Jump to content

முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம்


Recommended Posts

முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம்

1425341561-5fd13a77b9dabc255d12951f1ac7ca4e349eaa13.jpg

 

19 வயதிற்குட்பட்டவர் களுக்கான இளையோர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மே ளனத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இளையோர்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 

இதில் இலங்கை, இந் தியா, நேபாளம், மலேசியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கனிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்தத் தொடரின் போட்டி  கள் கொழும்பு, காலி, மாத் தறை, மொறட்டுவை ஆகிய இடங்களிலுள்ள மைதானங்க ளில் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி மட்டும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதில் கலந்துகொள்ளும் எட்டு நாடுகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' குழுவில் இலங்கை, இந்தியா, நேபாளம், மலேசியா ஆகிய நாடுகளும் 'பி' குழுவில் பாகிஸ்தான், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொடரின் முதல் நாளில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்போது குழு 'ஏ' இல் இந்தியா எதிர் மலேசியாவும், இலங்கை எதிர் நேபாளமும் மோதுகின்றன. குழு 'பி' இல் பாகிஸ்தான் எதிர் சிங்கப்பூரும், ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷும் களம் காண்கின்றன.

குழு 'ஏ' இல் இடம்பெற் றுள்ள இலங்கை அணி தனது முதல் போட்டியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது. எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இலங்கை அணி மலேசியாவை எதிர்த்தாடுகி றது. அதேபோல் 18ஆம் திகதி இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் முறையாக இளையோருக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதால் எதிர்காலத் தில் இளம் வீரர்கள் மேலும் மெருகேற்றப்பட்டு தேசிய அணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-10#page-12

Link to comment
Share on other sites

மலேஷியாவையும் வீழ்த்தியது இலங்கை நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது

u4-7774f4769cd3997b5a12e3c0eec8d19453d77e0a.jpg

 

இளை­யோர்­க­ளுக்­கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடை­பெற்ற போட்­டியில் மலே­ஷியா அணியை எதிர்த்­தா­டிய இலங்கை அணி 8 விக்­கெட்­டுக்­களால் இலகு வெற்­றியை ருசித்­தது.

8 நாடுகள் பங்­கேற்கும் 19 வய­திற்­குட்­டோர்­க­ளுக்­கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் கொழும்பு, காலி மற்றும் மாத்­தறை ஆகிய பிர­தே­சங்­களில் நடை­பெற்­று­வ­ரு­கி­ன்றது. இதில் நேற்றும் நான்கு போட்­டிகள் நடை­பெற்­றன.

இதில் 'ஏ' பிரிவில் இடம்­பெற்­றுள்ள இலங்கை மற்றும் மலே­ஷிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணி, மலேஷி­யாவை முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைத்­தது.

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய மலே­ஷிய அணி 38.2 ஓவர்­களில் 104 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. இதில் அய்னூல் ஹக்கீம் அதி­க­பட்­ச­மாக 41 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார்.

ஏனைய வீரர்களான விரந்திப் சிங் 18 ஓட்டங்களையும், அஸீஸ் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இலங்கை அணி சார்­பாக பந்­து­வீ­சிய அணித் தலைவர் கமிந்து மற்றும் பண்­டார ஆகியோர் தலா 3 விக்­கெட்­டுக்கள் வீதம் வீழ்த்­தினர்.

அதைத் தொடர்ந்து வெற்றி இலக்கைத் துரத்­திய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் சது­ரங்க அபா­ர­மாக ஆடி 68 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுக்க, 18 ஓவர்­களில் 2 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்­தது.

தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றிருந்தது. அத்தோடு நேற்று மலேஷிய அணிக்கெதிரான போட்டியில் பெற்ற வெற்­றியின் மூலம் இலங்கை அணி தனது இரண்­டா­வது வெற்­றியைப் பதி­வு­செய்­தது.

இந்­நி­லையில் குழு ஏ இல் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி நாளை மொறட்டுவை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

பங்களாதேஷ் வெற்றி 

ஆசியக் கிண்ணத் தொடரில் பி பிரிவில் இடம்­பெற்ற சிங்­கப்பூர் மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் பங்­க­ளாதேஷ் அணி வெற்­றி­பெற்­றது. இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிங்­கப்பூர் அணி 25.5 ஓவர்­களில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 70 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றுக்­கொண்­டது.

அதைத் தொடர்ந்து வெற்றி இலக்கைத் துரத்­திய பங்­க­ளாதேஷ் அணி 5 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து வெற்றி இலக்கை அடைந்­தது.

 

நேபாளை வீழ்த்­தி­யது இந்­தியா

 நேபாளம் மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய நேபாளம் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 172 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் எட்­டா­வது விக்­கெட்­டுக்­காக கள­மி­றங்­கிய பௌடீல் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.  பதிலுக்கு ஆடிய இந்திய அணி 33.3 ஓவர்களில் 4 விக்கெட் டுக்களை மாத்திரம் இழந்து 174 ஓட்டங் களைப் பெற்று 6 விக்கெட் டுக்களால் வெற்றியீட்டியது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-17#page-12

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.