Jump to content

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்


Recommended Posts

15 minutes ago, நவீனன் said:

கூர்மையான அரசியல் விமர்சகர்

திரையில் அவரின் தனித்தன்மையான உடல்மொழி பலரை கவர்ந்தது. அதே போல் அவரது அரசியல் விமர்சனங்களும் வித்தியாசமானவை, மிகக் கூர்மையானவை. தன்னுடைய விமர்சனங்களில் தவறிருப்பின் அதைத் தயங்காமல் ஒப்புக் கொண்ட நேர்மையாளராக இருந்தார்.

அட பாவிகளா, அப்ப சீமானும் துரோகியா?

சோவை புகழும் துரோகி சீமான் ஒழிக:grin:

Link to comment
Share on other sites

அரசியலில் இருப்பவர்கள் எழுந்தமானமாக "செத்தாண்டா சேகரு" என்று அறிக்கை விடமாட்டார்கள். tw_blush: ஆனால் மனத்துக்குள் "போய்ச் சேர்த்துது சனியன்" என்று நினைப்பார்கள். :D: கட்டுமரத்துக்கும் இரண்டு நல்ல வார்த்தை சொல்லி மலர்மாலை அணிவிக்க வேண்டியது வரும். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் எழுதும் ஒவ்வொரு கருத்துக்களிலும் சிலவிடயங்கள்  தெளிவாகின்றது 
ஒரு விடயத்தை நுண்ணியமாக ஆராயாமல் எழுந்தமானமாக கருத்து சொல்பது ...  
சமயங்களில் நிதானம் இழந்து எழுதுவது  ... 
அபத்தமான  இலங்கை அரசியல் நிலைப்பாட்டை ஆரோக்கியம் என நினைப்பது  ...
புலிகளை வசைபாடுதல் மட்டுமே  மாற்றுக்  கொள்கை என நினைப்பது  ...
இவர்கள் போக வேண்டிய தூரம் அதிகம்... கற்றுக்கொண்டால் குற்றமில்லை...

நான் இப்படி எழுதுவது அதிகப் பிரசங்கிதனமாக கூட இருக்கலாம்..
பரவாயில்லை, யார் மனதையும் நோகடிக்கும் நோக்கத்தோடு இது பதியப்படவும் இல்லை.

Cho died ...so what...!!! 

 

Link to comment
Share on other sites

8 minutes ago, raja.m1982 said:

திருமுருகன் காந்தி அரசியல் இயக்கத்தில் இருப்பவர். அரசியல் கட்சி நடத்துகிறவர் இல்லை. எனது முதல் பதிவில் இதை தெளிவாகப் போட்டிருந்தால் உங்களுக்கு குழப்பம் வந்திருக்காது.

நிற்க.. சீமானின் அறிக்கையைப் படித்தீர்களானால் அவர் சொன்னதில் தவறு ஏதும் காணமுடியாது. அவர் சொன்னவைகள்..

1) அவர் ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகர் - உண்மை

2) நாடக ஆசிரியர் - உண்மை

3) பத்திரிகை ஆசிரியர் - உண்மை

4) அரசியல் விமர்சகர் - உண்மை

5) துணிச்சலாக கருத்துக்களை சொல்பவர் - உண்மை

6) 46 ஆண்டுகள் பத்திரிகை உலகில் சாதித்தவர் - உண்மை

7) அவரது கருத்துக்களின்மேல் மாற்றுக் கருத்து உண்டு - உண்மை

 

Link to comment
Share on other sites

8 minutes ago, Sasi_varnam said:

புலிகளை வசைபாடுதல் மட்டுமே  மாற்றுக்  கொள்கை என நினைப்பது  ...
இவர்கள் போக வேண்டிய தூரம் அதிகம்... கற்றுக்கொண்டால் குற்றமில்லை...

புலிகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை வசைபாடுவதின் மூலம் தாங்கள் புலிகளின் விசுவாசிகள் என்று புல்லாங்குழல் ஊதுபவரும் உண்டே இங்கு சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஜீவன் சிவா said:

புலிகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை வசைபாடுவதின் மூலம் தாங்கள் புலிகளின் விசுவாசிகள் என்று புல்லாங்குழல் ஊதுபவரும் உண்டே இங்கு சசி.

நீங்கள் சொல்வதும் உண்மை தான் ஜீவன்.

அதே நேரம் புலிகளை ஏற்றுக்கொள்ளாமை வேறு... புலிகளின் மேல் காழ்ப்புணர்ச்சியை சம்பந்தமே இல்லாமல் கொட்டுவது வேறு.  

