Jump to content

அவுஸ்ரேலியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை இளைஞன் மாயம்


Recommended Posts

அவுஸ்ரேலியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை இளைஞன் மாயம்
 
 
அவுஸ்ரேலியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை இளைஞன் மாயம்
அவுஸ்ரேலியாவில்  நான்கு நண்பர்களுடன் கடந்த ஞாயிறன்று ஆற்றில் குளிக்கச் சென்ற  28 வயது இலங்கை இளைஞர் காணாமற் போன நிலையில் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்புக்குழு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
 
உயரமான ஒரு குன்றிலிருந்து ஆற்றுக்குள் குதித்த ஒஸான் ஜானக ஜெயசூர்ய என்ற இந்த இளைஞர் ஆற்றுக்குள் விழுந்தபின் ஒரு தடவை மேலே வந்ததாகவும் பின்பு ஒரேயடியாக மறைந்து விட்டதாகவும் இவருடன் சென்ற நண்பர்கள் தெரிவித்தனர்
 
நண்பர்களில் ஒருவர் ஆற்றுக்குள் பாய்ந்ததாகவும், ஜானகவின் உடலை எங்கும் காணமுடியவில்லை என்றும், பிழையாக ஏதோ நடந்துவிட்டதை தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
 
ஜானகவின் உடலைக் கண்டுபிடிக்க அவரது நண்பர்கள் அங்கே 40 நிமிடங்கள் காத்திருந்து முயற்சித்துள்ளார்கள் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/21311

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.