Jump to content

அறிவோம் நம் மொழியை: போக வேண்டிய தூரம்


Recommended Posts

அறிவோம் நம் மொழியை: போக வேண்டிய தூரம்

 

 
thamil_2915978f.jpg
 
 
 

ஒரு மொழியின் தொன்மை எவ்வளவு பெருமைக்குரியதோ அதே அளவுக்கு அதன் இளமையும் பெருமைக்குரியது. மொழியில் இளமை என்பது சமகாலத்துடன் அதற்கு இருக்கும் உயிரோட்டமுள்ள உறவைக் குறிப்பது. தொன்மைச் சிறப்பு மிக்க தமிழ் மொழி எந்த அளவுக்கு இளமையாக இருக்கிறது? இன்றைய சூழலில் தமிழை எப்படி அணுகுவது? மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கேற்பத் தமிழை எப்படிப் பயன்படுத்துவது? உலகின் எல்லா அறிவுத் துறைகளும் தமிழில் வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றனவா? அன்றாட வாழ்வில் தமிழின் இடம் என்ன? உலக நடப்புகளைப் புரிந்துகொள்வதில் தமிழின் திறன் என்ன? அந்த விஷயத்தில் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழ் எங்கே இருக்கிறது?

உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவெடுத்ததை ஒட்டி ஆங்கில ஊடகங்களில் ‘பிரெக்ஸிட்’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், எக்ஸிட் (பிரிட்டன் வெளியேற்றம்) என்னும் சொற்களின் இணைப்பே பிரெக்ஸிட். இத்தகைய புதிய பிரயோகங்கள் தமிழில் உருவாகின்றனவா? பிரெக்ஸிட்டைத் தமிழில் சொல்ல யாராவது முயன்றிருக்கிறார்களா? அப்படி யாரேனும் உருவாக்கினால் அதை ஊடகங்களும் பொதுமக்களும் பயன்படுத்த முனைகிறார்களா? அதைப் பற்றி விவாதிக்கிறார்களா?

தமிழ் அண்மைக் காலத்தில் பல சவால்களைச் சந்தித்துள்ளது. க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green House Effect) என்பதைப் பசுமை இல்ல விளைவுகள், பச்சில்ல விளைவுகள், பசுங்குடில் விளைவுகள் எனப் பலவாறாகச் சொல்லிவந்தோம். இன்று பசுங்குடில் விளைவு என்னும் சொல் பொதுவாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இணைய தளம், உரலி, நிரலி, தேடுபொறி, தரவிறக்கம், தரவேற்றம் ஆகிய சொற்களும் பலவித மாற்றங்களுக்குப் பிறகு நிலைபெற்றுள்ளன. ஆனால், இன்னும் தமிழுக்கு வர வேண்டிய சொற்கள் பல உள்ளன. போக வேண்டிய தூரம் அதிகம்!

புதிய துறைகள் சார்ந்த புதிய சொற்கள் ஒருபுறம் இருக்கட்டும். பழைய சொற்களை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது. கோயில் என எழுதுவது சரியா, கோவில் என எழுதுவது சரியா என்று ஒரு காலத்தில் விவாதிக்கப்பட்டது. தடயமா, தடையமா, பழமையா பழைமையா, சுவரிலா, சுவற்றிலா என்றெல்லாம் கேள்விகள் எழுந்ததுண்டு. மிதிவண்டி என்று தமிழில் சொல்லலாமா அல்லது சைக்கிள் என்பதையே தமிழாக்கிக்கொள்ளலாமா என்ற விவாதமும் நடந்ததுண்டு. டிவி - தொலைக்காட்சி, ரேடியோ - வானொலி, எஃப்.எம். - பண்பலை என ஒரு பொருளுக்கு இருமொழிச் சொற்களும் இயல்பாகப் புழங்கிவருவது குறித்த பெருமிதங்களும் புகார்களும் தமிழர்கள் மத்தியில் உள்ளன. மவுஸ், க்ளிக், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், செல்ஃபி, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போன்ற சொற்களைப் பற்றிய விவாதமும் நடந்துவருகிறது. இவற்றுக்கிடையில், அபாயகரமானதொரு போக்கு ஒன்றும் தென்படுகிறது. ள, ல, ழ, ண, ன ஆகிய எழுத்துக்களுக்கான வித்தியாசம்கூடத் தெரியாத ஒரு தலைமுறை உருவாவது!

நவீன வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளத் தமிழைத் தயார்ப்படுத்துவதோடு, தமிழின் அடிப்படைத் தன்மைகளைத் தமிழர்களுக்கு நினைவுபடுத்தவும் வேண்டியிருக்கிறது. இந்த இரு விதமான பணிகளையும் வாசகர்களோடு சேர்ந்து மேற்கொள்வதுதான் இந்தப் பத்தியின் நோக்கம். இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் தமிழின் சவால்கள், பாய்ச்சல்கள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை அலசுவோம். அறிவுபூர்வமான, புலமை சார்ந்த விவாதங்களை விட்டுவிட்டு, நடைமுறை சார்ந்து தமிழை அணுகுவோம்.

(பேசுவோம்..)

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-போக-வேண்டிய-தூரம்/article8795723.ece

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை - 2: மண்ணிலிருந்து உருவாகும் மரபுத்தொடர்கள்

 

 
nadiar_2960045f.jpg
 
 
 

தமிழில் ‘ஆன்னா, ஊன்னா’ என்று ஒரு தொடர் உள்ளது. ‘ஆ என்றோ ஊ’என்றோ குரலெழுப்புவதை அடிப்படையாகக் கொண்ட தொடர் இது. ஒருவர், யாராவது ‘ஆ / ஊ’ என்று சொன்னாலே போதும், ஒரு செயலைச் செய்யப் புறப்பட்டுவிடுவார் என்று பொருள். அதாவது, காரணமே தேவையில்லாமல் சிலர் சில செயல்களைச் செய்வார்கள். அதைக் குறிக்கும் மரபுத்தொடர் இது. ‘ஆன்னா ஊன்னா ஊருக்குக் கிளம்பிடாதே’, ‘ஆன்னா ஊன்னா பணம் கேட்டு வந்து நிக்காதே’ என்றெல்லாம் எடுத்துக்காட்டுகள் கொடுக்கலாம்.

இது பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கிறது. எழுத்தில் வரும்போதும் படைப்புகளில், உரையாடல்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இன்றைய தலைமுறைக்கு இந்தச் சொல் எழுத்து வடிவில் அவ்வளவாக அறிமுகமும் ஆகியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பழைய தமிழ்த் திரைப்படம் ஒன்றில் இதை ஒரு பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

‘ஆன்னாலும் ஊன்னாலும் அழுகை பிடிக்கிறே அசட்டுப் பெண்ணாட்டம்’ என்று ‘தேவதாஸ்’ படத்தில் ‘ஓ பார்வதி’ என்னும் பாடலில் ஒரு வரி வரும். ‘காரணமே இல்லாமல்’ அழுது அடம்பிடிக்கும் தோழியைத் தோழன் செல்லமாகக் கடிந்துகொள்ளும் காட்சி இது. ஆனால், அவர்களுக்கிடையில் இருந்த நேசம் வாழ்நாள் முழுவதும் தொடரும் அளவுக்கு ஆழமாக இருந்தது என்பது வேறு விஷயம்.

பொதுவாக, மொழிபெயர்க்கும்போது அதிகச் சிக்கலைத் தருபவை மரபுத்தொடர்கள்தான். ‘Kicked the Bucket’, ‘Rubbing the shoulder’ என்றெல்லாம் வரும்போது அந்தத் தொடர்களின் சொற்களை அல்லாமல், ஒரு தொடராக அது சுட்டும் ஒட்டுமொத்தப் பொருளைத் தமிழில் தர முனைவதே முறையானது. இத்தகைய தொடர்களை மொழிபெயர்க்கும்போது சரியான சொற்கள் கிடைக்காமல் சில சமயம் மொழிபெயர்ப்பாளர்கள் திண்டாடுவது உண்டு. இந்தச் சிக்கல் இலக்கு மொழியின் போதாமையால் வருவது என்று சிலர் கருதத் தலைப்படுகிறார்கள். அந்தத் தொடர்கள் உருவான சமூகப் பண்பாட்டுச் சூழல் நமக்கு அந்நியமாக இருப்பதாலேயே அவை மொழிபெயர்க்கக் கடினமாக இருக்கின்றன.

எல்லா மொழிகளிலும் மரபுத் தொடர்கள் மொழிபெயர்ப்பில் இத்தகைய சவாலை ஏற்படுத்தவே செய்கின்றன. உதாரணமாக, ‘ஆன்னா ஊன்னா’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது சிக்கல் வரும் அல்லவா? ‘காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலைதல்’, ‘அவனுக்குக் கை நீளம்’ (திருடும் பழக்கத்தைக் கை நீளம் என்று சொல்வதுண்டு) என்ற தொடர்களையும் எளிதாக மொழிபெயர்த்துவிட முடியாது அல்லவா?

இத்தகைய மரபுத்தொடர்கள் ஒரு மொழியின் முக்கியமான செல்வங்கள். மொழியின் வண்ணத்தைக் காட்டுபவை. மக்களிடையே புழங்கிவரும் நம்பிக்கைகள், மதிப்பீடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இவை பிரதிபலிக்கின்றன. இவற்றை இழப்பது ஒரு விதத்தில் மரபுடனான நம் தொடர்பை அறுத்துக்கொள்வதுபோலத்தான்.

கொசுறு:

புதிய மரபுத்தொடர்கள் உருவாவதும் பழைய தொடர்கள் புது விளக்கம் பெறுவதும் அவ்வப்போது நடக்கும். அண்மையில் ஒரு எழுத்தாளர், ‘எந்தப் பட்டியலிலும் என் பெயர் இடம்பெறாது. அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நாம் யார் வீட்டுக்கும் போய் மொய் வைத்ததில்லையே’ என்று எழுதியிருந்தார். திருமணம் முதலான விழாக்களில் மொய் வைப்பது, தமக்கு மொய் வைத்தவர்களின் விழாக்களுக்குச் செல்லும்போது தானும் அந்த மரியாதையைத் திருப்பிச் செய்வது என்னும் பழக்கத்துடன் தொடர்புகொண்ட ஒரு தொடரை வேறொரு பின்புலத்தில் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் அந்த எழுத்தாளர்.

(தேடுவோம்)

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-2-மண்ணிலிருந்து-உருவாகும்-மரபுத்தொடர்கள்/article8946808.ece

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: சீண்டுதல், சீந்துதல், சுளிப்பு, சுழிப்பு

 

 
 
child_2969324f.jpg
 
 
 

தவறான பொருளில் வழங்கப்பட்டுவரும் சில சொற்களை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆவன செய்ய வேண்டும் என்பதற்குப் பதில் ஆவண செய்ய வேண்டும் என எழுதினால் இதிலுள்ள தவறு உடனே புரிந்துவிடும். ஆனால், சில தவறுகளை அப்படிக் கண்டுபிடித்துவிட முடியாது. உதாரணம், சுளிப்பு. இந்தச் சொல்லைச் சுழிப்பு என்று பலர் பயன்படுத்திவருகிறார்கள். முகச் சுளிப்புக்கு என்ன பொருளோ அதே பொருளில்தான் முகச் சுழிப்பு என்று என எழுதப்படுகிறது. ஆனால், சுழிப்பு, சுளிப்பு இரண்டும் வேறு வேறு.

சுளித்தல் என்பது அதிருப்தியைக் குறிக்க முகத்தில் ஏற்படும் நுட்பமான சிறிய மாறுதலைக் குறிக்கும் சொல். புருவ நெரிப்பு, கண்களில் ஏற்படும் சிறு சுருக்கம், மூக்கில் ஏற்படும் நுட்பமான அசைவு, கன்னக் கதுப்புகளில் எழும் சிறு அதிர்வு, உதட்டின் சிறு நெளிவு எனப் பல வகைகளில் இந்த அதிருப்தி வெளிப்படும். எரிச்சலை, கோபத்தை, வெறுப்பைக் காட்டும் அழுத்தமான பாவனைகள், அதற்கான முக அசைவுகள் வேறு. இது சிறிய, நுட்பமான அசைவு. அதிருப்தியை மட்டுமே தெரிவிக்கும் அடையாளம்.

சுழிப்பு என்பது வேறு. சுழற்சி என்பதோடு தொடர்புகொண்ட சொல் இது. நதியில் ஏற்படும் சுழியை, சுழிப்பைக் கற்பனை செய்து பாருங்கள். இப்போது முகச் சுழிப்பைக் கற்பனை செய்துபாருங்கள். முகத்தைச் சுழிக்க முடியுமா? சுளிக்கத்தான் முடியும்.

ஆனால், உதட்டுச் சுழிப்பு என்று சொல்லலாம். இதன் பொருள் வேறு. அதிருப்தியை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் பொய்க் கோபத்தை அல்லது ஊடலை வெளிப்படுத்தும் பாவனை இது. வேறு சில பாவனைகளையும் இந்தச் சுழிப்பு வெளிப்படுத்தும்.

உதட்டை வைத்துச் சுளிக்கவும் செய்யலாம்; சுழிக்கவும் செய்யலாம். ஆனால், இரண்டும் மாறுபட்ட உணர்வுகளிலிருந்து பிறப்பவை. எனவே மாறுபட்ட பொருளைத் தருபவை. எனவே, இரண்டு சொற்களையும் பரஸ்பரம் பதிலீடு செய்ய முடியாது. எதை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும்.