உதாரணம் இங்கு கனடாவில் ஒரு நண்பர் .. மட்டக்களப்பு மதவாத பௌத்த துறவியின் செயலை பற்றி நாங்கள் விசனமாக  கதைக்கும் போது, அவர்கூறுகிறார் "புலிகள் மட்டும் திறமா என்ன?  அவர்கள் செய்யாத அட்டூழியமா ?" ...

இதில் புலி எங்கே வந்தது? எதை எதோடு முடிச்சு போடுகிறார் பாருங்கள்...
யுத்தம் முடிந்து 7 வருடங்களின் பின்னர் நல்லிணக்கம் பேசும் பொழுது இது... இதை எப்படி பார்க்கலாம்...
இப்படித்தான் போகிறது சிலரது அரசியல் பார்வை.. இதை பற்றி கதைத்தால் புலி விசுவாசி ...புல்லாங்குழல் வாசி......What to do.. 

நெஞ்சில் ரணமாய் இருக்கும் இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன் 
என்னுடன் படித்த நண்பி (பிறந்தது / படித்தது / கல்யாணம் காட்டியது) எல்லாமே யாழ்ப்பாணம். 
யுத்தம் முடிவடைந்து சில மாதங்களின் பின்னர் போராளி இசைபிப்ரியா அவர்களின் காணொளி வந்ததது.
நெஞ்சம் பதை பதைத்க, தூக்கமிழந்த தருணங்கள் அவை. இந்த நண்பியுடன் நான் உரையாடும் போது இது குறித்து பேச்சு வந்தது... அவரின் அன்றைய பதில்/ நிலைப்பாடு அன்றே  எங்கள் நட்புக்கு ஆணி அடித்தது.
அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை தான் " இவையளுக்கு இது வேணும். ஆமிக்காறங்களோட சண்டைக்கு போனால் இதுவம் இல்ல இதுக்கு மேலயும் செய்வான் தானே." இவையல் எத்தின சிங்கள ஆட்களை குண்டு வைச்சு கொன்றிசீனம்"... ஆமி என்ன எல்லோரையுமா இப்படிக்கு கொண்டவன்.... புலிகளை தானே கொண்டவன்...இப்படி பல  விதமாய் கதைத்து காயப்படுத்தினார். 
இப்படியும்  சிலது இருக்கத்தானே செய்யுது... என்ன செய்வது...   
  
 

Link to comment
Share on other sites

11 minutes ago, Sasi_varnam said:

அதே நேரம் புலிகளை ஏற்றுக்கொள்ளாமை வேறு... புலிகளின் மேல் காழ்ப்புணர்ச்சியை சம்பந்தமே இல்லாமல் கொட்டுவது வேறு

சசி உங்கள் உணர்வுகள் என்னுடையதும்தான்.

ஆனால் எமது போராட்டமே தவறென்று பழி சொல்லும் பைத்தியங்களை நானும் வெறுக்கின்றேன். நடந்தவை முடிந்ததாக இருக்கட்டும் ஆனால் இனியும் வேறுபட்டிருக்காமல் ஒன்றிணைவோம் என்பதுதான் எனது ஆசை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஜீவன் சிவா said:

சசி உங்கள் உணர்வுகள் என்னுடையதும்தான்.

ஆனால் எமது போராட்டமே தவறென்று பழி சொல்லும் பைத்தியங்களை நானும் வெறுக்கின்றேன். நடந்தவை முடிந்ததாக இருக்கட்டும் ஆனால் இனியும் வேறுபட்டிருக்காமல் ஒன்றிணைவோம் என்பதுதான் எனது ஆசை.
 

மனிதன் மனசு வைத்தால் எதுவுமே சாத்தியம் நண்பா ...

Link to comment
Share on other sites

On 12/7/2016 at 3:39 PM, ஜீவன் சிவா said:

ஒரு மிருகத்தின் பேரால் ஆயிரக் கணக்கில் அழித்தது நீங்களா? சோவா?

 

4 hours ago, ஜீவன் சிவா said:

ஆனால் எமது போராட்டமே தவறென்று பழி சொல்லும் பைத்தியங்களை நானும் வெறுக்கின்றேன். 

முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே .....

Link to comment
Share on other sites

திரு சோ அவர்கள. எதையும் வெளிப்படையாக பேசுபவர். விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாக பாவனை காட்டிக்கொண்டு தமிழரின் உரிமைப் போராட்டத்தையே எதிர்ததார். வடுதலைப்புலிகளின் வீழ்சசிக்கு பின்னரும் இலங்கை அரசின் யுத்தக்குற்றங்களையும் அக்கிரமங்களையும் ஆதரித்து பேட்டியளித்தார்.  இல்ங்கை அரசு எந்தகாரணத்தை கொண்டும் தண்டிகக்கபடகூடாது என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.

