Jump to content

ஒரு யாத்திரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் ஒரு யாத்திரை 

யாத்திரை என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலர் நாடு விட்டு நாடு தேடி சென்று இடங்களுக்கு செல்வார்கள் சிலர் புனித ஸ்தலங்களுக்கு செலவார்கள் அது அவரவர் விரும்பும் இடங்களை பொறுத்தே. எனது பயணம் என்பது கதிர்க்காம பாத யாத்திரை நோக்கி இருந்தது பல வருடங்களாக யாத்திரை செல்லுகிறேன் ஏன் எதற்காக என்பது பற்றி என மனம் கேள்விகேட்டாலும் அதில் ஒரு நம்பிக்கை இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று இல்லை மனிதனை விட ஒரு சக்தி இருக்கிறது அதை சொல்ல முடியாது அதாவது காற்றை யாராவது பிடித்து  காட்டச்சொன்னால் முடியுமா முடியாது அதே போல் தான் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிற‌து அதை காண்பிக்க இயலாது ஒரு சிலர் அதை இறைவன் என்கிறார்கள் கடவுள் என்கிறார்கள் நானும் அவ்வழியே பலவருடங்களுக்கு முன்னர் அதாவது 1998ம் ஆண்டளவில் எங்கள் ஊருக்கு அந்த பாத யாத்திரிகர்கள் வருவது வழமை ஊரில் உள்ள கோவில்களில் அன்றைய இரவை போக்க வருவார்கள் அவர்களை போய் பார்ப்பது வழக்கம் அதில் ஒரு அமெரிக்கரும் உள்ளடக்கம் அவர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சன்நிதியில் இருந்து வந்தார்கள்  ஊரில் உள்ள சனங்கள் அவர்களை போய் பார்த்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது வழக்கம்  அவர்கள் ஊர் வந்து சென்றதில் இருந்து நான் அவர்களுடன் சென்றால் என்ன ஒரு உணர்வு ஏற்பட்டது ஆனால் சிறு வயது என்பதால் அம்மா அப்பா விரும்பமாட்டார்கள் அந்த வேளையில் அம்மம்மாவும் அப்பம்மாவும் கதிர்க்காமம் செல்ல போகிறோம் என்று சொல்ல நானும் வரட்டுமா என்று கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக வீட்டில் அனுமதி பெற்று செல்ல ஆயத்தமானேன் அந்த வருடம் .

யாத்திரைக்கு தேவையான பொருட்கள் உடைகள் , சாப்பாடுகள் ,போதிய மருத்துவ உபகரணங்கள் தொடர்பாடல் வசதி மிக குறைவு 10 நாட்கள் தேவை கதிர்க்காமத்தை சென்றடைய  என்று சொன்னார்கள்  யாத்திரை தயாரானது  
ஊரில் இருந்து நடக்க வில்லை காரணம் அந்த நேர பாதுகாப்பு நிலை காரணமாக  யாத்திரை அதிகாலை புறப்பட்டது ஒவ்வொரு சோதனை சாவடியிலும் பொருட்களை ஏற்றி இறக்கி களைந்து காண்பித்து சென்றடைய சங்கமான்கண்டி வடக்கில் முறிகண்டி பிள்ளையார் எவ்வளவு முக்கியமான ஆளோ அதே போல் கிழக்கில் சங்கமன்கண்டி பிள்ளையார் முக்கியமான ஆள் யாத்திரை செல்லும் போது அவரை வழிபட்டு விட்டு நேரம் 1.00 மணியாகிவிட்டது பாணமையை போய் சேர பாணமையில் பாரிய சோதனை சாவடி அதன் பிறகு அந்த இடத்தில் இருக்கும் பிள்ளையாரை தரிசித்த பின்னர்  நடை தொடங்கியது வாகனம் உகந்தை வரை செல்ல முடியாது அதற்கு பாதையும் இல்லை காட்டு வழி வேறு நடக்க நடக்க இரு மருங்கிலும் காடுகள் விலங்கள் பறவைகள் ,  என பார்த்து பார்த்து போய் முதல் இடம் உகந்தைசெல்வதற்கு முன்னர் சன்நியாசிமலை என்ற ஒரு மலை அதன் கீழ் பிள்ளையார் ஒருவர் வீற்றிருக்க அவரை தரிசனம் அவருக்கு கொஞ்சம் அவலை பிரட்டி படைத்து விட்டு செய்து நடை ஆரம்பமானது  ஒரு வழியாக ஓட்டமும் நடையுமாக உகந்தையை சென்றடைந்தோம்  சுற்றி வர காடு கிழக்கில் கடல் மேற்கில் அடர்ந்த காட்டில்  ஒரு கோவில்  மனதிற்கு ஒரு இதமான அமைதி அந்த இடத்தில்  தெரிகிறது  யாத்திரை தொடரும்.

போய் வந்த பிறகு தமிழ் சிறி அண்ணன் எழுத சொன்னவர் படங்கள்  கிடைக்க வில்லை இப்போது அந்த படங்களை கமறாவிலிருந்து எடுத்துக்கொண்டேன்    

 
 

இது தான் பாணமை பிள்ளையார் கோவில் 

20161105_124049.jpg

20161105_125841.jpg  DSCN0551.jpg  DSCN0552.jpg  DSCN0555.jpg  DSCN0557.jpg   click image upload

20161105_125841.jpg

DSCN0551.jpg

DSCN0552.jpg

DSCN0555.jpg

DSCN0557.jpg


click image upload

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் முனிவர்..., நானும் அவலோடு கூட வாறன்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, suvy said:

தொடருங்கள் முனிவர்..., நானும் அவலோடு கூட வாறன்....! tw_blush:

சிகப்பா வெள்ளையா??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தொடருங்கள் முனிவர்..., நானும் அவலோடு கூட வாறன்....! tw_blush:

வாங்கோ அண்ணே வாங்கோ நெறைய விசயம் இருக்கு tw_blush:

34 minutes ago, MEERA said:

சிகப்பா வெள்ளையா??????

