Jump to content

இளம்பெண்களை அச்சுறுத்தும் எலும்பு தேய்மானம்... தீர்வு என்ன? #ArthritisAlert


Recommended Posts

இளம்பெண்களை அச்சுறுத்தும் எலும்பு தேய்மானம்... தீர்வு என்ன? #ArthritisAlert

எலும்பு தேய்மானம்

40 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எதனால் எலும்பு தேய்மானப் பிரச்னை வருகிறது... அதற்கு என்ன தீர்வு என்பதை ஊட்டச்சத்து நிபுணர், தாரிணி கிருஷ்ணன் விளக்குகிறார்.

Dharani_krishnan_15230.jpgஎலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அவ்வளவாக இருந்ததில்லை. ஏனென்றால், அவர்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். வீட்டு வேலைகள், தண்ணீர்க் குடம் சுமத்தல், பக்கெட்டுகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நடப்பது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது, குழந்தைகளைத் தூக்கி விளையாடுவது, ஆட்டுக் கல்லில் மாவு அரைப்பது, எங்கு போனாலும் நடந்துசெல்வது... என கை, கால்களுக்கு உழைப்பு இருந்தது.

ஆனால் இப்போது, துணி துவைக்க, சட்னி அரைக்க, மாவு அரைக்க எல்லாவற்றுக்குமே மெஷின்கள் வந்துவிட்டன. அதோடு, வீட்டு வேலைகள் செய்வதற்கு ஆட்களையும் வைத்துக்கொள்கிறார்கள். மார்க்கெட்டுக்குச் சென்று மளிகைப் பொருட்கள், காய்கறிகளைத் தூக்கி வருவது இல்லை. எல்லாவற்றுக்கும் ஆட்டோ, டூ வீலர் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் இயக்கம் இன்றி இருப்பதால், கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) கிரகிக்கப்படுவது பாதிக்கப்பட்டு, எலும்பு தேய்மானம் அடைவதற்கு முக்கியக் காரணமாகிவிடுகிறது.

இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், மேற்சொன்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியவில்லை என்றால், தினமும் காலையில் 20 முதல் 40 நிமிடங்கள் வரை ரெஸிடன்ஸ் பயிற்சி (Resistance exercise...) செய்வது நல்லது. அதாவது, நம் உடலை நாமே தாங்கிச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு மேலே, கீழே தூக்கி கைகளை இயக்குவதால், தோள்களுக்கு வலுசேர்க்கும். தோப்புக்கரணம் போடுவது, கால்களுக்கு வலு சேர்க்கும். அதோடு ஏரோபிக் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. அதனால், காலை நேரங்களில், வாரத்தில் மூன்று நாட்கள் மிதமான வெயிலில் 15 நிமிடங்களாவது இருப்பது நல்லது. இதன் மூலம் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கலாம்.

 

skeleton-anatomy_1048-1821_DC_15168.jpg

எலும்புகள் என்றால் உறுதியானதுதானே... அது என்ன செய்யப்போகிறது என்று நினைக்கக் கூடாது. உடலுக்கு ஆக்டிவ் தரக்கூடிய வேலைகளைச் செய்துவந்தால்தான், எலும்புகள் கால்சியத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள முடியும். `அய்யோ, எனக்கு 50 வயது ஆகிவிட்டதே... இதை எல்லாம் எப்படிச் செய்வது?’ என்று வீட்டிலேயே உட்கார்ந்து டி.வி சீரியல்களைப் பார்த்துக்கொண்டிருந்தால், எலும்புகளுக்கு சரிவர கால்சியம் சத்துக் கிடைக்காமல், எலும்பு தேய்மானம்தான் ஏற்படும். இதனால் பெண்களுக்கு இடுப்பு, தோள், மணிக்கட்டு, மூட்டு, முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.


bone_15116.jpg

எலும்பு தேய்மானத்துக்கு சில காரணங்கள்...
உடல் உழைப்பைவிட அதிக உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது. காபி, டீ போன்ற பானங்களை அதிகமாகக் குடிப்பதால், உடலில் உள்ள கால்சியம் குறையும். குளிர்பானங்கள், கால்சியம் சத்தை அழிக்கும் தன்மைகொண்டவை.

