Jump to content

‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை


Recommended Posts

‘தியாகராஜ பாகவதருக்கே அந்த நிலைமைன்னா...?!’ - ஒரு நடிகரின் கவலை

liviign_11266.jpg

'மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபட்டவராக வாழ்ந்து வருகிறார் நடிகர் லிவிங்ஸ்டன். அப்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த குஷ்பு, தேவயாணி, கெளசல்யா என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். காமெடி, வில்லன், ஹீரோ என அனைத்து கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பவர் அவர். இதுவரை 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் தொய்வில்லாமல் நடிப்புப் பணியில் தீவிரத்தை காட்டி வருகிறார். பொது இடங்களில் சாதாரணமாக ஆட்டோக்களிலும், அரசு பேருந்துகளிலும் பயணிக்கிறார். பொதுமக்கள் அடையாளம் காணும் போது புன்முறுவலோடு கடந்து செல்கிறார் லிவிங்ஸ்டன்... அவரிடம் பேசினோம்.

''எதற்காக இந்த சிம்பிளிசிட்டி?''

''நான் எப்பவுமே இப்படித்தான். 1934 ஆம் ஆண்டு 'பவளக்கொடி' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் தியாகராஜ பாகவதர்.

பிரிட்டிஷ் அதிகாரிகள் ரயில்வே பணியில் அப்போது இருந்தார்கள். தியாகராஜ பாகவதர் ரயிலில் பயணிக்க வந்த போது, பொதுமக்கள் வெள்ளம் அவரைப் பார்க்க திரண்டுவிட்டது. ரயில் நகர முடியாத சூழல். அப்போதுதான் பிரிட்டிஷ் அதிகாரிகளும் இவரைப் பற்றி தெரிந்துகொண்டு, அவர் அருகில் போய், 'சார் இனிமேல் நீங்கள் ரயிலில் பயணிக்க வேண்டாம். நீங்கள் காரில் பயணிப்பதுதான் நல்லது' என கூறி அவரை பாதுகாப்போடு அழைத்துச் சென்றார்களாம்.

அப்படி மக்கள் மனதை கொள்ளைக் கொண்டு மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர் தியாகராஜ பாகவதர். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஓடி மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. அந்த நேரத்தில்தான் திடீரென லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் பாகவதர். விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு வெளியில் வந்த சில ஆண்டுகளில் மக்களிடையே அவருடைய செல்வாக்கு குறைந்தது. அவர் எங்கிருக்கிறார் என்றுக்கூட யாரும் யோசிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நாள் கவிஞர் வாலி ரயிலில் பயணிக்க சென்ற போது ரயில்வே பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தார். அவர் வேறு யாரும் அல்ல மக்கள் பெருவெள்ளத்திலும், புகழின் உச்சத்திலும் இருந்த தமிழ் சினிமாவின் முன்னோடி நடிகர் தியாகராஜ பாகவதர் தான். வாலி அவர்கள் பாகவதரைப் பார்த்தும் அழுதுவிட்டாராம். அப்படிப்பட்ட தியாகராஜ பாகவதர்கே அந்த நிலைமைனா, நாமெல்லாம் எம்மாத்திரம். எம்.ஆர்.ராதா, தியாகராஜ பாகவதர் போன்ற புகழின் உச்சத்தில் இருந்த பலருடைய வாழ்க்கையும் கடைசியில் டிராஜிடியில் முடிந்ததாக நிறையப் படித்திருக்கிறேன். அதிலிருந்துதான் நான் வாழ்க்கையின் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்''. 

''நான் நடிக்க வாய்ப்புக் கேட்க எப்படி வந்தேனோ அப்படியேத்தான் இப்போதும் இருக்கிறேன். என்னுடைய கேரக்டர் எந்த விதத்திலும் மாறவில்லை. எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில் இருக்கும் அட்வான்டேஜ் , கடைசி வரை எந்த ஏற்ற, இறக்கம் வந்தாலும் கலங்காமல் வைத்துக் கொள்ளும். இன்றைக்கு உயரத்தில் இருந்துவிட்டு, தேவையில்லாத ஆடம்பரங்களுக்கு அடிமையாகிவிட்டு திடீரென சறுக்கல் ஏற்படும் பொழுது மனம் உடைந்து போகும். இப்படி எதற்க்கும் ஆளாகாமல் இருக்க என்னை நானே சாதாரணமாக வாழப் பழக்கப்படுத்திக் கொண்டேன் அவ்வளவுதான். இதில் பெரிய பெருமை எல்லாம் கிடையாது''.

livingston_1_11500.jpg

''பொது இடங்களில் சாதாரணமாக பயணிக்கும் பொழுது மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?''

