Jump to content

தீவக தாக்குதல் வழக்கு நாளை -இன்று தொகுப்புரைகள் வழங்கப்பட்டன


Recommended Posts

தீவக தாக்குதல் வழக்கு நாளை -இன்று தொகுப்புரைகள் வழங்கப்பட்டன
 
 
தீவக தாக்குதல் வழக்கு நாளை -இன்று   தொகுப்புரைகள் வழங்கப்பட்டன
நாரந்தனை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் இன்றையதினம் அரச, எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரை களை  யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நிகழ்த்தி முடி த்த னர். அத்தோடு இவ் வழக்கின் தீர்ப்பானது நாளைய தினம் 10:30 மணியளவில் வழங்கப்ப டும் என நீதிபதி தெரிவித்தார்.
 
யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி. பி யினர்  2001/11/28 அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடர் வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று சட்டத்தரணிகள் சார்பில் தொகுப்புரைகள் இடம்பெற்றன. 
 
இதில் முதலாவதாக தொகுப்புரையை  வழக்கு தொடருனர் தரப்பு சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்தன் நிகழ்த்தினார் அதன் போது அவர் 
 
சம்பவம் நடைபெற்று 15 வருடங்கள் கழித்தும். சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வழக்கை விசாரனை செய்ய யாழ் நீதிமன்றத்திற்கு பணித்து 10 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது இவ் வழக்கின் தொகுப்புரை வாசிக்கப்படுகிறது. என கூறிய அவர் இவ் வழக்கானது 2 பேரை மரணம் அடையச் செய்ததுடன், 18 பேர் காயமடைந்தமை உட்பட 48 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதான மிகப் பெரிய வழக்கு எனவும். 
 
இதில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் சார்பில் தன்னால் வழங்கப்பட்ட சாட்சிகள், மற்றும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு குறித்த நீதியை இந்த நீதிமன்றம் நிலை நிறுத்த வேண்டும் எனவும், 
 
1ஆம்,2ஆம்,3ஆம் குற்றவாளிகள் இந்த பாரிய குற்றச் செயலுடன் நேரடியாக தொடர்பு பட்டுள்ளனர். இவர்களுக்கு தண்டனைக் கோவையில் உள்ள ஏற்பாடுகளின் படி மூன்று எதிரி களுக்கும் முதலாவது குற்றச் செயலான இரண்டு கொலை செய்தமைக்காக இரட்டை மரண தண்டனையும், மரணத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாரிய ஆயுதங்களால் தாக்கியமை, மற்றும் 16 இற்கும் அதிகமான நபர்களுக்கு படுகாயத்தை ஏற்படுத்தியமை, சட்டவிரோத குழு வில் உறுப்பினராக இருந்தமை, போன்ற 48 குற்றச் சாட்டுகளுக்காக  தாலா 10, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை, அத்தோடு மேலும் 5-7 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை யையும் வழங்க முடியும். 
 
எனவே இக் குற்றவாளிகளுக்கு குறைந்ததுமரணதண்டனையும்,10ஆண்டுகாலசிறைத் தண்ட னையும் நிச்சயம் வழங்கப்பட வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் கேட்டுகொள்கின்றேன் என்றார். 
 
அத்தோடு இவர் 4 ஆம் எதிரி தொடர்பில் கூறும்போது நான்காம் எதிரியான கருணாகர மூர்த்தி சம்பவம் நடந்த இடமான நாரந்தனையில் சம்பவம் நடந்த நேரத்தில் இருக்கவில்லை என்பதனையும், இந்த குற்றச் செயலுடன் நேரடியாக தொடர்புபடவில்லை என்பதனையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். இவர் தொடர்பான தீர்ப்பினை கௌரவ மன்றின் சார்பில் விடுகி றேன் என்றார். 
 
இதனைத் தொடர்ந்து எதிரிகள் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி றெமிடியஸ் தனது தொகுப்புரையை வழங்கினார். 
 
இவர் தனது தொகுப்புரையில் நாரந்தனையில் நடந்த சம்பவத்திற்கும், அதனுடன் தொடர்பு பட்டவர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 எதிரிகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என தன் தரப்பு வாதங்கள், மற்றும் இவர்களை குற்றவாளிகளாக இனங்காட்டிய சாட்சிகளில் உள்ள சிக்கல்களை எடுத்து காட்டினார். 
 
மேலும் இச்சம்பவம் பாரதூரமான சம்பவம், இதில் சம்பந்தப்பட்ட உன்மையான குற்ற வாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் இல்லை. ஆனால் இந்த நான்கு எதிரிகளும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களாக காட்டும் சாட்சிகளில் எந்த வித உண்மைத் தன்மையும் இல்லை, அவர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் நலன் காரணமாக இந்த எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்குடன் சாட்சி அளித்துள்ள னர். 
 
குறிப்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் வழங்கிய சாட்சியில் எந்த விதமான உன்மைத் தன்மையும் இல்லை, எனவே அவருடைய சாட்சியை மன்று கவனத்தில் எடுக்க கூடாது எனத் தெரிவித்தார். 
 
ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி சட்டத்தின் முன் தண்டனைக்கு உட் டுத்தப்படக் கூடாது எனவும். இந்த நான்கு எதிரிகளும் நிரபராதிகள் எனத் தீர்ப்பு வழங்கி நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 
 
மதியம் 2 மணிவரை நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு நாளைய தினம் காலை 10:30 மணிக்கு வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்து. வழக்கை நாளை வரை ஒத்தி வைத்ததோடு. 3ஆம்,4ஆம் எதிரிகளை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

http://www.onlineuthayan.com/news/21051

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.