Jump to content

வீரசிவாஜியை சொப்பன சுந்தரியாவது காப்பாற்றினாரா? - வீரசிவாஜி விமர்சனம்


Recommended Posts

 

வீரசிவாஜியை சொப்பன சுந்தரியாவது காப்பாற்றினாரா? - வீரசிவாஜி விமர்சனம்

 

வீரசிவாஜி

சில படங்களின் கதைக்களமும், அதை எடுத்திருக்கும் விதமும் வேறு வேறு எக்ஸ்ட்ரீமில் இருக்கும். "ச்ச்சே! எப்பிடி எடுத்திருக்க வேண்டிய படம்!" என யோசிக்க வைக்கும். அல்லது சாதாரண கதையை வைத்து, செமத்தியான மேக்கிங்கில் பின்னிப் பெடலெடுத்த படங்களும் உண்டு. தகராறு படம் இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கி, விக்ரம் பிரபு நடித்திருக்கும் 'வீரசிவாஜி' படம் இதில் எந்த வகை?

கதை நாயகன் ஒரு நேர்மையான டாக்ஸி ஓட்டுநர். கூடவே வீரமான ஆளும் கூட. அவரின் பெயர் சிவாஜி என்பதால் வீரசிவாஜி என்கிற தலைப்பு வைத்திருப்பதாக நமக்கு நாமே நம்பிக்கொள்ளலாம். டாக்ஸி ஓட்டுநர் சிவாஜிக்கு (விக்ரம் பிரபு), சில பிரச்சனைகள். முதலாவது, கார் பம்பர் மோதலில் ஷாம்லியுடனான சந்திப்பு காதலில் முடிகிறது. இரண்டாவது, அக்காவின் மகளுக்கு மூளையில் கட்டி. ஆபரேஷன் செய்ய இருபத்தைந்து லட்சம் தேவை. அதைச் சரிசெய்வதற்காக, ரோபோஷங்கர் - யோகிபாபு மூலம் மோசடிக்காரர் என்று தெரியாமல் ஜான் விஜயை அணுகுபவருக்கு, இருந்த பணமும் பறிபோகிறது. மூன்றாவது, ஏமாற்றி ஜான் விஜய் சேர்த்து வைத்திருக்கும் மொத்த பணத்தையும், விக்ரம் பிரபு எடுத்து வரும் வழியில் விபத்துக்குள்ளாகிறார். அந்த விபத்தால் ‘ரீசண்ட் மெமரி லாஸ்’க்கு ஆளாகும் விக்ரம் பிரபுவுக்கு சமீபத்திய சம்பவங்கள் எதுவும் நினைவில் இல்லாமல் போகிறது. ஷாம்லி உடனான காதல், குழந்தையின் வியாதி, தன்னைத் துரத்தும் ஜான் விஜயின் பகை இவற்றிலிருந்து எப்படி விக்ரம் பிரபு தப்பிக்கிறார் என்பது தான் கதை. படிக்கும் போது ஒரு சூப்பர் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை போல தோன்றுகிறதா? தோன்றும்தான். என்ன செய்யுறது?

வழக்கமான தமிழ்சினிமாவின் அத்தனை க்ளிஷே காட்சிகளையும், அப்படியப்படியே இயக்குநர் விக்ரம் பிரபுவிடம் ஒரு கதையாகச் சொல்ல, அதை அவரும் ஓகே செய்திருக்கிறார். ‘இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவாண்டா' என ஒருத்தர் சொல்லும்போது எண்ட்ரி ஆகிறார் விக்ரம் பிரபு. ‘ஒரு பொண்ணைப் பார்த்தா இதயத்துல இளையராஜா பாட்டு கேட்கணும்’ என ஹீரோ சொல்லும் போது ஹீரோயின் ஷாம்லி எண்ட்ரி. ஹீரோவின் உதவும் குணம் கண்டு இம்ப்ரஸ் ஆகிறார் ஹீரோயின், குழந்தைக்கு லட்சத்துல ஒருத்தருக்கு வர்ற வியாதி, அந்த நோய் பத்தி யாருக்கும் தெரியவேணாம் என ஹீரோ கெஞ்சுவது,  ஊரையே ஏமாத்தும் வில்லனை ஏமாற்ற திட்டமிடும் ஹீரோ. ஆபரேஷனுக்கு காசில்லாத நேரத்தில் ஐட்டம் சாங் என்று ஒரு குயர் நோட்டில் முக்கா குயர் குறிப்பெடுத்துக்கொள்ளும் அளவுக்கு ரிப்பீட் க்ளிஷேக்கள். அப்புறம் முக்கியமான விஷயம், சினிமா க்ளிஷேக்களின் வரிசையில் ஹீரோ ஓர் அனாதை.