இப்பெல்லாம் சீணிக்காரர்கள் அதிகM அதனால சிகப்பு வெள்ளை யெப்புடி tw_blush:

போகும் வழியில் நம்ம ஆளின் வாகனம் குறுக்கறுத்து போனது  இறகுகளை போட்டு விட்டு 

DSCN0042.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் நானும் சிறுவனாக இருந்த (65-70) காலத்தில் செல்லக் கதிர்காமம் பாதயாத்திரை என்று 100 பேர் வரை வருவார்கள்.எமது கோவிலில் தேனீர் கடலை அவல் என்று செய்து கொடுப்பார்கள்.ஒரு சிலர் அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.கதிர்காமம் சென்றடைய மாதக் கணக்கில் போகும் என்று சொல்லுவார்கள்.

இது வரை பாதயாத்திரை போனவர்களின் அனுபவத்தை கேட்டறிந்ததில்லை.

இப்போ உங்களிடமிருந்து வரும் அனுபவங்களை பெற ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

ஆறுதலாக விபரமாக தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் முனிவர் ஜீ , 

ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றேன் .

நானும் சிறுவனாக இருந்த போது அப்பு ஆச்சியுடன் கதிர்காமத்துக்கு மற்றும் திருக்கேதீஸ்வரத்துக்கு சென்ற அனுபவம் இருக்கின்றது ..... இன்று அவர்கள் எம்முடன் இல்லை ..... நினைவுகள் மட்டுமே உள்ளது .....  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

முனிவர் நானும் சிறுவனாக இருந்த (65-70) காலத்தில் செல்லக் கதிர்காமம் பாதயாத்திரை என்று 100 பேர் வரை வருவார்கள்.எமது கோவிலில் தேனீர் கடலை அவல் என்று செய்து கொடுப்பார்கள்.ஒரு சிலர் அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.கதிர்காமம் சென்றடைய மாதக் கணக்கில் போகும் என்று சொல்லுவார்கள்.

இது வரை பாதயாத்திரை போனவர்களின் அனுபவத்தை கேட்டறிந்ததில்லை.

இப்போ உங்களிடமிருந்து வரும் அனுபவங்களை பெற ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

ஆறுதலாக விபரமாக தொடருங்கள்.

நிட்சயமாக ஈழப்பிரியன் அண்ண விபரமாக அன்றைய நினைவையும்  அதன் பின்பு வந்த நினையையும் தருகிறேன் மறக்க வில்லை  விபரமாக  தருகிறேன் .tw_blush:

6 hours ago, தமிழரசு said:

தொடருங்கள் முனிவர் ஜீ , 

ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றேன் .

நானும் சிறுவனாக இருந்த போது அப்பு ஆச்சியுடன் கதிர்காமத்துக்கு மற்றும் திருக்கேதீஸ்வரத்துக்கு சென்ற அனுபவம் இருக்கின்றது ..... இன்று அவர்கள் எம்முடன் இல்லை ..... நினைவுகள் மட்டுமே உள்ளது .....  

உங்கள் நினைவுக்கும்  மீள் பார்வைக்கும் நன்றிகள் tw_blush:

மரைகள் இரண்டு 

DSCN0549.jpg

கொம்பன்

20161105_170233.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எங்களது யாத்திரை என்பது கதிர்காம ஆரம்ப கொடியேற்ற நிகழ்வுக்கானது அல்ல அதன் பிறகான‌ யாத்திரயே ஆரம்ப‌ கொடியேற்றம் பார்க்க ஒரு சில ஆயிரம் பேர் நேரத்துடன் சென்று விடுவார்கள் நாங்கள் அடுத்த யாத்திரியர்களாக சென்றது.  

உகந்தையில் இருந்து  எமது யாத்திரை குமுக்கனுக்கானது ஆனால் அந்த இடம் அதிக தூரம் என்ற படியால் நடையை குறைக்க வேண்டிய‌ நிலை அதானால் இடையில் உள்ள வண்ணாத்து வில்லுவரைக்கும் மட்டுமே என்றார்கள். யாத்திரை   ஆரம்பமாக பொருட்களை எல்லாம் பிரித்து  ஆட்களின் தொகைக்கு ஏற்றால் போல் உரப்பையில் பிரித்து  கொடுத்தார்கள் நாங்கள் சின்ன ஆட்கள் என்ற படியால் சிறிய பொதிகள் எங்களுக்கு கிடைத்தது பொதிகள் தலையில் எங்களது உடுப்பு பைகள் முதுகில் நடப்பதற்கு சுலபமென மனது நினைத்தாலும்  தூக்கி தலையில் வைக்க கனத்தது உகந்தையில் இரு நாட்கள் நின்றோம் நடக்கும் நாள் பின்நேரம் நேரம் சரியாக 2.30 மணியளவில் உகந்தை கோவில் கொடியேறிய பின்பு நடக்க ஆயத்தமானோம் ஆண்கள் எல்லாம் காவி உடையுடனும் பெண்கள் எல்லாம் ஒரு சிலர் காவிச்சட்டை அணிந்து இருந்தனர். 

அந்த நாட்களில் வனவிலங்கு அதிகாரிகள் யாரும் இருக்க வில்லை காட்டுப்பாதை தொடங்கும் இடத்தில் ஆனால் தற்பொழுது நேவிப்படையினர்,வன விலங்கு பாதுகாவலர் , மீன்பிடிக்கும் மீனவர்கள் கூட உகந்தை கோவிலை அண்டிய பகுதிகளில் வந்து கூடிவிட்டார்கள் ,பொத்துவில் பகுதியில் வரும் உல்லாச பிரயாணிகள் கூட தற்போது உகந்தை கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள் , கோவில் அழகிய தோற்றத்தை படமெடுத்து செல்கிறார்கள்  அவர்கள் வரும் வழியில் அடர்ந்த காட்டுப்பகுதியென்பதால் அவர்கள் கமறாவுக்குள் நல்ல போட்டோக்களை எடுத்து  கொள்கிறார்கள் , சிங்கள் மக்கள்  உகந்தைக்கு வரும் வழியில் இடையில் குடும்பி மலையென்று இருக்கிறது ஆரம்ப காலத்தில் விகாரை கட்ட முற்பட்டபோது அது தடுக்கப்பட்டது விகாரையின் அண்டம்பகுதி மட்டும் தெரிவதால் அது தூரத்தில் இருந்து பார்க்கும் போது குடும்பி போல் தெரிவதால் அதை குடும்பி ஹல என்று சிங்களத்திலும் தமிழில் குடும்பி மலை என்றும் அழைக்கிறார்கள் சிங்கள மக்கள் அதிகமாக வருகை தருகிறார்கள் உகந்தைக்கும் அந்த குடும்பிமலைக்கும் தற்போது அந்த மலையை சிங்கள மக்கள் , பிக்குகள் கையகப்படுத்தியுள்ளார்கள் .

