Jump to content

ரெக்கார்ட் பிரேக்கிங்கில் கோஹ்லியின் சாதனை! #Infographics #Don'tMiss


Recommended Posts

ரெக்கார்ட் பிரேக்கிங்கில் கோஹ்லியின் சாதனை! #Infographics #Don'tMiss

சாதனை

சாதனைகள் படைப்பதில் பெருஞ்சாதனை படைத்து சரித்திரம் படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அப்பேர்ப்பட்ட சச்சினின் சாதனைகளையே ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டிருக்கிறார் விராட் கோஹ்லி.  இந்த ஆண்டு விராட் கோஹ்லியின் பார்ம் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. ஒருதின போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி 20 போட்டிகள் என அத்தனையிலும் ஒரே சமயத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார்.

உலகிலேயே டெஸ்ட்,  ஒருதின போட்டிகள், டி 20 போட்டிகள் மூன்றிலும் ஐம்பது ரன்களுக்கும் அதிகமான சராசரியை வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மட்டும் தான். கோஹ்லியின் இந்த உலக சாதனையை இப்போதைக்கு எந்த வீரரும் முறியடிக்கவே முடியாது. லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டுக்குத் தான் கோஹ்லி லாயக்கு, டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லி சரிப்பட்டு வரமாட்டார் எனச் சொன்ன அத்தனை கிரிக்கெட் ஜாம்பவான்களும் இன்று கோஹ்லி தான் சிறந்த வீரர்ன் என புகழாரம் சூட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இயான் சேப்பல், இன்சமாம் உல் ஹக் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோஹ்லிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுப்பெற்றதற்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியிலேயே கேப்டன் பொறுப்பை ஏற்றார் விராட் கோஹ்லி. 2014  டிசம்பரில் இருந்து ஒவ்வொரு தொடரிலும் அவரது பார்ம் வலுவாகிக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு விராட் ஆடிய ஆட்டம், எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் கனவாகவே இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருதின தொடரில் ஆரம்பித்து, தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரை கோஹ்லி தான் இந்தியாவின் பேட்டிங் கில்லி. டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி படைத்து வரும் சாதனைகள் பற்றிய அலசல் இங்கே: -

1. அதிவேக 15வது சதம் :- 

virat kohli

52 டெஸ்ட் போட்டிகளில்  ஆடியிருக்கும் விராட், தனது 89வது இன்னிங்ஸில் பதினைந்தாவது சதத்தை விளாசியிருக்கிறார். இந்திய வீரர்களில் சச்சின் செய்த சாதனையை விராட் சமன் செய்திருக்கிறார். விராட்டை விடவும் மிக குறைந்த இன்னிங்ஸ்களில்  பதினைந்தாவது  சதம் விளாசியவர் கவாஸ்கர் மட்டும் தான். வெறும் 77 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். கோஹ்லிக்கு அடுத்தபடியாக ஷேவாக், அஸாருதீன், டிராவிட் போன்றவர்கள் இருக்கின்றனர்.

2. ஒரே ஆண்டில் அதிக  ரன் :-

virat kohli

கேப்டனாக  பொறுப்பேற்று விளையாடியவர்களில் ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமைக்கு கோஹ்லி சொந்தக்காரராகியிருக்கிறார். இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மிச்சமிருக்கும் நிலையில் கோஹ்லி எவ்வளவு ரன்களை அடிக்கப் போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் 22 டெஸ்ட் போட்டிகள் ஆடி 1095 ரன்கள் எடுத்திருந்ததே, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ஒருவர் ஒரு ஆண்டில் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. விராட் கோஹ்லி இந்த ஆண்டு வெறும் 17 போட்டிகளில் 1112 ரன்களை விளாசியிருக்கிறார். 1997 ஆம் ஆண்டு சச்சின் 17 போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3. ஒரு தொடரில் அதிகபட்ச ரன்கள்:- 