Vikram-Prabhu-Veera-Sivaji-Movie-Stills-நாயகனைச் சுற்றி நிறைய பிரச்னைகள், ஆனால், அவரோ அப்படியான பிரச்னைகள் இருப்பதையே மறந்துவிட்டு ஆயாசமாக கொட்டாவி விடும் வேளையில் கன்னத்தில் பளார் பளார் என அறைகின்றன மேலும் பிரச்னைகள். இப்படியான ஒரு படத்தின் திரைக்கதை எவ்வளவு வேகமாக பயணித்திருக்க வேண்டும், படம் பார்க்கும் ஆடியன்ஸ் அடுத்து என்ன வருமோ என பக்கத்தில் இருப்பவர் நகத்தையும் சேர்த்து கடிக்க வைத்திருக்க வேண்டாமா? ‘அவனுடைய வயசுக்கே இவ்வளோ ஃப்ராடுத்தனம் பண்ணுறான்னா, என் வயசுக்கு நான் எவ்வளவு பண்ணுவேன் பாருங்கடா’ என்றபடி விக்ரம் பிரபு தன் முழுக்கை சட்டையை மடித்துவிட்டு கிளம்பும் போது 'இங்க இருந்து படம் வேற மாதிரி போகப்போதுடா' என நினைத்தால் மறுபடி எல்லாக் கோட்டையும் அழித்துவிட்டு ஷாம்லியுடன் ரொமான்ஸ் செய்ய சென்றுவிடுகிறது. இடைவேளைக்கு கொஞ்சம் முன்பு திரைக்கதையில் இருந்து காணாமல் போகும் ஷாம்லி, இடைவேளைக்குப் பின் திடீரென ‘நான் இங்கதானே இருக்கேன்’ என்று எண்ட்ரி தருகிறார். 

படத்தின் ஆகப் பெரிய ஆறுதல் ரோபோ ஷங்கர் - யோகிபாபு காம்போ  தான். ஃபைவ் ஸ்டார் விளம்பர கதாபாத்திரங்களான ரமேஷ் - சுரேஷாக இவர்களை அலையவிட்டதே செம ஐடியா. கார்களில்  புகைப்படத்தை வைத்து கொள்ளையடிக்கும் ப்ளான், "அவன் ப்ளாஷ்பேக்கே பழசு உன் ரியாக்‌ஷன் அதவிட கேவலமா இருக்கு" என கலாய்ப்புத் தருணங்கள், பழைய நினைவுகளை இழந்த விக்ரம் பிரபுவிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் எல்லாவற்றிலும் இருவரின் காமெடி,  வர்தாவின் போது இடைவெளி விட்டு அடித்த மழைத்தூறலாய் ஆறுதல். 

சிவாஜியின் பேரனாக இருந்தாலும் சரி, ஷாலினியின் தங்கையாக இருந்தாலும் சரி..  அவரவர்களுக்கு வந்தால்தான் நடிப்பு. விக்ரம் பிரபுவுக்கு ‘இந்தக் கதைக்கு இது போதும் பாஸ்’ என்று முடிவெடுத்தவராக வழக்கமான அதே நடிப்பு.  ஷாம்லி ஏதோ வருகிறார், ரெண்டு பாட்டுக்கு ஆடுகிறார். ரியாக்‌ஷன்களிலாவது கவர்வார் என்று எதிர்பார்த்தால்... பெட்டர் லக் (நமக்கு) நெக்ஸ்ட் டைம் என்கிறார்.  மாஸ்க் போட்ட முகங்களைப் பார்த்து விடிவி கணேஷ் ‘இவங்கதான்’ன்னு சொல்றதெல்லாம்... டன் கணக்கிலான பூச்சுற்றல். பஸ் ஸ்டாப்பில் வரும் காட்சியில் ‘பசங்க ஏமாறுவாங்க,, பொண்ணுக ஏமாத்தாதீங்க’ டைப் வசனங்களெல்லாம்.. இன்னும் எத்தன படத்துலதான் காட்டுவீங்களோ! (ஆனா, அதுக்கும் தியேட்டரில் கைதட்டுறாங்க. அவ்வ்வ்!)