சீண்டுதல் என்னும் சொல்லும் பல சமயம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சீந்துதல் என்னும் சொல்லின் பொருளில் பலர் இதைப் பயன்படுத்துகிறார்கள். சீந்துதல் என்பது ஒரு விஷயத்தைப் பொருட்படுத்துதல், கவனித்தல், மதித்தல். பெரும்பாலும் இது எதிர்மறையான பொருளில் எதிர்மறைச் சொல்லாக்கமாகவே பயன்படுத்தப்படும். ஒரு விஷயத்தை யாருமே கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையை ‘சீந்துவாரற்று இருக்கிறது’ என்று சொல்லலாம். மதித்துப் பொருட்படுத்தும் நிலையை ‘சீந்தும் வகையில்’ என்று சொல்லும் வழக்கமில்லை. சீந்துவாரற்று, சீந்தாமல், சீந்த ஆளின்றி என எதிர்மறைச் சொல்லாக்கமாகவே இது பயன்படுத்தப்படுகிறது.

சீண்டுதல் என்பது ஒருவரைத் தொல்லைப்படுத்துதல், வலியச் சென்று வம்புக்கு இழுத்தல், உசுப்பேற்றுதல். ஆங்கிலத்தில் Tease என்ற சொல்லுக்கு இணையானது இது. Eve Teasing என்பதைப் பெண் சீண்டல் என்று குறிப்பிடுவதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். ஒருவர் இன்னொருவரை tease செய்கிறார் என்றால், அவரைச் சீண்டுகிறார், வம்புக்கு இழுக்கிறார், தொல்லை தருகிறார் என்று பொருள். கோபத்தைக் கிளப்புதல் என்றும் இது பொருள்படும். ‘சும்மா இருக்கும் சிங்கத்தைச் சீண்டிவிடாதே’ என்னும் சொலவடையை இங்கே நினைவுகூரலாம். ஆனால், சீண்டுதல் என்பதைப் பொருட்படுத்துதல் என்னும் பொருளில் பலரும் இப்போதெல்லாம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

சீந்துதல் - சீண்டுதல், சுளிப்பு - சுழிப்பு ஆகிய சொற்களின் ஒலிக் குழப்பமே இந்தப் பொருள் குழப்பங்களுக்கும் காரணம். பேச்சு வழக்கில் ஒலிக் குழப்பம் இருக்கலாம். ஆனால், சற்றே கவனமாக இருந்தால் எழுத்தில் இவற்றைச் சரியாகப் பயன்படுத்த முடியும். ஐயம் ஏற்படும்போது நல்லதொரு அகராதியைப் பார்க்கும் பழக்கம் இருந்தால், இதுபோன்ற தவறுகளைக் களைந்துவிடலாம்.

ஐயம் ஏற்பட்டால்தானே பிரச்சினை என்கிறீர்களா?

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-சீண்டுதல்-சீந்துதல்-சுளிப்பு-சுழிப்பு/article8977796.ece

August 12, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: மொழியின் தாராளப் போக்கு

 

 
 
mozhi_2987077f.jpg
 
 
 

நவீன வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளத் தமிழைத் தயார்படுத்துவது, தமிழின் அடிப்படைத் தன்மைகளை நினைவுபடுத்திக்கொள்வது ஆகிய இரு விதமான பணிகளையும் மேற்கொள்வது இந்தப் பத்தியின் நோக்கம் என முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். இங்கு முன்வைக்கப்படுபவை அனைத்தும் உரையாடலைக் கோருபவை, கலந்துரையாடலை முன்னெடுப்பவை என்பதை நினைவுபடுத்திக்கொண்டு நாம் மொழியின் உலகிற்குள் நுழையலாம்.

உலகமயமாதலை இந்தியா வரித்துக் கொண்டு 25 ஆண்டுகள் நிறைந்ததை ஊடகங் கள் நினைவுகூர்ந்தன. பொருளாதார விவகாரங் களும் உலகமயமாதலின் பண்பாட்டுத் தாக்கங் களும் அலசப்பட்டன. உலகமயமாதலை ஒட்டி மொழி சார்ந்த சிக்கல்களையும் பேசலாம்.

ஒவ்வொரு புதிய துறையும் புதிய கண்டுபிடிப்பு களும் மொழி சார்ந்த சவாலையும் ஏற்படுத்தும். அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள், ஆகியவற்றில் தொழுதுண்டு பின்செல்ல வேண்டிய நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழும் அப்படித்தான் இருக்கும். இவை ஒவ்வொன்றுமே மொழிக்குச் சவால்களை ஏற்படுத்தியபடி இருக்கும். கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகம், உடல்நலம் ஆகியவற்றில் புதிய புதிய துறைகள் உருவாகும்போதும் இதே நிலைதான். Anthropology போன்ற புதிய துறைகள் உருவாகும்போதோ Appraisal போன்ற நிர்வாக நடைமுறைகள் புதிதாக வரும்போதோ Cosmetic Surgery போன்ற புதிய சிகிச்சை முறைகள் அறிமுகமாகும்போதோ அவற்றைத் தமிழில் எப்படிச் சொல்வது என்னும் சிக்கல் எழும். உலகமயமாதலும் அப்படித்தான்.

Globalisation என்பதை மிக எளிதாக உலகமயமாதல் என்று தமிழ்ப்படுத்திவிட்டோம். Privatisation என்பதைத் தனியார்மயம் என்று சொல்லிவிட்டோம். Liberalisation என்பது தாராளமயம் என வழங்கப்படுகிறது. ஆனால், Global, Private என்பவைபோல Liberal என்பதை தாராளம் என்று சொல்லி முழுமையாகப் புரியவைத்துவிட முடியாது. Liberal என்பது சுதந்திரமான, கட்டற்ற, தாராளப் போக்கு கொண்ட எனப் பல விதங்களில் பொருள்படும். உலகமயம், தனியார்மயம் என்னும் சொற்களைப்போல தாராளமயம் என்னும் சொல் அது சுட்ட முனையும் பொருளை முழுமை யாகச் சுட்டவில்லை. வர்த்தகத் துறையில் கட்டுகளை / கட்டுப் பாடுகளைத் தளர்த்துதல் என்பதுதான் Liberalisation. ஆனால், இது அந்தச் சொல்லுக்கான சொல்லாக்கம் அல்ல, விளக்கம்.

சொல்லாக்கம் என்பது பெரும்பாலும் ஒற்றைச் சொல்லாகவே இருக்கும். Liberalisation-ஐப் பொறுத்தவரை ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட முடியாது. எனவே அதன் மூலப் பொருளுக்கு அருகில் வரும் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறோம். தொடர்ந்த பயன்பாட்டின் மூலம் அதை Liberalisation-க்கான தமிழ்ச் சொல்லாகப் பழக்கப்படுத்திவிடுகிறோம். நாளடைவில் இது Liberalisation க்கான தமிழ்ச் சொல்லாக நிலைபெற்று விடுகிறது. ஒரு சொல் ஒரு பொருளைத் தெளிவாகச் சுட்டத் தொடங்கிவிட்டால், அந்தச் சொல்லைக் கேட்டதும் அந்தப் பொருள் நம் நினைவுக்கு வந்தால் அந்தச் சொல்லாக்கம் நிலைபெற்றுவிட்டது எனப் பொருள். இந்த வகையில் தாராளமயம் என்பதை Liberalisation என்பதற்கான நிலைபெற்ற சொல்லாக்கமாகக் கருதலாம்.

கொசுறு: சுயேச்சை, சுயேட்சை எது சரி என்னும் ஐயம் பலருக்கு உள்ளது. சுய இச்சை என்பது சுயேச்சை ஆனது. இதில் ‘ட்’ என்னும் எழுத்துக்கு இடமில்லை.

(தேடுவோம்)

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-மொழியின்-தாராளப்-போக்கு/article9035229.ece

August 26, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை -4: சொல்லுக்குள் அடங்காத பொருள்

 

america_2996347f.jpg
 
 
 

குறிப்பிட்ட செயலை, இடத்தை, கோட்பாட்டை, பயன்பாட்டை நேரடியாகக் குறிக்கும் சொல் ஆங்கிலத்தில் இருந்தால் அதைத் தமிழ்ப்படுத்துவது ஒப்பீட்டளவில் எளிது. Americanisation (அமெரிக்கமயமாதல்), victimisation (பலியாக்குதல்), Structuralism (அமைப்பியல்), Shock observer (அதிர்வுதாங்கி) முதலான சொற்களில் அவை சுட்டும் பொருட்கள் வெளிப்படையாக இருக்கின்றன. Decentralisation என்னும் சொல் சற்று வித்தியாசமானது.

நிர்வாகம் முதலான அம்சங்களில் மையப்படுத்தும் அணுகுமுறைக்கு (Centralisation) மாறான அணுகுமுறையைக் குறிக்கும் சொல். Centralisation என்னும் சொல்லை மையப்படுத்துதல் என்று சொன்னால், அந்தச் சொல்லின் நேரடிப் பொருள் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அது அரசியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் அதிகாரம் மையத்தில் குவிந்திருப்பதைக் குறிக்கும் சொல். எனவே, இந்தத் துறைகளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படும்போது அதை அதிகாரக் குவிப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு எதிர்ச் சொல்லான decentralisation என்பதை அதிகாரப் பரவலாக்கல் என்னும் சொல்லின் மூலம் சரியாக உணர்த்தலாம்.

இப்படித் தன்னுடைய ஆகிவந்த எல்லைகளை மீறி, ஒரு குறிப்பிட்ட துறையில் கூடுதலான அல்லது மாறுபட்ட பொருட்களைக் குறிக்கும் சொற்களைக் கலைச் சொற்கள் (Technical Terms) என்று சொல்வதுண்டு. இத்தகைய சொற்களைத் தமிழாக்கும்போது அவற்றின் நேரடிப் பொருள்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. சில சமயம் நேரடிப் பொருளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அது குறிப்பிட்ட ஒரு துறையில் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்து அவற்றுக்கான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும். Decentralisation என்பதிலாவது அது எது தொடர்பானது என்னும் குறிப்பு அந்தச் சொல்லிலேயே இருக்கிறது. ஆனால், சில பொருள்கள் அவற்றின் வழக்கமான பொருளுக்கு மிகவும் மாறுபட்ட பொருளில் சில துறைகளில் வழங்கிவரும். சில சமயம் நேரெதிரான பொருளிலும் வழங்கிவரும்.

உதாரணமாக, sanction என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். இதன் வழக்கமான பொருள் அனுமதி (loan sanctioned). ஆனால் பொருளாதார - அரசியல் துறையில் இதன் பொருள் தடைவிதித்தல். குறிப்பாகப் பொருளாதாரத் தடை விதித்தல். ஈராக்குடனான அமெரிக்காவின் போரின்போது ஈராக்கின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இவை இரண்டுமே sanctionதான். இந்த இடத்தில் sanction என்பதன் சாதாரணப் பொருள் செல்லுபடி ஆகாது. இதைக் கவனத்தில் கொண்டு தமிழில் இதற்கான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

சில சொற்களை நேரடியாக மொழிபெயர்த்துவிடலாம். Geography என்றால் புவியியல் என்கிறோம். Geo என்றால் புவி. இந்தச் சொல் தமிழில் ஏற்கெனவே புழக்கத் தில் உள்ளது. எனவே, இதை நேரடியாக மொழிபெயர்ப் பதில் சிக்கல் இல்லை. Sewing Machine என்பதைத் தையல் இயந்திரம் என்று சொல்வதிலும் சிக்கல் இல்லை. ஏனென்றால் தையல், இயந்திரம் ஆகிய இரு சொற்களும் தமிழில் ஏற்கெனவே இருக்கின்றன.

தமிழில் ஏற்கெனவே இல்லாத சொற்களைக் கொண்ட பிறமொழிச் சொற்களை மொழிபெயர்க்கும்போதுதான் சிக்கல் வருகிறது. உதாரணமாக Ex-ray. இதில் Ray என்றால் கதிர் என்று சொல்லிவிடலாம். Ex என்பதை எப்படிச் சொல்வது? ஊடுகதிர் என இதைத் தமிழில் சொல்வதற்கான காரணம் இந்தச் சொல்லின் நேர்ப் பொருளில் இல்லை. அது சுட்டும் பொருளில் உள்ளது. அதுபோலவே Scan, Edit போன்ற சொற்களை அவை சுட்டும் பொருள்களைக் கொண்டுதான் தமிழாக்க வேண்டும். சொல்லின் நேர்ப் பொருளைப் பின்தொடர முடியாது.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-4-சொல்லுக்குள்-அடங்காத-பொருள்/article9064289.ece

September 2, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: எழுவாயை எங்கே வைப்பது?

அரவிந்தன்

 

 
ezhu_3015553f.jpg
 
 
 

இந்த வாக்கியத்தைப் பாருங்கள்: ‘இறந்துபோன சங்கரனின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்.’ இதில் திருவல்லிக்கேணியில் வசித்தது யார் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. இறந்தது யார் என்பது தெளிவாக இருக்கிறதா?

ஒரு வாக்கியத்தில் எழுவாயை எங்கே அமைப்பது என்பதில்தான் சிக்கல். இந்த உதாரணத்தைப் பாருங்கள்: ‘1995-ல் தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் திரைப்படமாக்கப்பட்டது’. ஜானகிராமன் 1964-ல் இந்த நாவலை எழுதினார். அது படமாக்கப்பட்டது 1995-ல். ஆனால் இந்த வாக்கியத்தைப் படிக்கும் ஒருவர் ஜானகிராமன் 1995-ல் நாவல் எழுதியதாகக் கருதிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாக்கியம், ‘தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் 1995-ல் படமாக்கப்பட்டது’ என்பதாக இருந்தால் எந்தக் குழப்பமும் வராது அல்லவா?

ஆண்டுகள், விவரங்கள், வர்ணனைகள் ஆகியவற்றை எங்கே பொருத்துவது என்பது முக்கியம். ‘சாகாவரம் பெற்ற பரசுராமரின் தந்தை ஜமதக்னி’ என்று எழுதினால், சாகாவரம் பெற்றவர் பரசுராமரா அவரது தந்தையா என்னும் குழப்பம் வரலாம். ‘பரசுராமர் சாகாவரம் பெற்றவர்; அவரது தந்தை ஜமதக்னி’ என்று எழுதலாம். அல்லது, ‘ஜமதக்னியின் மகன் பரசுராமர் சாகாவரம் பெற்றவர்’ என்று எழுதலாம். ‘மருத்துவர் பட்டம் பெற்ற தென்னரசுவின் தந்தை புவியரசு’ என்பதாகச் சமகால உதாரணமாக மாற்றியும் இதைப் புரிந்துகொள்ளலாம்.

