Jump to content

நாரந்தனை படுகொலை: மூவருக்கு மரண தண்டனை


Recommended Posts

நாரந்தனை படுகொலை: மூவருக்கு மரண தண்டனை
 
 

ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில்,  2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது   ஈ.பி.டி.பியினர்  தாக்குதல் நடத்தி இருவரை  படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/187604/ந-ரந-தன-பட-க-ல-ம-வர-க-க-மரண-தண-டன-#sthash.iiiqCqzH.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆடர் குடுத்த தலீவர் டக்கியங்கிளுக்கு?

Link to comment
Share on other sites

இரட்டை கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை.

elam

இரட்டை கொலை குற்றவாளிகள் மூவருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாரந்தனை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் , 18 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

 
குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நீதிமன்றம் இனம் கண்ட மூன்று எதிரிகளுக்கும், இன்றைய தினம் மேல் நீதிபதி இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
 
அத்துடன் 18 பேரை கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அத்துடன் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும், தவறின் ஐந்து வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்பளித்தார். நான்காவது எதிரி குற்றமற்றவர் என கருதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
அதில் முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகள் மீதான 47 குற்ற சாட்டுக்களில் ஒன்றில் இருந்து 24 வரையிலான குற்ற சாட்டுக்களில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 25 தொடக்கம் 47 வரையிலான குற்ற சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
 
இதில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காது தலைமறைவாகி உள்ளனர். அவர்களுக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
குறித்த இரு குற்றவாளிகளும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுவதனால் இலங்கை ஜனாதிபதி இங்கிலாந்து நாட்டின் பிரதமருடனான இராஜதந்திர ரீதியில் அணுகி குற்றவாளிகளை இங்கிலாத்தில் இருந்து நாடுகடத்த வேண்டும் என வேண்டும் எனவும் , அதேபோன்று வெளிவிவகார அமைச்சு , வெளிநாட்டு நீதி அமைச்சு, இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர் ஆகியோர் இராஜதந்திர ரீதியாக அணுகி குற்றவாளிகளை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த வேண்டும் என மேல் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்தார்.
 
அத்துடன் பொலிஸ் மா அதிபருக்கு சர்வதேச பொலிசாரின் உதவியை அணுகி குற்றவாளிகளை கைது செய்யுமாறு உத்தரவு இட்டார்.
 
குறித்த வழக்கின் பின்னணி.
 

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது  ஊர்காவற்துறை நாரந்தனை எனும் இடத்தில் குழு ஒன்று வழி மறித்து துப்பாக்கியால் சுட்டும்,  வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம் மற்றும்  ரெலோ அமைப்பின் ஆதரவாளரான யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
 
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , எம்.கே.சிவாஜிலிங்கம் , மற்றும் ரவிராஜ் உள்ளிட்ட 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
 
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் ,  மதன் என்று அழைக்கப்படும் நடராஜா  மதனராசா ,  ஜீவகன் என்று அழைக்கப்படும் அன்ரன் ஜீவராஜ் மற்றும் நமசிவாயம் கருணாகர மூர்த்தி ஆகிய நால்வர் கைது செய்யபட்டனர்.
 
இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.  47 குற்றசாட்டுக்கள் முன் வைக்கபட்டு குற்றப் பகிர்வு பத்திரம் சட்டமா அதிபரினால் திருகோணமலை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
 
அந்நிலையில் பிணையில் விடுவிக்கபட்டு இருந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் ,  மதன் என்று அழைக்கப்படும் நடராஜா  மதனராசா ,ஆகிய இருவரும் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது தலைமறைவானார்கள். ஏனைய இரு சந்தேக நபர்களும் வழக்கு விசாரணைகளுக்கு சமூகம் அளித்து வந்தனர்.
 
அதனால்  முதலாம், இரண்டாம் எதிரிகள் அற்ற நிலையில் மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் உடன் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் குறித்த வழக்கு யாழ். மேல்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாக சட்டமா அதிபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு அறிவித்தார்.
 
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
அதன் போது முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் மன்றில் ஆஜராகவில்லை. மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் மன்றில் ஆஜராகி இருந்தனர். மூன்றாம் மற்றும் நான்காம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி எம்.ரெமிடியஸ் ஆஜராகி இருந்தார். சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந் ஆஜராகி இருந்தார்.
 
எதிரிகள் தம் மீதான 47 குற்ற சாட்டுக்களையும் மறுத்தனர். அத்துடன் தமக்கு ஜூரி சபை தேவையில்லை எனவும் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகளை நடாத்துமாறும் கூறி இருந்தனர்.
 
