Jump to content

மறக்க முடியாத நினைவுகள்... 


Recommended Posts

மறக்க முடியாத நினைவுகள்... 

ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடிய பல மணிநேரம் இருந்து பல விடயங்களையும் கதைத்த இடம்.

Bild könnte enthalten: Baum, Pflanze, im Freien und Natur

இந்த மதில் ஓரத்தில் ஒரு சீமெந்திலான கட்டு இருந்தது (அது இப்ப அந்த இடத்தில இல்லை. அதையும் யாரோ தூக்கி கொண்டு போய் விட்டார்கள்) அதில்தான் நாங்கள் இருந்து கதைப்பது. இந்த மதிலுக்கு முன்பாக ஒரு 8 பரப்பு காணி. அதுக்குள் 2 புளியமரம், ஒரு வேம்பு, ஒரு மாமரம், ஒரு செரிபழ மரம்.. இதுக்கு நடுவில்தான் கிரிக்கெட். கண்னுக்கு பந்து தெரியும்வரை விளையாட்டுத்தான்.

யாழ் நகரில் உள்ள முன்னனி பாடசாலை மாணவர்கள் எல்லாம் பிற்பகலில் கூடும் இடம்.  கலகலப்புக்கும் நகைச்சுவை கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிலவேளைகளில் ஒரு அணியில் 15 பேர் கூட இருப்பார்கள்.. அதைவிட முன்பு இதே இடத்தில் கிரிக்கெட் விளையாடியவர்கள் லண்டனில் இருந்து வரும்போது அவர்களும் எம்மோடு சேர்ந்து விளையாடுவது. அந்த வருடத்திற்கான செலவு எல்லாம் அவர்கள் கணக்கில் எழுதிவிடுவோம்.

நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க ஒரு சில ரசிகர் கூட்டம். விளையாடும் ஆட்களை பார்க்க என்று ஒரு சிலர் அந்த பாதையால் நாலுதரம் சைக்கிளில் சவாரி.... வந்து போவார்கள்.
அந்த நேரம் நாங்கள் சிக்ஸ் அடிக்க போய் விக்கெட் பறிபோவதும் நடக்கும்.

விளையாட்டு முடிய பலரும் கலைந்து போக நாங்கள் ஒரு சிலர் உந்த மதிலோடு இருந்து கதைக்க தொடங்கி.. இரவு 9 மணிவரை தொடரும்... இதுகளை மறக்கத்தான் முடியுமா?

 

பிற்குறிப்பு:

இந்த பதிவை எழுத தூண்டியது.. நேற்று இங்கு ஈழப்பிரியானால் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் படம் தொடர்பானபதிவு. அதை பார்த்தபின் இந்த பதிவை முகநூலில் பதிந்தேன்.அதை இங்கு உங்களோடும் பகிர்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் பார்க்க ஆவலுடன் பார்த்திருக்கின்றோம் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்...தொடருங்கள் நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2016 at 8:24 PM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

சிக்சர் அடிச்சு அவுட்டானது அதனால்தான்....tw_tounge_wink:தொடருங்கள் நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமைக்கு ஒரு தடவை தானா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, MEERA said:

ஒரு கிழமைக்கு ஒரு தடவை தானா???

இப்போதைக்கு, இதுவே பெரிய விசயம்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: grass and outdoor

புதியதை தேடினால் சில நேரம் பழையதும்  மாட்டும்
எத்தினை பேருக்கு இந்த அனுபவம் உண்டு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Ahasthiyan said:

Image may contain: grass and outdoor

புதியதை தேடினால் சில நேரம் பழையதும்  மாட்டும்
எத்தினை பேருக்கு இந்த அனுபவம் உண்டு.
 

