருவார்கள்  என  வழியில் காத்து இருந்தேன் வரவில்லை சுமார் இரண்டரை மணிநேரத்தின் பின்பே வந்தார்கள் வந்தவர்களிடம் நான் நடந்தவற்றை கூற திகைத்து போனார்கள்  சரி வா இப்படி எல்லோருக்கும் பார்க்க  கிடைப்பதில்லையென்று சொல்லி ஒரு அழகான ஆற்று நீர் ஓடிய தரையில் அமர்ந்து கொண்டோம். அந்த நேரம் தண்ணீர் இல்லை ஆற்றில் ஒரு ஓரம் மட்டுமே நீர் சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் நான் போன உடனேயே பொருட்களை அங்கே இறக்கிவிட்டு  ஆற்றில் மிதக்க ஆயத்தமானேன்  அவர்களூம் வந்த களைப்பில் நல்ல தேநீர் போட்டு குடிப்போம் பிறகு சமைக்க ஆயத்தம் செய்வோம் என்று நல்ல தேநீர் செய்து தந்தார்கள் அந்த இடத்தில் கொண்டு சென்ற பிஸ்கட் பைகள் , சிற்றுண்டிகளை சுவைத்தும் நல்ல தண்ணீரை கண்ட சந்தோசத்தில் நான் இருந்தாலும் சுட வைத்து தான் குடிங்கள் என்றார்கள் நல்ல தண்ணீராக இருந்தாலும் குடிக்க முடியாது காரணம் ஆற்றில் மிருகங்களீன்,பறவைகளின்  எச்சங்கள் ,  மிருகங்கள் இறந்து கிடக்கலாம் என்ற அச்சத்தில் நீரை சுட வைத்தே பருகினோம் 
3 நாட்கள் நல்ல சாப்பாடு நல்ல குளியல் நல்ல தூக்கம் நடந்த களைப்பு எல்லாம் கடந்து போனது இரவில் நல்ல பஜனைகள் பாட்டு கச்சேரிகள் என்று அந்த  3 நாட்கள்சென்றது கொண்டு போன பொருட்களையெல்லாம் அங்கே முற்று முழுதாக குறைத்து விட்டோம் இருப்பது தேநீருக்கான பொருட்கள் மட்டும் மற்றும் அவரவர் சொந்த சிற்றுண்டிகள் .

இந்த வியால ( யால ) என்ற காட்டுப்பகுதியில் இருந்து வள்ளியம்மன் பாலம் என்ற இடத்திற்கு   செல்ல வேண்டும் அந்த இடம் ராணுவ சோதனை சாவடி (  சண்டை முடிந்த பிறகு சோதனை இல்லை
  ராணுவத்தால் சோதனை இடப்பட்ட பின்னரே அனுமதிப்பார்கள் அடுத்த இடமான கட்ட காமத்துக்கு . யாத்திரிகர்களை  மாலை நேரத்தில் நடக்க அனுமதிப்பதில்லை காரணம் அதிக கரடிகள் இக்காட்டில் இருப்பதாலும் மாலை நேரங்களில் மிருகங்கள் தண்ணீர் அருந்த வருவதாலும்) 

