Jump to content

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்கள்


Recommended Posts

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்கள்

douglas-devananda.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மேல் நீதிமன்றத்தினால் இரட்டை கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு , சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் , வெளிநாடுகளில் இருந்து , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார்.

 
யாழில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
மேல் நீதிமன்றினால் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல.  
 
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தினார்கள் இரட்டை படுகொலை செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றினால் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டு இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்ட மூவரும் குற்றவாளிகள் அல்ல. அந்த தாக்குதல் சம்பவத்திற்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 
அதில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளி என இனம் காணப்பட்ட மதனராஜா என்பவர் சம்பவ தினத்தன்று சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் எமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு என் கண் முன்னே தான் இருந்தார்.
 
மற்றுமொரு குற்றவாளியாக காணப்பட்ட நெப்போலியன் என்பவர் இவ்வாறான செயலை செய்ய கூடிய நபர் அல்ல. அவருக்கு தீவகத்தில் மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தால்,  அவரை அரசியல் நோக்குடன் இந்த வழக்கில் சிக்க வைத்தனர்.  குறித்த இரு நபர்களும் தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் வெளிநாடுகளில் எமது கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.
 
பிடித்தால் பிடித்து கொண்டு வரட்டும்.
 
அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர்களை சர்வதேச பொலிசார் பிடித்தால் , பிடித்து இங்கே கொண்டு வரட்டும்.
 
 சாட்சியம் அளிக்க அனுமதிக்கவில்லை.
 
அதேவேளை இந்த வழக்கு தொடர்பில் நான் எனது சாட்சியங்களை மேல் நீதிமன்றில் பதிவு செய்ய எனது சட்டத்தரணி ஊடாக அனுமதி கோரி இருந்தேன். அதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதிக்க வில்லை.
 
மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
 
தற்போது மேல் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து , மேல் முறையீடு செய்யபட்டு உள்ளது அதனால் மேற்கொண்டு அந்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
 
 
 சம்பவம்.
 
கடந்த 2001 ஆம் ஆண்டு தீவகத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ,துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு , வாளினால் வெட்டி , இரும்பு கம்பிகள் , கொட்டான்கள் என்பற்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவர் கொல்லபட்டு 18பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
 
அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று கடந்த 7ஆம் திகதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மூவர் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு அவர்களுக்கு இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டதுடன் , 20 வருட கடூழிய சிறை தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிட்டும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்பளித்து இருந்தார்.
 
 அதில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட இரு நபர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதனால் , அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/10841

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Trial in absentia விடயத்தில் நீதிமன்றம் சிறிது அவசரபட்டுவிட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாழிகள் தற்சமயம் வெளிநாடுகளில் மறைந்தது வாழ்வதாக தெரிகிறது. அத்துடன் சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் மரணதண்டனை தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளில் அவர்கள் தற்சமயம் இருந்தால் அந்த நாடுகளில் உள்ள மனிதாபிமான அமைப்புகள் அவர்களை வெளியேற்ற வேண்டாம் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.