Jump to content

முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம்


Recommended Posts

முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம்

1425341561-5fd13a77b9dabc255d12951f1ac7ca4e349eaa13.jpg

 

19 வயதிற்குட்பட்டவர் களுக்கான இளையோர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மே ளனத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இளையோர்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 

இதில் இலங்கை, இந் தியா, நேபாளம், மலேசியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கனிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்தத் தொடரின் போட்டி  கள் கொழும்பு, காலி, மாத் தறை, மொறட்டுவை ஆகிய இடங்களிலுள்ள மைதானங்க ளில் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி மட்டும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதில் கலந்துகொள்ளும் எட்டு நாடுகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' குழுவில் இலங்கை, இந்தியா, நேபாளம், மலேசியா ஆகிய நாடுகளும் 'பி' குழுவில் பாகிஸ்தான், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொடரின் முதல் நாளில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்போது குழு 'ஏ' இல் இந்தியா எதிர் மலேசியாவும், இலங்கை எதிர் நேபாளமும் மோதுகின்றன. குழு 'பி' இல் பாகிஸ்தான் எதிர் சிங்கப்பூரும், ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷும் களம் காண்கின்றன.

குழு 'ஏ' இல் இடம்பெற் றுள்ள இலங்கை அணி தனது முதல் போட்டியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது. எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இலங்கை அணி மலேசியாவை எதிர்த்தாடுகி றது. அதேபோல் 18ஆம் திகதி இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் முறையாக இளையோருக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதால் எதிர்காலத் தில் இளம் வீரர்கள் மேலும் மெருகேற்றப்பட்டு தேசிய அணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-10#page-12

Link to comment
Share on other sites

மலேஷியாவையும் வீழ்த்தியது இலங்கை நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது

u4-7774f4769cd3997b5a12e3c0eec8d19453d77e0a.jpg

 

இளை­யோர்­க­ளுக்­கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடை­பெற்ற போட்­டியில் மலே­ஷியா அணியை எதிர்த்­தா­டிய இலங்கை அணி 8 விக்­கெட்­டுக்­களால் இலகு வெற்­றியை ருசித்­தது.

8 நாடுகள் பங்­கேற்கும் 19 வய­திற்­குட்­டோர்­க­ளுக்­கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் கொழும்பு, காலி மற்றும் மாத்­தறை ஆகிய பிர­தே­சங்­களில் நடை­பெற்­று­வ­ரு­கி­ன்றது. இதில் நேற்றும் நான்கு போட்­டிகள் நடை­பெற்­றன.

இதில் 'ஏ' பிரிவில் இடம்­பெற்­றுள்ள இலங்கை மற்றும் மலே­ஷிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணி, மலேஷி­யாவை முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைத்­தது.

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய மலே­ஷிய அணி 38.2 ஓவர்­களில் 104 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. இதில் அய்னூல் ஹக்கீம் அதி­க­பட்­ச­மாக 41 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார்.

ஏனைய வீரர்களான விரந்திப் சிங் 18 ஓட்டங்களையும், அஸீஸ் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இலங்கை அணி சார்­பாக பந்­து­வீ­சிய அணித் தலைவர் கமிந்து மற்றும் பண்­டார ஆகியோர் தலா 3 விக்­கெட்­டுக்கள் வீதம் வீழ்த்­தினர்.

அதைத் தொடர்ந்து வெற்றி இலக்கைத் துரத்­திய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் சது­ரங்க அபா­ர­மாக ஆடி 68 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுக்க, 18 ஓவர்­களில் 2 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்­தது.

தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றிருந்தது. அத்தோடு நேற்று மலேஷிய அணிக்கெதிரான போட்டியில் பெற்ற வெற்­றியின் மூலம் இலங்கை அணி தனது இரண்­டா­வது வெற்­றியைப் பதி­வு­செய்­தது.

இந்­நி­லையில் குழு ஏ இல் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி நாளை மொறட்டுவை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

பங்களாதேஷ் வெற்றி 

ஆசியக் கிண்ணத் தொடரில் பி பிரிவில் இடம்­பெற்ற சிங்­கப்பூர் மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் பங்­க­ளாதேஷ் அணி வெற்­றி­பெற்­றது. இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிங்­கப்பூர் அணி 25.5 ஓவர்­களில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 70 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றுக்­கொண்­டது.

அதைத் தொடர்ந்து வெற்றி இலக்கைத் துரத்­திய பங்­க­ளாதேஷ் அணி 5 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து வெற்றி இலக்கை அடைந்­தது.

 

நேபாளை வீழ்த்­தி­யது இந்­தியா

 நேபாளம் மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய நேபாளம் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 172 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் எட்­டா­வது விக்­கெட்­டுக்­காக கள­மி­றங்­கிய பௌடீல் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.  பதிலுக்கு ஆடிய இந்திய அணி 33.3 ஓவர்களில் 4 விக்கெட் டுக்களை மாத்திரம் இழந்து 174 ஓட்டங் களைப் பெற்று 6 விக்கெட் டுக்களால் வெற்றியீட்டியது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-17#page-12

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.