  • இந்த வள்ளியம்மன் என்ற பாலத்திற்கு செல்லும் போது    நடந்த சம்பவம் வேறு ஒரு வருடத்தில் மாலை நேரத்தில்  நாங்கள் நடையை குறைப்பதற்க்காக வள்ளியம்மன் பாலத்துக்கு செல்ல ஆயத்தமானோம் கடும் மழை காட்டுமழை கொஞ்ச அதிகமாக இருக்கும் காட்டில் போகும் போது மரம் ஒன்று முறிந்து விட்டது அதை தடையென்று நினைத்து ஒரு குழு சுமார் 50,60 பேர் கொண்ட குழு காட்டின் உள் பகுதிக்குள் சென்று விட்டார்கள் என்னுடடன் வந்தவர்களை  நான் சரியாக அழைத்து சென்றேன் ஏனேன்றால் இரண்டு வருட அனுபவம் அந்த நேரத்தில் அதுவும் அந்த பாதை முடியும் வரைக்கும் ஆற்றை தொடர்ந்து கொண்டே போகவேண்டும் . போனவர்கள் இரண்டு நாளாக வரவில்லை ராணுவத்துகும் அறிவித்தும் அவர்களால் முடியாது போனது அவர்களோ  இது பெரிய காடு ஹெலிமூலம்தான் தேட வேண்டும் என்று சொன்னார்கள்  வந்தவர்களில் எங்களுடன் கொஞ்சபேரும்  சென்றவர்களுடன் கொஞ்ச பேருமாக பிரிந்து விட்டார்கள் இவர்கள் அவர்களை நினைத்து அழுவதுமாக அந்த பயணம் மிகபயங்கரமாக இருந்தது பொருட்களை மாறி மாறி பொதிகளில் கட்டுவதால் சீனி வைத்து இருப்பவர் எங்களிடம் இருக்க தேயிலை வைத்திருப்பவர்கள் அவர்களிடம் இருக்க இப்படி எல்லா பொருட்களும் மாறி மாறி இருந்தது  இதனால் அந்த நாள் மிகவும் கஸ்ரமான சாப்பாடு, தண்ணீர் இல்லாத நாளாகவும் அமைந்தது போனவர்களுள் ஒரு நில அளவையாளரும் அடக்கம் இப்பவும் வருவார் நடந்து அவர் குடும்பத்துடன் மூன்றாவது நாளாக அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள் எல்லோர் கேள்வியும் எப்படியிருக்கும் இருக்கும் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்  அவர்களோ மாறி மாறி ஆளை ஆள் பிடித்து கட்டி பிடித்து அழுது கொண்டிருந்தார்கள் . 

அவர்கள் சென்ற காட்டுப்பகுதியில் மழை பெய்யவில்லையென்றும் குடிநீருக்கு தண்ணீர் இல்லாத போது  மலையில் ஏறி நின்றதாகவும்  கடவுளை பிரார்த்தனை செய்த போது  மழை பெய்ததாகவும் அந்த நீரை பொலித்தீன் பைகளை வைத்து பிடித்து தான் இரு நாட்கள் கடத்தியதாகவும் இறுதி நாளன்று சேவலும் மயிலும் கூவியும் ஆடியதாகவும் அந்த வழியில வந்து சேர்ந்த தாகவும் சொன்னார்கள் அப்போதே ஆறுதல் வந்து சேர்ந்தவர்களுக்கு  நம்பினோரை கைவிடுவதில்லை இந்த கதிர் வேலன் என்ற சொல்லி ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள்.  

இந்த வருடம் வந்த வெள்ளைக்காரர்கள் 

DSCN0913.jpg

வியால என் கிற ஆற்றுப்பகுதி இதன் கரையினில் தங்குவோம் அது மணல்  கடல் மணல் போன்றது 

DSCN0923.jpg

மணல் தரையில்  மக்கள்

15782233_1830763920533214_1195883336_n.jv

வள்ளியம்மன் பாலத்தையடைந்து சோதனைகள் முடிவடைந்ததும்  கட்டகாமம் என்ற இடத்துக்கு செல்ல அனுமதிப்பார்கள் கட்டகாமம் என்ற இடம் அதுவும் ஒரு சோதனை சாவடி போலவே காட்சியளிக்கும்  தற்போது ரானுவம் இல்லை வன விலங்கு பாதுகாப்பு பிரிவினர் மட்டுமே நிற்கிறார்கள்.


 போகும் இடைவெளி தூரத்தில் கதிரமலை கண்ட இடம் என்று சொல்வார்கள் அந்த இடத்தில் பூசைகள் நடக்கும் அவல் பிரட்டுவார்கள் எல்லோரும் .காரணம் அந்த இடத்திலிருந்து பார்த்தால் கதிர்காமத்தில் இருக்கும் ஏழு மலை தெரியும் அந்த இடத்தை தான் கதிரமலை கண்ட இடம் என்று சொல்வார்கள். பூசை முடிந்ததும்  கட்டகாமம் சென்றோம் அங்கே சென்றவுடன் வைத்திய சோதனைக்காக வைத்திய குழு அனைவரது இரத்தையும் பரிசோதனை செய்து கொண்டிருந்தது  காரணம் மலேரியா மற்றும் இதர நோய்கள்  ஏதாவது இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பார்கள் சில நேரம் காட்டுப்பாதையில் நோய் தொற்று அடைந்திருக்கலாம் என்பதற்க்காக அங்கே பரிசோதிப்பது வழக்கம்.  நமது சுய விபரத்தை எழுதியும் வாங்கி விடுவார்கள் கட்டகாமத்தை அடைந்து அங்கே ஒரு தேநீர் வைத்து குடித்து  விட்டு நடக்க ஆயத்தமானோம் நடந்து நடந்து கதிர்காம பின்புரமா இருக்கும் வழியே சென்று  (தற்போது போகும் வழியில்  சிங்கள தொழிலதிபரால் உணவு வழங்கப்படுகிறது பல வருடங்களாக )


