Jump to content

மறக்க முடியாத நினைவுகள்... 


Recommended Posts

மறக்க முடியாத நினைவுகள்... 

ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடிய பல மணிநேரம் இருந்து பல விடயங்களையும் கதைத்த இடம்.

Bild könnte enthalten: Baum, Pflanze, im Freien und Natur

இந்த மதில் ஓரத்தில் ஒரு சீமெந்திலான கட்டு இருந்தது (அது இப்ப அந்த இடத்தில இல்லை. அதையும் யாரோ தூக்கி கொண்டு போய் விட்டார்கள்) அதில்தான் நாங்கள் இருந்து கதைப்பது. இந்த மதிலுக்கு முன்பாக ஒரு 8 பரப்பு காணி. அதுக்குள் 2 புளியமரம், ஒரு வேம்பு, ஒரு மாமரம், ஒரு செரிபழ மரம்.. இதுக்கு நடுவில்தான் கிரிக்கெட். கண்னுக்கு பந்து தெரியும்வரை விளையாட்டுத்தான்.

யாழ் நகரில் உள்ள முன்னனி பாடசாலை மாணவர்கள் எல்லாம் பிற்பகலில் கூடும் இடம்.  கலகலப்புக்கும் நகைச்சுவை கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிலவேளைகளில் ஒரு அணியில் 15 பேர் கூட இருப்பார்கள்.. அதைவிட முன்பு இதே இடத்தில் கிரிக்கெட் விளையாடியவர்கள் லண்டனில் இருந்து வரும்போது அவர்களும் எம்மோடு சேர்ந்து விளையாடுவது. அந்த வருடத்திற்கான செலவு எல்லாம் அவர்கள் கணக்கில் எழுதிவிடுவோம்.

நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க ஒரு சில ரசிகர் கூட்டம். விளையாடும் ஆட்களை பார்க்க என்று ஒரு சிலர் அந்த பாதையால் நாலுதரம் சைக்கிளில் சவாரி.... வந்து போவார்கள்.
அந்த நேரம் நாங்கள் சிக்ஸ் அடிக்க போய் விக்கெட் பறிபோவதும் நடக்கும்.

விளையாட்டு முடிய பலரும் கலைந்து போக நாங்கள் ஒரு சிலர் உந்த மதிலோடு இருந்து கதைக்க தொடங்கி.. இரவு 9 மணிவரை தொடரும்... இதுகளை மறக்கத்தான் முடியுமா?

 

பிற்குறிப்பு:

இந்த பதிவை எழுத தூண்டியது.. நேற்று இங்கு ஈழப்பிரியானால் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் படம் தொடர்பானபதிவு. அதை பார்த்தபின் இந்த பதிவை முகநூலில் பதிந்தேன்.அதை இங்கு உங்களோடும் பகிர்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் பார்க்க ஆவலுடன் பார்த்திருக்கின்றோம் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்...தொடருங்கள் நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2016 at 8:24 PM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

சிக்சர் அடிச்சு அவுட்டானது அதனால்தான்....tw_tounge_wink:தொடருங்கள் நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமைக்கு ஒரு தடவை தானா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, MEERA said:

ஒரு கிழமைக்கு ஒரு தடவை தானா???

இப்போதைக்கு, இதுவே பெரிய விசயம்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: grass and outdoor

புதியதை தேடினால் சில நேரம் பழையதும்  மாட்டும்
எத்தினை பேருக்கு இந்த அனுபவம் உண்டு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Ahasthiyan said:

Image may contain: grass and outdoor

புதியதை தேடினால் சில நேரம் பழையதும்  மாட்டும்
எத்தினை பேருக்கு இந்த அனுபவம் உண்டு.
 

