Jump to content

கர்நாடக சங்கீதம்  கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு துணைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.


Recommended Posts

கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்!

கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்!

கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தியத் துணைத் தூதரகத்தில் குறித்த பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப் பயிற்சிகளை நடாத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=51950

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப் பயிற்சிகளை நடாத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏண்டா ஈழத்தமிழன் கிந்தி படிக்க வேணும்!!!? tw_angry:

Link to comment
Share on other sites

44 minutes ago, குமாரசாமி said:

ஏண்டா ஈழத்தமிழன் கிந்தி படிக்க வேணும்!!!? tw_angry:

ஒருவேளை இவர் கர்நாடக சங்கித்தான் கற்பிப்பாரா??

Link to comment
Share on other sites

நோக்கம் எதுவாக இருந்தாலும், மாணவர்களுக்கு இலவசமாய் கர்நாடக சங்கீதம் கற்க வாய்ப்பு கிடைத்தால் நல்லதுதானே. ஒரு மணித்தியாலத்துக்கு கர்நாடகசங்கீதம் கற்பிக்க இங்கே கர்நாடக சங்கீத வகுப்புகளிற்கு ஆசிரியர்கள் எவ்வளவு வசூலிக்கின்றார்கள் தெரியுமா?

குளத்துடன் கோவித்துக்கொண்டு குளிக்காமல் இருக்கலாமா? இந்திய அரசியல்வாதிகள் செய்யும் சேட்டைகளுக்குள் அகப்பட்ட இந்திமொழி என்ன பாவம் செய்தது. நான் ஆர்வக்கோளாறு காரணமாக 84/85ஆம் ஆண்டுகளில் இந்திமொழி கற்றுள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் ஜேர்மன்/டொச், பிரென்ச், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளை ஆங்கிலம், தமிழ் என்பனவற்றுடன் கற்றுக்கொள்ளவேண்டும் என எண்ணியுள்ளேன். வெவ்வேறு மொழிகளை கற்பதால் பல பயன்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஆண்களூம் கற்றுக்கொள்ளலாமா கேட்டுச்சொல்லுங்க  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்ட தவறுகள் இனியும் வரக்கூடாது.
ஓசி...ஓசி...ஒசி...ஓசியெண்டால் பொலிடோலும் குடிக்கிற சமுதாயத்தில் தான் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றோமா????

வாழ்க்கைக்கு/கல்விக்கு/தொழிலுக்கு தேவையான அவசியமான மொழிகள் பல இருக்கின்றன. அவற்றை படியுங்கள். கிந்தி எதுக்குமே உதவாதது. சீன மொழியை கற்க ஐரோப்பாவில் கூட பரிந்துரை செய்கின்றார்கள். ஆனால் கிந்தியை?????

கிந்தி பிறரை கழுத்து அறுப்பதற்கே தவிர......:grin:

ஈழத்தமிழன் ஏதோ இவ்வளவுகாலமும் கருநாடக சங்கீதம்  படிக்க இயலாமல் கரைச்சல் படுறமாதிரியும்......வாழ்க்கைக்கு அத்தியாவசியம் மாதிரியும் கதை விடுறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

விட்ட தவறுகள் இனியும் வரக்கூடாது.
ஓசி...ஓசி...ஒசி...ஓசியெண்டால் பொலிடோலும் குடிக்கிற சமுதாயத்தில் தான் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றோமா????

வாழ்க்கைக்கு/கல்விக்கு/தொழிலுக்கு தேவையான அவசியமான மொழிகள் பல இருக்கின்றன. அவற்றை படியுங்கள். கிந்தி எதுக்குமே உதவாதது. சீன மொழியை கற்க ஐரோப்பாவில் கூட பரிந்துரை செய்கின்றார்கள். ஆனால் கிந்தியை?????

கிந்தி பிறரை கழுத்து அறுப்பதற்கே தவிர......:grin:

ஈழத்தமிழன் ஏதோ இவ்வளவுகாலமும் கருநாடக சங்கீதம்  படிக்க இயலாமல் கரைச்சல் படுறமாதிரியும்......வாழ்க்கைக்கு அத்தியாவசியம் மாதிரியும் கதை விடுறாங்கள்.