 

யாத்திரைக்கு வருவோம் பொதிகளை தூக்கி கற்பூரத்தை இருந்த இடத்தில் எரித்து விட்டு பெரியவர்களால் கழுகுமலைப்பத்து பாடியும் தேவாரங்கள் பாடியும் அரோகரா கோஷத்துடன் ஆரம்பமானது யாத்திரை பல் ஆயிரக்கணக்கான மக்களுடன் (இந்த வருடம் எங்களுடன் வந்தவர்கள் சுமார் 12000 பேர்) முருகனின் பெயரை சொல்லியும் அரோகரா கோஷத்துடனும் நடை தொடங்கியது உகந்தை முருகன் கோவிலிருந்து  போகும் வழியில் பாலப்பழம் , வீரப்பழம் என்பவற்றை கந்து கந்தாக‌ முறித்து சுவைத்தேன் பாலப்பழத்தை விட அதிக வீரப்பழம் கிடைத்தது. அதிகம் வேற சுவைக்க இயலாது பின்விளைவுகளை இறுக்கி விடுமாம் அதனால் பாலப்பழங்களை மட்டும் சுவைத்து தொடர்ந்தது வண்ணாத்து வில்லு என்ற தரிப்பிடத்தை நோக்கி நடந்தோம் முதன் முதலாவதாக நட‌ப்பதால் எனக்கு களைப்பு காட்ட வில்லை முந்தி முந்தி ஓடியோடி நடந்தேன்  முதலில் செல்லும் போதே சில காட்சிகள் காண‌ முடியும் காட்டில் மான்கள் , மயில்கள் , நரிகள் , காட்டுக்கோழிகள் ,உடும்புகள் , மிகப்பெரிய காட்டுமாடுகள் பார்க்க சந்தோசமாகவும் வியப்பாகவும் இருந்தது மாலை 4.30 மணியளவில் போய் சேர்ந்தோம், ஆனால் வயது போனவர்கள் அடிக்கடி இருந்து ஓய்வெடுத்தே நடப்பார்கள்   அந்த தங்குமிடத்தில் போன நான் நல்ல இரு இடமாக பிடித்து வைத்தேன் இரவை கழிப்பதற்காக நடுக்காட்டில் ஓரத்தில் எல்லாம் தூங்கமுடியாது காரணம் இரவு வேளைகளில் மிருகங்கள் வரும் என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள் . போன இடம் ஒரு  வெட்ட‌வெளி ஆனால் ஒரு கிணறு அந்த கிணற்றில் உப்புத்தண்ணீர் மட்டுமே  பக்கத்தில் ஓடும் பெரிய ஓடை கூட உப்பாறு  தண்ணி இல்லை. அந்த தண்ணீரைத்தான் குடித்தாக வேண்டும் கொஞ்ச நேரம் அமர்ந்து கொண்டேன் என்னுடன்  வந்தவர்கள் வந்து சேர்ந்தனர்.சேர்ந்த உடனேயே வாங்கோ காட்டுக்க போவோம் விறகு எடுக்க என்று சொல்லி கூட்டிகொண்டு போனார்கள் போகும் போது கிளைகளை முறித்து கொண்டுதான் போனோம் காட்டுக்குள் காரணம் சிலவேளைகளில் வழி மாறினால் அந்த கிளைகளின் உதவியால்தான் மீண்டும் வரமுடியும் இல்லையென்றால் திண்டாட வேண்டிய நிலைதான்   தேவையான‌ விறகுகளை எடுத்து வந்து வந்த பெண்மணிகளிடம் கொடுத்தோம் அவர்களும் உப்பு தேனீர் தயாரிக்க ரெடியாகினார்கள் மீண்டும் காட்டுக்க போக வேண்டும் இரவில் மிருகங்கள் வரும் என்ற படியால் பெரிய தீனா போட வேண்டும் என்றார்கள் அதற்கு பெரிய கட்டைகள் வேண்டுமென்றனர் காட்டுக்குள் போனோம் தேவையான கட்டைகளை எடுத்து வந்து மொத்த குவியலாக போட்டு விட்டோம் பின்னர் பெண்கள் சமைக்க தயாரானார்கள் அடிக்கும் காற்று சூறைக்காற்று போல் அந்த வெளியை சனத்திரளுக்குள் தூசும் புழுதியுமாக அள்ளி எறிந்து கொண்டே இருந்தது

