Jump to content

2016-ல் ஆப்பிளில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட App எது தெரியுமா?


Recommended Posts

2016-ல் ஆப்பிளில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட App எது தெரியுமா?

ஆப்

ந்த வருடம் ஆப்பிள் ஏப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப் 10  ஆப்ஸ்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அத்துடன் இந்த ஆண்டின் சிறந்த ஆப், சிறந்த கேம் இரண்டையும் அறிவித்துள்ளது. டாப் 10 இலவச ஆப்கள் பற்றிய குட்டி இன்ட்ரோ இங்கே...

 1)    Snapchat - இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷனாக மட்டும் இல்லாமல் இது ஒரு இமேஜ் மெசேஜிங் ஆப்.....வாட்ஸ்அப் போல மிக வேகமாக வளர்ந்துவருகிறது இந்த ஸ்னாப்சாட். இந்த ஆண்டு அதிகம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்யப்பட்டது ஸ்னாப்சாட்தான். 

 2)    Messenger - நாம் அனைவருக்கும் தெரிந்த ஆப் இது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு மெசேஜிங் ஆப் இது. இதன் மூலம், வீடியோ கால், வாய்ஸ் கால் என எல்லா வகை வசதிகளும் இதில் உண்டு. தற்போது புதிதாய் வந்த இதன் அப்டேட்டில், நாம் நார்மலாக உபயோகிக்கும் மெசேஜிங்க் ஆப்பையும் பயன்படுத்த இயலும். இதை நம்மை இன்ஸ்டால் செய்ய வைக்க ஃபேஸ்புக் பட்டபாடு, ஃபேஸ்புக் பயன்படுத்திய அனைவரும் அறிந்ததுதான்.

3)   Pokeman Go - ஜூன் மாதம்தான் இது லான்ச் ஆனது என்றாலும், எதிர்பார்த்ததை விடவும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது, வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து விளையாடுவதுதான் கேமிங் என்ற தோற்றத்தை மாற்றியதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. ஊர் ஊராக, தெரு தெருவாக போக்கிமான் பிடிக்கவைத்து ஆக்மென்டட் ரியாலிட்டியில் அசத்தியது இந்த போக்கிமான் கோ.

sd6_13529.jpg

4)   Instagram – ஏற்கெனவே பிரபலமான சமூக வலைத்தளம்தான் இன்ஸ்டாகிராம். இந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில்  4-வது இடம் பிடித்திருக்கிறது இன்ஸ்டா. ஃபேஸ்புக் வாங்கிய நிறுவனம்தான் இந்த இன்ஸ்டாகிராம். ஆனால் இந்த பட்டியலில் ஃபேஸ்புக்கையே முந்தியிருக்கிறது.

5)   Facebook – என்னடா இன்னமும் இந்த பெயர் வரவில்லையே என்று நினைப்பவர்கள் தான் அதிகம்…. தெரியும், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எங்களுக்கு தெரியும். ஃபேஸ்புக் பற்றி உங்களுக்கு தெரியாததா மக்களே? 

 6)    Youtube – கூகுளின் வீடியோ உலகம்தான் இந்த யூ-டியூப் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இசை, அரசியல், வரலாறு, சினிமா, விளையாட்டு, கார்ட்டூன் என கலந்துகட்டி என்டர்டெயின் செய்யும் மினி தியேட்டர் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது 6-வது இடத்தைப் பெற்றிருக்கிறது.

sd5_13562.jpg

7)    Google Maps – புதிய ஊர், புதிய நாடு எனப் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் ஆண்ட்ராய்டு வழிகாட்டி. இதன் துல்லியத்தன்மை காரணமாக இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 8)    Pandora – இது ஒரு வகையான ரேடியோ ஆப். ப்ளே ஸ்டோர் மூலம் இதனை டவுன்லோட் செய்து கொண்டால், எந்த ரேடியோ ஸ்டேஷன் வேண்டும் அதை தேர்வு செய்து கொள்ளலாம். பாடலாசிரியர், நடிகர், காமெடியன்கள் என, உங்களுக்கு விருப்பமானவர்களின் விருப்பமான ப்ளே லிஸ்டை வைத்துகொள்ளலாம். இந்த ஆப்பில் அக்கவுன்ட் உருவாக்கி உபயோகப்படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது காரிலோ…எங்கு கனெக்ட் செய்து கேட்டுக் கொள்ளலாம்….இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்னை, இது அதிக அளவு மொபைல் டேட்டாவை இழுக்கும். அதனால், வை-ஃபை யில் பயன்படுத்துங்கள் என்று நிறுவனமே அறிவுரை கூறியுள்ளது. 

sd2_13301.jpg

9)   Netflix – முழுக்க முழுக்க படங்கள் மற்றும் சீரியல்களுக்கான ஆப் இது. இதில் ஒருமுறை மெம்பர் ஆவதன் மூலம், எத்தனை சீரியல்கள் படங்களை வேண்டுமானாலும் கண்டு களித்திடலாம்.  இதற்கு போட்டியாக இன்னும் பல நிறுவனங்கள் களமிறங்க உள்ளன.

10)    Spotify Music -  இது ஒரு மியூசிக் ஆப் மக்களே!!!! உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களை தனியே ப்ளே லிஸ்ட் போட்டு வைத்துக் கொள்ளலாம். பிடித்த பாடல்களை இதனுள்ளேயே டவுன்லோடு செய்வதன் மூலம், விரும்பும் போதெல்லாம் அவற்றை ஆஃப்-லைனில் கேட்டுக் கொள்ளலாம். இடையில் விளம்பரங்கள் தொல்லைகள் இருக்காது…..பாடகர்கள் வரியாகவோ, பாட்டின் வரியாகவோ.. உங்களுக்கு பிடித்த பாடலை தனியாக ஃபோல்டர் போட்டு வைத்துக்கொள்ளலாம். நினைக்கும் நேரத்தில் நினைக்கும் பாடலை கேட்க உதவும் இந்த ஆப். 

 

அத்துடன் இந்த ஆண்டின் சிறந்த ஆப்பாக 'பிரிஸ்மா'-வை டிக் அடித்திருக்கிறது ஆப்பிள். சிறந்த கேமாக 'கிளாஷ் ராயலே' தேர்வு செய்யப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரின் தேர்வும் இதேதான். கிளாஷ் ஆப் கிளான்ஸ் கேமை உருவாக்கிய சூப்பர்செல் நிறுவனத்தின் மற்றொரு கேம்தான் இந்த கிளாஷ் ராயலே. 

sd3_13181.jpg

பிரிஸ்மா ஆப் பற்றி சொல்லவே தேவையில்லை. உங்கள் கியூட் செல்ஃபிக்களை,  செல் டிஸ்ப்ளேயில் தீட்டிய ஓவியம் போல மாற்றும் இதன் மவுசு இன்னும் குறையவேயில்லை எனலாம்.

http://www.vikatan.com/news/information-technology/74469-most-downloaded-apps-of-2016.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.