நீங்க தலைகீழா நின்றாலும் நாங்க படிப்பமாக்கும்tw_blush: 

இங்கே ஆசிரியர் தொழில் டபிள் சம்பாத்தியமாக்கும்  ஒரு பிள்ளைக்கு அட்வான்ஸ் சாதாரண் ரியுசன் வகுப்புக்கு 2000 ரூபா வரைக்கும் போகுது  இலவசம் எனும் போது பயன் படுத்தினால் என்ன ??
எனது சகோதரர் இந்தியா சென்று கற்கிறார் சங்கீதம் அது பற்றி எனக்கு விபரம் தெரியாது  போகமுடியாதவர்கள் இங்க கற்கலாமே   சங்கீதத்தில் ஆர்வமுள்ளவர்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஓசி...ஓசி...ஒசி...ஓசியெண்டால் பொலிடோலும் குடிக்கிற சமுதாயத்தில் தான் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றோமா????

குமாரசாமி  அண்ணே... இந்தியா,  ஓசியில் ஆயுதப் பயிற்சி தரும் போது... அதை பயின்றனாங்கள்,  தானே.. 
அதைப் போல்... ஓசியில் வாற கர்நாடக சங்கீதத்தையும் பயில்வதில் என்ன  தவறு. :grin:

Link to comment
Share on other sites

உலகின் மிக அநாகரிகமான, பண்பற்ற மக்களின் மொழியான ஹிந்தியை தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்திய போர்க்குற்றவாளிகள் தமிழரின் மீது திணிக்க முயலுவது ஒன்றும் ஆச்சரியமல்ல.

அத்துடன் கர்நாடக சங்கீதத்தை இணைத்திருப்பதுவும் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்திய போர்க்குற்றவாளிகளின் உதவியல்ல தூண்டிலில் மாட்டப்பட்டுள்ள இரை!

தூண்டிலில் சிக்காமல் இரையை மட்டும் எடுக்கவல்லவர்கள் இலவசத்தைப் பெற முயற்சிப்பதில் பெரும் தவறில்லை. ஆனால் இலவசங்கள் மக்களை நாளடைவில் சோம்பேறிகளாக்கி அழித்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கதிகமான சுயமாக சிந்திக்கும் திறனற்ற தமிழகத்தினுள்ளே கிந்தியை திணித்தும் எடுபடவில்லை. ஆகவே புதிய கிந்தி திணிப்புக்கு 
வட மாகாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனையும் வந்தாயிற்று, ஏன் இந்தியத்துணை தூதரகத்தை அம்பாந்தோட்டையிலும் திறந்து 
சிங்கள மக்களுக்கும் கிந்தி சொல்லித்தரலாமே .....? 
இந்த பீடைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது நல்லது ...படர விட்டோம் மீண்டும் கத்தக்கத்த அடி வாங்க  வேண்டித்தான் வரும்
ஒன்று மட்டும் நிச்சயம் இன்னும் இனத்தால் ஒன்றுபட்டு நிற்கும் சைவரையும் கிருத்தவரையும் மதவாதத்தால் பிரித்து 
தெருவோரம் திருவோட்டுடன் விடப்போகும் முன்னாயத்தம் தான் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாதூதரகத்தில் கராத்தேயும், குங் பூவும் இலவசமாக கற்பிக்கப்படுமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

அளவுக்கதிகமான சுயமாக சிந்திக்கும் திறனற்ற தமிழகத்தினுள்ளே கிந்தியை திணித்தும் எடுபடவில்லை. ஆகவே புதிய கிந்தி திணிப்புக்கு 
வட மாகாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனையும் வந்தாயிற்று, ஏன் இந்தியத்துணை தூதரகத்தை அம்பாந்தோட்டையிலும் திறந்து 
சிங்கள மக்களுக்கும் கிந்தி சொல்லித்தரலாமே .....? 
இந்த பீடைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது நல்லது ...படர விட்டோம் மீண்டும் கத்தக்கத்த அடி வாங்க  வேண்டித்தான் வரும்
ஒன்று மட்டும் நிச்சயம் இன்னும் இனத்தால் ஒன்றுபட்டு நிற்கும் சைவரையும் கிருத்தவரையும் மதவாதத்தால் பிரித்து 
தெருவோரம் திருவோட்டுடன் விடப்போகும் முன்னாயத்தம் தான் இது.