அதனை அடுத்து மன்றில் ஆஜராகாத முதலாம் இரண்டாம் எதிரிகளுக்கு பகிரங்க பிடிவிறாந்து மேல்நீதிபதி பிறப்பித்தார். அத்துடன் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிசாரின் உதவியை நாடுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு இட்டார்
 
 குறித்த வழக்கு விசாரணை கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2ம் திகதி வரை தொடர் விசாரணைகளை நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கி இருந்தார்.

http://globaltamilnews.net/archives/9591

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில கூடுதலா தூக்குத் தண்டனை குடுக்கிற ஜட்ஜ் ஐயா இவர் தான் போல கிடக்குது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

இலங்கையில கூடுதலா தூக்குத் தண்டனை குடுக்கிற ஜட்ஜ் ஐயா இவர் தான் போல கிடக்குது. :rolleyes:

 

4 hours ago, Nathamuni said:

அப்ப ஆடர் குடுத்த தலீவர் டக்கியங்கிளுக்கு?

மாமாவுக்கு இப்ப நடுக்கம் தொடங்கியிருக்கும்

அவருக்கான கோடு தான் இது

Link to comment
Share on other sites

ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் மூவருக்கு மரணதண்டனை

City-01-8d7f944f2184e3fd5de2455cb4f5780a53d399f7.jpg

 

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு; நாட்டைவிட்டு தப்பிச்சென்ற எதிரிகள் இருவரை கைதுசெய்யும் வகையில் அரசாங்கத்திற்கு ஐந்து பரிந்துரைகள்
 (ரி.விரூஷன்)

யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­று­றை பகுதியில் தேர்தல் பிர­சாரத்­திற்­காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர்  மீது தாக்­குதல் நடத்தி இரு­வரை படு­கொலை செய்த துடன் பதி­னெட்டு பேருக்கு காய­ம் ஏற்படுத்திய வழக்கில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் மூன்று பேருக்கு இரட்டை மரண தண்டனையும் இருபது வருட கடூழியச் சிறைத்தண்ட னையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சம்பவம் இடம்பெற்றபோது ஈ.பி.டி.பி.யின் ஊர்காவற் றுறைக்கான இராணுவப் பிரிவின் தளபதியாக செயற்பட்ட செபஸ்டியன் ரமேஷ், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா மதனராசா மற்றும் அன்டன் ஜீவராஜா ஆகிய மூவருக்குமே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

வழக்கின் நான்காவது எதிரியான ஈ.பி.டி.பி. உறுப்பினர் நவசிவாயம் கருணாகரமூர்த்தி நீதிமன்றத்தினால் விடு தலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த வழக்கில் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்ட முதல் இரண்டு எதி­ரி­களும் நாட்டை விட்டு தப்பிச் சென்­றுள்ள நிலையில், அவர்­களை உட­ன­டி­யாக கைது செய்யும் வகையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஐந்து பரிந்­து­ரை­க­ளையும் சர்­வ­தேச பகி­ரங்க பிடி­யாணையையும் பிறப்­பித்­துள்­ள­துடன், அதனை பொலிஸ் மா அதிபர் ஊடாக நிறை­வேற்­றவும் யாழ்.மேல் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

குறித்த வழக்கின் தீர்ப்­பா­னது நேற்­றைய தினம் யாழ்.மேல் நீதி­மன்­றத்தின் நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனால் வழங்கப்பட்டபோதே இந்த பரிந்­து­ரை­களும் உத்­த­ரவும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­பவம்

பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான பரப்­பு­ரை­க­ளுக்­காக கடந்த 15 வரு­டங்­க­ளுக்கு முன்பு அதா­வது 2001.11.28ஆம் திகதி அன்று ஊர்­கா­வற்­று­றைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை சேர்ந்த மாவை சேனா­தி­ராசா, சிவா­ஜி­லிங்கம், சுரேஷ் பிரே­ம­சந்­திரன், அமரர் நட­ராஜா ரவிராஜ் போன்­ற­வர்கள் 11வாக­னங்­களில் தமது ஆத­ர­வா­ளர்­க­ளுடன் சென்­றி­ருந்­தனர். இதன்­போது ஊர்­கா­வற்­று­றையை அண்­மித்த நாரந்­தனை பகு­தியில் வைத்து குழுவொன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரை வழி­ம­றித்து துப்­பாக்­கியால் சுட்டும் இரும்பு பொல்­லு­க­ளாலும் அல­வாங்கு மற்றும் கண்டம் கோடரி போன்­ற­வற்­றாலும் வெட்­டியும் அடித்தும் மோச­மான தாக்­குதல் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் இச் சம்­ப­வத்தில் ஏரம்பு பேரம்­பலம், ஜோக­லிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­த­துடன் மாவை சேனா­தி­ராசா, சிவா­ஜி­லிங்கம் உட்­பட பதி­னெட்டு பேர்­வரை படு­கா­ய­ம­டைந்­த­துடன் அவர்கள் பய­ணித்த வாக­னங்­களும் சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னை­ய­டுத்து இச் சம்­பவம் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட தரப்­பினால் வழங்­கப்­பட்ட பொலிஸ் முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து இம் மிலேச்­சத்­த­ன­மான தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் ஈ.பி.டி.பி. கட்­சியின் ஊர்­கா­வற்­று­றையின் இரா­ணுவ பிரிவின் தள­ப­தி­யாக இருந்த செபஸ்­ரியன் ரமேஷ், அதே கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த நட­ராஜா மத­ன­ராசா, அன்ரன் ஜீவ­ராஜா மற்றும் நவ­சி­வாயம் கரு­ணா­க­ர­மூர்த்தி ஆகியோர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