கதிர்காமத்தை அடைந்தோம் அடைந்த கையோடு அங்கு செல்ல வில்லை .செல்ல கதிர்க்காமத்துக்குத்தான் முதலில் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள் அங்கே சென்று  மாணிக்க கங்கையில் மூழ்கி குளித்து விட்டு பிள்ளையாரை வணங்கிய பின்னரே கதிர்காமத்தை வந்து அடைந்தோம் வந்த நாங்கள் பொருட்களை இறக்கி மூடிவிட்டு கோவிலகளை சுத்த ஆயத்தமானோம் கோவில்களை சுத்தி சுத்தி எல்லாம் முடிந்த அன்றிரவு பெரகரா உற்சவ நிகழ்வு நாட்களுக்கேற்றால் போல் யானைகளின் தொகையுடனான பெரகரா நிகழ்ச்சி இரவு 10.30 வரை நடந்தது பல லட்சம் மக்கள் காண்பார்கள் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் கூட இந்த திருவிழா நேரத்தில் படையெடுத்து விடுவார்கள் அந்த நிகழ்வை கண்டு கழிப்பதற்க்காக. 
நடந்து செல்பவர்களுக்கு கதிர்காமத்தில் உள்ள  வள்ளியம்மன் மடத்தில் ஒரு அட்டை தருவார்கள் எப்போது போனாலும் சாப்பாடு தருவார்கள் மற்றவர்கள் லைனிதான் நிற்க வேண்டும் இது நடந்து போகும் யாத்திரிகளுக்கு மட்டும் கிடைக்கும் ஒரு வாய்ப்பு ஆனால் தற்போது இந்தமுறையில்லை. இதை நடத்துபவர்கள் தமிழர்கள் திருவிழா அதாவது கொடியேறிய நாளிலிருந்து முடியும் நாள் வரைக்கும் அன்னதானம் கொடுக்கப்படும் . இந்த மடத்தில் இந்த அன்னதானம் கொடுக்கப்படுவதால் அங்கு நாங்கள் சமைக்க வில்லை நேரத்துகு போய் சாப்பிட்டு வந்து கடைகளை சுற்றி இனிப்பு பண்டங்களை வாங்கி வைத்து விட்டு மலையேற விடியற்க்காலை வரை காத்திருந்தோம்.

  
அடுத்த நாள் விடியற்க்காலை நேரத்துடன் எழும்பி மலையேறுவதற்க்காக சென்றோம் இரண்டு மணித்தியாலங்கள் எடுத்தது மலையேற போகும் வழியில் குரங்குகளின் சேட்டைகள் இருந்தாலும்  தற்போது கொண்டு போகும் பொருட்களை பறிக்கிறது  இந்த குரங்குகள் பழத்தட்டுகள் , உணவு பொருட்களை. கொன்டு செல்ல முடியாது துரத்தி வரும் கூட்டமாக .  தற்போது மலையேற  வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது கால் இயலாதவர்கள்  மற்றும் ,உடல் உபாதைக்குள்ளானவர்கள் என அவர்களூக்கு அதாவது அந்த வாகன சாரதிகளுக்கு  சிறு தொகை பணம் கொடுக்க வேண்டும். மலையில் ஆரம்பத்தில் சுளகு போல ஒரு வேல் ஊண்டப்பட்டிருந்தது தற்போது அந்த வேல் இருந்த இடத்தில் விகாரை கட்டப்பட்டுள்ளது வேல் மலையில்  வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது   இதன் காரணமாக நான் மலையேறுவதில்லை பல வருடங்களாக . 