இந்த அனுபவமும் இருக்கு

image.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

இந்த அனுபவமும் இருக்கு

image.jpg

மீரா இது என்ன என்று தெரிய இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Ahasthiyan said:

மீரா இது என்ன என்று தெரிய இல்லை 

ஊரில் மலசல கூடத்திற்கு காற்று வருவதற்காக ஒரு கல் இடைவெளி வைத்திருப்பார்கள். நாங்கள் அடிக்கும் பந்து சரியாக அந்த இடைவெளியூடாக உள்ளே விழுந்துவிடும், விழுந்த பந்தும் திறந்திருக்கும் கதவினூடாக வர மறுத்து உந்த பேசினுள் விழுந்து தண்ணீரில் ஓய்வெடுக்கும்.  (பந்து விழுந்த முதல் நாள் பேசாமல் இருந்து விட்டோம் அடுத்த நாள் விளையாட போன போது வீட்டுக்காரர் ஓரே அமளி, அவருடன் டீல் போட்டோம் பந்து இனி விழுந்தால் நாங்களே எடுக்கிறம் என்று) 

பிறகென்ன யார் அடித்ததோ அவரே போய் எடுக்க வேண்டும்.(உபயம் - சொப்பிங் பாக்) அத்துடன் பந்திற்கு நிரந்தர ஓய்வு.

ஒரு தடவை பந்து எடுக்கப்போனவன் பயந்தடித்து வெருண்டு போய் வந்து சொன்னான் "பந்து பட்டு ------ ( அந்த வீட்டு பெட்டையின் பெயர்)  க்கு காயம், பாவாடையெல்லாம் இரத்தம்".  பந்து உள்ளுக்குள் போன நேரம் அந்த பிள்ளை உள்ளுக்குள் இருந்திருக்கு, பந்து ஓட்டைக்குள்ளால் வர பயந்தடித்து வெளியால் அவசரத்தில் ஓடி வந்திருக்கு. கொஞ்ச நாட்களுக்கு பிறகு ஒருத்தன் எப்ப பார்த்தாலும் அந்த வீட்டு வளவிற்குள்ளேயே அடித்துக் கொண்டிருந்தான், யார் அடித்தாலும் அவன் தான் போய் எடுப்பான், பின்னர் சொன்னான் " இனி பந்தை அவையே எடுப்பினம்" என்டு. நாங்களும் சனியன் இனி ரொயிலற்றுக்குள் பந்து எடுக்கிற வேலை இல்லை என்ற சந்தோசத்தில். ஆனால் வளவிற்குள் பந்து விழுந்தால் தான் மட்டும் போவான். பின்னர் தான் தெரிந்தது இவன் அந்த ------ தூக்கிட்டான் என்று, இப்போ கனடாவில் இருவரும்.

வெருண்டவன் வீரச்சாவு.

 

மன்னிக்கவும் நவீனன் உங்கள் திரியில் புகுந்ததற்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16.12.2016 at 10:24 AM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

மீரா எழுதினார் பார்த்தியளா நான் வெட்ட தூக்கி அடிக்க நேரம் பார்த்து பள்ளி பிள்ளைகள்  எட்டி எட்டி பார்க்கும் ஏன்னா நம்ம அடி அப்படி  அண்ணே  சிகசர்தான்  

Link to comment
Share on other sites

விருப்பு புள்ளிகள் இட்டு ஊக்கம் தந்த  ஜீவன்சிவா, suvy, பகலவன், ரதி, Athavan CH, putthan, Ahasthiyan, MEERA, புங்கையூரான், யாயினி எல்லோருக்கும் நன்றி..:)

மேலும் இந்த பதிவில் தங்கள் கருத்துகளையும் பதிந்த suvy, நந்தன், முனிவர் ஜீ,  ரதி, putthan, MEERA, Ahasthiyan, குமாரசாமி அனைவருக்கும் நன்றிகள்.

On 19.12.2016 at 10:57 AM, putthan said:

சிக்சர் அடிச்சு அவுட்டானது அதனால்தான்....tw_tounge_wink:தொடருங்கள் நவீனன்

அது சும்மா பதிவை கலகலப்பாக எழுத எழுதியது...tw_blush: அதையே கிண்டி கிண்டி எழுதபடாது..:grin:

13 hours ago, MEERA said:

ஒரு கிழமைக்கு ஒரு தடவை தானா???