தமிழரின் உரிமை போராட்டம் தொடங்கிய காலத்திலேயே அதாவது விடுதலைப்புலிகள் உருவாக முன்பே  திரு. ஜே.ஆர் ஜெயவர்ததனாவை சந்தித்து விடுதலைப் போரட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார். புலிகள் உட்பட    விடுதலைப்போராளிகள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று திட்டிய இவர் அதேசமயம் இலங்கை அரசாங்கத்தின் அத்தனை பயங்கரவாத அக்கிரமங்களையும் வெளிப்படையாக ஆதரித்தார். இலங்கை அரச படைகள் தமிழரை கொன்ற ஒவ்வோரு தடவையும் அதை நியாயப்படுத்தி தனது கேள்வி பதில் பகுதியில் எழுதி மகிழ்ந்தார்

இவரது ஆத்மா  நரகத்தில் அவதியுற என்னும் இறைவனை வேண்டி நிற்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2016 at 7:49 AM, Surveyor said:

போராட்டத்தில் போராடியும் அதற்க்கு சார்பாக இருந்தவர்களையும் மரணித்தபின்பும் கொச்சைப்படுத்தும் உங்களை எந்த வகையில் சேர்ப்பது?

அவர்கள் செய்தால் அது தர்மயுத்தம் .............

அதையே அடுத்தவன் கற்று கொண்டால் 
அது படு மிருக யுத்தம் !

இப்பிடி பல சாமி இந்தியாவிலே சுத்துது !

ஒவ்வரு மனிதனும் வாழ்வை ஒவ்வரு வகையாக விளங்கி கொள்கிறான் 
பக்தியை புரிந்து கடவுளிடம் தம்மை ஒப்படைப்பவன் 
காதலை புரிந்து தன்னை காதலியிடம் ஒப்படைப்பவன் 
சமூக சீரழிவை கண்டு சமூக சேவையில் தன்னை அர்பணிப்பவன் 
பூமி இயற்கை மீது காதல் கொண்டு தன்னை அர்பணிப்பவன் 
தனது குடுமபம் மீது காதல் கொண்டு தன்னை அர்ப்பணிப்பவன் 
எதோ ஒரு கல்வி (மருத்துவம் கணிதம் விஞ்ஞானம்) யில் காதல் கொண்டு 
ஆராய்ச்சியில் தன் வாழ்வை அழிப்பவன் 

..............................என்று எந்த வகையில் சென்றாலும் ஒரு ஆறு அறிவு மனிதன் 
தனது கடமை என்று ஒன்றை ஏற்று கொள்கிறான். அதை இன்னொருவன் மறுதலிக்க கூடும் 
அல்லது அது தவறே என்றும் வாதிட கூடும்.


இதில் எதுவுமே இல்லாது .............. சொந்த பிழைப்பு நடாத்த 
ஒரு சமூகம் .... இயற்கை .....குடும்பம் ....காதலி  என்று எதோ ஒன்றை அழித்து 
சுத்த பித்தலாட்டம் காட்டி ...... எதோ ஒருவனின் பலயீனத்தை பயன்படுத்தி 
தான் பிரபலம் காட்டி வாழ்ந்து சாகும் .....

ஒவ்வரு மிருகக்கத்தின் இறப்பிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டு !!! 

Link to comment
Share on other sites

விஜய் தொலைக்காட்சியில் ஜெயலலிதாவுடன் நடித்த நடிகை (பெயர் ஞாபகம் இல்லை) ஜெயலலிதாவின் நினைவுப்பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் ஜெயலலிதாவை பற்றி கூறும் போது பழைய நடிகைகள் ஏழு பேருடன் சோவையும் அழைத்து விருந்து வைத்து அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியதையும் குறிப்பிட்டு ஒவ்வொருவருக்கும் சேலையும் சோவுக்கு வேட்டி சால்வையும் கொடுத்து மகிழ்வித்தாராம். சாப்பாட்டு வேளையில் சோவின் சாப்பட்டுக்குள் மிளகாய் கடிபட்டு விட்டதாம். அதற்காக மிளகாய் கடிபட்டதால் உறைப்பில் உணவை உண்ண முடியவில்லை என முணுமுணுத்தாராம்.உடனே ஜெயலலிதா சோ முறைப்பாடு செய்யாத இடமே இல்லை எனலாம் என ஒரே போடாக போட்டாராம்,

Link to comment
Share on other sites

“உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும்!” - ஜெயலலிதாவின் ஏக்கம்!