பின்பு மீண்டும் வந்து அன்றிரரவு பெரகரா பார்த்து விட்டு பஸ் ஏறுவோம் 
தற்போது நாங்கள் கதிர்காமத்தை சென்றடைந்ததும் செல்லக்கதிர்க்காமம் போய் வருவது வந்து கதிர்காமம் கோவில் சுற்றுவது அப்படியே பஸ் ஏறுவது ஒரு இரவு கூட நிற்பதில்லை கதிர்காமத்தில் .மலையேறுவதும் இல்லை  வீடு திரும்புவோம் இப்படி எங்களது பாத யாத்திரை இனிதே  முடிகிறது வருடா வருடம்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளியம்மன் பாலம்

 

DSCN0701.jpg

 

 

g15820113_1159577534091176_81914312_n.jpg

இந்த இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் கதிர்காமத்தில் உள்ள ஏழு மலை

15820140_1159577554091174_251853867_n.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 DSCN0714.jpg

கட்டகாமத்தில் உள்ள விலங்குகள் காட்டுப்பன்றிகள் v

DSCN0936.jpg

இந்த புத்தர் சிலைக்கு முன்னால் பெரிய பந்தல் ஒன்ரு வைத்து நடந்து வரும்,  கதிர்காமத்துக்கு வரும் பக்தர்களு க்கும் கொடுக்கப்படும் சிங்கள் தொழிலதிபர்களால்

DSCN0943.jpg

DSCN0942.jpg

செல்ல கதிர்காமம்

20160709_122739.jpg

20160709_122929.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் சிங்கள மக்களால் வழங்கப்பட்ட உணவு பொதியில் இருந்த வாசகங்கள் 

20160709_133219.jpg

மாணிக்க கங்கை 

20160709_122732.jpg

கதிர்காம ஆலயத்தின் முகப்பு தோற்றம்   

20160709_141004.jpg

கங்கையின் தோற்றம் பாலத்தில் இருந்து மாணிக்க கங்கை 

20160709_143517.jpg

இரவு நேரத்தில் திருவிழா ஆரம்பிக்கும் நேரம் 

15801327_1159586360756960_1461285479_n.j

 

 

15750266_1159586357423627_1175952010_n.j

ஏழு மலையில் இருந்து வள்ளிமலை

 

யானைகள் சோடிகப்பட்ட பெரகரா நிகழ்வு

15800920_1159586364090293_744953198_n.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அரோகரா....அரோகரா

கந்தனுக்கு ,குமரனுக்கு ,வேலனுக்கு    அரோகரா....அரோகராtw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

4 hours ago, முனிவர் ஜீ said:

அடுத்த இடமான கட்ட காமத்துக்கு . யாத்திரிகர்களை  மாலை நேரத்தில் நடக்க அனுமதிப்பதில்லை காரணம் அதிக கரடிகள் இக்காட்டில் இருப்பதாலும்  மாலை நேரங்களில் மிருகங்கள் தண்ணீர் அருந்த வருவதாலும்

ஆமா காரணம் முதலாவதா? :grin:

அல்லது இரண்டாவதா? :grin::grin:

சும்மா பகடிக்கு முனிவர்

பலநாட்ட்களின் பின்னர் விரும்பி வாசித்த தொடர் - வாழ்த்துக்கள்
நானும் உங்களுடனேயே சேர்ந்து வந்த மாதிரி இருந்தது. சடுதியாக முடித்து விட்டீர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் மெயின் ஸ்டோரியை முடிசுட்டீங்கள். சப் ஸ்டோரியை அப்பப்ப அவிழ்த்து விடுங்கோ....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கோக முனிவரின் சப் ஸ்டோரியை கேட்க ஆவலாக உள்ளேன். 

கத்தரகம தெவியேடா அரோகரா   tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா காரணம் முதலாவதா? :grin:

அல்லது இரண்டாவதா? :grin::grin:

சும்மா பகடிக்கு முனிவர்

பலநாட்ட்களின் பின்னர் விரும்பி வாசித்த தொடர் - வாழ்த்துக்கள்
நானும் உங்களுடனேயே சேர்ந்து வந்த மாதிரி இருந்தது. சடுதியாக முடித்து விட்டீர்கள்.
 

