Jump to content

யாழ்ப்பாண கோட்டைக்குள் அநாகரிக செயற்பாடு – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா ?


Recommended Posts

IMG_2945.jpg

யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் சிலர் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கோட்டையில் பணி புரியும் பணியாளர்கள் தெரிவித்தனர்.  அது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக யாழ்ப்பாண கோட்டை உள்ளது. தற்போது கோட்டை தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் நெதர்லாந்து அரசாங்க உதவியுடன் புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

அந்நிலையில் தினமும் பெருமளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.  அதில் சிறுவர்கள் முதியோர்கள் என பாகுபாடின்றி வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சிலர் கோட்டை பகுதியில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு என வருகின்றார்கள். அவ்வாறு அநாகரிக செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவதனால் சுற்றுலா வருவோர் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் சௌகரியங்களையும் எதிர்நோக்குகின்றனர்.

அவ்வாறு அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவ மாணவிகள் ஆவார்கள்.  குறிப்பாக வார இறுதி நாட்கள் , விடுமுறை நாட்களில் அவ்வாறானவர்களின் வரவுகள் கோட்டை பகுதியில் அதிகரித்து காணபடுகின்றது.

பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து யாழ்.நகர் பகுதியில் உள்ள தனியார் வகுப்புக்களுக்கு வரும் மாணவ மாணவிகள் வகுப்புக்களுக்கு செல்லாது கோட்டை பகுதிக்கு வந்து அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அது தொடர்பில் எமது தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது சக பணியாளர்கள் அவ்வாறு அநாகரிக செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை எச்சரித்து கோட்டை பகுதியில் இருந்து வெளியேற்றி இருந்தனர்.

அன்றைய தினம் இரவு வாள்களுடன் வந்த நபர்கள் கோட்டையில் இருந்த எமது சக பணியாளர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டனர். அதில் இரு பணியாளர்கள் காயமடைந்து இருந்தனர். அந்த சம்பவத்தின் பின்னர் எமது பணியாளர்கள் அவ்வாறு அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை எச்சரிக்க பயம் காரணமாக பின் நிற்கின்றார்கள்.

அது தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டினை எமது திணைக்களம் சார்ந்து செய்ய முடியாதமையால் பொலிசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. யாழ்.நகருக்கு தனியார் வகுப்புக்களுக்கு வரும் மாணவ மாணவிகளின் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய கரிசனை கொண்டு அவர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேளை இரவு 6 மணியுடன் பார்வையிடும் நேரம் முடிவடைந்த பின்னர் கோட்டையின் பிரதான பாதை தவிர்ந்த ஏனைய பாதைகள் ஊடாக ஊடுருவும் நபர்கள் கோட்டை சுவர்களில் ஏறி இருந்து மது அருந்துகிறார்கள். அதனை தடுக்க முடியாது உள்ளது.

அதேவேளை போதை பொருட்கள் கைமாற்றும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. அத்துடன் கோட்டை சுவர்கள், அரண்களில் ஏறி இருந்து இரவு வேளைகளில் போதை பொருட்களையும் நுகர்கின்றனர். அவற்றினை தடுக்க முடியாது உள்ளது.  அவர்களை தடுக்க முயன்றால் அவர்களால் தமதுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டு விட்டு விடுமோ என பணியாளர்கள் அஞ்சுகின்றார்கள் என தெரிவித்தார்.

யாழ்ப்பாண கோட்டையில் இவ்வாறாக காலச்சார சீர்கேடுகள் , அநாகரிக செயற்பாடுகள் மது அருந்துதல்,   போதை பொருள் பாவனை மற்றும் கைமாற்றல் , என்பன இடம்பெற்று வருகின்ற நிலையில் தொல்லியல் திணைக்களத்தால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்ற சாட்டு முன் வைக்கப்படுகின்றது.

அதேவேளை கோட்டை பகுதியில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையம் உள்ளது.  இருந்த போதிலும் இவை தொடர்பில் பொலிசாரும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

அவை தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தடவைகள் கோட்டையில் பணியாற்றும் பணியாளர்கள் பொலிசாரிடம் கோரிய போது உரிய முறையில் முறைப்பாடு பதிவு செய்தாலே தாம் நடவடிக்கை எடுப்போம் என பொலிஸ் தரப்பினர் கூறியதாக பணியாளர் தரப்பில் கூறப்படுகின்றது.

