Jump to content

2017 பொங்கல் ரிலீஸ் படங்களில் கவனிக்க வேண்டியவை..!


Recommended Posts

2017 பொங்கல் ரிலீஸ் படங்களில் கவனிக்க வேண்டியவை..!

 

collage_12227.jpg

பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள் என்று தினம் ஒரு படம் அப்பேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதுவரை எட்டு படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருக்கும் நிலையில், அந்த படங்கள் எது..? அந்த படங்களில் என்ன ஸ்பெஷல் என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...

‘பைரவா’

vijay-bairavaa-hd-stills-03-1017x1200_12

பொங்கல் ரேஸில் முதலில் பெயர் கொடுத்தது, விஜய்யின் ‘பைரவா’ படம் தான். இந்த படத்தில் முதன் முதலாக விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த இரண்டு செய்திகள் தான் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால், ‘ரஜினி முருகன்’ படத்தில் கீர்த்தியின் அழகும், ‘கபாலி’ படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையும் பலரால் பாராட்டப்பட்டது. அதனால் தான் ரசிகர்கள் இந்த காம்போவை வரவேற்றனர். அடுத்ததாக இயக்குநர் பரதன். இவர் விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவர். அந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் விஜய் மறுபடியும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால், இந்த வாய்ப்பை கண்டிப்பாக நல்லா பயன்படுத்தியிருப்பார் என்கின்றனர் பலர். ‘அழகிய தமிழ் மகன்’ படத்தைப் போலவே இந்த படத்திலும் விஜய்க்கு இரட்டை வேடம்! இந்த மாதிரி பல ஸ்பெஷலோடு ‘பைரவா’ படம் வெளியாவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

‘சிங்கம் 3’

Suriya-Singam-3-is-now-S3_12350.jpg

டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 23 என இரண்டு முறை ரிலீஸ் தேதியை அறிவித்து, பின்னர் சில காரணங்களாக படத்தில் ரிலீஸ் தள்ளிப்போகிறது. இன்னும் உறுதியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தாலும், ‘சிங்கம் 3’ பொங்கலுக்கு ரிலிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ என முந்தைய இரண்டு பாகங்களுமே ரசிகர்களுக்கு பிடித்திருந்ததால் ‘சிங்கம்-3’ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த முறை சூர்யா இன்டர்நேஷனல் காப் என்பதால், படம் எந்த மாதிரி இருக்கும் என்று அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் ஹரியின் வேகமான திரைக்கதையை பற்றி சொல்லவா வேணும்..? இப்படி பல ஸ்பெஷல்கள் இருக்கின்றன. 

‘புரியாத புதிர்’

bg6_13069.jpg

மெல்லிசையாக அறிமுகமாகி தற்போது நம்முன் புரியாத புதிராக நிற்கிறது விஜய் சேதுபதியின் படம். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் இந்த படம் பல மாதங்களாக ரிலீஸுக்கு காத்திருந்தது. டிசம்பர் மாத இறுதியில் ரிலீஸ் என்று சொன்னவர்கள் தற்போது பொங்கலுக்கு என்று அறிவித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி படம் என்றாலே அது வித்தியாசமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அதற்கேற்ப இந்த படத்தின் டிரெய்லரும் சிறப்பாக இருந்ததால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சைக்கோ த்ரில்லராக எடுத்திருக்கும் இந்த படம் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை எடுத்துத்தருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

‘புரூஸ் லீ’

brucee-lee_13081.jpg

இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம் ‘புரூஸ் லீ’. சண்டையே போடத் தெரியாதவனுக்கு பெயர் ‘புரூஸ் லீ’. இந்த ஒன் லைன்னே அதிக பேரை கவர்ந்தது.இளைஞர்களுக்கு ஜி.வி.பிரகாஷை அதிகம் பிடித்துப்போக, படத்திற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். பொங்கலுக்கு விஜய் அண்ணனோடு வர்றோம் என்று போஸ்டர் ஒட்டி பல விஜய் ரசிகர்களையும் தியேட்டருக்குள் இழுக்கிறார் ஜி.வி.

‘எனக்கு வாய்த்த அடிமைகள்’

Enakku-Vaitha-Adimaigal-movie-03_13445.j

ஜெய், பிரணிதா, கருணாகரன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து, புதுமுக இயக்குநர் மகேந்திரன் இயக்கியிருக்கும் படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. எப்ப வேணாலும் வருவோம் என்ற அறிவிப்போடு இருந்தவர்கள் தை பொங்கலுக்கு தைரியமா வர்றோம் என்று போஸ்டர் அடித்துள்ளனர். ஜெய் ஸோலோ ஹீரோவாக நடித்த சில படங்கள் சரியாக போகாததால் இந்த படத்தின் மூலம் தனது ஹீரோ அந்தஸ்த்தை எப்படி தங்க வைத்து கொள்கிறார் என்று பார்ப்போம். 

‘குற்றம் 23’

maxresdefault-2_13056.jpg

‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ படங்களுக்கு அடுத்து இயக்குநர் அறிவழகன் இயக்கியிருக்கும் படம் ‘குற்றம் 23’. முதல்முறையாக நடிகர் அருண் விஜய் போலீஸாக நடிக்கிறார். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது. தற்போது இந்த படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அறிவழகனின் ஸ்டைல் பலருக்கும் பிடித்திருப்பதால் இந்த படத்தில் போலீஸ் ஸ்டோரியை எப்படி இயக்கியிருக்கிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளனர்.

‘யாக்கை’

Yaakkai1-Tamil-songs-1_13302.jpg

குழந்தை வேலப்பன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், கிருஷ்ணா-ஸ்வாதி நடித்திருக்கும் படம் ‘யாக்கை’. இந்த படத்தில் யுவன் பாடிய 'நீ' பாடல் செம ஹிட் என்பதால் பலரின் கண் இந்த படத்தின் மீது இருக்கிறது. ‘ஜோக்கர்’ படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது கூடுதல் கவனம். கிருஷ்ணாவிற்கு இந்த படம் ப்ரேக் கொடுக்குமா என்று பார்ப்போம்.

‘அதே கண்கள்’

adhey-kangal-20161102170756-15487_13547.

கலையரசன், ஜனனி, ஷிவதா நாயர், பால சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘அதே கண்கள்’. தனது நடிப்பால் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் கலையரசன். தற்போது அவர் ஸோலோ ஹீரோவா நடித்திருப்பதால் இந்த படம் அவரது கேரியரில் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற எண்ணம் பலருக்கும் எழுந்துள்ளது. பல பெரிய படங்கள் ரிலீஸாகும் நாளில் இந்த படமும் வருவதால் பலர் கவனிக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அதையும் தாண்டி இந்த படம் எப்படி பெயர் எடுக்கிறது என்பதை பார்க்கலாம். 

ஒரே நாளில் இத்தனை படங்கள் வந்தால் மக்கள் எப்படி சமாளிப்பார்கள்..? முதலில் இத்தனை படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா..? என்று பல கேள்விகள் எழுகின்றன. பொங்கல் தினத்திற்கு இன்னும் 25 நாட்களுக்கு மேல் உள்ளதால் இந்த ரேஸில் இருந்து சில படங்கள் விலகிக்கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பார்க்கலாம்..!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/75338-movie-releases-during-2017-pongal.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.