வழக்கு நட­வ­டிக்கை

தொடர்ந்து கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு நட­வ­டிக்­கை­யா­னது ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்று வந்­தி­ருந்­த­துடன் இவ்­வ­ழக்கின் முதலாம் எதி­ரி­யான செபஸ்­ரியன் ரமேஷ் என்­பவர் நீதிவான் நீதி­மன்­றத்தால் வழங்­கப்­பட்ட பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். அதன் பின்னர் வழக்கு நட­வ­டிக்­கையில் வவு­னியா மேல் நீதி­மன்றில் வழங்­கப்­பட்ட பிணையில் இவ் வழக்கின் இரண்டாம் எதி­ரி­யான மத­ன­ராசா என்­ப­வரும் நாட்­டை­விட்டு தப்பிச் சென்­றி­ருந்தார். அதனைத் தொடர்ந்து நாட்டில் நில­விய அசா­தா­ரண நிலை­மை­க­ளினால் இவ் வழக்­கா­னது திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்னர் சட்­டமா அதி­பரால் இவ்­வ­ழக்கு தொடர்­பாக குறித்த நான்கு எதி­ரி­க­ளுக்கும் எதி­ராக 47 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு வழக்­கா­னது 2006.06.26ஆம் திகதி யாழ்.மேல் நீதி­மன்றில் பாரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன் தொடர்ந்து விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­தி­ருந்­தன.

இவ்­வா­றான நிலையில் கடந்த மாதம் 2016.11.21ஆம் திகதி முதல் இவ் வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் முன்­னி­லையில் பதி­னைந்து நாட்கள் தொடர்ந்து விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­படி இவ் வழக்கின் முதலாம் இரண்டாம் எதி­ரிகள் இல்­லாத நிலையில் (மூன்றாம் நான்காம் எதி­ரி­க­ளுடன்) வழக்கை நடத்­தவும் அவர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி றெமி­டியஸ் முன்­னி­லை­யா­கு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டது. அத்­துடன் இதில் குற்­றம்­சாட்­டப்­பட்ட நான்கு எதி­ரி­களும் சம்­பவம் நடந்த சமயம் அவ்­வி­டத்தில் இல்லை என்­பது தொடர்­பாக தம்மால் நிரூ­பிக்­கப்­படும் எனவும் (டிவன்ஸ் ஓவ் அலிபாய்) மன்­றுக்கும் சட்­டமா அதி­ப­ருக்கும் அறி­யத்­த­ரப்­பட்­டி­ருந்­தது. இதனை தொடர்ந்து சாட்சி பதி­வுகள் ஆரம்­ப­மா­கின. இதன்­படி கண்ட சாட்­சிகள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது சாட்­சி­களும் சட்ட வைத்­திய அறிக்கை பிரேத பரி­சோ­தனை அறிக்கை குறித்த எதி­ரி­களை கைது செய்த பொலிஸ் அதி­கா­ரியின் சாட்சி போன்ற அனைத்தும் மன்றில் பதிவு செய்­யப்­பட்­ட­துடன் அவர்­க­ளது சாட்­சி­யங்கள் எதிர் தரப்பு சட்­டத்­த­ர­ணியால் குறுக்கு விசா­ர­ணை­களும் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இவற்­றை­விட இவ் வழக்கில் சாட்­சி­யாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­வர்கள் தற்­போது உயி­ருடன் இல்­லாத நிலை­யிலும் அல்­லது அவர்கள் குறிப்­பிட்ட முக­வ­ரியில் இல்­லாத நிலையில் அவர்கள் நீதிவான் நீதி­மன்றில் வழங்­கிய சாட்­சி­யங்கள் மேல் நீதி­மன்ற வழக்கில் சான்று பொரு­ளாக இணைத்­துக்­கொள்­ளப்­பட்டு சட்­டமா அதிபர் திணைக்­கள அரச சட்­ட­வா­தி­யான நாக­ரட்ணம் நிஷாந்­தி­னு­டய நெறிப்­ப­டுத்­தலில் தொடர்ந்து வழக்கு விசா­ரணை நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­று­வந்­தி­ருந்­தன. அத்­துடன் நேற்­று­முன்­தினம் இவ் வழக்கு தொடர்­பாக அனைத்து சாட்­சிப்­ப­தி­வு­களும் தொகுப்­பு­ரையும் நிறை­வ­டைந்­தி­ருந்­த­துடன் நேற்­றைய தினம் தீர்ப்­புக்­காக வழக்­கா­னது எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