முறைப்பாடு செய்யுமாறு தமது திணைகளத்தினரிடம் கோரினால் தொல்பொருள் சின்னத்திற்கு ஏதேனும் பதிப்பு, சேதம் ஏற்படுத்தப்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம் தவிர ஏனைய விடயங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியாது என திணைக்களத்தினர் பின் நிற்கின்றார்கள் எனவும் ஊழியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.

http://globaltamilnews.net/archives/10618

Link to comment
Share on other sites

அநாகரீக செயற்பாடுகள் என்றால் என்ன? பொது இடங்களை அசுத்தமாக வைத்திருத்தல். பொது இடங்களில் துப்புதல். பொதுக்கழிப்பறைகள் அத்தனையையும் மக்கள் பாவிக்கமுடியாதபடி அசுத்தமாக வைத்திருத்தல். இவை போன்ற அநாகரிக செயற்பாடுகள் தானே? இது கோட்டையில் மட்டுமா நடக்கிறது. யாழ்பபாணம் உட்பட இலங்கை முழுவதும் இந்த அநாகரிக செயற்பீடு நடக்கிறதே. அதைப்பற்றி ஒருவரைக்கும் கவலை இல்லை. அது தொடர்பாக யாரும் முகம் சுழிப்பதில்லையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநாகரிய செயற்பாடுகள் என்றால் அத்து மீறலாக இருக்கும் உதாரணம் காதலர் என்ற போர்வையில் வந்து போர்த்து விட்டு .............. நடந்து கொள்ளும் ஆட் கள் செய்யும் வேலையாக இருக்குமோ??:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வீரகேசரி பத்திரிகையில்  இது பற்றிய  கட்டுரை வந்திருக்கிறது நான் நினைத்த ஊகம் சரியானது பாடசாலை மாணவிகள் , உட்பட பலரின்  வருகை  ஏன் எதற்க்காக என்பது பற்றி நல்ல விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

அநாகரீக செயற்பாடுகள் என்றால் என்ன? பொது இடங்களை அசுத்தமாக வைத்திருத்தல். பொது இடங்களில் துப்புதல். பொதுக்கழிப்பறைகள் அத்தனையையும் மக்கள் பாவிக்கமுடியாதபடி அசுத்தமாக வைத்திருத்தல். இவை போன்ற அநாகரிக செயற்பாடுகள் தானே? இது கோட்டையில் மட்டுமா நடக்கிறது. யாழ்பபாணம் உட்பட இலங்கை முழுவதும் இந்த அநாகரிக செயற்பீடு நடக்கிறதே. அதைப்பற்றி ஒருவரைக்கும் கவலை இல்லை. அது தொடர்பாக யாரும் முகம் சுழிப்பதில்லையே. 

ரொம்ப குசும்பு:)

Link to comment
Share on other sites

2 hours ago, சுவைப்பிரியன் said:

ரொம்ப குசும்பு:)

ஏனங்க ரொம்ப குசும்பு. உண்மையைத் தானே கூறினேன். மேற்சொன்ன அநாகரிக விடயங்களுககு முகம் சுழிககாதவர்கள் காதலர் இருவர் தம் விருப்பப்படி கைகோர்தது சென்றால் முகம் சுழிக்கிறார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில ஆக்களுக்கு குப்பை கொட்டுறது துப்புறது மட்டும்தான் அநாகரீக செயல் எண்டு தெரியிற படியாலைதான் வாள்வெட்டும் கத்திக்குத்தும் அங்கை கோலோச்சுது....:(

கைகோர்த்து நடக்கிறது பிரச்சனையில்லை...... பொது இடத்திலை கோர்த்த கையை வேறை எங்கையும் கொண்டுபோய் வைக்கிறதுதான் அசிங்கம் ...... அநாகரீகம்.:)

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

கைகோர்த்து நடக்கிறது பிரச்சனையில்லை...... பொது இடத்திலை கோர்த்த கையை வேறை எங்கையும் கொண்டுபோய் வைக்கிறதுதான் அசிங்கம் ...... அநாகரீகம்.:)

அதிலும் பார்க்க அசிங்கம் அவர்கள் எங்கே கை வைக்கிறார்கள்,:112_lips: அங்கே என்ன தெரிகிறது என்று நீங்கள் உத்து உத்து பார்ப்பது தான். :116_eye:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Fort - main entrance.JPG  

