Jump to content

2016-ல் ஆப்பிளில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட App எது தெரியுமா?


Recommended Posts

2016-ல் ஆப்பிளில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட App எது தெரியுமா?

ஆப்

ந்த வருடம் ஆப்பிள் ஏப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப் 10  ஆப்ஸ்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அத்துடன் இந்த ஆண்டின் சிறந்த ஆப், சிறந்த கேம் இரண்டையும் அறிவித்துள்ளது. டாப் 10 இலவச ஆப்கள் பற்றிய குட்டி இன்ட்ரோ இங்கே...

 1)    Snapchat - இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷனாக மட்டும் இல்லாமல் இது ஒரு இமேஜ் மெசேஜிங் ஆப்.....வாட்ஸ்அப் போல மிக வேகமாக வளர்ந்துவருகிறது இந்த ஸ்னாப்சாட். இந்த ஆண்டு அதிகம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்யப்பட்டது ஸ்னாப்சாட்தான். 

 2)    Messenger - நாம் அனைவருக்கும் தெரிந்த ஆப் இது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு மெசேஜிங் ஆப் இது. இதன் மூலம், வீடியோ கால், வாய்ஸ் கால் என எல்லா வகை வசதிகளும் இதில் உண்டு. தற்போது புதிதாய் வந்த இதன் அப்டேட்டில், நாம் நார்மலாக உபயோகிக்கும் மெசேஜிங்க் ஆப்பையும் பயன்படுத்த இயலும். இதை நம்மை இன்ஸ்டால் செய்ய வைக்க ஃபேஸ்புக் பட்டபாடு, ஃபேஸ்புக் பயன்படுத்திய அனைவரும் அறிந்ததுதான்.

3)   Pokeman Go - ஜூன் மாதம்தான் இது லான்ச் ஆனது என்றாலும், எதிர்பார்த்ததை விடவும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது, வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து விளையாடுவதுதான் கேமிங் என்ற தோற்றத்தை மாற்றியதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. ஊர் ஊராக, தெரு தெருவாக போக்கிமான் பிடிக்கவைத்து ஆக்மென்டட் ரியாலிட்டியில் அசத்தியது இந்த போக்கிமான் கோ.

sd6_13529.jpg

4)   Instagram – ஏற்கெனவே பிரபலமான சமூக வலைத்தளம்தான் இன்ஸ்டாகிராம். இந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில்  4-வது இடம் பிடித்திருக்கிறது இன்ஸ்டா. ஃபேஸ்புக் வாங்கிய நிறுவனம்தான் இந்த இன்ஸ்டாகிராம். ஆனால் இந்த பட்டியலில் ஃபேஸ்புக்கையே முந்தியிருக்கிறது.

5)   Facebook – என்னடா இன்னமும் இந்த பெயர் வரவில்லையே என்று நினைப்பவர்கள் தான் அதிகம்…. தெரியும், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எங்களுக்கு தெரியும். ஃபேஸ்புக் பற்றி உங்களுக்கு தெரியாததா மக்களே? 

 6)    Youtube – கூகுளின் வீடியோ உலகம்தான் இந்த யூ-டியூப் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இசை, அரசியல், வரலாறு, சினிமா, விளையாட்டு, கார்ட்டூன் என கலந்துகட்டி என்டர்டெயின் செய்யும் மினி தியேட்டர் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது 6-வது இடத்தைப் பெற்றிருக்கிறது.

sd5_13562.jpg

7)    Google Maps – புதிய ஊர், புதிய நாடு எனப் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் ஆண்ட்ராய்டு வழிகாட்டி. இதன் துல்லியத்தன்மை காரணமாக இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 8)    Pandora – இது ஒரு வகையான ரேடியோ ஆப். ப்ளே ஸ்டோர் மூலம் இதனை டவுன்லோட் செய்து கொண்டால், எந்த ரேடியோ ஸ்டேஷன் வேண்டும் அதை தேர்வு செய்து கொள்ளலாம். பாடலாசிரியர், நடிகர், காமெடியன்கள் என, உங்களுக்கு விருப்பமானவர்களின் விருப்பமான ப்ளே லிஸ்டை வைத்துகொள்ளலாம். இந்த ஆப்பில் அக்கவுன்ட் உருவாக்கி உபயோகப்படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது காரிலோ…எங்கு கனெக்ட் செய்து கேட்டுக் கொள்ளலாம்….இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்னை, இது அதிக அளவு மொபைல் டேட்டாவை இழுக்கும். அதனால், வை-ஃபை யில் பயன்படுத்துங்கள் என்று நிறுவனமே அறிவுரை கூறியுள்ளது. 

sd2_13301.jpg

9)   Netflix – முழுக்க முழுக்க படங்கள் மற்றும் சீரியல்களுக்கான ஆப் இது. இதில் ஒருமுறை மெம்பர் ஆவதன் மூலம், எத்தனை சீரியல்கள் படங்களை வேண்டுமானாலும் கண்டு களித்திடலாம்.  இதற்கு போட்டியாக இன்னும் பல நிறுவனங்கள் களமிறங்க உள்ளன.

10)    Spotify Music -  இது ஒரு மியூசிக் ஆப் மக்களே!!!! உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களை தனியே ப்ளே லிஸ்ட் போட்டு வைத்துக் கொள்ளலாம். பிடித்த பாடல்களை இதனுள்ளேயே டவுன்லோடு செய்வதன் மூலம், விரும்பும் போதெல்லாம் அவற்றை ஆஃப்-லைனில் கேட்டுக் கொள்ளலாம். இடையில் விளம்பரங்கள் தொல்லைகள் இருக்காது…..பாடகர்கள் வரியாகவோ, பாட்டின் வரியாகவோ.. உங்களுக்கு பிடித்த பாடலை தனியாக ஃபோல்டர் போட்டு வைத்துக்கொள்ளலாம். நினைக்கும் நேரத்தில் நினைக்கும் பாடலை கேட்க உதவும் இந்த ஆப். 

 

அத்துடன் இந்த ஆண்டின் சிறந்த ஆப்பாக 'பிரிஸ்மா'-வை டிக் அடித்திருக்கிறது ஆப்பிள். சிறந்த கேமாக 'கிளாஷ் ராயலே' தேர்வு செய்யப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரின் தேர்வும் இதேதான். கிளாஷ் ஆப் கிளான்ஸ் கேமை உருவாக்கிய சூப்பர்செல் நிறுவனத்தின் மற்றொரு கேம்தான் இந்த கிளாஷ் ராயலே. 

sd3_13181.jpg

பிரிஸ்மா ஆப் பற்றி சொல்லவே தேவையில்லை. உங்கள் கியூட் செல்ஃபிக்களை,  செல் டிஸ்ப்ளேயில் தீட்டிய ஓவியம் போல மாற்றும் இதன் மவுசு இன்னும் குறையவேயில்லை எனலாம்.

http://www.vikatan.com/news/information-technology/74469-most-downloaded-apps-of-2016.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.