காற்று தொடர்ந்தது காட்டில் இருள்வது விரைவாக நடந்து கொண்டிருந்தது இவர்களும் சமைத்து முடிய இருட்டானது வெளிச்சம் குறைவானதால் மெழுகுதிரியை கொழுத்தினோம் ம்கும் காற்று விடுவதாக இல்லை பின்னர் ஐடியா ஒன்று ரப்பர் போத்தல் ஒன்றின் கீழ் பகுதியை வெட்டி அதை தலை கீழாக நிறுத்தி அதற்குள் மெழுகு திரியை வைத்து இருக்கும் இடத்தில் ஒளியை தக்க வைத்துக்கொண்டோம் கொண்டு போன டோச் லைட்டை எந்தநேரமும் அடித்து கொண்டு இருக்க முடியாதல்லவா அதனால் மெழுகுதிரி பாவனையே அதிகமாக இருந்தது . நேரம் செல்ல செல்ல ஒரு குறுப் பஜனை ஆரம்பிக்க ஒரு குறுப் பக்திப்பாடலகளை அரையும் குறையுமாக ஆரம்பிக்க தொடங்கியது இசை விடாத கச்சேரி கடைசியில் பைலாவாக மாறியது கொண்டு போன சில்வர் பீங்கான் கள் சிலுசிலுக்க  சினிமா பாட்டுக்கள் அனல் பறந்தது அன்றைய இரவில். ஒரு மாதிரியாக பைலாக்கள் இரவு 12.00 மணீயளவில் நிற்க அந்த விறகு கட்டைகளுக்கு நெருப்பு வைத்து விடுவார்கள் அது விடிய விடிய எரியும் ஒரு சிலர் பீடி பிடிப்பவர்கள்( மூலிகையும் கூட) அடிக்கடி அதை சரி செய்து மேலதிக கட்டைகளை போடுவதால் அந்த நெருப்பு இடைவிடாமல் எரியும் விடியும் வரை அதனால் எந்த விலங்கும் வராது என்ற நம்பிக்கை இருந்தாலும் தூரத்தில் யானைகள் மரங்களை  உடைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் ,பிளீருவதும் கேட்கும் இரவு வேளைகளில் , சில நேரங்களில் நான் சொன்ன சூறைக்காற்று அப்படியே தூங்கும் இடங்களில் அப்படியே விழும் ஆளை தூக்காத குறையாக அப்படியே எல்லாவற்றையும் தூக்கும் அதை பேய் என்று சிலர் சொன்னாலும் , சிலர் ஓடுவார்கள் அந்த நேரத்தில் அதனால் சில வேளைகளீல் அல்லோல கல்லோலப்படும் சனம் பிறகு என்ன அந்த இரவு சிவராத்திரி பயந்தவர்களுக்கு எங்களுக்கு நித்திரைதான். 
காரணம் அந்த இடத்தில் கதிர்காமம் நடந்து வந்த ஒரு வயது போன அம்மா இறந்ததாகவும் அவரை அந்த இடத்தில் எரித்து விட்டு சென்றதாகவும் கதை உலாவும் நடந்து இருக்கலாம் அந்த நேரத்தில் காவிச்செல்ல முடியாது  அந்த இடத்தில் எரித்து விட்டு செல்வது வழமையே. ஆரம்ப காலத்தில் பாதயாத்திரை செல்பவர்கள் தங்கள் சொத்துக்களை கூட மக்களுக்கு எழுதி வைத்துவிட்டு செல்வார்களாம் ஏனென்றால் காட்டுப்பாதையில் எதுவும் நடக்கலாம் என்ற காரணத்திற்க்காக.

இந்த இடத்தில் தற்போது அதாவது வருடா வருடம் பாதயாத்திரை போகும் போது வன காவலர்களால் குடிநீர் வவுச்சர்களீல்  வைக்கப்பட்டுள்ளது.அதனால் தண்ணீர் பிரச்சினை இல்லை ஆனால் இது வைக்ககூடாது என்ற விருப்பம் எனக்கு இந்த பாத யாத்திரை சிலருக்கு பொழுது போக்குவது என்றாகிவிட்டது  தண்ணீர் கஸ்ரம் என்றால் கன பேர் வரமாட்டார்கள் .
அந்த நாட்களில் இந்த பாதை வெறும் அரவம் என்று சொல்கின்ற ஒற்றையடிப்பதை மட்டுமே தற்போது வனக்காவலர்கள் செல்ல பாதை அமைத்துள்ளார்கள் காரணம் வெளிநாட்டு பயணீகள் விலங்குகள் , பறவைகள் சரணாலயம் என்பவற்றை பார்வையிட‌ அதிகமாக வருகிறார்கள் குமுக்கன் என்ற இடம் வரைக்கும்.

அதிகாலை எழும்பி நேரத்துடன் காலை உணவுக்கான வேலைப்பாடுகள் ஆரம்பிக்கும் கடலை அல்லது கவ்ப்பி அவிப்பார்கள் அதை சிறிய பைகளில் இட்டு ஆளுக்கொரு பையில் தருவார்கள் கழைப்பு ஏற்படும் இடத்திலிருந்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதும் தான் பிறகு தேநீராக நல்ல பால் கோப்பி ஒன்று கிடைக்கும்  காலையில் அதை குடித்து விட்டு முகம் கழுவி விட்டு சூரியன் உதிக்கும் முதல் நடக்க வேண்டும் காரணம் சூரியன் வந்தால் அதிக கழைப்பாக இருக்கும் அதானால் விடியச்சாமமே டோச் லைட்டின் உதவியுடன் நடக்க ஆரம்பித்து விடுவார்கள் யாத்திரிகர்கள்.

 அடுத்த இடம் குமுக்கன் ஆறு  தொடரும்   

 

 

 

 

 

 

அந்த இடம் இது தான் வண்ணாத்து வில்லு வெட்ட வெளி

DSCN0847.jpg

 

DSCN0850.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

DSCN0848.jpg

இந்த வருடம் மருத்துவ உதவிகள் 

DSCN0595.jpg

யாத்திரையின் காட்சி

DSCN0858.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாத்திரைப்  படங்களுக்கும் அனுபவங்களைப் பகிர்வதற்கும் நன்றி ஜீ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி எங்கே தான் சாப்பிட்டாலும் கோவில் சாப்பாடு மாதிரி வராது.அதிலும் 50-100 பேர் எனறால் சொல்லத் தேவையில்லை.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

On 12/22/2016 at 1:27 PM, முனிவர் ஜீ said:

வ‌ண‌க்க‌ம் ஒரு யாத்திரை 

என்னை விட்டுவிட்டு சென்ற முனி நாசமா போக.tw_rage:  

யோவ் அடுத்த முறை எப்பப்பா?  விபரம் தந்தால் இணையலாம். யாழ்ப்பாணத்தில் இருந்து நடக்க முடியாது, மட்டுவில் இருந்து முயற்சிக்கலாம்.

On 12/22/2016 at 2:24 PM, suvy said:

தொடருங்கள் முனிவர்..., நானும் அவலோடு கூட வாறன்....! tw_blush:

அவர் அவளோடு சீச்சீ அவலோடு கூட வாராரோ இல்லையோ, நான் ஆவலோடு வாறன்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN0847.jpg

முனிவர் ஜீ..... 
 "நிழலின் அருமை.... வெய்யிலில் தெரியும்."  என்பார்கள். அதற்கு ஏற்ற அழகிய ...  படம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/23/2016 at 5:09 PM, கிருபன் said:

யாத்திரைப்  படங்களுக்கும் அனுபவங்களைப் பகிர்வதற்கும் நன்றி ஜீ.

