Jump to content

துணிவே துணை என தனித்து பயணிக்கும் பெண்கள்


Recommended Posts

துணிவே துணை என தனித்து பயணிக்கும் பெண்கள்

 
 

பெண்களின் இடம் சமையலறை என்ற காலம் வேகமாக மாறிவருகிறது. பெரும்பாலான துறைகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கல்வி கற்பது மட்டுமல்ல பணியிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் பொழுதுபோக்கு என்று வரும்போது பெண்கள் தமது குடும்பத்திற்கே முன்னுரிமை அளிப்பது தான் அதிகம்.

துணிவே துணை என தனித்து பயணிக்கும் பெண்கள்
 துணிவே துணை என தனித்து பயணிக்கும் பெண்கள்

ஆண்களை போல தமக்கு பிடித்த இடங்களுக்கு தமது நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ பெண்கள் சுற்றுலா செல்வதில்லை. ஆனால் அந்த நிலைமை தற்போது மாறிவருகிறது. தனியாகவே சுற்றுலா செல்ல பல பெண்கள் தொடங்கிவிட்டனர். அதேபோல பெண்கள் குழுவாக பயணம் செய்யும் போக்கும் தற்போது அதிகரித்துவருகின்றது. சிலர் சிநேகிதிகளுடன் பயணிக்கிறார்கள். அப்படி தன்னை போல சுற்றுலா செல்ல விரும்பும் சிநேகிதி இல்லாத பெண்கள் என்ன செய்கிறார்கள்? பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட பயண நிறுவனங்களை தொடர்பு கொண்டு புதிய பெண் குழுக்களுடன் சுற்றுலா செல்கிறார்கள்.

பெண்கள் குழு பயணங்கள்

இந்தியாவில் சமீபத்தில் பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட பயண நிறுவன்ஙகளில் ஒன்று தான் 'விமன் ஆன் கிலவுட்ஸ்' அதாவது 'மேகங்களில் பெண்கள்'. புதிய பயண அனுபவங்களையும் நண்பர்களையும் தேடும் பெண்களுக்கு உதவவே இது உருவாக்கப்பட்டதாம். குழுவாக பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கும், பயணம் செய்ய பெண் நண்பர்களை தேடும் பெண்களுக்கும் இந்த நிறுவனம் சுற்றுலாப் பயணங்களை ஏற்பாடு செய்கின்றது. இந்தியாவின் பெரும்பாலான இடங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை ஏற்பாடு செய்யும் இந்த குழுவின் பேஸ்புக் பக்கத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

பெண்கள் குழுவாக பயணிக்க விரும்பும் போக்கு தற்போது அதிகரித்துவருவதாக இந்த பயண நிறுவனமான விமன் ஆன் கிலவுட்ஸ்-இன் மேலாளர் ஷிரீன் மெஹ்ரா கூறுகிறார். அவர்கள் 2007ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கியபோது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு சுற்றுலா பயணத்தை மட்டுமே ஏற்பாடு செய்திருந்ததாகவும், தற்போது ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்வதாகவும் ஷிரீன் கூறுகிறார். பணிக்கு செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள், ஓய்வுபெற்ற பெண்கள் என பல தரப்பட்ட பெண்கள் பயணங்கள் மேற்கொள்வதாக ஷிரீன் கூறுகிறார். முதலில் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்களே பயணங்களுக்கு வந்ததாகவும், தற்போது 15 வயது முதல் 65 வயது வரையிலான பெண்கள் வருகின்றனர் என்றும் இவர் கூறுகிறார்.

பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட பயண நிறுவன்ஙகளில் ஒன்று தான் 'விமன் ஆன் கிலவுட்ஸ்'.  பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட பயண நிறுவன்ஙகளில் ஒன்று தான் 'விமன் ஆன் கிலவுட்ஸ்'.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு அதற்கென்று எந்த பெரிய விளம்பரங்களும் வெளியிடப்படவில்லை. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும், வாய் வார்த்தை மூலமாகவும் மட்டுமே இவர்களது இந்த முயற்சி பிரபலமடைந்துள்ளது. இதில் ஆண்களின் உதவியின்றி பெண்களே எல்லா ஏற்பாடுகளை செய்வதாகவும், ஒரு பெண் சுற்றுலா வழிகாட்டி இவர்களுடன் பயணிப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகின்றது. இரவு நேர பயணங்களுக்கு மட்டும் ஒரு ஆண் உதவியாளரை பயன்படுத்துகின்றனர்.

பெண்கள் தனியாகவும் குழுவாகவும் சுற்றுலா செல்லும் போக்கு அதிகரித்துவருவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார சுதந்திரமே என்கிறார் எழுத்தாளரும் செய்தியாளருமான சாருகேசி ராமதுரை. அத்துடன் சுற்றுலா துறையின் உள்கட்டமைப்புகளிலும், பயண திட்டமிடல் மற்றும் செயலாக்கம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பெண்கள் பயணிப்பதை எளிதாக்குகிறது என்றும் சாருகேசி குறிப்பிடுகிறார்.