வழக்கின் சாரம்சம்  இதன்­படி நேற்­றைய வழக்­கிற்­கான தீர்ப்பின் போது யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் தனது தீர்ப்­பு­ரையில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார். இதன்­படி, 

குறித்த வழக்கில் 1ஆம், 2ஆம், 3ஆம் எதி­ரி­க­ளுக்கு எதி­ராக கடந்த 2001.11.28ஆம் திகதி நாரந்­தனை எனும் இடத்தில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்தில் சட்­டமா அதி­பரால் இரண்டு கொலை குற்­றச்­சாட்­டுக்­களும் பதி­னெட்டு பேரை படு­காயம் விளை­வித்த குற்றச் சாட்­டுக்­களும் மூன்று வாக­னங்­களை சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டும் சுமத்­தப்­பட்டு வழக்­கா­னது மேல் நீதி­மன்றில் பாரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி இவ் வழக்கில் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட முதலாம் இரண்டாம் எதி­ரிகள் வெளி­நாட்­டுக்கு தப்பிச் சென்று தற்­போது இங்­கி­லாந்தில் வசிப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச பொலிஸார் ஊடாக பகி­ரங்க பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் இவர்கள் இன்றி வழக்கு நட­வ­டிக்­கை­களும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. அந்­த­வ­கையில் இவ் வழக்கு விசா­ர­ணை­யா­னது நேற்­று­முன்­தினம் அரச சட்­ட­வாதி மற்றும் எதிர் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் ஊடாக செய்­யப்­பட்ட தொகுப்­பு­ரை­க­ளுடன் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு நேற்­றைய தினம் தீர்ப்­புக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன்­படி இத் தீர்ப்­பா­னது 140பக்­கங்­களை கொண்­ட­தாக காணப்­படும் நிலையில் தீர்ப்பில் முக்­கி­ய­மான விட­யங்கள் எதி­ரி­க­ளுக்கும் விளங்க கூடிய வகையில் வாசித்து காட்­டப்­பட்­டது.

இதன்­படி இவ் வழக்கில் முக்­கிய சாட்­சி­யான சிவா­ஜி­லிங்கம் இவ் வழக்கின் முதலாம் மற்றும் மூன்றாம் எதி­ரிகள் முறையே நெப்­போ­லியன், ஜீவ­ராஜா ஆகி­யோரை பெயர் குறிப்­பிட்டு அடை­யாளம் காட்டி சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அத்­துடன் தாக்­குதல் நட­வ­டிக்­கை­யின்­போது சாம்பல் நிற பிக்கப் வாக­னத்தில் மத­ன­ராசா என்­பவர் அவ் விடத்­திற்கு வந்­த­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். இவ­ரு­டைய இச் சாட்­சி­யத்தை ஒப்­பு­றுதி செய்யும் வகையில் இரண்­டா­வது கண்­கண்ட சாட்­சி­யான கன­க­ரத்­தினம் விந்­த­னது சாட்­சியம் காணப்­பட்­டி­ருந்­தது. இவரும் எதி­ரி­க­ளது பெயர் குறிப்­பிட்டு அவர்­களை அடை­யாளம் காட்­டி­யி­ருந்தார். இதன்­படி மூன்­றா­வது எதிரி தற்­போது கூண்டில் இருப்­ப­தா­கவும் முதலாம் இரண்டாம் எதிரி தற்­போது கூண்டில் இல்லை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். அதனை தொடர்ந்து மாவை சேனா­தி­ராசா சாட்­சி­ய­ம­ளிக்­கை­யிலும் எதி­ரி­க­ளது பெயர் குறிப்­பி­டப்­பட்டு சாட்­சி­ய­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் தனக்கும் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும் இதில் சிவா­ஜி­லிங்கம் மோச­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ரவி­ராஜின் வாக­னத்­தி­லேயே தாம் வைத்­தி­ய­சா­லைக்கு வந்­தி­ருந்­த­தா­கவும் இதன்­போது கமல்ஸ்ரோன் ஏரம்பு பேரம்­பலம் ஆகியோர் உயி­ரி­ழந்­தி­ருந்­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் இவ்­வ­ழக்கில் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் என்­ப­வ­ரது சாட்­சி­யமும் மன்றால் முக்­கிய சாட்­சி­யாக கவ­னத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இருந்­த­போ­திலும் அவ­ரது சாட்­சி­ய­மா­னது எதிர்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணியால் குறித்த விசா­ரணை செய்­யப்­படும் போது அவ­ரது சாட்­சி­யத்தை முறி­ய­டிக்கும் வகையில் அமை­ய­வில்லை என்­ப­தையும் மன்­றா­னது கவ­னத்தில் கொண்­டி­ருந்­தது. இத­னை­விட இவ் வழக்கில் முக்­கிய கண்­கண்ட சாட்­சி­யான அமரர் நட­ராஜா ரவிராஜ் என்­ப­வ­ரது சாட்­சி­ய­மா­னது நீதிவான் நீதி­மன்றில் பதிவு செய்­யப்­பட்டு அங்கு குறுக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் அவ­ரது சாட்­சி­யத்தில் குறித்த எதி­ரி­க­ளான நெப்­போ­லியன் மத­ன­ராசா ஆகி­யோ­ரது பெயர் குறிப்­பி­டப்­பட்டு அடை­யாளம் காட்­டப்­பட்­டி­ருந்­தது. எனவே அவ­ரது சாட்­சி­யமும் இவ் வழக்கில் சான்­றாக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