கர்நாடக சங்கீதத்துக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம் அக்னி  அது  சங்கீத பயிற்ற்சி அவ்வளவுதான்

13 minutes ago, putthan said:

சீனாதூதரகத்தில் கராத்தேயும், குங் பூவும் இலவசமாக கற்பிக்கப்படுமாம்

அது சரி அதைப்பழகி நம்மட ஆட் களூக்கு நாலு சாத்து சாத்துவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

 

அது சரி அதைப்பழகி நம்மட ஆட் களூக்கு நாலு சாத்து சாத்துவம் 

ஒருத்தன் சாத்த மற்றவன் மறிக்க அதை நாங்கள் பார்க்க ஒரே.....பம்பல்தான்......tw_tounge_wink:சங்கீதபயிற்சியை ஏன் தூதரகம் செய்வான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

ஒருத்தன் சாத்த மற்றவன் மறிக்க அதை நாங்கள் பார்க்க ஒரே.....பம்பல்தான்......tw_tounge_wink:சங்கீதபயிற்சியை ஏன் தூதரகம் செய்வான்?

தூதரகத்தின் வெளியுறவு கொள்கை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, முனிவர் ஜீ said:

கர்நாடக சங்கீதத்துக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம் அக்னி  அது  சங்கீத பயிற்ற்சி அவ்வளவுதான்

ஐயா  ...முனி நாங்களும் அதைத்தான் கேட்கிறோம் ..தூதரகத்திற்கு எதற்கு தேவையில்லாமல் சங்கீதம், கிந்தி படிப்பிட்க்கும் வேலை 
தூதரகம் வந்ததன் பின் தான் சிவசேனையும் எட்டிப் பார்க்கிறது ...எங்கேயோ இடிக்கலை....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஐயா  ...முனி நாங்களும் அதைத்தான் கேட்கிறோம் ..தூதரகத்திற்கு எதற்கு தேவையில்லாமல் சங்கீதம், கிந்தி படிப்பிட்க்கும் வேலை 
தூதரகம் வந்ததன் பின் தான் சிவசேனையும் எட்டிப் பார்க்கிறது ...எங்கேயோ இடிக்கலை....?

இந்திய தூதரகம் அறுவடை இல்லாமல் வேலை செய்யாது  அது எல்லோரும் அறிந்ததே  கர்நாடக சங்கீதம் என்பது இந்தியர்களை விட 
கற்றறிந்தவர்கள் கிடையாது  கற்க வேண்டியவர்கள் கற்கட்டும்  நமது பிள்ளைகள் தானே அது அவர்கள் வாழ்க்கைக்கு உதவலாம் சிவசேனை 
இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்  அதனால் எதையும் பெரிதாக இங்கு சாதித்து விட முடியாது  நமக்கு  எது தேவையோ அதை
கிடைக்கும் போது எடுத்துக்கொள்வோம் அதற்கு அடுத்ததாக மற்றயதை நோக்குவோம் தற்போது உள்ள சூழ்நிலையில்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

இந்திய தூதரகம் அறுவடை இல்லாமல் வேலை செய்யாது

இதுதான் அடிவயிற்றை கலக்குது ...நல்ல நோக்கத்தில் சங்கீதம் படிப்பித்தாலும் தவறாக தான் பார்க்க தோன்றுகிறது. நல்லது நடந்தால் பரவாயில்லை
நாசமாக்கும் எண்ணம் இருந்தால் ...? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

இதுதான் அடிவயிற்றை கலக்குது ...நல்ல நோக்கத்தில் சங்கீதம் படிப்பித்தாலும் தவறாக தான் பார்க்க தோன்றுகிறது. நல்லது நடந்தால் பரவாயில்லை
நாசமாக்கும் எண்ணம் இருந்தால் ...? 