இன்னொரு உதாரணம் பாருங்கள்: ‘இந்த அங்கீகாரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஊக்கம்.’ எது தொடர்ந்து இயங்க வேண்டும்? அங்கீகாரமா? ‘தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஊக்க மருந்து இந்த அங்கீகாரம்’ என்று எழுதினால் எந்தக் குழப்பமும் இல்லை. இங்கே அங்கீகரம் என்னும் எழுவாய் இடம் மாறியதும் தெளிவு பிறக்கிறது.

‘அந்தக் கச்சேரிக்காக மயிலாப்பூர் சபா என்று அழைக்கப்பட்ட அரங்கத்தை ஒப்பந்தம் செய்தார்கள்.’ அந்தக் கச்சேரிக்காகத்தான் அது மயிலாபூர் சபா என அழைக்கப்பட்டதா? ‘மயிலாபூர் சபா என்று அழைக்கப்பட்ட அரங்கத்தை அந்தக் கச்சேரிக்காக ஒப்பந்தம் செய்தார்கள்’ என்று சொல்லும்போது பொருள் குழப்பமின்றித் துலங்குகிறது. எது, எங்கே, என்ன என்பனவற்றைக் கூடியவரையில் அருகருகே அமைத்துவிடுவதே நல்லது.

‘எல்லாமே சரியான தருணத்தில் மேற்கொள்வதில்தான் அடங்கி யுள்ளன’ என்ற வாக்கியத்தை ‘சரியான தருணத்தில் மேற்கொள் வதில்தான் எல்லாமே அடங்கி யுள்ளன’ என்று எழுதும்போது எது, என்ன, ஏன், எப்படி என்ற குழப்பங்கள் நேர்வதில்லை.

எல்லாம் சரி, இறந்துபோனது சங்கரனா அல்லது அவரது தாயாரா என்னும் வாக்கியத்தில் உள்ள குழப்பத்தை எப்படித் தீர்ப்பது என்று கேட்கிறீர்களா? விக்ரமாதித்தனாலும் பதில் சொல்ல முடியாத வேதாளத்தின் கேள்விபோலத்தான் இது. இந்த வாக்கியத்தை உடைக்காமல் இதற்குத் தீர்வு காண முடியாது (இறந்தது சங்கரன் என்றோ அல்லது அவரது தாயார் என்றும் அனுமானித்துக்கொண்டு இந்த வாக்கியத்தை ஒரே வாக்கி யத்தில் குழப்பமில்லாமல் எழுத முடியுமா என்று முயற்சிசெய்து பருங்கள்).

(மேலும் அறிவோம்…)

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-எழுவாயை-எங்கே-வைப்பது/article9123519.ece

September 19, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: கொன்ற யானையா, கொல்லப்பட்ட யானையா?

 
elephant_3023779f.jpg
 
 
 

எழுவாயை ஒரு வாக்கியத்தில் எங்கே அமைப்பது என்பது பற்றிக் கடந்த வாரம் பேசினோம். ‘இறந்துபோன சங்கரனின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்னும் வாக்கியத்தில் இறந்தது யார் என்னும் குழப்பத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதற்குப் பலரும் பதிலளித்திருக்கிறார்கள்.

1. இறந்துபோன சங்கரன், தனது தாயாரோடு திருவல்லிக் கேணியில் வசித்துவந்தார்.

2. சங்கரனின் இறந்துபோன தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்.

ஆகிய இரு வாக்கியங்களை பாலசுப்பிரமணியன் தேவராஜ் என்னும் வாசகர் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு வாக்கியங்களிலும் யார் இறந்தது என்பது தெளிவாக இருக்கிறது. முதல் வாக்கியத்தில் ‘தனது தாயாரோடு’ என்ற சொற்கள் மூல வாக்கியத்தில் இல்லாத ஒரு தகவலைச் சொல்கின்றன. மூல வாக்கியத்தில் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்ததாகத் தெளிவாகவே சொல்கிறது. சங்கரன் தங்கியிருந்த இடம்பற்றிய தகவல் அதில் இல்லை. இந்தத் தகவலைச் சேர்க்காமலேயே இறந்தது யார் என்பதை ஒரே வாக்கியத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

“சங்கரன் இறந்துவிட்டதாகத் தெரிவிக்க வேண்டுமாயின், ‘இறந்துபோன சங்கரன், தனது தாயாருடன் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று கூறலாம். சங்கரனின் தாயார் இறந்துவிட்டதைத் தெரிவிக்க, ‘இறந்துபோன தனது தாயாருடன் சங்கரன் அவரது இறுதிக்காலம்வரை திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று கூறலாம் என வீ.சக்திவேல் (தே.கல்லுப் பட்டி) எழுதியிருக்கிறார். இந்த வாக்கியங்களிலும் ‘தனது தாயாருடன்’ என்றும் ‘தனது தாயாருடன் அவரது இறுதிக் காலம்வரை’என்றும் புதிய தகவல்கள் சேருகின்றன.

“சங்கரனின் இறந்துபோன தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார் என்று மாற்றலாம். தொல்காப்பியமும் புலிகொல் யானை என்ற தொடரைச் சுட்டும். இது புலியால் கொல்லப்பட்ட யானையா அல்லது புலியைக் கொன்ற யானையா என்ற மயக்கத்தைத் தருகிறது. இதற்குத் தடுமாறு தொழிற்பெயர் என்று பெயர்” என முனைவர் அ.ஜெயக்குமார் சொல்வது இந்தச் சிக்கலை ஒருவாறு தீர்த்துவைக்கிறது. இறந்துபோனது சங்கரன் என்றால், இந்த வாக்கியம் எப்படி அமையும் என்னும் கேள்வி இன்னமும் எஞ்சியிருக்கிறது. ‘இறந்துபோன சங்கரன் என்பவரின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கலாம்.

தங்கள் மேலான கருத்துக்களின் மூலம் இந்த விவாதத்தைச் செழுமைப்படுத்திய அனைவருக்கும் நன்றி. நாம் வாக்கியங்களை அமைக்கும் விதம் குறித்த பரிசீலனையை நமக்குள் ஏற்படுத்துவதுதான் இதுபோன்ற சவால்களின் நோக்கம். ஒரே வாக்கியத்தில்தான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. சொல்லவரும் பொருள் / தகவல் குழப்பமின்றி, பிழையின்றிச் சொல்லப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். எழுவாயை அமைக்கும் இடத்தை இந்தக் கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்தாலே பெரும்பாலான வாக்கியங்கள் தெளிவாகிவிடும்.

ஒரு வாக்கியத்தை அமைக்கும்போது, அதன் எழுவாய் (Subject) என்ன செய்கிறது அல்லது என்ன ஆகிறது என்பது பற்றிய குழப்பம் நேரக் கூடாது. எனவே, எழுவாய்க்கான வினை அல்லது விளைவு அல்லது தகவலைக் கூடியவரை அந்த எழுவாய்க்குப் பக்கத்திலேயே அமைத்துவிடலாம்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-கொன்ற-யானையா-கொல்லப்பட்ட-யானையா/article9149244.ece

September 26, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: ஒருமை, பன்மை மயக்கம்

 

 
rose_3032245f.jpg
 
 
 

பேசும் மொழிக்கும் எழுதும் மொழிக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம், பேசும்போது குரலின் தொனி பொருளை விளக்கப் பயன்படும்.

எனவே, பேச்சு மொழியில் சொற்கள் குறையலாம், இடம் மாறலாம். குரலின் ஏற்ற இறக்கங்களும் அழுத்தமும் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடும். “உடம்பு எப்படி இருக்கு” என்னும் கேள்வி அச்சில் ஒன்றாகவும் பேச்சில் வெவ்வேறு விதங்களிலும் வடிவம் எடுக்கக்கூடியது என்பது நம் அனைவருக்கும் தெரியும். குரல் தரும் வாய்ப்பு எழுத்துக்கு இல்லை. எனவே, எழுதும்போது பல விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

எழுவாயை அமைக்கும் விதத்தால் ஏற்படக்கூடிய குழப்பங்களைச் சென்ற இரண்டு வாரங்களில் பார்த்தோம். இதே வாக்கியங்கள் குரல் வடிவில் வரும்போது குரலின் ஏற்ற இறக்கங்களும் அழுத்தங்களும் குழப்பத்தைத் தீர்த்துவிடும். ‘அழுக்காக இருக்கும் மாணிக்கத்தின் கடை’ என்னும் வாக்கியத்தை எழுதினால் அழுக்காக இருப்பது மாணிக்கமா, கடையா என்னும் குழப்பம் வரலாம். சொல்லும்போது குரலின் அழுத்தங்களின் மூலம் குழப்பமில்லாமல் சொல்லிவிடலாம். எழுதும்போதுதான் சிக்கல். எனவே, எழுதும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதேபோன்ற குழப்பம் ஒருமை, பன்மை விஷயத்திலும் ஏற்படும். ‘சண்முகமும் மைக்கேலும் பாடினார்கள்’, ‘கிளை ஆடியது’, ‘மரங்கள் முறிந்தன’ என்னும் வாக்கியங்களில் ஒருமை பன்மை குழப்பம் இருக்காது. ‘மரத்தில் இலைகள் குறைவாக இருந்தன’ என்னும் வாக்கியத்தில் சிலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது. மரம், இலைகள் என இரண்டு பெயர்ச் சொற்கள் ஒருமையிலும் பன்மையிலும் இருப்பதால் வரும் குழப்பம் இது. எது எழுவாய் என்று பாருங்கள். குறைவு என்பது இலைகள் என்னும் பன்மைச் சொல்லுக்கான விவரணை. எனவே, இலைகள் எழுவாய். இலைகள் பன்மை என்பதால் பன்மைக்கான சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

‘ஆடுகள் மரத்துக்குக் கீழே இருக்கும் கல்லை மிதித்துச் சென்றது’ என்னும் வாக்கியத்தில் பிழை உள்ளது. ஆடுகள்தான் இங்கே எழுவாய். ஆடுகள் பன்மை. எனவே, சென்றன என்பதே சரி. ‘மரத்துக்குக் கீழே இருக்கும் கல்லை ஆடுகள் மிதித்துச் சென்றது’ என்று எழுதினால் இந்தப் பிழை சட்டென்று கவனத்துக்கு வந்துவிடும். எழுவாயையும் அதன் வினையையும் கூடியவரை அருகருகே வைப்பதால் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

‘பாடத்திட்டம் நான்கு பாடங்களாகக் குறைக்கப்பட்டன’ என்று ஒரு வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. இங்கே பாடத்திட்டம்தான் எழுவாய். அது ஒருமை. எனவே குறைக்கப்பட்டது என ஒருமையைப் பயன்படுத்துவதே சரி.

‘பாடத்திட்டத்தில் நான்கு பாடங்கள்’ என்று எழுதினால் ‘குறைக்கப்பட்டன’ எனப் பன்மையைப் பயன்படுத்தலாம். ஏனென்றால் இங்கே எழுவாய் மாறிவிடுகிறது.

வினைச்சொல்லில் ஒருமையை அல்லது பன்மையைப் பயன்படுத்துவது எழுவாயைப் பொறுத்தது. எழுவாய் எது என்பதை அடையாளம் கண்டுகொண்டால் இந்தக் குழப்பம் வரவே வராது.

(மேலும் அறிவோம்)

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-ஒருமை-பன்மை-மயக்கம்/article9178646.ece

October 3, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: ஏன் இந்தக் குழப்பம்?

 

 
cartoon_001_3040435f.jpg
 
 
 

ஒருமை, பன்மை மயக்கம் பற்றிய குறிப்புகளைப் படித்த நண்பர் ஒருவர் இதைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்று கேட்டார். ஒருமைக்கும் பன்மைக்கும் வித்தியாசம் தெரியாமல்போய்விடுமா என்பது அவருடைய வாதம்.

உண்மைதான். ஆனால், குழப்பம் ஏற்படத்தானே செய்கிறது. ‘இருள் வெளியில் ஒளியாகப் படிகிறது அவரது சிந்தனைகள்’ எனும் வாக்கியத்தில் சிந்தனைகள் என்பது பன்மை; எனவே, ‘படிகின்றன’ என்றுதான் எழுத வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியானானால் ஏன் இந்தத் தவறு நேர்கிறது?

‘அவனிடம் சந்தேகங்கள் இருக்கிறது’ என்று எழுதினால் எழுதும்போதே தவறு என்று தெரிந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம், சந்தேகங்கள் என்ற சொல்லுக்குப் பக்கத்திலேயே அதற்கான பயனிலைச் சொல் வந்துவிடுகிறது. ஆனால், முதலில் சொன்ன வாக்கியத்தில் பயனிலை முதலிலும் எழுவாய் பின்னாலும் அமைக்கப்பட்டுள்ளன. படிகிறது என்று எழுதிய பிறகு சிந்தனைகள் என்று எழுதும்போது, ‘படிகின்றன சிந்தனைகள்’என்றுதானே எழுத வேண்டும் என்று தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவு. காரணம், வாக்கியத்தைத் தலைகீழாக மீளாய்வு செய்யும் பழக்கம் நமக்கு இல்லை. எழுதும் வேகத்தில் இதைத் தாண்டி வந்துவிடுகிறோம்.