''சாதாரணமாக என்று சொல்லாதீர்கள். எல்லோரையும் போலத்தான் நாங்களும். நடிகர் மம்முட்டி, மோகன்லால் இவங்க எல்லாம் சாதாரணமாக மக்களோடு மக்களாக உட்கார்ந்து டீ குடிப்பாங்க. பேசுவாங்க. ஆனால் தமிழ்நாட்டுலதான் தலைகீழா இருக்கு. மக்களோடு மக்களாக ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான், என் மனைவி, இரண்டு மகள்கள் என நாங்கள் நான்கு பேரும் இடித்துக் கொண்டு ஒரே ஆட்டோவில் பயணித்திருக்கிறோம். சில நேரங்கள் வீட்டிற்கு நடந்தே வந்திருக்கிறேன். எனக்கு இப்படி எளிமையான வாழ்க்கை வாழதான் பிடித்திருக்கிறது. பொதுமக்கள் யாராவது என்னை அடையாளம் கண்டு பேசும்போது, 'ஏன் சார் நீங்க எல்லாம் பஸ்ல வரலாமா?' என கேட்பார்கள். அதற்கு நான், 'நானும் உங்கள மாதிரி ஒருத்தன் தானே. உங்களோடு கலந்து இருக்கப் பிடிச்சிருக்கு. எங்களை நீங்களாகவே பெரிதுப் படுத்துவதால்தான் பல பிரபலங்கள் பொதுவெளியில் பயணிக்கவே பயப்படுகிறார்கள். நீங்களும் எங்களை சாதாரணமாகப் பார்த்தாலேப் போதும்' என புன்னகையோடு விடைபெறுவேன்''.

''உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?''

''என்னைப் போலத்தான் என் மனைவியும். எனக்கு என்ன பிடிக்குமோ அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வார். என் இரண்டு மகள்களும் அப்படித்தான், நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல. 120 க்கும் மேற்பட்ட என்னுடைய ஷீல்ட், விருதுகள் எல்லாத்தையும் மூட்டைக் கட்டி ஷெல்ஃபில் போட்டுட்டேன். இப்படித்தான் வாழணும் என நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் தனித்துவமாக வாழ்வது ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொருத்தது. எப்பொழுதுமே நான் ஒரே மாதிரிதான் இருக்கேன். மாறுவதற்கும் விருப்பம் இல்லை. அடிக்கடி கோபம் வரும், அடுத்த நிமிடம் மறந்துட்டு சாதாரணமாகப் பேச ஆரம்பிச்சுடுவேன்''.

''தற்போது உங்களுடையப் படங்கள்?''

“சிபிராஜ் நடிக்கும் ‘கட்டப்பாவை காணோம்', உதயநிதி ஸ்டாலினின் 'சரவணன் இருக்க பயமேன்' , 'அதிமேதாவிகள்' என இந்த மூன்று படங்களிலும் நடிச்சிருக்கேன். இந்த மூன்று படங்களும் இந்த டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ரிலீஸ் ஆகலாம். வரும் மார்ச் மாதம் புதிதாக படம் பண்ணப் போறேன். அதில் ஹீரோவாக நடித்து இசையமைக்கிறேன். அடிப்படையில் நான் இசையமைபாளர். கிடார், பியானோ  என பல கருவிகளில் வாசிக்கத் தெரியும். நான் இயக்கும் முதல் படம் இதுதான். பத்தாம் வகுப்பில் பெயில் ஆகி, மறுபடியும் படிச்சுப் பாசாகி, பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் போது பாட்டுக்காக முதல் பரிசுகளை வாங்கியிருக்கேன்.  இதற்கு முன்பு இசையமைப்பாளர் ஆதித்யன் இசையில் பாடியிருக்கேன். சில சூழ்நிலைகள் காரணமாக அந்தப் பாடல் ரிலீஸ் ஆகவில்லை''.

''உங்கள் மகளை நடிகையாக்கும் ஆசை இருக்கிறதா?''

''பெரிய பொண்ணு ஜோவிட்டா விஷூவல் கம்யூனிகேஷன் முதல் வருஷம் படிக்கிறாங்க. இரண்டாவது பொண்ணு ஜம்மா 10 ம் வகுப்பு படிச்சிட்டு இருக்காங்க. பப்ளிக் எக்ஸாம் என்பதால படிப்பில் தீவிரமா இருக்காங்க. பெரிய பொண்ணு ஜோவிட்டா, 'ஒரே ஒரு படம் மட்டும் நடிக்கிறேன்ப்பா' னு கேட்டிருக்காங்க. நல்லக் கதை அமையும்போது பார்ப்போம்''.

livingston_11096.jpg

''இந்த ஃபீல்டுக்கு ஏன் வந்தோமென்று யோசித்தது உண்டா?''

''நிச்சயமா இல்லை. என்னுடைய தொழில் நடிப்பது. நடிப்பது மட்டுமே என்னுடைய வேலை. தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டேன். மற்ற நேரங்களில் குடும்பத்தலைவராக, நல்ல கணவராக, பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கேன். முதன் முதலா விஜயகாந்த் சாருக்கு ஒரு கதை சொல்லப் போயிருந்தேன். பெரும்பாலான இயக்குநர்கள் உட்கார்ந்தபடியே கதையை விளக்குவாங்க. ஆனால், நான் நடித்தபடியேதான் கதை சொல்லுவேன். அப்போ என்னைப் பார்த்த விஜயகாந்த் சார், 'நீங்க ஏன் நடிக்கக் கூடாது. நடிகனாக உங்களுக்கு அத்தனை தகுதியும் இருக்கு' என தோளில் தட்டிக் கொடுத்தார். அதற்குப் பிறகு நான் நடித்த முதல் படம் 'பூந்தோட்டக் காவல்காரன்'. இந்த படம் 1988-ல் வெளியானது. ஹீரோ விஜயகாந்த், ஹீரோயின் ராதிகா''. 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/75328-actor-livingstons-concern-about-thyagaraja-bhagavathar.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.