பாக்கெட்டில் வைத்து விற்கப்படும் துரித உணவுகள் மற்றும் நொறுக்குத்தீனி ஆகியவை எலும்பு தேய்மானத்துக்குக் காரணமாகின்றன.

உணவுகள்
பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்துக்கு உடற்பயிற்சி மட்டும் செய்யாமல், உணவிலும் கவனம் செலுத்தவேண்டும். எலும்பை வலுப்படுத்த, கால்சியத்தோடு புரதச்சத்தும் தேவைப்படுகிறது. அதனால் புரதம், கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். பால், பாலாடைக் கட்டி, பால் பொருட்கள், கீரை வகைகள், காய்கறிகள், மீன், முட்டை, கோழி, ராகி, கேழ்வரகு, கொள்ளு, பருப்பு வகைகள், பாதாம் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் ஆகியவற்றில் கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைவாக உள்ளன. இவற்றில் ஏதேனும் சிலவற்றையாவது தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

shutterstock_145891655_DC_16221.jpg

இதேபோல குழந்தைகளும் படிக்கும் வயதில் நன்றாக ஓடி, ஆடி விளையாட வேண்டும். அப்படி விளையாடாமல், செல்போன், டி.வி., வீடியோகேம்ஸ் என இருந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கும். எனவே, சிறு வயதில் இருந்தே கால்சியம் மற்றும் புரதச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

பெண்களுக்கு 40 வயது தாண்டியதும் மெனோபாஸ் வந்துவிடுகிறது. அந்தச் சமயத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் மூட்டுவலி, முதுகுவலிப் பிரச்னைகள் வருகின்றன. அந்தச் சமயத்தில், கால்சியம் அதிகம் உள்ள நாட்டுக்கோழி, மீன், இறால், முட்டை மற்றும் சோயா பீன்ஸ் போன்ற உணவுகளைச் சேர்த்துகொள்ள வேண்டும்.

உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும்!

http://www.vikatan.com/news/health/74562-tips-to-prevent-arthritis.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அவ்வளவாக இருந்ததில்லை. ஏனென்றால், அவர்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். வீட்டு வேலைகள், தண்ணீர்க் குடம் சுமத்தல், பக்கெட்டுகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நடப்பது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது, குழந்தைகளைத் தூக்கி விளையாடுவது, ஆட்டுக் கல்லில் மாவு அரைப்பது, எங்கு போனாலும் நடந்துசெல்வது... என கை, கால்களுக்கு உழைப்பு இருந்தது.

இப்ப எங்கங்க வேலை செய்றாங்க சொன்னால் கூட நீ செய்தால் கொறைஞ்சா போயுடுவ என்ற கேள்வி வேறtw_confused:tw_confused: 

ஆனாலும் குடும்பத்திற்க்காக தேய்வது பெண்களே  பாராட்ட வேண்டும் :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புதிதாக ஏறபட்டுள்ள பிரச்சனை இது.நான்காவது கிழமையாகவும் வலி நிவாரணியோடும் கால் வலியோடும் ஒரு நீண்ட போராட்டம்..இப்படி ஒரு வலியை தாங்குவதை விட இறப்பு வலி குறைவானது என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படுத்து கிடக்கிறவங்களுக்கு தான் இந்த நோய் வரும் என்று இல்லை.சிறு வயது முதல் விளையாட்டு கூடுதல் உடல் உழைப்பு இவற்றாலும் வரலாம்.நானும் இந்த நோயால் மிகவும் அவதிப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

எனக்கு புதிதாக ஏறபட்டுள்ள பிரச்சனை இது.நான்காவது கிழமையாகவும் வலி நிவாரணியோடும் கால் வலியோடும் ஒரு நீண்ட போராட்டம்..இப்படி ஒரு வலியை தாங்குவதை விட இறப்பு வலி குறைவானது என்று நினைக்கிறன்.