ஜான்விஜய், ஸ்டைலிஷ் வில்லனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள ‘மொட்ட அங்கிள்’ என்றெல்லாம் பேசி என்னென்னவோ முயல்கிறார். ’மின்வெட்டு நாளில்’ பாடலில் மொட்டை ராஜேந்திரனின் ஸ்டெப்ஸும், துள்ளலும்.. ‘நீதானா பாபா... எப்டி பாபா இதெல்லாம்’ என்று கேட்டு தியேட்டரே க்ளாப்ஸால் நிறைகிறது. வினோதினி போன்ற திறமை இருப்பவர்களையும் சீரியல் அக்கா போன்ற குறைந்த ஸ்கோப் உள்ள வேடங்களிலே பார்ப்பது... சோகம் ரமேஷ்! ஆமா சுரேஷ்! 

VeeraSivaji_18577.jpg

தற்போதைய பெரும்பாலான படங்களில் இளையராஜாவுக்கும் ஒரு கிரெடிட் குடுத்துவிடலாம் போல. இதிலும் அப்படியே. ‘விழியில் விழி மோதி’, அபூர்வ சகோதரர்கள் பிஜிஎம் என்று பல இடங்களில் ராஜா. சண்டைக்காட்சிகளில் ஒலிக்கும் தீம் இசையில் இமான் கொஞ்சம் பொறி பறக்க வைக்கிறார். தவறான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ‘சொப்பன சுந்தரி’ பாடலும் இசையும் மனதுக்கும், கண்ணுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறது. ஆனால்  சொப்பன சுந்தரி மட்டும் போதுமா படத்தைக் காப்பாற்ற? 

ரமேஷ் - சுரேஷ் ஐடியா, மொட்டை ராஜேந்திரன் காதருகே பணத்தைக் கொண்டுபோய், எண்ணிப்பார்ப்பதுபோல செய்து, அதன் சத்தத்திலேயே எண்ணுவது, பெண்ணே இல்லாமல் ‘தொழில்’ செய்து சம்பாதிக்கும் ஐடியா,  கிலோமீட்டர் போர்டில் ஊரும், கிலோ மீட்டரும் ஸ்பீடாக ஓடுவது, ஹீரோ அஜித் ரசிகன், ஹீரோயின் விஜய் ரசிகை, மொட்டை ராஜேந்திரன் பரோட்டாவை ‘ப்ரோ’ என்பது என்று இயக்குநர் கணேஷ் விநாயக் ஒரு ரசனைக்காரர் என்பது அங்கங்கே தெரிகிறது. ஆனால் அந்த ரசனைகளை வைத்துக் கொண்டு ஒரு முழுமையான படமாக தரத்தவறிவிட்டார்! படத்தின் ஆல்பமெல்லாம் பார்த்து ஆவலாகப் படத்துக்குப் போனால், படம் பார்த்த நமக்கும் ரீசண்ட் மெமரி லாஸ் வந்து ஒரு மூன்று மணி நேரம் மறக்காதா என்று தோன்றுகிறது.

டெய்ல் பீஸ்: இடைவேளையில் தமிழக அரசு செய்தித்துறை சார்பில் ஹெல்மெட் உபயோகிப்பதை வலியுறுத்தி ‘துப்பட்டா ரீட்டா’ என்றொரு விளம்பரம் போட்டார்கள். ஜெயலலிதா படத்தைப் போட்டு ‘தமிழக முதல்வர் வழிகாட்டுதலுடன்’ என்று இருந்ததையெல்லாம் விட்டுவிடுவோம்.. இதை சொல்லியே ஆகணும். நல்ல கிரியேட்டிவிடியாக இருந்தது அந்த விளம்பரம்! பாராட்டுகள்!

http://www.vikatan.com/cinema/movie-review/75213-veera-sivaji-movie-review.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.