எழுவாய்க்குப் பிறகு பயனிலை என்னும் வரிசையைக் கூடியவரையில் கடைப்பிடித்தால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். சிந்தனைகள் என்று முதலில் எழுதிவிட்டால் படிகின்றன என்னும் பன்மை தானாகவே வந்துவிடும். ஆனால், எல்லாச் சமயங்களிலும் இப்படி எழுத முடியாது. சில சமயம் எழுவாயைக் கடைசியில் அமைக்கும்போது, வாக்கியத்துக்குக் கூடுதல் அழுத்தமோ வலுவான முத்தாய்ப்போ கிடைக்கும். ‘பிரச்சினை தீர்ந்தது’ என்பதைக் காட்டிலும் ‘தீர்ந்தது பிரச்சினை’ என்று எழுதும்போது தொனி மாறத்தான் செய்கிறது. ‘கிளம்பிற்று படை’ என்று சொல்லும்போது கிடைக்கும் உணர்வு ‘படை கிளம்பிற்று’ என்று சொல்லும்போது இல்லை. பொதுவாக, கவிதைகளில் இத்தகைய வாக்கியங்களைப் பார்க்கலாம். உரைநடையில் கூடியவரை இதைத் தவிப்பது நல்லது. எப்போதுமே இப்படி எழுதிக்கொண்டிருந்தால் இந்தப் பாணி தன் தாக்கத்தை இழந்து, சலிப்பூட்டத் தொடங்கிவிடும். அரிதாகப் பயன்படுத்தும்போதுதான் இதற்கான மதிப்பு இருக்கும்.

ஒரு வாக்கியத்தில் எழுவாயை எங்கே அமைப்பது, ஒரு தகவலை எப்படிக் குழப்பமில்லாமல் சொல்வது என்பது பற்றிய குறிப்புக்குச் சுவையான எதிர்வினைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்: ‘முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது’ என்ற வாக்கியத்தை உதவி ஆசிரியர் ஒருவர் எழுதியிருந்தார். இதில் உள்ள விபரீதத்தை விளக்கி, ‘இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது’ என்று மாற்றி எழுதச் சொன்னதாக அவர் கூறினார். வாக்கியத்தை முறையாக அமைக்க வேண்டியதன் அவசியத்தை இதைவிடவும் தெளிவாக விளக்க முடியாது என்றே தோன்றுகிறது.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-ஏன்-இந்தக்-குழப்பம்/article9206416.ece

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: குழப்பங்கள் உருவாவது எப்படி?

 

 
arivom_3047827f.jpg
 
 
 

வாக்கியக் குழப்பங்கள் பலவிதமாக இருந்தாலும், அவற்றின் மூல வேர் வாக்கியத்தை அமைக்கும் விதத்தில் இருக்கிறது. ‘மரங்களை அரசு உத்தரவின் பேரில் சாலைகள் அமைப்பதற்காகப் பொதுப்பணித் துறை ஊழியர்களால் வெட்டப் பட்டன’ என்ற வாக்கியத்தைப் பாருங்கள். ‘மரங்கள்’ என்று இருந்திருக்க வேண்டும். அல்லது, ‘ஊழியர்கள் வெட்டினார்கள்’ என்று இருந்திருக்க வேண்டும்.

ஓரளவு தமிழ் அறிந்தவர்களுக்குக்கூட இதுபோன்ற விஷயங்கள் தெரியும். ஆனால், இதுபோன்ற பல தவறுகள் ஊடகங்களிலும் நூல்களிலும் வரத்தான் செய்கின்றன. இவற்றை எழுதுபவர்கள் தமிழ் அறியாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படியானால், இதுபோன்ற தவறுகள் ஏன் வருகின்றன?

மேலே உள்ள வாக்கியத்தை இப்படி மாற்றிப் பாருங்கள்: ‘அரசு உத்தரவின் பேரில் சாலைகள் அமைப்பதற்காகப் பொதுப் பணித் துறை ஊழியர்களால் மரங்களை வெட்டப்பட்டன’ - இந்த வாக்கியத்தில் தவறு சட்டென்று தெரிந்துவிடுகிறது அல்லவா? எனவே, உடனடியாக ‘மரங்கள் வெட்டப்பட்டன’ என்று திருத்தப்பட்டுவிடும்.

பிரச்சினை எங்கே இருக்கிறது? அதாவது, தவறு நிகழ்வதற்கும் அந்தத் தவறு கண்ணில் படாமல் போவதற்குமான காரணம் என்ன?

நீண்ட வாக்கியம் என்பது ஒரு பிரச்சினை. ‘மரங்கள் வெட்டப்பட்டன’ என்றோ ‘மரங்களை வெட்டினார்கள்’ என்றோ எழுதும்போது செய்வினை, செயப்பாட்டு வினை குழப்பம் வருவதில்லை. வாக்கியத்தின் நீளம் கூடக்கூட அதில் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் கூடிவிடுகிறது. இயல்பாகக் கண்ணில் படும் தவறுகள் நீண்ட வாக்கியங்களில் கண்ணில் படாமல்போகலாம். எனவே, கூடியவரையில் நீண்ட வாக்கியங்களைத் தவிர்க்கலாம் அல்லது நீண்ட வாக்கியங்களை எழுதும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்த பிரச்சினை, நாம் தொடர்ந்து விவாதித்துவரும் எழுவாய் தொடர்பானது. ஒரு வாக்கியத்தை எழுவாயிலிருந்து தொடங்குவதில் தவறு இல்லை. ஆனால், அதன் பயனிலைச் சொல்லுக்கு முன்பு ஏகப்பட்ட விவரங்களை அந்த வாக்கியத்தில் தரும்போது எழுவாயும் பயனிலையும் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகின்றன. எனவே, எழுவாயைப் பொறுத்து அமையக்கூடிய ஒருமை, பன்மை, செய்வினை, செயப்பாட்டு வினை முதலான அம்சங்கள் சட்டென்று கவனத்துக்கு வருவதில்லை.

மேற்படி வாக்கியத்தில் மரங்கள் என்னும் எழுவாயையும் வெட்டப்படுதல் / வெட்டுதல் என்னும் வினைச் சொல்லையும் அருகருகே அமைக்கும்போது தவறு நேர்வதற்கான வாய்ப்பு குறைந்துவிடுவதைக் காணலாம். அப்படியே தவறு நேர்ந்தாலும் அது உடனே நம் கண்ணில் பட்டுவிடுகிறது.

எழுவாய், பயனிலையின் வரிசையை மாற்றுவதாலும் பிரச்சினை வருவதைச் சென்ற வாரம் பார்த்தோம். ‘சொல்கிறது தகவல்கள்’ என்று ஒரு வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. தகவல்கள் என்னும் சொல்லை முதலில் அமைத்திருந்தால் சொல்கின்றன என்னும் பன்மைச் சொல் இயல்பாகவே வந்து விழுந்திருக்கும். எழுவாய்க்குப் பிறகு பயனிலை என்று அமைத்துக்கொண்டால் காலம், ஒருமை - பன்மை, செய்வினை - செயப்பாட்டு வினை ஆகியவை இயல்பாகவே சரியாக அமைந்துவிடும். மாற்றித்தான் அமைக்க வேண்டும் என்று விரும்பினால், கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-குழப்பங்கள்-உருவாவது-எப்படி/article9228947.ece

October 17, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: மற்றும் ஒரு பிரச்சினை...

 

cartoon_3056339f.jpg
 
 
 

ஒருமை - பன்மை என்பதையும் செய்வினை - செயப்பாட்டுவினை என்பதையும் சேர்த்துப் புரிந்துகொள்வதும் தவறு இல்லாமல் எழுத உதவும். ‘இப்படிப்பட்ட யோசனையும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன’ என்ற வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. யோசனை, ஆய்வாளர்கள் என ஒருமையும் பன்மையுமான பெயர்ச் சொற்கள் அருகருகே வந்ததால் ஏற்பட்ட குழப்பம் இது. ஒரு வாக்கியத்தில் எத்தனை பெயர்ச் சொற்கள் வந்தாலும், எது எழுவாய் என்பதில் தெளிவு இருந்தால் இந்தக் குழப்பம் வராது.

இதே வாக்கியத்தைச் சற்றே மாற்றிப் பார்க்கலாம். ‘‘இப்படிப்பட்ட யோசனையை ஆய்வாளர்கள் முன்வைக் கிறார்கள்.’ செயப்பாட்டு வினை செய்வினையாக மாறியதும் எழுவாயும் மாறிவிட்டது. யோசனை என்பது ஒருமை. அது எழுவாயாக இருந்தால் பயனிலையும் ஒருமையாக இருக்க வேண்டும். ஆய்வாளர்கள் என்னும் பன்மைச் சொல் எழுவாயாக இருந்தால், அதன் பயனிலைச் சொல் பன்மையாக இருக்க வேண்டும். செய்வினையிலும் செயப்பாட்டுவினை யிலும் நிகழும் மாற்றம் எழுவாயை மாற்றிவிடுவதை கவனித்து வாக்கியத்தை முழுமைப்படுத்த வேண்டும். தமிழில் எழுதும்போது தேவையில்லாமல் ஒட்டிக்கொள்ளும் சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். ‘ஒரு’ என்னும் சொல்லும் ‘மற்றும்’ என்னும் சொல்லும் பல இடங்களில் தேவையில்லாமல் பயன்படுத்தப்படுகின்றன. ‘ஒரு வயதான பெரியவர்’ என்னும் வாக்கியத்தைப் பாருங்கள். ‘ஒரு’வயதானவர் எப்படிப் பெரியவராக இருக்க முடியும்? ‘வயதான ஒரு பெரியவர்’ என்று மாற்றி எழுதலாம் என்று சட்டென்று தோன்றக்கூடும். ஆனால், முதியவர் அல்லது வயதானவர் என்னும் சொல் நாம் சொல்லவருவதைத் தெளிவாகச் சொல்லிவிடும். இந்நிலையில் ‘ஒரு வயதான பெரியவர்’ என்பது எதற்கு?

‘ஒரு அழகான பெண்’, ‘ஒரு பெரிய மரம்’. ‘ஒரு பத்தாம்பசலித்தனமான நடவடிக்கை’ என்றெல்லாம் பல வாக்கியங்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். ஒரு அழகு என்பது பொருளற்ற தொடர். அழகை ஒன்று, இரண்டு என்று எண்ண முடியாது. ‘அழகான ஒரு பெண்’ என்று சொல்லலாம். சரியாகச் சொல்லப்போனால், ‘ஒரு’ இல்லாமலேயே எழுதலாம். ‘பெரிய மரம்’, ‘அழகான பெண்’ என்றெல்லாம் சொல்லும்போது, அது தமிழுக்கு இயல்பாக இருக்கிறது. எத்தனை பெண்கள், எத்தனை மரங்கள் என்னும் குழப்பம் இந்த வாக்கியங்களில் வருவதும் இல்லை.

ஆங்கிலத்தில் Articles எனச் சொல்லப்படும் A, An, The ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஒவ்வொரு பெயர்ச் சொல்லுக்கு முன்பும் பயன்படுத்தப்பட வேண்டும். பெயர்ச் சொல்லுக்கு முன்பு அழகிய, பெரிய, பழைய என்பன போன்ற பண்புத் தொகைகள் இருந்தால் அவற்றுக்கு முன்பும் A / An / The பயன்படுத்த வேண்டும். A beautiful tree, an old man, the narrative style என்பது போன்ற வாக்கியங்கள் ஆங்கிலத்தில் மிகவும் இயல்பானவை. ஆங்கில இலக்கணத்தை அடியொற்றியவை. ஆனால், இந்தத் தாக்கத்தில் தமிழிலும் எங்கு பார்த்தாலும் ‘ஒரு’ சேர்ப்பது தேவையற்றது. இந்தப் போக்கை மொழிபெயர்ப்புகளில் அதிகம் பார்க்கலாம். ஒன்று என்னும் பொருள் கட்டாயம் தேவைப்படும் இடம் தவிர, பிற இடங்களில் ‘ஒரு’ என்பதைத் தவிர்ப்பது இயல்பான தமிழாக இருக்கும். இதே போன்ற இன்னொரு சொல் ‘மற்றும்’. இதை அடுத்த வாரம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-மற்றும்-ஒரு-பிரச்சினை/article9260865.ece

October 24, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: இதுவும் அதுவும் மற்றும் முதலான ஆகியவையும்

 
 
arivom_3047827f.jpg
 
 
 

ஒரு என்னும் சொல்லைப் போலவே மற்றும் என்னும் சொல்லும் தமிழில் பெரும்பாலும் தேவையில்லாமல் ஒட்டிக்கொள்கிறது. ஆங்கிலத்தின் and என்னும் சொல்லின் மொழிபெயர்ப் பாகவே இது மிகுதியும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

அமைச்சரும் அதிகாரிகளும் விரைந்தார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விரைந்தார்கள் என எழுதுவது தமிழின் இயல்புக்கு அன்னியமாக இருப்பதை உணரலாம். Ministers and officers என எழுதுவது ஆங்கில வழக்கு. தமிழில் உம்மைத் தொகை போட்டு எழுதுவதன் மூலம் இதை இயல்பாகச் சொல்லிவிடலாம்.

இரண்டுக்கு மேல் இருந்தால் உம்மைத் தொகை போட்டு எழுதுவது ஆயாசத்தைத் தரக்கூடும். ராமனும் முத்துவும் மங்கையும் சபீதாவும் ராஜாவும் என்று ‘உம்’ போட்டுப் பெரிய பட்டியலை அடுக்குவது சரளமான வாசிப்புக்கு உதவாது. இப்படிப் பட்டியல் போடும்போது கடைசிக் கூறுக்கு முன்னால் and சேர்ப்பது ஆங்கில மரபு. இதைப் பலரும் தமிழில் அப்படியே பயன்படுத்துகிறார்கள். ‘புத்தகம், துணிமணிகள், காய்கறிகள், அரிசி மூட்டை மற்றும் மேசை’ என்று எழுதுவது ஆங்கில மரபை அடியொற்றிய வழக்கம். ‘புத்தகம், துணிமணிகள், காய்கறிகள், அரிசி மூட்டை, மேசை ஆகியவை’ என்று எழுதுவது தமிழ் மரபை அடியொற்றிய வழக்கம்.