 

நீங்கள் மனதை தளர விடாதீர்கள்  உங்கள் மனதே சிறந்த மருந்தும் கூட 

4 minutes ago, ஈழப்பிரியன் said:

படுத்து கிடக்கிறவங்களுக்கு தான் இந்த நோய் வரும் என்று இல்லை.சிறு வயது முதல் விளையாட்டு கூடுதல் உடல் உழைப்பு இவற்றாலும் வரலாம்.நானும் இந்த நோயால் மிகவும் அவதிப்படுகிறேன்.

ம் உன்மைதான் ஈழப்பிரியன் நானும் அதிகம் ஓடி விளையாடுவேன் இப்பவும் கூட முளங்கால் வலி அப்பப்ப வந்து போகிறது (உதைபந்தாட்டம் ) கக்கூசில் கூட குந்த முடியாது  சுமார் 15 வருடங்களாக விளையாடுவதால் என்னவோ தெரியலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முனிவர் ஜீ said:

 

ம் உன்மைதான் ஈழப்பிரியன் நானும் அதிகம் ஓடி விளையாடுவேன் இப்பவும் கூட முளங்கால் வலி அப்பப்ப வந்து போகிறது (உதைபந்தாட்டம் ) கக்கூசில் கூட குந்த முடியாது  சுமார் 15 வருடங்களாக விளையாடுவதால் என்னவோ தெரியலை 

என்ன முனி இளந்தாரியான உங்களுக்கே இப்பவே நோவு என்றால் 60 தாண்டிய எங்களை கொஞ்சம் யோசியிங்க.

Link to comment
Share on other sites

9 hours ago, முனிவர் ஜீ said:

நீங்கள் மனதை தளர விடாதீர்கள்  உங்கள் மனதே சிறந்த மருந்தும் கூட 

ம் உன்மைதான் ஈழப்பிரியன் நானும் அதிகம் ஓடி விளையாடுவேன் இப்பவும் கூட முளங்கால் வலி அப்பப்ப வந்து போகிறது (உதைபந்தாட்டம் ) கக்கூசில் கூட குந்த முடியாது  சுமார் 15 வருடங்களாக விளையாடுவதால் என்னவோ தெரியலை 

முனி இதற்கு நல்ல இயக்கை மருத்து வல்லாரை, இதை தினமும் சாப்பிட்டு பாருங்கள் மூட்டு வலிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

என் வீட்டில் இதை வழர்ந்து விருகின்றேன். இந்த கிழமை முழுக்க வல்லாரை சம்பல் & மூளை கீரையும் தான். எனக்கு முழங்கால் மூட்டு வலி வந்தால்
உடனே வல்லாரை சம்பல் போட்டு சாப்பிட இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வல்லாரை சம்பலை அள்ளிப் போட்டு சாப்பிடுங்கள், எல்லா வலிகளும் விரைவில் போய்விடும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன முனி இளந்தாரியான உங்களுக்கே இப்பவே நோவு என்றால் 60 தாண்டிய எங்களை கொஞ்சம் யோசியிங்க.

என்னது இளந்தாரியோ வயது போட்டுது  ஆனால் இப்ப நோய் வயது பார்க்கிறதில்லை அண்ணே  ம்  வயது போனால் மிகவும் கஸ்ரமே

7 hours ago, வந்தியதேவன் said:

முனி இதற்கு நல்ல இயக்கை மருத்து வல்லாரை, இதை தினமும் சாப்பிட்டு பாருங்கள் மூட்டு வலிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

என் வீட்டில் இதை வழர்ந்து விருகின்றேன். இந்த கிழமை முழுக்க வல்லாரை சம்பல் & மூளை கீரையும் தான். எனக்கு முழங்கால் மூட்டு வலி வந்தால்
உடனே வல்லாரை சம்பல் போட்டு சாப்பிட இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வல்லாரை சம்பலை அள்ளிப் போட்டு சாப்பிடுங்கள், எல்லா வலிகளும் விரைவில் போய்விடும்

