Jump to content

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA


Recommended Posts

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA

mavai.jpg
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூட பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் இது விடயமாக தாம் பாராளுமன்றில்  அண்மையில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/10483

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நவீனன் said:

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA

mavai.jpg
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூட பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் இது விடயமாக தாம் பாராளுமன்றில்  அண்மையில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/10483

31/12/2016க்கு முன்னர் சந்திப்புக்கள் தரமாட்டார்கள் என்பதை சொல்கிறாரா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA

mavai.jpg
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூட பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் இது விடயமாக தாம் பாராளுமன்றில்  அண்மையில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/10483

ஐயா !

தண்ணீ குடிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்
ஆனால்
தண்ணீ அடிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்

தண்ணீர் ஒன்றுதான் ஆனால் வேறு வேறு  அர்தங்கங்களால் பொருள் கொள்ளபடுகிறது..

டிஸ்கி :

மழை காலத்தில் மரத்தை ஒட்டிய கூட்டை  (தனது இருப்பிடம்) இழந்த குருவி அருகாமையில் இருந்த  குரங்கிடம் .. மீண்டும்  கட்டிதர தரமுடியுமா என்று கேட்டதாம் ..அதற்கு குரங்கு எனக்கு கலைக்க மட்டுந்தான் தெரியும் என்று  அரை குறையாக இருந்த  கூட்டையும் குஞ்சிகளோடு கலைத்து போட்டதாம் ..பஞ்சாயத்திற்கு நீங்கள் குரங்கை கூப்பிட்டு வந்து நிறுத்தவதால் எஞ்சி இருக்கும் கோவணத்தையும்  தொலைக்கதான் போகிறீர்கள்  (வடமாகாணசபை!! அதுபோக அடுத்தவன் குடிய கெடுப்பதெற்கென்றெ உருவவாக்கபட்ட "றோ" என்ன குச்சி ஐஸ் சப்புறாளா ).. குரங்கோட சுவாபம் அப்படி ..! அது போகட்டும் நாம நல்லதுக்கு சொல்வம் குரங்கு பிரித்த நாடுகள் ஒன்றாவது சண்டை சச்சரவின்றி இருக்கா.. ?ரெல் மீ ரெல் ...  குரங்கு தலையிடாமல் விட்டாலே உங்களுக்கு கோடி புண்ணியம் ... இதுல வெத்தலை பாக்கு வைத்து வேறு அழைப்பு ..!! யாராவது அவன் குடிய அவனே கெடுத்துக்கொள்வானா ? குரங்குங்கு அதன் சார்ந்த வனபகுதிகளில்தான் பீலீம் காட்டும் .. வேற எங்காவது ..? வாலை  ஒட்ட நறுக்கி விடுவார்கள்..குரங்கை பார்த்து அவ்வளவு பீதி பயம் கொள்ள வேண்டியது இல்லை .. உலகம் குரங்கிடம் மட்டுமே இல்லை அதை காண்டமிருகம் ரேஞ்சிற்கு கற்பனை செய்ய வேண்டிய  அவசியமும் இல்லை  .. அதையும் ஈழ தோழர்கள் கடந்து போக வேண்டும்

டிஸ்கிக்கு டிஸ்கி :

நான் ஏதோ குரங்கு குரங்கு என்று எழுதி போட்டன் டார்வின் நியாண்டதல் எல்லாரும் மன்னிக்குக .. நான் எழுதிய குரங்கு என்ற உள்குத்து எனக்கே தெரியவில்லை .. அது எந்த நாடு /  மனிதர் என்று அறியதாருங்கள் பிளீஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை.... அரசியல் படிக்க,  
இன்னும்,  ஐம்பது  ஆண்டு தேவை. :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குரங்கு தலையிடாமல் விட்டாலே உங்களுக்கு கோடி புண்ணியம் ... இதுல வெத்தலை பாக்கு வைத்து வேறு அழைப்பு ..!! யாராவது அவன் குடிய அவனே கெடுத்துக்கொள்வானா ? குரங்குங்கு அதன் சார்ந்த வனபகுதிகளில்தான் பீலீம் காட்டும் .. வேற எங்காவது ..? வாலை  ஒட்ட நறுக்கி விடுவார்கள்..குரங்கை பார்த்து அவ்வளவு பீதி பயம் கொள்ள வேண்டியது இல்லை .. உலகம் குரங்கிடம் மட்டுமே இல்லை அதை காண்டமிருகம் ரேஞ்சிற்கு கற்பனை செய்ய வேண்டிய  அவசியமும் இல்லை  .. அதையும் ஈழ தோழர்கள் கடந்து போக வேண்டும்

1g3ww5.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு..நீங்கள் செத்துச் சீரழிஞ்சு போகேக்கை....ஓடி வந்து பாத்தவங்களோ?

