Jump to content

டெஸ்ட் தரவரிசை: ரூட்டை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார் கோலி


Recommended Posts

டெஸ்ட் தரவரிசை: ரூட்டை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார் கோலி

 

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி. ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார்.

 
டெஸ்ட் தரவரிசை: ரூட்டை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார் கோலி
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் விராட் கோலி 235 ரன்கள் குவித்தார். இதனால் முதன்முறையான டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 2-வது இடத்தில் இருந்தார். மும்பை டெஸ்டில் 235 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலி 886 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 897 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஸ்மித்தை விட 11 புள்ளிகள்தான் விராட் கோலி பின்தங்கியுள்ளார். சென்னையில் 16-ந்தேதி தொடங்கும் ஐந்தாவது போட்டியில் சதம் அடித்தால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 854 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 817 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

ஹசிம் அம்லா, டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர், புஜாரா, யூனிஸ்கான், பேர்ஸ்டோவ் ஆகியோர் முறையே ஐந்தாவது இடத்தில் இருந்து 10-வது இடம் வரை பிடித்துள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி 2-வது இடத்திலும், டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/13180342/1055833/Virat-Kohli-climbs-to-career-best-second-spot-in-ICC.vpf

Link to comment
Share on other sites

அஸ்வின் நம்பர் 1, கோஹ்லி நம்பர் 2

 

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் மும்பை டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் கோலி ஒரு இடம் முன்னேறி டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். ஸ்மித்துக்கும், கோலிக்கும் 11 புள்ளிகள்தான் வித்தியாசம். குறிப்பாக டெஸ்ட் தரவரிசையில் கோலியின் சிறந்த நிலை இதுதான்.

446811-kohli-ashwin-test-celeb-70_19573.

அதே போல், மும்பை டெஸ்ட்டில் சுழல் மேஜிக் செய்த அஸ்வின் டெஸ்ட் பவுலர்களில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். மும்பை டெஸ்ட்டில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் தற்போது அஸ்வின் 904 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையின் ரங்கனா ஹெரத்துக்கும் இவருக்கும் 37 புள்ளிகள் வித்தியாசம். மேலும், உலகில்  முத்தையா முரளிதரனுக்கு பின்னர், ஆஃப் ஸ்பின்னர்களில் 900 புள்ளிகளுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் நிகழ்த்தியுள்ளார்.

அனைத்து வகையான ஸ்பின்னர்களிலும் 900 புள்ளிகளுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் அஸ்வின் ஐந்தாவது வீரர் ஆவார். டெஸ்ட் அணிகளுக்கான பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

http://www.vikatan.com/news/sports/74823-ashwin-at-number-1-kohli-number-2-in-icc-test-rankings.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த ஆண்டு தான் ஐபிஎல் இல் கூடுதலாக எடுத்த ஓட்டங்களாக இருக்கும்.
    • 261 ர‌ன்ஸ் அடிச்சும் அதை எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடி வெல்லுகின‌ம்   ச‌த்திய‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் முற்றிலும் மாறு ப‌ட்டு இருக்கு   உந்த‌ இஸ்கோர்ர் இமைய‌ம‌லை இஸ்கோர்...........ப‌ஞ்சாப் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰............................................................
    • டீலின் டீடெய்ல்ஸ், என்ன விலை, விமானநிலையம் எப்படி பாவிக்கப்படும் என்ற டீடெயில் எதுவும் வெளியாகவில்லை. இந்தியாவோடு ரஸ்யாவையும் சேர்த்து இழுத்தது, கட்ட கடன் கொடுத்த சீனாவை திருப்தி செய்யவாக இருக்க கூடும்.
    • அது என்ன‌ என்றால் பெரிய‌வ‌ரே யாழில் இருக்கும் வாத்தியார் என‌க்கு த‌மிழை ஒழுங்காய் தான் சொல்லி தந்த‌வ‌ர்  வாத்தியார் த‌மிழை சொல்லி த‌ரும் போது என்ர‌ நினைவெல்லாம் ப‌ழைய‌ காத‌லின்ட‌ நினைவாக‌ இருந்த‌ ப‌டியால் , வாத்தியார் சொல்லித் தந்ததை நினைவில் வைத்திருக்கவில்லை இதைப் பார்த்த வாத்தியார் இனிஎன்னை கண்காணிப்பார் ஆன‌ ப‌டியால் இனி தமிழில் எழுதுவதில் முதிர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது😁..................................... @வாத்தியார்
    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.