இந்த அனுபவமும் இருக்கு

image.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

இந்த அனுபவமும் இருக்கு

image.jpg

மீரா இது என்ன என்று தெரிய இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Ahasthiyan said:

மீரா இது என்ன என்று தெரிய இல்லை 

ஊரில் மலசல கூடத்திற்கு காற்று வருவதற்காக ஒரு கல் இடைவெளி வைத்திருப்பார்கள். நாங்கள் அடிக்கும் பந்து சரியாக அந்த இடைவெளியூடாக உள்ளே விழுந்துவிடும், விழுந்த பந்தும் திறந்திருக்கும் கதவினூடாக வர மறுத்து உந்த பேசினுள் விழுந்து தண்ணீரில் ஓய்வெடுக்கும்.  (பந்து விழுந்த முதல் நாள் பேசாமல் இருந்து விட்டோம் அடுத்த நாள் விளையாட போன போது வீட்டுக்காரர் ஓரே அமளி, அவருடன் டீல் போட்டோம் பந்து இனி விழுந்தால் நாங்களே எடுக்கிறம் என்று) 

பிறகென்ன யார் அடித்ததோ அவரே போய் எடுக்க வேண்டும்.(உபயம் - சொப்பிங் பாக்) அத்துடன் பந்திற்கு நிரந்தர ஓய்வு.

ஒரு தடவை பந்து எடுக்கப்போனவன் பயந்தடித்து வெருண்டு போய் வந்து சொன்னான் "பந்து பட்டு ------ ( அந்த வீட்டு பெட்டையின் பெயர்)  க்கு காயம், பாவாடையெல்லாம் இரத்தம்".  பந்து உள்ளுக்குள் போன நேரம் அந்த பிள்ளை உள்ளுக்குள் இருந்திருக்கு, பந்து ஓட்டைக்குள்ளால் வர பயந்தடித்து வெளியால் அவசரத்தில் ஓடி வந்திருக்கு. கொஞ்ச நாட்களுக்கு பிறகு ஒருத்தன் எப்ப பார்த்தாலும் அந்த வீட்டு வளவிற்குள்ளேயே அடித்துக் கொண்டிருந்தான், யார் அடித்தாலும் அவன் தான் போய் எடுப்பான், பின்னர் சொன்னான் " இனி பந்தை அவையே எடுப்பினம்" என்டு. நாங்களும் சனியன் இனி ரொயிலற்றுக்குள் பந்து எடுக்கிற வேலை இல்லை என்ற சந்தோசத்தில். ஆனால் வளவிற்குள் பந்து விழுந்தால் தான் மட்டும் போவான். பின்னர் தான் தெரிந்தது இவன் அந்த ------ தூக்கிட்டான் என்று, இப்போ கனடாவில் இருவரும்.

வெருண்டவன் வீரச்சாவு.

 

மன்னிக்கவும் நவீனன் உங்கள் திரியில் புகுந்ததற்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16.12.2016 at 10:24 AM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

மீரா எழுதினார் பார்த்தியளா நான் வெட்ட தூக்கி அடிக்க நேரம் பார்த்து பள்ளி பிள்ளைகள்  எட்டி எட்டி பார்க்கும் ஏன்னா நம்ம அடி அப்படி  அண்ணே  சிகசர்தான்  

Link to comment
Share on other sites

விருப்பு புள்ளிகள் இட்டு ஊக்கம் தந்த  ஜீவன்சிவா, suvy, பகலவன், ரதி, Athavan CH, putthan, Ahasthiyan, MEERA, புங்கையூரான், யாயினி எல்லோருக்கும் நன்றி..:)

மேலும் இந்த பதிவில் தங்கள் கருத்துகளையும் பதிந்த suvy, நந்தன், முனிவர் ஜீ,  ரதி, putthan, MEERA, Ahasthiyan, குமாரசாமி அனைவருக்கும் நன்றிகள்.

On 19.12.2016 at 10:57 AM, putthan said:

சிக்சர் அடிச்சு அவுட்டானது அதனால்தான்....tw_tounge_wink:தொடருங்கள் நவீனன்

அது சும்மா பதிவை கலகலப்பாக எழுத எழுதியது...tw_blush: அதையே கிண்டி கிண்டி எழுதபடாது..:grin:

13 hours ago, MEERA said:

ஒரு கிழமைக்கு ஒரு தடவை தானா???

அது ஏதோ அன்று நேரமும் இருந்தது.. எழுதும் மனநிலையும் இருந்தது எழுதிவிட்டேன்... இனி எப்பவோ.. பார்ப்பம்..