நன்றி கிருபன்  வாங்கோ ஒரு தரம் நடந்து பாருங்கோ இந்த தடவையும் வெள்ளைகள் நடந்து வந்தது , 
நான் ஏன் இதுவ்ரை கதிர்காமம் நடக்கிறேன் என்ற சுவாரசியமான நிகழ்வு ஒன்று இருக்கிறது அதயும் எழுகிறேன் படிக்கவும்tw_blush: 

 

On 12/23/2016 at 7:25 PM, ஈழப்பிரியன் said:

முனி எங்கே தான் சாப்பிட்டாலும் கோவில் சாப்பாடு மாதிரி வராது.அதிலும் 50-100 பேர் எனறால் சொல்லத் தேவையில்லை.தொடருங்கள்.

ஓம் அண்ண அதன் சுவை தனியே நான்  ஒவ்வொரு முறை போனாலும் மடத்தில் சமைக்கும் நண்பர்களுடன் இணைந்து கொள்வேன் சமைத்து வரும் மக்களுக்கு கொடுப்பது வழமைtw_blush:  

On 12/23/2016 at 11:37 PM, ஜீவன் சிவா said:

என்னை விட்டுவிட்டு சென்ற முனி நாசமா போக.tw_rage:  

யோவ் அடுத்த முறை எப்பப்பா?  விபரம் தந்தால் இணையலாம். யாழ்ப்பாணத்தில் இருந்து நடக்க முடியாது, மட்டுவில் இருந்து முயற்சிக்கலாம்.

அவர் அவளோடு சீச்சீ அவலோடு கூட வாராரோ இல்லையோ, நான் ஆவலோடு வாறன்.:grin:

ஹாஹா ஜீவன் அண்ணை அதற்கென்ன அழைக்கிறேன் வாங்கோ அடுத்த வருடம்   மட்டுவில் தேவையில்லை நாம் உகந்தையில் இருந்தே நடப்போம்  ஆவலாக நானும்  நல்ல இடம்  பித்து பிடித்து போய்விடும் உங்க கமறாவுக்குள் விழும் போட்டோக்களை கண்டுtw_blush:

அதிகாலை நடை ஆரம்பமானது இருட்டு வேற‌ டோச் லைட்டின் உதவியுன் ஒருவர் பின் ஒருவராக நடக்க ஆரம்பித்தோம் சிறிது நேரத்தில் யானை ஒன்று போகும் வழியில் நிற்க அனைவரும் அப்படியே நின்று  கொண்டோம் ஆனால் அது ஒன்றும் செய்ய இல்லை அதன் பாட்டுக்கு இலை குழைகளை முறித்து சாப்பிட்டு கொண்டு இருந்தது கொன்ஞ்ச‌ நேரம் போன பின்பு அது அதன் பாட்டுக்கு சென்றது பயம் இருந்தாலும் இது வரை எந்த மிருகமும் நடக்கும் யாத்திரிகர்களை ஒன்றும் செய்தது இல்லை என்ற‌ நம்பிக்கை  ஆனால் பயம் ஒன்று மனிதனுக்கு இருக்கிரதல்லவா அதுவும் மரணபயம் அதற்கு பயப்பட்டுதானே ஆகவேண்டும். போகும் வழிகள் சற்று சகதிகள் ,சுரிகள் நிறைந்த இடங்கள் முட்கள்,வள்ளி முள் என்பார்கள் சிலர் வெள்ளி முள் என்பார்கள் அந்த முட் மரங்களையெல்லாம் தாண்டி ஒரு வழியாக காலை 8.30 மணிக்கு பறவைக்குளம் என்ற இடத்தை அடைந்தோம்.  

 

அந்த இடம் குமுக்கன் ஆற்றுக்கு செல்லும் வழியில் தான் இருக்கிறது பற‌வைகள் சரணாலயம் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளி நாட்டு பறவைகள் வந்து தங்கும் இடம் அந்த இடம் தான் கிழக்கு மாகாணத்தின் எல்லை போல ஆரம்ப காலத்தில் ஒரு எல்லை  கல் இருந்தது அதில் கூமுனை என்று அந்த கல்லில் செதுக்கப்பட்டிருந்தது  தற்பொழுது அந்த கல் இல்லை.  தற்போது அந்த இடத்தில் ஒரு மூன்று (மாடி) அடுக்கு கோபுரம் போல் உள்ள கட்டிடம் அமைத்துள்ளர்கள் அதில் ஏறி நின்றுதான் வெளிநாட்டு பிரயாணிகள் போட்டோக்களை எடுப்பார்கள்  அவ்வளவு அழகாக  இருக்கும் அந்த இடம் அந்த இடத்தில் இருந்து பார்த்தால் ஒரு சிறிய தென்னந்தோப்பு தெரியும் ஆனால் நான் இதுவரை அந்த இடத்துக்கு சென்றதில்லை.

.
அந்த இடத்தில் கொஞ்சநேர‌ம் இருந்து  விஸ்கட்டும் தண்ணீரும் குடித்து விட்டு குமுக்கன் ஆற்றை அடைந்தோம் ஆஹா ஆற்று நீர் சலசலவென சத்தத்துடன் நடந்து சென்றவர்களை இன்முகத்துடன் வரவேற்றது நான் யாரையும் பார்க்க வில்லை போன‌வுடன்  பொருட்களை இறக்கி விட்டு ஆற்றில் பாய்ந்தேன் கடும் குளிராக இருந்தது .குளிக்க குளிக்க‌ வந்த களைப்பு தெரியவில்லை நான் ஒரு மணீ நேரம் இளகிய பின்பே என்னுடன் வந்த அனைவரும் வந்து சேர்ந்தார்கள் ஒரு இடத்தை மரத்தின் குப்பைகளை கொஞ்சம் விலக்கிவிட்டு கொஞ்ச நேரம் மட்டும் தங்குமிடமாக அமைத்து கொண்டோம் ஏனென்றால் மாலை அடுத்த கரைக்கு போக வேண்டுமாம் .