 

 

மிக்க நன்றி தகவலுக்கு எனக்கு பிடித்தது சம்பல் சேர்க்க வேண்டியதுதான்  வல்லாரை சம்பல் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே வலி தொடங்கி 2 மாதம்...கால் ஒரு சின்ன நுல் இழையில் தொங்கிற மாதிரி ஒரு உணர்வு...இன்னும் 3 மாதம் பெட்றெஸ்ட் எடுத்துட்டு அதுக்கு பிறகும் நோவு இருந்தால் வா என்று குட் பாய் சொல்லி வீட்டுக்கு அனுப்பீட்டீனம்.. .பார்த்த வைத்தியரை நினைக்க கோவம்;கோவமா வருது... :(

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முன்று நான்கு மாத கட்டாய ஒய்விலிருந்தால் ஓரளவுக்கேனும் எலும்பு தேய்மான நோயிலிருந்து விடு பட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா.முடிந்தவர்கள் பதில் தந்தால் நன்று.....காரணம் என்ன வேனில் கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து இந்த நோய் தாக்கத்தினால் பெரும் அவதிப்பட்டு இருக்கிறேன்.. இன்னும் இதற்கு நிரந்தர தீர்வு என்று ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை..ஒரு வைத்திய சிகிச்சை நிபுணரை சந்தித்த போது அவர் சொல்லியது கிட்டத் தட்ட முன்று மாதங்களுக்கு மேல் ஓய்விலிருந்தால் தீர்வு கிடைக்கலாம் என்பது வெறும் ஊகம் மட்டுமே..தற்காலிக நிவாரணியாக மருந்தாவது தாருங்களன் என்று அந்த வைத்திய நிபுணரைக் கேட்ட போது/ நோ மருந்தும் தர மாட்டன் போய் விட்டு நான் சொன்ன காலப் பகுதிக்கு பின் வா என்றே பதில் தரப்பட்டது...


ஆனால் எனக்கு அந்தளவு காலம் மட்டும் ஓய்விலிருக்கவே முடியாத நிலை..ஒரு சில மணித்தியாலங்களே ஒய்வு எடுக்க முடியாதவள் எப்படி மாதக்கணக்கமாக ஓய்விலிருக்க முடியும்...ஒரு சின்ன நுhலில் தொங்குவது போலத் தான் என் கால் தொங்கிட்டு இருப்பது போண்ற உணர் அது தான் உண்மையும் கூட...ஒன்றாறியோவில் அண்மைய காலங்களில் ஏற்பட்டுள்ள சுகாதார வெட்டுக்களினால் உண்மையாக கொடுக்க வேண்டிய சேவைகளை கூட கொடுக்க மறுக்கிறார்கள்...அந்த நிலை தான் எனக்கும்...எல்லாவிதமாகவும் என் நிலையை எடுத்து விளக்கியும் சில விடையங்களை நம்ப மறுக்கும் வைத்திய வட்டாரங்களின் கவனக்குறைவு நடந்து கொண்டே இருக்கிறது..தயவு செய்து எவ்வளவுக்கு ரோஜ்வலிக்கு போவதை தவிர்க்க முடியுமோ அந்தளவுக்கு தவிர்த்துக் கொள்ளுங்கள்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,நீங்கள் அதிகம் சத்தான உணவுகளாகப் பார்த்து சாப்பிட வேண்டும்.பால்,கீரை,இறைச்சிவகை,பழங்கள் போன்றன...பெண்களுக்கு முதுகு வருத்தம் வாறாது சத்தான உணவு உண்ணாமை என்பது எனது கருத்து...யாராவது வைத்தியம் தெரிந்தவர்கள்,நெடுக்ஸ் போன்றவர்கள் யாயினிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2016 at 1:49 AM, ஈழப்பிரியன் said:

என்ன முனி இளந்தாரியான உங்களுக்கே இப்பவே நோவு என்றால் 60 தாண்டிய எங்களை கொஞ்சம் யோசியிங்க.