12 hours ago, நந்தன் said:

இப்போதைக்கு, இதுவே பெரிய விசயம்:grin:

ஹஹா நல்லா விளங்கி இருக்கு ஜி..tw_blush:

On 16.12.2016 at 10:24 AM, முனிவர் ஜீ said:

இன்னும் எதிர்பார்க்கிறோம் 

பொம்புள பிள்ளைகளும் வருமே உங்கட மெச்சைப்பார்க்க?? :unsure:

ஆமா ரொம்ப  முக்கியம் இப்ப..:grin:சொந்த வீட்டில் என்னை அகதி ஆக்ககும் நோக்கம்..:rolleyes:

12 hours ago, Ahasthiyan said:

Image may contain: grass and outdoor

புதியதை தேடினால் சில நேரம் பழையதும்  மாட்டும்
எத்தினை பேருக்கு இந்த அனுபவம் உண்டு.
 

நன்றி Ahasthiyan... நீங்கள் சும்மா எதிலும் எழுதுவது இல்லை. ஆனால் இதில் எழுதி உள்ளீர்கள் சந்தோசம்..:)

உண்மைதான் சிலவேளைகளில் பழையது பல வெளிவரும் இப்படி தேட.

11 hours ago, MEERA said:

 

மன்னிக்கவும் நவீனன் உங்கள் திரியில் புகுந்ததற்கு.

 

இல்லை மீரா,  எல்லாம் ஒரு அனுபவம், நினைவு  பதிவுகள்தானே. தொடருங்கள்

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

அதுதானே.. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அதென்ன பொம்பிளை புள்ளையள்ள மட்டும் நிக்கிறீங்க????? :cool:

மேய்ச்சல் நிலத்தில் தானே மாட்டுக்கு வேலை:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

மேய்ச்சல் நிலத்தில் தானே மாட்டுக்கு வேலை:grin:

எந்த மாட்டை சொல்கிறார் கு.சாமி அண்ணை சொல்லுங்கோ எனக்கொரு உன்மை தெரிஞ்சாகணூம் :104_point_left:

Link to comment
Share on other sites

11 minutes ago, முனிவர் ஜீ said:

எந்த மாட்டை சொல்கிறார் கு.சாமி அண்ணை சொல்லுங்கோ எனக்கொரு உன்மை தெரிஞ்சாகணூம் :104_point_left:

இந்த மனுஷனை எப்படித்தான் நம்புறாங்களோ தெரியலை. எங்க போனாலும் சுத்திவர பெண் பிரஜைகளாகவே இருக்கிறாங்க. சத்தியமா நான் பழைய வேலை, புதிய வேலை, பஸ் பிரயாணம் பற்றி சொல்லவேயில்லை..:grin:

இதுக்குள்ள உண்மை வேற தெரியணுமாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் பதில் எழுத நேரம் கிடைத்தது.தொடர்ந்து எழுதுங்கள்.சில மலரும் நினைவுகள் சந்தோசத்துடன் சேர்த்து கவலைகளும் தருகின்றன.:unsure::)

Link to comment
Share on other sites

  • 2 months later...

 

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

இதில் கிரிக்கெட் விளையாடுவதில் பலரும்  அந்த இடத்திற்கு அருகில் இருப்பவர்கள்தான். வேறு சில நண்பர்கள் கொஞ்சம் தூரத்தில்இருந்தும் வருவார்கள்.

அதுக்கு அந்த நேரம் ஒரு சில காரணங்களும் இருந்தது. முக்கியமானது பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள மைதானங்களில் விளையாடும்போது அந்த  பாதையால் போகும் இராணுவத்தினர் தரும் தொல்லை. அதனால்  வீட்டில் விடமாட்டார்கள் என்று இந்த இடத்திற்கு வருவார்கள். இந்த மைதானம் பிரதான வீதியில் இருந்து உள்ளுக்கு இருப்பதால் பாதுகாப்பு என்று.