மேலும் மாவை சேனா­தி­ரா­சாவின் மெய்ப்­பா­து­கா­வலர் வழங்­கிய சாட்­சி­யத்­திலும் மாவைக்கு தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை தொடர்­பாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் இத் தாக்­குதல் சம்­ப­வத்தின் போது தாம் மாவை சேனா­தி­ரா­சாவை கட்­டிப்­பி­டித்த போதிலும் தாக்­கு­தல்­தா­ரிகள் தன்னை இழுத்து கீழே விழுத்தி விட்டு அவ­ருக்கு தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவும் இதன்­போது மாவை சேனா­தி­ரா­சாவின் தலையில் இருந்து இரத்தம் வந்­ததை தாம் கண்­ட­தா­கவும் அவர் தனது சாட்­சி­யத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார். இவற்­றை­விட அமரர் ரவி­ராஜின் மெய்ப்­பா­து­கா­வ­லர்­களும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­த­துடன் குறித்த சம்­ப­வத்தில் கொலை செய்­யப்­பட்ட இரு­வ­ரது பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­யிலும் காய­ம­டைந்­த­வர்­களின் சட்ட வைத்­திய அறிக்­கை­யிலும் மொட்­டை­யான ஆயு­தங்­க­ளான அல­வாங்கு போன்­ற­வற்றால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட காயங்கள் உள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­ட­துடன் மர­ணத்­திற்­கான கார­ணங்­களும் காயங்கள் தொடர்­பா­கவும் விரி­வாக கூறப்­பட்­டி­ருந்­தது.

இத்­தாக்­குதல் சம்­ப­வ­மா­னது ஊர்­கா­வற்­று­றைக்கு தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக சென்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரை திருப்பி அனுப்ப வேண்டும் என்­ப­தற்­காக அர­சியல் கட்­சி­யினால் நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வ­மாகும். ஆனால் இச் சம்­ப­வத்தால் அப்­பா­வி­யான ஆத­ர­வா­ளர்கள் மர­ணிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் இத் தீர்ப்பில் எந்­த­வி­த­மான அர­சியல் சார்­பு­களும் உள்­வாங்­கப்­ப­ட­வு­மில்லை அதற்­கான தேவையும் இல்லை.