ஒரு பட்டியல் முடிந்துவிட்டால் ஆகியவை என்றும் பட்டியல் முடியவில்லை என்றால் போன்றவை அல்லது முதலானவை என்றும் போடலாம். இரண்டு சமயங்களிலும் மற்றும் என்னும் சொல் இல்லாமலேயே சொல்லவரும் பொருளைத் தெளிவாகச் சொல்லிவிடலாம்.

மொழிகளுக்கிடையில் பல விதமான பரிமாற்றங்களும் நடக்கத்தான் வேண்டும். ஆனால், பிற மொழியிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் வரும் சொல்லோ, வழக்கோ, நடைமுறையோ மொழிக்கு ஏதேனும் ஒரு வகையில் வளம் சேர்க்க வேண்டும். அதன் திறனைக் கூட்ட வேண்டும். மற்றும் என்பது எந்த வகையில் தமிழின் வளத்தையோ திறனையோ கூட்டுகிறது?

சிலர் பட்டியலிடும்போது ‘மரம், செடி, கொடி, பூச்சி மற்றும் பறவை ஆகியவை’ என்று மற்றும், ஆகியவை என இரண்டையும் பயன்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் மற்றும் தேவையில்லை. அப்படி அது வரத்தான் வேண்டும் என்று நினைத்தால் ஆகியவை என்பதை நீக்கிவிடலாம். இரண்டில் ஒன்று இருந்தாலே நாம் சொல்லவரும் பொருள் தெளிவாகச் சொல்லப்படுகிறது. அந்த இரண்டில் ஆகியவை என்பதே தமிழ்ப் பண்புக்கு நெருக்கமானது.

தவிர்க்க முடியாத இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஒரு, மற்றும் போன்ற சொற்களைத் தவிர்ப்பதே இயல்பான தமிழுக்குப் பொருத்தமாக இருக்கும்.

ஆங்கிலத்தோடு ஒப்பிடும்போது தமிழில் சிக்கனமாக விஷயங்களைச் சொல்ல முடியவில்லை என்று பலரும் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். உண்மையில் தமிழில் பல விஷயங்களைச் சிக்கனமாகச் சொல்லிவிட முடியும். தமிழின் அமைப்பு சிக்கனத்துக்கு உதவத்தான் செய்கிறது. இதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(மேலும் அறிவோம்…)

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-இதுவும்-அதுவும்-மற்றும்-முதலான-ஆகியவையும்/article9287480.ece

October 31, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: ஒரு சொல்லில் பல செய்திகள்

 

arivom_3047827f.jpg
 
 
 

சென்ற பத்தியில் ‘மற்றும்’ என்னும் சொல் பற்றி எழுதும்போது ‘அமைச்சரும் அதிகாரிகளும்’, ‘ராமனும் முத்துவும் மங்கையும் சபீதாவும் ராஜாவும்’ ஆகிய உதாரணங்களை உம்மைத் தொகை எனக் குறிப்பிட்டிருந்தேன். இவை எண்ணும்மை என்று பேராசிரியர் பா.மதிவாணன் சுட்டிக்காட்டுகிறார். ‘உம்’ என்பது வெளிப்படையாக வந்தால் எண்ணும்மை. வெளிப்படையாக வராமல் (புத்தகங்கள், மேசைகள், எழுதுபொருட்கள்…; பூரி கிழங்கு, இட்லி சட்னி) இருந்தால் ‘உம்மைத் தொகை’(தொக்கி நிற்பது) என்று அவர் தெளிவுபடுத்தினார். அவருக்கு நன்றி.

‘ஆகியவை, போன்றவை என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு உண்டு’ என்று அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த சா.க.மூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.

‘ ‘‘ஆகியவை’ என்பது குறிப்பிட்டுச் சொன்ன பொருட்களை மட்டுமே குறிப்பிடும். உதாரணம்: ‘வெண்டைக்காய், கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றைக் கொடு’. ‘போன்ற’ என்பது குறிப்பிடப்பட்ட காய்கள் இல்லாவிடில், அதுபோன்ற வேறு காய்களைக் கொடு என்பதாகும். இரண்டுக்கும் நுணுக்கமான, சிறிய வேறுபாடு உள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மொழியின் பயன்பாட்டில் சிறிய அம்சங்களும் மிகவும் முக்கியமானவை. மொழியின் நுட்பங்களை அறியவும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தவும் இதுபோன்ற தகவல்கள் பெரிதும் துணைபுரியும். ‘போன்றவை’, ‘ஆகியவை’ ஆகிய சொற்களுக்கிடையேயான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய மூர்த்திக்கு நன்றி.

தமிழில் பல விஷயங்களைச் சிக்கனமாகச் சொல்லிவிட முடியும் என்று போன வாரம் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். விஷயம் ‘சிக்கன’த்தைப் பற்றியது என்றாலும், பல்வேறு உதாரணங்களுடன் ‘விரிவா’கப் பேச வேண்டும். இதை இங்கே சற்று ஊன்றிப் பார்ப்போம்.

‘வந்தான்’ என்னும் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். இது கடந்த காலம் என்பது தெளிவாகிறது. வந்தவர் ஒருவர்தான் என்றும், அவர் ஆண் என்பதும் தெரிகிறது. ஒரே ஒரு சொல் எத்தனை தகவல்களைத் தெரிவிக்கிறது என்று பாருங்கள். அதுபோலவே தந்தேன், வருகிறாய், நடக்கின்றன என்று பல சொற்கள் தம்முள் ஒன்றுக்கும் மேற்பட்ட செய்திகளைப் புதைத்துவைத்திருக்கின்றன. எழுவாயே இல்லாமல் இந்தச் சொற்கள் குழப்பமில்லாமல் பொருள் தருகின்றன. தமிழில் தோன்றா எழுவாய் எனப்படும் வசதி இதைச் சாத்தியமாக்குகிறது.

இப்படிப் பல வசதிகள் தமிழில் உள்ளன. ஆனால், தமிழில் எழுதும் பலர் தமிழில் சிக்கனமாக எழுத முடியவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறார்கள். குறிப்பாக, ஆங்கிலத்துடன் ஒப்பிட்டு இதைச் சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் தோன்றா எழுவாய் இல்லை. அதில் எழுவாயைக் குறிப்பிட்டுவிட்டு, அது தொடர்பான பல்வேறு சங்கதிகளையும் அடுத்தடுத்து அடுக்கிக்கொண்டே போகும் வசதி இருக்கிறது. இடையில் வேறொரு பெயர்ச்சொல் வரும்போது, அந்தப் பெயர்ச்சொல் குறித்தும் சில செய்திகளை அதே வாக்கியத்தில் அமைப்பதுண்டு. இப்படி சங்கிலித் தொடர் போன்ற ஆங்கில வாக்கிய அமைப்பைக் கண்டு பிரமிப்பவர்களில் சிலர் தமிழில் இப்படி இல்லையே என்று நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பம்சங்கள் உண்டு, பலவீனங்களும்தான். நமது மொழியில் இருக்கும் சிறப்பம்சங்களை அறிந்துகொண்டு, அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் அதன் திறனை அதிகரிக்க முடியும். சிக்கனத்தில் தமிழின் திறனை மேலும் சில உதாரணங்களுடன் பார்ப்போம்.

(மேலும் அறிவோம்…)

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-ஒரு-சொல்லில்-பல-செய்திகள்/article9369794.ece?ref=relatedNews

November 21, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை.. - ஊளைச் சதையைத் தவிர்ப்பது எப்படி?

 

earivom_3047827f.jpg
 
 
 
 
 

தமிழில் சுருக்கமாக எழுத முடியவில்லை என்று சொல்பவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்துடன் ஒப்பிட்டே அப்படிச் சொல்கிறார்கள். ஆங்கிலத்தின் தாக்கத்தில் தமிழ் எழுதுபவர்கள், அதனாலேயே பல நேரங்களில் தமிழ்ச் சொற்களைத் தவிர்க்கத் தலைப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் ஊறிய மனம், தமிழ்ச் சொற்களை மறக்கடித்துவிடுகிறது. அல்லது, ஆங்கிலச் சொற்களை / தொடர்களை மேலானவையாக நினைக்கவைக்கிறது.

இத்தகைய மனப்போக்குதான் தமிழில் சிக்கனம் இல்லை என்று சொல்கிறது. ஓரளவு தமிழறிவும் தமிழைப் பிறமொழித் தாக்கமின்றி இயல்பாக அணுகிப் பயன்படுத்தும் பழக்கமும் கொண்டவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை. செய்தித்தாள்களில் வரும் கட்டுரைகள் சிலவற்றில் ஆங்கில பாதிப்புள்ள தமிழை அதிகம் காணலாம். ஆனால், படைப்புகளில் அல்லது படைப்பாளிகளின் மொழியில் இதை அதிகம் காண முடியாது. ஏனென்றால், படைப்பு மனம் மொழியின் ஆழமான கூறுகளுடன் இயல்பாகவும் வலுவாகவும் தொடர்புகொண்டது.

அதுபோலவே, ஆங்கிலத் தாக்கம் அதிகமற்ற மக்களின் மொழியிலும் சிக்கனம் இயல்பாக இருப்பதைக் காணலாம். பழமொழிகளும் சொலவடைகளும் இதற்கு உதாரணம். 'அவனை முதுகுல தடவினா, வவுத்துல இருக்கறதக் கக்கிடுவான்' என்றொரு சொலவடை. 'காலில் சக்கரத்தக் கட்டிக்கிட்டு ஓடுறான்' என்று இன்னொரு சொலவடை. இவை இரண்டும் உணர்த்தும் பொருள்களை இந்தச் சொலவடைகளின் துணையின்றிச் சொல்ல முயன்றால், இரண்டு மூன்று வாக்கியங்கள் தேவைப்படும். தமிழின் இயல்பான பயன்பாட்டில் சிக்கனம் இருக்கிறது. இயல்பை விட்டு விலகும்போதுதான் ஊளைச் சதைபோட்டு எழுத்து வீங்கிவிடுகிறது.

இரண்டு மொழிகளை ஒப்பிட்டு ஒன்று சிறந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்று சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை. ஆங்கிலத்தை அளவீடாகக் கொண்டு தமிழின் சிக்கனம் பற்றிப் பெரும்பாலும் பேசப்படுவதால், ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழில் உறவுமுறைகளைக் குறிக்கும் பெயர்களுக்குப் பஞ்சமே இல்லை. மிகவும் அடிப்படையான அண்ணன், தங்கை, அக்கா, தம்பி ஆகிய சொற்கள் தமிழின் சிக்கனத்தைப் பறைசாற்றுபவை. ஆங்கிலத்தைப் போல elder brother, younger sister என்றெல்லாம் இரண்டிரண்டு சொற்களைப் போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், தமிழிலும் சிலர் இப்போதெல்லாம் மூத்த சகோதரி, இளைய சகோதரன் என்று எழுதிப் படிப்பவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துகிறார்கள். 'செம ஷார்ப் ரெஸ்பான்ஸ்' என்றுகூட இப்போதெல்லாம் துணுக்குகளில் எழுதுகிறார்கள். கூர்மை என்ற சொல்லையே மறக்கடிக்கும் மொண்ணையான அணுகுமுறைகள்தான் தமிழுக்கு இன்று முக்கியமான எதிரிகள்.

அதுபோலவே மைத்துனன், மாப்பிள்ளை, மைத்துனி, மாமனார், மாமியார் போன்று தமிழில் ஒற்றைச் சொல்லாகப் புழங்கும் உறவுமுறைச் சொற்கள், ஆங்கிலத்தில் இரண்டு அல்லது மூன்று சொற்களாகப் புழங்கிவருகின்றன (brother-in-law).

பல சொற்களை ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் சிந்திக்கும்போதுதான் சிக்கல் வருகிறது. ஒரு சொல்லை எப்படிச் சொல்வது என்னும் நெருக்கடி ஏற்படும்போது, ஆங்கிலமே தெரியாத ஒரு தமிழர் இதை எப்படிச் சொல்லுவார் என்று யோசித்துப் பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-ஊளைச்-சதையைத்-தவிர்ப்பது-எப்படி/article9393863.ece?ref=relatedNews

November 28, 2016

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை... - பிரச்சினை எங்கே இருக்கிறது?

 
arivom_3047827f.jpg
 
 
 

ஆங்கிலத்தில் கலைச் சொற்களைத் தமிழில் பெயர்க்கும்போது ஒரே சொல்லாகக் கொண்டுவர முடியவில்லை என்னும் ஆதங்கம் நியாயமானது. கலைச் சொற்களும் துறைசார் சொற்களும் (globalisation, demonetisation, faculty, fellowship…) ஒரு மொழியில் இயல்பாக உருவாகும்போது, அம்மொழிக்கே உரிய தன்மையுடன் சிக்கனமாக உருவாகும். கலை / துறைசார் சொற்கள் பலவற்றுக்கு, நேரடிப் பொருள்கொள்ள இயலாது என்னும் நிலையில், அவை சுட்டும் பொருளை மொழிபெயர்க்க வேண்டும் என்பதால் சிக்கல் வரத்தான் செய்யும்.

அதே சிக்கல், தமிழிலிருந்து ஆங்கிலம் முதலான மொழிகளுக்குச் செல்லும்போதும் வரும். பரிசம்போடுதல், வெற்றிலை பாக்கு வைத்தல், களவொழுக்கம், மூக்கில் வியர்த்தல், சொறிந்து கொடுத்தல் முதலானவற்றை ஆங்கிலத்தில் பெயர்க்கும்போது, இதுபோன்ற சிக்கல் வரத்தான் செய்யும். எனவே, மொழிபெயர்ப்புச் சிக்கல்களை, அதிலும் கலை / துறைசார் சொற்களின் மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தமிழ் மொழிக்கே உள்ள சிக்கல்போலப் பேசுவது பிழையானது. (மொழிபெயர்ப்புச் சிக்கல்களைப் பற்றி இந்தப் பத்தியில் தனியாக அணுகவிருக்கிறேன்.)