பூந்து அடிச்சு கலைச்சு விடுவம்  வேற என்ன தான் செய்கிறது tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Athavan CH said:

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப் பயிற்சிகளை நடாத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=51950

 

"ஏக் காவ் மே, ஏக் கிசான் ரகதாத்தா.. " இந்திப் படிப்பு இப்படியிருந்தால் நல்லதுதான்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்!

ஆமா ஏர் டெல் ரீ சார்ஜ் ஆபர்.. !!  மற்றும்   சாரதா சில்க்ஸ் தீபாவளி பொங்கள் தள்ளுபடி!!

யோவ் ! நீ எல்லாம் பெரிய மனுசன் .. ஐ.எப்.எஸ்    படிச்சுருக்கங்களாம்.. அட வெளக்கெண்ண.. இங்கிட்டே குடிக்க கூழ் கஞ்சியில்லாம  திரியாறாங்கா.. செலவு செய்வது என்ன ஒங்க அப்பன் வீட்டு காசா ..?அவுங்க கேட்டாங்களா உன்ன ?

https://www.youtube.com/watch?v=fFtTPz9h9jY

சங்கீதம் உண்மையில் அருமையான கலை அது சிவபெருமான் நாபி கமலத்தில் இருந்து உருவாகிறதாம் ..கற்று கொடுப்பவர்கள் கண்றாவியாக இருக்கும் போது எவர் ஏற்று கொள்ளுவார் ? ரெல் மீ ரெல்!!

 

டிஸ்கி :
அதான் எல்லாம் முடித்துவிட்டீர்களே ! அப்புறம் என்ன ..பேசாமல் உள் அடி போடவதை விடுத்து  வடக்கு.. ஹிந்தியாவின்  இன்னோரு மாநிலம் என்று அறிவித்துவிட்டு போங்கள்... புடிங்கீங்களா..!

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கும், இலங்கைத் தீவுக்கும் இடையில் அதிக கலாச்சார தொடர்புகள் இருக்கிறது என்று கோடிட்டு காட்டுகிறார்களாம். இந்த டான்ஸ் பயிற்சியை பார்த்திட்டு சீனனும், அமெரிக்கனும் ஒதுங்கி போயிடுவாங்களாம்.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஓசை வரும் 

பின்னே.....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Composers of Carnatic music were often inspired by religious devotion and were usually scholars proficient in one or more of the languages Kannada, Malayalam, Sanskrit, Tamil, or Telugu.

என்னுடைய புத்திக்கு எட்டிய மட்டில் ...கர்னாடக சங்கீதம் பழகுவதில் எந்த தவறும் கிடையாது.
உதாரணம் ...தமிழ் பெரிதாக பேசத் தெரியாத என் குழந்தைகள் தேவாரம், திருவாசகம், ஆத்திசூடி, கீர்த்தனைகள் என்று பாடுகிறார்கள். அதுவே எனக்கு போதும்.  
உன் பிள்ளைகள் ஏன் பெரிதாக தமிழ் பேசவில்லை என்ற கேள்வியை திருப்பி என்னிடம் வைக்காதீர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் ...


 

Link to comment
Share on other sites

இது ஒன்றும் இலவசம் இல்லை! தமிழர்களிடம் கொள்ளையடித்த சொத்துக்களில் ஒரு சிறுபகுதியை அள்ளி வீசி, தமிழனை மீண்டும் ஏமாற்ற முடியுமோ என முயற்சிக்கிறார்கள் இந்த ஹிந்திய ஹிம்சாவாதிகள்.  

இந்த ஹிந்திய கொலைகாரக் கும்பலிடம் பறிக்க முடிந்தவற்றை பறித்து அவர்களை கைவிடுவதில் தவறில்லை.

ஹிந்திய கொலைகாரக் கும்பலின் அழிவில் தான் தமிழர்களின் நலன் தங்கியுள்ளது என்பது எப்பவோ உணர்த்தப்பட்ட விடயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.