அறுவது தாண்டீற்றுதா ? அப்ப இனிப் பரவாயில்லை tw_blush:

 

 

 

யாயினி வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். - இது நான் சொல்லவில்லை. பாட்டிவைத்தியத்தில் இருந்து வெட்டி ஒட்டியது.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.

சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.

காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது.

மேற்கூறியவை இலகுவாகக் கிடைக்கும் பொருட்கள். இவற்றைக் கொண்டு முயன்று பார்க்கலாம்.

முக்கியமாக வைட்டமின் D குளிகையை ஒரு ஒருநாளுக்கு ஒன்று கட்டாயம் எடுங்கள். இது நாமே கடைகளில் வாங்க முடியும். இங்கு வைத்தியர்கள் எலும்புத் தேய்மானத்துக்கு இதனையே பரிந்துரைக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூட்டு வலிகள் வருபவர்கள் இப்படியான பாதுகாப்பு அல்லது நிவாரண அணிகளை அணிந்து பாருங்கள். சில வேளைகளில் நிவாரணம் தரலாம்.

tsm_rackenbandage_pro_rackengurt_3513.jpg

e90d2026af30b66b3e101ac598eca6d2_270x270.jpgEllenbogenbandage bei leichten Beschwerden, Fa. Bort Medicals-l300.jpg

 


உணவுவகைகளும் பல நோய் நொடிகளுக்கு காரணமாக இருந்தாலும்......

உலகளாவிய இன்றைய காலநிலைகளும்..... நாகரீக மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல வலிகளுக்கு நாகரீக உடைகளும் ஒரு காரணம்......
நிலத்தில் இருந்து சாப்பிட்ட காலம் போய் செற்றி சோபாவில் இருந்து சாப்பிடுகின்றோம்.
குந்தியிருந்து மலசலம் கழித்த காலம் போய் இன்று கதிரையில் அமர்ந்திருப்பது போல் காலைக்கடன்களை கழிக்கின்றோம்.

நிலத்தில் இருந்து சாப்பிட்டால் எல்லா அவயங்களுக்கும் பயிற்சி..


குந்தியிருந்து காலைக்கடன்களை கழிக்கும் போது பெருங்குடல் சிறுகுடல் தொடக்கம் சிறுநீரகம் வரைக்கும் புது நிவாரணம் கிடைக்கின்றதாம்..அழுத்தங்கள் மூலம் அனைத்தும் சுகம் பெறுமாம்.
 எம் மூதாதையருக்கு இல்லாத வருத்தங்கள் இன்றைய சமுதாயத்தினருக்கு வருகின்றது கொஞ்சம் சிந்திக்கலாம்.

மொடேர்ன் வாழ்க்கை மோட்டு வருத்தங்கள்.

மூட்டு வலிகளுக்கு பாத அணிகள் மிக மிக முக்கியம்.

வலிகள் உள்ளவர்கள் வைத்தியம் சம்பந்தப்பட்ட பாத அணிகள் விற்பவர்களிடம் கலந்தாலோசித்து வாங்கவும். நிச்சயம் பலன் கிடைக்கும்.
விலைகள் அதிகம்.ஆனால் நல்ல பலன் கிடைக்கக்கூடும்.
 

Link to comment
Share on other sites

பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம்! தடுப்பது எப்படி?

 

 
182657432-crop-56a6d9673df78cf772908b82

பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு.ஆனால் இப்பொழுது இருபது முதல் முப்பது வயதடைய இளம்பெண்களிடையே கூட எலும்பு தேய்மான பாதிப்பு உள்ளது. பல இளம்பெண்கள் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டு வலியால் துன்பப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எலும்பு தாதுவில் அடர்த்தி குறைந்து, எலும்பின் வலிமை குன்றுவது தான்.