படைப்பூக்கமும் மொழி ஆளுமையும் உள்ளவர்களிடத்தில் சிக்கனம் அவர்களுடைய இயல்பாகவே இருப்பதைக் காணலாம். ஒரு பின்னணியை, கதையைச் சொல்லிக்கொண்டே போகும்போது அது தேவைக்கு அதிகமாக விரிந்துகொண்டுபோவதை உணரும் எழுத்தாளர், To cut a long story short என்று சொல்லி, சுருக்கமாக ஓரிரு சொற்களில் / வாக்கியங்களில் முடித்துவிடுவது உண்டு. விரித்துச் சொன்னது போதும் என உணரும்போதும் இப்படி நடக்கும். ஆங்கிலத்தில் இது இயல்பாகப் புழங்குவதைக் காணலாம். ஆங்கில வாசிப்பின் மூலம் இதை அறியும் சிலர், தமிழில், இதுபோன்ற சூழல்களில், ‘நீண்ட கதையைச் சுருக்கிச் சொல்வதானால்’என எழுதத் தலைப்படுகிறார்கள். இது தமிழ்ப் பண்புடன் ஒட்டாமல் செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கிறது அல்லவா?

இதற்கு மாற்று என்ன? புதுமைப்பித்தன் மிக எளிதாக இதை எதிர்கொண்டிருக்கிறார். ‘வளர்த்துவானேன்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த ஒற்றைச் சொல்லில் To cut a long story short என்பதன் சாரமும் தொனியும் கூர்மையாகப் பிரதிபலிப்பதைப் பாருங்கள். இந்தச் சொல் புதுமைப்பித்தனின் கண்டுபிடிப்பு அல்ல. ஆனால், இந்த இடத்தில், இப்படிப் பயன்படுத்தியது அவருடைய படைப்பாற்றல். தமிழை இயல்பாக உள்வாங்கி, இயல்பாகக் கையாளும்போது இவையெல்லாம் சாத்தியமாகும்.

ஆங்கிலமே பிறந்திராத ஒரு காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலிலிருந்தும் உதாரணம் காட்டலாம். சீதையைக் கைப் பிடிக்க ராமன் சிவன் வில்லை முறித்தது ராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்வு. ராமன் மிக வேகமாகவும் இலகுவாகவும் இதைச் செய்கிறான். கம்பன் இதை ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்கிறார். வில்லை எடுத்ததைப் பார்த்தவர்கள் பிறகு வில் முறியும் ஒலியைத்தான் கேட்டார்களாம். நடுவில் நிகழ்ந்ததை ஒருவரும் அறியவில்லை. அவ்வளவு வேகமாக அது நடந்துவிட்டது என்கிறான் கம்பன். ராமனின் வில்லாற்றலுக்குச் சவால் விடும் இந்தச் சொல்லாற்றல் தமிழின் சிக்கனத்துக்குப் பொருத்தமான சான்றல்லவா? பிரச்சினை எங்கே இருக்கிறது? மொழியிலா, அதைப் பயன்படுத்துபவர்களிடத்திலா?

(மேலும் அறிவோம்…)

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-பிரச்சினை-எங்கே-இருக்கிறது/article9410833.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அறிவோம் நம் மொழியை | நேரடிப் பொருளை நாடலாமா?

 

arivom_3047827f.jpg
 
 
 

மொழிபெயர்ப்பின்போது ஒரு மொழியின் நுட்பங்கள், அதன் வீச்சு, போதாமைகள் ஆகியவை நன்கு உணரப்படுகின்றன. காரணம், ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு உலகம். வெவ்வேறு பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலங்களைக் கொண்டவை. ஒரு மொழியில் எழுதப்படுபவற்றைப் புரிந்துகொள்வது ஒப்பீட்டளவில் எளிது. பொருளும் உட்பொருளும் தொனியும் மாறாமல் இன்னொரு மொழிக்குக் கொண்டுசெல்வது சவாலானது.

எனவே, மொழிபெயர்க்கும்போது சிக்கனம் குறித்த சிக்கல் வரத்தான்செய்யும். இந்த இடத்தில் சுருக்கத்துக்கும் சிக்கனத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். மூலத்தில் இருப்பதைச் சுருக்கமாகச் சொல்வது சிக்கனம் ஆகிவிடாது. மூலத்தில் இருப்பவற்றை ஒன்று விடாமல் தமிழில் தர வேண்டும். பொருளோ தொனியோ மாறாமல் தர வேண்டும். அதைச் சிக்கனமான மொழியில் தர வேண்டும்.

ஒரு பண்பாட்டுப் பின்புலத்தில் பிறந்த மொழியின் தொடர்கள், வாக்கிய அமைப்புகள் இன்னொரு மொழிக்கு அந்நியமாக இருக்கும் என்பதால், பல இடங்களில் நேரடியாக மொழிபெயர்த்துவிட முடியாது. தொடர்கள், வாக்கியங்களின் நேரடிப் பொருளை அல்லாமல் அவை உணர்த்தும் உட்பொருளைக் கொண்டுவர வேண்டும். இந்தச் சவாலின் முக்கியமான சில சிக்கல்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

எளிய உதாரணத்திலிருந்து தொடங்கலாம். In other words என்று ஒரு தொடரை ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்துவார்கள். ஒரு செய்தியை விரிவாகச் சொன்ன பிறகு அதைச் சுருக்கியோ, மேலும் தெளிவுபடுத்தியோ சொல்ல வேண்டியிருக்கலாம். சிக்கலானவற்றைக் கையாளும்போது இதற்கான தேவை உருவாகலாம். அப்போது In other words என்ற தொடரைப் பயன்படுத்துவார்கள். “வேறு வார்த்தைகளில் சொல்வதானால்” என்று இதைச் சிலர் மொழிபெயர்க்கிறார்கள்.

பொதுவாகவே, இதுபோன்ற தொடர்களை மொழிபெயர்க்கும்போது அவை என்ன சொல்கின்றன என்பதை அல்ல; என்ன சொல்லவருகின்றன என்பதை எழுத வேண்டும். அவ்வகையில் இந்தத் தொடரை 'அதாவது' என்னும் ஒற்றைச் சொல்லின் மூலம் உணர்த்திவிடலாம். In other words என்று வரும் இடங்களில் 'அதாவது'என்று போட்டுப் படித்துப்பாருங்கள். இது சொல்லவரும் பொருள் கச்சிதமாக வந்திருப்பதை உணரலாம். More often than not என்றொரு தொடர். இதைக் கேட்டதும், 'இல்லை என்பதைக் காட்டிலும்…' என்றெல்லாம் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டாம். அகராதியில் தெளிவாக Usually (வழக்கமாக) என்று பொருள் தரப்பட்டிருக்கிறது.

வழக்கத்துக்கு மாறாகத் தெரியும் எந்தத் தொடரையும் சட்டென்று அதன் நேர்ப்பொருளில் புரிந்துகொள்ள முயலவோ அதனடிப்படையில் மொழிபெயர்க்கவோ கூடாது. இந்த எச்சரிக்கை உணர்வு இருந்தால் அபத்தமான மொழிபெயர்ப்புகளைத் தவிர்த்துவிடலாம். உதாரணமாக, 'தலையைச் சுற்றி மூக்கைத் தொடுதல்'என்னும் தொடரை எடுத்துக்கொள்வோம். இதன் ஒவ்வொரு சொல்லையும் அதன் நேரடிப் பொருளில் மொழிபெயர்த்தால் என்ன நேரும் என்று யோசித்துப்பாருங்கள்

(மேலும் அறிவோம்)

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-நேரடிப்-பொருளை-நாடலாமா/article9447360.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

அறிவோம் நம் மொழியை: ஒலிகள் பிறக்குமிடம் கசடதபற

 

 
 
mozhi_3132114f.jpg
 
 
 

ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதும்போது சில ஒலிகளைத் தமிழில் எழுதவே முடியாது. Thanks-ல் உள்ள A ஒலியைப் போல. சில ஒலிகளை வேறு வேறு விதங்களில் எழுதலாம். Inch, Punch, Lunch முதலான சொற்களில் உள்ள N ஒலியைப் போல. இவை இன்ச், பன்ச், லன்ச் எனவும் இஞ்ச், பஞ்ச், லஞ்ச் எனவும் எழுதப்படுகின்றன.

N என்னும் சொல் வருவதால் ன் என்னும் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் எனச் சிலர் கருதுகிறார்கள். இதே தர்க்கம் Ink, Pink ஆகிய சொற்களுக்குப் பொருந்தாது. இங்கும் N உண்டு. ஆனால், அது ங் என்பதாக எழுதப்படுகிறது. N என்னும் ஒரே எழுத்து இரண்டு இடங்களில் இரண்டு விதங்களில் எழுதப்படுவதற்குப் பொருத்தமான காரணம் ஏதாவது உள்ளதா?

க, ச, ட, த, ப, ற ஆகிய வல்லின எழுத்துக்களுக்குப் பக்கத்தில் வரும் எழுத்தைக் குறித்துதான் இத்தகைய ஐயங்கள் வருகின்றன.

இந்தச் சொற்களைப் பாருங்கள்: இங்கு, பஞ்சு, கண்டு, பந்து, வம்பு, இன்று. இந்தச் சொற்களை உன்னிப்பாகக் கவனித்தால், க, ச, ட, த, ப, ற ஆகிய வல்லின எழுத்து ஒவ்வொன்றும் தனக்கு அடுத்து வரும் மெல்லின எழுத்தின் மெய்யெழுத்து வடிவத்தையே தனக்கு முன் ஏற்கிறது. வேறு மெல்லின எழுத்தை ஏற்பதில்லை (உ-ம்:பங்கு, தந்தம்). பங்து என்றோ, கம்கு என்றோ மன்சள் என்றோ வருவதில்லை. ஒரு வல்லினம் தனக்கு அருகில் இல்லாத மெல்லின எழுத்தை ஏற்று அமையும் சொல் ஏதும் இல்லை. இதன் அடிப்படையில், மஞ்சள், தஞ்சம், பஞ்சு என்பன போன்று இஞ்ச், பஞ்ச் என எழுதுவதே பொருத்தமானகத் தோன்றுகிறது.

ங் - க -, ஞ் – ச, ந் - த முதலான ���ணைகள் உருவான விதத்தையும் கவனிக்க வேண்டும். இந்த இணைகளை உச்சரித்துப் பாருங்கள். ங, க ஆகிய இரண்டும் ஒரே இடத்திலிருந்து உருவாகின்றன. அதுபோலவே ஞ - ச, ண - ட, ந - த, ம - ப, ன - ற ஆகிய இணைகளின் ஒலிகளும் ஒரே இடத்திலிருந்து உருவாகின்றன. எனவே இவை இணைந்து வருகின்றன. எனவே ன் – ச ஆகியவற்றை இணைப்பதற்குப் பதிலாக ஞ் - ச ஆகியவற்றை இணைப்பதே தமிழ் ஒலிப் பண்புக்கு இயல்பானது.

எனவே, ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய இயல்பான இணைகளை அடியொற்றி இஞ்ச், பஞ்ச் என எழுதலாம்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-ஒலிகள்-பிறக்குமிடம்-கசடதபற/article9537939.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அறிவோம் நம் மொழியை: ஆச்சரியமும் அதிர்ஷ்டமும்

 
arivom_3047827f_3136718f.jpg
 
 
 

வடமொழிச் சொற்களான சூர்யன், வீர்யம், கார்யம் ஆகியவை சூரியன், வீரியம், காரியம் எனத் தமிழ் ஒலிப் பண்புக்கேற்ப எழுதப்படு வதைப் பார்த்தோம். ப்ரகாசம் என்பது பிரகாசமாகிறது. இதே அடிப்படை யில் பிரச்ன என்பது பிரச்சினை என எழுதப்படுவதையும் பார்த்தோம்.

இதன்படியே ஆச்சர்யம் என்னும் சொல் ஆச்சரியம் என இயல்பாக மாறுகிறது. மூல மொழிக்கு அருகில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, ஆச்சர்யம் என எழுதுவது சூர்யன், ப்ரகாசம் என்றெல்லாம் எழுதுவதற்கு ஒப்பானது.

ஆனால், இதே அளவுகோல் எல்லாச் சொற்களுக்கும் பொருந்துவதில்லை. உதாரணமாக, அதிர்ஷ்டம் என்னும் சொல். அ-த்ருஷ்டம் என்பது அத்ருஷ்டம் ஆகிறது. த்ருஷ்ட என்பது த்ருஷ்டியோடு தொடர்புடைய சொல். பார்வை, காட்சி என இது பொருள்படும். எதன் காரணத்தை நம்மால் பார்க்க இயலாதோ அதுவே அ-த்ருஷ்டம் எனப்படுகிறது. அது நன்மையாக இருந்தால் அத்ருஷ்டம், தீமையாக அமைந்தால் துர்-அ-த்ருஷ்டம்.

த்ருஷ்டியைத் தமிழில் திருஷ்டி என்கிறோம். எனவே, த்ருஷ்ட என்பதை திருஷ்டம் என்று சொல்ல வேண்டும். இதன்படி, அத்ருஷ்டம் என்பதை அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தமிழில் அதிர்ஷ்டம் என்று பரவலாக வழங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளவும் பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

வடமொழிச் சொல்லான அத்ருஷ்டம் என்பதைத் தமிழில் அதிர்ஷ்டம் என்று சொல்லிப் பழகியதுதான் இதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது. பிற மொழிகளிலிருந்து வரும் சொற்கள் எழுத்து வழியாக வரும்போது, அவற்றின் மூல வடிவிலேயே வரும். பேச்சு வழியாக வரும்போது ஒலித் திரிபு ஏற்பட வாய்ப்புள்ளது. த்ருஷ்டி என்பது கிட்டத்தட்ட அதே ஒலியுடன் பேச்சுத் தமிழில் வழங்கப்படுகிறது. அத்ருஷ்டம் என்பது பெரும்பாலான தமிழர்களின் பேச்சு வழக்கில் அதிர்ஷ்டம் எனவும் அதிஸ்டம் என்பதாகவும் மாறி ஒலிக்கிறது. இதை அடியொற்றியே எழுத்து வழக்கிலும் அதிர்ஷ்டம் என்பது நிலைபெற்றிருக்க வேண்டும்.

