Jump to content

சமூக, சமய உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு


Recommended Posts

சமூக, சமய உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு

 

ஐக்­கிய நாடுகள் சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திக­தி­யன்று மனித உரி­மைகள் சாச­னத்தைப் பிர­க­டனம் செய்­தது. ஐ.நா சபையின் பிர­க­ட­னத்­திற்கு அங்­கீ­காரம் அளித்த அங்­கத்­துவ நாடுகள் பிர­க­ட­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­றுக்­கொண்­டன. பிர­க­ட­னத்தைத் தொடர்ந்து ஐ.நா சபை­யினால் பல தீர்­மா­னங்கள், உடன்­பா­டுகள், படிப்­ப­டி­யாகச் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டன. ஒவ்­வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்­வ­தேச மனித உரி­மைகள் தின­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த ஆண்டு மனித உரி­மைகள் தினத்தை அனுஷ்­டிக்­கும்­போது அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த ஆலோ­ச­னை­களும் பாரா­ளு­மன்­றத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட உள்­ளமை சிறந்த ஒரு எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது.

அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்­தத்­துக்கு மக்கள் மத்­தி­யி­லி­ருந்து ஆலோ­ச­னைகள் பெறு­வ­தற்கு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி லால் விஜ­ய­நா­யக்க தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட அர­சியல் யாப்புச் சீர்­தி­ருத்த ஆணைக்­குழு பொது மக்­க­ளி­ட­மி­ருந்து ஆலோ­ச­னைகள் கோரிய போது பல கட்­சிகள், அமைப்­புகள் மற்றும் தனி­ந­பர்கள் தங்கள் அறிக்­கை­களை ஆணைக்­கு­ழு­விடம் சமர்ப்­பித்­தார்கள். மனித உரி­மைகள் சாசனம் ஒன்று புதிய அர­சியல் யாப்­பிலே இடம்­பெற வேண்டும் என்­பது ஒரு முக்­கியம் வாய்ந்த கோரிக்­கை­யாக இருந்­தது.

சமூக நிலை மாற்ற மன்றம் (Foundation for Community Transformation); 11 பரிந்­து­ரைகள் அடங்­கிய அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தங்­களை முன் வைத்­தது. மன்றம் முன் வைத்த 11 விட­யங்­களும் இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருந்­தன. ஜன­நா­யக ஆட்சி முறை­யு­டைய ஒரு நாடு என்ற வகையில் இலங்கை கீழ்க்­காணும் கொள்­கை­களைக் கடைப்­பி­டிப்­பது அவ­சியம் என்­பதை சமூக நிலை­மாற்ற மன்றம் சுட்­டிக்­காட்­டி­யது. மக்­க­ளி­ட­மி­ருந்­துதான் ஆட்­சிக்­கு­ரிய அதி­காரம் பெறப்­பட வேண்டும்.   

பெரும்­பான்மை வாக்­கு­களை மக்­க­ளி­ட­மி­ருந்து பெறு­வதன் மூலம் மக்­க­ளி­ட­மி­ருந்து அரசு நடத்­து­வ­தற்கு ஆணை பெறப்­ப­டு­கின்­றது. ஆனால் அரசை நடத்­து­ப­வர்கள் இத்­த­கைய ஒரு அரசின் கீழ் தனி­நபர் சுதந்­தி­ரத்­தையும், சிறு­பான்­மை­யினர் உரி­மை­க­ளையும் பாது­காத்தால் தான் அதை ஜன­நா­யக அரசு என்று கூற­மு­டியும். அரச தலை­மைத்­து­வத்தின் மாற்றம் குறிப்­பிட்ட கால­வ­ரை­ய­றைக்குள் தேர்­தல்கள் மூலமே இடம்­பெற வேண்டும்.   

அர­சுக்கு இருக்கும் அதி­கா­ரங்கள், சட்­டங்கள் மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும். இது எழுத்­து­வ­டி­வா­கவோ அல்­லது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட மர­பு­க­ளா­கவோ இருக்­கலாம். அமைப்பு ரீதி­யா­கவும் சில நடை­மு­றைகள் மூல­மா­கவும் அர­சாங்­கத்தால் செலுத்­தப்­படும் அதி­கா­ரங்­களை சட்­டத்தை மீறிச் செயல்­ப­டுத்த முடி­யாது. ஒரு ஜன­நா­யக நாட்டில் அதி­கா­ரங்கள் பகிர்ந்து கொள்­ளப்­பட வேண்டும். சட்­ட­மி­யற்றும் அதி­காரம், நிர்­வாகம், நீதித்­துறை ஆகி­யவை தனித்­த­னி­யாக சுதந்­தி­ரத்­துடன் செயல்­ப­ட­வேண்டும். இத்­து­றை­க­ளுக்­கி­டையே ஆட்சி அதி­காரம் பகிர்ந்து கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். 