Anaemia.jpg

எலும்பு தேய்மானத்திற்கான காரணங்கள்

இரவு வெகு நேரம் கண் விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவு பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, ஏ.சி. வாகனங்களில் பயணிப்பது என சூரிய ஒளி நம் உடலிலேயே படாமல் இருப்பவர்கள் இப்பொழுது அதிகம் பேர் உள்ளனர்.

சூரிய ஒளியினால் கிடைக்கக் கூடிய வைட்டமின் டி குறைவால் எலும்பின் அடர்த்தி குறையும். உடலுக்கு ஒரு வடிவத்தை கொடுப்பது எலும்பு. கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களால் எலும்பு உருவாகின்றது. கால்சியத்தை எலும்பு ஏற்றுக்கொள்ள வைட்டமின் டி தேவைப்படுகிறது. இளம்வயதில் எலும்புகள் நீளமாகவும், அகலமாகவும் வளரும். பதினெட்டு வயதுக்கு பின் நீண்டு வளராது. அகலத்தில் தான் வளரும். 30 வயதுக்கு பின் எலும்பின் வளர்ச்சி நின்று விடும்.

அதற்குள் நாம் எலும்பின் உறுதியையும், திண்மையையும் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். 30 வயதுக்கு பின் எலும்பின் அடர்த்தி சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.

உணவில் தேவை அக்கறை

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் பொழுது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும்.

அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும். பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள் கால்ஷியம் தாதுவை அழிக்கும் தன்மையுள்ளவை. காபி, டீ போன்ற பானங்கள் அதிகம் பருதுவதும் கால்ஷியம் குறைய காரணமாகின்றது.

கால்ஷியம் நிறைந்த உணவுகள்

பால் மற்றும் பால் பொருட்களில் கால்ஷியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை. அவர்கள் கால்ஷியம் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றம் கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம்.

13-Probiotic-Filled-Foods-05-sl.jpg

காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்ஷியம் அபரிமிதமாக உள்ளது. அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்ஷியம் உள்ளது.

எள், கால்ஷியம் சத்து நிறைந்த ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்ஷியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதாம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகில் பாலை விட அதிக கால்ஷியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது ஒரு கால்ஷியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி.

பெரியவர்கள் கஞ்சி கூழாக செய்து சாப்பிட நல்ல பலனிருக்கும்

எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை என்னும் கொடி. பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது. சிறந்த வலி நிவாரணியாகவும்,வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்குஉண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

உடற்பயிற்சியின் அவசியம்

எலும்புகள் உறுதியாக யோகா அல்லது உடற்பயிற்சி மிகவும் அவசியம். இத்தகைய பயிற்சிகள் செய்யும்பொழுது எலும்புகள் வலிமை பெறும். இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதே குறைந்து விட்டது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்குவதே இல்லை. சிறுகுழந்தைகளாக இருக்கும்பொழுதே பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் பழக்கி விட வேண்டும். பெற்றோர்களும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் யோகாசனம், நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், தோட்ட வேலைகள் என்று செய்ய, குடும்ப ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்.

Dhanur_Asana.JPG

வலுவான தசைகள் எலும்புகளை பாதுகாக்கும். ஒல்லியாக இருப்பது தான் அழகு, ஆரோக்கியம் என இளம்பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. பலமாக உறுதியாக இருப்பது தான் அழகு, ஆரோக்கியம். பிற்காலத்திற்கான பயத்தை சேமிப்பதற்கு அக்கறையுடன் செயல்படுவது போன்று, நம் உணவுக்கும், உடற்பயிற்சிக்கும் அக்கறை அளிக்க வேண்டும்.

இளம்வயதிலேயே எலும்பை உறுதியாக வலுவாக ஆக்கிக்கொண்டால் போனஸாக நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

ச. பாலகிருஷ்ணன், 
கோயம்பத்தூர்

http://www.dinamani.com/health/womens-health/2016/dec/20/பெண்களுக்கு-ஏற்படும்-எலும்புத்-தேய்மானம்-தடுப்பது-எப்படி-2618736.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.