அது ஏதோ அன்று நேரமும் இருந்தது.. எழுதும் மனநிலையும் இருந்தது எழுதிவிட்டேன்... இனி எப்பவோ.. பார்ப்பம்..

12 hours ago, நந்தன் said:

இப்போதைக்கு, இதுவே பெரிய விசயம்:grin:

ஹஹா நல்லா விளங்கி இருக்கு ஜி..tw_blush:

On 16.12.2016 at 10:24 AM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

ஆமா ரொம்ப  முக்கியம் இப்ப..:grin:சொந்த வீட்டில் என்னை அகதி ஆக்ககும் நோக்கம்..:rolleyes:

12 hours ago, Ahasthiyan said:

Image may contain: grass and outdoor

புதியதை தேடினால் சில நேரம் பழையதும்  மாட்டும்
எத்தினை பேருக்கு இந்த அனுபவம் உண்டு.
 

நன்றி Ahasthiyan... நீங்கள் சும்மா எதிலும் எழுதுவது இல்லை. ஆனால் இதில் எழுதி உள்ளீர்கள் சந்தோசம்..:)

உண்மைதான் சிலவேளைகளில் பழையது பல வெளிவரும் இப்படி தேட.

11 hours ago, MEERA said:

 

மன்னிக்கவும் நவீனன் உங்கள் திரியில் புகுந்ததற்கு.

 

இல்லை மீரா,  எல்லாம் ஒரு அனுபவம், நினைவு  பதிவுகள்தானே. தொடருங்கள்

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

அதுதானே.. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

மேய்ச்சல் நிலத்தில் தானே மாட்டுக்கு வேலை:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

மேய்ச்சல் நிலத்தில் தானே மாட்டுக்கு வேலை:grin:

எந்த மாட்டை சொல்கிறார் கு.சாமி அண்ணை சொல்லுங்கோ எனக்கொரு உன்மை தெரிஞ்சாகணூம் :104_point_left:

Link to comment
Share on other sites

11 minutes ago, முனிவர் ஜீ said:

எந்த மாட்டை சொல்கிறார் கு.சாமி அண்ணை சொல்லுங்கோ எனக்கொரு உன்மை தெரிஞ்சாகணூம் :104_point_left:

இந்த மனுஷனை எப்படித்தான் நம்புறாங்களோ தெரியலை. எங்க போனாலும் சுத்திவர பெண் பிரஜைகளாகவே இருக்கிறாங்க. சத்தியமா நான் பழைய வேலை, புதிய வேலை, பஸ் பிரயாணம் பற்றி சொல்லவேயில்லை..:grin:

இதுக்குள்ள உண்மை வேற தெரியணுமாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் பதில் எழுத நேரம் கிடைத்தது.தொடர்ந்து எழுதுங்கள்.சில மலரும் நினைவுகள் சந்தோசத்துடன் சேர்த்து கவலைகளும் தருகின்றன.:unsure::)

Link to comment
Share on other sites

  • 2 months later...

 

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

இதில் கிரிக்கெட் விளையாடுவதில் பலரும்  அந்த இடத்திற்கு அருகில் இருப்பவர்கள்தான். வேறு சில நண்பர்கள் கொஞ்சம் தூரத்தில்இருந்தும் வருவார்கள்.

அதுக்கு அந்த நேரம் ஒரு சில காரணங்களும் இருந்தது. முக்கியமானது பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள மைதானங்களில் விளையாடும்போது அந்த  பாதையால் போகும் இராணுவத்தினர் தரும் தொல்லை. அதனால்  வீட்டில் விடமாட்டார்கள் என்று இந்த இடத்திற்கு வருவார்கள். இந்த மைதானம் பிரதான வீதியில் இருந்து உள்ளுக்கு இருப்பதால் பாதுகாப்பு என்று.