தற்­போது எதி­ரி­த­ரப்பு சார்பில் இவ் வழக்­கா­னது ஆரம்­பிக்­கப்­படும் போது குறித்த வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்ட நான்கு எதி­ரி­களும் சம்­பவம் இடம்­பெற்­ற­போது அச்­சம்­பவ இடத்தில் இல்லை என்­பதை நிரூ­பிப்­ப­தாக (டிவன்ஸ் ஓவ் அலிபாய்) அவர் தரப்பு சட்­டத்­த­ரணி குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் இவ் வழக்கின் முதலாம் இரண்டாம் எதி­ரிகள் சார்­பாக அவர்கள் மன்றில் முன்­னி­லை­யாகி தாம் இவ்­வி­டத்தில் நிற்­க­வில்லை என்­பது தொடர்­பாக சாட்­சி­யமும் வழங்­க­வில்லை. அவர்கள் தரப்பில் யாரும் மன்றில் முன்­னி­லை­யாகி அதனை நிரூ­பிக்­கவும் இல்லை. எனவே அவர்கள் தரப்பு டிவன்ஸ் ஓவ் அலிபாய் மன்­றினால் தள்­ளு­படி செய்­யப்­ப­டு­கின்­றது. இதில் மூன்­றா­வது எதிரி நீதி­மன்றில் சத்­தியம் கூறி சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தாம் சம்­பவ தினத்­தன்று காலை 9.30மணி­ய­ளவில் மனை­வியை ஊர்­கா­வற்­றுறை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு கூட்டி சென்று விட்டு அங்­கி­ருந்து காலை 10.30 அல்­லது 10.45மணி­ய­ளவில் சந்­தைக்கு சென்று மீன் வாங்­கிக்­கொண்டு வீடு சென்று சமைத்­துக்­கொண்­டி­ருந்­த­தா­கவும் பின்னர் வைத்­தி­ய­சா­லையில் இருந்து மனைவி 11.45 மணி­ய­ளவில் அல்­லது 12.00மணி­ய­ளவில் வீடு வந்து என்­னிடம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஈ.பி.டி.பியி­ன­ருக்கும் மோதல் நடை­பெற்­ற­தாக ஆட்கள் கதைக்­கினம் என்று கூறி­ய­போ­துதான் எனக்கு இச் சம்­ப­வமே தெரியும் என தெரி­வித்­தி­ருந்தார். இதே கருத்­தையே அவர் சார்பில் சாட்­சி­ய­ம­ளித்த அவ­ரது மனை­வியும் கூறி­யி­ருந்தார். ஆனாலும் குறிக்­கப்­பட்ட மூன்­றா­வது எதிரி வைத்­தி­ய­சா­லையில் சென்று மீண்டும் மனைவி வீட்டில் காணும் இடைப்­பட நேரத்தில் அவர் எங்­கி­ருந்தார் என்­பதை அவ­ரது மனை­வியால் கூற­மு­டி­யாது. அத்­துடன் அவரும் அச்­ச­ம­யத்தில் அதா­வது அவ் இடைப்­பட்ட நேரத்தில் எங்­கி­ருந்தேன் என்­பதை நிரூ­பிக்­க­வில்லை. எனவே அவ­ரது சாட்­சி­யத்­தையும் மன்­றா­னது நிரா­க­ரிக்­கின்­றது.

இதே­வேளை இவ் வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட நான்­கா­வது எதி­ரி­யான நவ­சி­வாயம் கரு­ணா­க­ர­மூர்த்தி என்­பவர் இச் சம்­ப­வத்தில் தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை என அரச சட்­ட­வா­தியும் தனது தொகுப்­பு­ரையில் குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் அவ­ருக்கு எதி­ரான சிவா­ஜி­லிங்கம் மாத்­தி­ரமே சாட்­சி­ய­ம­ளித்­துள்ள நிலையில் அவ­ரது சாட்­சி­ய­மான ஏனைய பிறி­தொரு சாட்­சி­யத்தால் ஒப்­பு­றுதி செய்­யப்­ப­ட­வு­மில்லை. அத்­துடன் குறித்த எதிரி மன்றில் சத்­தியம் செய்து அளித்த சாட்­சி­யத்தில் தாம் சம்­பவ இடத்தில் நிற்­க­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­ட­துடன் அதனை அவ­ரது வாகன சார­தியின் சாட்­சி­யி­னூ­டா­கவும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார். எனவே அவர் இவ் வழக்கின் தொடர்­பு­பட்­டுள்ளார் என்­பது நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்பால் நிரூ­பிக்­கப்­ப­டா­ததால் அவர் இவ் வழக்கில் இருந்து விடு­தலை செய்­யப்­ப­டு­கின்றார்.

பரிந்­து­ரைகள்.

குறித்த வழக்கில் முதல் மூன்று எதி­ரி­களும் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்ள நிலையில் இதில் முதல் இரு எதி­ரி­களும் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தற்­போது வெளி­நாட்­டிற்கு தப்பிச் சென்­றுள்ள நிலையில் அவர்கள் இரு­வரும் அங்கு ஆடம்­பர வாழ்க்கை வாழ்­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­துடன் நீதி­மன்ற தீர்ப்­புக்­க­ளா­னது முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டியும் உள்­ளது. எனவே குறித்த இரு­வ­ரையும் கைது செய்து இங்­கி­லாந்­திற்கும் இலங்­கைக்­கு­மி­டை­யி­லான நாடு­க­டத்தும் ஒப்­பந்­தங்­க­ளூ­டாக இலங்­கைக்கு நாடு­க­டத்த வேண்டும் என்ற அடிப்­ப­டையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு இவ் நீதி­மன்­ற­மா­னது பரிந்­து­ரை­களை முன்­வைக்­கின்­றது.