ஒல்லாந்தர்  கோட்டை கட்டின.... 1625´ ம் ஆண்டில்   இருந்தே.....  கடந்த 391 ஆண்டுகளாக,
எமது முப்பாட்டன் காலத்தில் இருந்தே....  இப்படியான அநாகரிக செயல்கள் நடந்து கொண்டு தான் வருகிறது.
அப்படியிருக்க... இப்ப ஏன் துள்ளிக் குதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
கோட்டை... சந்து, பொந்துகள் உள்ள மறைவான இடம். அதற்குள் போனால்... யாருக்கும் "மூட்"   வரத்தான் செய்யும்.  :grin:

Link to comment
Share on other sites

On 18/12/2016 at 3:35 AM, Athavan CH said:

யாழ்ப்பாண கோட்டைக்குள் அநாகரிக செயற்பாடு – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா ?

சமூகப் பொறுப்புள்ள ஒருவரின் நியாயமான ஆதங்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

அதிலும் பார்க்க அசிங்கம் அவர்கள் எங்கே கை வைக்கிறார்கள்,:112_lips: அங்கே என்ன தெரிகிறது என்று நீங்கள் உத்து உத்து பார்ப்பது தான். :116_eye:

பொது இடத்தில் வைத்து இப்படி நடப்பதை பார்ப்பது அசிங்கமா?????? நாலு சுவருக்குள் நடக்க வேண்டியதை பொதுவெளியில் நடத்துபவர்கள் நாயிலும் கேவலமானவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

பொது இடத்தில் வைத்து இப்படி நடப்பதை பார்ப்பது அசிங்கமா?????? நாலு சுவருக்குள் நடக்க வேண்டியதை பொதுவெளியில் நடத்துபவர்கள் நாயிலும் கேவலமானவர்கள்.

இந்த  இனங்கள்  செய்வதை ஒளிந்திருந்து கமறா போணில் சூட் பண்ணும் ஒரு கும்பலும் உள்ளதாம் அங்கு நெலமை அப்படி போகுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.....போன்றவர்கள், இவரது சகோதரங்களது பெண் பிள்ளைகள் இப்படி பார்க்கில் பொது இடத்தில் கொஞ்சிக் கொண்டு நின்டாலும் நாகரீகம் கருதி திரும்பிப் பார்க்காமல் எக் கேடாவது கெடட்டும் என்று சென்று விடுவார்களாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம்................!
எதையும் எழுதப்போனால் ..... இவர்கள் எல்லாமும் செய்யலாம் 
யாழில் மக்கள் மகிழ்ச்சியா இருந்தால்தான் இவர்களுக்கு பிரச்சனை என்று 
ஒரு குரூப் இறங்கும். எதோ நாங்கள் தற்கொலை செய்தால் தாங்களும் கூட வாற மாதிரி. 

என்னத்தை என்றாலும் செய்து தொலையுங்கோ !

நிலைமை இந்த அளவில் முத்திய பின்பும் 
பார்க்காமல் போகிறீர்கள் உங்களுக்கு கண் இல்லையா ..... காது  இல்லையா 
என்று காட்டு காத்து கத்தாமல் இருந்தால் சரி !

சமூக சீரழிவு 
சமூக சீர்திருத்தம் 

இரண்டுக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது.
இது புரியாத புத்திகளுடன் தள்ளி நிற்பதே மேல்.


கொழும்பில் 1980இல் இருந்து குடை பிடிக்க ஒரு கூட்டம் கோல்பேஸ் புத்தர் சிலை 
அருகாக வந்துகொண்டே இருக்கிறது .........இது தலை முறை முறையாக தொடர என்ன காரணம் ?
முன்னையவர்களின் வழி காட்டுதல்தான் முக்கிய காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ  தெரியவில்லை

இந்த கோட்டைக்காக நாம் கொடுத்த விலைகள் தான் ஞாபகம் வருகிறது...

ஒவ்வொரு அடிக்காகவும்  ஒரு உயிர் பிரிந்திருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

என்னவோ  தெரியவில்லை

இந்த கோட்டைக்காக நாம் கொடுத்த விலைகள் தான் ஞாபகம் வருகிறது...

ஒவ்வொரு அடிக்காகவும்  ஒரு உயிர் பிரிந்திருக்கு...

அந் நேரம் இவர்கள் பிறந்திருக்க மாட்டார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.