பஞ்சப் பயலுக....தங்களையே சுமக்க ஏலாமல் இருக்கிற நேரத்தில....நீங்களும் அவங்களுக்குப் பாரமாய் இருக்க வேணாமே!

சாறியை வாங்குங்கோ....சந்தனத்தை வாங்குங்கோ....!

வேற எதுவுமே வேணாம்...அப்பு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA

mavai.jpg
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூட பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் இது விடயமாக தாம் பாராளுமன்றில்  அண்மையில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/10483

இவரும் இவரது கூட்டுகளும் சும்மா நட்டு லூசான அறிக்கைகளையும் கருத்துக்களையுமே சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

இவரும் இவரது கூட்டுகளும் சும்மா நட்டு லூசான அறிக்கைகளையும் கருத்துக்களையுமே சொல்லுவார்கள்.

உண்மை.  இதுகளை....  கவனத்தில்  நாம் எடுத்தால், 
எமக்குத் தான்..... நட்டு,  லூ.... சாகும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசிட்டு.. வெறுங்கையை விசிக்கிக்கிட்டு வர வேண்டியான். நீங்க பேச அவங்கள் கேட்கிற காலம் எல்லாம் போயே போச்சு.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எதிர்பார்த்து தவம் கிடந்தால், இன்னும் ஏழேழு சென்மத்துக்கும் தீர்வு கிட்டாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு அந்த இந்தக் கதையெல்லாம் வேணாம் பேச்சு பேச்சாக இருக்கவேணும். சம்hந்தர் சொன்ன மாதிரி 31.12.2016 முடிய அடுத்தநானள் தீர்வு இருக்க வேணும் நான் வெடியெல்லாம் வேண்டி வைச்சிருக்கிறன்.

Link to comment
Share on other sites

பிறகு, தீர்வுதான் எப்பவோ வந்திட்டுது என்று சொல்லுவினம்!!

பிறகு, தீர்வுதான் எப்பவோ வந்திட்டுது என்று சொல்லுவினம்!!

பத்திரிகைகளுடன் இரத்தினத்தார் மற்றும் சண்முகத்தின் வருகைக்காக காத்திருந்தனர் உருத்திரனும் இலட்சுமனனும். கையில் ஒரு சுருட்டைப் புகைத்தபடி வரும் இரத்தினத்தாருடன் சண்முகமும் வந்தார். “எப்பிடி ஒண்டா வந்தாலும் கட்டிப் புரண்டு கடிபட்டுக் கதைக்கிறது உறுதிதானே…” என விழிகளைத் திருப்பிப் பார்த்தன நாவல் மரத்தில் இருக்கும் இரண்டு காகங்களும்.

“மாவை இந்தியாவோடை அரசியலமைப்பை பற்றி கதைக்கப் போறாராம்.. அப்ப வெளிநாடுகளிலை பேசப் போறினம்..” என்றபடி உட்கார்ந்தார் இரத்தினத்தார். “ஓம் அண்ணை.. அப்பதானே வெளிநாடுகளின்டை சப்போட் கிடைக்கும்..” வழமைக்கு மாறாக உற்சாகமாயிருந்தார் சண்முகத்தார்.

“இலங்கை அரசுக்கு எதிராய், வாற பொங்கலுக்கு போர் வெடிக்கும், வாற சித்திரை வருசத்துக்குப் போர் வெடிக்கும் எண்டு முந்தி மாவையர் சொன்னார். சின்னப் பொடியள் வெடி கொளுத்திற மாதிரி.. பிறகு ஒண்டும் வெடிக்கேல்லை.. அரசாங்கத்தை அணைச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்..”

இரத்தினத்தார் சொல்லி முடிக்க சண்முகத்தின் முகம் சரிந்தது. சுறுசுறுப்பும் குறைந்தது.

“முந்தியும் வெளிநாட்டு ஆதரவு தேவை, பேச்சுவார்த்தையள் நடத்தப்போறம், நடத்திறம், இந்தியாவோடை பேசினம். அவை அழுத்தம் குடுப்பினம்.. இப்பிடி எத்தினை சந்திப்புக்கள் நடந்ததடா? ”

“இரத்தினத்தார் இரண்டாவது குண்டையும் போட்டார்..” என நினைத்துக் கொண்டான் உருத்திரன்.

“அண்ணே! அரசாங்கத்தோடை இணக்க அரசியல் செய்யிறியள் எண்டால், பிறகு ஏன் உலக நாடுகளின்டை ஆதரவு.. அப்ப அரசாங்கம் உங்கடை கோரிக்கையை ஏற்றுக்கொள்ளேல்லையா? ஏற்றுக் கொள்ளேல்லை எண்டால் பிறகு என்னத்துக்காக அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கினம்..”