ஆச்சர்யம், அத்ருஷ்டம் ஆகிய இரண்டு சொற்களில் முன்னது தமிழின் ஒலிப் பண்புக்கு ஏற்ப ஆச்சரியம் என ஆகிறது. அதே அளவுகோல் சற்றே நெகிழ்ந்து அதிர்ஷ்டமாக மாற்றுகிறது. அத்ருஷ்டம் என்பது பேசப்படும் விதம்தான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஆச்சர்யம் என்பதை அப்படியே எழுத இதுபோன்ற காரணம் எதுவும் இல்லை.

பிற மொழிகளிலிருந்து வரும் புதிய சொற்கள் தொடர்பாக இத்தகைய சிக்கல்கள் எழலாம். ஆனால், வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள சொற்கள் எதுவும் நமக்குப் புதிதல்ல. எனவே, அவற்றை எப்படி எழுதுவது என்பதை இன்னமும் தரப்படுத்தாமல் இருப்பதில் எந்த நியாயமும் இல்லை.

இதில் உள்ள வேறு சில நுட்பங்களை வரும் வாரத்தில் பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-ஆச்சரியமும்-அதிர்ஷ்டமும்/article9556478.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு நவீனன் .
இணைப்புகளுக்கு நன்றி :107_hand_splayed:
 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அறிவோம் நம் மொழியை: ரஜினியே சொல்லிவிட்டார்!

 

 
 
arivom_3047827f_3143397f.jpg
 
 
 

தமிழில் எழுதும் முறையில் விசித்திரமான சில தவறுகள் சமீப காலத்தில் புகுந்துள்ளன. ‘ழ’ என்னும் எழுத்தைச் சரியாக உச்சரிக்க இயலாமல் ‘ல’ என்றோ ‘ள’ என்றோ உச்சரிப்பது பலருக்கு வழக்கம். பளம், களுவு, கிளிஞ்சிது என்றெல்லாம் சொல்வதைப் பார்த்திருப்போம். ‘ழ’ மட்டுமின்றி, ‘ல’, ‘ள’ வேறுபாடுகளும் பலரிடத்தில் அழிந்துவிடுகின்றன.

மக்களிடையே புழங்கிவரும் பேச்சு வழக்கில் எத்தனையோ மாறுபட்ட வழக்குகளும் வண்ணங்களும் சில பிழைகளும் இருப்பது இயல்புதான். ஆனால், செய்தி வாசிப்பவர்கள், நிகழ்ச்சித் தொகுப் பாளர்கள் ஆகியோரிடத்திலும் உச்சரிப்புப் பிறழ்வுகள் இருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. சற்று மெனக்கெட்டால் சரிசெய்துவிடக்கூடிய குறைபாடு இது.

இந்தச் சிக்கல் இப்போது புதிய வடிவம் எடுத்துள்ளது. ‘ழ’ என்னும் எழுத்தை ‘ள’ அல்லது ‘ல’ என உச்சரித்த நிலை மாறி, ள என்று வர வேண்டிய இடங்களில் ‘ழ’ எனச் சிலர் உச்சரிக்கிறார்கள். களிப்பு என்பதைக் கழிப்பு என்றும், ஒளிந்துகொள்ளுதல் என்பதை ஒழிந்துகொள்ளுதல் என்றும் சொல்கிறார்கள். பேச்சில் மட்டுமின்றி, எழுத்திலும் இது புகுந்துவிடுகிறது. பல உதாரணங்கள் அன்றாடம் கண்ணில் தட்டுப்படுகின்றன. சமீபத்தில், மறு வெளியீடு செய்யப்பட்ட ‘பாட்ஷா’ திரைப்படத்துக்கான விளம்பரத்தில் ‘புதிய பொழிவுடன்’ என்னும் தொடர் இடம்பெற்றிருந்தது இதற்கு ஒரு சான்று.

முன்பெல்லாம் ஒரு சொல் அல்லது தொடர் சரியா, தவறா என்பதை அறிய, குறிப்பிட்ட துறையில் விவரம் அறிந்த யாரையேனும் கேட்பது அல்லது அகராதிகளைப் பார்ப்பது என்னும் பழக்கம் இருந்தது. இப்போது எதற்கும் கூகுள் தேடுபொறியை நாடுகிறோம். ஏற்கெனவே இணையத்தில் இருக்கும் தரவுகளின் அடிப்படையில்தான் கூகுள் விடைகளை அளிக்கும். ஒளிந்துகொள்ளுதல் என்பதை ஒழிந்துகொள்ளுதல் என்று பலரும் எழுதிவந்தால், இந்தத் தரவுகள்தான் அதிகம் காணப்படும். பொலிவு, பொழிவு - எது சரி என்று கூகுளைக் கேட்டால், அது ‘பாட்ஷா’ பட விளம்பரத்தைக் காட்டக்கூடும் ‘ரஜினியே சொல்லிவிட்டார்’என்று சிலர் அதையே சரி என்று நம்பவும்கூடும்.

முறையான, தரப்படுத்தப்பட்ட தமிழைக் காண்பதற்கான, நம்பகமான தரவுகள் குறைவாக இருப்பதுதான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம். ஆங்கிலத்துக்குத் தரமான, நம்பகமான அகராதிகள், சரிபார்க்கும் தரவுகள் பல உள்ளன. தமிழில் அபிதான சிந்தாமணி, தமிழ் லெக்ஸிகன், தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அகராதி, கழகத் தமிழ்க் கையகராதி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி போன்ற சில நம்பகமான நூல்கள் இதுபோன்ற ஐயங்களைத் தீர்த்துவைக்கும். இவற்றில் பெரும்பாலானவை இணையத்திலும் கிடைக்கின்றன.

தேடுபொறியில் ஒரு சொல்லை மட்டும் உள்ளிட்டால், பல விதமான தரவுகளையும் அது நம் முன் கொட்டும். எது நம்பகமானது என்பதை அது சொல்லாது. இணையத்தில் தேடும்போது, முறையான ஆதாரங்களை நாடிச் செல்ல வேண்டும். அல்லது தமிழை நன்கு அறிந்து, அதைக் கையாளும் எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பார்த்துச் சரியான பயன்பாடுகளை அறிய வேண்டும். எழுதப்பட்டு, அச்சிடப்படுவதெல்லாம் ஆதாரங்களாகிவிடாது என்பதைப் புரிந்துகொண்டு இதை அணுக வேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-ரஜினியே-சொல்லிவிட்டார்/article9582702.ece

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: கேள்விக்குறிக்கு என்ன வேலை?

 

 
 
 
arivom1_3145762f.jpg
 
 
 

இந்த வாக்கியங்களைப் பாருங்கள்:

“எனக்குக் கிடைக்குமா?” என்று அவன் கேட்டான்.

தனக்குக் கிடைக்குமா என்று அவன் கேட்டான்.

முதல் உதாரணத்தில், ஒரு பேச்சு அது வெளிவந்த வடிவில் நேரடியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இரட்டை மேற்கோள் குறிகளும் கேள்வியின் முடிவில் கேள்விக்குறியும் உள்ளன. இது நேர்க் கூற்று.

இரண்டாவது வாக்கியம் அயல் கூற்று. கேள்வியானது அதை நமக்குச் சொல்பவரின் பார்வையில் மாறி, வேறு வடிவம் எடுக்கிறது. எனக்கு என்பது தனக்கு என்று ஆவது இதனால்தான்.

“நீ வராதே” என்று அவன் என்னிடம் சொன்னான் என்பதை நாம் அயல் கூற்றாகச் சொன்னால், அவன் என்னை வராதே என்று சொன்னான் என்று சொல்வோம். நேர்க் கூற்றுக்கும் அயல் கூற்றுக்கும் உள்ள வித்தியாசம் இது.

அயல் கூற்றில் மேற்கோள் குறிகள் தேவையில்லை. அதுபோலவே கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தேவையில்லை. ஆனால், ஒரு சிலர் அயல் கூற்றிலும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக, தனக்குக் கிடைக்குமா? என்று அவன் கேட்டான் - என எழுதுவதைக் காண முடிகிறது. இது தவறு. இங்கே கேள்விக்குறி தேவையில்லை.

“எவ்வளவு பழைய கட்டிடம் இது!” என்று என் தங்கை வியந்தாள்.

இதை அயல் கூற்றில் எழுதும்போது,

எவ்வளவு பழைய கட்டிடம் அது என்று என் தங்கை வியந்தாள்.

என்று எழுதினால் போதும்.

“உனக்குப் பழச்சாறு வேண்டுமா?” என்று அம்மா என்னைக் கேட்டார்.

எனக்குப் பழச்சாறு வேண்டுமா என்று அம்மா என்னைக் கேட்டார்.

இரண்டு உதாரணங்களிலும் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனித்திருப்பீர்கள். இவை எல்லாம் ஏட்டில் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டியவை அல்ல. பேச்சில் இயல்பாகவே இப்படித்தான் அமைகின்றன. “நீயும் வர்றியா?” என்று ஒருவர் நம்மைக் கேட்டிருப்பார். அதை நாம் இன்னொருவரிடம் சொல்லும்போது, என்னையும் வர்றியான்னு கேட்டான் என்று சொல்வோம்.

முன்னிலை தன்மையாவது உரையாடலில் இயல்பாக நடக்கிறது. எனவே, பேசும் விதத்தை அடியொற்றியே தன்மை, முன்னிலை, படர்க்கை மாற்றங்களையும் அங்கு, இங்கு, அது, இது என்பன போன்ற மாற்றங்களையும் நேர் - அயல் கூற்றுகளில் நாம் எளிதாகக் கொண்டுவந்துவிடலாம்.

ஆனால், கேள்விக்குறி, மேற்கோள், ஆச்சரியக்குறி போன்றவை எழுத்துக்கே உரியவை. அயல் கூற்றில் இவற்றைத் தவிர்த்தே எழுத வேண்டும். உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான் என எழுதுவதில் பிழை இருப்பது மட்டுமல்ல, அது வாசிப்பின் சரளத்தன்மையையும் பாதிக்கிறது.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-கேள்விக்குறிக்கு-என்ன-வேலை/article9593875.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: செய்வதா, செய்துகொள்வதா?

 

 
 
 
arivom_3147776f.jpg
 
 
 

அன்றாடப் பயன்பாட்டு மொழியில் பல தவறுகள் கலந்துவிடுகின்றன. தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு, அவை நிலைபெற்றும்விடுகின்றன. புரிதல் எனும் சொல் அத்தகையது. புரிந்துகொள் என்னும் வினைச்சொல்லை அடியொற்றி சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட பெயர்ச்சொல் இது. புரிதல் என்றால் செய்தல் என்று பொருள் (உ-ம்: பணிபுரிதல், குற்றம் புரிந்தவன்…). Understanding என்பதற்கு இணையாகப் புரிந்துகொள்ளல், புரிந்துகொள்ளுதல், புரிந்துணர்வு ஆகிய சொற்கள் இருந்தும், யாரோ ஒருவர் புரிதல் என எழுதப்போக, சிறியதாகவும் எளிமையாகவும் இருப்பதால், பலரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். பரவலான பயன்பாட்டால் அது நிலைபெற்றும்விட்டது.

ஒரு சொல், ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டால், அது வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும். இப்படிப் பல சொற்களும் தொடர்களும் மாறியுள்ளன. கை கொடுத்தல் என்றால், உதவிசெய்தல் எனப் பொருள். ஆனால், சென்னை வட்டார வழக்கில் கை கொடுத்தல் என்றால் கைவிடுதல் (துரோகம் செய்தல்) என்று பொருள் உண்டு. பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ள இந்தப் பொருளை நாம் புறந்தள்ள முடியாது. ‘கை குட்த்துட்டா(ன்)’ என்று சென்னைத் தமிழில் ஒருவர் சொன்னால், அவர் துரோகத்தைப் பற்றிப் பேசுகிறார் என்றே பொருள்கொள்ள வேண்டும்.

சொற்களும் தொடர்களும் உருமாறுவது வேறு, தவறாகப் பயன்படுத்தப்படுவது வேறு. இன்றைய எழுத்துத் தமிழில் அப்படிப் பல தவறான பயன்பாடுகள் புழங்கிவருகின்றன. திருமணம் செய்தார், தற்கொலை செய்தார் (இரண்டும் அடுத்தடுத்துத் தரப்படுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை) என்றெல்லாம் எழுதுகிறார்கள். திருமணம், தற்கொலை இரண்டையும் செய்துகொண்டார் என்றுதான் எழுத வேண்டும். கொலை செய்தார் என்பது சரி. தற்கொலை செய்தார் என்பது சரியல்ல.

கொலை என்பது ஒருவர் பிறருக்குச் செய்வது. உதவி செய்தார், கெடுதல் செய்தார் என்பனபோல. திருமணமும் தற்கொலையும் ஒருவர் தனக்குத் தானே செய்துகொள்வது. சொல்லிக்கொண்டார், உறுதி எடுத்துக்கொண்டார் என்பவைபோல. எனவே, திருமணம் செய்துகொண்டார், தற்கொலை செய்துகொண்டார் என எழுதுவதே சரி.