 அன்றைய நாளுக்கு குடிபதற்கு தன்ணீர் ஆற்றங்கரையோரம்  மணலில் ஒரு குழியை தோண்டி அதிலிருந்து வடிகட்டி எடுப்போம் நீரை.     சுத்தமான நீராக‌ இருந்தாலும் சுட வைத்தே பருகுவம். அந்த நீரை ஒரு கேனில் எடுத்து நடந்து வரும் யாத்திரிகர்களுக்கு அவர்கள் நடந்து வந்து கொண்டிருக்கும் இடம் வரை சென்று கொடுப்போம் சிறு உதவியாக கிட்ட தட்ட 4,5 கிலோமீற்றர் சென்று அவர்கள் தாகம் தீரும் வரைக்கும் தண்ணீர் கொடுபோம் அதற்கு அவர்கள் நீங்க நல்லா இருக்கணும் சாமி என்பார்கள் எல்லோரையும் சாமியென்றே அழைப்பார்கள் யாத்திரிகர்கள் 


பிறகு நாங்கள் இருக்கும் இடத்தில் சமையலுக்கு தேவையான உதவிகளை செய்து விட்டு மீண்டும் குளிக்க தொடங்குவோம் நன்றாக குளித்து விட்டு அங்கே மிகப்பழையான ஒரு அம்மன் கோவில் இருக்கிற‌து மிகவும் சக்தி வாய்ந்தது கூட  ( தற்போது அந்த அம்மனுக்கு காவலாக ஒரு சின்ன விகரையும் வந்துள்ளது அது சிங்களவர்களின் வேலை ) அம்மனை தரிசித்துவிட்டு நல்ல ஒரு சாப்பாடு காட்டில் அது சாப்பிட்டவர்களுக்கே தெரியும் அதன் சுவை  சாப்பாடு முடிந்த பின் தூக்கம் ஒன்று போட்டு விட்டு மாலை 4.30 மணிக்கு நேநீர் ஒன்றை சுவைத்து விட்டு அடுத்த கரைக்கு செல்ல வேண்டும் ஏனென்றால் அடுத்த நாள் காலை நேரத்துடன் செல்ல வேண்டும்  அந்த நேரம் சில வேளைகளில் ஆற்றுநீர் கழுத்துக்கு மேலாக செல்லும் போகமுடியாது அதை தவிர்ப்பதற்க்காகவே அடுத்த கரைக்கு சென்றோம் அங்கே மீண்டும் ஒரு இடத்தை துப்பரவாக்கி இருந்தோம் அன்றைய இரவு தூங்க வேண்டும் என்பதற்க்காக.


 சிறிய வண்டுகள் , பூச்சிகள் , தேள்கள் , கட்டெறும்புகள் அதிகமாக இருந்தாலும்  சருகுண்ணிகள் அதிகம் இந்த இடத்தில் கால்களில் விரல்களுக்குள்ளே என்ன கவட்டுக்குள்ளும் ஏறி ரத்தத்தை உறுஞ்சிக்கொள்ளூம்  அதனால் அவதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அன்றைய இரவை நெருப்புடன் தான் கழிக்க வேண்டும் நல்லபெரிய மர‌கட்டைகளை எடுத்து எரிக்க ஒரு இடத்தில் போட்டுக்கொண்டோம் மாலை மெல்ல மெல்ல இருளாக சூழ சின்ன சின்ன வெளிச்சம் போட்டு பஜனை பைலா தொடங்கியது பெண்கள் பஜனை பக்திப்பாடல்கள் பாடுவார்கள் இரவு சாப்பாடு அந்த சின்ன வெளிச்சத்திலிருந்து சாப்பிட்டோம் பிறகு மரக்கட்டைகளுக்கு  தீ வைத்த் எரித்தார்கள் எரிக்கும் நேரத்தில் சூடு தாங்க முடியாமல் ஜந்துகள் ஊர தொடங்கியது. அன்றைய இரவு தூக்கம் நாங்கள் தூங்க பெரியவர்கள் காவல் இருந்தார்கள் . 

இந்த இடத்தில் நடந்த சில சம்பவங்கள் கூறுகிறேன்  நான் இப்படியே சில ஆண்டுகள் சொந்தங்களுடன் சென்றேன் பிறகு நண்பர்களுடன் முதல் முதலாக‌ சென்ற வேளை பகல் சாப்பாட்டை சமைத்த பிறகு மூன்று நண்பர்கள் விளாம்பழம் எடுத்து வருகிறோம் என்று சொல்லிவிட்டு போன நண்பர்கள் காட்டுக்குள் சென்று வரவில்லை 12.00 மணீக்கு போனவர்கள் 3.00 மணியாகியும் வரவில்லை 

 

தொடரும்  யாத்திரை

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகும் வழியில் பறவைக்குளம் அருகில்

DSCN0606.jpg

அந்த தென்னந்தோப்பு

DSCN0605.jpg

பறவைக்குளம்

DSCN0867.jpg

 அம்மன் கோவில் யார் கட்டியது என்று தெரியாது அந்த காட்டில்

DSCN0880.jpg

புதிதாக வந்துள்ள விகாரை

DSCN0881.jpg

குமுக்கன் ஆறு

DSCN0882.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரர்கள் போட்டோ எடுப்பதற்க்காக கட்டப்பட்ட அந்த கோபுரம்

DSCN0870.jpg

ஒரு பக்கம் கரைப்பகுதி

DSCN0618.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறு பக்க கரையில் இருந்து 

DSCN0890.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களுடன் அட்டகாசமாய் இருக்கு...தொடருங்கள் முனிவர்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2016 at 3:51 AM, தமிழ் சிறி said:

DSCN0847.jpg

முனிவர் ஜீ..... 
 "நிழலின் அருமை.... வெய்யிலில் தெரியும்."  என்பார்கள். அதற்கு ஏற்ற அழகிய ...  படம். 