யோவ் என்ன பகிடியா என்ன  ??   ஒரு 400 கிலோவுக்கும் மேலான கரடிகள் உண்டு ஆள் பட்டால் அடிதான் , சிறுத்தை வேறு  அதனால் தான் பின்நேரம் நடக்க விடுவதில்லை  மக்களை  போன வருடம் நண்பன் ஒருவன் அந்த இடத்தில் வேறு மிருகத்துக்கு வைத்த பொறியில் கரடி ஒன்று சிக்கி இறந்ததாக சொன்னான் அவனால் நம்ப முடியலையாம் அந்த பெரிய  கரடி இருக்கும் என்று  அவன் பல் மிருக வைத்தியருடன் சென்றால் அதை அறிய முடிந்ததாகவும் சொன்னான் அப்ப பாருங்கோவன் நானெல்லாம் மாட்டினால் சொல்ல வா வேண்டும் 

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி  அண்ணை

41 minutes ago, Rajesh said:

அருமையான தொடர்!

நன்றி நண்பரே

33 minutes ago, suvy said:

முனிவர் மெயின் ஸ்டோரியை முடிசுட்டீங்கள். சப் ஸ்டோரியை அப்பப்ப அவிழ்த்து விடுங்கோ....!  tw_blush: 

கதிர்காமத்தில் நடந்த சம்பவங்கள் வரும் அண்ணை 

17 minutes ago, colomban said:

கொக்கோக முனிவரின் சப் ஸ்டோரியை கேட்க ஆவலாக உள்ளேன். 

கத்தரகம தெவியேடா அரோகரா   tw_blush: 

ம் நன்றி  கொழும்பான்  சப் ஸ்டோரி என்று எதை கேட்கிறீங்கள் கதிர்காமத்தில நடந்த சம்பவங்களையோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப் ஸ்டோரி ஒன்றுtw_blush:
 
செல்ல கதிர்காமத்திலே இனிப்பு பொருட்கள் ( குட்டான் , பனங்கட்டடி , மஸ்கட், அல்வா , பனங்கிழங்கு மற்றும் இன்னும் இருக்கும் சில இனிப்பு பண்டங்கள் ) விலை குறைவு என்று சொல்வார்கள் அங்கே போய் பார்த்த போது வியாபாரத்தை ஈர்ப்பதற்க்காக அழகிய சிங்கள‌ இளம் பெண்கள் அண்ணா வாங்க, ஐயா வாங்கா அக்கா வாங்க அம்மா வாங்க என்று கூவி அழைத்தாலும் கையை வேற பிடிச்சு இழுபாழுகள் தன் விபாரத்துக்கு ஒரு கிலோ சும்மா தாரம் வாங்க வாங்க என்று கூப்பிடுவாள் அடிக்கடி மேக்கப் போட்டு சுண்டி இழுக்கும் அதுக்கு பிறகு சொல்லவில்லை ............... கற்பனை பண்ணி கொள்ளுங்கோ.

நம்ம  பொடியங்களை கேட்கவா வேணும் எது நல்லா இருக்கோ:113_tongue: ( பொருட்களை சொல்கிறேன் ) அங்கே விழுந்து இருக்கிற பொருட்களை அள்ளுவானுகள் அவள் மொத்தமா சேர்த்து ஒரு பில் போடுவா பிறகென்ன கொடுத்து வாரது தான் காசை  (மனசையும்)  வாங்கினதுக்கு ஒரு கிலோ துதலும் தந்து ஒரு விசிட்டிங் காட்டையும் தருவா அடுத்த வருஷம் வந்தால் எங்க கடைக்கு வாங்க என்று சொல்லுவா 
அடுத்த வரிஷம் மெனக்கட்டுப் போனல் வேற ஒரு பிள்ளை நிற்கும் பிறகென்ன அடுத்த கடைதான் .tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் முடிவதில்லை ....................

நாம் வாழ்க்கையில் சம்பாதிக்கும் அனைத்தும் விலகிவிடும் 
நாம் பெற்ற பிள்ளைகள் கூட ஒரு காலத்தில் தனியாக போய்விடுவார்கள் 
போக வேண்டும் அவர்களது வாழ்க்கை அவர்கள் உடையது அல்லவா ?