v3_07435.PNG

1978-79 காலகட்டத்தில் அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அசுரவேக வேகப்பந்தைச் சமாளித்து 9 இன்னிங்ஸ்களில் 732 ரன்களை எடுத்திருந்தார் கவாஸ்கர் . அது தான் இன்றளவும் ஒரு தொடரில்  இந்திய கேப்டன் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். தற்போது கோஹ்லி ஏழு இன்னிங்ஸ்களில் 552 ரன்களை குவித்திருக்கிறார். சென்னை டெஸ்டில் 181 ரன்களை எடுத்தால் கவாஸ்கரின் இந்தச் சாதனையையும் கோஹ்லி முறியடிப்பார்.

4. ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன் :-

virat

ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன் குவித்த  இந்திய கேப்டனும் கோஹ்லி தான். கேப்டனாக மூன்று முறை இரட்டைச் சதம் எடுத்த சாதனையும் கோஹ்லி வசம் தான் இருக்கிறது. இந்திய கேப்டன்களில் அந்நிய மண்ணில் இரட்டைச்  சதம் விளாசிய ஒரே வீரர்  கோஹ்லி மட்டும் தான். 

5. இந்தியா - இங்கிலாந்து தொடர் :- 

kohli

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா அதிக டெஸ்ட் தொடர்களை விளையாடியது இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தான். இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை 982 டெஸ்ட் போட்டிகளில்  மோதியுள்ளன. 1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த  டெஸ்ட் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்திருந்தார் கிரகாம் கூச். இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒரே தொடரில் அதிக ரன்களை குவித்திருப்பவர் கூச் தான். விராட் கோஹ்லி தற்போது ஏழு இன்னிங்ஸ்களில் 640 ரன்களை குவித்திருக்கிறார். சென்னை டெஸ்டில் 113  ரன்களை குவித்தால் கிரகாம் கூச்சின் இமாலய சாதனை உடைபடும். 

6.  கேப்டன் கில்லி :-

v6_07022.PNG

விராட் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அந்நிய மண்ணில் நடந்த  இரண்டு டெஸ்ட் தொடர் வெற்றி, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி என ஐந்து தொடர்களை தொடர்ச்சியாக வென்று சரித்திரம் படைத்திருக்கிறார் கோஹ்லி. அதே சமயம்  கோஹ்லியின் பார்மும் இந்த காலகட்டத்தில் வேற லெவலில் இருக்கிறது என்பதை புள்ளிவிவரம் சொல்லிவிடுகிறது. கேப்டன், பேட்ஸ்மேன் என இரட்டைச் சவாரியை சிறப்பாக செய்கிறார்  கோஹ்லி.

7. வலுவான அணிகளை விரட்டும் விராட்

virat kohli

டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் எதிராக விராட் கோஹ்லி எவ்வளவு சராசரியை வைத்திருக்கிறார் என  படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அறுபது ரன்களுக்கு மேல் டெஸ்ட் சராசரி வைத்திருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு எதிராக அவர்களது மண்ணிலேயே சிறப்பாக  விளையாடியவர் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக நியூசிலாந்து மண்ணில் 70 ரன்களுக்கும் அதிகமான சராசரி வைத்திருக்கிறார் கோஹ்லி. இங்கிலாந்தில் மட்டும் தான் மோசமான சராசரி வைத்திருக்கிறார். வங்கதேசத்தில் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும் தான் ஆடினார் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

8. கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரே ஆண்டில்  இரண்டுக்கு மேற்பட்ட இரட்டைச் சதங்களை விளாசியவர்கள் ஐந்தே பேர் தான். டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், பிரண்டன் மெக்குல்லம் ஆகியோருக்கு அடுத்தபடியாக இணைந்திருப்பவர் கோஹ்லி. மைக்கேல் கிளார்க் நான்கு இரட்டைச் சதங்களை விளாசியிருப்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. 

http://www.vikatan.com/news/coverstory/74847-virat-breaks-sachin-dravid-records-in-test-cricket.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.