நன்றி சிறி அண்ணை  சரியான வெயில்தான் இந்த வருடம் நடக்கும் போது  அதன் போதே எடுத்த் படம் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளி முள் அல்லது வெள்ளி முள் வெள்ளைநிறமாக இருப்பதால் என்னவோ தெரியவில்லை இந்த பெயர் 

DSCN0907.jpg

இந்த வருடம் குமுக்கன் ஆற்றை கடப்பதற்க்காக படையினரால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கயிறு பிற பகுதி மிக ஆழமானாதால்
 

DSCN0885.jpg

மிருகங்கள் நீர் குடிப்பதற்க்காக அமைக்கப்பட்ட தொட்டி மழை இல்லாத நேரங்களில் நீரை நிரப்பி விடுவார்கள் 

DSCN0860.jpg

நான் சொன்ன ஜந்துக்களில் ஒன்று

Rajan_1988.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் யாத்திரை வாசிக்க நாமும் சேர்ந்து செல்வது போல் இருக்கிறது. எனக்கு கதிர்காமத்தில் தான் சோறு தீத்தியதாக அம்மா அடிக்கடி கூறுவார்.ஆனால் நினைவு தெரிந்து நான் கதிர்காமத்துக்குச் செல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2016 at 2:56 PM, suvy said:

அழகான படங்களுடன் அட்டகாசமாய் இருக்கு...தொடருங்கள் முனிவர்....! tw_blush:

நன்றி சுவி அண்ணை தொடரும் 

On 12/28/2016 at 1:04 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் யாத்திரை வாசிக்க நாமும் சேர்ந்து செல்வது போல் இருக்கிறது. எனக்கு கதிர்காமத்தில் தான் சோறு தீத்தியதாக அம்மா அடிக்கடி கூறுவார்.ஆனால் நினைவு தெரிந்து நான் கதிர்காமத்துக்குச் செல்லவில்லை.

நன்றி அக்கா கதிர்காமம் இன்னுமா செல்லவில்லை பல லட்சக்கணக்கானமக்கள் வந்து செல்லும் ஒரு தலம் அது உங்கள் சரிவந்தால் வந்து போங்கோ சீசனுக்கு இல்லாவிட்டாலும்  வேற நாட் கள் 

21 hours ago, Rajesh said:

12000 பேர் கலந்து கொண்டது ஒரு பெரிய சாதனை தான்.

அந்த பதினைந்து நாட் களுக்குள் லட்சத்தை தாண்டி விடும் எங்களூடன்  வந்த ஆட் கள் 12000 பேர் வரை இருக்கும் அடுத்தடுத்த நாட் கள் வந்த வர்களையும் சேர்த்தால் பல மடங்காக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • நண்பர்கள் முதல் முதலாக வருவதனால் அவர்களுக்கு காட்டைப்பற்றி தெரியவில்லை போக வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் போய்விட்டார்கள் இளங்கன்றுகள் பயமறியாதது போல். சாப்பிட எடுத்தோம் எங்க இவனுகளை காணவில்லையென்று தேட தொடங்கினோம் அவர்கள் அந்த காட்டுப்பகுதியில் இல்லை கதை மெல்ல மெல்ல‌ சனங்களின் காதுகளுக்கு செல்ல கொஞ்சநேரம் அந்த இடத்தில் ஒரு ஆசாதாரண சூழல் நிலவியது சரி தேடவேண்டும் தேடியே ஆகவேண்டும்  நானும் மீதியாக இருந்த நண்பர்களும் கையில் கொண்டுபோன சீன வெடியுடனும் போனோம் காட்டில் கூக்குரல் இட்டவாறு சில மணிநேரம் நடந்தோம்  போகும் வழியில் அவர்கள் சத்தம் கேட்டாவது வருவார்கள் என்று. ஆனால் இல்லை வெடிகளும் போட்டு பார்த்தோம் எந்த சத்தமும்  இல்லை பிறகென்ன காட்டுக்குள் போவதென முடிவெடுத்தோம் கிளைகளை முறித்துக்கொண்டு சில மீற்றர் தூரம் சென்றோம் அங்கே அவர்கள் ஒருமரத்தில் மூன்று பேரும் ஏறி அமர்ந்து இருந்தனர் பயத்தில் வழி தெரியவில்லையென்று சொன்னார்கள் போகும் போதே சொன்னேனே என்று நான் கூற கூட வந்த நண்பர்கள் அடிக்காத குறையாக நல்ல ஏச்சும் பேச்சும் கொடுத்து கூட்டிக்கொண்டு வந்தோம். ஒரு அரை உரப்பை விளாம்பழத்துடன் . அன்று யானை வரவில்லையோ என்று தெரியாது இல்லையென்றால் அத்தனை பழங்களையும் விழுங்கி வெறும் கோது மட்டுமே மரத்தின் கீழ் கிடக்கும் .

 

  • இன்னொரு சம்பவம் அடுத்த ஆண்டில் ஒரு இளைஞன் காட்டில் எதற்கு சென்றான் என்று தெரியவில்லை காணாமல் போனான் தனியே ஆளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை மதியம் காணாமல் போனான் நானும் நண்பர்கள் எல்லோரும் காட்டை அலசி தேடியும் அவன் கிடைக்கவில்லை. படையினருக்கு அறிவிக்கப்பட்டது என்ன நடந்தது என்று தெரியவில்லை அடுத்த நாள் காலை நாங்கள் தான் அடுத்த தங்குமிடத்துக்கு முதல் முதலாக நடந்து செல்வது வழமை எல்லோரும் இளைஞர்கள் என்பதால் நிற்காமல் நடந்து செல்வோம் அப்போது அந்த இடத்தை இடத்தை நெருங்கும் வேளையில் அந்த இளைஞன் அங்கு தனியாக நிற்பதை பார்த்த எங்களூக்கு யாரு அது நமக்கு முன்னதாக வந்து விட்டானே என்று அருகில் சென்று  பார்க்கும் போது அவன் அழுது கொண்டிருந்தான் அடேய் உன்னை காணவில்லையென்று அவர்கள் அங்கே தேடிக்கொண்டு இருக்கிறார்கள் அழுது கொண்டும் இருக்கிரார்கள் நீ இங்க என்ன செய்கிறாய் எப்படி  வந்தாய் என்று கேட்க எனக்கும் ஒன்றும் தெரியாது காட்டில் போனவுடன் வழி மாறி விட்டேன் யானை ஒன்று என்னை துரத்தி வர வர நான் இந்த இடம் வரைக்கும் வந்தேன் என்றான். சரி சரி அழாதே உனக்காக அவர்கள் அங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் சனம் வந்து கொண்டே இருக்கிறது அவர்கள் வந்து கொண்டிருக்கும் வழி வரை நீ செல்லும் நீ போனால்தான் அவர்கள் வருவார்கள் என்று சொல்லி அங்கேயே அழுது கொண்டிருக்கிறார்கள் நீ போ என்று அவனை திருப்பி அனுப்பி விட்டு அந்த இடத்தில் நின்றோம் அவன் கண்ணுக்கு எட்டும் தூரம் வரைக்கும் செல்லும் வரை .