நிரந்தரமாக எம்மோடு நிற்கப்போவது நினைவுகள் மட்டுமே.
பயணங்கள் என்பது அதில் முந்திக்கொண்டு முன்னே நிற்கும் 
காரணம் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை புது அனுபவம் சுவாரசியம்.

பகிர்விட்கு நன்றி !
நானும் இப்படி எழுதலாம் என்று நினைப்பேன் .......... இப்படி பாத யாத்திரை போகவில்லை 
போக நிறைய ஆசை உண்டு. யாராவது சில நண்பருடன் ஒரு ஜீப்பில் சஹாரா பாலைவனத்தை 
கடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதோ இருந்து இருக்கும் ஒன்று. 
நான் போவது எல்லாம் பொதுவாக உல்லாச பிரயாணங்கள் ...... (யாருக்காவது உதவும் என்று எண்ணுவேன்)
அதனால் இவர் படம் காட்டுறார் என்று எண்ணுவார்கள் என்று எண்ணி இப்படி எழுத வருவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

பயணங்கள் முடிவதில்லை ....................

நாம் வாழ்க்கையில் சம்பாதிக்கும் அனைத்தும் விலகிவிடும் 
நாம் பெற்ற பிள்ளைகள் கூட ஒரு காலத்தில் தனியாக போய்விடுவார்கள் 
போக வேண்டும் அவர்களது வாழ்க்கை அவர்கள் உடையது அல்லவா ?

நிரந்தரமாக எம்மோடு நிற்கப்போவது நினைவுகள் மட்டுமே.
பயணங்கள் என்பது அதில் முந்திக்கொண்டு முன்னே நிற்கும் 
காரணம் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை புது அனுபவம் சுவாரசியம்.

பகிர்விட்கு நன்றி !
நானும் இப்படி எழுதலாம் என்று நினைப்பேன் .......... இப்படி பாத யாத்திரை போகவில்லை 
போக நிறைய ஆசை உண்டு. யாராவது சில நண்பருடன் ஒரு ஜீப்பில் சஹாரா பாலைவனத்தை 
கடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதோ இருந்து இருக்கும் ஒன்று. 
நான் போவது எல்லாம் பொதுவாக உல்லாச பிரயாணங்கள் ...... (யாருக்காவது உதவும் என்று எண்ணுவேன்)
அதனால் இவர் படம் காட்டுறார் என்று எண்ணுவார்கள் என்று எண்ணி இப்படி எழுத வருவதில்லை.

என்ன மருது இதற்கெல்லாம் யோசித்துக் கொண்டு....! விமர்சனம் எந்நேரமும் எப்படியும் வரும், முடிவில்லாதது. அதுவும் நீங்கள் சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர்.இதுக்கெல்லாம் பின்வாங்கக் கூடாது. அட , மற்றவர்கள் என்ன சொல்வது நீங்கள் படம் காட்டுறதெண்டு...! நீங்களே "நான் படம் காட்டுகிறேன் " என்று தலைப்பை வைத்து விட்டு உங்களது பயணங்களின் கட்டுரையை ஆரம்பித்து விடுங்கள். பின்பு அந்தக் கட்டுரையே உங்களை வழிநடத்தும் ...!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/25/2017 at 0:27 AM, Maruthankerny said:

பயணங்கள் முடிவதில்லை ....................

நாம் வாழ்க்கையில் சம்பாதிக்கும் அனைத்தும் விலகிவிடும் 
நாம் பெற்ற பிள்ளைகள் கூட ஒரு காலத்தில் தனியாக போய்விடுவார்கள் 
போக வேண்டும் அவர்களது வாழ்க்கை அவர்கள் உடையது அல்லவா ?

நிரந்தரமாக எம்மோடு நிற்கப்போவது நினைவுகள் மட்டுமே.
பயணங்கள் என்பது அதில் முந்திக்கொண்டு முன்னே நிற்கும் 
காரணம் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை புது அனுபவம் சுவாரசியம்.

பகிர்விட்கு நன்றி !
நானும் இப்படி எழுதலாம் என்று நினைப்பேன் .......... இப்படி பாத யாத்திரை போகவில்லை 
போக நிறைய ஆசை உண்டு. யாராவது சில நண்பருடன் ஒரு ஜீப்பில் சஹாரா பாலைவனத்தை 
கடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதோ இருந்து இருக்கும் ஒன்று. 
நான் போவது எல்லாம் பொதுவாக உல்லாச பிரயாணங்கள் ...... (யாருக்காவது உதவும் என்று எண்ணுவேன்)
அதனால் இவர் படம் காட்டுறார் என்று எண்ணுவார்கள் என்று எண்ணி இப்படி எழுத வருவதில்லை.

