Jump to content

இலங்கை - பங்களாதேஷ் மோதும் அரையிறுதிப்போட்டி இன்று


Recommended Posts

இலங்கை - பங்களாதேஷ் மோதும் அரையிறுதிப்போட்டி இன்று

 

 

19 வய­திற்­குட்­பட்­டோருக் ­கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையி­றுதிப் போட்டியில்  இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன. 

asdfasfa1.jpg

இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/14598

Link to comment
Share on other sites

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

 

 19 வய­திற்­குட்­பட்­டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையி­றுதிப் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

15622118_2018120591552471_11789700453412

பங்களதேஷ் அணிக்கெதிரான இந்த போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களதேஷ் அணி 48.3 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் ரயான் ரப்ஷான் 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரம 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால், டக்வர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி சார்பில் சத்துரங்க 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்கவுள்ளது.

http://www.virakesari.lk/article/14634

Link to comment
Share on other sites

இளையோருக்கான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இளம் இலங்கை

u4-40edb9f2087d1c83e6d0ad30802699b41e9f2151.jpg

 

இலங்­கையில் நடை­பெற்­று­வரும் இளையோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற முத­லா­வது அரை­யி­றுதிப் போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் அணியை வீழ்த்தி இந்­திய அணி இறு­திப்­போட்­டிக்கு நுழைந்­தது. நாளை நடை­பெ­ற­வுள்ள இறு­திப்­போட்­டியில் இந்­தி­யா­வுடன் மோதப்­போகும் அணி எது என்­பதை தீர்­மா­னிக்கும் இரண்­டா­வது அரை­யி­றுதிப் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச அரங்கில் நடை­பெற்­றது.

இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­தின. இதில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி ­பெற்ற பங்­க­ளாதேஷ் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது.

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் அணியின் ஆர­ம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக சைவ் ஹசன் மற்றும் மொஹமட் சொஹ்ப் ஹொசன் ஆகியோர் கள­மி­றங்­கினர். 8.3 ஓவர்­களில் 42 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த வேளையில் பங்­க­ளாதேஷ் முதல் விக்­கெட்டை இழந்­தது. 26 ஓட்­டங்­களைப் பெற்று சைவ் ஹசன் ஆட்­ட­மி­ழந்தார்.

அடுத்ததாக ஹொசைனும் 36 ஓட்டங்களுடன் விக்கெட்டை பறிகொடுக்க, சிறப்பாக ஆடி வந்த ரவ்சான் ரஹ்மானும் 38 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இறு­தியில் பங்­க­ளாதேஷ் அணி 48.3 ஓவர்­களில் சகல விக்­கெட்­டுக்

­க­ளையும் இழந்து 194 ஓட்­டங்­க ளைப் பெற்­றுக்­கொண்­டது. பந்­து­ வீச்சில் அசத்­திய இலங்கை வீரர் ஜய­விக்­ரம 4 விக்­கெட்­டுக்­க­ளையும்,

வீர­சிங்க 3 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர்.

195 என்ற வெற்­றி

­இ­லக்கைத் துரத்த கள­மி­றங்­கிய இலங்கை அணிக்கு கெலி மற்றும் சது­ரங்க ஜோடி தொடக்­கத்தை கொடுத்­தது. இதில் கெலி 23 ஓட்­டங்­க­ளு­டனும் சது­ரங்க 68 ஓட்­டங்­க­ளையும் பெற்று ஆட்­ட­மி­ழக்க, அடுத்து பொயா­கொட மற்றும் மெண்

டிஸ் ஜோடி நிதா­ன­மாக ஆடிக்­கொண்­டி­ருக்க மழை குறுக்­கிட்­டது.

கிட்­டத்­தட்ட 2 மணித்­தி­யா­லங் கள் தொடர்ந்து மழை பெய்­ததால் போட்டி நிறுத்­தப்­ப­டு­வ­தாக அறி­விக்கப்பட்­டது.

அப்­போது இலங்கை அணி 27.1 ஓவர்­களில் 2 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 106 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது. போட்டி நிறுத்­தப்­பட்­டதால் டக்வேர்த் லூயிஸ் முறைப்­படி போட்­டியின் முடிவு அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி 26 ஓட்­டங்­களால் இலங்கை அணி வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்த வெற்றியின் மூலம்  இலங்கை அணி இறுதிப்போட்டிக் குள் நுழைந்தது. நாளை நடை பெறவுள்ள இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-22#page-16

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ணம் யாருக்கு? ; இலங்கையுடன் மோதுகிறது இந்தியா!

 

19 வய­திற்­குட்­பட்­டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின்  இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

asfasf1.jpg

இந்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 26  ஓட்டங்களால் பங்களதேஷ் அணியை வெற்றிக்கொண்டதுடன், இந்திய அணி 77 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கொண்டது.

இந்நிலையில் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த போட்டி இலங்கை நேரப்படி மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர். பிரேமதாச  சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/14672

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

Published by Pradhap on 2016-12-23 22:26:14

 

19 வயதுக்குற்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெற்றிக்கொண்டு இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

15698241_2020803997950797_58297168606718

இன்று ஆர்.பிரேமாதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதனடிப்படையில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் சப்மான் கில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

15665890_2020803951284135_67498116899153

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரன்சிக மற்றும் ஜெயவிக்ரம தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் 274 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 239 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

15590255_2020804057950791_53737729136642

இலங்கை அணி சார்பில் கெல்லி 62 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பில் அபிசேக் சர்மா 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/article/14695

Link to comment
Share on other sites

#U19AsiaCup: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்!

 

C0YFEIYUsAAEqiH_22561.jpg

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை  கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் ஆடிய ஹிமான்ஷு ராணா அதிகபட்சமாக 70 பந்துகளில், 71 ரன்கள் எடுத்தார்.

அடுத்து பேட் செய்த இலங்கை அணி, 48.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் இந்திய அணி இலங்கையை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இந்த இளம்வயது ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்-ட்ரிக் சாதனை படைத்துள்ளது.

http://www.vikatan.com/news/sports/75800-india-u-19-team-won-youth-asia-cup.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.