 

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

நாங்கள் அடிக்கும் பந்துகள் தாறுமாறாக பக்கத்தில்  இருக்கும் வீட்டு கூரை யன்னல் கண்ணாடிகளையும் பதம் பார்க்கும். அதை விட பந்து எடுக்க போய் அவர்களது பூக்கன்றுகளை முறித்து விடுகிறோம் என்று வேறு முறைப்பாடு. சில வேளைகளில் நாங்கள் அடிக்கும் பந்து போய் விழுந்தவுடன் அந்த வீட்டுகாரர் பந்தை எடுத்து விடுவார்கள்.  அவர்களிடம் இருந்து பந்தை உடனே வேண்டுவது இயலாத காரியம். tw_blush: பந்தை எடுத்தாலும்   கிரிக்கெட் தொடரும். ஆனால் என்ன அந்த பக்கம் பந்தை தூக்கி அடிக்கபடாது என்று சொல்லிவிடுவம் துடுப்பெடுத்து ஆடுபவரிடம்.

அதைவிட 2 அல்லது 3 பந்து தடுப்பளார்களை அந்த பக்கம் கூடுதலாக நிற்க வைத்து அவர்கள் வீட்டு வேலிக்காலும் பந்து போகாதமாதிரி  தடுப்பது. அந்த காலத்தில் T20 போட்டிகள் இல்லை. இல்லை என்றால் அதை பார்த்து அந்த ஸ்டைலில் பந்துகளை தடுத்து இருக்கலாம். :grin:  இது எல்லாம் அந்த நாள் மாத்திரம்தான். அடுத்தநாள் நாங்கள் நினைத்தவாறு அடிதான்.

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

அதே நேரம் எங்களோடு சேர்ந்து விளையாடுவர்களும் செய்யும் அநியாயம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  பந்து வீசுவதுக்கு ஓடி வருவதுக்கு இடம் காணாது என்று விக்கெட்க்கு பின்னால் இருக்கும் வீட்டுகாரரின் வேலியின் கதியாலை பிடிங்கி விட்டு அங்கு இருந்து ஓடி வந்து பந்து வீசினால் யாரும் பேசாமல் விடுவார்களா

தனது சொந்த அக்கா வீட்டின்  வேலியின் கதியாலைதான் அவர் பிடுங்கிகியவர். அவருக்கு விழுந்த ஏச்சை இப்பவும் நினைத்தாலும் சிரிப்புதான்.

Bild könnte enthalten: Pflanze, Baum, im Freien und Natur

எப்படி எல்லாம் நாங்கள் விளையாடி வாழ்ந்த இடம் இப்ப யாருமே இல்லாமல் புல்லும் பத்தையுமாக யாரும் கவனிப்பார் இல்லாமல் இருக்கு. அதை விட காணி சொந்தகாரரும் தங்கள் காணிகளை பிரித்து எடுத்து விட்டார்கள்.

 

அந்த சுற்றாடலில் உள்ள சிறுவர்களுக்கும், இளையவர்களுக்கும் இப்ப நேரமும் இல்லை. இடமும் இல்லை. அவர்கள் எப்போவது கிரிக்கெட், உதைபந்து விளையாட வேறு தொலைவில் உள்ள இடங்களுக்கு  போக வேண்டிய நிலை.tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் உங்களின் எழுத்தும் நன்றாக இருக்கின்றது நவீனன். தொடருங்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் உங்கள் கிரிகட் கதையை இப்போ தான் பார்த்தேன்.எப்படி தவறவிட்டேன் என்று இன்னமும் யோசிக்கிறேன்.

நாங்களும் வளவுகளில் கிரிகட் விளையாடிய நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.ரொம்பவும் வெட்கம்.துடுப்பு மட்டைகள் எல்லாம் உள்ளுர்த் தயாரிப்புகள் தான்.

எனக்கு சுவைப்பிரியனின் ஐஸ் குச்சி கதையை வாசித்த போது தான் நோட்டீஸ் பொறுக்கிய ஞாபகம் வர அதை கதையாக எழுதினேன்.நீங்கள் என்னடா என்றால் எனது பதிவைப் பார்த்து எழுதியிருக்கிறீர்கள்.நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் நவீனன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.