இலட்சுமனன் அடுத்த கேள்வியைத் தொடுத்தான்.

“சும்மாவே ஆடுற ஆளுக்கு, உடுக்கடிச்ச மாதிரி உவனும் எடுத்து விடுறான்..” என்ற தொனியில் இலட்சுமனனைப் பார்த்தார் சண்முகத்தார்.

“அப்ப உது சர்வதேச விசாரணை மாதிரித்தான் போகப் போகுதோ? அதுக்கும் சர்வதேச நாடுகளோடை பேச்சு வார்த்தை நடத்திறம் எண்டுதானே சொன்னவையள்..” உருத்திரன் சந்தேகத்துடன் கேட்டான்.

“ஒண்டிலையும் தெளிவில்லை.. எல்லாம் மூடு மந்திரமாய் இருந்தால் உப்பிடித்தான். பிறகு சொல்லுவினம். அரசியல் அமைப்பைத்தான் ஏற்கனவே மாத்தியாச்சு எண்டுவினம்..” இரத்தினத்தாரின் நக்கலைக் கண்டு சண்முகத்தாரின் முகம் சுருண்டது.

“சரியடா… போனமுறை சனங்கள் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றினது. அதை எங்கடை மக்கள் பிரதிநிதியள் வெளிப்படையாய் அங்கீகரிக்கக் கேக்க வேணும்.. ஏன் இன்னும் கேக்கேல்லை..” என்றார் இரத்தினத்தார்.

“அது மக்கள்தானே நடத்தினவை..” அநயாசமாகச் சொன்னார் சண்முகத்தார்.

“மக்கள் செய்யிறதை மக்கள் பிரதிநிதியள் தானே அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகவேணும்..” சுட்டினார் இரத்தினத்தார்.

“மெல்ல மெல்ல, அதைச் செய்வம்..” சண்முகத்தார் சமாளித்தார்.

“அதென்னடா விளக்கேத்த அடிபடுறியள். மெல்ல மெல்ல வராமல், வேகமாய் வந்து ஏத்திட்டு பறக்கிறியள்.. இப்ப என்ன மெல்ல மெல்ல?” இரத்தினத்தார் எரிந்தார். “சரி விடுங்கோ, மெல்ல மெல்ல செய்யட்டும்..” உருத்திரன் சண்முகத்தாருக்குப் பரிந்து பேசினான்.

“உனக்கு விசரே..!“ குமுறலாகப் பார்த்தார் இரத்தினத்தார்.

“நல்லாட்சியிலை மாவீரர் நாள் கொண்டாடை விட்டம் எண்டு காட்டினது அரசாங்கம்.. பிறகேன் அம்பாறை கஞ்சிகுடிச்சாறிலை மாவீரர் துயிலும் இல்லத்திலை முகாம் அமைக்கப் பாக்கினம்?”

“….”

“உடனடியாய் அனைத்து துயிலும் இல்லங்களையும் விடுவிக்க எங்கடை மக்கள் பிரதிநிதியள் நடவடிக்கை எடுக்க வேணும்.. அதோடை துயிலும் இல்லங்களை சட்ட ரீயாக அரசியல் ரீதியாக அங்கீகரிக்க வேணும்.. அதுதான் அதுக்கு பாதுகாப்பு…”

“….”

“அடுத்த வருசம் விளக்கு ஏற்ற வரேக்குள்ளைத்தான் நினைவு வருமோ…” இலட்சுமனன் நக்கலாகச் சொன்னான்.

“மக்களுக்கு உண்மையாய் இருப்பதுதான் மாவீரருக்கும் உண்மையாய் இருக்கிறது கண்டியளோ…” எழுந்து நடந்தார் இரத்தினத்தார்.

“மாவீரர் துயிலும் இல்லம் எண்டுறது எங்கடை கோவில்.. ஆமிக்கு கோயில்களை உடைக்கிறதும் அபகரிக்கிறதும் பிடிச்ச வேலைதானே…” இரண்டு காகங்களும் ஒன்றை ஒன்று பார்த்து பேசிக் கொண்டன. மாவீரர்களை நினைத்தால்போல் தலைசாய்க்கும் விதமாய் ஒருமுறை அசைந்தது நாவல்.

-நாவலடித் தம்பி-

http://thuliyam.com/?p=51901

Link to comment
Share on other sites

On 16/12/2016 at 4:28 PM, விசுகு said:

இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

உங்க முதலாளிமார் உங்களை மீண்டும் ஏமாத்தி போட்டாங்களோ?

ஏமாந்த ஜால்றா கும்பல்கள் நிறைய! ஏமாந்த எல்லா குழுக்களையும் சேர்த்து ஒரு சங்கம் நிறுவி போராடினால் ஏமாத்தும் முதலாளி வழிக்கு வரலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.