Jump to content

'முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்வதே நல்லது!' - தமிழக அமைச்சர்களின் மனநிலை


Recommended Posts

'முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்வதே நல்லது!'  - தமிழக அமைச்சர்களின் மனநிலை 

 

ops1_13048.jpg

புதிய முதல்வராக ஆளுநர் மாளிகையில் 5-ம் தேதி நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். 'தற்போதுள்ள சூழலில் தலைமைப் பதவிக்கு வர விரும்பினார் எடப்பாடி. சசிகலாவின் சமாதானத்தால் அமைதியாகிவிட்டார். தலைமைக்கழக கூட்டத்திலும் எடப்பாடிக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்த ஜெயலலிதா, 2011-16ம் ஆண்டு ஆட்சியில் கோலோச்சியவர்களை ஓரம்கட்டியே வைத்திருந்தார். 2016 தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொடுத்ததில், கொங்கு மண்டலத்தின் பங்கு அதிகம். இதனால் அகமகிழ்ந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்களுக்கு வலுவான துறைகளை வழங்கினார். கடந்த ஆட்சியில் ஓ.பி.எஸ் வசமிருந்த பொதுப் பணித்துறையை எடப்பாடிக்கு வழங்கினார். அவை முன்னவர், நிதியமைச்சர் உள்ளிட்ட பதவிகளை மட்டுமே ஓ.பி.எஸ்ஸுக்கு வழங்கினார். " மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், அமைச்சரவையில் ஓ.பி.எஸ் இடம் பெறுவதே கடினம் என்றுதான் பேசப்பட்டது. முதல்வருக்கு ஓ.பி.எஸ் மீது பெரிய அதிருப்தி இல்லை என்பதால் பதவி வழங்கப்பட்டது.

முதல்வரின் அதிகாரங்களை அவரிடம் வழங்கியதிலும், எடப்பாடி உள்ளிட்டவர்களுக்கு விருப்பம் இல்லை. ஓ.பி.எஸ்ஸை நிழல்போல பின்தொடர்ந்து வந்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவை அடுத்து, புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் பன்னீர்செல்வம். நேற்று முன்தினம் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும், ஓ.பி.எஸ் வசம் முதல்வர் பதவி அளிக்கப்படுவதை கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை. தலைமைக் கழகத்திற்கு வெளியில் கூடியிருந்த சிலர், 'அண்ணன் எடப்பாடி வாழ்க...' என திடீர் கோஷம் எழுப்பினர். எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கும் வராமல் சீனியர் அமைச்சர்கள் சிலர் அப்போலோ மருத்துவமனையிலேயே இருந்தனர். இதனை ஓ.பி.எஸ் தரப்பினர் ரசிக்கவில்லை" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் 

"கட்சியிலும் ஆட்சியிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க, 'ஓ.பி.எஸ் தொடரட்டும்' என அனுமதி கொடுத்தார் சசிகலா. இதற்கு மிக முக்கியக் காரணம். மத்திய அரசின் சாய்ஸாக பன்னீர்செல்வம் இருப்பதுதான். கொங்கு வேளாளர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில், தம்பிதுரையை முன்னிறுத்தும் வேலைகளும் நடந்தன. இறுதியில், ஓ.பி.எஸ் வசமே முதல்வர் பதவி சென்றது. 'இப்படியொரு சூழல் இனி வராது. சின்னம்மா ஆதரவில் எடப்பாடி பதவிக்கு வருவார்' என அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேசி வந்தனர். ஒருகட்டத்தில் கடுப்பான மன்னார்குடி உறவுக்காரர் ஒருவர், ' நம் கையை மீறி நிலைமை செல்லக் கூடாது என்றுதான் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு உள்ளே வரப் பார்க்கிறது. ஒற்றுமையாக இல்லாவிட்டால், நீங்கள்தான் சிரமப்பட வேண்டியிருக்கும்' என கடுமையான குரலில் சொல்லிவிட்டார். இதை உணர்ந்து எடப்பாடி ஆதரவாளர்கள் அமைதியாகிவிட்டனர். ஆனால், நேற்று முதல் நிலைமை அப்படியே மாறிவிட்டது. 'ஓ.பி.எஸ் பக்கம் சாய்வதே சிறந்தது' என சீனியர் அமைச்சர்கள் சிலர் கணக்குப் போட்டுள்ளனர். அதற்கேற்ப, அவரிடம் நெருக்கம் காட்டி வருகின்றனர். சசிகலா ஆதரவாளர்களை ஓரம்கட்டிவிட்டு பன்னீர்செல்வத்தையே முன்னிறுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. 'இதையும் மீறி அமைச்சர்கள் செயல்பட்டால், மத்திய அரசின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்படலாம்' என்பதால் பன்னீர்செல்வத்திடம் கூடுதல் மரியாதை காட்டுகின்றனர்" என்றார். 

" முதல்வர் இருந்த வரையில் கூடுதல் பணிவோடு வலம் வந்தார் ஓ.பி.எஸ். கட்சியில் எவ்வளவோ அவமானங்களை சந்தித்தாலும், அனைத்தையும் மௌனமாகவே எதிர்கொண்டார். இதுவரையில், அவரை ஒரு பொருட்டாகவே அதிகாரிகள் பார்த்ததில்லை. இனி வரக் கூடிய காலங்களில் நிலைமை மாறுமா என்பது மிகப் பெரிய கேள்வி. கட்சியின் எதிர்காலம் குறித்த கவலைதான் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது" என குமுறலோடு பேசினார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/74376-tn-senior-ministers-favours-ops-ahead-of-sasikala.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.