 

 

p30a.jpg

சாட்டிலைட் சேனல்கள் இல்லாத காலம் அது. அரசு தொலைக் காட்சியான தூர்தர்ஷன் மட்டுமே அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. தனியார் தயாரித்துத் தரும் தொடர்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப ஏக டிமாண்ட் இருந்தது. கரன்சியை தள்ளினால்தான் சீரியல்களுக்கு அனுமதியே கிடைக்கும். அப்படிப்பட்ட சூழலில் தனது நாடகத்துக்கு அனுமதி கேட்டு அப்ளிகேஷன் போட்டிருந்தார் சோ. அனுமதி கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அப்போது ராஜீவ் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் நேரு, சோவுக்கு ரொம்ப நெருக்கம். ஆனாலும் சிபாரிசுக்கு போய் நிற்கவில்லை சோ. ‘‘என்னோட சீரியலுக்கு அனுமதி தர தூர்தர்ஷன் அலுவலர்கள் எதையோ எதிர்பார்க்கிறார்கள்’’ என தனது ஊழியர்களிடம் சொல்லி ஆதங்கப்பட்டார். ‘‘எதுக்கு கவலைப்படுறீங்க சார்... பணத்தை கொடுத்திட வேண்டியதுதானே’’ என ஊழியர்கள் சொன்னபோது, ‘‘பணம் இல்லாமல் இல்லை. அதைக் கொடுத்து சீரியலுக்கு அனுமதி வாங்கிவிடலாம். அதற்கு நான் துக்ளக்கை நிறுத்திவிட வேண்டும். பரவாயில்லையா?’’ என பதில் சொன்னார் சோ. அவர்தான் சோ!

1991 - 1996 ஜெயலலிதா ஆட்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 1996 சட்டசபைத் தேர்தல் நேரத்தில், காங்கிரஸில் இருந்து பிரிந்து த.மா.கா என்கிற புதிய கட்சியை மூப்பனார் ஆரம்பித்து தி.மு.க-வோடு கூட்டணி வைத்தார். அந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினியின் ஆதரவும் கிடைத்தது. ‘‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. அதனால் தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்’’ என பகிரங்கமாகவே சொன்னார் ரஜினி. த.மா.கா கூட்டணி அமையவும் ரஜினி ஆதரவு தரவும் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் சோ. தி.மு.க ஆட்சியும் அமைந்தது. அதனாலேயே சோ மீது வெறுப்பு காட்டினார் ஜெயலலிதா. அந்த காலகட்டத்தில்தான் சோவின் மகள் திருமணம் நடந்தது. ‘‘மகளின் திருமணத்துக்கு ஜெயலலிதாவுக்கு பத்திரிகை வைக்கலாமா?’’ என துக்ளக் ஊழியர்களிடம் கருத்துக் கேட்டார். அதன்பிறகுதான் அழைப்பிதழ் வைக்க ஜெயலலிதாவிடம் அப்பாய்ன்மென்ட் கேட்டிருக்கிறார் சோ. ‘‘நீங்க வர வேண்டாம். நானே உங்க ஆபிஸுக்கு வருகிறேன்’’ என சொல்லி, துக்ளக் ஆபிஸுக்கு ஜெயலலிதா போனார். ‘ஜெயலலிதா வருகிறார்’ என்கிற தகவலை ஊழியர்களிடம் சொன்ன சோ, ‘‘அவங்க வருவாங்க... உங்கள் ஒவ்வொருவரையும் அவங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவரவர் இருக்கையிலேயே இருங்கள்’’ என்றார். ஜெயலலிதா வந்ததும் அறிமுகப் படலம் நடந்து முடிந்தது. அதன்பிறகு, ‘‘மாடியில்தான் என் ஆபீஸ். உன்னால படி ஏற முடியுமா? எதற்காக சிரமப்படுகிறாய். இங்கேயே பேசிக் கொள்ளலாமா?’’ என சோ சொல்ல... ‘‘எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை’’ என சொல்லி, படியேறி போய் அவர் அறையில் பேசிவிட்டுப் போனார் ஜெயலலிதா. ‘நீ... வா...’ என ஜெயலலிதாவிடம் ஒருமையில் பேசியவர், ஊழியர்களிடம் ‘அவங்க... வருவாங்க’ என பன்மையில் பேசினார். முந்தையது அந்நியோன்யம்; பின்னது மரியாதை! 

p30b.jpg

சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்தார் சோ. அவரை பார்க்கப் போயிருந்தார் ஜெயலலிதா. ‘‘உடம்பை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்க... ரெஸ்ட் எடுங்க... நீங்க ரொம்ப வருஷம் இருக்கணும். உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும். எனக்குப் பின்னாடிதான் நீங்க போகணும்’’ என சோவிடம் ஆறுதல் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

‘அப்படி எல்லாம் பேசக்கூடாது’ என்று கண்டித்தார் சோ. ஆனால், ஜெ. சொன்னதுதான் இறுதியில் நடந்தது. முந்தைய நாள் ஜெயலலிதாவும் பிந்தைய நாள் சோவும் இறந்துபோனார்கள்!