யாத்திர‌க்கு வ‌ருவோம்:
அதிகாலையில் எழும்புங்கோ எழும்புங்கோ நேரத்துடன் நடக்க வேண்டும் என்று அதிகாலை தூக்கத்தை கலைத்தார்கள் எழும்ப மனம் இல்லை  என்றாலும் அந்த நெருப்பு சூட்டில் இறுக்கி போர்த்துகொண்டு தூங்குவது ஒரு  சுகம் இருந்தாலும் நேரத்துடன் நடக்க வேண்டும் எழும்பி தேநீரை குடித்து விட்டு தேவையான நீரை போத்தலில் இட்டு கொண்டிருக்கும் போது சொன்னார்கள் எவ்வளவு நீரை எடுக்க இயலுமோ எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே நாவலடியில் உப்பு தண்ணிதான் இருக்கிறது என்றும் குடிக்க தண்ணீர் இல்லை என்றும் சொன்னார்கள்  ஐந்து காடு ஐந்து வெட்ட வெளி தாண்ட வேண்டும் சொன்னார்கள். தேவாரம் பாடப்பட்டு நாவலடி நோக்கி யாத்திரை தொடங்கியது கடும் காடு விளாமரங்கள் இலையில்லை காய்களாக தொங்கிய வண்ணம் ஆயிரம் மரங்கள் காட்டினுள்ளே வானுயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு அது . மொன்ராகலை மாவட்டத்தினுள் இணையும்  காடு அது  மிகப்பெரிய காடும் கூட போகும் வழியில் காட்டுபன்றிகள் கூட்டம் கூட்டமாகவும் மான்கள் கூட்டம் கூட்டமாகவும் காட்டுமாடுகள் தொலைதூரத்தில் ஆட்கள் நடந்து செல்வதனை பார்த்துக்கொண்டே இருக்கும்  அது காஞ்ச புல்லை மேய்ந்து விசித்திர தோற்றமுடையதாக இருக்கும் சில வேலைகளில் இறந்து துர்நாற்றமும் வீசும் அது மட்டுமல்ல வேற விலங்குகளும் கூட வெட்டை ஐந்து வெட்டை தாண்டியவுடன் சிறிய ஆற்றுப்பகுதி இருந்தது அந்த ஆறு உப்பு ஆறு அதைதாண்டித்தான் போகவேண்டும் இறங்கினால் சரியான சுரியாக இருந்தது கடும் கஸ்ரமாக இருந்தது சில வேளைகளில் காய்ந்துபோய் இருக்கும். நாங்கள் சென்ற நேரம் நல்ல நீராக இருந்தது அதையும் தாண்டி நாவடியை போய்சேர்ந்தோம் காலை 10.00மணிக்கு. அந்த இடம் முழுக்க நாவல்மரங்கள் பழங்கள்பழுத்து இருந்தது நான்  கொண்டு போன பையில் இருந்த கத்தியை எடுத்து மரம் ஒன்றில் ஏறி கிளையை வெட்டி விட்டேன் கீழே வீழ்ந்தமரக்கிளையில் நல்ல பழங்களை பறித்து சாப்பிட்டோம் வாய் முழுக்க நாவல் நிறமாகியது போன எல்லோரும் நல்ல பழங்கள் சாப்பிட்டார்கள் பிறகு சமையல் வேலைகள் ஆரம்பிக்க தேவையான உதவி செய்து விட்டு ஒரு கிண்று இருந்தது அதில் உப்புதண்ணிதான் அதனால் குளிக்க வில்லை மேலைக்காலை கழுவி விட்டு வந்து கால்கள் நோவெடுக்க ஆரம்பமானது கொண்டு போன தைலங்கள் ,சித்தாலபே போன்ற சாதனங்களை கால்களூக்கும் தோள் பட்டைக்கும் உரஞ்சி உரஞ்சி பூசி நோவை போக்கினோம் பகல் சாப்பாட்டை முடிந்த பிறகு நல்ல துக்கம் போன களைப்புக்கு பின்நேரம் எழும்பி மரக்கடைகளை எடுத்து தீனாவுக்கு போட்டுக்கொண்டோம் அன்றைய இரவு பஜனையோ பாட்டுக்கச்சேரியோ நடத்த ஆட்கள் இல்லை காரணம் கடும்களைப்பில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கி விட்டார்கள் நாங்களும் ஏனென்றால் வியால என்று சொல்லும் இடத்துக்கு செல்ல வேண்டும் மிகவும் தூரம் என்று சொன்னார்கள்

அடுத்த தங்குமிடம் வியால என்று சொல்கின்ற யால காட்டுப்பகுதியை நோக்கி தொடரும்          

சகதிகளுக்குள்ளும் சிறிய ஆறுகளுக்குள்ளும் மக்கள்

DSCN0911.jpg

ஒரு வெட்ட வெளி

DSCN0902.jpg

நான் சொன்ன அந்த உப்பாறு 

DSCN0908.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்ப காலத்தில் இந்த நீரையெடுத்து சுடவைத்து பருகினோம் நாவலடியில் உள்ள ஒரு குளம் போல மழை நீர் மட்டும் தான் இதில் இருக்கும் மிருகங்களும் இந்த நீரையே பருக  இங்கே வரும் இந்த நீர் கொஞ்சம் உப்பு தன்மையற்றது

DSCN0909.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.