இதன்­படி இலங்கை ஜனா­தி­பதி இங்­கி­லாந்து பிர­தம மந்­தி­ரி­யுடன் இரா­ஜ­தந்­திர ரீதியில் தொடர்பு கொண்டு குறித்த இரு எதி­ரி­க­ளையும் நாடு கடத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என மன்­றா­னது ஜனா­தி­ப­திக்கு பரிந்­துரை செய்­கின்­றது. இலங்கை வெளி­நாட்டு அமைச்­சா­னது இங்­கி­லாந்து நாட்டு வெளி­நாட்டு அமைச்­சுடன் இரா­ஜ­தந்­திர தொடர்பை ஏற்­ப­டுத்தி குறித்த இரு­வ­ரையும் நாடு­க­டத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மன்­றா­னது பரிந்­துரை செய்­கின்­றது. அதே­போன்று இலங்கை சட்­டமா அதிபர் இங்­கி­லாந்து நாட்டு சட்­டமா அதி­ப­ருடன் தொடர்பு கொண்டு நாடு கடத்­து­வதில் உள்ள சட்ட சிக்­கலை நிவர்த்தி செய்து அவர்­களை உட­ன­டி­யாக எதி­ரிகள் இரு­வ­ரையும் நாடு கடத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என மன்­றா­னது பரிந்­துரை செய்­கின்­றது. வெளி­வி­வ­கார அமைச்­சி­னதும் நீதி­ய­மைச்­சி­னதும் செய­லா­ளர்கள் குறித்த எதி­ரிகள் இரு­வரும் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட நிலையில் வெளி­நாட்­டுக்கு தப்­பிச்­சென்­றமை தொடர்­பாக முழு­மை­யான அறிக்­கையை மூன்று மாத காலத்தில் மன்­றுக்கு சமர்­பிக்க வேண்டும் என பரிந்­து­ரைப்­ப­துடன் அவ்­வா­றில்­லா­து­விடின் குறிக்­கப்­பட்ட அமைச்சின் செய­லா­ளர்கள் மன்­றுக்கு அழைக்­கப்­பட்டு விளக்கம் கோரப்­ப­டு­வார்கள் என்­ப­தையும் மன்­றா­னது தெரி­விக்­கின்­றது. அத்­துடன் இங்­கி­லாந்­துக்­கான இலங்கை தூதுவர் அந்­நாட்டு உள்­நாட்டு அமைச்­சுடன் தொடர்­பு­கொண்டு இரு­வ­ரையும் நாடு­க­டத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் இவ் நீதி­மன்­றா­னது பரிந்­துரை செய்­கின்­றது. அத்­துடன் குறித்த இரு­வ­ருக்கும் தொடர்ந்தும் சர்­வ­தேச பொலிஸார் ஊடாக பகி­ரங்க பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இதனை உட­ன­டி­யாக நட­மு­றைப்­ப­டுத்­து­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கு மன்­றா­னது உத்­த­ரவு பிறப்­பிக்­கின்­றது.

எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ரணி விண்­ணப்பம்

குறித்த வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள மூன்று எதி­ரி­க­ளுக்கும் அவர்­க­ளது குற்­றத்­திற்கு எதி­ராக வழங்­கப்­ப­ட­வி­ருக்கும் மர­ண­தண்­ட­னையை மன்­றா­னது மீள் பரி­சீ­லனை செய்து அத­னை­விட குறைந்த தண்­டனை வழங்­க­வேண்­டு­மென குறிப்­பிட்­டி­ருந்தார். ஏனெனில் இலங்கை அர­சாங்­க­மா­னது சர்­வ­தேச ரீதி­யான மனித உரிமைச் சட்டப் பிர­க­ட­னங்­களில் அவற்றை தமது நாட்­டிலும் நடை­மு­றைப்­ப­டுத்­துவோம் என்ற அடிப்­ப­டை­யிலும் ஒப்­பந்­தங்­களைச் செய்­துள்ள நிலையில் இம்­ம­ர­ண­தண்­டனைத் தீர்ப்பை மன்­றா­னது மீள் பரி­சீ­லனை செய்­ய­வேண்டும். 

சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்கை அர­சாங்­க­மா­னது மரண தண்­ட­னைக்கு எதி­ரான நாடு என்ற நிலைப்­பாட்டை வெ ளிப்­ப­டுத்தும் வகையில் இம்­ம­ரண தண்­டனைத் தீர்ப்பைக் குறைத்து அதற்குப் பதி­லாக வேறொரு தீர்ப்பை வழங்­கு­வ­த­னூ­டாக இலங்கை சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் நாக­ரி­க­மான நாடாக காட்­ட­மு­டியும் என்­ப­தோடு அதற்கு இந்­நீ­தி­மன்­றத்தின் இத்­தீர்ப்பு அடித்­த­ள­மாக அமை­ய­வேண்டும். அத்­துடன் குறித்த மூன்­றா­வது எதிரி உடல்­நிலை சீரின்மை என்­ப­தையும் இவர் சிறு­வ­ய­தி­லேயே தவ­றாக தலை­வர்­களால் வழி­ந­டத்­தப்­பட்டார் என்­ப­தையும் கருத்­தி­லெ­டுத்து மர­ண­தண்­ட­னைக்கு குறை­வான தீர்ப்பை வழங்­க­வேண்டும் என எதிர்த் தரப்பு சட்­டத்­த­ரணி றெமீ­டியஸ் குறிப்­பிட்டார்.இரட்டை மரண தண்­ட­ணையும்  

20 வருட கடூ­ழிய சிறையும்

குறித்த வழக்கில் சட்­டமா அதிபர் 1தொடக்கம் 24வரை­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளாக சட்­ட­வி­ரோ­த­மாக கூட்டம் கூடிய குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. ஆனாலும் சட்­ட­வி­ரோ­த­மாக கூட்டம் கூடி­ய­மைக்கு ஐந்து அல்­லது அதற்கு மேற்­பட்டோர் காணப்­பட வேண்டும் என சட்டம் கூறும் நிலையில் இவ் வழக்கில் நான்கு பேரே எதி­ரி­க­ளாக கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் குறித்த குற்றச்சாட்டில் இருந்து நான்கு எதிரிகளும் விடுதலை செய்யப்படுகின்றனர். எனினும் குறித்த மூன்று எதிரிகளும் 25ஆவது குற்றச்சாட்டாக பொது எண்ணத்துடன் ஏரம்பு பேரம்பலம் என்பவரை மூன்று எதிரிகளும் எனைய 50 அல்லது 60பேரூடன் இணைந்து கொலை செய்தமை 26ஆவது குற்றச்சாட்டாக ஜோகலிங்கம் கமல்ஸ்ரோன் என்பவரையும் குறித்த மூன்று எதிரிகளும் அவர்களோடு இணைந்து 50 அல்லது 60 பேர் கொலை செய்தமை மற்றும் சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராசா ஆகியோர் உட்பட பதினெட்டு பேரை காயப்படுத்தியமை போன்ற எனைய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக மன்றினால் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே குறித்த மூன்று எதிரிகளான நெப்போலியன், மதனராசா, ஜீவராஜா ஆகிய மூவரும் மாவை சேனாதிராசாவை படுகாயம் ஏற்படுத்தியமைக்காக 5ஆண்டுகள் கடுழிய சிறைத் தண்டனையும் 10ஆயிரம் ரூபா தண்டமும் கட்ட தவறின் 6மாத கால கடுழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றது. அதேபோன்று சிவாஜிலிங்கத்திற்கு குறித்த மூன்று எதிரிகளும் படுகாயம் விளைவித்தமைக்கு 5ஆண்டு கால கடழிய சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபா தண்டமும் செலுத்த தவறின் 6மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றது. இவற்றைவிட குறித்த மூன்று எதிரிகளும் இச் சம்பவத்தில் இருவரை படுகொலை செய்தமை மற்றும் எனையோருக்கு காயம் ஏற்படுத்தியமை வாகனங்களை சேதப்படுத்தியமை போன்ற அனைத்திற்குமாக இரட்டை மரண தண்டனையும் 20வருட கால கடூழிய சிறைத்தண்டனையும் 1இலட்சம் ரூபா தண்டப்பணமும் செலுத்த தவறின் 5ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையும் விதிப்பதுடன் இவ் தண்டனைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக மரண தண்டனை நிறைவேற்றப்படாது சிறைத்தண்டனையாக குறைக்கப்படினும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் இவ் நீதிமன்றம் எதிரிகளுக்கு தீர்ப்பளிக்கின்றது.

மேலும் குறித்த மரண தண்டனையானது ஜனாதிபதியால் அவர் விரும்புகின்ற இடத்தில் அவர் விரும்பும் நேரத்தில் எதிரிகளின் கழுத்தில் சுருக்கிட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு இவர்களது உடலில் இருந்து உயிரை பிரிக்குமாறு இந்நீதிமன்றானது தீர்ப்பளிப்பதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்பெழுதிய பேனையை முறித்தெறித்து மின்சாரத்தை துண்டித்து உத்தரவிட்டார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-08#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.