தீவிர இந்துத்வா ஆதரவாளர் சோ. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் அட்டைப் படத்தை கருப்பு நிறத்தில் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தார். தனது அலுவலகத்தில் பணியாற்றிய முஸ்லிம் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வேளையும் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கித் தந்த பண்பாளர்.

துக்ளக்கில் வெளிவரும் ‘கேள்வி பதில்’ பகுதிக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் தவறாமல் பதில்களை கொடுத்துவிடுவார் சோ. வேலைகள் இருந்தால் மட்டுமே வியாழக்கிழமை வரையில் தள்ளிப் போகும். அவர் இறப்பதற்கு முன்புகூட பதில்களை கொடுத்துவிட்டுத்தான் போனார். அந்த பதில்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் ரெடியானது. தனது மருமகள் சித்ராவை அழைத்து வாசகர் கேள்விகளுக்கு பதில்களைக் கொடுத்திருக்கிறார். துக்ளக் ஆரம்பித்த காலத்தில் இருந்து கேள்வி பதில் பகுதி கடைசி நேரத்தில் பிரின்டுக்கு போன வரலாறு கிடையாது. அதுதான் முதல்முறை. அது கடந்த ஞாயிறு அன்றைக்குத்தான் அரங்கேறியது. உடல்நிலை குன்றி வீட்டில் இருந்த காலகட்டத்தில்கூட ஒவ்வொரு இதழும் அவரின் பார்வைக்குப் போய் ஓகே ஆனபிறகுதான் பிரின்ட்டுக்கே போகும். அப்படித்தான் கடந்த துக்ளக் இதழை ரெடி செய்துவிட்டு எடிட்டரிடம் ‘ஓகே’ வாங்க சப் எடிட்டர்கள் அப்போலோ போனார்கள். அதே ஞாயிற்றுக்கிழமைதான் அப்போலோவில் இருந்த ஜெயலலிதா சீரியஸ் என செய்திகள் பரவின. ‘‘நிறைய கெடுபிடிகள் சார்... நாங்க போராடித்தான் இங்கே வந்தோம்’’ என சோவிடம் சொல்லியிருக்கிறார்கள் சப் எடிட்டர்கள். ‘‘யாராவது வி.ஐ.பி-கள் வருகிறார்களா என்ன?’’ என கேட்டுவிட்டு பக்கங்களைப் பார்த்து திருத்தங்களை சொல்லியிருக்கிறார் சோ. ‘‘கடைசி நேரத்தில் பதில்களை கொடுத்திருக்கீங்க... வழக்கம் போல இருந்தது சார்’’ என சப் எடிட்டர்கள் சொல்ல, ‘‘அப்ப இம்ப்ரூவ்மென்டே இல்லை என்கிறீர்களா?’’ என இரட்டை அர்த்தத்தில் கேட்டுவிட்டு, ‘‘சோவின் கேள்வி பதில்கள் வருவதை போஸ்டரில் போடுங்க’’ எனவும் சொல்லியிருக்கிறார். ‘சோவின் கேள்வி பதில்கள்’ இதுவரைக்கும் போஸ்டரில் வந்ததே கிடையாது. ‘‘அவ்வளவுதான் சார்... இனிமேல் என்ன இருக்கு சார்’’ என்றபடியே சப் எடிட்டர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

p30.jpg

‘‘இம்ப்ரூவ்மென்ட் இல்லையா?’’ என அவர் எதற்காக கேட்டார் என தெரியவில்லை. அதன்பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றமே இல்லாமல் போய்விட்டது. உடனே ஐ.சி.யூ-வுக்கு சோ மாற்றப்பட்டார். அதே நேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையும் சீரியஸ் ஆகிக் கொண்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பேர்களின் உயிர்களும் போராடிக் கொண்டிருந்தன. ஜெயலலிதா உயிர் பிரிந்தபோது அந்த செய்தி சோவின் நினைவுக்குப் போய் சேரவில்லை. அடுத்த 30 மணி நேரத்தில் சோவின் உயிரும் உடலைவிட்டுப் பிரிந்து போனது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.