Jump to content

திரை விமர்சனம்: மாவீரன் கிட்டு


Recommended Posts

திரை விமர்சனம்: மாவீரன் கிட்டு

 

 
maaveeran_3099607f.jpg
 
 
 

இயக்குநர் சுசீந்திரனும், விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கும் 3-வது திரைப்படம் இது. கிரிக்கெட் விளை யாட்டில் இருக்கும் சாதி அரசியலை ‘ஜீவா’ திரைப்படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்த சுசீந்திரன், இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார்.

புதூர் என்ற கிராமத்தில் 1980-களில் நடக்கும் சாதியப் பாகுபாடுகளைப் பின்னணி யாக வைத்து இந்தப் படம் பயணிக்கிறது. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் அவலத்தைக் காட்டும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. தொடர்ந்து சாதிப் பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்கள் கையாளப்படுகின்றன.

12-ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுகிறான் கிட்டு (விஷ்ணு விஷால்). கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் சின்ராசு (ராதாகிருஷ்ணன் பார்த்திபன்), கிட்டுவை கலெக்டருக்குப் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துகிறார். கல்லூரியில் சேரும் கிட்டுவும் கலெக்டராகும் லட்சியத்துடன் படிக்கிறான். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் படித்து முன்னேறுவதை விரும்பாத அந்த ஊர் ஆதிக்கச் சாதியினர் கிட்டு மீது கொலைப் பழி சுமத்தி, சிறைக்கு அனுப்பப் பார்க் கின்றனர். கிட்டுவைக் கொலைப் பழியில் இருந்து விடுவிக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது உரிமைகள் கிடைக் கவும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார் சின்ராசு. அந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா என்பதுதான் ‘மாவீரன் கிட்டு’.

1980-களின் பின்னணியில் எடுக்கப்பட்டிருந் தாலும், சமகால சாதிய வன்முறை நிகழ்வு களின் தாக்கத்தையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களின் இறுதி ஊர் வலம் பொதுவழியில் நடைபெறாமல் தடுக்கும் ஆதிக்கச் சாதியினர், அதற்கு உறு துணையாகச் செயல்படும் காவல் துறை யினர், ஆணவப் படுகொலைகள் ஆகியவற்றின் பிரதிபலிப்புகள் படத்தில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியைக் கொண்டாடி, தொடர்ச்சியாகப் படமெடுக்கும் இயக்குநர்கள் மத்தியில், ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் பதிவுசெய்ய முயன்றிருக்கும் சுசீந்திரனை நிச்சயம் பாராட்டலாம்!

தான் சொல்லவந்த கருத்தை வசனங்கள், காட்சிகள், பாத்திர வார்ப்புகள் மூலமாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் சுசீந் திரன். இளைஞர்கள் மத்தியிலும் சாதி உணர்வு ஆழமாக வேரோடியிருப்பதையும் காட்டுகிறார். பாம்புக் கடிபடும் பெண்ணைக் காப்பாற்ற, சாதியைத் தூக்கி எறிந்துவிட்டு மாணவர்கள் களமிறங்கும் காட்சி நெகிழவைக்கிறது.

எந்தவித சிக்கலும் இல்லாமல் முதல்பாதி திரைக்கதை யதார்த்தமாகவும், சீராகவும் பயணிக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையில் அழுத்தம் இல்லை. தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க சின்ராசு போடும் திட்டம் வலுவானதாக இல்லை. கிட்டு தலைமறைவாக இருக்கும்போது வரும் ‘டூயட்’ பாடல்கள் கதைப் போக்கைப் பலவீனப்படுத்துவதுடன், பொறுமையை சோதிக்கின்றன.

படத்தின் முடிவு அதிர்ச்சிகரமாக இருந் தாலும் ஏற்கத்தக்க விதத்தில் உள்ளது. மாவீரன் என்று சொல்லப்படும் பாத்திரம் எடுக்கும் முடிவு, உண்மையில் எது வீரம் என்னும் கேள்வியை எழுப்புகிறது.

கிட்டு கதாபாத்திரத்துக்கு இணையான வலிமையுடன் சின்ராசு கதாபாத்திரமும் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. விஷ்ணுவும், பார்த்திபனும் தங்களது பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கின்றனர். திவ்யா படம் முழுக்க வந்தாலும் கோமதி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதாக மனதில் பதியவில்லை. காவல் துறை அதிகாரியாக ஹரீஷ் உத்தமன் மிரட்டியிருக்கிறார்.

பாடலாசிரியர் யுகபாரதி முதல்முறையாக இந்தப் படத்தில் வசனம் எழுதியிருக்கிறார். யதார்த்தமும் கூர்மையும் கொண்ட வசனங்கள் பல இடங்களில் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள், சமூகத் துக்கு கேட்கும் வகையில் பிரச்சினை வலுவாகக் கையாளப்பட்டிருக்கிறது. இரண் டாம் பாதியை மேலும் கவனமாகச் செதுக்கி யிருந்தால் படம் சொல்லும் செய்தி சரியான வீச்சுடன் பார்வையாளர்களைச் சென்று சேர்ந்திருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-மாவீரன்-கிட்டு/article9412284.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு என்ற மாவீரனை நினைவு கூறும் வகையில்.. காட்சி அமைந்திருப்பது போல தோன்றினாலும்.. அந்த மாவீரர்களின் உண்மையான போராட்ட நியாயம் மறைக்கப்பட்டிருக்கோ அல்லது மறைக்கப்பட இவையும் காரணமாக்கப்படுமோ என்றும் சிந்திக்க தோன்றுகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.