அரசின் பல்­வேறு அமைப்­புகள் அதி­கா­ரத்தை மட்­டுப்­ப­டுத்­தியே செயல்­ப­டுத்த வேண்டும். தனி மனி­த­ரு­டைய வாழ்­வு­ரிமை, சொத்­து­ரிமை போன்­ற­வை­க­ளுக்குச் சட்ட நிய­தி­க­ளுக்­குட்­பட உத்­த­ர­வாதம் அளிக்­கப்­படல் வேண்டும். ஜன­நா­யக முறையின் அடி­நாதம் அடிப்­படை உரி­மை­க­ளுக்கு உத்­த­ர­வாதம் அளிப்­ப­தி­லேயே தங்­கி­யுள்­ளது. ஐ.நா. பிர­க­ட­னங்­களும், விதி­மு­றை­களும் இத்­த­கைய அடிப்­படை உரி­மை­களைப் பட்­டி­யலிட்­டுள்­ளன. தனி மனிதப் பிரத்­தி­யேகம்; (Privacy), குடும்பம், சமயம் சார்ந்த நட­வ­டிக்­கைகள் மற்றும் சமூக உரி­மை­களைப் பாது­காப்­பது அரசின் தலை­யாய பொறுப்­பாகும். அதேபோல் இனத்­துவ, சமய, உரி­மை­களைப் பாது­காப்­பது அரசின் கட­மை­யாகும். 

சமூக நிலை மாற்ற மன்றம் 2003ஆம் ஆண்டு முதற்­கொண்டே இந்­திய வம்­சா­வளி தமிழர் போன்று நாட்டின் சில இடங்­களில் செறி­வா­கவும் மற்றும் சில இடங்­களில் செறிவு குறை­வா­கவும் வாழு­கின்ற மக்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய ஜன­நா­யக உரி­மை­களை எவ்­வாறு உறு­திப்­ப­டுத்­தலாம் என்­பது பற்றி சர்­வ­தேச நிபு­ணர்கள் பங்­கு­பற்­றிய கருத்­த­ரங்­குகள் நடத்தி அறிக்­கை­க­ளையும் நூல்­க­ளையும் வெளியிட்­டுள்­ளது.

தென்­னா­பி­ரிக்க முன்­மா­தி­ரியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குறிப்­பாக அதன் 9ஆவது சரத்தைக் கவ­னத்தில் வைத்து புதிய யாப்பில் இப்­பொ­ழுது இருக்­கின்ற அடிப்­படை அத்­தி­யா­யத்­துக்குப் பதி­லாக உரி­மைகள் பட்­டயம் ஒன்றை உள்­ள­டக்க வேண்டும் என்ற கோரிக்­கையை அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த ஆணைக்குழு­வுக்குச் சமூக நிலை­மாற்ற மன்றம் முன்­வைத்­தி­ருந்­தது.

எனவே அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தின் சார்­பாக தயா­ரித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன 1996ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்ட அதே போன்ற உரி­மைகள் பட்­டயம் ஒன்று புதிய யாப்பில் சேர்க்­கப்­படும் என்று கூறி­யி­ருப்­பது மிகவும் வர­வேற்கத்தக்­க­தாக இருந்­தது.

தென்­னா­பி­ரிக்­காவில் வர­லாற்று ரீதி­யாக ஏற்­பட்ட இனப் பார­பட்­சங்­களை நீக்கும் பொருட்டு, பிரிவு 9(1), பிரிவு 9(2) என்­பன சட்­டத்தின் முன் அனை­வரும் சமம். சம­மான பாது­காப்­புக்கு உரித்­து­டை­ய­வர்கள் என்­கி­றது. குறிப்­பாக 9(2) பின்­வ­ரு­மாறு ஏற்­பாடு செய்­கின்­றது: சமத்­துவம் என்­பது, அனைத்து உரி­மை­க­ளையும், சுதந்­தி­ரங்­க­ளையும் முழு­மை­யா­கவும், சம­மா­கவும் அனு­ப­விப்­ப­தாகும். சமத்­து­வத்தை அடை­வதை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, சட்­டங்கள் மற்றும் ஏனைய நட­வ­டிக்­கை­களை எடுப்­பதன் மூலம் நியா­ய­மற்ற பார­பட்சம் கார­ண­மாக, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக விசேட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டலாம் எனக் கூறு­கின்­றது.

இலங்­கையில் இது ஒரு புதிய விட­ய­மல்ல. இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 12(4) பெண்கள் மற்றும் சிறு­வர்­க­ளுக்­கான விசேட சட்­டங்கள் இயற்­றப்­ப­டலாம் என்ற ஏற்­பா­டுள்­ளது.

இத்­த­கைய விசேட ஏற்பாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கின்றன. Affirmative Action அல்லது நேரொத்த நடவடிக்கை என்ற விசேட ஏற்பாடுகள் மூலம் பின்தங்கிய மக்களை அபிவிருத்தியின் உயர் மட்டத்திற்கு எடுத்துவர முடியும். தென்னாபிரிக்க அரசியலமைப்பில் கறுப்பின மக்கள், பெண்கள், உடல் ரீதியாக இயலாதோர் போன்றவர்களுக்காக விசேட சட்டங்களை இயற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இது போன்று 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின் பிரஜாவுரிமை, வாக்குரிமைச் சட்டங்கள் மூலம் அரசியல் நீரோட்டத்திலிருந்தும் அபிவிருத்தி நீரோட்டத்திலிருந்தும் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் இத்தகைய ஒரு சட்டத்தின் மூலமே நிவாரணம் காணவேண்டும்.   

பி.பி. தேவராஜ்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-10#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.