Jump to content

ஹமில்டனுடன் நான் சிரிக்கலாம்


Recommended Posts

ஹமில்டனுடன் நான் சிரிக்கலாம்
 

article_1481777194-P12---Short-Story-3.jஇவ்வாண்டுக்கான போர்மியுலா வண் பந்தய சம்பியன்ஷிப்பில், பயங்கரமான போட்டியை மெர்சிடிஸ் அணியின் சக வீரர்களான, பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனும், ஜேர்மனியின் நிக்கோ றொஸ்பேர்க்கும் எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இறுதியில் சம்பியனாகிக் கொண்ட றொஸ்பேர்க், தானும் தனது வைரி ஹமில்டனும் ஒன்றாக சிரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். சம்பியனாகி ஐந்து நாட்களில் ஓய்வுபெற்ற 31 வயதான றொஸ்பேர்க், பதின்ம வயதுகளிலிருந்த அடிப்படை மரியாதையால், பாரிய மோதல் ஏற்பட்டது தவிர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தனது ஓய்வுக்குப் பின்னர், சில நல்ல கலந்துரையாடல்களை தானும் ஹமில்டனும் கொண்டிருந்ததாகத் தெரிவித்த றொஸ்பேர்க், அவரிடமிருந்து சில மாதிரியான சொற்கள் கிடைக்கப் பெற்றதாகக் கூறியுள்ளார்.

இது தவிர, யாருக்குத் தெரியும் எதிர்காலத்தில் தாங்கள் ஒன்றாகச் சேரலாம் என மேலும் றொஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/188053/ஹம-ல-டன-டன-ந-ன-ச-ர-க-கல-ம-#sthash.rQ4u5fBx.dpuf
Link to comment
Share on other sites


F1 பட்டம் வென்று ஐந்து நாட்களில் றொஸ்பேர்க் ஓய்வு
 
05-12-2016 09:24 AM
Comments - 0       Views - 12

- முருகவேல் சண்முகன்

உலகின் தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க், அதிர்ச்சிகரமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார். அபு தாபியில் இடம்பெற்ற வருடத்தின் இறுதி கிரான்ட் பிறிக்ஸில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் பட்டத்தைக் கைப்பற்றிய ஐந்து நாட்களில் தனது ஓய்வை றொஸ்பேர்க் அறிவித்துள்ளார்.

தான் தனது மலையில் ஏறியுள்ளதாகவும், தான் உயரத்தில் இருப்பதாகவும், எனவே இதுவே சரியான தருணமாக உணர்வதாக, தனது ஓய்வு அறிவிப்பின்போது 31 வயதான றொஸ்பேர்க் தெரிவித்திருந்தார். இது தவிர, தனது 25 ஆண்டுகால பந்தயத்தில், போர்மியுலா வண் உலக சம்பியனாவதே தனது கனவு, ஒரேயொரு விடயம் என மேலும் தெரிவித்திருந்தார். கடுமையான பணி, வலி, இழப்புகளில், போர்மியுலா வண் சம்பியனாவதே தனது இலக்கு என மேலும் தெரிவித்த றொஸ்பேர்க், தான் தற்போது அதை அடைந்துவிட்டதாகக் கூறினார்.

இந்நிலையில், ஓய்விலிருந்து மீண்டும் வருவதற்கான வாய்ப்பேதும் இருக்கின்றதா என வினவப்பட்டதுக்கு, இல்லை. நிச்சயமாக இல்லை. இத்துடன் முடிவு பெறுகிறது என றொஸ்பேர்க் கூறியிருந்தார்.

சர்வதேச விளையாட்டுகளில் பங்குபற்றுகின்ற வீரர்கள், அந்த விளையாட்டுகளுடனேயே வருடத்தின் பெரும்பாலான நேரத்தைச் செலவிடவேண்டியுள்ள நிலையில், அவர்கள் தமது குடும்பங்களுடன் நேரத்தைச் செலவிடுவது மிக அரிதானதொன்றாகவே நோக்கப்படுகிறது. இந்நிலையில், இளம் குடும்பத்தையுடைய றொஸ்பேர்க், மேற்கூறப்பாட்ட காரணத்தினால் உந்தப்பட்டு ஓய்வுபெறும் முடிவை எடுத்திருக்கலாம்.

மறுபக்கம், 2006ஆம் ஆண்டு பஹ்ரேய்ன் கிரான்ட் பிறிக்ஸில், வில்லியம்ஸ் அணியில் போர்மியுலா வண் அறிமுகத்தை மேற்கொண்ட றொஸ்பேர்க், 10 வருடங்களுக்குப் பிறகு 206 பந்தயங்களுக்குப் பின்னர் போர்மியுலா வண் பட்டத்தை வென்றிருந்தார். இப்பட்டத்தை வெல்லுவதற்கான போட்டியில், சக மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனிடமிருந்து கடுமையான அழுத்தத்தை எதிர்நோக்கியிருந்தார்.

ஆக, வெறும் ஐந்து புள்ளிகளினால் சம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட மூன்று தடவைகள் சம்பியனான ஹமில்டன், அடுத்த வருடம் மிகக் கடுமையான அழுத்தத்தை வழங்குவார் என றொஸ்பேர்க் எதிர்பார்த்திருக்கலாம். தவிர, மெர்சிடிஸ் அணியானது ஹமில்டன் பக்கம் சார்பானது போன்று றொஸ்பேர்க்குக்குத் தோன்றியிருக்கலாம். எனவே, இந்தக் காரணங்களினால் உந்தப்பட்டு, தனது ஓய்வு பெறும் முடிவை றொஸ்பேர்க் அறிவித்திருக்கலாம்.

இல்லாவிடின், தற்போதைய போர்மியுலா வண் சம்பியனாக இருந்துகொண்டு, அதுவும் மிகச் சிறந்த பெறுபேறுகளை வழங்கக்கூடிய கார்களைக் கொண்டிருக்கும் அணியிலிருந்துகொண்டு, அடுத்த வருட போர்மியுலா வண் சம்பியன் பட்டத்தை இலக்கு வைக்காமல் எந்தவொரு ஓட்டுநரும் சடுதியாக ஓய்வை அறிவிக்கமாட்டார். இவ்வருடத்தின் இறுதிப் பந்தயங்களில், கடுமையாக அழுத்தங்களை எதிர்கொள்வதாக வெளிப்படையாகவே றொஸ்பேர்க் தெரிவித்த நிலையில், நிச்சயமாக மேற்கூறப்பட்ட காரணம் ஓய்வில் தாக்கம் செலுத்தியிருக்கும்.

1982ஆம் ஆண்டு போர்மியுலா வண் சம்பியனான பின்லாந்தின் கெகே றொஸ்பேர்க்கின் மகனான நிக்கோ றொஸ்பேர்க், இயற்கையாகவே திறன் கொண்ட லூயிஸ் ஹமில்டன், பெர்ணான்டோ அலோன்ஸோ போன்றவர்கள் போன்று இல்லாவிட்டாலும், வெற்றிக்காக கடுமையாக உழைத்து வெற்றிகளைப் பெற்றுக் கொண்டார்.

206 கிரான்ட் பிறிக்ஸ் பந்தயங்களில், தனது வாழ்நாளில் பங்குகொண்டுள்ள றொஸ்பேர்க், 23 பந்தயங்களில் வெற்றிபெற்றதுடன், 57 தடவைகள், முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருந்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/187815/F-பட-டம-வ-ன-ற-ஐந-த-ந-ட-கள-ல-ற-ஸ-ப-ர-க-ஓய-வ-#sthash.7daJSX3y.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.