திருமணம் செய்தார் என்று தொடர்ந்து எழுதிவந்தால், அது நிலைபெற்றுவிடும். அதன் பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படத்தானே வேண்டும் என்று வாதிடுவதில் பொருளில்லை. மாறுபட்ட பொருள் என்பது சமூகப் பின்புலம், பண்பாடு, வாழ்வியல் தேவைகள், படைப்பூக்கம் முதலான காரணிகளால் உருவாவது. “இன்றைய மாடிக்கு ஏன் இத்தனை படிகள்?” என லா.ச.ராமாமிர்தம் ஓரிடத்தில் எழுதுகிறார்.

அது என்ன இன்றைய மாடி என்று கேட்க முடியாது. இன்றைய மனநிலையைச் சொல்லும் கவித்துவமான பயன்பாடு அது. ஆனால், தவறான பயன்பாடு என்பது வேறு. அதன் பின்னணியில் சமூக, பண்பாட்டு, படைப்புக் காரணங்கள் எதுவும் இருக்காது. சரியானது எது என்பதை அறியாமல், அதற்கு மெனக்கெடாமல் இருப்பதால் இது நிகழ்கிறது. போதிய கவனம் எடுத்துக்கொண்டு இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-செய்வதா-செய்துகொள்வதா/article9602084.ece

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அறிவோம் நம் மொழியை: புள்ளியும் காற்புள்ளியும் எதற்காக?

 

 
arivom_3150353f.jpg
 
 
 

டாக்டர் முதலான சொற்களைத் தமிழில் எழுதும்போது, சிலர் டாக்டர். கரிகாலன் என எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் Dr. என எழுதப்படுவதன் விளைவாக இந்தப் பழக்கம் வந்திருக்கக்கூடும். ஆங்கிலத்தில் Doctor என்பதன் சுருக்கமாக Dr என எழுதும்போது அதில் புள்ளி வைப்பதுண்டு. Doctor என முழுமையாக எழுதும்போது வைப்பதில்லை. Dr என்பது முழுமையான சொல் அல்ல, அதன் சுருக்கம் என்பதைத் தெரிவிப்பதற்கான அடையாளம் இது. Jr., Sr., Mr. போன்ற பல சுருக்கங்களுக்கும் இப்படிப் புள்ளியிடுவதுண்டு. தமிழில் நாம் டாக்டர், மிஸ்டர், ஜூனியர் என முழுமையாக எழுதிவிடுகிறோம். எனவே, இங்கெல்லாம் புள்ளி தேவையில்லை.

பொதுவாகவே, தேவை இருந்தாலொழிய நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். சிலர், நீண்ட வாக்கியங்கள் எழுதும்போது எக்கச்சக்கமான காற்புள்ளிகளைப் (,) போட்டுவிடுவார்கள். தொடர்ந்து படிக்கையில் புரிந்துகொள்வதற்குக் குழப்பம் ஏற்படும் என்றால், அங்கே நிறுத்திப் படிப்பதற்குக் காற்புள்ளியைப் பயன்படுத்தலாம். பட்டியல் போடும்போது பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.

‘அவன் திரும்பி வரும்போது அந்தப் படம் அங்கேயே இருந்தததைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தான்’ என்னும் வாக்கியம் சற்றே நீளமாக இருந்தாலும், நிறுத்தற்குறிகளின் தேவை இல்லாமலேயே புரிகிறது. இங்கே எதற்காகக் காற்புள்ளி? வாக்கியங்களை முறையாகக் கட்டமைத்தால் அதிக நிறுத்தற்குறிகள் தேவைப்படாது.

*

இப்போதெல்லாம் சிலர், ஞாபகம் என்பதை நியாபகம் என்று எழுதத் தலைப்படுகிறார்கள். வடமொழியில் இந்தச் சொல்லை ஞாபகம் என்று சொல்லிவிட முடியாது. (க்) ஞாபகம் என்பதாக அதன் உச்சரிப்பு இருக்கும். இந்த (க்)ஞா என்னும் எழுத்து, தமிழில் பெரும்பாலும் ஞா என்பதாகவே வழங்கப்பட்டுவருகிறது. நியாயம் என்பது போன்ற ஒரு சில சொற்களில் மட்டுமே நியா என்னும் எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்றபடி பெரும்பாலும் ஞா என்னும் எழுத்தே பயன்படுத்தப்படுகிறது.

எந்த இடத்தில் நியா, எந்த இடத்தில் ஞா என்ற குழப்பம் வரக்கூடும். பெரும்பாலான இடங்களில் ஞா என்னும் சொல்லே பயன்படுத்தப்படும் வழக்கம் இருப்பதால், ஞா என்பதையே பொது வழக்காக வைத்துக்கொள்ளலாம். ஞாபகம் என்று நிலைபெற்றுவிட்ட சொற்களை மாற்றிக்கொண்டிருக்க வேண்டாம்.

* சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த முஹம்மது கான் பாகவி என்னும் வாசகர் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். “அனுப்புகிறான் என்பது நிகழ்காலம். இதை அனுப்புகின்றான் என எழுதினால் அது தொடர் நிகழ்காலத்தைக் குறிக்கிறதா?” எனக் கேட்கிறார். இரண்டுமே நிகழ்காலம் மட்டுமே. தொடர் நிகழ்காலம் அல்ல. கிறான், கின்றான் இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, ‘கின்றான்’ என்பது சற்றே புலமைசார் வழக்கு. அனுப்பிக்கொண்டிருக்கிறான் என எழுதினால்தான் அது தொடர் நிகழ்காலம். அனுப்பிக்கொண்டிருக்கிறான் என்னும் உதாரணத்தில் வரும் இருக்கிறான் என்னும் சொல்லைக் குறித்த சில சங்கதிகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-புள்ளியும்-காற்புள்ளியும்-எதற்காக/article9612684.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: தனி வினையா, துணை வினையா?

 
arivom_3156124f.jpg
 
 
 

இருக்கிறது எனும் சொல் வெவ்வேறு பொருள்களில், வாக்கியங்களில் அமைவதைச் சென்ற இதழில் பார்த்தோம். வந்திருக்கிறான் என்பது வினைமுற்று எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பத்தியில் தரப்பட்ட எடுத்துக்காட்டுகளில் இருக்கிறது என முடியும் அனைத்து வகை வாக்கியங்களுமே வினைமுற்றுக்கள்தான் எனத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார். ‘அது அங்கே இருக்கிறது’ என்னும் வாக்கியத்தில் ‘இருக்கிறது’ என்பது தனி வினையாகவும் ‘வந்திருக்கிறான்’, ‘செய்துகொண்டிருக்கிறார்’ ஆகியவற்றில் துணை வினையாகவும் செயல்படுவதுதான் வேறுபாடு என அவர் தெளிவுபடுத்துகிறார். பெயர் குறிப்பிடப்படுவதை விரும்பாத அந்தப் பேராசிரியருக்கு நன்றி.

ஒரு சொல், தனி வினையாக வரும்போது பிரித்தும் அதே சொல் துணை வினையாக வரும்போது சேர்த்தும் எழுத வேண்டும். ‘இருக்கிறது’ என்னும் சொல் சில இடங்களில் சேர்ந்தும் சில இடங்களில் பிரித்தும் எழுதப்படுவதற்கு இதுதான் காரணம்.

மேலும், சில சொற்களும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை. கையை விடு, வந்துவிடு, ஆகியவற்றில் முதலில் வரும் விடு தனி வினையாக இருக்கிறது. இரண்டாவதாக வரும் விடு, இன்னொரு வினைக்குத் துணையாக அமைகிறது. துணையாக அமையும்போது அது தனது வழக்கமான பொருளில் அல்லாமல் மாறுபட்ட பொருளில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதைச் சேர்த்து எழுத வேண்டும். பிரித்தால், தனி வினைக்கான பொருளைத் தந்து குழப்பம் ஏற்படுத்தும்.

இந்த வாக்கியங்களைப் பாருங்கள்:

அவர் ஆவடியிலிருந்து வருகிறார்.

அவர் ஆவடியில் பத்து ஆண்டுகளாக வசித்துவருகிறார்.

முதல் வாக்கியத்தில் வருகிறார் என்பது வருதல் என்னும் வினையைக் குறிக்கப் பயன்படும் தனி வினை. எனவே பிரித்து எழுதப்படுகிறது. அடுத்த வாக்கியத்தில் தொடர்நிகழ்வைக் குறிக்கும் துணை வினை. எனவே சேர்த்து எழுத வேண்டும்.

ஒரு சொல் தனிப் பொருளைத் தரும் தனி வினையாக வந்தால் பிரித்து எழுத வேண்டும். துணை வினையாக வந்தால் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும். இந்த விதியை நினைவில் வைத்துக்கொண்டால், எங்கே பிரித்து எழுதுவது, எங்கே சேர்த்து எழுதுவது என்பதில் குழப்பமே வராது.

சென்ற வாரம் எழுப்பப்பட்ட கேள்வியைப் பார்க்கலாம்.

வந்து இருந்தான் என எழுதினாலும் வந்திருந்தான் எனப் புரிகிறதே, அப்படியிருக்க இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்னும் கேள்வி எழலாம். பழக்கத்தின் காரணமாகவும் பின்புலத்தை அறிந்திருப்பதாலும் நாம் தவறான பயன்பாடுகளைச் சரியான பொருளில் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், தமிழைப் புதிதாகக் கற்பவருக்கு இதுபோன்ற பயன்பாடுகள் கண்டிப்பாகக் குழப்பம் தரும். எப்படியும் புரிந்துகொள்கிறோம் என்பதை வைத்துக்கொண்டு, இதுபோன்ற தவறான பயன்பாடுகளை நியாயப்படுத்த இயலாது.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-தனி-வினையா-துணை-வினையா/article9651138.ece

Link to comment
Share on other sites

அறிவோம் நம் மொழியை: சேர்ப்பதும் பிரிப்பதும் - தீர்மானிக்கும் காரணி எது?

 

 
arivom_3158146f.jpg
 
 
 

சேர்த்து எழுதுவது, பிரித்து எழுதுவது என்பது தீராத சிக்கலாகவே தமிழ் அச்சுலகில் இருந்துவருகிறது. பலரும் தத்தமது விருப்பப்படி இதைக் கையாளலாம் என நினைப்பதாகத் தெரிகிறது. ‘ஆறுதல் அளிக்கின்றன’ என்னும் சொற்களைப் பிரித்தும் எழுதலாம், ‘ஆறுதலளிக்கின்றன’ எனச் சேர்த்தும் எழுதலாம். பிரிப்பதால் இங்கே பொருள் மாறுபாடு ஏற்படவில்லை. அளித்தல் என்னும் வினை சேர்த்தாலும் பிரித்தாலும் ஒரே பொருளைத் தருகிறது.

ஆனால், இருக்கிறது, வருகிறது போன்ற வினைச் சொற்கள் அப்படி அல்ல. ‘வந்திருந்தான்; என்னும்போது இருந்தான் என்பது துணைவினையாகவும் ‘வந்து இருந்தான்’ என்னும்போது தனி வினையாகவும் மாறுவதுடன், பொருளும் மாறுகிறது.

‘மதுரையிலிருந்து வந்தார்’ என்பதை ‘மதுரையில் இருந்துவந்தார்’ என்று எழுதினால் பொருள் மாறுகிறது. முதல் வாக்கியம் (மதுரையிலிருந்து) வருதல் என்னும் வினையைக் குறிக்கிறது. இரண்டாவது வாக்கியம் (மதுரையில்) அவர் வசித்துக்கொண்டிருந்ததைக் குறிக்கிறது.

வா என்னும் வேர்ச் சொல், வருதல் என்னும் பொருளைத் தர வேண்டிய இடங்களில் பிரித்து எழுத வேண்டும். வா, வந்தார், வருகிறார், வருவார் என்றெல்லாம் இது பல வடிவம் எடுத்தாலும் வருதல் என்னும் பொருளைக் குறித்தால் பிரித்து எழுத வேண்டும். மாறாக, தொடர்நிகழ்வைக் குறிக்கும் இடங்களில் பயன்படும்போது சேர்த்து எழுத வேண்டும். அதாவது, வருதல் என்னும் பொருளைத் தராமல் மாறுபட்ட பொருளைத் தருவதால், குழப்பம் ஏற்படாமல் இருக்க இப்படிச் செய்ய வேண்டும்.

இருந்துவந்தார், பணிபுரிந்துவந்தார், வணிகம் செய்துவந்தார், பதவி வகித்துவருகிறார் ஆகிய வாக்கியங்களில் வருதல் என்னும் பொருளுக்கு வேலை இல்லை. குறிப்பிட்ட நபர் தொடர்ந்து செய்யும் செயலைக் குறிக்க இங்கே வந்தார், வருகிறார் போன்ற சொற்கள் பயன்படுகின்றன. இங்கே வா என்னும் வேர்ச் சொல், தனி வினையாக வரவில்லை. வருதல் என்னும் பொருளைத் தரவில்லை. இன்னொரு வினைச் சொல்லுக்குத் துணையாக வருகிறது. எனவே, சேர்த்து எழுத வேண்டும்.

துணை வினை, தனி வினை என்பது மேலும் பல சிக்கல்களைக் கொண்ட வகைப்பாடு. ஒவ்வொன்றையும் துணை வினையா, தனி வினையா எனப் பார்த்துக்கொண்டிருப்பது அனைவருக்கும் இயலாது. ஒரு சொல்லை அதற்கு முன்பு வரும் சொல்லுடன் சேர்த்து எழுதினால், அதன் வழக்கமான பொருள் மாறுகிறதா இல்லையா என்பதுதான் எளிமையான அளவுகோல். மாறும் என்றால் சேர்த்து எழுதலாம்.. மாறாது என்றால் பிரிக்கலாம்.

கொள், தான், மாட்டாது, வேண்டும், செய்து, கூட, கூடும், பார் என மேலும் பல சொற்கள் இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றை அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/opinion/columns/அறிவோம்-நம்-மொழியை-சேர்ப்பதும்-பிரிப்பதும்-தீர்மானிக்கும்-காரணி-எது/article9660822.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.