மருதங்கேணியரே பயணம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை தரும் நானும் பல நாடுகள் சுற்ற வேண்டும் புதியதை அறிய வேண்டும் ஆவல் ஆனால்  பக்கத்த்து மாகாணத்துக்கு போவதென்றால் கூட இடிக்கும்  அப்படி நிலை இருந்தாலும்  இது பல அனுபவங்களை  தந்திருக்கு 

உங்களுக்கு வாழ்க்கையில் புது அனுபவம் கிடைக்கும்  இழந்து விடாதீர்கள்   அந்த பயணத்தை   செல்லுங்கள் அடுத்தவன் என்ன செல்லுவான்  என்று நினைத்து நாம் ஏன்  வாழவேண்டும் 

நான் அடிக்கடி பார்க்கும் நிகழ்ச்சி அந்த டிஸ்கவரி சனல் தான்   அந்த பாலைவனம் ,அடர்ந்த  காடு அமேசன் காடு ஒரு மனிசர் சுத்தி திரிகிறார் பாருங்கள்  சும்மா அசத்தலாக இருக்கும்   
சந்தர்ப்பம் கிடைக்கும் போது  அதை செய்திட வேண்டும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி உங்கள் ஸ்ரோறியை விட சப் ஸ் ரோறி தான் மனதுக்கு இதமாக இருந்தது.

முனி இந்த யாத்திரைகளின் போது மல சல கூடத்திற்கு ஆண்கள் கொஞ்சம் அஜற் பண்ணினாலும் பெண்கள் பாடு ரொம்ப கஸ்டமாக இருக்குமே எப்படி சமாளிப்பார்கள்?

On 1/24/2017 at 1:57 PM, Maruthankerny said:

 

நானும் இப்படி எழுதலாம் என்று நினைப்பேன் .......... இப்படி பாத யாத்திரை போகவில்லை 
போக நிறைய ஆசை உண்டு. யாராவது சில நண்பருடன் ஒரு ஜீப்பில் சஹாரா பாலைவனத்தை 
கடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதோ இருந்து இருக்கும் ஒன்று. 
நான் போவது எல்லாம் பொதுவாக உல்லாச பிரயாணங்கள் ...... (யாருக்காவது உதவும் என்று எண்ணுவேன்)
அதனால் இவர் படம் காட்டுறார் என்று எண்ணுவார்கள் என்று எண்ணி இப்படி எழுத வருவதில்லை.

மருது அவுசை சேர்ந்த அரவிந்தன் முன்னர் அடிக்கடி பிரயாணக் கட்டுரைகள் நிறைய படங்களுடன் அப்பப்ப எழுதிக் கொண்டிருந்தார்.இப்போ பிரயாணங்களைக் குறைத்து விட்டாரோ அல்லது வயது போட்டுதோ தெரியவில்லை அவ்வளவாக எழுதுவதில்லை.(அவர் குந்தி இருப்பதைப் பார்க்க வயது போட்டுது போலத் தான் இருக்கு)

எனவே நீங்களும் கிளுகிளுப்புப் படங்களுடன் உங்கள் பயணக் கட்டுரைகளை எழுதலாம்.

நிச்சயம் எல்லோரும் ஆதரவு தருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

முனி உங்கள் ஸ்ரோறியை விட சப் ஸ் ரோறி தான் மனதுக்கு இதமாக இருந்தது.

முனி இந்த யாத்திரைகளின் போது மல சல கூடத்திற்கு ஆண்கள் கொஞ்சம் அஜற் பண்ணினாலும் பெண்கள் பாடு ரொம்ப கஸ்டமாக இருக்குமே எப்படி சமாளிப்பார்கள்?

நன்றி  அண்ண 

ம் காட்டுக்குள்ள தான் அண்ண  பலர் சேர்ந்துதான் போவார்கள்  

அந்த காலத்தில்  பற்றையை, நினைவு படுத்தும்   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.