Jump to content

ஜெயலலிதாவின் மரணத்தில் 15 மர்மங்கள்!


Recommended Posts

01- மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி.

02- சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.

03- தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு.

04- 3மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை.
இது யாருடைய உத்தரவு??

05- 3மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது?

06- அனைத்து ம் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே…??

07- கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்?

08- இறப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு உடனடியாக ஒன்று கூடி புதிய முதல்வரை தேர்வு செய்தனர்.

09-அமைச்சர்களும் எந்த குழப்பமின்றி இலாகா நியமிக்கப்பட்டு உடனடியாக எப்படி பதவியேற்க முடிந்தது?

10- ரத்த உறவான அவரது அண்ணன் மகளை கூட மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் மிரட்டி வீட்டுக்கு செல்ல சொன்ன காரணம் என்ன?

11- தந்தி டிவி மரணத்தை முன் கூட்டியே அறிவித்ததும், அதை உடனே திரும்பபெற்றதும் யாரால், ஏன்?

12- இறந்து அரை மணி நேரம் கூட ஆகாத இந்த துக்கத்திலும் இவ்வளவு தெளிவாக ஆளுநரை சந்தித்து முதல்வராக பதவியேற்பு நிகழ்சி நடத்தியது எப்படி ?

13- கைது நேரத்தில் பேச முடியாமல் குழுங்கி குழுங்கி அழுது கொண்டே உறுதிமொழியை பாதியிலேயே நிறுத்திவிட்டு பதவியேற்ற நீங்கள் தற்போது சிறப்பாக அழுகையின்றி உறுதி மொழி எடுக்க எவ்வாறு முடிந்தது??

14-காலையில் இருந்து இந்த இரவு் வரையும் கூட மருத்துவமனை முன்பாக பட்டினியாக அழுது உருண்டு கிடப்பதில் பஞ்சபராரி பாமர மக்களை தவிர ஒரு பண முதலை கூட தென்படவில்லையே எப்படி.??

15- இன்னும் கேள்விகள் ஆயிரம் உள்ளது எனது சார்பில் அல்ல..
முதல்வர் மீது மாசில்லா அன்பு கொண்டு வாக்களித்த எம் வெள்ளந்தி பாமர தமிழ்மக்கள சார்பாக.

http://kathiravan.com/138593

Link to comment
Share on other sites

மர்மங்கள் மர்மங்களாகவே இருக்க திட்டமிடப்பட்டுள்ளதை நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. ஜெயலலிதாவின் இரகசிய வாழ்க்கை கூட இவற்றுக்கு காரணங்களாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nunavilan said:

மர்மங்கள் மர்மங்களாகவே இருக்க திட்டமிடப்பட்டுள்ளதை நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. ஜெயலலிதாவின் இரகசிய வாழ்க்கை கூட இவற்றுக்கு காரணங்களாக இருக்கலாம்.

சரியான  கருத்து, நுணா.

Link to comment
Share on other sites

மருத்துவனை ரகசியத்தை வெளியிட்டார் பிரான்ஸ் தமிழச்சி

22-செப்டம்பர் 2016 இல், இரவு 9.30க்கு வேதா நிலையத்தில் இருந்து ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போலோவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்த நேரம் இரவு 10.15.

வேதா நிலையத்தில் இருந்து சென்னை க்ரிம்ஸ் லைனில் உள்ள அப்போலோவிற்குள் நுழைய ஆம்புலன்ஸ் எடுத்துக் கொண்ட நேரம் 45 நிமிடங்கள்.

23- செப்டம்பர் 2016 நள்ளிரவு 1.00 மணியளில், “ஜெயலலிதா சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல் சோர்வுக்கு சிகிச்சை பெற அப்போலோ மருத்துவனையில் அனுமதிப்பட்டுள்ளார்” என்று தாமதமாக அப்போலோ நிர்வாகம் முதன் முறையாக அதிகாரப்பூர்லமாக அறிவித்தது. அதன் பிறகே தமிழ்நாட்டு மக்களுக்கு பொதுஊடகங்கள் வழியாக செய்திகளை அறிய முடிந்தது.

அரசியலில் ஆளும் கட்சியில் முதல்வராக உள்ள நபர் வசிப்பிடத்தில் 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமராவை நுழைவு வாயில் வழியில் பொறுத்தப்பட்டு இருக்கும். யார் உள்ளே சென்றாலும் அல்லது யார் வெளியே சென்றாலும் காட்சிகள் பதிவாகும்.

அப்படித்தான் ஜெயலலிதாவை ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோ கொண்டு செல்லப்பட்ட போது காட்சிகள் பதிவாகி இருக்கும். அதேப்போல் அப்போலோ நுழைவு வாயில் வழியிலும் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அதிலும் காட்சிகள் பதிவாக இருக்கும்.

அந்த காட்சியில் ஜெயலலிதா சுயநினைவுடன் அமர்ந்து இருந்தாரா? சுயநினைவற்ற நிலையில் படுக்க வைக்கப்பட்டிருந்தா? என்ற காட்சியை தமிழ்நாட்டு மக்களிடம் காட்ட வேண்டும். ஆனால் அப்படி எந்த காட்சிகளும் ஊடகத்தில் வரவில்லை.

இப்போது ஜெயலலிதாவின் மர்மான மரணம் தமிழர்களிடையே மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பேசும் நிகழ்வாகி உள்ளது. எனவே பொதுநல வழக்கு தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் என்ன காட்சிகள் பதிவாகி உள்ளன என்பதை இந்திய மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் அப்போலோவிற்கும் உள்ளது.

இப்படி ஒரு வழக்கு தொடரப்படுமானால் வேதா நிலையத்தில் ஆம்புலன்ஸ் வெளியேறிய அன்று கேமரா வேலை செய்யவில்லை என்பார்கள். அப்போலோவில் கேட்டால் அவ ர்களும் அன்று கேமரா வேலை செய்யவில்லை என்பார்கள்.

ஏனெனில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட இடத்திலும் கேமரா வேலை செய்யவில்லை. ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட அன்றும் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கும் இதே பதில் வருமானால்….

ஜெயலலிதா மர்மமாக சாவதற்கு என்ன அவர் சாதாரண மனிதரா? அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய மரணம் என்பது பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் / சசிகலா, மன்னார்குடி மாபீயா கூட்டணிகளினால் நடத்தப்பட்ட படுகொலை என்று பொதுநல வழக்கு தொடரப்படுமானால்…

இந்திய நீதிமன்றத்தில், ‘படுகொலை அல்ல, இயற்கை மரணம்’ என்பதை நிறுபிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், அப்போலோ மருத்துவனைக்கும் உள்ளது.

அதிமுகவின் உண்மை தொண்டர்கள் இதற்காகவாவது போராடுவார்களா?
தமிழச்சி

http://kaalaimalar.net/tamilzachi-jaya/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.