 

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

நாங்கள் அடிக்கும் பந்துகள் தாறுமாறாக பக்கத்தில்  இருக்கும் வீட்டு கூரை யன்னல் கண்ணாடிகளையும் பதம் பார்க்கும். அதை விட பந்து எடுக்க போய் அவர்களது பூக்கன்றுகளை முறித்து விடுகிறோம் என்று வேறு முறைப்பாடு. சில வேளைகளில் நாங்கள் அடிக்கும் பந்து போய் விழுந்தவுடன் அந்த வீட்டுகாரர் பந்தை எடுத்து விடுவார்கள்.  அவர்களிடம் இருந்து பந்தை உடனே வேண்டுவது இயலாத காரியம். tw_blush: பந்தை எடுத்தாலும்   கிரிக்கெட் தொடரும். ஆனால் என்ன அந்த பக்கம் பந்தை தூக்கி அடிக்கபடாது என்று சொல்லிவிடுவம் துடுப்பெடுத்து ஆடுபவரிடம்.

அதைவிட 2 அல்லது 3 பந்து தடுப்பளார்களை அந்த பக்கம் கூடுதலாக நிற்க வைத்து அவர்கள் வீட்டு வேலிக்காலும் பந்து போகாதமாதிரி  தடுப்பது. அந்த காலத்தில் T20 போட்டிகள் இல்லை. இல்லை என்றால் அதை பார்த்து அந்த ஸ்டைலில் பந்துகளை தடுத்து இருக்கலாம். :grin:  இது எல்லாம் அந்த நாள் மாத்திரம்தான். அடுத்தநாள் நாங்கள் நினைத்தவாறு அடிதான்.

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

அதே நேரம் எங்களோடு சேர்ந்து விளையாடுவர்களும் செய்யும் அநியாயம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  பந்து வீசுவதுக்கு ஓடி வருவதுக்கு இடம் காணாது என்று விக்கெட்க்கு பின்னால் இருக்கும் வீட்டுகாரரின் வேலியின் கதியாலை பிடிங்கி விட்டு அங்கு இருந்து ஓடி வந்து பந்து வீசினால் யாரும் பேசாமல் விடுவார்களா

தனது சொந்த அக்கா வீட்டின்  வேலியின் கதியாலைதான் அவர் பிடுங்கிகியவர். அவருக்கு விழுந்த ஏச்சை இப்பவும் நினைத்தாலும் சிரிப்புதான்.

Bild könnte enthalten: Pflanze, Baum, im Freien und Natur

எப்படி எல்லாம் நாங்கள் விளையாடி வாழ்ந்த இடம் இப்ப யாருமே இல்லாமல் புல்லும் பத்தையுமாக யாரும் கவனிப்பார் இல்லாமல் இருக்கு. அதை விட காணி சொந்தகாரரும் தங்கள் காணிகளை பிரித்து எடுத்து விட்டார்கள்.

 

அந்த சுற்றாடலில் உள்ள சிறுவர்களுக்கும், இளையவர்களுக்கும் இப்ப நேரமும் இல்லை. இடமும் இல்லை. அவர்கள் எப்போவது கிரிக்கெட், உதைபந்து விளையாட வேறு தொலைவில் உள்ள இடங்களுக்கு  போக வேண்டிய நிலை.tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் உங்களின் எழுத்தும் நன்றாக இருக்கின்றது நவீனன். தொடருங்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் உங்கள் கிரிகட் கதையை இப்போ தான் பார்த்தேன்.எப்படி தவறவிட்டேன் என்று இன்னமும் யோசிக்கிறேன்.

நாங்களும் வளவுகளில் கிரிகட் விளையாடிய நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.ரொம்பவும் வெட்கம்.துடுப்பு மட்டைகள் எல்லாம் உள்ளுர்த் தயாரிப்புகள் தான்.

எனக்கு சுவைப்பிரியனின் ஐஸ் குச்சி கதையை வாசித்த போது தான் நோட்டீஸ் பொறுக்கிய ஞாபகம் வர அதை கதையாக எழுதினேன்.நீங்கள் என்னடா என்றால் எனது பதிவைப் பார்த்து எழுதியிருக்கிறீர்கள்.நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் நவீனன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.