Jump to content

2017 ஐ.பி.எல் சீசனில் களமிறங்கும் வீரர்கள்


Recommended Posts

2017 ஐ.பி.எல் சீசனில் களமிறங்கும் வீரர்கள்

 

ipl-2017_20136.jpg

2017 ஐ.பி.எல் சீசனில் ஏலத்துக்கு விடப்படும் வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பீட்டர்சன், இஷாந்த் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற சீசனில் விளையாடும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 44 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 140 வீரர்கள் அந்தந்த அணிகளிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தோனி, கோலி, அஸ்வின், ரெய்னா, தவான், ரோஹித் சர்மா,ஜாகீர்கான், ஹர்பஜன்சிங், புவனேஷ்வர்குமார், ஜடேஜா, சமி, டிவில்லியர்ஸ், கெய்ல், வார்னர், பொல்லார்டு, மேக்ஸ்வெல், டுமினி, ரஸல், டூப்ளிஸ்ஸி, சுனில்நரைன் போன்றோர் கடந்த அணிகளில் விளையாடிய அதே அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/75390-players-retention-list-for-ipl--2017-season.art

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்: வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந்தேதி கடைசி நாள்

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல், மே மாதத்தில் நடக்கிறது. அடுத்த சீசனுக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.

 
 
 
 
ஐ.பி.எல்: வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந்தேதி கடைசி நாள்
 
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல், மே மாதத்தில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. அடுத்த சீசனுக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில் 8 அணிகளும் பல வீரர்களை தக்க வைத்து இருக்கிறது. தேவையற்ற வீரர்களை விடுவித்து இருக்கிறது. டோனி தலைமையிலான புனே அணி 16 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக்கிறது. குஜராத் அணி 16 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு 6 வீரர்களை விடுவித்து இருக்கிறது. பஞ்சாப் 19 வீரர்களை தக்கவைத்ததுடன் 4 வீரர்களை விடுவித்துள்ளது.

கொல்கத்தா அணி 14 வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளது. 9 வீரர்களை விடுவித்து இருக்கிறது. மும்பை அணி 20 வீரர்களை தக்கவைத்து விட்டு 8 வீரர்களை விடுவித்துள்ளது. டெல்லி அணி 18 வீரர்களை தக்கவைத்து கொண்டு 7 வீரர்களையும், பெங்களூரு அணி 20 வீரர்களை தக்க வைத்து கொண்டு 10 வீரர்களையும், ஐதராபாத் அணி 17 வீரர்களை தக்க வைத்து கொண்டு 6 வீரர்களையும் விடுவித்து இருக்கின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/20092244/1057135/IPL-On-th15th-last-day-players-changing-in-teams.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.