பயணங்களும் இணையத்தளங்களும்

சமூக வலைத்தளங்கள் பல பெண்களின் சுற்றுலா பயணங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வலைப்பதிவுகள், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பெண்கள் தமது சொந்த அனுபவங்களை பகிர்வது மற்ற பெண்களுக்கும் ஊக்கமளிக்கின்றது. ட்ரிப் அட்வைசர் போன்ற இணையதளங்கள், சுற்றுலா தலங்கள், அங்கிருக்கும் உணவகங்கள், இருப்பிடங்கள் குறித்த செய்திகளை வெளியிட்டுவருவதும் கூட சுற்றுலா துறையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுவரை தாம் பயணிக்காத இடங்களுக்கு செல்வதற்கு முன்பாகவே அந்த இடத்தைப்பற்றியும் அதற்கு பயணித்தவர்களின் அனுபவங்கள் குறித்தும் பெண்களால் நிறையவே அறிந்துகொள்ளமுடிகிறது.

இந்தியாவில் சுற்றுலா பயணங்கள் சில நேரங்களில் மோசமான அனுபவமாக கூட மாறலாம். ஊடகங்களில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போக்கிலேயே பல நேரங்களில் நாம் செய்திகளை வாசிக்கிறோம். தனியாக பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்களில் ஒன்று யாராவது அவர்களை பின்தொடர்ந்து வந்து ஆளில்லா நேர தாக்குவார்களோ என்ற அச்சம் தான் என்கிறார் சாருகேசி. இந்தியாவில் இது போன்ற பல சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்றிருப்பதாலேயே இந்த அச்சம் என்றும் அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு பெண்ணும் தனது மனதளவில் தன்னை மேலும் வலிமையாக்கிக்கொள்ள தனியே பயணிப்பது மிகவும் அவசியம்'ஒவ்வொரு பெண்ணும் தனது மனதளவில் தன்னை மேலும் வலிமையாக்கிக்கொள்ள தனியே பயணிப்பது மிகவும் அவசியம்'

அத்துடன் பெண்கள் பயணிக்கும்போது போதுமான பாதுகாப்பும் சுகாதாரமும் உள்ள விடுதிகள், பொது கழிப்பிடங்கள் ஆகியவற்றை எல்லா இடங்களிலும் காண முடியாது. மேலும் பயணம் செய்யவிரும்பும் பெண்களின் குடும்பத்தாரும் கூட பல நேரங்களில் இதற்கு ஒத்துழைப்பதில்லை. பெண்கள் தனியாக பயணிப்பது பாதுகாப்பானது அல்ல என்ற ஒரு பொதுவான எண்ணமே இதற்கு காரணம்.

ஒவ்வொரு பெண்ணும் தனது மனதளவில் தன்னை மேலும் வலிமையாக்கிக்கொள்ள தனியே பயணிப்பது மிகவும் அவசியம் என்கிறார் சாருகேசி. எந்த ஒரு பிரச்சனையையும் சிக்கலையும் கையாளும் தைரியமும் தன்னம்பிக்கையும் இது போன்ற பயணங்களில் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். குழுவாக சென்றாலும் சரி தனியாக சென்றாலும் சரி நம்மை ஒரு சிறந்த சிந்தனை கொண்ட ஆளாக இந்த பயணங்கள் மாற்றிவிடும் என்கிறார் சாருகேசி.

http://www.bbc.com/tamil/arts-and-culture-38242928

சரி, இதை படிக்கும் பெண்களே, அடுத்த பயணத்துக்கு தயாரா?உங்கள் பயணத்துக்கு உதவக்கூடிய சில குறிப்புகள் இதோ

 

 

தனியே சுற்றுலா செல்லும் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

  •  

'சோலோ டிராவிலிங்' அதாவது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் துணையின்றி தனியாக சுற்றுலா செல்ல பலர் விரும்புவார்கள். இது ஆண்களால் எளிதில் செய்யுமளவுக்கு பெண்களாலும் செய்ய முடியுமா?

 

இந்தியாவில் பெண்கள் தனிச் சுற்றுலா செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது.

 இந்தியாவில் பெண்கள் தனிச் சுற்றுலா செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது.

இவ்வாறு தனிச் சுற்றுலா செல்ல விரும்பும் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சுத்தம், சுகாதாரம், வேண்டாத கேள்விகள், தகாத பிரச்சனைகள், பின்தொடரல்கள், தொல்லைக்கொடுக்கும் ஆண்கள் என பல சிக்கல்களை பெண் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர்கள் சந்திக்கிறார்கள்

பெண்கள் இந்தியாவில் தனியாக பாதுகாப்பாக சுற்றுலா பயணம் செல்வதற்கு தேவையான சில குறிப்புகளை பிரபல எழுத்தாளரும், செய்தியாளரும், தனியே பல சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுள்ள பெண்மணியுமான சாருகேஸி ராமதுரை பிபிசி தமிழுக்காக எழுதியுள்ளார்.

