Jump to content

திரை விமர்சனம்: பழைய வண்ணாரப்பேட்டை


Recommended Posts

திரை விமர்சனம்: பழைய வண்ணாரப்பேட்டை

 

 
palaya_3099605f.jpg
 
 
 

இடைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் பழைய வண் ணாரப்பேட்டையில் பொது வுடைமைக் கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடும் காவல் துறை, பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்தியையும் (பிரஜன்) அவரது நண்பர்கள் 5 பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் அள்ளிக்கொண்டு செல்கிறது. அவர்களில் ஒருவர்தான் கொலை யாளி என்ற முடிவுக்கு காவல் துறை வருகிறது. ஆனால், இதில் உதவி ஆணையர் மூர்த்திக்கு (ரிச்சர்ட்) நம்பிக்கை இல்லை. அரசியல் கொலையின் சூத்திரதாரி யைத் தேடி அவர் புறப்படுகிறார். இன்னொரு பக்கம், தனது நண் பனை மீட்க உண்மையான குற்ற வாளியைக் கண்டுபிடித்தாக வேண் டும் என்று கார்த்தியும் புறப்படு கிறார். இருவரில் யார் முதலில் குற்றவாளியை நெருங்கினார்கள், அவர் யார்? அவரது பின்னணி என்ன என்பதுதான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’.

கதையைத் தொடங்கும் விதம், கையாளும் பிரச்சினை, அதை நோக்கி கவனச் சிதறல் இல்லா மல் பயணிப்பது எனத் திரைக் கதை வலுவாக அமைக்கப்பட் டிருக்கிறது. ஆனால், திரைக் கதையை நகர்த்திச் செல்லும் பல காட்சிகளில் அழுத்தம் இல்லாததால் அவ்வப்போது படம் தொங்கிவிடுகிறது.

சந்தேகத்தின்பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்படு பவர்களின் வாயிலாக வட சென்னையின் அன்றாட வாழ்க் கையின் சித்திரங்களைத் துணைக் கதாபாத்திரங்களின் அனுபவச் சிதறலாகத் தந்திருக்கும் இயக்கு நரைப் பாராட்டலாம். ‘பட்டறை குமார்’ என்ற மனிதனின் முகத்தைக் கடைசிவரை வெளிப்படுத்தாமல், நிழலாகவே காட்டி, அவரது நிழல் உலக ராஜ்ஜியத்தின் பயங்கரத்தைச் சித்தரித்த விதம் புதுமை!

காதலே தேவைப்படாத இந்தக் கதையில் திணிக்கப்பட்டிருக்கும் காதல் காட்சிகள் ரசிக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதை முக்கியப் பிரச்சினையுடன் இணைத்திருந்தால் படத்தின் வண் ணம் இன்னும் கூடியிருக்கலாம்.

பிரஜனுக்கு சென்னையின் வட்டார வழக்கு சரியாக வர வில்லை. இவரது நண்பர்களாக வரும் இளைஞர்கள் நன்கு நடித் திருக்கிறார்கள். உதவி ஆணை யராக வரும் ரிச்சர்ட் கம்பீரமாக நடித்திருக்கிறார். தன் கதாபாத்திரத் துக்குத் தேவைப்படும் புத்திசாலித் தனத்தின் போதாமையை மீறி யதார்த்தமான காவல் அதிகாரி யாக நடித்திருக்கிறார். கருவேப் பிலை கதாநாயகியாக நடித் திருக்கும் அஸ்மிதா பற்றி குறிப்பிட ஏதுமில்லை.

கதைக்கான மனநிலையை உருவாக்க ஒளி குறைந்த ஒளிப் பதிவு போதும் என்று கருதி யிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாருக். அது நன்றாகவே எடுபட்டிருக்கிறது. ஆனால், இசை யமைப்பாளர் ஜூபின், படத் தொகுப்பாளர் எஸ்.தேவராஜ் ஆகிய இருவரும் சரிவரத் தங்கள் வேலையைச் செய்யாதது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.

வண்ணம் குறைவாக இருந் தாலும், அரசியல் அழுக்கு புரை யோடிக் கிடக்கும் வடசென்னைப் பகுதியின் இருட்டு மனிதர் ஒருவரைத் தேடிச் செல்லும் விறுவிறுப்பான பயணத்தை யதார்த்தத்துடன் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மோகன்.ஜி.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-பழைய-வண்ணாரப்பேட்டை/article9412283.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.