இதுவரை இந்தியாவில் மொத்தம் 22 மாநிலங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இவர், தனது ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமான ஒன்று என்று கூறுகிறார். இந்தியாவின் எல்லா மாநிலங்களும் தனக்கென்ற ஒரு தனி சிறப்பம்சத்தை கொண்டுள்ளதாக கூறும் இவர் பெரிய நகரங்களை விட சிறிய கிராமங்களின் மக்கள் தாராள மனமுடையவர்கள் என்றும் விருந்தோம்பலில் சிறந்து விளங்குபவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

பிரபல எழுத்தாளரும், செய்தியாளருமான சாருகேஸி ராமதுரை பிரபல எழுத்தாளரும், செய்தியாளருமான சாருகேஸி ராமதுரை

இந்தியாவில் தனியே சுற்றுலா செல்லும் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பத்து முக்கிய டிப்ஸ்/குறிப்புகள் :

  • கலாசாரத்தை மதிக்க வேண்டும் : நீங்கள் பயணிக்கும் ஊரின் உள்ளூர் கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் வலது கையை பயன்படுத்துவதுதான் மரியாதைக்குரிய செயலாக பார்க்கப்படும்.
  • ஆள் பாதி ஆடை பாதி : ஒழுக்கமான உடை அணிவது பாதுகாப்பானது. இது பெண் உரிமைக்கு எதிரான ஒரு அறிவுரையாக பார்க்கப்படலாம். பொதுவாக ஏற்கப்படும் வகையிலான ஆடைகளை அணிவதே நாம் தனியாக பயணிக்கும்போது நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் தேவையற்ற கவனத்தை ஈர்க்காமல் இருக்கவும் உதவும்.
  • முன்கூட்டியே திட்டமிடல்: பயணத்துக்கு தேவையான அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பயணச் சீட்டுகள், ஹோட்டல் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்துகொள்வது நல்லது.
  • இரவு நேரப் பயணங்களை தவிர்க்கவும் : நீங்கள் சென்று சேரும் இடத்திற்கு இருட்டில் சென்று சேரவேண்டாம். இது எல்லா இடங்களுக்கு பொருந்தினாலும், சிறிய கிராமப்புற இடங்களுக்கு பயணிக்கும்போது குறிப்பாக பொருந்தும். தங்கும் இடத்தைத் தேடி இரவில் செல்வது என்பது பாதுகாப்பானது அல்ல.
  • தகவல் பரிமாற்றம் வேண்டாம் : தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். நீங்கள் தனியாக பயணிக்கிறீர்களா என்று கேட்கப்படும் சில நேரங்களில் உங்களுக்கு ஒரு கணவர் இருப்பதாக பொய் சொல்வது உங்கள் பாதுகாப்புக்கு உதவலாம்.
  • மதுவை தவிர்ப்பது நல்லது : இந்திய கலாச்சாரத்தின்படி பெண்கள் மது அருந்துவது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சமூக பழக்கம். அதைப் பார்க்கும் பலர் முகம் சுளிப்பார்கள். எனவே நீங்கள் என்ன அருந்த விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் இருக்கும் சூழலை மனதில் வைத்து முடிவெடுங்கள்.
  • கைத்தொலைப்பேசி எண் அவசியம் : உங்கள் கைத்தொலைப்பேசி ஒரு இடத்தில் பணி செய்யவில்லை என்றால் ஒரு உள்ளூர் தொலைப்பேசி எண்ணை வாங்கிக்கொள்ளுங்கள். எப்போதும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். அவசர உதவி தேவைப்பட்டால் அவர்களை அணுக அது உதவும்.
  • நண்பரிடம் பகிர வேண்டும் : நீங்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருப்பீர்கள் என்ற தகவல்களை உங்கள் நண்பர் அல்லது உறவினர் ஒருவரிடம் எப்பொழுதும் தெரிவித்துவிடுங்கள்.
  • பொறுமை அவசியம் : சாந்தமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இந்தியா போன்ற இடங்களில் நாம் நினைத்த காரியங்கள் நாம் நினைத்த வேகத்தில் நடைபெறுவதில்லை. அதனால் கோபமடையாமல் சகித்துக்கொள்ள வேண்டும். எதுவொன்றையும் சமாளிக்க கோபம் அல்லாத ஒரு சிறந்த வழி இருக்கவே செய்யும்.
  • தைரியமும் மன உறுதியுமே விடை : பொறுமையாக இருக்கும் அதே நேரத்தில் உறுதியாகவும், கடுமையாகவும் இருப்பதாக காட்டிக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். சில நேரங்களில் வேண்டாம் என்று நாம் சொல்வது போதாது. நமக்கு பிடிக்காத அல்லது சங்கடமான சூழல்களில் சத்தமாக ஆக்கரோஷமாக கத்திப்பேசி உதவி கோர தயங்காதீர்கள். இந்தியர்கள் உதவிக்கு வர தயங்கமாட்டார்கள்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-38242927

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.